Saturday 16 April 2022

மஹா பெரியவா அருள்வாக்கு*

                                   


    மஹா பெரியவா அருள்வாக்கு*  

கஷ்டத்திற்கு ஒரே முடிவு*                                                                                                                                                            எமன் ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாகக் கழிப்பதில்லை. ஒவ்வொரு வினாடியும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மை பிடித்துக் கொள்வானோ தெரியாது. அதனால், அவன் வருவதற்குள் கடவுளின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நமக்குப் பயமில்லை. கோபம் கொண்டவனோடு பழகினால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. தீயவனோடு பழகினால் நாமும் கெட்ட எண்ணம் கொண்டவனாக மாறி விடுகிறோம். யாரோடு பழகுகிறோமோ அவர்களுடைய குணங்கள் நம்முள் உண்டாகி விடுகின்றன. அதனால் நல்லவர்களுடன் மட்டும் பழக்கம் கொள்வது அவசியமானதாகும். நமக்கு உண்டாகும் கஷ்டங்களைக் கண்டவர்களிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேட்பவர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்களோ என்று சிந்தித்து மேலும் கஷ்டப்படாதீர்கள். கஷ்டத்தை பிறரிடம் சொல்வது என்று முடிவெடுத்தால், அதை கடவுளிடம் மட்டும் சொல்லுங்கள். நிச்சயம் வழி பிறக்கும். மனிதன் மிருக நிலையில் இருக்கிறான். முதலில் மிருக நிலையிலிருந்து மனிதனாக மாற வேண்டும். தர்மம், ஒழுக்கம், பக்தி முதலியவற்றை பின்பற்றினால் மட்டுமே மனிதனாக மாறமுடியும். பின்னரே மனிதன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்த முடியும். *- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.*

நினைத்தலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம் நடமாடும் தெய்வம் காஞ்சி காமகோடி மஹா பெரியவா கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் காஞ்சி காமகோடி மஹா பெரியவாIIஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்


சுந்தா சுந்தரம் என்ற பெண்மணியின் குடும்பம் காஞ்சிப்பெரியவர் மீது அளவு கடந்த பக்தி மிக்கது. சுந்தா சுந்தரம் எப்போது வந்தாலும் ஒரு ரோஜா மலர்க் கூடையை கையில் கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தக் குடும்பத்தோடு மூதாட்டி ஒருவர், பெரியவரைத் தரிசனம் செய்வதற்காக சங்கரமடத்திற்கு வந்திருந்தார். அவரது கையில் ஒரு சிறிய சீதாப்பழம் இருந்தது. பெரியவருக்கு கொடுக்க எண்ணி கையில் வைத்திருந்தார். மூதாட்டியைக் கண்ட மடத்து சிஷ்யர் ஒருவர், “”பாட்டியம்மா! பெரியவா இந்த மாதிரி பழங்களை எல்லாம் ஒருக்காலும் ஏத்துக்க மாட்டா! வெறுமனே நமஸ்காரம் செய்துட்டுப் போங்கோ!” என்று சொல்ல, மிகுந்த வருத்தத்துடன் அவர் தன்னுடைய முந்தானையில் அப்பழத்தை மறைத்துக் கொண்டார். நீண்ட வரிசையில் நின்றிருந்த மூதாட்டி பெரியவரின் அருகே வந்து சேர்ந்தார். பெரியவரை நமஸ்கரித்தார். அதுநேரம் வரை மவுனமாக இருந்த பெரியவர் பேசத் தொடங்கினார். “”நீ எனக்காக கொண்டு வந்த பழத்தை கொடுக்காமல் நிற்கிறாயே!” என்றார். ஆச்சரியப்பட்டு போனார் மூதாட்டி. கைகால்கள் கூட நடுங்கத் தொடங்கின. பாட்டி கொடுத்த சீதாப்பழத்தை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆசியளித்து பிரசாதம் வழங்கினார். மற்றொரு நிகழ்ச்சி ஒன்றையும் கேளுங்கள்.


சந்தானராமன் என்ற அரசுஅதிகாரி டில்லியில் மத்திய அரசுப்பணியில் இருந்தார். வசதி மிக்க அவர், ஒருமுறை பெரியவரைச் சந்திக்க வந்திருந்தார். தன்னைப் பெரியவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மவுனமாக விஷயத்தைக் கேட்ட பெரியவர் சட்டென்று “” நீ நவநீதசோரன் தானே!” என்றார்.


சிறுவயதில் பெரியவர் “நவநீதசோரன்’ என்று சொன்னதை எண்ணி மகிழ்ந்தார். சந்தானராமன் செல்வந்தரின் ஒரே பிள்ளை. ஆனால் வீட்டில் சாப்பாட்டைத் தவிர வெளியில் எதுவும் சாப்பிட்டதில்லை. நண்பர்களைப் போல தானும் பலகார பட்சணங்களைச் சாப்பிட விரும்பிய சந்தானராமன், சிறுவனாக இருந்தபோது அப்பாவின் சட்டையில் இருந்த பணத்தை எடுத்திருக்கிறார். இப்படி நாள் தோறும் தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அப்பா, கையும் களவுமாக மகனைப் பிடித்து விட்டார். அத்துடன் மகனின் நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையும் அடைந்தார்.


காஞ்சிமடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் மகனைப் பற்றிச் சொல்லி வருந்தினார். பெரியவர் பலமாகச் சிரித்துவிட்டு, “”பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசிலே பால், தயிர், வெண்ணெய் திருடினான். அதுபோல சந்தானராமனும் “நவநீதசோரனாகி’ விட்டான். ஒன்று கவலைப்படாதீர்கள். நிச்சயம் இவன் பின்னாளில் நிதிநிறுவனங்களைக் கட்டிக் காப்பாற்றுவான். சிக்கனம் தேவைதான். இருந்தாலும் பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். இனி இம்மாதிரியான தவறுகள் நடக்காது,” என்று ஆறுதல் சொல்லி ஆசி வழங்கினார். சந்தானராமனும் பெரியவரின் வாக்குப்போலவே, அரசுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். அந்நிகழ்ச்சியை மறக்காமல், தனது “புனைப்பெயரை’ மீண்டும் நினைவுபடுத்திய பெரியவரை எண்ணி, சந்தானராமன் மிகவும் பரவசப்பட்டார்.                                                                                                                                           

திருவாதிரை விரதம் - ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

                      திருவாதிரை விரதம் - ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :*

சிவபெருமானை வழிபடக்கூடிய பல்வேறு வகையான விரதங்களில் ஒன்று தான் திருவாதிரை. சிவபெருமானுக்கு மார்கழி மாதத்தில் வரக்கூடிய மிக முக்கியமான விரத நாள் தான் திருவாதிரை விரதம்.


சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் திருவாதிரை. ஆகவே சிவாலயங்களில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிறப்பு வாய்ந்த அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறும்.


*ஆருத்ரா தரிசனம் :*


தமிழ்நாட்டில் பழமையான சிவன் கோயில்கள் நிறைய உள்ளன. அவற்றில் சமயக்குறவர்கள் என்று கூறப்படும் நால்வரால் பாடப்பட்ட 276 சிவன் கோவில்கள் இருக்கின்றன. அவற்றில் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதாவது முதல் முதலில் பாடல் பெற்ற சிவாலயமாக இந்த உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் புகழப்படுகிறது. இதன் காரணமாக சிவபெருமான் இங்கு உண்பதற்கும், உறங்குவதற்கும் இந்த ஆலயத்திற்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.


*வரலாறு:*


இயற்கையாகவே நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் மென்மை தன்மை கொண்டது. அதாவது ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாத தன்மை கொண்டது. மேளம் முழங்கப்பட்டால் மரகதம் உடைபடும், ஆகவே உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் உள்ள நடராஜர் சிலை மரகதம் கற்களால் செய்யப்பட்டதால் ஒலி, ஒளி அதிர்வுகளிலில் இருந்து விக்ரகத்தை பாதுகாக்க சந்தனம் பூசி பாதுகாப்பாக பராமரிக்கின்றனர்.

 

இதன் காரணமாக உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மார்கழி திருவாதிரை நட்சத்திரம் அன்று பக்தகோடிகள் அங்குள்ள இறைவனை தரிசனம் செய்கின்றன. அதாவது அந்த சிவாலயத்தில் அன்று சாமி விக்ரகத்திற்கு சந்தனம் கலைக்கப்பட்டு அன்று இரவு மீண்டும் சந்தனம் பூசப்படுகிறது. அதாவது அன்று 32 வகையான அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின் மீண்டும் சாமி சிலைக்கு சந்தனம் பூசப்படுகிறது. அன்று சிவபெருமானை வழிபட்டால் நம் வாழ்வில் நன்மை நடக்கும் என்று நம்பப்படுகிறது.


