Friday 29 December 2017

இந்து-ஆலயங்களில்-கோபுரத்தில்-புதைந்துள்ள-அறிவியல்-உண்மை!

இந்து-ஆலயங்களில்-கோபுரத்தில்-புதைந்துள்ள-அறிவியல்-உண்மை!


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

  • இந்து ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை!

     
    முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.
    அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
    கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
    நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
    இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.
    காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.
    ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
    ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
    உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
    சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
    இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
    “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்?
    Markkandu Devarajah(L,L,B)Mayuraagoldsmith.Switzerland,
    கோயிலுக்குச் செல்கிறபோது  இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.
    கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
    உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
    வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
    தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
    கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
    என்பது திருமூலர் அருட்பாடல்.
    அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.
    உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.
    கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
    தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.
    உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.
    கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, −டச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.
    ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.
    மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்த்

    தேங்காய் உடைப்பதன் தத்துவம்

    கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
    தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
    ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுபரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
    இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.

    சிவலிங்கத்தின் தத்துவம்
    ,
     
    லிங்கவடிவ வழிபாடு, சிவலிங்கத்தின் தத்துவம்
    ஆலயங்களில் சிவ வழிபாட்டிற்குரிய சின்னமாக
     அமைந்திருப்பது சிவலிங்கம்.  பரந்த கருத்துக்கள் பல இச்சின்னத்தில் புதைந்து கிடக்கின்றன.  ஆவுடையார் என்னும்
     கீழ்ப்பகுதி, சக்தியின் சின்னம்.  அதில் நாட்டப்
    பெற்றிருக்கும் லிங்கம் சிவத்தின் சின்னம்.  சிவசக்தியின்
     ஐக்கியத்தால் சராசரங்கள் அனைத்தும் தோன்றியுள்ளன
    என்பதை அது குறிக்கிறது.  உருவமற்ற பொருள்
    உருவம் எடுக்கவும் வல்லது என்பதை அது உணர்த்துகிறது.
    உலகில் உள்ள உயிர்கள் காமத்துக்கு வசப்பட்டு, குடும்ப
    வாழ்க்கையில் இறங்குகின்றன.  சிவமும் - சக்தியும்
    அவர்களுக்குப் புகட்டும் பாடம் அதற்கு மாறானது.  
    ஆசையை வெல்லுபவரே வாழ்க்கையில் வெற்றி
    காண்கிறார்கள்.  அண்ணலின் அருளுக்குப் பாத்திரமாகும்
    பொருட்டு, உமா தேவி நெடுங்காலம் தவம் புரிந்தாள்.  
    சிவபெருமானோ தனது நிறைநிலை கலையாது
    பூரணப் பொருளாகவே நிலைத்திருந்தார்.  இந்த
    நிலைக்குக் "கோரதபசு" என்றும், "உக்கிரதபசு" என்றும்
    பெயர்.  உமாதேவியார் அவரை ஆராதித்துக்
    கொண்டிருந்தபோது, அந்த உக்கிரத் தபசைக்
    கலைக்கக் காமத்துக்கு உரிய தேவனான மன்மதன்
    வந்தான்.  காமபாணத்தைத் தொடுத்துத் தவத்தைக்
    கலைத்து இச்சையை உண்டாக்க முயன்றான்.  
    ஆனால், சிவபெருமான் நெற்றிக்  கண்ணைத் திறந்து
     அவனை எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்.
    இந்த நிகழ்ச்சி,"காமதகனம்" என்று இன்றும்
    தமிழ்நாட்டில் பல கிராமத்துக் கோயில்களிலும்
    கொண்டாடப்படுகிறது.  இப்படி கொண்டாடப்படுவதன்
    தத்துவம் என்ன?  ஆசையை வேர் அறுத்த பின்பே
    சிவமும்-சக்தியும் ஒன்றுபட்டன.  ஆசைகளை ஒழித்த பின்பே ஒருவனுக்கு வாழ்க்கையில் சக்தியினால் அருளும்
    வெற்றியும் கிடைக்கும்.  அதையே இந்தப் பண்டிகை
    விளக்குகிறது.  சக்தியும்-சிவனும் சேர்ந்த நிலையே
    உலகில் அனைத்து உயிர்களின் தோற்றம்.  இதையே
    சிவலிங்கம் விளக்குகிறது. காமத்துக்கு அடிமைப்படாத
    மனைவாழ்வில், மாட்சிமைகள் அனைத்தும்
    நிறைந்துள்ளன என்பதே சிவபெருமானின் வடிவம்
    தரும் உண்மை

