Tuesday 19 December 2023

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?*

 

*பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்

என்று தெரியுமா?*

*தலை* - சிவபெருமான்


*நெற்றி* - சிவசக்தி

*வலது கொம்பு* - கங்கை

*இடது கொம்பு* - யமுனை

*கொம்புகளின் நுனி* - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.

*கொம்பின் அடியில்* - பிரம்மன், திருமால்

*மூக்கின் நுனி* - முருகன்

*மூக்கின் உள்ளே* - வித்யாதரர்கள்

*இரு காதுகளின் நடுவில்* - அஸ்வினி தேவர்

*இரு கண்கள்* - சூரியன், சந்திரன்

*வாய்* - சர்ப்பாசுரர்கள்

*பற்கள்* - வாயுதேவர்

*நாக்கு* - வருணதேவர்

*நெஞ்சு* - கலைமகள்

*கழுத்து* - இந்திரன்

*மணித்தலம்* - எமன்

*உதடு* - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்

*கொண்டை* - பன்னிரு ஆதித்யர்கள்

*மார்பு* - சாத்திய தேவர்கள்

*வயிறு* - பூமிதேவி

*கால்கள்* - வாயு தேவன்

*முழந்தாள்* - மருத்து தேவர்

*குளம்பு* - தேவர்கள்

*குளம்பின் நுனி* - நாகர்கள்

*குளம்பின் நடுவில்* - கந்தர்வர்கள்

*குளம்பின் மேல்பகுதி* - அரம்பெயர்கள்

*முதுகு* - ருத்திரர்

*யோனி* - சப்த மாதர் (ஏழு கன்னியர்)

*குதம்* - லட்சுமி

*முன் கால்* - பிரம்மா

*பின் கால்* - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்

*பால் மடி* - ஏழு கடல்கள்

*சந்திகள்* - அஷ்ட வசுக்கள்

*அரைப் பரப்பில்* - பித்ரு தேவதை

*வால் முடி* - ஆத்திகன்

*உடல்முடி* - மகா முனிவர்கள்

*எல்லா அவயங்கள்* - கற்புடைய மங்கையர்

*சிறுநீர்* - ஆகாய கங்கை

*சாணம்* - யமுனை

*சடதாக்கினி* - காருக பத்தியம்

*வாயில்* - சர்ப்பரசர்கள்

*இதயம்* - ஆகவணியம்

*முகம்* - தட்சரைக் கினியம்

*எலும்பு, சுக்கிலம்* - யாகத் தொழில்

*அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.* *ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.*

*கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளதுஎன்று சொன்னது.*

*லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.*

 

Tuesday 8 August 2023

புலம்பாமல் வாழ்த்துவோமே

 பூமியில் விழுந்த விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !
மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !
ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !
சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !
இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?
எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .
அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !
சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !
எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் சக மனிதரிடம்
ஏமாந்து கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி !
வாழவந்தோம் வாழ்வோம் வாழவைப்போம் வாழ்த்துவோமே !!!

Monday 7 August 2023

மாங்கல்ய தோஷம் ! மாங்கல்ய தோஷ பரிகாரம் :




 வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும்.

🌠 திருமணத்திற்கு பிறகு மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சு+ட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும்.
🌠 பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீPமகாலட்சுமி பு+ஜை சக்திவாய்ந்த பரிகாரம்.
🌠 ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு தோஷ நிவர்த்திக்குச் சிறப்பு.
🌠 எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும்.
மாங்கல்ய தோஷத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள் :
தஞ்சாவு+ர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷ தாக்கம் குறையும்.
மேலும்
🌠 பிரளயநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை
🌠 கல்யாணராமர் திருக்கோயில், புதுக்கோட்டை
🌠 வல்லப விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவூர்
🌠 அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல்
🌠 விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர்
🌠 நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை
🌠 தேவி கருமாரியம்மன் திருக்கோயில், நகர், மதுரை
திருமணமானவர்களுக்கு மாங்கல்யம் பலம் பெற துதிக்க வேண்டிய ஸ்லோகம் :
சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்
குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்
மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே
🌹🌹🌹


நந்தியின் வரலாறு

நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்ப

து தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.
சிவபெருமானின் வாகனமும் கொடியும் ரிஷபமே (காளை). தர்மதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறினாள். அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் – ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால், நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார்.
சிவாலயங்களில் உள்ள நந்தி மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தி யுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவபெருமானின் ஆணைக்கேற்பவே அவ்வாறு உள்ளது.
சிவாலயங்களில் கர்ப்பக் கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார்.
Nandhi – நந்தி பற்றிய சில தகவல்கள்
********************************************
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், “என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்” என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
மதுரை ஆவணி மூல வீதியில் “மாக்காளை” எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை “நந்திமுக தரிசனம்” என்கிறார்கள்.
மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும்.
கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு நான்கு மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக’ என்று பிரார்த்திக்க வேண்டும்.
நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

தர்மம் இறைவனைத் தாங்குகிறது. அது விடும் மூச்சுக் காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து கும்பிடுவதும் கூடாது என்று சொல்லப்படுகிறது.