*திருவாதிரை விரதம் :*


திருவாதிரை விரதம் என்பது தீர்க்க சுமங்கலி வரமளிக்கும் விரதம் என்று சொல்லப்படுகிறது. இந்த நன்னாளில் திருவாதிரை விரதம் எடுத்து, சுமங்கலிகள் தங்கள் தாலியினை மாற்றி சிவபெருமானை வழிபட்டால், தங்களின் கணவருக்கு தீர்க்க ஆயுள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விரதம் மாங்கல்யம் நோம்பு என்றும் அழைக்கப்படுகிறது.


*திருவாதிரை நோம்பு :*


பெண்கள் மஞ்சளில் பிள்ளையார் செய்து அதற்கு அருகம்புல் வைத்து, விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து, விநாயகருக்கு முன் தாலி சரடு வைத்து சுமங்கலி பெண்கள், விநாயகரை வழிபடுவார்கள்.


இந்த விரதத்தை பூர்த்தி செய்ய 18 வகையான காய்கறிகளில் சமைத்து, திருவாதிரை களி செய்து, பச்சரிசியில் அடை செய்தும் விநாயகருக்கு படையலிட்டு வழிபடுவார்கள்.


பின் சுமங்கலி பெண்கள் நிலவு தரிசனம் செய்வார்கள் பின் தாலி கயிறை மாற்றி கொள்வார்கள். இறுதியாக நோம்பிற்கு வந்தவர்கள் விருந்து உண்டபின் அனைவரும் விரதமிருந்த பெண்ணை தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.


*திருவாதிரை நோம்பு இருப்பதன் பலன்‌ :*


இந்த திருவாதிரை விரதம் நாளில் கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட வேண்டும். தங்கள் கணவனிடம் ஆசி பெற்று மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கலாம். எவரெல்லாம் இந்த திருவாதிரை நோம்பு இருக்கின்றார்களோ அவர்களுக்கு சிவசக்தின் அருள் கிட்டும். அதேபோல் தீர்க்க சுமங்கலியாக இருக்கும் வரமும் தங்களுக்கு கிடைக்கும். சுமங்கலி பெண்கள் அனைவரும் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து இறைவனை வழிபடலாம். இந்த நோன்பு நாளில் திருவாதிரை களி படைத்து சாப்பிடலாம். ஆருத்ரா தரிசனம் பார்க்க சிவ ஆலயம் செல்லலாம்.


பட்டினத்தார் சொன்னது...


                                                      பட்டினத்தார் சொன்னது...

 உணவை தான் உண்டேன் எப்படி மலம்  ஆனது?

          உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?


மலம்தான் உணவாக இருந்ததா?

மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா?


இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?

இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டதா?


பெருத்தன சிறுக்கும்!! 

சிறுத்தன பெருக்கும்!! 

         என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?


"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று  மனைவியும் சுற்றமும் பேசியது      எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.


இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!


 நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!


 இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!!


அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!!


அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.

காலம் கடந்த ஞானம்.!!


பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்!!

 

இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?


பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?


 சந்தனத்தால்  மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது? 


கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,

காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,

பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்!!


பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு,   

           மண் என்னைப்பார்த்து,       "மகனே!!! நானிருக்கிறேன்.... 

என் மடியில் வந்து உறங்கு" என்று  என்னை மார்போடு தழுவிக்கொண்டது....


அருந்தின மலமாம் 

பொருந்தின அழுக்காம் 

வெறுப்பன உவப்பாம் 

உவப்பன  வெறுப்பாம் 

உலக பொய் வாழ்க்கை நீ நீயாக இரு...


 உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது....


 அதனால்  வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்....


உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது....


எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.


எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.


எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை...


மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன...


மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்....


நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.....


முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.


எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.


சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.


நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.....


நான்... நான்... நான்...

நான் சம்பாதித்தேன்,

நான் காப்பாற்றினேன்,

நான் தான் வீடு கட்டினேன்,

நான்தான்உதவிசெய்தேன்,

நான் பெரியவன்,

நான் தான்  வேலைவாங்கி  கொடுத்தேன்,


நான்  நான்  நான்  நான் என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!


நான் தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

நான் தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?


"நான்" தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

நான் தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?


இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..


ஆகையால் நான்  என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும்  அன்பாக இருங்கள். 


 உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!


 உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.


வாழும் போதே பிறர்க்காகவும் வாழ்ந்துடுவோம்

ஓம்நமசிவய வாழ்க 🍀🍀 உலகின்_மிகப்பெரிய_சிவலிங்கம்

                                                           ஓம்நமசிவய வாழ்க 🍀🍀

                                              உலகின்_மிகப்பெரிய_சிவலிங்கம் 


கைலாயம் மர்மங்களும் விளக்கங்களும்


மும்மூர்த்திகளில் ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணு பகவான் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானின் இருப்பிடம் கைலாயம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று இருப்பிடங்களில் சத்யலோகமும் வைகுண்டமும் சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை. 


ஆனால் நமது கண்களால் கண்டு தரிசனம் பெற்று முக்தி அடையும் வகையில் சிவனின் இருப்பிடமான கைலாயம் அமைந்துள்ளது. உலகின் தலைசிறந்த சிகரங்களில் இமயமும் ஒன்று. உலகிலேயே உயர்ந்த சிகரமான இமயமலையில் வடக்கு பகுதியில் சிவபெருமான் தன் மனைவி பார்வதியுடன் வசித்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.


இதில் கைலாயம் என்பது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் நாட்டில் அமைய பெற்று இருக்கிறது. சிந்து சட்லெஜ் பிரம்மபுத்திரா போன்ற பல நதிகள் இந்த கைலாயத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன.


இந்த கைலாயம் 6638 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இங்கு வரும் அனைவரும் வணங்கும் மானசரோவர் ஏரியை ப்ரம்ம தேவர் அவரது கைகளால் உருவாக்கியதாக கூறப்படுகிறது.


உலகின் மிக உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி மானசரோவர் மட்டுமே. வேறு எங்கும் இது போன்ற ஏரிகள் இல்லை. அழிந்து போனதாக சொல்லப்படும் அன்னப்பறவைகள் இன்னமும் இங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.


ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் தெய்வங்களும் தேவர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் வந்து நீராடும் இடமாக மானசரோவர் ஏரி விளங்குகிறது. இதன் காரணமாகவே இங்கு நீராடிய பின் கைலாயத்தை தரிசித்தால் முக்தி என்று மக்கள் நம்புகின்றனர்.


52கிமி சுற்றளவு கொண்ட கைலாய மலையை பரிக்கிரமமாக சுற்றி வரும் போது சுகு , ஜெய்தி எனும் இரு இடங்களில் கைலாய மலையின் பிம்பம் மானசரோவர் ஏரியில் விழுவதை பார்க்க முடியும்.


மிகவும் அரிய இந்த இடங்களை சிவனும் பார்வதியும் சேர்ந்து காட்சியளிக்கும் இடமாக மக்கள் வழிபடுகிறார்கள். கௌரிசங்கர் என்று இதற்கு பெயரும் வைத்திருக்கிறார்கள்..


தேவியின் 51 சக்தி பீடங்களில் மானசரோவர் தான் சதி தேவியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது. மானஸரோவருக்கு வெகு அருகிலேயே ராட்சத தலம் என்று இன்னொரு ஏரியும் உண்டு. ராவணன் தவம் செய்த இந்த ஏரி உப்பு நீர் தன்மை கொண்டுள்ளது.


தெளிந்த பளிங்கு நீர் போல மானசரோவர் அமைதியாக இருக்கிறது. ராட்சத ஏரியோ ஆரவாரம் கொண்ட அலைகளை கொண்டு கொந்தளிப்பாகவே காட்சியளிக்கிறது. அதே போல மானஸரோவரில் வலம் வரும் பறவைகள் எதுவும் ராட்சத தல ஏரிக்கு வருவதில்லை.


சிவபெருமானும் பார்வதி தேவியும் வாழும் இந்த கைலாயத்தில் மற்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் ரிஷிகள் போன்றோரும் வாழ்கின்றனர். அவர்களுக்கான மாளிகைகள் குகைகள் ஆகியவை கைலாய மலையில்தான் ரகசியமாக இருக்கிறது.


சில சமயங்களில் இரவு நேரங்களில் மினுமினுக்கும் வகையில் இந்த இடங்கள் தங்களை வெளிக்காட்டி கொள்ளும் என்று கூறப்படுகிறது.

எட்டாயிரம் மீட்டருக்கும் மேல் உயரம் கொண்ட எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் கூட 7000 மீட்டர் உயரம் கொண்ட இந்த கைலாயத்தில் ஏற முடியவில்லை. 


இந்துக்கள் மட்டுமல்லாமல் புத்தம் சமணம் பொம்பா போன்ற மற்ற மதத்தினரும் கைலாய மலையை கடவுளாக பார்க்கின்றனர். 