    திருநீறு ஏன் அணிய வேண்டும்?
    திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படி
    திருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக காரணங்களுக்கு என்றாலும் கூட அதில் பல ஆச்சரிய தக்க உண்மைகளும் இருக்கிறது.
    திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்வாடைகள் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.
    திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்
    மாணவர்கள் மட்டும் அன்றி திருநீறு அணியும் அனைவரும் இந்த பலனை பெறலாம். இது ஆன்மீக உண்மை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான உண்மையும் ஆகும்.
    கோயிலில் விபுதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபுதி இடக்கூடாது.
    நம்மை விட வயதில் இளையவர்களிடம் விபூதியை அவர்கள் கையிலிருந்து
    நாம் இடக்கூடாது. நம் கையில் வாங்கி வலது கை விரலால் நம் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்.   

Wednesday 27 December 2017

(ராகு- கேது)

 (ராகு- கேது)

ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான பதிவு. மிகவும் அருமையான விளக்கம் .
நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.
ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை? இதை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் கேது
ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!
நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.
ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். , .
ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.
புராணத்தில் ராகு- கேது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.
பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.
யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.
இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.
ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.
ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை
கிரகத்தன்மை ராகு கேது
1. நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்
3. மலர் மந்தாரை செவ்வல்லி
4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்
5. சமித்து அறுகு தர்ப்பை
6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி
7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
சித்திரகுப்தன், விநாயகர்
8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்
9. திசை தென்மேற்கு வடமேற்கு
10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்
11. வாகனம் ஆடு சிங்கம்
12. தானியம் உளுந்து கொள்ளு
13. உலோகம் கருங்கல் துருக்கல்
14. காலம் ராகுகாலம் எமகண்டம்
15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை
16. பிணி பித்தம் பித்தம்
17. சுவை புளிப்பு புளிப்பு
18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய் செவ்வாய்
20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு
21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)
22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்
23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்
24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா
26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது
27. உருவம்
அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,
ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)…

