Thursday 27 May 2021

(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

                                          (இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

(இது ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை) உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே. நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே. உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்.... *ஒவ்வொரு மனிதனும்* *தனித்தனி ஜென்மங்கள்.* *தனித்தனி பிறவிகள்* *தனித்தனி ஆன்மாக்கள்* அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். *அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .* அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். *அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.* இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை. அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும். அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், *அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.* எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...? ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!.... *பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.* *அவர்களுக்கு அனுபவம் தான் குரு.* அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு. செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். *எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.* நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள். அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் *இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.* நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம். *இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.*_அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே. *உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்* நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள். *மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.* உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். *அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.* *தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள்.* இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள். இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

*தீய பழக்கங்களிலிருந்து வெளிவருவது எப்படி? கீழ் குறிப்பிடும் சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.

 *தீய பழக்கங்களிலிருந்து வெளிவருவது எப்படி?

கீழ் குறிப்பிடும் சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவலாம்.
*

*பழக்கம் என்பது இரும்பு சங்கிலி போல, அதனை உடைக்க விடாமுயற்சி என்ற சுத்தியல் கட்டாயம் தேவை. நாளுக்கு நாள் அதனிலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள்... அந்த முயற்சியை பலர் பரிகசிப்பார்கள்‌. சிலர் பாராட்டுவார்கள். உங்களுக்கு நீங்களே தினம்தினம் முன்னேறி இருக்கிறீர்களா என்பதை மட்டும் கவனியுங்கள் .மற்றவர்களின் விமர்சனத்தை புறக்கணியுங்கள்‌. தீய பழக்கங்களிலிருந்து விடுபட அந்த எண்ணங்களில் இருந்து முற்றிலும் விடுபட சில மாதங்கள் கூட ஆகலாம். ஆனால் தொடர் முயற்சி தேவை. ஒவ்வொரு நாள் முயற்சியிலும் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களை நீங்களே பாராட்டி கொள்ளுங்கள். என்னால் முடியும், என்னால் முடியும் நான் என்னை மாற்றிக் கொள்வேன். மாற்றி காட்டுவேன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளவனாக நான் இருப்பேன்... என படிக்கும் மாணவன் போல போல அடிக்கடி சொல்லி பாருங்கள். நல்ல மாற்றம் இருக்கும். ஏமாற்றம் இருக்காது. உங்களுக்கு நீங்களே முரண் படாதீர்கள். இப்படி நீங்களே முரண் படுவதுதான், நம்மை செயல்பாட்டில் பின்னுக்கு தள்ளிவிடும். எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் தீய பழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ‌. அதைப் பிறர் சொல்வதில்லை என நம்புங்கள். தீயபழக்கம் என்றால் மது மாது சூது பொய் என்பது மட்டுமல்ல. கோபம், விரக்தியாக இருத்தல், பொறாமை படுதல், பிறருக்கு உதவி செய்யாமல் இருத்தல், விடியற்காலையில் எழாமல் இருத்தல், நல்ல செயல் செய்யும் பிறரை பாராட்டாமல் இருத்தல், பண்பாடு தெரியாமல் இருத்தல், பெரியோரை மதியாமை, தனக்கு மட்டுமே வேண்டும் என்கின்ற பேராசை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், எதற்கெடுத்தாலும் குற்றம் காணுதல், (இன்னும் சொல்லலாம்...)என அனைத்துமே தீய பழக்கங்கள்தான். எனவே நீங்கள் மட்டும்தான் தீய பழக்கம் கொண்டுள்ளீர்கள் என எண்ணாதீர்கள். உங்களின் பழக்கம் அதிக பாதிப்பு அடையச் செய்கிறது அவ்வளவுதான். மனிதர்கள் பெரும்பாலும் மேற்சொன்ன சில தீய பழக்க வழக்கங்களை தம்மையும் அறியாமல் கடைபிடிப்பவர்கள்தான். அதிலிருந்து வெளியேற நாளும் முயற்சிப்பவர்கள்தான். அதனால் உங்களை தாழ்வாக கருதாதீர்கள். விடாமுயற்சி செய்யுங்கள்... அது மட்டுமே மிக விரைவில் தீய பழக்கங்கள் இருந்து வெளியேற துணை புரியும். ஆழ்மனம் அதற்கு உறுதுணையாக இருக்கும். தீய பழக்கங்களிலிருந்து எந்த வழிகள் மூலம் வெளியேறுவது என்பதும்கூட உங்களுக்கு 100 சதவீதம் தெரியும்.. செயல்படுத்த வேண்டியது மட்டுமே பாக்கி. அதற்கு "விடா முயற்சி" தேவை அவ்வளவே.

மனம் ஒரு குரங்கு..


                                                                               மனம் ஒரு குரங்கு..

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனவாம். எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம். அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள். ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார். அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன. உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று. அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார். அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது. உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது. அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன. சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது. இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது. உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது.. ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.... மாறாக, பரம்பொருள் அல்லது ஆன்ம நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்..... அதனால் தான் அன்றே சொன்னார்கள்... "மனம் ஒரு குரங்கு"...



ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து...

 


ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து...
மனிதன் 1: இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லா செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்குத் தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான். மனிதன் 2: நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு". மனிதன் 1: இல்லை முடியாது . மனிதன் 2: 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு. மனிதன் 1: இல்லை முடியாது . மனிதன் 2: நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன். உனது இரு கண்களையும் எனக்குத் தந்துவிடு . மனிதன் 1: நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களைக் கொடுத்தாலும் என் கண்களைக் கொடுக்க முடியவே முடியாது . மனிதன் 2: இறைவன் உனக்கு எவ்வளவு விலையுயர்ந்த செல்வங்களைத் தந்திருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல், இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை என்று சலிக்கின்றாயே? எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள். அவன் தான் இறைவன் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார். உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள். இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார், இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார், இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார். ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்" . நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று. இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்" . இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய். எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்" . இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய். எத்தனையோ மரித்த ஆத்துமாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் ". இறைவனுக்கு நன்றி செலுத்து. நீ நீயாக இருக்கின்றாய். எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்" . இறைவனுக்கு நன்றி செலுத்து. எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வி . இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இரு.

பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது.