சாட்டிலைட் மூலம் கைலாயத்தை புகைப்படம் எடுத்த போது மிக பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாக கைலாய மலை காட்சியளிப்பது கடவுளை நேசிக்காதவருக்கும் வியப்பை தருகிறது.


பிரபஞ்சத்தின் மைய பகுதியில் இருக்கும் கைலாயம் இந்துக்கள் நம்பிக்கை படி அவர்களுக்கு தந்தையாகிறது. மானசரோவர் ஏரி தாயாகிறது. காலங்கள் ஸ்தம்பித்து போகும் குகைகள் கைலாயத்தின் அடியில் ஏராளமாக இருக்கிறது என்றும் இங்குதான் மகா அவதார் பாபாஜி மற்றும் எண்ணற்ற சித்தர்கள் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது.


இங்கு வருகை தரும் பக்தர்களின் நகங்களும் முடிகளும் 12 மணி நேரத்தில் வளர்கின்றன என்கிறார்கள். இதன் மூலம் கைலாயத்தில் காலம் வேகமாக நகர்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்ளலாம். சூரியனின் கதிர்களால் பொன்னிறமாக ஜொலிக்கும் இந்த கைலாயம் இன்னும் எவ்வளவோ அதிசயங்களையம் அமானுஷ்யங்களையும் தன்னிடம் கொண்டிருக்கிறது.


ஏற்கனவே இறைவனால் வெளிப்பட்ட அதிசயங்கள் இன்னமும் முடிவின்றி மனித மூளைகளால் ஆராயப்பட்டுக் கொண்டே இருக்கும்போது வெளிவராத கைலாயத்தின் ஆச்சர்யங்கள் எதற்காகவோ அமைதியாக காத்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது..

படித்ததில் மெய்சிலிர்த்தேன்

                                                      படித்ததில் மெய்சிலிர்த்தேன்

*உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு. 


அஃது எந்த இடம் தெரியுமா?


 *கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* *அவனைக் காத்து நின்றது.* 


 *அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* . 


 *கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான். 


அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,* *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான். 


 *கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை. 


 *கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.* 


 *கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.* 


 *கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்* . 


 *கண்ணன்* மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 


 *"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் "* என்று *வரம்* தந்தான். 


 *இறைவனைக்* காண வேண்டும், *முக்தி* அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 


 *கர்ணன் இறைவனைக்* காண வேண்டும் என்று *தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை* . 


 *இறைவன்* அவனைத் *தேடி வந்தான்.* கேட்காதபோதே *விஸ்வரூப தரிசனம்* தந்தான்.  அவனைக் *கட்டி அணைத்துக்* கொண்டான்.  *கண்ணீர்* விட்டான். *செல்வம், ஈகை, முக்தி* என்று எல்லாம் கொடுத்தான். 


 *இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.* 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?


 *கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்* . 


 *எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.* 


 *உலகளந்த பெருமாள்,* அவனிடம் *கை நீட்டி நின்றார்.* 


 *ஈகை* எவ்வளவு பெரிய நற்செயல் !


 *இயன்றதை செய்வோம்*


 *இல்லாதவர்க்கு*


பித்துருதோஷம்

                                                                       பித்துருதோஷம்


தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்துரு தோஷம்.


தோஷம் வரக்காரணம் :


1.கருச்சிதைவு


2. பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.


3.இளைய தாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.


4.தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.


5. ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர், ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.


6. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயாசென்று கூபசிரார்த்தம் செய்யாவிடில் பித்துரு தோஷம் வரும்.


குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்துருக்கள் என்கிறோம்.அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்துருதோஷம்.


ஜாதகத்தில் கண்டறிவது :


ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.


பரிகாரம் :


ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும்,காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும் , திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.


திலஹோமம் :.


குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டும் தில்ஹோமம் செய்ய வேண்டும்.

அனைவரும் இயற்கை மரணம் அடைந்திரிந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.


தோஷ்த்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :


தோஷம் உள்ளவர்களுக்கு


1.திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்.

விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னியோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.


2. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை.மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.


3.ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.


4. கலப்புத்திருமணம் , ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.


இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப்பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்துருக்களும், பித்துரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.


பித்துருக்களின் சாபம் கடவுள் நமக்கு தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மையுடையது.


பரிகாரம்:


சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம் செய்யவும்.இந்த அபிஷேகம் அமாவாசையன்று செய்யவும்.இந்த அபிஷேகத்தைப்பார்த்த நாள் முதல் உங்கள் பித்துருதோஷம் விலகும்.


சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள் 100 கிராம் பச்சரிசி, அகத்திக்கிரை, 50 கி கருப்பு எள், 100 கி வெல்லம், வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டிற்கு கொடுக்க பித்துரு தோஷம் நீங்கும்.

தொடர்ந்து 9 அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும்.இதனால் பித்துரு தோஷம் முழுமையாக நீங்கும்.

லட்சுமி தேவியின் அருளை பெற... பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானம் செய்யுங்கள்...!!

 லட்சுமி தேவியின் அருளை பெற... பெண் குழந்தைகளுக்கு இந்தப் பொருளை தானம் செய்யுங்கள்...!!

👉 லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும். 


👉  வீட்டில் பூஜை  செய்வதற்கு கூட எனக்கு நேரமில்லை... வாரத்தில் 6 நாட்களும் வேலை வேலை... விடுமுறை என்றால் வீட்டு வேலை. இவ்வாறு இருக்க தினமும் விளக்கேற்றி மகாலட்சுமியை எப்படி வீட்டிற்கு வரவழைப்பது என்று கவலைப்பட்டு கொண்டிருந்தால் அந்த கவலையை இப்போதே விட்டுவிடுங்கள்...


👧 எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். 


👉 பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால்... உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே வருவாள். அது என்ன பொருள்? என்று தானே யோசிக்கிறீர்கள். 


👉 வெள்ளிக்கிழமை ஒரு பெண் குழந்தைக்கு உங்களால் முடிந்த 📿 கண்ணாடி வளையல், 👗 புதிய ஆடை, அழகான வாசனை நிறைந்த 🌹 பூக்கள் இந்த எல்லாப் பொருட்களையும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து தானம் செய்யுங்கள். 


📿 நங்கள் வாங்கிக் கொடுத்த கண்ணாடி வளையல் சத்தம் அந்த குழந்தையின் கைகளில் ஒலிக்கும்போது, அந்த குழந்தையுடைய மனது சந்தோஷப்படும்போது, உங்கள் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வந்துவிடுவாள். 


👗 நங்கள் வாங்கிக் கொடுத்த புத்தாடையை அந்த குழந்தை போட்டு மனமகிழ்ச்சியை அடையும்போது உங்கள் குடும்பத்திற்கு மகாலட்சுமியின் ஆசீர்வாதம் கிடைத்துவிடும். 


🌹 அந்த சிறிய குழந்தையின் தலையில் வாசனை நிறைந்த பூ வை வைத்து அழகு பார்க்கும்போது, உங்களுடைய வீட்டில் மங்களகரமான காரியங்கள் அழகாக நடக்கத் தொடங்கிவிடும். 


👉 6 மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ ஒரு ஏழை குழந்தைக்கு இந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. 


👉 கண்ணாடி வளையல் வாங்குவதற்கு நமக்கு பெரியதாக எந்த செலவும் ஆகப்போவதில்லை. இரண்டிலிருந்து மூன்று டசன் சிறிய குழந்தைகள் அணிவது போல கண்ணாடி வளையலை வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமைதோறும் கோவிலுக்கு சென்று அங்கு வரக்கூடிய சிறிய பெண் குழந்தைகளுக்கு இந்த கண்ணாடி வளையலை தானமாக கொடுத்தால் நன்மை தரும். 


👉 அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டின் அக்கம்-பக்கத்தில் இருக்கும் ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இந்த தானத்தை கொடுங்கள். 


👉 திருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளி போகும் தம்பதியர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் சீக்கிரமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த சிறிய தானத்தை செய்து, பெரிய அளவிலான பலனை அடையுங்கள்.

*தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!*

                            *தோஷத்தை நாமே சில செயல்களால் போக்க முடியும் !!*

1.படுக்கை அறையில் தலைக்கு அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட #சுக்ரதோஷம் படி படியாக குறையும்.இந்த விவரத்தை மாற்றியும் சொல்லலாம் ,படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும்குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினுங்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும்.


2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம்,கற்கண்டு பொங்கல் கொடுப்பது #சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.


3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய 

பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் #சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.


4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது ,குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , #குருவின் ஆசிகள் கிடைக்கும்.


5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல் #தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும்.


6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது #சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.


7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் ,நம் வாழும் மனை ,தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ),உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் ,இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் #செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.


