Saturday 30 May 2020

இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது




இந்த உடல் பஞ்சபூதங்களால் ஆனது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த பஞ்சபூதங்கள் என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம். மண்ணின் கூறாக மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை ஆகியவை ஐந்தும் இருக்கின்றன. நீரின் கூறாக இரத்தம், கொழுப்பு, வியர்வை, உமிழ்நீர், சிறுநீர் ஆகியவை ஐந்தும் இருக்கின்றன. நெருப்பின் கூறாக உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் ஆகிய ஐந்தும் இருக்கின்றன. காற்றின் கூறாக நடத்தல், ஓடல், நிற்றல், இருத்தல்ர கிடத்தில் ஆகிய ஐந்தும் திகழ்கின்றன. ஆகாயத்தின் கூறாக காமம், லோபம், குரோதம், மோகம், மதம் ஆகிய ஐந்தும் விளங்குகின்றன. இவற்றை சித்தர்கள் புறக்கரணம் அல்லது புறக் கருவிகள் என்பர். புறக் கரணங்களைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் இந்த பூதங்களின் சேர்க்கையால் என்னவெல்லாம் உருவாகிறது என்று தெரிந்து கொள்வோம். முதலில் மண்ணின் கூறு. மண் + மண் = எலும்பு மண் + நீர் = மாமிசம் மண் + நெருப்பு = தோல் மண் + வாயு = நரம்பு மண் + ஆகாயம் = முடி. நீரின் கூறு. நீர் + நீர் =சிறு நீர் நீர் + மண் = உமிழ் நீர் நீர் + நெருப்பு = வியர்வை நீர் + வாயு = இரத்தம் நீர் + ஆகாயம் = சுக்கிலம். நெருப்பின் கூறு. நெருப்பு + நெருப்பு = தூக்கம் நெருப்பு + மண் = பசி நெருப்பு + நீர் = தாகம் நெருப்பு + வாயு =ஆலகியம் நெருப்பு + ஆகாயம் = சேர்க்கை. வாயுவின் கூறு. வாயு + வாயு = ஓடல் வாயு + மண் = படுத்தல் வாயு + நீர் = நடத்தல் வாயு + நெருப்பு = உட்காருதல் வாயு + ஆகாயம் = தாண்டல். ஆகாயத்தின் கூறு. ஆகாயம் + ஆகாயம் = மோகம் ஆகாயம் + மண் = ராகம் ஆகாயம் + நீர் = துவேஷம் ஆகாயம் + நெருப்பு = பயம் ஆகாயம் + வாயு = நாணம். இதே போன்று நம்முடைய ஆதாரங்களும் பஞ்சபூதங்களின் தன்மைகளைக் கொண்டுள்ளன என்பது சித்தர்கள் வாக்கு. மூலாதாரம் மண்பூதம், சுவாதிஷ்டானம் நீர் பூதம், மணிபூரகம் நெருப்பு பூதம், அனாஹதம் வாயு பூதம், விசுத்தி ஆகாய பூதம் என்றும் ஆக்ஞா, சகஸ்ராரம் என்ற இரண்டு ஆதாரங்களும் உயர்நிலை ஆதாரங்கள் எனவும், அவைகளுக்கு தனிப்பட்ட பஞ்சபூதத் தன்மை கிடையாது என்று சொல்கிறார்கள். விசுத்தியை தாண்டும் போது ஆகாயபூதத்தோடு கலந்துவிடுவார்கள் யோகிகள். 35 வயதுக்கு மேல்தான் மேல்நிலை ஆதாரங்கள் வலுப் பெறும் என்றும், மிகமிக அரிதாக கோடியில் ஒருவருக்கு இளமையிலேயே அதுவும் இயற்கையிலேயே இவை வலுவாக அமைந்து விடுவதுண்டு. அது இறைவனின் அருள் அல்லது பூர்வ ஜென்ம பலன் என்று கூறலாம். எவர் ஒருவர் மேல்நிலை ஆதரங்களின் எல்லைகளைத் தொடுகிறாரோ அவர் கர்மாவானது அறுபடுகிறது. பாவ, புண்ணிய கர்ம பந்தங்கள் அறுபட்ட பரமாக சுத்தவெளியாக மாறிவிடுவார். இப்படி ஆன்மா சுத்தப் படுத்தப்படும் நிகழ்வு விஷுத்தி என்கிற ஐந்தாவது ஆதாரத்தில்தான் நடை பெறுகிறது. எனவேதான் அது தூய்மையான என்ற பொருள் கொண்ட விஷுதி என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகே ஜீவாத்மா பரமாத்மாவை அடைய முடியும்.