 


பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது.
கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார் (இந்த சம்பவம் உண்மை சம்பவமோ அல்லது ஒருவரின் கற்பனையோ. ஆனால் தெளிவு படுத்தியது பொருள் பொதிந்த உண்மை. ஆம் பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! நல்லதே நடக்கும்! உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர். வழியில் பெரும் பனிப்புயல். ..! அவரால் காரை ஓட்ட முடியவில்லை… கஷ்ட்டப்பட்டு காரை செலுத்தி கொண்டிருந்த டாக்டர், ஒருவாறு ஒரு கிராமத்தை தாண்டிய போது, ஒரு இடத்தில் சாலை ,பல பிரிவுகளாக பிரிந்து காணப்பட்டது ..! வழிகாட்டி பலகையும் அந்த பனிப்புயலால் தூர வீசப்பட்டிருக்கவே.டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியாமல் குழப்பம்! பின் ஒருவாறு தெளிந்து , தாமாகவே ஒரு வழியை தேர்வு செய்து கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவராய், தனக்கு தோன்றிய ஒரு வழியில் காரை செலுத்த துவங்கினார் அவர் ! ஆனால் , அந்த வழியோ , ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியாக இருந்தது! சோதனையாக, இப்போது முன்பை விட மிக அதிகமாக புயல் வீசவே டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை …! இரு பக்கமும் அடர்ந்த மரங்களாக இருந்ததால், ஒதுங்க எந்த இடமும் இல்லை.! கண்ணுக்கெட்டிய தூரம் வரை, ஒரு கட்டிடமோ, வீடோ தென்படாத நிலையில், சிந்தனையுடன் மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்த டாக்டரின் கண்களில் , சற்று தொலைவில் இருந்த ஒரு சிறு வீடு தென்பட உற்சாகத்துடன் அந்த வீட்டை நோக்கி காரை செலுத்திய அவர், பின் ஒரு வழியாய் அந்த வீட்டை அடைந்து .. பின்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த வீட்டின் கதவை தட்டினார்…..! மறுகணம், ஒரு இளம் பெண் கதவை திறந்தாள்!! அவர் இருந்த நிலையை பார்த்து , உள்ளே அழைத்து , அவரை அந்த சிறிய கூடத்தில் அமரச் சொல்லி விட்டு , பின் பரபரப்புடன் உள்ளே சென்றாள் அந்த இளம் பெண்…. மிக, மிக சிறிய அளவிலான வீடு! அங்கு யாரும் இல்லாததால், … வீடு வெகு நிசப்தமாக இருந்தது! டாக்டர் அமர்ந்து கொண்டிருந்த அந்த நாற்காலியை தவிர , வேறு எந்த ஒரு பொருளும் அங்கு காணப்படவில்லை ! அந்த அளவுக்கு ஏழ்மை , அந்த வீட்டை ஆக்கிரமித்து கொண்டிருந்தது! அந்த சிறிய கூடத்தின் ஒரு ஓரத்தில், குழந்தை ஒன்று தூளியில் தூங்கி கொண்டிருந்தது….! சற்றைக்கெல்லாம் அந்த பெண் , சூடான தேநீர் கோப்பையோடு வெளியே வந்தவள், அன்போடு அவருக்கு அதை கொடுத்து அருந்த சொன்னாள்…. . பின், பேச்சினூடே , அந்த பெண், அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும்….அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், அவர் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினாள் …. பின் , அவரை பார்த்து கனிவுடன் ,” பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். ! நான் prayer செய்து விட்டு வருகிறேன் ” என்று கூறிவிட்டு …. அந்த சிறிய கூடத்தின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி , கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு , வெகு நேரம் பிரார்த்தித்து விட்டு,பின்,அவருக்கெதிரே தரையில் அமர்ந்து கொண்டாள்… ” என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? ” டாக்டர் அவளிடம் இயல்பாய் கேட்க பதிலுக்கு அப்பெண் கண்ணீர் மல்க ,தூளியில் தூங்கி கொண்டிருந்த தன் குழந்தையை காட்டி, ” அதோ தூளியில் தூங்கி கொண்டிருக்கிறானே, அவன் என் மகன்! அவனுக்கு வயது இரண்டு! அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை..! …Brain nerves சரியாக வேலை செய்யவில்லை….. ! இதை சரி செய்வதென்றால் , ஒரே ஒருவரால்தான் முடியுமாம்…… ! ஆனாலும் , அந்த சிகிச்சைக்கு ஏகப்பட்ட பணம் செலவாகும் என்கிறார்கள்……! என்னிடம் இப்போது அத்தனை பணம் கிடையாது…! ஹூம்….இப்போது நானிருக்கும் இந்த ஏழ்மை நிலையில் , கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் என்னால் செய்ய முடியவில்லை ‘” கண்ணீரை துடைத்தவாறு தலையை குனிந்து கொண்டாள் அவள்……. . அவளை பார்க்க பரிதாபமாகயிருந்தது டாக்டருக்கு..பின் மெல்லிய குரலில் அவளை பார்த்து , ” அம்மணி …யார் அந்த டாக்டர்? ” இயல்பாக கேட்டார் அவர்…” புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் ! “ அவள் பதிலை கேட்ட டாக்டர் அதிர்ந்து போய் , அவரையுமறியாமல், நாற்காலியிலிருந்து எழுந்து விட்டார். ….!காரணம் , ….அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்…..!! அந்த ஏழை பெண்ணின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையே , இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்ததற்கு காரணம் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் அவர்! .. பின் அங்கே நடந்தது தான் அதிசயமோ அதிசயம்! . …! ஆம் …! உடனடியாக , அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே க்ளினிக்குக்கு அழைத்து சென்று , தகுந்த மருத்துவம் செய்து , அந்த குழந்தையை காப்பாற்றினார் அந்த டாக்டர் ..! ஆக,பிரார்த்தனை மிக வலிமை வாய்ந்தது. …! நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்….! நாம் அனைவரும் ஒன்றிணைந்து , அவரவர் இருப்பிடத்திலிருந்தபடியே, ஒருமித்த மனதுடன் பிரார்த்தனை செய்து , உலகை உய்ய வைப்போம். கண்டிப்பாக கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்! நல்லதே நடக்கும்!