8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் ,புதன் கிழமைதோறும் அன்னதானம் செய்தல் ,புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) #புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை ,பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி )நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில்,மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.


9.நாகம்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது ,இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது ,

குடி கெடுத்தவன் ,குடிகாரன் ,குரு துரோகி ,பசுவை கொன்றவன் ,சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது #ராகு_கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் ,போகம்,மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .

( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமமும் தான் ,தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )


10.பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது ,பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது,வெள்ளத்துடன் பச்சரிசி தூளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது #தேவர்களை சாந்தி படுத்திவிடும் ,இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.


இவைகள் பொதுவானவை


வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்...

மகாசிவராத்திரி சிறப்புப் பதிவு

                                               மகாசிவராத்திரி சிறப்புப் பதிவு

✡️மகா சிவராத்திரி நாளில் அன்னதானம் சாப்பிடக்கூடாது என்று கூறுவதேன்?


🌺🌿மகா சிவராத்திரி நாளன்று, ஒரு பக்கம் கோவிலுக்குள்ளே சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போதே, மறுபக்கம் கோவிலுக்கு வெளியேயும், கோவிலின் மண்டபத்திற்குள்ளும், அன்னதானப் பிரியர்கள் பக்தர்களுக்கு அன்னதானத்தை பிரசாதமாக கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இப்படி அன்னதானம் கொடுப்பதால், நாள் முழுக்க விரதமிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் சிவராத்திரி விரதத்தின் நோக்கமே கெட்டுவிடும் என்பதை முதலில் உணர்ந்துகொள்வது அவசியமாகும்.


🌺🌿உண்மையில் சிவராத்திரி விரதம், நமக்கு முக்கியமான இரண்டு விஷயங்களை எடுத்துக் கூறுகின்றன. நம்முடைய அன்றாட தேவையாக நினைப்பது உணவு மற்றும் தூக்கம் என இரண்டையும் தான். இவை இரண்டுக்காகவும் தான், அல்லும் பகலும் உழைத்து சம்பாதிக்கிறோம். ஆனால், அந்த சிவராத்திரி தினத்தில் மட்டுமாவது, உணவு, தூக்கம் இரண்டையும் மறந்து, எம்பெருமான் இறையனாருக்காக நாள் முழுக்க கண் விழித்து விரதம் இருப்பது தான் இந்த நாளின் உண்மையான நோக்கமாகும்.


🌺🌿மகா சிவராத்திரி விரதம் தொடங்கிய நாள் முதல் காலையிலிருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவபெருமானை நினைத்து, அவரின் திருநாமங்களையும், அவரது பஞ்சாட்ஷர மந்திரங்களையும் உச்சரித்துக்கொண்டும், அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று, அங்கு நான்கு ஜாம பூஜைகளிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளை கண்குளிர தரிசித்து வணங்க வேண்டும்.


🌺🌿மகா சிவாராத்திரிக்கு மறுநாள் அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, கோவிலில் சிவபெருமானுக்கு நடைபெறும் தீபாராதனையை கண்டு தரிசித்து முடித்து, அதன் பிறகே விரதத்தை முடிக்க வேண்டும். அப்போது தான் சிவராத்திரி விரதம் இருப்பதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். இதைத்தான் நம்முடைய முன்னோர்களும் செய்து வந்தனர்.


🌺🌿சிவராத்திரி நாளன்று அனைத்து சிவன் கோவில்களிலும், அன்னதானம் கொடுக்கிறேன் என்று அநேகம் பேர், கேசரி, சாம்பார் சாதம், காய்கறி சாதம், தயிர் சாதம் என வரிசை கட்டி நின்று கொடை வள்ளலாக மாறி வாரி வழங்கி வருகின்றனர். அன்னதானம் தான் இருப்பதிலேயே மிக உயரிய தானம் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை எதற்கு எப்போது கொடுப்பது என்ற ஒரு நியதி உண்டு. அப்படி செய்தால் தான், அன்னதானம் கொடுப்பவருக்கும், அதைப் பெறுபவருக்கும் உரிய பலனைக் கொடுக்கும்.


🌺🌿நம்முடைய ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது உணவும் உறக்கமும் தான். இந்த இரண்டையும் கட்டுப்படுத்தினாலே, ஐம்புலன்களும் தானாகவே கட்டுக்குள் வந்து விடும். அப்படி கட்டுப்படும் போது, நம் மனதிற்குள் இறையுணர்வு தானாகவே வந்து விடும். அப்போது நாம் நினைத்த காரியம் இனிதே நிறைவேறும். இதைத் தான் சிவராத்திரி விரதம் நமக்கு எடுத்துரைக்கின்றது.


🌺🌿நம்மைப் படைத்த பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களும் முனிவர்களும், அட அன்னை பராசக்தியே உண்ணாமல் சிவராத்திரி விரதமிருந்து இறைவனை வழிபடும் போது, நாம் ஒரு நாள் உணவை தியாகம் செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது. அதோடு, சிவபெருமான் சதாசர்வ காலமும் தியான நிலையிலேயே அமர்ந்திருப்பவர். ஆரவாரத்தை அறவே வெறுப்பவர். அவருக்கு பிடித்தது ஏகாந்தமான அமைதி தான்.


🌺🌿அதனால் தான் கோவிலுக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க செல்லும் போது, அமைதியாக வந்து தரிசித்து அமைதியாக வெளியேற வேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். எனவே, இனியாவது சிவராத்திரி தினத்தில் அன்னதானம் கொடுப்பதை தவிர்த்து விரதமிருப்பவர்களுக்கு உதவ வேண்டியது அனைவரின் கடமையாகும்.

ஆன்மீக சாதகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்!!!

ஆன்மீகமும் ஆலயங்களும் நமது சனதான தர்மத்தில் பி்ண்ணிபிணைந்தவை.அத்தகைய ஆலயங்கள் மனிதர்களின் அறியாமையாலும் அகங்காராத்தாலும் பாழ்பட்டு பொலிவிழந்துள்ளன.ஆன்மீக அன்பர்கள் இந்த நிலைமாற என்ன செய்யவேண்டும்?ஆன்மீக அன்பர்களே போலீ ஆன்மீகவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு லட்சங்கள் கொடுக்கும் நீங்கள் தங்கள் பகுதியில் உள்ள போதிய பராமரிப்பு இன்றி தீபம் கூட ஏற்ற முடியாத நிலையை உணர்ந்த்து உண்டா? ஆன்மீக,இறை உணர்வளார்களே நீங்கள் இலட்சங்களில் உதவவேண்டாம்,ஆனால் சில பத்துகளில் தீப எண்ணெய் வாங்கி ஆன்மீக ஓளி பரவ உதவ்வேண்டும்.தங்கள் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் விளக்கெறிய உதவுங்கள். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பல சித்தர்கள் மற்றும் பராமரிப்பு இல்லாத ஆலயங்களுக்கு தீபதொண்டர்கள் தன்னார்வ குழு மூலம் கோயில்களுக்கு தீப என்னெய் வழங்கிவருகிறோம். தங்கள் பகுதிகளில் இதுபோல் குழுக்கள் அமைத்தும் தீப எண்ணெய் வழங்குங்கள்


கிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி*

                                              கிரக தோஷங்களை நீக்கும் நவதிருப்பதி*

இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள், தாமிரபரணிக்கு ஒரு விசேஷம் உண்டு. தன் இரு கரைகளிலும் ஏராளமான சிவ, விஷ்ணு தலங்களைக்கொண்டிருக்கும் திருநதி இது. 


கங்கையைப் போல், காவிரியைப்போல் சமயப் பெருமை படைத்த நதியே தாமிரபரணியாகும். இதனை தட்சிண கங்கை என்று சொல்வதும் உண்டு.


தாமிரபரணி கரையோரத்தில் ஒன்பது சிவன்கோயில்கள் உண்டு. அதை “நவ கயிலாயம்“ என்பார்கள். நவகயிலாயத்துக்கு இணையாக ஒன்பது திருப்பதிகள் உண்டு. இந்த வைணவத் திருப்பதிகளை “நவதிருப்பதிகள்“ என்பர். ஒவ்வொரு திருப்பதியை வழிபட ஒரு கிரகதோஷம் நீங்கும் என்று சொல்வார்கள்.


*நவதிருப்பதிகளில் முதலாவது ஸ்ரீவைகுண்டம்* இங்குள்ள மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன், உற்சவர் கள்ளப்பெருமாள், தாயார் முறையே வைகுந்த வல்லி, பூதேவி என்று சொல்லப்படுவார். ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இது சூரியதோஷ நிவர்த்தி தலம்.


*இரண்டாவது வரகுணமங்கை*  வீற்றிருந்த கோலத்தில் விஜயாசனப் பெருமாள் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். வரகுணவல்லி என்பது தாயாரின் பெயர். வரகுணமங்கை தாயார் உபயநாச்சியார். இந்தத் தலம் பரிகார தலமாகும்.