 

வராகம். வராகத்தின் ஆச்சரியமூட்டும் தகவல்


 இந்து மதத்தின் பிரிக்க முடியாது அடையாளம் வராகம். வராகத்தின் ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த பதிவில் கூறுகிறேன்.

அவதாரம்
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராஹம். இதனை 'பன்றி' என்று பொத்தாம் பொதுவாக கூறிவிடமுடியாது, இது ஒரு வகை காட்டுப்பன்றி. மகாவிஷ்ணு முதலில் தண்ணீரில் மட்டுமே வாழும் மச்ச(மீன்) அவதாரம் செய்தார், பிறகு தண்ணீர் மற்றும் நிலத்தில் சமமாக வாழும் கூர்மம்(ஆமை) என அவதாரம் செய்தார். அடுத்து நிலத்தில் அதிகமாகவும் தண்ணீரை விட்டுக்கொடுக்காத உயிரினமாகவும், அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியை குறிக்கும் வராகமாக அவதாரம் செய்தார்.
அறிவியல்
வராகம் என்கிற‌ wild boar, அறிவியல் படி 16 subspecies கொண்டது. இதில் இந்திய துணை கண்டத்து Indian boar, மிகவும் அழகானதும், ஆக்ரோஷமானதும், வலிமையானதும் ஆகும்‌. நாளடைவில் boar வீட்டு பிராணிகளாக வளர்க்கப்பட்ட போது, அதன் habitat மாற்றம் கண்டு இன்றுள்ள பன்றியாக மாறிவிட்டது.
ஒப்பீடு
ஒரு காலத்தில் பார்க்கும் இடமெல்லாம் இருந்த இந்த காட்டு மிருகம், தற்போது அவ்வளவு எளிதில் காணமுடியவில்லை என்பதனால் வராகத்தை பன்றியுடன் ஒப்பிட்டு விடுகிறோம். நம்மை கண்டால், பன்றி ஓடும்; ஆனால் உண்மையில் காட்டுப்பன்றியைக் கண்டால் நாம் தான் ஓடவேண்டும், அவ்வளவு வலிமையானது. மனிதன் வராகத்தின் திறனைக் கண்டு அஞ்சியதால் தான், அதனைக் கடவுளாக பாவித்தான் என்பதே நிதர்சனம்.
பெயர்க் காரணம்
'வராஹம்' என்ற சமஸ்கிருத பெயர் நேரடியாக காட்டுப்பன்றியை தான் குறிக்கிறது. எனினும் இதற்கு 'சுகரன்' என்று மற்றொரு பெயர் உள்ளது. அது இந்த மிருகம் மூச்செரிக்கும் ஒரு வினோதமான பயமுறுத்தும் ஒலியை குறிக்கும் பெயர். மேலும் வராஹம் பிரம்மாவின் மூச்சுக் காற்றிலிருந்து பிறந்ததாக புராணங்கள் கூறுவதால் இப்பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
புராணம்
விஷ்ணுவின் வராக அவதாரம், கடலில் மூழ்கிய பூமாதேவியைக் காப்பாற்றும் விதமாகவே பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
பூமி நீருக்குள் அழுந்திய காரணம், பூமி சுமைப்பட்டிருந்ததே. இதனால், பாதாள லோகத்தில் இரசாதளம் எனும் பகுதி வரை பூமி அழுந்தியதாக புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஓரளவு அறிவியல் சான்றுகளும் உண்டு. இதில் இரசாதளம் அசுரர்கள் வாழும் இடம் ஆதலால், அசுரன் ஹிரண்யாக்ஷன் பூமியை தண்ணீரில் மறைத்தான் என்ற புராண கதை தோன்றியது.
வராகம் இயல்பாகவே தண்ணீரில் விளையாடும் குணமும், பூமியை கிளறும் தண்மையும் கொண்டிருந்ததால், பாதாளத்தில் மறைந்திருந்த பூமியை தண்ணீரில் விளையாடி கிளர்ந்து மேல் கொண்டு வந்ததான புராணக் கதைகள் வந்தன‌.
முதலில் சிருஷ்டித் தொழிலை மையப்படுத்தி, படைக்கும் கடவுளான பிரம்மாவே வராக ரூபம் எடுத்து வந்து தாமரை இலையின் கீழே இருந்த பூமியை தண்ணீரில் மிதக்க விட்டு உயிர்கள் உண்டாக்கினார் என்று புராணங்கள் கூற, பிறகு இது காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக மாறியது. தண்ணீரில் மிதந்த பூமியை, மறுமுறை அமிழ்ந்த முடியாத படி அஷ்ட நாகங்கள், யானைகள், மேருகள் கொண்டு பூமிக்கு தளம் கொடுத்தார் என்று புராணங்கள் விவரிக்கின்றன.