திருஷ்டி சுற்றி போடுதல்

                                                               திருஷ்டி சுற்றி போடுதல்

. கற்பூரம் ஏற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். 2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி இருந்தால் மிளகாய் வெடிக்கும் ஆனால் நமக்கு கமறாது. திருஷ்டி இல்லையெனில் நமக்கு நெடி ஏற்பட்டு கமறும். 3. உப்பு சுற்றி போடுதல்: கல் உப்பை சிறிது வலது கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நீரில் போட்டு கரைக்க அந்த உப்பு கரையும்போழுது நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையும் என்பதும் ஒரு நம்பிக்கை. 4. படிகாரம் சுற்றுதல்: மிளகாய் சுற்றி போடுவதுபோலவே படிகாரம் கொண்டும் திருஷ்டி சுற்றி போடலாம். திருஷ்டி இருந்தால் நெருப்பில் போடப்பட்ட படிகாரம் ஒரு பொம்மை மாதிரி மாறிவிடுமாம். 5. கருப்பு வளையல் பிறந்த சில நாட்களே ஆன குழந்தைகளுக்கு கருப்பு வளையலை ஆரத்தியுடன் சேர்த்து சுற்றிபோடும் வழக்கம் இன்றும் நாம் பல வீடுகளில் காண்கிறோம். 6.மண் : சிறிது மண்ணை கையிலெடுத்து திருஷ்டி சுற்றிவிட்டு அதில் எச்சிலை 3 முறை துப்பச்செய்து அதை வெளியில் எறிந்தால் திருஷ்டி போய்விடும் என்பதும் இன்றும் நம்பப்படுகிறது. 7. எலுமிச்சை குங்குமம்: சில வியாபார ஸ்தலங்களுக்கும், வண்டி வாகனம் , வீடு முதலியவற்றுக்கும் எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அவற்றின்மேல் குங்குமத்தை தடவி திருஷ்டி சுற்றி விட்டு வெளியிலோ அல்லது முச்சந்தியிலோ எறிவதையும் இன்றும் நாம் பின்பற்றுகிறோம். 8. பூசணிக்காய் உடைத்தல் பூசணிக்காயில் குங்குமத்தையும் சிறிது சில்லறைகளையும் போட்டு அதன்மீது கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்று பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 9. தேங்காய் உடைத்தல் ஒரு தேங்காயின்மேல் கற்பூரத்தை ஏற்றி திருஷ்டி சுற்றி விட்டு வீதியிலோ அல்லது வீதிகள் சந்திக்கும் இடத்திலோ உடைத்தால் திருஷ்டி சிதறிவிடும் என்றும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது. 10. ஆரத்தி கல்யாணம், பூஜை முதலியன முடிந்தவுடனும் மற்றும் சில முக்கியமான சமயத்திலும் ஆரத்தி எடுக்கும் வழக்கம் நம் நாட்டில் வெகு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுவும் ஒரு விதமான திருஷ்டி கழித்தலே ஆகும். பட்சி திருஷ்டி குழந்தை பிறந்த வீடுகளில் மாடியில் குழந்தை துணியை உலர வைத்திருப்பார்கள். அவற்றை சூரியன் மறைவதற்குள் எடுத்துவிடுவார்கள். ஏனென்றால் சூரிய அஸ்தமன சமயத்தில்தான் பறவைகள் தமது கூட்டுக்கு திரும்புமாம். அப்பொழுது அவை இத்துணிகளைப்பார்த்து கண் வைக்குமாம். அது குழந்தைக்கு ஆகாது. ஆகவேதான் துணிகள் சூரியன் மறைவதற்குமுன் எடுக்கப்படுகின்றன. பொதுவாக திருஷ்டி சுற்றி போடும்பொழுது அனைவரும் நெற்றியில் பொட்டோ, குங்குமமோ அல்லது விபூதியோ இட்டுக்கொண்டிருக்க வேண்டும். கிழக்கு நோக்கி நிற்கச்சொல்லி திருஷ்டி சுற்றி போடவேண்டும் இப்படி சுற்றும்பொழுது திருஷ்டி மந்திரம் தெரிந்தவர்கள் அதை கூறி சுற்றுவர். பெரியவர்கள் "தன் திருஷ்டி, தாயார் திருஷ்டி, நாய் திருஷ்டி, நரி திருஷ்டி, உற்றார் திருஷ்டி ....." என்று பலவிதமான திருஷ்டிகளை கூற கேட்டிருக்கிறேன். திருஷ்டி மந்திரத்தை மனதிற்குள்தான் கூறவேண்டுமாம். அதை ஒரு குருவின்மூலம் உபதேசம் பெற்றுதான் பிரயோகிக்கவேண்டும்.. தான் உபதேசம் பெற்ற திருஷ்டி மந்திரத்தின் சக்தியை அதிகரிக்க அவற்றை கிரஹண சமயத்தில் நீர்நிலைகளில் நின்றுகொண்டு ஜெபிக்க அவர்களுக்கு அந்த மந்திரத்தின் சக்தி கூடும் என்பதும் ஒரு நம்பிக்கை. . சீமந்த புத்திரன் அல்லது புத்திரி திருஷ்டி சுற்றி போட்டால் பலன் அதிகம் என்றும் கூறுவார்கள். வெளிநாட்டினர் கூட திருஷ்டி படாமலிருக்கட்டும் என்பதற்காக மரத்தை தொடுவார்களாம் "டச் வுட் " என்று கூறிக்கொண்டு. பொதுவாக ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை மற்றும் அமாவாசை தினங்கள் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தினமாக கருதப்படுகிறது. அதுவும் அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் அது திருஷ்டி சுற்றி போடுவதற்கு மிகவும் ஏற்ற தினமாகும். சூரிய அஸ்தமன சமயம்தான் திருஷ்டி சுற்றி போடுவதற்கு ஏற்ற தருணமாக கருதப்படுகிறது. இந்த பழக்கத்தையெல்லாம் எப்படி நம்புவது என்றும் சிலர் கேட்கிறார்கள். வந்த வியாதி குணமடையாமல், வந்த தடைகள் விலகாமல் இருந்திருந்தால் யாராவது இன்று திருஷ்டி சுற்றி கொள்ள முன்வருவார்களா? பலன் கிடைப்பதனால்தானே இந்த பழக்கம் ஆயிரக்கணக்கான வருடங்களாக விட்டுப்போகாமல் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதைவிட என்ன சான்று வேண்டும் இவை உண்மை என்பதற்க்கு

ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன,


 


ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன,

ஆனால் ஒரு யானை மிகவும் * சக்திவாய்ந்த, * கீழ்ப்படிதலான, * விவேகமான மற்றும் * சண்டை திறன்களில் திறமையானது. பல போர்களில், போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும். எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது . நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது. ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது. ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது . அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை. யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர். யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது. ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை. கவுதம புத்தர் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தார். கவுதம புத்தர் முதலில் சம்பவ இடத்தைப் பரிசோதித்தார், பின்னர் ஏரியைச் சுற்றி போர் முரசு இசைக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பரிந்துரைத்தார். சேற்றில் சிக்கிய யானை, முரசு வாசிப்பதன் மூலம் எப்படி சேற்றில் இருந்து வெளியே வரும் என்று, வினோதமாக அனைவரும் பார்த்தார்கள். போர் முரசு ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த யானையின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டது. முதலில் யானை மெதுவாக எழுந்து நின்று,பின்னர் சேற்றில் இருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கவுதம புத்தர் செயலிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது : 🥁 யானையின் உடல் பலம் குறைந்து விட இல்லை, அதற்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டிய அவசியம் மட்டுமே இருந்தது. 🥁 மேலும் மனிதர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சிறந்த குறிக்கோள், அதற்குரிய சிந்தனை மற்றும் மனநிலையையும் பராமரிக்க வேண்டியது அவசியம். மேலும் எந்த சூழலிலும் விரக்தி அடைய கூடாது * இந்த சவாலான காலத்தில் நாம் அனைவரும், நம்மையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நம்பிக்கையுடனும், உற்சாகப்படுத்தும் படியும் பேச வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்(போர் முரசு கொட்டுவது போல் ) வரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை பெற்று வாழ்க்கையை கொண்டாடுவோம் !

விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை

                                         விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமை

எல்லாரும் புரிந்துகொண்டு சொல்வதற்கு ஏற்ப, அங்கங்கே உள்ள ரத்தினங்களைச் சேகரித்து, மாலை தொடுத்தது போலே தொடுக்கப்பட்டது விஷ்ணு சஹஸ்ரநாமம். ‘சஹஸ்ரநாமம்' என்று சொன்னாலே அது விஷ்ணு சகஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும் என்கிற அளவுக்குப் பெருமையுடையது. ஆதிசங்கர பகவத்பாதாள், காஷ்மீரில் யாத்திரை செய்து கொண்டிருந்த போது, தம் சிஷ்யரை அழைத்து, புஸ்தக பாண்டாகாரத்திலிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தை எடுத்து வரும்படி ஆக்ஞாபித்தார். அதற்கு பாஷ்யம் பண்ண வேண்டும் என்று அவருக்குத் திருவுள்ளம். அங்கேயிருந்து போனார் சிஷ்யர். அவர் எடுத்து வந்து கொடுத்ததைப் பார்த்தால்... அது விஷ்ணு சஹஸ்ரநாமம். “நான் இதைக் கேட்கலையே...நான் கேட்டது லலிதா சஹஸ்ரநாமம் அல்லவா..? நீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கொண்டு வந்திருக்கியே...” என்று சிஷ்யரைத் திரும்பவும் அனுப்பினார். திரும்பவும் சிஷ்யர் எடுத்து வந்தது விஷ்ணு சஹஸ்ரநாமமாகவே இருந்தது! அப்போது ஆதிசங்கரர் சிஷ்யரைக் கேட்கிட்டார். “நான் சொல்வது என்ன, நீ செய்வது என்ன...?” ‘சுவாமி! நான் என்ன செய்வேன்? அங்கே போய் லலிதா ஸஹஸ்ரநாமத்தை எடுக்கணும்னு கையை வைச்சா, ஒரு சின்ன கன்யா பெண் வந்து நின்னுண்டு, அதை வைச்சிடு; இதை எடுத்துண்டு போ'ன்னு சொல்கிறாள். நான் என்ன செய்வேன்...?” என்றார் சிஷ்யர். அப்போது ஆதிசங்கரர் தம் திருவுள்ளத்திலே நினைத்தார்: அந்த அம்பிகையே இங்கு பாலையாய் வந்து, அந்த எம்பெருமான் நாராயணனுடைய திருநாமத்துக்கு பாஷ்யம் பண்ணும்படியாய் நம்மை நியமிக்கிறாள்... அதன் பிறகு விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணினார் பகவத்பாதர். இப்படி லலிதையே போற்றும்படியான, லலிதமான சஹஸ்ரநாமம், எல்லாரும் கொண்டாடும் படியான ஏற்றம் உடையது. எல்லா சஹஸ்ரநாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் இதுதான். ஆகையினாலே, சஹஸ்ரநாமம் என்று சொன்னாலே அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தைத்தான் குறிக்கும். ஆயிரம் திருநாமங்களுக்கு என்ன ஏற்றம்...? அந்த சஹஸ்ரநாமம் சொல்லப்பட்டது யாராலே...? ஞானியருள் அக்ரகண்யரான பீஷ்மரால்.. "பீஷ்மர்" என்றாலே "பயப்படத் தக்கவர்" என்று அர்த்தம். அம்புப் படுக்கையில் இருந்தார் பீஷ்மர். அந்தக் காட்சியைப் பார்த்து, தர்மபுத்திரரை அழைத்துச் சென்றார் பகவான் கிருஷ்ணர். “அணையும் நெருப்பைப் போலே இருக்கிறார் பீஷ்மர். அவர் போனால், தர்மத்தைச் சொல்ல யார் இருக்கிறார்கள்...? போ! அவர் சொல்வதைப் போய்க் கேள்” என்று தர்மபுத்திரரை அனுப்பினார். ‘ஏன் பீஷ்மர் போய்விட்டால் பகவானே இருக்கிறாரே - தர்மத்தைச் சொல்ல...?' என்று நமக்குக் கேட்கத் தோன்றும். பகவான் இருந்து பிரயோஜனமில்லை; அவரை விளங்கச் செய்யக் கூடிய மகான்கள் இருக்கணும்! இந்த உண்மைக்கு சாட்சியமாகத்தான் பகவானே பீஷ்மர் அம்புப் படுக்கையிலே இருந்தபடி சொன்ன அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தைக் கேட்டார். பல பேர் கேட்டார்கள். அவர்களுடன் அந்த வாசுதேவனே கேட்டான். அவன் சொன்னது கீதை; கேட்பது சஹஸ்ரநாமம். இப்படி அவன் ஆனந்தமாய்க் கேட்டதே அவன் பெருமை, உயர்வு. பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் செய்திருக்கிறார். "பகவத் குண தர்ப்பணம்" என்று அதற்குப் பெயர். 'பகவானுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டக் கூடிய கண்ணாடி' என்று பொருள். "விஷ்ணு சஹஸ்ரநாமம்" என்னும் போது பகவானுடைய நாமாக்களைச் சொல்கிறோமா? அவன் குணங்களைச் சொல்கிறோமா என்று சந்தேகம் வேண்டாம்... அவன் குணங்களையே தெரிவிக்கும்படியான நாமாக்கள் அவை. அத்தனையும் சுகுணங்கள்! சிறிய கண்ணாடியானது மிகப் பெரிய யானையின் உருவத்தைக் கூடக் காட்டவல்லது இல்லையா..? அதைப் போலே சர்வ வியாபகனானவனை, அந்த சின்னத் திருநாமங்கள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த பகவத் குண தர்ப்பணம் என்கிற பாஷ்யத்திலே, பராசர பட்டர், விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்குரிய ஏற்றங்களைச் சொல்கிறார். நித்யம் பகவத் சந்நிதியில் விளக்கேற்றி சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ற வழக்கம் வைத்துக்கொண்டால் அந்தக் குடும்பத்திலே சண்டை, கலகம் இருக்காது. சர்வ சம்பத்தும் வந்து சேரும். அந்நியோன்யம் வளரும்; துர்தேவதைகள் பிரவேசிக்காது... நம் சித்தத்திலும் நுழையாது. "கீதைக்குச் சமானமாக ஏதாவது உலகத்திலே உண்டா?" என்று கேட்டால், அது விஷ்ணு சஹஸ்ரநாமம்தான். இன்னும் கேட்டால், கீதையைவிட உயர்வானது. கீதையைச் சொன்னது பகவான். அந்த பகவத்சரணார விந்தத்திலே அசஞ்சலமான பக்தி உடைய ஞானி (பீஷ்மர்) சொன்ன வார்த்தை விஷ்ணு சஹஸ்ரநாமம். பகவானைக் காட்டிலும் ஞானி உயர்ந்தவரானதாலே அவர் வார்த்தைக்கு மதிப்பு அதிகம். வேதமே சொல்கிறது. ‘யக்ஞமே பண்ண வேண்டாம். அவன் திருநாமத்தைச் சொன்னாலே போதும். யக்ஞம் பண்ணின பலன் கிடைக்கும்...!!! ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்.



புதன் என்பது புத்தி, பேச்சு, கல்வி, கருத்து, பேச்சுவார்த்தை, இராஜதந்திர திறன் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றின் கிரகம்.

 புதன் என்பது புத்தி, பேச்சு, கல்வி, கருத்து, பேச்சுவார்த்தை, இராஜதந்திர திறன் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றின் கிரகம்.

இது நம் அன்றாட அன்றாட வாழ்க்கை விவகாரத்தை ஆளுகிறது. ஜாதகத்தில் புதன் நன்கு வைக்கப்படும் போது குறுகிய பயணங்கள் மற்றும் பயணங்கள், உள்ளுணர்வு சக்தி, எழுதும் திறன் மற்றும் கணிதம் மற்றும் அமானுஷ்ய அறிவியலில் திறன் ஆகியவற்றை வழங்குகிறது. ரகசியம் பாதுகாக்க வேண்டும், இளமை தோற்றம் தரும், சிந்தனை திறன் அதிகரிக்கும், நகைச்சுவை உணர்வுகள் இருக்கும், அருகில் பெருமாள் கோயில் இருக்கும் இரட்டை யோசனை, இரட்டை வருமானம் மற்றும் இரட்டைதொழில் அமைக்க வேண்டும். விவாதங்களில் உங்கள் உரிமைகுறல், உங்களின் பங்களிப்பு, தாக்கம் அதிகமாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் உங்கள் கருத்து அல்லது பார்வைகளைப் பற்றி சிந்திப்பதில் மூழ்கிவிடுவீர்கள். . வேறு யாராவது என்ன நினைக்கலாம் உங்களை என்பது இரண்டாம் நிலை. நீங்கள் பொதுவாக நீண்ட விவாதங்களை விரும்புவதில்லை