*மூன்றாவது திருப்புளியங்குடி* புஜங்க சயனத்தில் மூலவர் காய்சேன வேந்தன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மலா்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார் இவர் தேவியர். இது புதனுக்குரிய பரிகார தலமாகும்.


*நான்கு, ஐந்தாவது தலங்கள் திருத்தொலைவில்லி மங்கலம்* இதனை “இரட்டைத் திருப்பதி“ என்பார்கள். இரண்டு பெருமாள் கோயில்கள் உண்டு. சீனுவாசன் (தேவபிரான்). அரவிந்தரோசனன் (செந்தாமரைக் கண்ணன்) ஆகிய இருவரும் முறையே நின்ற வீற்றிருந்த கோலங்களில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றனர். இது ராகு-கேது பரிகாரத் தலமாகும்.


*ஆறாவது திருக்குளத்தை எனப்படும் பெருங்குளமாகும்* இங்குள்ள சீனிவாசன் மற்றும் அரவிந்தரோசனன் நின்ற கோலத்திழல் சேவை சாதிக்கிறார்கள். அலமேலுமங்கையார், குழந்தை வல்லி என்பன தாயார் திருநாமங்கள். இது சனி பரிகார தலம்.


*ஏழாவது திருக்கோளூர்*  இங்கு வைத்தமானிதி பெருமாள் கோயிலில் வைத்திநிதி பெருமாள், நிஷேபவித்தன் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் குமுதவல்லி, கோளூர்வல்லி எனப்படுவர். இது செவ்வாய்க்குரியபரிகார தலமாகும்.


*எட்டாவது தென்திருப்பேரை எனப்படும் இத்தலம் திருப்பொறை எனப்படுகிறது* மகரநெடுங்குடைகாதன் மற்றும் நிகரில் முகில்வண்ணன் வீற்றிருந்த கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் முறையே  குழக்காதவல்லி, திருப்பேறை நாச்சியார் எனப்படுவர். இது சுக்கிரன் பரிகார தலமாகும்.


*ஒன்பதாவது திருத்தலம் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார்திருநகரியாகும்* இது நம்மாழ்வார் அவதாரத் தலம். ஆதிநாதன், ஆதிப்பிரான், பொலிந்துநின்றபிரான் என்றெல்லாம் போற்றப்படும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்பன தேவியின் திருநாமங்கள். இது குரு பரிகாரத் தலமாகும்.


இந்த ஒன்பது ஆலயங்களிலிருந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது “நவகருட சேவை“ என்பது விசேஷமாகச் சொல்லப்படும். 


திருநாங்கூர் கருட சேவையைப் போல மிக விசேஷமானது நவகருட சேவையாகும். நவகருட சேவையை தரிசிக்க கிரகதோஷங்கள் அனைத்தும் விலகுதல் உறுதி என்பது அடியவர்கள் அனுபவித்தில் உணர்ந்த நம்பிக்கைகளில் ஒன்றாகும்.

Friday 15 April 2022

* கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!*

 *                              கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!*


*கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!*


*1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது*


*2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம் .அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது.*


*3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்ரீயோபநிஷ்த் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள்.*


*4. அளவிற்து அதிகமாக உண்டால் நோய்வரும் . ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.*


*5. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.*


*6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.*


*7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.*


*8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.*


*9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. .*


*10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.*


*11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.*


*12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.*


*13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது*


*14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.*


*15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது.*


*16. சூரிய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.*


*17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.*


*18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம்.*


*19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.*


*20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.*


*21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.*


*22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.*


*23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;.*


*24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.*


*25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.*


*26. வெள்ளித் தட்டில் இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.*


*27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.*


*28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ;ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.*


*29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.*


*30. அதே போல் முதலில் கீரையோ  வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.*


    *வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை*


*1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது.*


*2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது.*


*3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது.*


*4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. .*


*5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது.*


*6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது.*


*7. கர்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது.*


*8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது.*



*9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும்.*


*10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது.*


*11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது.*


*12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது.*


*13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது.*


*14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.*


*15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது.*

*மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது.*


*இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள்.*


*அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌*


*ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது.*


*முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.*


*இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !!*


*ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது.*


*இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள்*


*நல்ல தகவல்களை அனைவருக்கும் பகிர்வோமே 🙏🙏🙏*

பங்குனி உத்திர மகிமை.. இவ்வளவு சிறப்புகளா…

                               பங்குனி உத்திர மகிமை.. இவ்வளவு சிறப்புகளா…

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.


 பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம்.


 தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.


தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.


பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :


👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.


👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.


👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தை இந்நாளில் பெற்றார்.


👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.


👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.


👉 ராமபிரான் – சீதாதேவி, பரதன் – மாண்டவி, லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருக்னன் – ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.


👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.


👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.


👉 ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.


👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.


👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.


👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.


👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.


👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.


👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.


👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்…!


# தீர்க_சுமங்கலி_பவா என்றல் என்ன? - அறிந்துகொள்ளுங்கள்

 #                 தீர்க_சுமங்கலி_பவா என்றல் என்ன?  -  அறிந்துகொள்ளுங்கள் 

🌼 தர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.


🌼 திருமணத்தில் ஒன்று,


🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,


🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,


🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,


🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.


#இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;


🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. 


🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. 


🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. 


🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. 


🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.


🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். 


🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 


🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜️சூரியனுக்கு ஓர் ஆண்டும்,

⚜️செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜️சந்திரனுக்கு ஒரு மாதமும்,

⚜️புதனுக்கு ஒரு வருடமும்,

⚜️வியாழனுக்கு 12 வருடங்களும்,

⚜️வெள்ளிக்கு ஒரு வருடமும்,

⚜️சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜️ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜️கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 


🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். 


🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். 


🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.


🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். 


🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. 


🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். 


🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? 


🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். 


🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...

⚜️அக்னி,

⚜️சூரியன்,

⚜️சந்திரன்,

⚜️வாயு,

⚜️வருணன்,

⚜️அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,

⚜️அமிர்த கடேஸ்வரர்,

⚜️நவநாயகர்கள்..

சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம். 


🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,

🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,

🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,

🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..

அதிபதிகள் ஆவார்கள். 


🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். 


🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். 


🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 


🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 


🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். 


🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.


🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.


🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் 


🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது


ஆன்மீக களஞ்சியம் அறிவோம்

                                                   ஆன்மீக களஞ்சியம் அறிவோம் 

🔯நான்கு வகை உயிரினங்கள் :*


1. #சுவேதஜம் 🌸🍎🌸


– புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.


2. #உத்பிஜம்🌸🍎🌸


– பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.


3. #அண்டஜம்🌸🍎🌸


– முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.


4. #ஜராயுதம்🌸🍎🌸


– கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊 🕊


*ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :*


1. கர்ணன்  (Karnan)  

2. காளந்தி (Kalandhi)  

3. சுக்ரீவன் (Sukriva)  

4. தத்திய மகன் (Son of Thathiya)  

5. சனி (Sani)  

6. நாதன் (Nathan)  

7. மனு (Manu)

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


*நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :*


1. சனகர் (Sanagar)  

2. சனாதனர் (Sanadhanar)  

3. சனந்தகர்  (Sanandhagar)  

4. சனத்குமாரர் (Sanathkumarar)  

5. வியாக்கிரபாதர்  (Viyakkirabhadhar)  

6. பதஞ்சலி (Padhanjali)  

7. சிவயோக முனிவர் (Shivayoga Munivar)


8. திருமூலர் (Thirumoolar)🌺


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


*அஷ்ட பர்வதங்கள் :*


1. கயிலை (Kailai)  

2. இமயம் (Himalaya)  

3. ஏமகூடம் (Eamakoodam)  

4. கந்தமாதனம் (Kandhamaadhanam)  

5. நீலகிரி (Neelagiri)  

6. நிமிடதம்  (Nimidadham)  

7. மந்தரம் (Mantharam)  

8. விந்தியமலை (Vindhaya Mount)


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


*ஆத்ம குணங்கள் :*


1. கருணை (Mercy)  

2. பொறுமை (Patience)  

3. பேராசையின்மை (without Greed)  

4. பொறாமையின்மை (without Jealousy)  

5. நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)  

6. உலோபத்தன்மையின்மை  (Ulobathanmaiyinmai)  

7. மனமகிழ்வு (Pleasure)


8. தூய்மை (Purity)


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


*எண்வகை மங்கலங்கள் :*


1. கண்ணாடி (Mirror)  

2. கொடி (Flag)  

3. சாமரம் (Samaram)  

4. நிறைகுடம் (Full pot)  

5. விளக்கு (Lamp)  

6. முரசு (Drum)  

7. ராஜசின்னம் (The royal symbol)  

8. இணைக்கயல் (


👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏


*எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்* : 🍎🌸🍎


1. சந்தனம் (Sandal)  