வராகர் பூமாதேவியிடம் பேசும் விதமாக அமைந்த 'வராக புராணம்' இந்து மதத்தின் சிறப்புமிக்க 18 புராணங்களுள் ஒன்று.
வராகி
மேலும், தானே அந்த பூமியை என்றும் காக்கும் பொருட்டு, பூமியை பெண்ணாக உருவகப்படுத்தி மணந்துக்கொண்டதாக புராணங்கள் கூறின. வராகத்திற்கு இணையான பெண் சக்தி வராகி என்றும்; இவள் பூமி தேவி என்று வைணவமும், சக்தியின் பிரத்தியேக சேனை கடவுளென சாக்த மரபும் கூறலாயிற்று.
கொம்பு
வராகத்தின் கொம்பே அதன் முழு பலம். வாயிலிருந்து இருபுறமும் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் இதன் மூலமாகவே இது பூமியைக் கிளறும் தண்மையைப் பெற்றது. மனித உடல் கொண்ட வராகர், இந்த கொம்பின் நடுவில் பூமியை வைத்து நிற்கும் உருவத்தை நாம் அனைவரும் கண்டிருப்போம். சில புராணங்கள், விஷ்ணு வராக ரூபம் எடுத்தபோது அவர் ஒற்றைக் கொம்பைக் கொண்டிருந்தார் என்று கூறுகின்றன. இதனால் வராகம் என்பது 'காண்டாமிருகம்' ஆக இருக்கலாம் என்பது சிலரது கருத்து. எனினும் பெரும்பாலாக ஏற்கப்பட்டது காட்டுப்பன்றி தான்.
மயிர்
வராகத்தின் மற்றொரு தனித்தன்மை அதன் பிடரி மயிர். சிங்கத்திற்கு பிறகு பயமுறுத்தும் பிடரி மயிர் கொண்டது வராகம். வராகர் பூமிதேவியிடம் பேசுவதாக கூறப்பட்டிருக்கும் 'வராக புராணம்'; விஷ்ணு 100 யோஜனை அகலமும், 1000 யோஜனை உயரமும் கொண்ட பிரம்மாண்ட வராகமாக தோன்றியே பூமா தேவியை மீட்டார் என்கிறது (1 யோஜனை - 15 கிமி). அப்போது, அவரது பிடரி மயிரைக் கண்டு கடல் அரசனான வருணனே பயந்தான் என்றும், அதனால் அவன் பொருட்டு அதை சுறுக்கிக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
உணவு முறை
பன்றி கிடைத்த அத்தனையும் உண்ணும், மலம் உட்பட. ஆனால் வராகமோ கிழங்கு, கீரை போன்றவற்றை மட்டுமே உண்ணும். இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் வராகரான பெருமாளுக்கு 'முஸ்தா சூரணம்' எனும் இனிப்பால் செய்த கோரைக்கிழங்கு மசியலை நைவேத்தியமாகப் படைக்கின்றனர், பிரசாதமாகவும் தருகின்றனர். நாத்திகர்கள் விஷ்ணுவை பன்றியுடன் ஒப்பிட்டு, மலம் திங்கும் பன்றி என்று பிதற்றுவதெல்லாம் சுத்த அரைவேக்காட்டுத் தனம்‌.
யக்ஞ வராகர்
அசுரர்கள் ஒரு சமயம் தேவர்களின் செல்வத்தை கவர்ந்து பாதாள லோகத்தில் வைத்திருந்தபோது, யாவரும் வேள்வி நடத்தினர். அப்போது வேள்வியின் மொத்த உருவமாக விஷ்ணு வராகமாக தோன்றினார். அசுரர்களின் பாதாள லோகத்தில் இருந்த செல்வங்களை கிளறி எடுத்து வந்து, ஏழு மலைத் தாண்டி பதுக்கி வைத்தார். அப்போது இந்திரன் ஏழு மலைகளை உடைத்து, வராகத்தையும் அழித்தான். அப்போது விஷ்ணு தானே தோன்றி அந்த செல்வங்களை தேவர்களுக்கு பரிசளித்தார். வேள்வியின் ஆகுதியாகவும்(வராகம்); வேள்வியின் பயனாகவும்(விஷ்ணு) அவரே தோன்றியதால் விஷ்ணுவை யக்ஞ வராகர் என்று போற்றினர். ஸ்ரீ முஷ்னம் பூவராகரின் உற்சவர் 'யக்ஞ வராகர்' என்றே அழைக்கப்படுகிறார். அன்றிலிருந்து யக்ஞத்தில் யக்ஞ வராகராக விஷ்ணு எழுந்தருளும் வழக்கம், வைணவத்தில் தோன்றியது.
திருமலை