வேத நூல்களில் சொல்லப்பட்ட ஆதார சக்கரங்கள்

                             வேத நூல்களில் சொல்லப்பட்ட ஆதார சக்கரங்கள்

மூலாதாரம்– ஆசனவாய்க்கும், பிறப்புறுப்புக்கும் இடையில் – முதுகுத்தண்டின் அடிப் பகுதியில் மந்திர எழுத்து – லங் சுவாதிஷ்டானம் - அடி வயிற்றுப் பகுதி மந்திர எழுத்து – வங் மணிபூரகம் – தொப்புள் பகுதி மந்திர எழுத்து – ரங் அனாஹதம் – இதயம் மந்திர எழுத்து – யாங் விசுத்தி - தொண்டைப் பகுதி மந்திர எழுத்து – ஹாங் ஆக்ஞா - புருவ மத்தி மந்திர எழுத்து – ஓம் சகஸ்ராரம் - தலையின் உச்சிப் பகுதி மந்திர எழுத்து – ஓம் ஓம் என்ற ப்ரணவ மந்திரத்தை சேர்த்து ஒலிக்காத போது எந்த ஒரு மந்திரமும் முழு பலத்தை பெறுவதில்லை என்பது வேத வாக்கு. ஓம் என்று எழுதினால் அது விந்து சக்தி, அதாவது சிவம். ஓம் என்று சப்தித்தாலோ அது இயக்க சக்தி. அதாவது சக்தி. ஓம் என்றால் அ காரம், உ காரம், ம காரம் என்று சொல்வார்கள். அகாரம் படைப்பைக் குறிப்பது. உகாரம் காத்தலைக் குறிப்பது. மகாரம் அழித்தலைக் குறிப்பது. அதாவது மும்மூர்த்திகளையும் உள்ளடக்கிய நாதமயமாகிய ப்ரணவத்தின் சிறப்புகளைச் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாது. இதில் படைத்தல் என்பதை ஆங்கிலத்தில் Generator என்பார்கள். இயக்கிக் காப்பதை Operator என்பார்கள். அழித்தல் Destroy எனப்படும். இப்போது இந்த மூன்று சொற்களின் முதல் எழுத்தை மட்டும் எடுத்து எழுதினால் என்னவாகிறது என்று பாருங்கள், "G-O-D" என்று வருகிறதல்லவா? பாருங்கள் ப்ரணவம் மொழி, இனம், மதம், தேசம், காலம் எல்லாம் கடந்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இன்னும் நிறைய இருக்கிறது. இப்போது நாம் வேறு விஷயத்தைக் குறித்து பார்க்க வேண்டியதிருப்பதால் இதை விட்டு விடுவோம். இப்போது நாம் காயத்ரீ மந்திரத்தைக் குறித்து பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னால் மந்திரம் குறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். மனதை திடப்படுத்துவது மந்திரம் என்பார்கள். மனதைத் திடப்படுத்துவதோடு மட்டுமல்ல ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்றுவதும் மந்திரங்களாகும். ஆற்றல் குறித்த விஞ்ஞானத்தின் விதி என்னவென்றால் ஒரு ஆற்றலை அழிக்க முடியாது. ஆனால், அதற்குச் சமமான வேறொரு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே. அந்த அடிப்படையில் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் ஒலி ஆற்றலை, மின்னாறலாகவும், அது பிறகு காந்த ஆற்றலாகவும் மாறுகிறது என்பதை இப்போது நவீன கருவிகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். ரிஷிகளாலும், முனிவர்களாலும், சித்தர்களாலும் கோடிக்கணக்கான மந்திரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒலி அலைகளின் சப்தமே மந்திரமாகத் தரப்பட்டுள்ளது. எல்லா மந்திரங்களும் பிரபஞ்சத்தில் இருந்து கிரகிக்கப்பட்டவைகளே. எல்லோராலும் அந்த பிரபஞ்ச அலைகளின் ஒலியைக் கேட்க முடியாது. வேதம் அந்த அலை ஒலிகளை நான்கு வகையாகப் பிரித்துச் சொல்லியிருக்கிறது. நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலிகள் வைகரி எனப்படும். பற்றற்ற நிலையில் வாழும் துறவிகளுக்கு இன்னும் சில நுட்பமான ஒலிகள் கேட்கும். அதை மத்யமா என்திளைத்தபார்கள். ஆழ்ந்த தியானத்தில் இருப்பவர்கள் கேட்கும் ஒலிகளும் உண்டு. அதை பச்யந்தி என்பார்கள். சமாதியில் திளைத்து மீண்டு வந்தவர்களுக்கே பரா என்று சொல்லக் கூடிய ஒலிகள் கேட்கும். இப்படிப்பட்ட ஓலிகளைக் கேட்டு உணர்ந்த ரிஷகளின் ஒலித் தொகுப்பே மந்திரங்களாக விரிந்தன. அண்டத்தில் கேட்கும் ஒலிகளைப் போல நம் பிண்டத்தில் நாடிகளிலும், சக்கரங்களிலும் ஒலிக்கும் ஒலிகளையே மந்திரமாக்கித் தந்தவர்கள் நம் சித்தர்கள். இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் மந்திரம் குறித்த நம்பிக்கை நம் மக்களுக்கு குறைந்து விட்டது. காரணம் என்னவென்றால், அந்தக் கலை வியாபாரமானதால் மந்திரம் சொல்பவர்கள் மனமானது திடமாகி அதில் லயமாவதில்லை. எனவே பலன்களே கிடைக்காமல் போய்விடுகிறது. கலியுகத்தில் மந்திரங்களே மனதை வலிமையாக்கி ஒருமைப்படுத்த வல்லவை என்று சித்தர்கள் சொல்லியிருப்பதை நம்புங்கள். இதில் காயத்ரீ என்ற மந்திரம் ப்ராணாயாமம் என்கிற சந்தியா வந்தனம் செய்பவர்களுக்காகத் தரப்பட்டது. இதை மூன்று பாகமாக உடலாலால், உயிரைக் காக்க செய்யப்படுவதால் காய த்ரீ என்று சொல்வதாகச் சொல்லப்படுவதுண்டு. மூன்று நாடிகளை முன்னிருத்தி செய்வதால் காயத்ரீ என்று சொலவதாகவும் சொல்பவர்களும் உண்டு. வேதம் சொல்வது என்னவென்றால் ப்ராணாயாமம் செய்பவர்கள் காயத்ரியை வியாகிருதி, காயத்ரீ, சிரஸ் என்று மூன்று பகுதியாகச் சொல்ல வேண்டும் என்பதே. அதாவது ''ஓம் பூ; ஓம் புவ; ஓம் ஸுவ; ஓம் மஹ; ஓம் ஜனன; ஓம் தப; ஓம் ஸத்யம்'' இது முதற்பகுதியான வியாகிருதி. ''ஓம் தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ - தேவ ஸ்யதீமஹி ! தி யோ யோ ந ; பிரசோதயாத் ;'' இது இரண்டாம் பகுதி. காயத்ரீ. ''ஓமாப ; ஜ்யோ தீரஸ ; அம்ருதம்ப்ரம்ம பூர்ப்புவஸ்ஸுவரோம்;'' இதநு மூன்றாம் பகுதி . சிரஸ். இதுவே வேதம் சொல்லும் ப்ராணாயாம மந்திரம். இதைக் கும்பகத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ப்ராணாயாமத்தை ஆசனத்தோடு செய்தால் இன்னும் சிறப்பு. அது ஏன் என்றால் ''ஆசனேன் ரஜோ ஹந்தி'' அதாவது ஆசனத்தோடு செய்வதால் ரஜோ குணம் ஒழியும். மேலும் ப்ராணாயாமம் செய்வதால் ''த்த ஹா க்ஷீயதே பிரகாச ஆவரனம்'' தமோ குணமும் அழியும். எனவே சத்துவ குணம் மேலோங்கும். அப்படி சத்துவ குணம் மேலோங்கியவர்களுக்கே தியான யோகம் நன்கு சித்திக்கும். அப்படி தியானம் சித்தித்தவர்கள் அதில் நிலைத்திருந்து குணம் கடந்த நிலையை அடைய முடியும் என்கிறார் பதஞ்சலி சித்தர். இவற்றோடு மந்திரமும் சேரும் போது பலன்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ ? இதைப் படித்து விட்டு ஆசனங்களோடு செய்ய முடியாதவர்கள் வருந்தத் தேவையில்லை. ஆசனங்கள் இல்லாமல் செய்தும் பல அபூர்வமான பலன்களைப் பெறலாம்.