2. கோட்டம்  

3. கஸ்தூரி (Musk)  

4. கற்பூரம் (Camphor)  

5. குங்குமம் (Vermilion)  

6. பச்சிலை  

7. அகில்  

8. விளாமிச்சை வேர் (Rhizome root)


👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏


*ஏழுவகைப் பிறப்புக்கள் :*


1. தேவர் (Deity)  

2. மனிதர் (Human)  

3. விலங்குகள்  (Animals)  

4. பறப்பவை (Birds)  

5. ஊர்பவை  

6. நீர்வாழ்பவை  

7. தாவரம் (Plants)


🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌


*ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:* ☔️☔️☔️


1. பூமி (Earth)  

2. புவர்லோகம்  

3. தபோலோகம்  

4. சத்யலோகம்  

5. ஜனோலோகம்  

6. மஹர்லோகம்  

7. சுவர்க்கலோகம்


💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃


*ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் :*


1.அதலம்  

2.கிதலம்  

3.சுதலம்  

4. இரசாதலம்  

5. தவாதலம்  

6. மகாதலம்  

7.பாதாலம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


*குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :*


1.சங்கநிதி  

2.பதுமநிதி  

3.கற்பநிதி  

4.கச்சபநிதி  

5. நந்தநிதி  

6. நீலநிதி  

7. மஹாநிதி  

8. மஹாபதுமநிதி  

9. முகுந்த நிதி


🌈 🌈 🌈 🌈 🌈 🌈 🌈 🌈 🌈 🌈 🌈 🌈


*அஷ்ட ஐஸ்வர்யங்கள் :*


1. தனம்  

2. தான்யம்  

3. பசு  

4. அரசு  

5. புத்திரர்  

6. தைரியம்  

7. வாகனம்  

8. சுற்றம்


🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸


*எண்வகை போகங்கள் :*


1. அணிகலன்  

2. தாம்பூலம்  

3. ஆடை  

4. பெண்  

5. பரிமளம்  

6. சங்கீதம்  

7. பூப்படுக்கை  

8. போஜனம் (உணவு)


❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️


*நவ நாகங்கள் :*


1. ஆதிசேஷன்  

2. கார்க்கோடகன்  

3.அனந்தன்  

4. குளிகன்  

5. தஷன்  

6. சங்கபாலன்  

7. பதுமன்  

8. மகாபதுமன்  

9. வாசுகி


🍎  🍎  🍎  🍎  🍎  🍎  🍎 🍎  🍎  🍎  🍎


*நன்மை தரக்கூடிய தச தானங்கள் :*


1. நெல்  

2. எள்  

3. உப்பு  

4. தீபம்  

5. மணி  

6. வெள்ளி  

7. வஸ்திரம்  

8.சந்தனக்கட்டை  

9. தங்கம்  

10. நீர்ப்பாத்திரம்🙏🙏🙏


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🕊


 🏵️நமது சமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .


🏵️ கற்று தெளிவதோடு நின்றுவிடாமல் கற்ற தை, பெற்றதை, தெரிந்ததை நமது குழந்தைகளுக்கு. கற்பிப்போம். இதன் மூலம் நமது தேசம், தெய்வம், த‌ர்மம் காக்கப்படும்..

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


*🔯சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*


அரியதோர் ஆன்மீக சார்ந்த

                                                    அரியதோர் ஆன்மீக சார்ந்த 

1. பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)

     தானியங்கள் வைத்தால் = 5 % (-) 🍎


2. நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)🍎


3. மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)

🍎


4. குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)🍎


5. குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)🍎


6. யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)🍎


7. பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)

🍎


8. ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)🍎


9. தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-) 🍎


10. சகோதர சகோதரிகள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)🍎


11. கர்பஸ்திரிகளுக்கு = 78% (-)🍎


12. ஒரு வேளை உணவுக்கே வழி இல்தர்வர்கும் = 70% (-)🍎


13. கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)🍎


14. அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)🍎


15. நோயளிகளுக்கு = 93% (-)🍎


16. மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)🍎


17. திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புன்னிய காரியங்களுக்கு உதவுதல். 🍎


இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும். 


சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-


💐  💐  💐  💐  💐  💐  💐  💐  💐  💐  💐


1. கோயில் மயில்களுக்கு 🌺


2. காகத்திற்கு 🌺


3. கோயில் சேவல்களுக்கு 🌺


4. கோயில் யானைகளுக்கு 🌺


5. கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு 


6. கோயில் பூசாரி 🌺


7. பிராமனர்களுக்கு உணவு 🌺


8. விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு 🌺


9. கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல் 


10. அன்னதானத்திற்கு உதவுதல் 🌺


11. கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல் 🌺


12. கோயில் விளக்கிற்கு எண்ணை கொடுத்தல்🌺


13. கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு🌺


14. இறைவனுக்கு பூ மாலை 🌺


15. முன்னோர்கள் வழிபாடு🌺


16. மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி


17. ஏழை மாணவர்கள் படிக்க 


18. 


தெய்வங்களை பற்றி அறிதல் புரானங்கள் அறிதல் 

மற்றும் கோயில் கும்பாபிசகத்திற்கு உதவுதல் அல்லது விழாவிற்கு சென்று இறையை உணர்தல் போன்ற எந்த ஒரு விசயத்தை செய்தாலும் 99% கர்மாவை கழிக்கலாம். 🌺


இறைசக்தியால் இயங்கும் நம் மூளையை போதை வஸ்துக்களாலும், அதீத கோப படுத்தினாலும், துரோகம், கொலை, கொள்ள, அநீதி, ஏமாற்றுதல், ஏழை பாழைகளின் சொத்தை தமதாக்குதல், பழிக்கு பழி, பிறர் மனைவிகளை தவறாக நினைத்தாலோ, பெண் குழந்தைகளுக்கு துன்பம் விளைத்தாலோ, கர்பஸ்திரிகளுக்கு துன்பம் விளைவித்தாலோ, இறைச்சி போன்ற தவறான உணவு பழக்க வழக்கங்காலோ நமது மனம் எனும் மூளைக்கு அதீக துன்பம் விளைவித்தால் அது 6 மடங்கு கர்மாக்களை அனுபவித்தே தீர வேணும் இதற்கு கர்மா கழித்தல் இல்லை. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் நீங்கள் முன் ஜென்மத்தில் செய்த கர்மாவை கழிக்கவே. கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை. அனுதினமும் இறைவனை நினைத்து தர்மகாரியங்களில் அவ்வபோது செய்து கிடைத்த நேரத்தில் இறைவனின் நாமங்கள் நினைத்து நமது முன்னோர்கள் சொன்ன வழியை பின் பற்றி உலகமே ஆனந்தமாக எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ்தலே மேன்மை.


🙏   🙏   🙏  🙏   🙏   🙏   🙏   🙏   🙏   🙏


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️🕉️Sandhya Vandhanam🙏

#அறிவோமா ""ஏழு""... 🙏🙏🙏


*ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....*

____

*ரிஷிகள் ஏழு...*


அகத்தியர், 

காசியபர், 

அத்திரி, 

பரத்வாஜர், 

வியாசர், 

கவுதமர், 

வசிஷ்டர்.

____

*கன்னியர்கள் ஏழு...*


பிராம்மி, 

மகேஸ்வரி, 

கௌமாரி, 

வைஷ்ணவி, 

வராகி, 

இந்திராணி, 

சாமுண்டி 

____

*சஞ்சீவிகள் ஏழு...*


அனுமன், 

விபீஷணர், 

மகாபலி சக்கரவர்த்தி,

 மார்க்கண்டேயர்,

 வியாசர், 

பரசுராமர்,

 அசுவத்தாமர்.

____

*முக்கிய தலங்கள் ஏழு....*


வாரணாசி,

அயோத்தி,

காஞ்சிபுரம்,

மதுரா,

துவாரகை,

உஜ்ஜைன்,

ஹரித்வார்.

____

*நதிகள் ஏழு...*


கங்கை, 

யமுனை, 

கோதாவரி, 

சரஸ்வதி, 

நர்மதா, 

சிந்து, 

காவிரி.

____

*வானவில் நிறங்கள் ஏழு...*


ஊதா, 

கருநீலம், 

நீலம், 

பச்சை, 

மஞ்சள், 

ஆரஞ்சு, 

சிவப்பு.  

____

*நாட்கள் ஏழு...*


திங்கள், 

செவ்வாய், 

புதன், 

வியாழன், 

வெள்ளி, 

சனி, 

ஞாயிறு 

____

*கிரகங்கள் ஏழு...*


சூரியன், 

சந்திரன், 

செவ்வாய், 

புதன், 

குரு, 

சுக்கிரன், 

சனி.

____

*மலைகள் ஏழு...*


இமயம்/கயிலை, 

மந்த்ரம், 

விந்தியம், 

நிடதம், 

ஹேமகூடம், 

நீலம், 

கந்தமாதனம்.

