Friday 31 May 2019

திரு கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

அதிலிருந்து சில வரிகள்.(வழிகள்)
தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..
கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...
மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..
மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..
ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்
இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..
"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..





ஆகம குறிப்புகள்15

Image may contain: 1 person, night

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


ஆகம குறிப்புகள்15 ;
1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலைமூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.
2. மாலை6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.(கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.)
3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.
முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.
4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.
5. கற்பூர ஹாரத்தி :
(சூடம்காண்பித்தல் பற்றி)
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.
தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.
6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்
• விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
• விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
• பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இ்லை ஆகும்
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.
9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.
10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்...
• சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
• வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
• ஆனி – தேன்
• ஆடி – வெண்ணெய்
• ஆவணி – தயிர்
• புரட்டாசி – சர்க்கரை
• ஐப்பசி – உணவு, ஆடை
• கார்த்திகை – பால், விளக்கு
• மார்கழி – பொங்கல்
• தை – தயிர்
• மாசி – நெய்
• பங்குனி – தேங்காய்.
11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.
12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.
13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )
14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

Thursday 30 May 2019

வாழ்க்கையை மாற்றுமா உப்பு மந்திரம் ?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

வாழ்க்கையை மாற்றுமா உப்பு மந்திரம் ?
******************************************
‘‘18 வருஷம் முன்னாடி எங்க அம்மா என்னை எங்க சொந்தக்காரங்க வீட்டுலவிட்டுட்டு போயிட்டாங்க. தினமும் அவங்களை நினைச்சு அழுவேன். இங்கே வந்த பிறகு உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க. அம்மா என்னைப் பாக்க வரணும்னு நினைச்சு அஞ்சு நாள் உப்பு மந்திரம் செஞ்சேன். இவ்வளவு நாள் என்னைப் பாக்க வராத அம்மா ஆறாவது நாள் வந்து நின்னாங்க. இப்போ நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு...
‘‘எனக்கு ரெண்டு குழந்தைங்க... கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தோம். நிறைய மனக்கஷ்டம். நான் எதைச் செஞ்சாலும் மாமியார் குத்தம் சொல்வாங்க. நானும் பதிலுக்குப் பதில் பேசுவேன். என் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வந்ததும் அவர்கிட்ட சொல்லி சண்டை போடுவேன். ஒரு கட்டத்துல அந்தக் குடும்பத்துல வாழவே முடியாதுங்கிற நிலை... கிளம்பி வந்துட்டேன். உப்பு மந்திரம் பத்தி சொன்னாங்க... பத்து நாள் தொடர்ந்து செஞ்சேன். பதினோராவது நாள் காலையில என் வீட்டுக்காரர் வந்து நின்னார். அடுத்த சில நாட்கள்ல என் மாமியார் போன் பண்ணி பேசினாங்க. என் மேல உள்ள தவறுகளையும் நான் புரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாங்க சந்தோஷமா இருக்கோம்...
