Thursday 19 July 2018

பிடித்த பாட்டியின் பழமொழிகள்..

பிடித்த பாட்டியின் பழமொழிகள்..

 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய்
திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும்
நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, ஆனால்
கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
8. கரும்பு கசப்பது வாயின்குற்றமே.
09. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
10. காட்டிலே செத்தாலும்
வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட
நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனத்தில்
கண்ட அரிசி
சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு
போகாமல் கெட்டது,
கடன்
கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை.
போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும்,
நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து
அரசாண்ட இடத்தில்
பூனை இருந்து
புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
18. அறப்படித்தவன்
அங்காடிக்குப் போனால்
விற்கவும் மாட்டான்,
வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ள பிள்ளை
உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
20. இறுகினால் களி.
இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை.
ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன?
ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல்
தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி.
ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக,
கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.)
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள்,
செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனிடம் சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா.?.

Wednesday 11 July 2018

தலை முடி / மயிர்

தலை முடி / மயிர்

தாந்திரீக முறை தலை முடி பற்றியது:

⭐பொதுவாக ஆண்களும் சரி பெண்களும் சரி தலை முடிக்கு முக்கியத்துவம் அதிகம் தருகின்றனர் எல்லாம் தலையில் இருக்கும் வரை மட்டுமே.

👉முடிக்கு ஈர்ப்பு ஆற்றல் அதிகம்.

🌹பொதுவாக தலை முடிக்கு பிரபஞ்ச ஆற்றலை இழுக்கும் சக்தி அதிகம் அதனால் தான் முனிவர்கள் முடியை திருத்தம் செய்வதில்லை. அவர்கள் கொண்டை வலைசுற்றி அதன் நடுவே தாமிர கம்பி சொருகிவைத்து ஆற்றலை பெறுகிறார்கள்.

👉ஆண்கள் முடி திருத்தம் செய்வதால் அச்சக்தி குறைவாக பெறுகிறார்கள் ஆனால் பெண்கள் கூந்தலை பராமரிப்பு செய்வதால் ஆற்றல் அதிகம் பெறுகிறார்கள். அதனால் அவர்களுக்கு உள்ளுணர்வு அதிகம் வேலை செய்யும்.

🌻கூந்தலை பராமரிப்பு சிறந்தவள் தான் திரெளபதி அதனால் கூந்தலுக்கு எதை சேர்த்தால் இந்த ஆற்றல் அதிகமாகும் என அவள் அறிவாள்.

🌻சூதாட்டமண்டபத்தில் அதர்மம் நிகழும் என்பதை தனது உள்ளுணர்வால் அறிந்து தடுக்கமுயல்வாள் ஆனால் முடியாது போகும் அது பாரத கதை.

🌻அவள் பிரபஞ்ச சக்தியை அதிகம்பெற உதவியது அவளது கூந்தல் தான். பொதுவாக பெண்களுக்கு இந்த சக்தி கிடைப்பது கூந்தல் என்கிற தலைமுடியால் தான்.

🌻ஆணோ பெண்ணோ தலை முடி வைத்து அவர்களை வசியம் செய்யமுடியும். இதில் அதிகம் சக்தி வாய்ந்தது பெண்ணின் முடிதான்.

🔥சிவபெருமான் அடியாராக வந்து பெண்ணின் கூந்தலை கேட்ட கதை உள்ளது அதை சூட்சமமாக ஆராயவும்.

🔥கூந்தலில் இயற்க்கையாக வாசனையுள்ளதா என கதை ஒன்று உள்ளது அதன் சூட்சம விசயம் அறியவும்.

🔥நாம் வணங்கும்,கிருஷ்ணர், சிவன்,இயேசு,நபிகள் ஏன் முடி அதிகம் வைத்துள்ளனர் என ஆராயவும்.

🔥கூந்தல் நீளமுள்ள பெண்கள் குடும்பத்தை வளர்ப்பார்கள் என்பதின் சூட்சமம் அறியவும்.

👉குறிப்பிட்ட பெண் முடியை வைத்து மாந்திரீக முறைபடி இறந்த ஒரு  எலும்பு கூட்டை எடுத்து அந்த ஆன்மாவை அடிமை ஆக்கலாம் .
மேலும் பெண்கள் முடியை எடுத்து சில குறி சொல்பவர்கள் அந்த பெண்ணை  சில ஆத்மாக்களுக்கு ஆகுதியாக தருகிறார்கள்.
இதனால் தான் பெரியவர்கள் தலை சீவிய முடியை மண்ணுக்குள் போட சொன்னார்கள், அது யாரு கைக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக தான்.

🌹(பெண்ணின்) தலை மயிருக்கு உயிர்சக்தி அதிகம், அதனால் தான் மயிர் இழையில் உயிர் வந்தது (சக்தி கிடைத்தது) என்பார்கள்.