Tuesday 19 May 2020

*அமாவாசையை பற்றிய அபூர்வ தெய்வீக தகவல்கள்*!!

 *அமாவாசையை பற்றிய அபூர்வ தெய்வீக தகவல்கள்*!! 


அமாவாசை வருவதை பொருட்டு பல அன்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க நம் சித்தர்களின் குரலில் அமாவாசையின் அபூர்வ தெய்வீக மகத்துவங்களை பற்றி இன்று விரிவாக பகிர்கிறேன்.)*
அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.
ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
*சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?*
********************************************
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம். அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.
பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி!
ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. முன்னோர்கள் இறந்த தேதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது.
மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது, அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் அடையும் துன்பங்கள் யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் ‘பித்ரு’க்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பித்ருக்கள் மரணம் அடைந்த பிறகு ‘பித்ரு லோகம்’ சென்றடைகின்றனர். அவர்களின் ஆன்மா சாந்தியடைய, அவர்களுக்கு மறக்காமல் தர்ப்பண காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சந்ததியினரை ஆசீர்வாதம் செய்வார்கள். தங்களின் சந்ததியருக்கு தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.
‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்கு செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று விஷ்ணு பகவான் கூறுவதில் இருந்தே இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
பித்ரு லோகம் என்பது சூரியனுக்கு அப்பால், பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும், வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். அமாவாசை தினத்தன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி சந்ததியரை வாழ்த்துவார்கள். அமாவாசையன்று தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக, ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் காத்து நின்று கொண்டிருப்பார்களாம்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு போன்ற திருத்தலங்களும், வடமாநிலங்களில் காசி, திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வது அவசியம். இறந்தவர்களின் நாள், தேதி தெரியாதவர்களும், வருடத்தின் 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி, மகாளய அமாவாசை தினங்களில் திதி கொடுத்தால் ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனை அடையலாம்.
இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். அன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம் செய்ய வேண்டும். மறைந்த தாய், தந்தை படங்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வணங்க வேண்டும். அன்று காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம்.
நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.
அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :
விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி.
அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.
சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.
சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்...
முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்.
*வழிபடுவது எப்படி?*
************************
அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.
*செய்யக்கூடாதவை*
*************************
அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர் களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
*அமாவாசையின் மகிமை*
********************************
பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூத£தையர்களின் ஆசியும் கிடைக்கும்.
*காகத்திற்கு அவசியம் உணவிடுங்கள் 😘
*************************************************
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.
அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம், எமலோகத்தின் வாசலில் இருப்பதாகவும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எம லோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. காகம் சாதத்தை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
*துயர் போக்கும் துளசி*
*****************************
பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிபடுவது விசேஷம். அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின் போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகாவிஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும். அமாவாசை அல்லது அமைவாதல் அல்லது மறைமதி என்பது சந்திரன்தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமைவாதை யாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
சந்திரமானம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சில காலக்கணிப்பு முறைகளில் அமைவாதை நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படுகிறது.
*அமாவாசை வரும் நாள் கணிப்புதொகுப்பு:*
**********************************************
இரண்டு அமைவாசைகளுக்கு இடையேயுள்ள கால இடைவெளி எப்பொழுதும் சமனாக இருப்பதில்லை. இக் காலப்பகுதி, அதாவது ஒரு சந்திர மாதம் சுமார் 29.53 நாட்கள் அளவுள்ளது. அமாவாசையில் சந்திரனும், சூரியனும் நேருக்கு நேர் வரும் நேரத்தைக் கணிப்பதற்கு ஒரு அண்ணளவான சமன்பாடு உண்டு. அது கீழே தரப்படுகிறது.
d = 5.597661 + 29.5305888610 x N + (102.026 x 10-12) x N2
இதிலே N 2000 ஆம் ஆண்டின் முதல் அமைவாதையன்று 0 இல் தொடங்கி ஒவ்வொரு சந்திர மாதத்துக்கும் 1 ஆல் கூடிச்செல்லும் ஒரு முழு எண்ணாகும். d2000-01-01 00:00:00 இலிருந்து குறித்த அமைவாதை வரையுள்ள நாட்களினது எண்ணிக்கையாகும்.
திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் அமாவாசையும் ஒன்று.
ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்
*****ஆன்மீகப் பயணம் தொடரும் *****