‘‘எங்க அக்காவுக்கு ஒரு விபத்து... ரொம்ப சீரியஸா இருந்தாங்க. தினமும் உப்புமந்திரம் செய்வேன். அவங்க கணவர், பிள்ளைகளுக்கும் உப்பு மந்திரம் சொல்லிக் கொடுத்தேன். இப்போ அக்கா எழுந்து நடமாடத் தொடங்கிட்டாங்க...‘‘எங்க பக்கத்து வீட்டுக்காரர் ஒரு ஆக்சிடெண்டுல சிக்கி கோமாவில இருந்தார். அவங்க வீட்டுல எல்லாருக்கும் உப்பு மந்திரம் சொல்லிக் கொடுத்தேன். நானும் செஞ்சேன்.ஒரு மாசத்துல அவர் குணமாகிட்டார்!
கண்ணீர் ததும்ப கோவை அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிக்கும் பெண்கள் சொல்கிற கதைகளைக் கேட்க மிரட்சியாக இருக்கிறது. இங்கு படிக்கும் 600 பெண்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது இந்த உப்பு மந்திரம். மருத்துவ உலகத்தில் எவ்வளவோ நவீன ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்குச் சவால் விடுவது போல உப்பு மந்திரத்தின் மகத்துவங்களை அடுக்குகிறார்கள் இந்தப் பெண்கள்!
“பெண்கள் சுய நம்பிக்கையோடு வாழவும், பொருளாதார ரீதியா தனித்தன்மை பெறவும், அவங்க வாழ்க்கையில மறுமலர்ச்சியை உருவாக்கவும் 1984ல மத்திய அரசின் மனிதவளத்துறை உதவியோட தொடங்கப்பட்ட கல்வி நிலையம் இது. இதுவரை பல ஆயிரக்கணக்கான பெண் தொழில்முனைவோரை உருவாக்கி இருக்கோம். இன்னைக்கு பெண்களுக்கு இந்த சமூகத்தில ஏகப்பட்ட சவால்கள் இருக்கு. வெளியில் சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு மறுகிக்கிட்டு வாழுறாங்க. ஒரு கட்டத்துல மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்பட்டு வாழ்க்கை மேல இருக்கிற நம்பிக்கை குறைஞ்சு முடங்கிப் போறாங்க.
எப்பவும் பெண்கள் அவங்களுக்காக மட்டும் வாழுறதில்லை. அவங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கு. அந்த குடும்பத்துக்கு பெண்கள்தான் வழிகாட்டியாவும் பொறுப்பாவும் இருக்காங்க. பெண்களுக்குக் கிடைக்கிற ஒரு நல்ல விஷயம் அந்த பெண்ணை மட்டுமில்லாம ஒரு குடும்பத்தையும் சமூகத்தையுமே மாத்தும். எங்கக் கல்வி நிறுவனம் வெறும் தொழில்பயிற்சியை மட்டும் வழங்காம அவங்களோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாத்துறதை இலக்கா வச்சு இயங்குது. மாசம் ஒருமுறை வாழ்வியல் கல்வி வகுப்பு நடத்தறோம். உளவியல் நிபுணர்கள், மனநல நிபுணர்கள், இயற்கை மருத்துவர்கள்னு பலர் அதுல கலந்துக்கிட்டு பயிற்சி கொடுப்பாங்க. அப்படித் தரப்பட்ட பல பயிற்சிகள் நம்பவே முடியாத விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தியிருக்கு.
அதுல ஒண்ணுதான் உப்பு மந்திரம். உப்பு மந்திரம்னா உடனே ஏதோ மூடநம்பிக்கை சமாசாரம்னு முடிவுக்கு வந்திடாதீங்க... முழுக்க முழுக்க அறிவியல்... என்கிறார் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பாலசுப்பிரமணியன்.“அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு நியூஸ்பேப்பர் வச்சுக்கணும். மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்.
அதேபோல பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற நியூஸ் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்தருகிறார் ஷீலா.
இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்?
இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க.
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora science சொல்வாங்க. நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்.
எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.