👉இதை இப்பொழுது மயிர் இழையில் உயிர் தப்பியது என்பார்கள்.

🌻பொதுவாக ஒரு அரசன் போர் தொடுத்து போய் வெற்றி கொள்ளும்போது அந்த நாட்டு ராணியை அபகரிப்பான் அல்லது கொன்று விடுவான் ஏனெனில் அவள் விலை உயர்ந்த வாசனை திரவியங்கள் அணிந்து பிரபஞ்ச ஆண்டனாவை சரியாக வைத்திருப்பாள் அதாவது கூந்தல் .

🌻போரில் தோற்ற ராணி தனது சிகைகூந்தலை அறுத்து தந்துவிடவேண்டும் இல்லை என்றால் அறுத்து எடுத்து கொள்ளபடும்.

👌🏻மயிர்முடி என்பது விசேசமான ஒரு வஸ்து கவரிமான் முடி  , மயில் முடி, யானை முடி இவற்றையும் ஆய்வில் எடுத்து பாருங்கள் .

👉நாம் திருப்பதி சென்று முடிகாணிக்கை கொடுக்கிறோமே, அதை ஒரு குரூப் டெண்டர் எடுக்கிறது. அதை எடுத்து என்ன செய்கிறார்கள் என விசாரியுங்கள்.

🤔கடைசியாக டெண்டர் மூன்று கோடி என கேள்வி பட்டேன்.

👉அப்புறம் மயிர் என்பது கெட்டவார்த்தை அல்ல அது தமிழ் சொல் தான். உயிருக்கு மயிர் தொடர்பு உள்ளதால் அது கொடுக்கபட்டது.

🙏முடியை பற்றி நிறைய உள்ளது, சகோதர சகோதரிகளுக்கு நான் சொல்வது ஒன்று தான் முடியை சாதாரண மாக நினைத்து கீழே போட வேண்டாம்.

👉மேற்கண்டவை சித்தர் நூல்கள், புராணங்கள், புறநானூறு போன்றவைகளில் இருந்து சூட்சமமாக விசயம். 

Monday 9 July 2018

திருமண சடங்குகள்

திருமண சடங்குகள்

 நண்பர்களுக்கு வணக்கம்,
இந்த கட்டுரை இன்று வெறும் செயல்களாக மாறிப்போன சக்தி வாய்ந்த திருமண சடங்குகளை பற்றியது. காரியத்தை மறந்து வெறும் காரணங்களை மட்டும் வைத்து கொண்டது இன்றைய தலைமுறை.
இந்த பூமியில் ஜனித்த அனைத்து ஜீவராசிகளின் தலையாய கடமை இனபெருக்கம் செய்வது மட்டுமே.
இதை இன்றைய சுழலில் கூறினால் எத்தனையோ மாறுபட்ட கருத்துகளும் விவாதங்களும் உள்ளாகும். ஆனால் உண்மை இதுதான். இந்த இனபெருக்க விசயத்தை மிகவும் முறைபடுத்தி நல்லதொரு வாரிசுகளை இந்த பூமியில் அவதரிக்க செய்ய, பல விஷயங்களை உள்ளடக்கி, ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் மட்டுமே ஒரு பந்தம் உருவாக்கி ஒரு உறவை பலபடுத்தி அதன் மூலமாக நல்ல வாரிசுகளை உருவாக்க ஏற்பட்டதுதான் இந்த திருமண உறவு
, இது இந்த பூமியில் உள்ள ஜீவராசிகளில் மனித இனத்தில் மட்டுமே இப்படி ஒரு ஏற்பாடு. அதனால் தான் என்னமோ பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்திருக்கிறது.
ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருமண உறவுக்கு தேர்வு செய்கிறபோது, மனம்,உடல் ரீதியான பொருத்தங்களை பார்த்து (ஜாதகம்) , அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்து வருகிற சூரிய மாதத்தில்,நட்சத்திரத்தில்,திதியில், திருமணம் செய்வார்கள். ஆணுக்கும்,பெண்ணுக்கும் குரு அச்சமயத்தில் நல்ல ராசிகளை கடக்குகிற காலமும், நல்ல தட்ப வெப்ப சூழ்நிலையும், பெண்ணின் கரு முட்டையுணுடைய பலத்தை அறிய அப்பெண்னின் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டும் திருமண நாளை தீர்மாணிப்பார்கள்
.திருமணத்திற்கு முன் ஆணையும்,பெண்ணையும் மன ரீதியாக உடல் ரீதியாக தயார் செய்வதுதான் சடங்குகள் என்ற பெயரில் சொல்லபடுகின்றன.
இந்த சடங்குகள் ஆண்,பெண் இரு பாலரின் சமுதாயத்தை பொருத்து மாறுபடும்,அவர்களுடைய வாழ்க்கை முறை, வாழுகிற தட்ப,வெப்ப நிலை,உணவு,இவைகளை வைத்துதான் திருமண சடங்குகள் ஏற்படுத்த பட்டன.
உதாரணத்திற்கு
புலால் உணவை திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன் இருந்து உண்ணாது இருத்தல்.(உடலில் தாமசகுணம் ஏற்பட) வெளியூர் பயணம் மறுத்தல்(தட்ப,வெப்ப மாறுதல், விபத்து போன்றவை நேராமல் இருக்க) ஆடல்,பாடல்,(மனதை குதூகலமாக வைத்து இருத்தல்). பலவகை பொருட்கள் கொண்டு நீராடல் (உடலின் வெப்பத்தை தணித்து உடம்பிலும் ,மனத்திலும் ஒரு நிதானத்தை கொண்டு வர) மேலும் சமுதாயம் சார்ந்த சீர்கள் தாய்மாமன்,சம்மந்தி வீடு சீர், என்று ஒரு பாதுகாப்பு உணர்வை அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அளித்தல்.சொந்தங்களையும் பந்தங்களையும் இணைத்தல்,இது போக பல்வேறு மன வருத்தங்களில் இருக்கிற சொந்த பந்தங்களை சரி செய்து அவர்களை மன நிறைவோடு பங்குபெற செய்து வாழுகிற கூட்டத்தை பல படுத்தல்.
திருமணம் செய்கிற ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒரு உற்சாகமான மனநிலையில், பாதுகாப்பான உணர்வில் இருவரின் குண நலன்களும் உடலும்(நட்சத்திரம்) பொருந்துகிற ஹோரையில் இணைய வைப்பார்கள்,அப்படி இணைகிற பொழுது உருவாகிற வாரிசு திட மனதுடன்,நல்ல குண நலன்களுடனும்,திடமான உடல் வாகுடனும் பிறக்கும் என்ற அறிவியல் சார்ந்த விஷயங்களை உள்வாங்கியதுதான் இந்த திருமண சடங்குகள்.
இப்பொழுது பலன்களை மறந்து சடங்குகள் மட்டுமே இருக்கின்றன என்பதை நாம் காண்கிறோம்.திருமணத்திற்கு செல்லும் போது சடங்குகளை உற்று கவனிங்கள் உங்களுக்கே தெளிவுற புரியும் இனிமேல். இன்னும் வரும்.......... அஸ்ட்ரோ பாபு