இந்த கதையின் மற்றொரு அங்கமாக, வராகர் ஏழுமலைகள் தாண்டி செல்வம் பதுக்கிய இடமே இன்றைய திருப்பதி. திருப்பதியின் தல புராணம், திருப்பதி முதலில் வராகரின் இடமாக இருந்ததாகவும், அங்கே வேங்கடவன் தங்க இடம் கேட்டதையும் விளக்குகிறது. இன்றும் அங்குள்ள வராகருக்கே முதல் பூஜை. திருப்பதி மலையில் வராகங்கள் உலவுவதை இப்போதும் காணலாம்.
கல்பம்
இந்து மத நம்பிக்கையில் காலம் ஒரு மிக பெரிய சுழற்சி. அது கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு என்று பல தரப்பட்ட படிநிலைகளை சுழலாகக் கொண்டது. அதில் கல்பம் என்கிற பல கோடி ஆண்டுகள் கொண்ட பெரும் பகுதி, தற்போதும் 'சங்கல்பம்' என்னும் நாம் இருக்கும் கால நிர்ணயத்தை கூறும் மந்திரத்தில் சொல்லபடுகிறது. அதில் நாம் தற்போது 'ஸ்வேத வராக‌ கல்பம்' எனப்படும் கல்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த கல்பத்தின் ஆரம்பத்தில் தான் மகாவிஷ்ணு 'வெள்ளை வராகமாக' அவதாரம் செய்து பூமாதேவியை பாதாளத்திலிருந்து மீட்டார் என்று சொல்லப்படுகிறது.
சிவன்
இவ்வளவு பெரிய சாகசங்களை செய்த வராகம், சைவ வைணவ சர்ச்சைகளில் சிக்காமல் இல்லை. சைவ சிந்தனையில் வராக அவதாரம் எடுத்த பிறகு விஷ்ணு அதன் போக்கில் சென்றதாகவும், பல அசுர கன்னிகளுடன் புணர்ந்து அசுரர்களை உருவாக்கியதாகவும், இதனால் விஷ்ணுவின் வேண்டுதலுக்கிணங்கி சிவ பெருமான் சரப ரூபம் கொண்டு வராகரை அழித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அருணாச்சல மஹாத்மியம் கூறுகையில், ஏழு பாதாள லோகங்களையும் உலகங்களையும் கிளறிய வராகம் எனும் விஷ்ணுவால், எத்தனை லோகங்களை மண்ணால் கிளறியும் லிங்கோத்பவராக தோன்றிய சிவபெருமானின் அந்தத்தை காண முடியவில்லை என்று சிவபெருமானின் பெருமையை கூறுகிறது.
நாணயம்
இந்திய கண்டத்தில் வராகம் மிகப்பெரிய வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டது. மன்னர்கள், அதன் வலிமையில் மயங்கி அதனை தங்கள் சின்னங்களாக அறிவித்தனர். குப்தர்கள், பின் சாளுக்கியர்கள், சோழர்கள் என அந்த பாரம்பரியம் நீண்டது. தங்களது நாணயத்தில் வராகரை பொறித்து அதனை நடைமுறையில் பிரபலப்படுத்தியவர்கள் விஜய் நகர மன்னர்கள். அவர்களுக்கு பிறகே பொற்காசுகள் 'வராகன்' என்று அழைக்கப்பட்டது. வராகன் என்பது 3 3/4 கிராம் அதாவது அரை பவுன் கொண்ட தங்க காசு.
முகாலயர்
அதுவரை மிக பிரபலமாக இருந்த வராகம், முகாலய படையெடுப்பிற்கு பிறகு புகழ் மங்கியது. காரணம் உலகறிந்ததே. அரேபிய நாடுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய நோய் தொற்று பன்றியின் மூலமாக நிகழ்ந்ததையடுத்து, இஸ்லாமியர்கள் பன்றியை மிக அசுத்தமாக கருதினர். அதனை தங்கள் மதத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணித்தனர். வராகம் பன்றியாக பார்க்கப்பட்டதால், முகலாயர்கள் காலத்திற்கு பிறகு இந்தியாவில் வராகத்தின் பெருமை முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்டது.
இதுவரையிலும் சிற்பமாக பல கோயில்களில் நீங்கள் வராகத்தைப் பார்த்திருந்தாலும், அதனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறந்தது. அது பன்றியை விடவும் மிக அழகிய, ஒழுக்கமான மிருகம் என்பதனை நீங்கள் அப்போது அறிந்துக்கொள்வீர்கள்.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...