Monday, 29 December 2025

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வோம்*

 *


சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வோம்*

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் (அ) சிங்கிரி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று.
பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இக்கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் தலத்தில், புதுச்சேரி அருகே தமிழகப் பகுதியில், புதுச்சேரி பகுதியான அபிஷேகப் பாக்கத்தின் அருகே அமைந்துள்ளது. கனகவல்லித் தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் (உக்கிர நரசிம்மர்) கோவிலில் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சியளிக்கிறார்.
*கோவிலின் சிறப்புகள்* .....
1. எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் தசஅவதாரங்களில் மிக முக்கியமானது, தீமைகளை அழித்து நன்மையை வாழவைத்த ஸ்ரீ நரசிம்ம அவதாரமாகும். இந்த நரசிம்ம அவதாரமே, இத்திருக் கோவிலின் மூல மூர்த்தியாக அமையப் பெற்றுள்ளது.
2. பதினாறு திருக்கரங்களுடன் அமையப் பெற்ற ஸ்ரீ நரசிம்மர் தமிழ் நாட்டில் இத்தலம் தவிர வேறெங்கும் இல்லை என்பது மிக சிறப்பான ஒன்றாகும்.
3. இரணியனின் மகன் பிரகலாதனுக்காக இரணியனின் கொடுமைகளை அழிக்க தூணிலிருந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். சிங்கிரிகுடி நரசிம்மர் வரலாறு குறித்து மார்கண்டேய புராணத்துள் நரசிம்ம வன மாயுத்மியம் என்ற பகுதியில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
4. இத்திருக்கோவிலில் அமையப்பெற்ற அனைத்து கல்வெட்டுகளுமே முற்றுபெறாத நிலையில் காணப்படுகிறது. இராஜ கோபுரவாயிலில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடைய ஒரு கல்வெட்டு செய்யுள் வடிவில் அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் தெற்கு சுவரில் கி.பி. 12 ம் நூற்றாண்டின் எழுத்தமைதியுடைய கல்வெட்டு ஒன்று உள்ளது.
5. நீண்ட சதுரமான மாடவீதிகளை கொண்ட சிங்கிரிகுடி எனும் ஊரில் நடுநாயகமாக அமையப் பெற்றுள்ளது இத்திருக்கோவில்.
6. இத்திருக்கோவில் மேற்கு திசை நோக்கி அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த திருக்கோவிலாகும்.
7. ஐந்து நிலைகளை கொண்ட கம்பீரமான இராஜ கோபுரமும் வைணவ சிந்தாத்தப்படியான 24 தூண்களை கொண்ட வசந்த மண்டபமும் அமைந்துள்ளது.
8. வைணவத் திருக்கோவிலான இத்திருக்கோவில் இராஜ கோபுரத்தை அடுத்து பிள்ளையார் திருகோவிலும் அமையப்பெற்றது வேறெங்கும் காண இயலாத தனிச்சிறப்பாகும்.
9. இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்மர், திருவகீந்திரபுரத்து தேவ நாதனே என திருமங்கை ஆழ்வாரது பாசுரத்தில் கூறப்பட்டுள்ளது.
10. இத்தலத்தில் 1. ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, 2. ஸ்ரீ கனகவல்லி தாயார் சன்னதி, 3. ஸ்ரீ ஆண்டாள் சன்னதி, 4. ஸ்ரீ ராமர் சன்னதி, 5. ஆழ்வார்கள் சன்னதி, 6. ஸ்ரீ விநாயகர், 7. ஸ்ரீ துர்க்கா சன்னதி ஆகியவை முக்கிய சன்னதிகளாகும்.
11, சன்னதி திறந்திருக்கும் நேரங்கள்:
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரை
12. பூஜை காலங்கள்:
காலை 9.00 மணி காலை சந்தி பகல் 12.00 மணி உச்சிக்காலம் மாலை 6.00 மணி நித்தியாணுமாலை 6.30 மணி சாயரட்சைஇரவு 8.30 மணி அர்த்தசாமம்
13. இத்தலத்து தாயார் பெயர் ஸ்ரீ கனகவல்லித் தாயார்
14. விமானத்தின் பெயர் ஸ்ரீ பாவன விமானம்
15. ஜமத்க்கனி தீர்த்தம், இந்திர தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் சிங்கிரிகுடியில் உள்ளன.
16. இங்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு ஆராதனை நடைபெறும்.
17. தை மாதம் மாட்டுப் பொங்கல், ஸ்ரீ தாயார் தீர்த்தவாரி நடைபெறும்.
18. சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
19. புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்தும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து சமதொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. ( 14 கி.மீ.) 

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...