Saturday 16 December 2017

கர்ணன்

கர்ணன்


...
கர்ணன்
தேர்சக்கரத்தில்
சிக்கிய தனது உயிரை
தூக்க முற்ப்பட்டு
தன் உயிரை இழந்த கர்ணன்.
எது அந்த தேர் சக்கரம்....?
அது
ஏன் கர்ணனின்
இறுதி பயணத்தில்
அந்த தேர் சக்கரம்
குறிப்பிடதக்க அங்கம் வகுத்தது....?
கர்ணன்
பெயரிலே அவன் விதி எழுதப்பட்டது
அத்தகைய
ஞான புதையல்
இந்திய மகா காவியங்கள்.
கர்ணன் வாழ்வு அனைத்தும்
கர்ணன் பெயரிலே
தலை எழுத்தாக பொறிக்கப்பட்டது.
ஒருவருக்கு பெயர் அமைவதும்
தலை எழுத்து வழியிலே தான்.
ராமன்
ஏறு முகம்.
ராவணன்
இறங்கு முகம்
தர்மன்
ஏறு முகம்
கர்ணன்
இறங்கு முகம்.
மனித உடலில் அமைந்த
சூட்சம சக்கரங்கள்
அவன் பெயருக்கு ஏற்றவாறு இயங்கும்
அது தன் இலக்கை
பெயரின் உச்சரிப்பிலே
உருண்டு
ஏறுவது
இறங்குவதும் ஆக இருக்கும்
என்பது
அறிவியல் பூர்வமான
ஞானமார்க்கமே ...
...
ஒருவனின் பெயர்
மூலாதாரத்தில் இருந்து
சகஸ்ரம் நோக்கி அமையபெற்றால்
அது ஏறு முகம்
உதாரணம்
சிவன்
விஷ்ணு
பிரம்மா
ராமன்
தர்மன்
ஒருவன் பெயர்
சகஸ்ரத்தில் இருந்து
மூலாதாரம் நோக்கி வந்தால்
இறங்கு முகம்
உதாரணம்
ராவணன்
கர்ணன்
சகுனி
தூரியோதனன்
இதில்
கர்ணணுக்கு மட்டும்
மிக சிறந்த
ஒரு சிறப்பு உண்டு.
பாரத இதிகாச த்தில்
யாருக்குமே கிடைக்காத சிறப்பு
கர்ணனின் சிறப்பே.
...
கீழ் முகமாக வாழ்வு அமைந்தாலும்
அதையே
தர்மனை மிஞ்சும்
மேல் நோக்கு முகத்தில் சென்று
வாழ்வை
சிறப்புடையதாக்கி
வாழ்வில் எடுத்த தவறான முடிவால்
அழியும் நிலையில் உள்ள ஒருவன்
அதே வாழ்வில்
வாழ்வை வென்ற நிலைக்கு
கர்ம பயணத்தால்
தர்மமாக வாழ்ந்தவன் கர்ணன்.
பிறக்கும் போது
ஒருவன் உயிர் இருக்கும் இடம்
உச்சந்தலை
அது நின்ற இடம்
நெற்றிப்பொட்டான ஆஞ்னா சக்கரம்.
சாதாரண மனிதர்கள்
இறக்கும் போது
அவர்கள் உயிர் இருக்கும் இடம்
மூலாதார சக்கரத்தில்.
யோக கலாசாரம் என்பது
மூலாதார சக்கரத்தில்
மாட்டிய உயிரை
மீண்டும் தூக்கி சென்று
ஆஞ்னா வில் அமர வைத்து
உச்சந்தலையில்
உயிரை
சிம்மாசனம் இட்டு அமர வைப்பதே யோகம்.
அவர்களே
சிவ
சித்தர்கள்
மகா ரிஷிகள்
அதற்க்கும் மேல் நோக்கிய
பயணத்தில் இறங்கு பவர்கள்
சிவனாக உருவமாறிய
சிவன்
மாக குரு சித்தர்கள்
இவர்களை
இறை தூதுவர்கள் என்றும்
சம காலத்தில் அழைக்கப்படுகிறார்கள்.
....
கர்ணன்
....
தனது
அத்தனை திவ்யத்தையும்
அன்பாக
வாரி கொடுத்தே
மூலாதார சக்கரத்தில் வீழந்தவன்.
இறுதியில்
மூலாதார சக்கரத்தில்
மாட்டிய இந்த உயிரை
மீட்ட போராடியவன் ..
அந்த நேரத்தில் கர்ணனுக்கு
உதவாமல்
அறிவை தூக்கி கொண்டு
தேரை விட்டு ஓடியவர்
கர்மன்
ஆகையால்
கர்ணணுக்கு
நினைவாற்றல் இல்லாமால் ஆனது.
மூலாதார சிக்கல்
உலகிலே
ஒருவனை யாராலும்
காப்பாற்ற முடியாது ...
காரணம்
அது
கர்ம சிக்கல்.
மூலாதாரத்தில் சிக்கி
கர்ணன் மாண்ட வந்த போது
தர்மம் தாங்கியது
தர்மம் ஒருவன் பக்கத்தில்
இருக்கும் போது
எவனாலும்
எமனாலும்
ஒருவரை வதைக்க முடியாது...
அந்த
தர்மத்தை
இறைக்கே தானம் செய்த கர்ணன்
அதன் பின்னே
கர்ணணை
அர்ஜுனன் அம்பால்
கர்ணன் உயிரை
நெருங்க முடிந்தது...
இறக்கும் முன்
தர்மத்தை
இறைவனுக்கே தானம் செய்ததால்
கர்ணண்
தர்மனையும் மிஞ்சிய
ஏறுமுகமாக பயணத்தில் ஏறி
மூலாதாரத்தில் இருந்து
இறை ஆதாரத்திற்க்கு சென்றவன்
கர்ணன் ஒருவரே
என்பதே
கர்ணணை அனைவரும் ரசிக்க
காரணமான
கர்ண மகா சிறப்பே.
மூலாதாரம் நோக்கிய
லௌகிய வாழ்வு அமைந்தாலும்
எண்ணத்தால்
ஈகையால்
அன்பால்
தர்மத்தால்
உச்ச நிலையை அடைய முடியும்
என்பதற்கு
உலகின்
மகா சான்று
சூர்ய புத்திரன்
மாவீரன்
அன்பு கர்ணணே

... ஏன் பிறந்தோம்...?

...
ஏன் பிறந்தோம்...?