              



ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு

 ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள் இந்த செய்தி அருகில் திருச்சியில் உள்ள இந்துக்களுக்கே தெரியாது. .. ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை அப்படியே ஸ்ரீராமனுஜர் சன்னதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜர் பூத உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள் தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள். இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே: தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள். நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள். இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர். ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது: தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம். தொடர்ந்து அரங்கன்: இராமானுசன் என்தன் மாநிதி என்றும் இராமனுசன் என்தன் சேமவைப்பு என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர். பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி.என்று பெயர். உய்ய ஒரே வழி.... உடையவர் திருவடி....



குங்குமத்தில் உள்ள ரகசியம்


                                                                  குங்குமத்தில் உள்ள ரகசியம்

சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் தான் குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது. (1) சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். (2) சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. (3) வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். (4) குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். (5) பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். (6) அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது. (7) தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். (8) திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. (9) ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். (10) கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். (11) குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். (12) சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்.



#உங்கள்_நட்சத்திர #கடவுள்_மரங்கள்_பாடல்கள்..!!


                           #உங்கள்_நட்சத்திர #கடவுள்_மரங்கள்_பாடல்கள்..!!

நமது நட்சத்திரத்திற்குரிய கடவுள் அதிதேவதை எதுவென அறிந்திருந்தால் நாம் தினமும் தொழுது வழிபட நலம் பெருகும் அல்லவா.!!🙏 இதோ உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளர்கள் பற்றிய தகவல்!!🙏 இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய கடவுளை வணங்கி சகல வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.!!🙏 1. அஸ்வினி, மகம், மூலம் _ விநாயகர் 2. பரணி , பூரம் , பூராடம் _ ரங்கநாதர் 3. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் _ ஆஞ்சநேயர் 4. ரோஹிணி, அஸ்தம், திருவோணம் - சிவன் 5. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - துர்க்கை 6. திருவாதிரை, சுவாதி, சதயம் - பைரவர் 7. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - ராகவேந்திரர் 8. பூசம், அனுஷம், உத்திரட்டாதி - சிவன் 9. ஆயில்யம், கேட்டை, ரேவதி - பெருமாள் !! இனி உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பார்ப்போம் 27:நட்சத்திரத்திற்குரிய மரங்கள்..!!🙏 அசுவணி----எட்டி பரணி ----நெல்லி கார்த்திகை--அத்தி ரோகிணி ---நாவல் மிருகசீரிடம்-கருங்காலி திருவாதிரை-செம்மரம் புனர்பூசம் --மூங்கில் பூசம் -----அரசு ஆயில்யம்--புன்னை மகம் ---ஆல் பூரம் ----பலா உத்திரம் --அலரி அஸ்தம்---வேலம் சித்திரை--வில்வம் சுவாதி----மருது விசாகம்--விலா அனுஷம்--மகிழம் கேட்டை--குட்டிப்பலா மூலம்----மா பூராடம் - வஞ்சி உத்திராடம்-சக்கைப்பலா திருவோணம்-எருக்கு அவிட்டம்---வன்னி சதயம்-----கடம்பு பூரட்டாதி -கருமருது உத்திரட்டாதி-வேம்பு ரேவதி------இலுப்பை அவரவர் தங்களுக்குரிய மரங்களை ஏதேனும் கோவில்களிலோ , தனக்கு சொந்தமான இடத்திலோ நட்டு அனுதினம் நீர் ஊற்றி பராமரித்து வர சகலவிதமான தோஷங்களும் விலகி வாழ்வில் நன்நிலையை விரைவில் பெறுவர் என்பது திண்ணம்.!! நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் _ விருட்ஷ சாஸ்திரப்படி 27: நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!🙏 மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.!!🙏 இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கைமலரும்.அந்த மரக்கன்றைநட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும்அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும் அம்மரக்கன்று பூத்து,காய்க்கும்போது,உரியவரின்வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும்.அவரதுகர்மவினைகள் நீங்கியிருக்கும்.கர்மவினைகளை வெற்றிகொள்ள விருட்ச சாஸ்திரம் இப்படிஒரு வழிகாட்டுகிறது.!!🙏 இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்!!🙏 அஸ்வினி 1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி) 2 ம் பாதம் - மகிழம் 3 ம் பாதம் - பாதாம் 4 ம் பாதம் - நண்டாஞ்சு பரணி 1 ம் பாதம் - அத்தி 2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு 3 ம் பாதம் - விளா 4 ம் பாதம் - நந்தியாவட்டை கார்த்திகை 1 ம் பாதம் - நெல்லி 2 ம் பாதம் - மணிபுங்கம் 3 ம் பாதம் - வெண் தேக்கு 4 ம் பாதம் - நிரிவேங்கை ரோஹிணி 1 ம் பாதம் - நாவல் 2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை 3 ம் பாதம் - மந்தாரை 4 ம் பாதம் - நாகலிங்கம் மிருகஷீரிஷம் 1 ம் பாதம் - கருங்காலி 2 ம் பாதம் - ஆச்சா 3 ம் பாதம் - வேம்பு 4 ம் பாதம் - நீர்க்கடம்பு திருவாதிரை 1 ம் பாதம் - செங்கருங்காலி 2 ம் பாதம் - வெள்ளை 3 ம் பாதம் - வெள்ளெருக்கு 4 ம் பாதம் - வெள்ளெருக்கு புனர்பூசம் 1 ம் பாதம் - மூங்கில் 2 ம் பாதம் - மலைவேம்பு 3 ம் பாதம் - அடப்பமரம் 4 ம் பாதம் - நெல்லி பூசம் 1 ம் பாதம் - அரசு 2 ம் பாதம் - ஆச்சா 3 ம் பாதம் - இருள் 4 ம் பாதம் - நொச்சி ஆயில்யம் 1 ம் பாதம் - புன்னை 2 ம் பாதம் - முசுக்கட்டை 3 ம் பாதம் - இலந்தை 4 ம் பாதம் - பலா மகம் 1 ம் பாதம் - ஆலமரம் 2 ம் பாதம் - முத்திலா மரம் 3 ம் பாதம் - இலுப்பை 4 ம் பாதம் - பவளமல்லி பூரம் 1 ம் பாதம் - பலா 2 ம் பாதம் - வாகை 3 ம் பாதம் - ருத்திராட்சம் 4 ம் பாதம் - பலா உத்திரம் 1 ம் பாதம் - ஆலசி 2 ம் பாதம் - வாதநாராயணன் 3 ம் பாதம் - எட்டி 4 ம் பாதம் - புங்கமரம் ஹஸ்தம் 1 ம் பாதம் - ஆத்தி 2 ம் பாதம் - தென்னை 3 ம் பாதம் - ஓதியன் 4 ம் பாதம் - புத்திரசீவி சித்திரை 1 ம் பாதம் - வில்வம் 2 ம் பாதம் - புரசு 3 ம் பாதம் - கொடுக்காபுளி 4 ம் பாதம் - தங்க அரளி சுவாதி 1 ம் பாதம் - மருது 2 ம் பாதம் - புளி 3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை 4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை விசாகம் 1 ம் பாதம் - விளா 2 ம் பாதம் - சிம்சுபா 3 ம் பாதம் - பூவன் 4 ம் பாதம் - தூங்குமூஞ்சி அனுஷம் 1 ம் பாதம் - மகிழம் 2 ம் பாதம் - பூமருது 3 ம் பாதம் - கொங்கு 4 ம் பாதம் - தேக்கு கேட்டை 1 ம் பாதம் - பலா 2 ம் பாதம் - பூவரசு 3 ம் பாதம் - அரசு 4 ம் பாதம் - வேம்பு மூலம் 1 ம் பாதம் - மராமரம் 2 ம் பாதம் - பெரு 3 ம் பாதம் - செண்பக மரம் 4 ம் பாதம் - ஆச்சா பூராடம் 1 ம் பாதம் - வஞ்சி 2 ம் பாதம் - கடற்கொஞ்சி 3 ம் பாதம் - சந்தானம் 4 ம் பாதம் - எலுமிச்சை உத்திராடம் 1 ம் பாதம் - பலா 2 ம் பாதம் - கடுக்காய் 3 ம் பாதம் - சாரப்பருப்பு 4 ம் பாதம் - தாளை திருவோணம் 1 ம் பாதம் - வெள்ளெருக்கு 2 ம் பாதம் - கருங்காலி 3 ம் பாதம் - சிறுநாகப்பூ 4 ம் பாதம் - பாக்கு அவிட்டம் 1 ம் பாதம் - வன்னி 2 ம் பாதம் - கருவேல் 3 ம் பாதம் - சீத்தா 4 ம் பாதம் - ஜாதிக்காய் சதயம் 1 ம் பாதம் - கடம்பு 2 ம் பாதம் - பரம்பை 3 ம் பாதம் - ராம்சீதா 4 ம் பாதம் - திலகமரம் பூரட்டாதி 1 ம் பாதம் - தேமா 2 ம் பாதம் - குங்கிலியம் 3 ம் பாதம் - சுந்தரவேம்பு 4 ம் பாதம் - கன்னிமந்தாரை உத்திரட்டாதி 1 ம் பாதம் - வேம்பு 2 ம் பாதம் - குல்மோகர் 3 ம் பாதம் - சேராங்கொட்டை 4 ம் பாதம் - செம்மரம் ரேவதி 1 ம் பாதம் - பனை 2 ம் பாதம் - தங்க அரளி 3 ம் பாதம் - செஞ்சந்தனம் 4 ம் பாதம் - மஞ்சபலா VMV தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்..!!🙏 சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்துவரையோ, தேடிப்பாருங்கள்.. இல்லையா , அந்தநட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.!!🙏 மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல விருட்சங்கள் உண்டு. அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது , நீங்கள் அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது.. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள்.. உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பாருங்கள் உங்கள் அனுபவங்களை.!!🙏 நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும் இருந்து இடம் சேவூர் அங்காளம்மன் கோவில்..!!🙏 27:நட்சத்திரங்களும் அதற்குரிய மரங்களும் நட்சத்திர மரங்கள் விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிபடி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள் குறைந்த பட்சம் இரண்டு கண்றுகளாக நடுங்கள்..!!



பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்


                      பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பதன் முக்கியத்துவம்

பசு ஏதாவது விஷத்தன்மை உடைய தாவரத்தை அல்லது உணவை அருந்தி அதிலிருந்து கிடைக்கும் பாலை அருந்தினால் நமக்கும் அந்த விஷத்தன்மை வருமா?என்று சோதித்து பார்த்ததில் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள்.* 90 நாட்கள் பசுவுக்கு தினமும் விஷம் கலந்த தாவரத்தை கொடுத்து விட்டு அதன் பாலை ஆராய்ந்து பார்த்தார்கள். விஷத்திற்கான எந்த தடயமும் அந்த பாலில் இல்லை.. சரி அந்த விஷம் எங்கு தான் போனது என்று ஆராய்ந்து போது ஆச்சர்யம் அடைந்தார்கள். ஆல கால விஷத்தை உண்ட பரமசிவன் உலகை காக்க அந்த விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்தான் என்பதுதான் வரலாறு. அதே போல் பசுவும் விஷத்தை தன் கழுத்திலேயே தங்க வைத்திருக்கிறதாம். அதனால் தான் பழங்கால்ம் தொட்டு பசுவுக்கு அகத்திக் கீரை கொடுக்கிறோம். அகத்திக்கீரை விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. பசுவிற்கு அகத்திக்கீரை தருவதால் ஏற்படும் பலன்கள்.! பசுவுக்கு நாம் அகத்திக்கீரைதருவதால்., முதலில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி முதலிய தோஷங்கள் விலகி விடும். நீண்ட நாட்களாக திதி, கர்மா செய்யாமல் விட்டிருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்குத் தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும் சுப வாழ்வு ஏற்படும்.

Saturday 8 May 2021

ஒரு குட்டி கதை..அவரவர் வினைப்பயன்!.

                                             ஒரு குட்டி கதை... அவரவர் வினைப்பயன்!


ஒரு காட்டில் சுபத்ரை என்கிற வேடர் குலப் பெண், தன் கணவருடன் வாழ்ந்து வந்தாள். 


வெகு நாட்களாக இத்தம்பதியருக்கு குழந்தைப்பேறு இல்லாமல், பல விரதங்கள் அனுஷ்டித்து ஒரு குழந்தைப் பிறந்தது. 


அந்தக் குழந்தையை இருவரும் சீராட்டி வளர்த்து வந்தனர். அந்த ஐந்து வயது பாலகனை உணவூட்டி உறங்க வைத்து விட்டு, நீர் எடுத்து வர அருவிக்குச் சென்றாள் அப்பெண், தன் குடிலுக்குத் திரும்பியவள் திடுக்கிட்டாள். 


அவளுடைய பாலகனை ஒரு நாகம் தீண்ட, விஷம் ஏறி உயிருக்கு மன்றாடுகிறான். 


தரையில் விழுந்து அழுது புலம்புகிறாள் அவள். 


கூக்குரல் கேட்டு ஓடி வருகிறான் கணவன், விஷயமறிந்து, அப்பாம்பு தங்கியிருந்த புற்றைத் தகர்த்து அந்தப் பாம்பைப் பற்றி சுபத்ரையிடம் இழுத்து வந்தான். 


சுபத்ரை, நம் குழந்தையை தீண்டிய இப்பாம்பை கத்தியால் வெட்டிக் கொல்லட்டுமா? என்கிறான் வேடன். 