Wednesday 4 July 2018

சிரிப்பு

சிரிப்பு

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில்  ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)
சிரித்தால்,உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுதால் நீங்கள் ஒருவரே அழுது கொண்டிருப்பீர்கள் - சிரிப்பின் தத்துவமாகும்.
 சிரிப்புக்கும் மனதிற்கும் நேரடித்தொடர்புள்ளது இதன் காரணமாக
  • சிரிப்பு அலைகள் நம்மிடம் பிறரை ஈர்க்கும்
  • கவலை அலைகள் பிறரை நம்மிடமிருந்து விரட்டும். 
  • சந்தோஷ அலைகள் நம்மை சுற்றி நேர் மறையான (Positive) எண்ணங்களை பரப்பும். 
  • சோக அலைகள் நம்மைச்சுற்றி எதிர் மறையான (Negative) எண்ணங்களை பரப்பும். 
ஆகவே உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நீங்கள் நல்ல மனதோடு இருக்கிறீர்கள் என்று பொருள்

அதே நேரத்தில் இறுக்கமான இதயத்தின் திறவுகோலாகவும் சிரிப்பு உள்ளது.

 சிரிக்கும்போது விஞ்ஞான ‌அறிவியல் 


"என்டோர்பின்ஸ்' என்னும் திரவப்பொருள் நம் மூளையில் உருவாகி ஒருவகையான இயற்கைப் போதையை ஊட்டுகிறது.
இதனால் நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
சிரிப்பைபற்றி மேலும்,

  • சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.
  • வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும்  மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும்  பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.
  • ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடைய வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்து கொண்டு போவதை அவதானிக்கமுடிகிறது.
  • சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர் ( தமிழ் திரைப்படம்- "வசூல் ராஜா MBBS"  இல் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது)
  • சிரிப்பு என்பது சிநேகத்திற்கான முதல் தூதுவாகவும்.
  • மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பகிரங்க அடையாளமாகவும்.
  • இறுக்கமான சூழ்நிலையை இணக்கமாக்க உதவுவதுமாக சிரிப்பு உள்ளது சிரிப்பு.
  • அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்