 இந்த பிறவியில்
எதை செய்ய வேண்டும் என
ஆத்மம்
பிறந்த ஆத்மம் எதிர்பார்க்கிறது..?
...
மனதின் ஆசை
சாமான்ய மக்களுக்கும் புரிகிறது...,
இந்த
ஆத்மத்தின்
பிறந்த
ஆத்மத்தின் ஆசைதான் என்ன...?
..
பிறந்தவன்
செல்வம் தேடுவது குற்றமா...?
..
உறவுகளை
தேடி ஓடுகிறானே
அது ஏன்
வலிகளை தருகிறதே.. .?
...
உறவுக்கும்
பிறந்த
மனிதனுக்கும்
இருக்கும்
ரகசியம் தான் என்ன...?
...
கடவுள் இருக்கிறாரா...?
ஏன் இருககிறார்....?
கடவுளை மற்ற உயிரினங்கள்
உணர்ந்து வாழ்வது போல தெரிந்தாலும்
அவைகள் ஏன்
கடவுளை தேடவில்லை...?
...
மனிதனுக்கு
கடவுள் தேவையா....?
ஏன்
எதற்கு
மனிதனுக்கு கடவுள் தேவை...?
...
...
இப்படி
அடக்கடுக்காக உள் இருந்து வரும் கேள்விகள்..,
அதற்கான பதிலையும்
சிவம்
பிறந்த உயிருக்குள்ளேயே
வைத்து இருப்பது
இறை உணரந்த இதயம் எல்லாம் உணர்ந்ததே..!
...
பிறந்தவன்
செல்வம் தேடுகிறான் தவறு அல்ல,
அந்த
செல்வத்தை
ஏன் தேடுகிறான் என்பதை
உணராமால் போவதே தவறு.
பிறந்தவன்
உறவுகளை தேடுகிறான் தவறு அல்ல..,
அந்த உறவுகளை
யார் ,,?
அந்த உறவுகள் எதற்க்கா
என்பதை உணராததாலே
தேடிய உறவுகளால் வரும் வலி.
...
எதறக்காக பிறவி...?
...
முக்தி அடைவததற்க்காகவா..?
...
முக்தியை
ஒருவன் தேடி பிடிக்க முடியாது
அது
தானாக
நிலை புரிந்து
இறை தரும் வரம்..
..
எது அந்த நிலை...?
...
ஆத்தமத்தின் முழு நிறைவு...?
...
ஆத்மத்தின்
முழு நிறைவு எது..?
அது
எங்கே
எப்படி துவங்குகிறது...?
...
ஒரு மனதின்
ஆசை முடியும்போது
ஆத்மத்தின் ஆசை தொடங்குகிறது..
ஒரு
ஆத்மத்தின் ஆசை முடியும் போது
முக்தி உலகத்தின்
இறை கதவுகள் திறக்கிறது.
..
ஆத்மத்தின் ஆசை என்ன..?
...
ஆத்மம் சரீரத்தின் மூலம்
பிறந்த மனம்
அதன் ஆசைகளை உணர்ந்து
அடங்க வேண்டும் என்பதில்
ஆரம்பிக்கும்
ஆத்மத்தின் ஆசை
ஒரு ஸ்தூல குருவை தேடுகிறது.
...
ஸ்தூல குரு
அனைத்ணையும் போதிக்க முடியுமா...?
...
நிச்சயமாக முடியாது...
..
ஒரு அளவுக்குத்தான்
ஸ்தூல குருமார்களின் பாடம்
சீடருக்கு கிடைக்கும்
..
முழுமையான
பாடத்தை
உலகில்
எந்த
ஸ்தூல குருமார்களாலும்
கொடுக்க இயலாது...
அப்படி கொடுத்தாலும்
அது
சீடருக்கு புரியாது.
...
பாடத்தின்
முதல் கட்டத்தை மட்டுமே
ஸ்தூல குருமார்கள் தர முடியும்.
அடுத்த கட்ட பாடத்தை
உயிர் உள் இருக்கும்
சத் இறை குருவே நடத்த முடியும்.
அதற்காக
பிறந்த பிறவியை
நோக்கி நகர்த்துவதே
ஆத்மதின்
ஆரம்ப கால ஆசை..
...
பிறவி நோக்கம்
அது
கற்றலே...
...
பிறந்த பிறவியின் அழியா செல்வம்
கல்வியே...
...
இறந்த பின்
எடுத்து செல்ல கூடிய செல்வமும்
கல்வி செல்வமே.
...
உடலை விட்டு
உயிர் பிரியும் வரை
கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
என்பது
ஆத்மத்தின் அதீத ஆசையே...
...
ஏன்
அந்த கல்வி ஆத்மத்திற்கு தேவை...?
...
அந்த
கல்வியை முழுமையாக கற்க்காததாலே
பிறந்ததே இப்பிறவி..
...
அப்படி ஆனால்