“உப்பு மந்திரம் மட்டுமில்ல சார்... எங்க கைவசம் வாழ்க்கைக்கான ஃபார்மூலாக்கள் ஏகப்பட்டது இருக்கு. எல்லாமே நாங்க பரிசீலனை பண்ணி பலனை அனுபவிச்சுப் பாத்ததுதான் வாங்க சொல்றோம்... - உற்சாகம் பொங்க சொல்கிறார்கள் மக்கள் கல்வி நிறுவன மாணவிகள்.
நான் அவள் இல்லை!
குடும்பத்தில குற்றம் சொல்றத்துக்குன்னே சில பேர் இருப்பாங்க. அவங்க தான் பிரச்னைக்கான தொடக்கம். அவங்களை ஜெயிச்சுட்டா நாமளும் நிம்மதியா இருக்கலாம். குடும்பமும் நிம்மதியா இருக்கும். அதுக்குத் தான் இந்த நான் அவன் இல்லை ஃபார்மூலா. உங்களைப் பத்தி நெகட்டிவா பேசினாலோ, குற்றம் சொன்னாலோ அதை காது வழியா மனசுக்குள்ள வாங்கி வச்சுக்கிட்டு, இப்படிச் சொல்லிட்டாங்களேன்னு உழட்டிக்கிட்டே இருக்கக்கூடாது. அப்படிச் சொல்லும்போது நான் அவள் இல்லைன்னு உதறிட்டுப் போய்க்கிட்டே இருக்கணும். யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராது... என்கிறார் ஹேமா.
குடு+இன்பம்
“எல்லாருக்குமே வாழ்க்கையில எதிர்பார்ப்பு இருக்கு. மாமியார் அதைச் செய்யணும், நாத்தனார் இதைச் செய்யணும், கணவன் நாம கேட்காமலே ஒரு பொருளை வாங்கித் தரணும்னு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புதான் பிரச்னைகளுக்குத் தொடக்கமா இருக்கு. ஒருத்தர்கிட்ட நாம என்ன எதிர்பார்க்கிறோமோ அதையே நாம மத்தவங்களுக்குக் கொடுக்கணும். மாமியார் தினமும் என்னை என்னம்மா நல்லாயிருக்கியான்னு கேட்கணும்னு நான் எதிர்பார்த்தா, முதல்ல அவங்களை நான் நல்லாயிருக்கீங்களா அத்தைன்னு கேட்கணும். கொடுக்கிறதுலதான் இன்பம் இருக்கு. நல்லதைக் கொடுத்தா நல்லது கிடைக்கும். கெட்டதைக் கொடுத்தா கெட்டது கிடைக்கும். இந்த ஃபார்மூலா இங்கே பலபேர் குடும்பத்தை மாத்தியிருக்கு... - சிரிக்கிறார் ஸ்மித்தா.
Act Fact
‘‘உங்களை மாதிரி நல்ல மாமியாரை நான் பாத்ததேயில்லை. இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுக்கு நிறைய புண்ணியம் பண்ணியிருக்கணும்... எங்க அம்மாவைப் போலவே நீங்களும் என்னைப் பாத்துக்கிறீங்க... - இப்படி சொல்லிப் பாருங்க... மாமியார் சரண்டர்! இது எல்லாருக்குமே பொருந்தும். கணவர்கிட்ட, ‘உங்களை மாதிரி நல்ல கணவர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்’னு சொல்லுங்க. ‘என் நாத்தனார் என்னை அவங்க சகோதரி மாதிரி பாத்துக்குறாங்க’ன்னு அவங்க காதுபட மத்தவங்கக்கிட்ட சொல்லுங்க. அதாங்க... ஆக்ட் பண்ணுங்க. அதுவே ஃபேக்டா மாறிடும். Act will be Fact. எல்லாமே உண்மையாகிட்டா வாழ்க்கை ஆனந்தம்தான்... என்கிறார் மேரி.
தெனாலி ஃபார்முலா
‘‘இந்த ஃபார்முலாவுக்கு முன்னோட்டமா ஒரு கதை இருக்கு. ஒரு பையன் நிறைய இனிப்பு சாப்பிடுவானாம். அவங்க அம்மாவும் சொல்லி சொல்லிப் பாத்திருக்காங்க. பையன் கேக்கவேயில்லை. ‘இப்படியே போனா 16 வயசிலயே நீரிழிவு வந்திருமே’ன்னு அம்மா பயந்துட்டாங்க. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாங்க. பையன் திருந்தவேயில்லை. பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரு... இங்கே தெனாலிராமன்னு ஒரு அமைச்சர் இருக்கார். அவர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனா உங்க பையன் திருந்திடுவான்... உடனே அந்த அம்மா தெனாலிராமன்கிட்ட கூட்டிக்கிட்டுப் போனாங்க. பிரச்னை எல்லாத்தையும் கேட்ட தெனாலிராமன், ஒரு வாரம் கழிச்சு அழைச்சுட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார்.