சிரிப்பின் வகைகள்

  1. அசட்டு சிரிப்பு
  2. ஆணவ  சிரிப்பு
  3. ஏளனச்  சிரிப்பு
  4. சாககச்  சிரிப்பு
  5. நையாண்டி  சிரிப்பு
  6. புன்  சிரிப்பு (மனத்தின் மகிழ்ச்சி)
  7. மழலை  சிரிப்பு
  8. நகைச்சுவை  சிரிப்பு
  9. அச்சிதல்  சிரிப்பு
  10. தெய்வீகச் சிரிப்பு 
  11. புருவச் சிரிப்பு
  12. காதல் சிரிப்பு
  13. வில்லங்க சிரிப்பு
  14. ஏழையின் சிரிப்பு

சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்

  • உதட்டின் மூலமாக சிரித்தல்
  • பற்கள் தெரியும்படியாக சிரித்தல்
  • பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமாக  சிரித்தல்

சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்

அன்பு
மகிழ்ச்சி
அகம்பாவம்
செருக்கு
இறுமாப்பு
தற்பெருமை
அவமதிப்பு
புறக்கனிப்பு
வெறுப்பு

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

  • வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
  • கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
  • துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
  • மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
  • விளையாமல் சிரிப்பவன் வீணன்.
  • இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
  • மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
  • மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
  • கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
  • ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
  • தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
  • நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
  • ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
  • கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
  • கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
  • இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
  • நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
  • தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
  • இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
  • குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
  • நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
  • அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
  • தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
  • சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
  • நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
  • காதலால் சிரிப்பவள் மனைவி.
  • அன்பால் சிரிப்பவள் அன்னை.
சிரிப்பு என்பது மனம் சம்பந்தபட்டதாகும்,
மனம் என்பது ஒரு விசுவாசமான சிறந்த வேலைக்காரன் என்றும் மோசமான எஜமானன் என்றும் சொல்வார்கள்.
எனவே  சிரிப்பின் போது மிகக் கவனமாக இருக்கவேண்டும் விசயம் தெரிந்தவர்கள் சிரிப்பை வைத்தே எடைபோட்டுவிடுவார்கள்.

சிரிப்பைப்பற்றி தமிழ் அறிஞ்ஞர்களின் கருத்து

  • திருவள்ளுவர்- துன்பம் வரும் வேளையிலே சிரிங்க. 
  • பொதுவுடைமைக் கவிஞர்-சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவா மனித ஜாதி
  • கவியரசு கண்ணதாசன்-சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

சிரிப்பு பொன்மொழிகள்,பழமொழிகள் 

  • சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை  இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்!   -சேப்டஸ்பரி
  • ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது  ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்.  இதற்கீடான பொருள் உலகத்தின்  எந்தச் சந்தையிலும் இல்லை. -லேம்ப்
  • சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி  கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள். -லீஹண்ட்
  • வாய் விட்டுச்  சிரிப்பது மட்டும்  நகைச்சுவையல்ல.  உள்ளம் கிழ்விக்கும் புன்முறுவல்  ஒரு கோடி தடவை  சிரிப்பதைவிட  உயர்ந்ததாகும். - ஸ்டர்னே
  • மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது? அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான் -கார்லைல்
  • மனிதன் சிரிக்கக்கூடிய நிலையில் இருக்கும் வரை அவன் ஏழையாக மாட்டான்.
  • Always laugh when you can.Its cheap medicine - Lord Byron
  • வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் 
  • " நகைச்சுவை உணர்வு எனக்கு இல்லாதிருந்தால், நான் நீண்ட நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டிருப்பேன்" -மகாத்மா காந்தி

உலக சிரிப்பு தினம்

ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் சிரிப்புக்கென்றே  ஒரு தினம் இருப்பதுதான்.'உலக சிரிப்பு தினம்' ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. சிரிப்பின் வாயிலாக உலகில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த தினத்தின் நோக்கம்.
அதை விட உலகளவில் 65 நாடுகளல் சுமார் 6000 சிரிப்பு மன்றங்கள் இயங்கி வருகின்றன.
ஏழையின் சிரிப்பு

சிரிப்பு
சிரிப்பு

சிரித்து வாழவேண்டும் (சிரிப்பு) பாடல்

திரைப்படம்: ஆண்டவன் கட்டளை 
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் 
====================================================
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
 சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

சிரிப்பு

*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?

*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?

 பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!*
அறிவோம் நம் *இந்து மதத்தை!*
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே *ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.🥛
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.*🍌
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.🙏
_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தத்தை பொதித்து வைத்துள்ளது நம் இந்து தர்மம்பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!*
அறிவோம் நம் *இந்து மதத்தை!*
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே *ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.🥛
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.*🍌
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.🙏
_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தத்தை பொதித்து வைத்துள்ளது நம் இந்து தர்மம்

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...