____

*கடல்கள் ஏழு..*

Sunday 10 April 2022

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?

             மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.


ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.


மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.


பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.


அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.


நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.


ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.


இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.


ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.


மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.


ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. 


பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.


உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். 


விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.


நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.


இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.


நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.


மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.


உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.


மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.


இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.


ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.


ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.


பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.


கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.


குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.


குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.


சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்...

சில ஆன்மிக தலங்கள்*

                                                                       சில ஆன்மிக   தலங்கள்*


1. திருவோத்தூர் --- ஆதிகேசவப் பெருமாள்

2. கச்சி ஏகம்பம் ---- நிலாத்துண்டப் பெருமாள்

3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்

4. சிதம்பரம் --- கோவிந்தராஜப் பெருமாள்

5. திருநணா --- ஆதிகேசவப் பெருமாள்

6. சிக்கல் --- கோலவாமனப் பெருமாள்

7. திருநாவலூர் --- வரதராஜப் பெருமாள்

8. திருநெல்வேலி --- நெல்லை கோவிந்தர்

9. திருப்பழனம் --- கோவிந்தர்

10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்

11. திருப்பத்தூர் --- அரங்கநாதர்

12. திருவக்கரை --- அரங்கநாதர்


*ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்*


உட்கோயில் கோயில்


1. திருவாரூர் அரநெறி ---- திருவாரூர்

2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்

3. மீயச்சூர் இளங்கோயில் ---- மீயச்சூர்


*காயாரோகணத் தலங்கள்*


1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)

2. சூடந்தைக் காரோணம்

3. நாகைக் காரோணம்


*மயானத் தலங்கள்*


1. கச்சி மயானம்

2. கடவூர் மயானம்

3. நாலூர் மயானம்


*கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்*


1. திருக்காளத்தி

2. திருச்சிராப்பள்ளி

3. திரிகோணமலை (இலங்கை)


*பூலோக கைலாசம்*


1. திருவையாறு

2. திருக்குற்றாலம்

3. சிதம்பரம்


*அழகிற் சிறந்த கோயில்கள்*


1. தேரழகு --- திருவாரூர்

2. வீதி அழகு --- திருஇடை மருதூர்

3. மதிலழகு --- திருவிரிஞ்சை

4. விளக்கழகு --- வேதாரண்யம்

5. கோபுரமழகு -- திருக்குடந்தை

6. கோயிலழகு – காஞ்சி


*பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு*


1. திருக்குற்றாலம் -- திருவனந்தல் சிறப்பு

2. இராமேச்சுரம் --- காலை பூசை சிறப்பு

3. திருஆனைக்கா --- மத்தியான பூசை சிறப்பு

4. திரு ஆரூர் --- சாயுங்கால பூசை சிறப்பு

5. மதுரை --- இராக்கால பூசை சிறப்பு

6. சிதம்பரம் --- அர்த்தசாம பூசை சிறப்பு


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்


குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.


நடராசர் அபிஷேக நாட்கள் 6


மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி

புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை. ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.


ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்


மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.


ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம்


திருநல்லூர்த் திருத்தலம்.


அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்


“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.


திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.


திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.


*சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு*


1. மயூர தாண்டவம் - மயிலாடுதுரை

2. அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி

3. கடிசம தாண்டவம்- திருவக்கரை

4. சதுர தாண்டவம்- திருநல்நூர்

5. சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்

6. லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி


அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.


சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.


*பெரிய கோபுரத் தலங்கள்*


திருவண்ணாமலை

மதுரை

தில்லை

திருமுதுகுன்றம்

திருச்செந்தூர்

இராமேஸ்வரம்

குடந்தை

காளையார் கோவில்

தென்காசி


*மண்டபங்கள் சிறப்பு*


வேலூர் - கல்யாண மண்டபம்

கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்

பேரூர் - கனக சபை

தாரமங்கலம் – குதிரை மண்டபம்

புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.


*யானை ஏறாத மாடக் கோயில்கள் சில*


1. திருவானைக்காவல்

2. ஆக்கூர்

3. திருத்தேவூர்

4. திருக்கீழ்வேளூர்

5. சிக்கல்

6. வலிவலம்

7. அம்பர்மகாளம்

8. தண்டலை நீள் நெறி

9. திருநறையூர்

10. பழையாரை

11. திருமருகல்

12. வைகல்மாடக் கோயில்

13. நன்னிலம்(மதுவனம்)

14. குடவாசல்

15. புள்ளமங்கை

16. திருத்தலைச்சங்காடு

17. நல்லூர்

18. திருநாலூர்

19. திருச்சாய்க்காடு

20. திருவக்கரை

21. திருநாங்கூர்

22. திருப்ராய்த்துறை

23. ஆவுர்

24. திருவெள்ளாறை

25. திருவழுந்தூர்

26. நாகப்பட்டினம்

27. பெருவேளூர்

28. கைச்சின்னம்

29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….


*பெரிய லிங்கம்*


கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.


திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.


*பெரிய நந்தி*


தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.


*புகழ்பெற்ற கோயில்கள்*

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44

2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52

3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13

4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 02

5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111

6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள் ---- 28

7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள் ----- 25


மொத்தம் 275

இவற்றுள்

மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25


சிவஸ்தலத் தொகுதிகள்


வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்


1. *அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்*


1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது

2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது

3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது

4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது

5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து

6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது

7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது

8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது


2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*


1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்

2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்

3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்

4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்

5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்

6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்

7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்

8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்

9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்

10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்

11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்

12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்


*முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்*


1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது

2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது

3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது

4. காசி ---- இறக்க முக்தி தருவது


*பஞ்சபூத ஸ்தலங்கள்*


1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)

2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)

3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)

4. திருக்காளத்தி ----- வாயு (வளி)

5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)


*நடராஜருக்கான பஞ்ச சபைகள்*


1. திருவாலங்காடு --- இரத்தின சபை

2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)

3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)

4, திருநெல்வேலி --- தாமிர சபை

5, திருக்குற்றாலம் --- சித்திர சபை


*(வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*


1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)

2. திருப்பாதிரிப்புலியூர்

3. ஓமாம்புலியூர்

4. எருக்கத்தம்புலியூர்

5. பெரும்புலியூர்


*சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்*


முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.


இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.


1. திருஆரூர் -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்

2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்

3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்

4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்

5. திருக்கோளிலி -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்

6. திருவாய்மூர் ---- நீலவிடங்கர் --- கமல நடனம்

7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத


*சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்*


1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- ஆனந்த தாண்டவம்

2. திரு ஆரூர் ---- அசபா தாண்டவம்

3. மதுரை ---- ஞானசுந்தர தாண்டவம்

4. புக்கொளியூர் ----. ஊர்த்துவ தாண்டவம்

5. திருமுருகன் பூண்டி ---- பிரம தாண்டவம்


*சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்*


1. கச்சி ஏகம்பம்

2. திருக்காளத்திங

3. கோகர்ணம்

4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)

5. திருவைகாவூர்


*காசிக்கு ஈடான ஸ்தலங்கள்*


1. திருவெண்காடு

2. திருவையாறு

3. மயிலாடுதுறை

4. திருவிடை மருதூர்

5. திருச்சாய்க்காடு

6. திருவாஞ்சியம்


*நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்*


1. நந்தி சங்கம தலம் --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)

2. நந்தி விலகியிருந்த தலங்கள் ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).

3. நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்


பாக்கம்

4. நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு

5. நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி

6. திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு

7. திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக


*சப்த ஸ்தான (ஏழூர் விழா) தலங்கள்*


1. திருவையாறு

2. திருப்பழனம்

3. திருச்சோற்றுத்துறை

4. திருவேதிகுடி

5. திருக்கண்டியூர்

6. திருப்பூந்துருத்தி

7. திருநெய்த்தானம்

திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.


*திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்*


Saturday 9 April 2022

திருக்குறள்

https://youtu.be/g0rU14bVZMY
                                                                  திருக்குறள்

👁‍🗨 திருக்குறள் முதன் முதலில் அச்சிடப் பெற்ற ஆண்டு – 1812 


👁‍🗨  திருக்குறளின் முதல் பெயர் – முப்பால். 


👁‍🗨 திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133 


👁‍🗨 திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 


👁‍🗨 திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700 


👁‍🗨 திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250 


👁‍🗨 திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330 


👁‍🗨 திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000 


👁‍🗨 திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 


👁‍🗨 திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி 


👁‍🗨 திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ப். 


👁‍🗨 திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல். 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில். 


👁‍🗨 திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி. 


👁‍🗨 திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள். 


👁‍🗨 திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். 


👁‍🗨 திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர். 


👁‍🗨 திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப். 