இந்தப் பாம்பைக் கொன்று விட்டால் என் குழந்தை உயிர்த்தெழுமா? எனக் கேட்கிறாள் சுபத்ரை. 


இப்பாம்பைக் கொல்லா விட்டால் மாத்திரம் நம் குழந்தை உயிர்த்தெழுமா? என்கிறான் கணவன்.


இந்தப் பாம்பைக் கொன்று விட்டால், உலகத்தில் பாம்பு வர்க்கமே இல்லாமல் போகுமா? பாம்பு வர்க்கம் இல்லாமல் போகாது. 


ஆனால், துஷ்ட பிராணிகளின் எண்ணிக்கை குறைந்து விடும் அல்லவா? 


இவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசியது; 


மூடா! அவள் என்னைக் கொல்ல வேண்டாம் என்கிறாள். 


நீ கொல்வேன் என்று அடம் பிடிக்கிறாய். நன்றாக யோசித்துப்பார். 


இங்கு நீ, உன் மனைவி, உங்கள் குழந்தை இருக்கிறீர்கள். 


நான் தீண்டிக் கொல்ல வேண்டும் என்றால் உன்னையோ, உன் மனைவியையோ கொன்றிருக்கலாம். 


உங்கள் குழந்தையை மட்டும் தானே தீண்டினேன். அதுவும் என்னை ம்ருத்யு தேவதை ஏவியதால் தான் குழந்தையை கடிக்க வேண்டியதாயிற்று. 


இதில் என் தவறு எதுவுமில்லை என்றது. 


யார் அந்த ம்ருத்யு? என்றான் வேடன். ம்ருத்யு தேவதை அவன் முன் தோன்றினான். 


குழந்தை இறப்புக்கு நீயா காரணம்? என்றான் வேடுவன்.


நான் காரணமில்லை. என்னைக் காலன் ஏவினான். 


பாம்பை ஏவி இந்தக் குழந்தையை கடிக்கச் செய்தேன் என்றான் ம்ருத்யு தேவதை. 


காலன் என்பவன் யார்? என வேடுவன் கேட்க, யமதர்மன் அவன் முன் தோன்றினான். 


இந்தக் குழந்தை இறக்க நீதான் காரணமா? நான் காரணமில்லை, என்னை 


பகவான் ஏவினார்..

நான் ம்ருத்யு தேவதையை ஏவினேன். ம்ருத்யு தேவதை பாம்பை ஏவினான். 


குழந்தையைக் கடித்தது என்றான் யமதர்மன். 


உன்னை ஏவிய அந்த பகவான் யார்? 


ஸ்ரீமந் நாராயணன் அந்த வேடுவனுக்குக் காட்சியளித்தான். 


எல்லாற்றுக்கும் காரணம் நீதானா? என்றான் வேடுவன். 


பகவான் கூறுகிறார்; மண்ணில் பிறந்த ஒவ்வொரு வரும் இறக்க வேண்டும் என்பதே விதி. 


கடித்து உன் குழந்தை சாக வேண்டும் என்பதே நியதி. 


அது நிர்ணயமானதால் நானே நடத்தி வைத்தேன். 


எல்லோரும் தப்புவதற்கு ஒவ்வொரு காரணம் சொல்கிறீர்கள். 


நான் நம்ப மாட்டேன். என்று குழந்தையைக் கடித்த இந்தப் பாம்பை வெட்டியே தீருவேன் என்று ஆவேசத்துடன் கத்தியை எடுக்க தன் தோள் பைக்குள் கையை விட்டான் வேடுவன். 


வேடுவனுக்கே தெரியாமல் அவன் தோளில் மாட்டியிருந்த பைக்குள் வேறொரு பாம்பு புகுந்து இருந்து. 


அது அவனைத் தீண்டி விட்டது. உடனே அவன் வாயில் நுரை தள்ளி, மயங்கி கீழே விழுந்தான்.


இதைச் சற்றும் எதிர் பார்க்காத அவன் மனைவி உடனடியாக காட்டுக்குள் சென்று மூலிகையைப் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து, அவன் வாயில் சாற்றை ஊற்றினாள். 


வேடுவன் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து பிழைத்துக் கொண்டான். 


இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தனர். 


பகவான் சொன்னார்; எந்தப் பாம்பு கடிக்கு எந்த மூலிகை கொடுத்தால் விஷம் இறங்கும் என்ற ஞானம் படைத்தவள் உன் மனைவி. அப்படியிருந்தும் தன் குழந்தை பிராணனுக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போது அவளுக்கு ஏன் அந்த ஞானம் வரவில்லை? 


குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை? 


ஆனால் உன்னைக் காப்பாற்றி விட்டாள். 


அதற்கு என்ன? காரணம்? 


கடித்து பிழைக்க வேண்டும் என்பது உன் விதி. 


கடித்து இறக்க வேண்டும் என்பது உன் குழந்தையின் விதி. 


அது அவரவர் வினைப்பயன்தான் என்றார். 


பரமாத்மா கூறியது எத்தகைய சத்தியம்..



Thursday 29 April 2021

வில்வத்தின் பயன்களும் மருத்துவ குணங்களும்

                   வில்வத்தின் பயன்களும் மருத்துவ குணங்களும்                     

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம் 


 சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு)  அர்ச்சனைக்கு  உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.


 வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன 


குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே  பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்


 ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும்  உள்ளன


 பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக)  முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்


 வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்


 தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து  வழிபடுவது சிறப்பு


 மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்


வில்வ வழிபாடும் பயன்களும் 


சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்


 வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.

வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது


 மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்)  பாவங்களைப் போக்குவன  ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி  வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம் 


எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்  இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும்  அடைவார்கள்


வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக  விளக்கமாகக் கூறுகின்றன


 வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன


ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்)  திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்


அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர்  பெற்றது


சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிமை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்


அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும்  வில்வத்தை ஏற்றுக் கொண்டான்


 ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும் 


வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும்  வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் 


ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல்  நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது


சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும்  இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்


வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.


வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது 


நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும்  அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.


மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது)  செய்த புண்ணியம் உண்டாகும்.


கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.


108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.


இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல்  நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.


சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை)  கடாட்சத்தைப் பெறமுடியும்


 வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு  ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது 


ஒரு வில்வ இதழைக்  கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ


்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும் 


வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.


வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?


சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்


 மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து)  எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.


நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே 


பொருள் விளக்கம்


 போகமோட்சம்  உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்


ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.


 வில்வ இதழின் மருத்துவக் குணங்கள் 


இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.


வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.


கொலஸ்ட்ரால்  வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.


வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.


வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.


விரிவான மருத்துவக் குணங்கள்:


வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.


கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.


கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும்.


இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.


பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.


இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.


ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.


வேர் நோய் நீக்கி உடல் தோற்றம், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தோற்றம். பழ ஓடு காச்சல் போக்கும்.


தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.


வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.


வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஜன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.


பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.


பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.


பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.


வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணமாக்கும் ஆற்றல் உடையது 


வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.


வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.


நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.


வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.


இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது 


வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.


வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.


வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.


வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.


ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.


வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.


வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.


வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.


வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர சகல நோய்களும் குணமாகும் 


இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரனாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம் மேலும் சிவபெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...