கல்வியே கற்காதவர்களால்
இறை உலகை நெருங்க முடியாதா..?
..
நிச்சயமாக முடியாது.
...
கல்வியே கற்காமால்
இறையோடு இறையாக கலந்தவரும்
உண்டு தானே...?
...
நிச்சயமாக உண்டு..
..
பின்
ஏன்
அவர்கள் பிறந்தார்கள்..?
..
கற்ற கல்வியை
கற்றதோடு விட்டு விட்டு
அதன் படி வாழாததாலே..
அவர்களுக்கு
கல்வி
சென்ற பிறவியிலே கிடைத்து விட்டது
ஆதலால்
அவர்கள்
கற்றபடி
ஒரு வாழ்க்கையே
வாழ பிறந்தவர்கள்..
...
நல்ல
குரு மார்களும் பிறக்கிறார்களே..?
பாவம்
அவர்கள் என்ன தவறு செய்தார்கள்..?
..
அவர்கள்
கற்றதை யாருக்கும் சொல்லி கொடுக்காமால்
மடிந்ததாலே...
...
சிறந்த குருமார்களை
இறைவன்
திருப்ப பிறக்க வைப்பது உண்டு தானே..?ஏன்..?
...
நிச்சயமாக உண்டு...
...
அவர்கள்
கல்வியும் கற்றார்கள்
கல்விமையும்
விற்றார்கள்
தீட்சை தர மறந்தார்கள்...
முழுமைமான தீட்சை தர மறுத்தார்கள்.
இறுதி வரை
மௌன நிலைக்கு செல்லாமால்
இறுதி வரை பேசிக்கொண்டே இருந்ததாலே
இப்பிறவிமில்
மௌவுனமாக மட்டுமே
பாரினில் திரிந்து
அதன் மூலம்
சில நிலைகளை எட்டிய
சீடருக்கு
சரீர ஆத்ம தரிசனம்
தருவதற்க்கா பிறந்தவர்கள்...
...
முக்தி அடைந்த குருமார்கள்
பிறப்பது உண்டு தானே..?
நிச்சயமாக உண்டு..
..
இவர்கள்
மானிடருக்கு அருகே இருந்தாலும்
யாருக்கும்
சுலபமாக
இவர்களை அடையாளம் காட்டதவாறு
இருப்பார்கள்..
..
ஸாதூ குருமார்களின்
ஸ்தூல பாடம் முடிந்த பின்னே
மீண்டும்
சில ஸ்தூல ரகசியத்தை
தூண்டுவதற்ககா
பிறந்த சத் சிவ குரு இவர்கள்...
...
பிறந்த பிறவியில்
ஆத்மம் விரும்புவது
ஒவ்வொரு நாளும் கல்வி
கற்றுகொண்டே இருப்பதும்
அதன் படி வாழ்வதுமே..
...
ஒரு கட்டத்தில்
உள் இருக்கும் குருவை கண்டு
அவரோடு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பாடத்தை படித்து
அதன் படி வாழ்வதே
ஆத்மத்தின் ஆசை...
...
கடவுள் இருக்கிறாரா..?
ஏன்
மனிதனுக்கு கடவுள் தேவை...?
...
உயிரோடு இருந்து கொண்டு
இந்த கேள்வியை கேட்கிறாரே...
அந்த கேட்பவரே கடவுள்...
..
இதற்கு ஒரு பதிலும் கிடைக்க செய்கிறாரே
அதை நடத்துவதும் இறைவன்
...
கடவுள் எங்கும் இருக்கிறார்..
அனைத்துமாக இருக்கிறார்..
...
கடவுள்
பணம் கொடுக்கவா ...?
உழைத்தால் பணம் வருமே
அதற்கு ஏன் கடவுள்..
..
நோயை குணமாக்கவா..?
அதற்கு மருத்துவர்களும் இருககிறாரே..
..
ஆனந்தத்தை தரவா கடவுள் தேவை...?
..
ஆனந்தத்தை
தர மனமும் உண்டே...?
..
இதை எல்லாம்
கடவுளால் கொடுக்க கொடுத்து கொண்டு
இருந்தாலும்
அதையும் தாண்டி
இத்தனையும் தாண்டி
கடவுள்
மனித பிறவிக்கு
தேவைப்படுவது
எமனிடம் இருந்து
பிறப்பு இறப்பு கடந்து
ஆத்மத்தை காப்பதே..
அதுவே
ஆத்தமத்தின் ஆசை..
..
அதற்கு
ஆத்மம் விரும்புவது
கற்றலும்
கற்றபடி நடப்பதும்
கற்றதை போதிப்பதும்
போதிப்பது போல வாழ்ந்து காட்டுவதும்
மௌனத்தை ருசிப்பதும்
சுவாசத்தை ரசிப்பதும்
முழுமை அடைந்து
இறையோடு கலப்பதும்
பிறந்தது ஆத்மம்
இதற்காகவே
நம
ஓம்
நமசிவாய