👁‍🗨 திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர். 


👁‍🗨 திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 


👁‍🗨 “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. 


👁‍🗨 “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 


👁‍🗨 திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது 


👁‍🗨 திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. 


👁‍🗨 திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். 


👁‍🗨 திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது*

திருக்குறள் அதிகாரம் அறத்துப்பால் திருக்குறள் அதிகாரம்                                              1 – கடவுள் வாழ்த்து திருக்குறள் அதிகாரம்                                                                      2 – வான்சிறப்பு திருக்குறள் அதிகாரம்                                                                             3 – நீத்தார் பெருமை திருக்குறள் அதிகாரம்                                                                      4 – அறன் வலியுறுத்தல் திருக்குறள் அதிகாரம்                                                                5 – இல்வாழ்க்கை திருக்குறள் அதிகாரம்                                                                         6 – வாழ்க்கைத் துணைநலம் திருக்குறள் அதிகாரம்                                                         7 – மக்கட்பேறு திருக்குறள் அதிகாரம்                                                                              8 – அன்புடைமை திருக்குறள் அதிகாரம்                                                                             9 – விருந்தோம்பல் திருக்குறள் அதிகாரம்                                                                         10 – இனியவை கூறல் திருக்குறள் அதிகாரம்                                                                  11 – செய்ந்நன்றியறிதல் திருக்குறள் அதிகாரம்                                                              12 – நடுவு நிலைமை திருக்குறள் அதிகாரம்                                                                      13 – அடக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம்                                                                 14 – ஒழுக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம்                                                                15 – பிறனில் விழையாமை திருக்குறள் அதிகாரம்                                                             16 – பொறையுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                    17 – அழுக்காறாமை திருக்குறள் அதிகாரம்                                                                  18 – வெஃகாமை திருக்குறள் அதிகாரம்                                                                            19 – புறங்கூறாமை திருக்குறள் அதிகாரம்                                                                         20 – பயனில சொல்லாமை திருக்குறள் அதிகாரம்                                                         21 – தீவினையச்சம் திருக்குறள் அதிகாரம்                                                                    22 – ஒப்புரவறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                       23 – ஈ.கை திருக்குறள் அதிகாரம்                                                                                 24 – புகழ் திருக்குறள் அதிகாரம்                                                                                   25 – அருளுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                   26 – புலால் மறுத்தல் திருக்குறள் அதிகாரம்                                                                 27 – தவம் திருக்குறள் அதிகாரம்                                                                                  28 – கூடா ஒழுக்கம் திருக்குறள் அதிகாரம்                                                                     29 – கள்ளாமை திருக்குறள் அதிகாரம்                                                                          30 – வாய்மை திருக்குறள் அதிகாரம்                                                                              31 – வெகுளாமை திருக்குறள் அதிகாரம்                                                                         32 – இன்னா செய்யாமை திருக்குறள் அதிகாரம்                                                             33 – கொல்லாமை திருக்குறள் அதிகாரம்                                                                      34 – நிலையாமை திருக்குறள் அதிகாரம்                                                                        35 – துறவு திருக்குறள் அதிகாரம்                                                                                  36 – மெய்யுணர்தல் திருக்குறள் அதிகாரம்                                                                      37 – அவா அறுத்தல் திருக்குறள் அதிகாரம்                                                                     38 – ஊழ்திருக்குறள் அதிகாரம்                                                                                      39 – இறைமாட்சி திருக்குறள் அதிகாரம்                                                                         40 – கல்வி திருக்குறள் அதிகாரம்                                                                                 41 – கல்லாமை திருக்குறள் அதிகாரம்                                                                           42 – கேள்வி திருக்குறள் அதிகாரம்                                                                             43  அறிவுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                    44- குற்றங்கடிதல் திருக்குறள் அதிகாரம்                                                                       45 – பெரியாரைத் துணைக்கோடல் திருக்குறள் அதிகாரம்                                              46 – சிற்றினம் சேராமை திருக்குறள் அதிகாரம்                                                               47 – தெரிந்து செயல்வகை திருக்குறள் அதிகாரம்                                                          48 – வலியறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                          49 – காலமறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                          50 – இடனறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                           51 – தெரிந்து தெளிதல் திருக்குறள் அதிகாரம்                                                                52 – தெரிந்து வினையாடல் திருக்குறள் அதிகாரம்                                                           53 – சுற்றந் தழால் திருக்குறள் அதிகாரம்                                                                       54 – பொச்சாவாமை திருக்குறள் அதிகாரம்                                                                    55 – செங்கோன்மை திருக்குறள் அதிகாரம்                                                                     56 – கொடுங்கோன்மை திருக்குறள் அதிகாரம்                                                                57 – வெருவந்த செய்யாமை திருக்குறள் அதிகாரம்                                                         58 – கண்ணோட்டம் திருக்குறள் அதிகாரம்                                                                    59 – ஒற்றாடல் திருக்குறள் அதிகாரம்                                                                            60 – ஊக்கம் உடைமை திருக்குறள் அதிகாரம்                                                                  61 – மடி இன்மை திருக்குறள் அதிகாரம்                                                                         62 – ஆள்வினை உடைமை திருக்குறள் அதிகாரம்                                                          63 – இடுக்கண் அழியாமை திருக்குறள் அதிகாரம்                                                             64 – அமைச்சு திருக்குறள் அதிகாரம்                                                                              65 – சொல்வன்மை திருக்குறள் அதிகாரம்                                                                      66- வினைத் தூய்மை திருக்குறள் அதிகாரம்                                                                    67 – வினைத்திட்பம் திருக்குறள் அதிகாரம்                                                                      68 – வினை செயல்வகை திருக்குறள் அதிகாரம்                                                             69 – தூது திருக்குறள் அதிகாரம்                                                                                    70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் திருக்குறள் அதிகாரம்                                                     71- குறிப்பறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                          72 – அவை அறிதல் திருக்குறள் அதிகாரம்                                                                      73 – அவை அஞ்சாமை திருக்குறள் அதிகாரம்                                                                 74 – நாடு திருக்குறள் அதிகாரம்                                                                                     75 – அரண்் திருக்குறள் அதிகாரம்                                                                              76- பொருள் செயல்வகை திருக்குறள் அதிகாரம்                                                               77 – படை மாட்சி திருக்குறள் அதிகாரம்                                                                          78 – படைச் செருக்கு திருக்குறள் அதிகாரம்                                                                    79 – நட்பு திருக்குறள் அதிகாரம்                                                                                      80 – நட்பாராய்தல் திருக்குறள் அதிகாரம்                                                                        81- பழைமை திருக்குறள் அதிகாரம்                                                                               82 – தீ நட்பு திருக்குறள் அதிகாரம்                                                                                 83 – கூடா நட்பு திருக்குறள் அதிகாரம்                                                                           84 – பேதைமை திருக்குறள் அதிகாரம்                                                                             85 – புல்லறிவாண்மை திருக்குறள் அதிகாரம்                                                               86- இகல் திருக்குறள் அதிகாரம்                                                                                      87 – பகை மாட்சி திருக்குறள் அதிகாரம்                                                                           88 – பகைத்திறம் தெரிதல் திருக்குறள் அதிகாரம்                                                            89 – உட்பகை திருக்குறள் அதிகாரம்                                                                                 90 – பெரியாரைப் பிழையாமை திருக்குறள் அதிகாரம்                                                      91- பெண்வழிச் சேறல் திருக்குறள் அதிகாரம்                                                                   92 – வரைவின் மகளிர் திருக்குறள் அதிகாரம்                                                                93 – கள்ளுண்ணாமை திருக்குறள் அதிகாரம்                                                                  94 – சூது திருக்குறள் அதிகாரம்                                                                                       95 – மருந்து திருக்குறள் அதிகாரம்                                                                               96- குடிமை திருக்குறள் அதிகாரம்                                                                                 97 – மானம் திருக்குறள் அதிகாரம்                                                                                 98 – பெருமை திருக்குறள் அதிகாரம்                                                                             99 – சான்றாண்மை திருக்குறள் அதிகாரம்                                                                    100 – பண்புடைமை திருக்குறள் அதிகாரம்                                                                   101- நன்றியில் செல்வம் திருக்குறள் அதிகாரம்                                                           102 – நாணுடைமை திருக்குறள் அதிகாரம்                                                                  103 – குடிசெயல் வகை திருக்குறள் அதிகாரம்                                                                   104 – உழவு திருக்குறள் அதிகாரம்                                                                                105 – நல்குரவு திருக்குறள் அதிகாரம்                                                                          106- இரவு திருக்குறள் அதிகாரம்                                                                                      107 – இரவச்சம் திருக்குறள் அதிகாரம்                                                                           108 – கயமை

தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது திருக்குறள். இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் உள்ளன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் வருகின்றன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் கிளிக் செய்து அந்த அதிகாரத்திற்கான குறளை படிக்கலாம்.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...