Wednesday 13 May 2020

கொரோன போரில் வெல்வோம்-22-12-2020-எந்த வேலையும் நடக்காது

சமூக கொரானா பரவல் வந்தால் கீழ்வரும் விதிகளை பயன்படுத்த வேண்டும். நாம் அதை இப்போதே கடைபிடித்து நம்மையும் நம் குடும்பத்தையும் நம் தாய்நாட்டை காப்போம்.
ஐ.சி.எம்.ஆர் புது தில்லி
*தயவுசெய்து கவனமாகப் படிக்கவும்* _
*சில மிக முக்கியமான புள்ளிகள் ..* _ _
*1.* 2 வருடங்களுக்கு வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைக்கவும் .._ _
*2.* 1 வருடம் வெளியே உணவு சாப்பிட வேண்டாம் .._
*3.* தேவையற்ற திருமணம் அல்லது இதே போன்ற பிற விழாவிற்கு செல்ல வேண்டாம் .._ _
*4.* தேவையற்ற பயண பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் .._ _
*5.* குறைந்தது 1 வருடம் கூட நெரிசலான இடத்திற்குச் செல்ல வேண்டாம் .._ _
*6.* சமூக தொலைதூர விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவும் .._ _
*7.* இருமல் உள்ளவரிடமிருந்து விலகி இருங்கள் .._ _
*8.* முகமூடியை தொடர்ந்து வைத்திருங்கள் .._ _
*9.* நடப்பு ஒரு வாரத்தில் மிகவும் கவனமாக இருங்கள் .._ _
*10.* உங்களைச் சுற்றி எந்த குழப்பத்தையும் விட வேண்டாம் .._ _
*11.* சைவ உணவை விரும்புங்கள் .._ வீட்டில் சமைக்கவும் ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டாம்..அனைத்து உணவுகளும் மாசுபட்டுள்ளன. உணவு கேரியர்கள் மிகவும் சுகாதாரமற்றவை மற்றும் ஒவ்வொரு வீட்டிற்கும் வைரஸை எடுத்துச் செல்கின்றன.. கவனமாக இருங்கள்
*12.* இப்போது 6 மாதங்களுக்கு சினிமா, மால், நெரிசலான சந்தைக்குச் செல்ல வேண்டாம். முடிந்தால், பார்க், பார்ட்டி போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் .._ _
*13.* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள் .._ _
*14.* பார்பர் கடையில் அல்லது பியூட்டி பார்லரில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருங்கள் .._ _
*15.* தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும், எப்போதும் சமூக தூரத்தை நினைவில் கொள்ளுங்கள் .._ *16.* *கொரோனா* அச்சுறுத்தல் விரைவில் முடிவுக்கு வரப்போவதில்லை. *17.* நீங்கள் வெளியே செல்லும் போது பெல்ட், மோதிரங்கள், மணிக்கட்டு கடிகாரம் அணிய வேண்டாம். வாட்ச் தேவையில்லை. உங்கள் மொபைல்களில் நேரம் பார்கலாம் .
*18.* கை கெர்ச்சீப் வேண்டாம். தேவைப்பட்டால் சானிடிசர் மற்றும் திசுவை எடுத்துக் கொள்ளுங்கள்.
*19.* காலணிகளை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டாம். அவற்றை வெளியே விடுங்கள்.
*20.* நீங்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது கைகளையும் கால்களையும் சுத்தம் செய்யுங்கள்.
*21.* நீங்கள் சந்தேகிக்கப்படும் நோயாளிக்கு அருகில் வந்துவிட்டதாக நீங்கள் உணரும்போது நன்கு குளிக்கவும்.
அடுத்த 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஊரடங்கு இருந்தாலும் சரி இல்லையாயினும் சரி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.
இதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
_*நன்றி..*_
1.வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் மளிகை சாமான்கள் வாங்க வெளியே செல்லுங்கள்(கூட்டம் இல்லாத போது) அரசு வழிகாட்டுதல் படி.