Monday 11 December 2017

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

தொப்புளில் எண்ணை போடுங்கள்!

தொப்புளில் எண்ணை போடுங்கள்!
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு. ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி, கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
முழங்கால் வலி: தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.
ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

தண்டம்


தண்டம்

முனிவர்களும் சித்தர்களும் எப்போதும் தங்கள் கையில் ஒரு தண்டம் வைத்திருப்பார்கள்.
"தண்டம்" என்பது மரத்தால் ஆன ஒரு ஊன்றுகோல். ஆங்கில எழுத்து "T " அல்லது "Y " வடிவத்தில் இருக்கும்.
...
அந்தத் தண்டத்தின் மீது வலது கை அல்லது இடது கையை வைத்து விட்டால், சுவாசம் திசை மாறும்.
...
வலது நாசி சுவாசத்தை நிறுத்த, வலது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். உடனே, இடது நாசிக்கு சுவாசம் தடம் மாறும். இடது நாசி சுவாசத்தை நிறுத்த, இடது அக்குளின் கீழே தண்டத்தை வைத்து அழுத்த வேண்டும். அப்போது வலது நாசிக்கு சுவாசம் தடம் மாறும்.
...
இது தான் தண்டத்தின் பயன்.
நம் முனிவர்கள் இதற்காக தான் தண்டத்தை சுமந்து கொண்டே திரிந்தார்கள்.
ஆனால், சுவாசத்தை எதற்காக தடம் மாற்ற வென்றும்?
எப்போது தடம் மாற்ற வேண்டும்?
....
அதாவது, நாம் செய்த காரியம் சரியாக நடக்கவில்லை என்றால், அப்போது எந்த நாசியில் சுவாசம் ஓடுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உடனே, தண்டத்தை எடுத்து சுவாசம் ஓடும் அந்த நாசிப் பகுதியின் அடியில் வைக்க வேண்டும். உடனே, சுவாசத்தின் தடம் மாறிவிடும். இந்த நிலையில், மீண்டும் அந்த காரியத்தை முயற்சிக்கும் பொது, அதுவரை நடக்காமல் இருந்த காரியம் நடந்துவிடும். நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிடும்.
...
நம் சித்தர்கள் சொல்லிவைத்த விஷயங்களை எப்போது நாமெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி வைத்து விட்டு, கைகளில் மொபைல் போனையும் லாப்டாப்பையும் நம்ப ஆரம்பித்தோமோ, அப்போதே நம் சித்தர்கள் நம்மை ஒதுக்கி வைத்துவிட்டு காட்டுக்குள் சென்று விட்டார்கள்.
...
துன்பத்தை இன்பமாக மாற்ற இந்த தண்டம் ஒரு அழகான ஆன்மீகக் கருவி. விதியை மாற்றுவது போன்றது இது. இருந்தாலும், இது சாதாரண காரியம் அல்ல. அதற்கான பொறுமையும் நம்பிக்கையும் விடாமுயற்சியும் நம்மிடம் மிகவும் தேவை.
...
ஆனால், இதை அவ்வளவு சுலபமாக அடைந்து விட முடியாது. நமக்கு அப்பாற்பட்டு தர்ம நீதி நியாயங்கள் என்று அண்ட சராசரத்தில் நிறைய சட்டங்கள் இருக்கின்றன. அவற்றின் அனுக்கிரகம் வேண்டும். அதற்கு நம்மிடம் பொதுநலச் சிந்தனை, கருணை, இரக்கம், பக்தி, சேவை, சுயநலமின்மை போன்ற பரோபகாரச் சிந்தனைகளும் தகுதியாக இருக்க வேண்டும்.
... ஓம் நமசிவாய நமஹ...

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...