2. வாங்கிய பொருட்களை மூன்று நாட்கள் தனிமைப்படுத்தி உபயோகிக்க வேண்டும் முடியாத பட்சத்தில் சற்று சூடு பண்ணி உபயோகிக்கவும் (வெய்யிலில்)
3.வெளியே சென்று வந்தவுடன் அணிந்த உடைகளை சோப்பு போட்டு துவைத்து பின்பு நீங்களும் சோப்பு போட்டு குளிக்கவும்
( கொரோன வைரஸ் உள்ளவர்கள் தும்மிய அல்லது இருமிய இடத்தில் நீர் திவலைகள் 20 நிமிடங்கள் வரை அதே இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது நீங்கள் மாஸ்க் அமைந்திருந்தாலும் உங்கள் உடையில் பட்டு அதன் காரணமாக கிருமி பரவ வாய்ப்பு உள்ளது)
4.வெளியே சென்று வந்த செருப்புகளை வெளியிலேயே கண்டிப்பாக விடவும்.
5.வாங்கிய காய்களை 40நொடி குளியல் சோப்பு நீரில் கழுவி பின்பு உலர்த்தி உபயோகிக்க வேண்டும்.
6.சுகர் பிரசர் உள்ளவர்கள் வீட்டுக்குள் (எட்டு) நடை பயிற்சி செய்யவும் (40 நிமிடம்)
7.நீங்கள் வெளியில் போகும் போது கண்டிப்பாக மாஸ்க், கண்ணாடி, காதுக்கு பஞ்சு போன்றவற்றை அவசியம் பயன்படுத்துங்கள்.( கொரோன உள்ளவர் இருமினால் 20 நிமிடம் வரை அந்த இடத்தில் நீர்திவலைகள் இருக்கும்)
8.வீட்டில் வெளி நபர்களை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம்.
9. செய்தித்தாள் வாராந்திர மாத புத்தகம் வாங்கிய இரண்டு நாள் கழித்து படிக்க அல்லது படித்தவுடன் பேப்பரை யாரும் தொடாத இடத்தில் வைத்த பின்பு சோப்பு போட்டு கை கழுவவும்.
10. வெளியே சென்று வந்த இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு வாகனத்தை கழுவி வீட்டுக்குள் கொண்டு செல்க. முக்கியமாக டையர், ஹேன்பார், சீட்கவர்.
11.தண்ணீரை காய்ச்சி சூடு தணிந்த பின்பு குடிக்க.
12.வெளியே எந்த பொருட்களையும் தொடாதீர்கள்.
13.கடையில் வாங்கிய பணத்தை அயரன் பாக்சில் மிதமான சூட்டில் தேய்த்து மீண்டும் உபயோகிக்கவும்.
14.சிறுவர் மற்றும் இளைஞர்கள் வெளியே சொல் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது.
15.வாசல் கூட்டுவதை தவிற்க வேண்டும்
16.இரண்டு மூன்று போர் கூடும் ஏசி ஹால் மற்றும் ஏசி ரூம்பை தவிறுங்கள்.
17.பக்கத்து வீட்டுக்காரர் கொடுக்கும் எந்த பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
18.வீட்டில் பூக்கள் இருக்கும் பட்சத்தில் அதை மட்டும் இறைவனுக்கு சூடவும்.
19.மழை வந்தால் வெளியே செல்வதை அவசியம் தவிர்க்கவும்.
20.***குறிப்பாக****வெளியிலிருந்து வரும் அனைத்து பொருளில் மற்றும் நீங்கள் வெளியில தொடக்கூடிய பொருளில் மற்றும் வெளியில் செல்ல கூடிய அனைத்து இடத்திலும் கொரோன உள்ளது என்று நினைத்து கொள்ளுங்கள் அப்போது விழிப்புணர்வை உங்களுக்கு கண்டிப்பாக வருவது உத்தமம்.
21. மக்கள் தொடர்பு தொழிலில் இருப்பவர்கள் அனைவரும் மேல் சொன்ன விஷயங்களை மனப்பாடம் செய்து கொள்ளவும்.
22.***வீட்டுக்கு அருகில் உணவுக்கு வசதி இல்லாதவருக்கு உதவுங்கள்***
***பொது இடங்களில் எச்சில் துப்பாதீர் இருமல் தும்மல் வந்தால் கர்சீப் வைத்து இரும தும்ம வேண்டும்.
நட்புகளே இனி அனைவரும் ஜாதி, மதம், இனம் அரசியல், கடந்து கொரானா யுத்தத்தில் இறங்கினால் மட்டுமே வெற்றி***
இதை பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியபடுத்தவும்...

கொரோன போரில் வெல்வோம் என்று முழு நம்பிக்கையுடன்...

Tuesday 5 May 2020

#நெருப்பில்_முடி_பொசுங்க #கூடாது_என்று_கூறுவதின் #ரகசியம்..!!!

நெருப்பில்_முடி_பொசுங்க
#கூடாது_என்று_கூறுவதின் #ரகசியம்..!!!
இன்றளவும் கிராமப்புரங்களில் நெருப்பில் முடி பொசுங்க கூடாது எனக்கூறுவார்கள்.
அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ, தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள் எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும் எனபார்கள்.
இதன் ரகசியம்தான் என்ன?
கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது . அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது.
ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி .
ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும். இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல .
அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள்.
இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும்.
முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.
தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும்.
அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது.
இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது .
இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருகிறதை ஆய்வு மூலம் பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும். அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும். அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில் மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள். அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும். அதை பொருத்தி இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள்.
அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்திருந்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே உயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது .
அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை ஆட்கொண்டது.
அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.
இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள்.
அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.
அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள்.
இதுதான் வித்தியாசம். ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும். காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.
சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள். கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள்.
இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே. நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை. இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும். நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும். அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது.
எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே இதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் கோழியை,பன்றியை இறைச்சியுண்பதற்காக கொன்று அதன் ரோமத்தை முதலில் தீயில் பொசுக்குவார்கள். பொசுக்கிய பின்னர் அந்த தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூள் அதன் உடல் முழுக்க பூசுவார்கள்.
பிற்காலத்தில் வந்தவர்கள் தீய்ச்சல் வாடை போவதற்காகவும்,உணவின் ருசிக்காகவும்மஞ்சள் பூசுவதாக கருதினார்கள்.உண்மையில் அவ்வாறுஇல்லை.
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம் படிந்துஇருக்கும். மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்.
( சிக்கு வாசனை என்பார்கள்)
அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,
ஆனால் நெருப்பில் போடக்கூடாது,
மகா தரித்திரம் பிடிக்கும்.
நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது .
போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு .
அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும்.
நெருப்பில்_முடி_பொசுங்க
#கூடாது_என்று_கூறுவதின் #ரகசியம்..!!!
இன்றளவும் கிராமப்புரங்களில் நெருப்பில் முடி பொசுங்க கூடாது எனக்கூறுவார்கள்.
அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ, தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள் எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும் எனபார்கள்.
இதன் ரகசியம்தான் என்ன?
கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது . அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது.
ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி .
ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும். இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல .
அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள்.
இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும்.
முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.
தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும்.
அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது.
இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது .
இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருகிறதை ஆய்வு மூலம் பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும். அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும். அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில் மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள். அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும். அதை பொருத்தி இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள்.
அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்திருந்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே உயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது .
அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை ஆட்கொண்டது.
அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.
இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.
அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள்.
அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.
அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள்.
இதுதான் வித்தியாசம். ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும். காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.
சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள். கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள்.
இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே. நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள். இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.
யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை. இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும். நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும். அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது.
எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும்.
அசைவம் சாப்பிடுபவர்கள் அக்காலத்திலேயே இதை நன்கு உணர்ந்திருந்தனர். அதனால் கோழியை,பன்றியை இறைச்சியுண்பதற்காக கொன்று அதன் ரோமத்தை முதலில் தீயில் பொசுக்குவார்கள். பொசுக்கிய பின்னர் அந்த தரித்திரம் பாதிக்காதிருக்க மஞ்சள் தூள் அதன் உடல் முழுக்க பூசுவார்கள்.
பிற்காலத்தில் வந்தவர்கள் தீய்ச்சல் வாடை போவதற்காகவும்,உணவின் ருசிக்காகவும்மஞ்சள் பூசுவதாக கருதினார்கள்.உண்மையில் அவ்வாறுஇல்லை.
தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம் படிந்துஇருக்கும். மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்.
( சிக்கு வாசனை என்பார்கள்)
அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,
ஆனால் நெருப்பில் போடக்கூடாது,
மகா தரித்திரம் பிடிக்கும்.
நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது .
போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு .
அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும்.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...