திரும்பவும் ஒருவாரம் கழிச்சுப் போனாங்க. கொஞ்ச நேரம் அந்தப் பையனை பாத்துக்கிட்டிருந்த தெனாலிராமன் திரும்பவும் ஒருவாரம் கழிச்சு அழைச்சுட்டு வாங்கன்னு அனுப்பிட்டார். அதே மாதிரி நாலைஞ்சு முறை அனுப்பி வச்சுட்டார். இதுதான் கடைசிமுறை, இனிமே இந்த ஆள்கிட்ட போகக்கூடாதுன்னு முடிவோட அந்த அம்மா பையனைக் கூட்டிக்கிட்டு போனாங்க. பையனைக் கூப்பிட்டு உட்கார வச்ச தெனாலிராமன், தம்பி அளவுக்கு அதிகமா இனிப்பு சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காது. நிறைய நோய்கள் வரும். இனிமே சாப்பிடாதேன்னு சொல்லிட்டு பையனைக் கூட்டிக்கிட்டுப் போங்கம்மான்னு சொல்லிட்டார். ‘பையனுக்கு எதாவது வைத்தியம், கியித்தியம் செஞ்சு குணப்படுத்துவார்னு நினைச்சா, சும்மா நாலு வார்த்தை சொல்லிட்டு அனுப்புறாரே’ன்னு அந்த அம்மாவுக்குக் கோபம்.
ஏய்யா... இதையே நான் முதல் தடவை கூட்டிக்கிட்டு வந்தப்பவே சொல்லியிருக்கலாம்ல. தேவையில்லாம அலையவிட்டு நாலு வார்த்தையோட அனுப்பி வைக்கிறியேன்னு கேட்டிருக்கு. அதுக்குத் தெனாலிராமன், முதல் தடவை நீ கூட்டிக்கிட்டு வந்தப்போ, எனக்கே அதிகமா இனிப்பு சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு. அப்ப நான் இவனுக்கு அறிவுரை சொல்லியிருந்தா அந்த வார்த்தைகளுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அன்னையில இருந்து இனிப்பு சாப்பிடுறதை கொஞ்சம் கொஞ்சமா குறைக்க ஆரம்பிச்சேன். அடுத்தடுத்த முறை நீ அழைச்சுக்கிட்டு வந்தப்பவும் என்னால அந்தப் பழக்கத்தை விட முடியலே. இன்னைக்குதான் அந்தப் பழக்கத்துல இருந்து வெளியே வந்தேன், அதனால எனக்கு அறிவுரை சொல்ற தகுதி வந்திடுச்சு.
தைரியமா கூட்டிக்கிட்டுப் போ. தகுதியான அறிவுரைக்கு என்னைக்குமே மரியாதை இருக்கும். உன் பையன் இனிமே இனிப்பு சாப்பிட மாட்டான்னு சொன்னாராம்! மத்தவங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்றதுக்கு முன்னாடி நமக்கு அதுக்கான தகுதி இருக்கான்னு பாக்கணும். தகுதியில்லாத ஆயிரக்கணக்கான அறிவுரைகள் யாரு காதுக்குள்ளயும் நுழையாம காற்றுலயே மிதந்துக்கிட்டு இருக்கு என்கிறார் ரேவதி.
“இன்னைக்கு ஆண்களை விட பெண்கள் வாழ்க்கையில பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்றாங்க. நிறைய தடைகள்... நிறைய காயங்கள்... அதுவே மன அழுத்தத்தையும் உளைச்சலையும் உருவாக்குது. இதுக்கெல்லாம் தீர்வு சைக்காலஜிதான். ஆனா, மூடநம்பிக்கையும் அவநம்பிக்கையும் நம் சமூகத்தில மண்டிக்கிடக்கு. ‘ஜாதகம் சரியில்லை... சூனியம் வச்சுட்டாங்க, வாஸ்து சரியில்லை’ன்னு ஏராளமான மூடநம்பிக்கைகள். இது மனம் சார்ந்த ஒரு பிரச்னைன்னு யாரும் புரிஞ்சுக்கிறதில்லை. சைக்காலஜின்னாலே அது பைத்தியங்களுக்கான சயின்ஸ்ங்கிற அவநம்பிக்கை!
எல்லாத்துக்கும் காரணம் மைண்ட்தான். பாசிட்டிவ் திங்கிங், நெகடிவ் திங்கிங் - ரெண்டும்தான் மனிதனை செயல்படுத்துது. மனம் ஒரு விஷயத்தை எப்படி புரிஞ்சுக்குதுங்கிறதுலதான் விளைவே இருக்கு. ‘பாழுங்குழியில தள்ளி விட்டுட்டாங்க... வாழ்க்கையே கெட்டுப்போச்சு’ன்னு சதாசர்வ காலமும் நினைச்சுக்கிட்டு இருந்தா வாழ்க்கை போயிடும். அதுல இருந்து வெளியில வரணும். வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரிதான். அதை எப்படி கையாள்றோங்கிறதுல தான் மகிழ்ச்சியும் துன்பமும் அடங்கியிருக்கு. அந்த உண்மையை ஹ்யூமரா சிரிக்க சிரிக்க சொன்னா மக்கள் நம்புறாங்க.
அதுக்காகத்தான் இந்த மாதிரி சின்னச் சின்ன ஃபார்முலாக்களை உருவாக்கி அதன் மூலமா ஒரு டிஃபன்ஸ் மெக்கானிசத்தை மனசுக்குள்ள கொண்டு வர முயற்சி செய்யிறோம். திங்கிங், பர்சனாலிட்டி, ஆட்டிடியூட், எமோஷன், மோட்டிவேஷன்... இந்த அஞ்சுலயும் டிஃபன்ஸ் மெக்கானிசத்தை ‘டே டு டே’ அப்ளை பண்ணினா பிரச்னைகள் தீர்ந்திடும். இந்த உலகமே சொர்க்கமாகிடும். இதோட விளைவுகளை மக்கள் கல்வி நிறுவனத்தில படிக்கிற பெண்கள்கிட்ட பார்க்கலாம். பலநூறு பெண்கள் வாழ்க்கை மாறியிருக்கு... என்கிறார் மனநல உளவியலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
மக்கள் கல்வி நிறுவன பெண்களுக்கு மட்டுமல்ல... எல்லாப் பெண்களுக்குமே இதில் செய்தியிருக்கிறது!
நன்றி. 

Monday 27 May 2019

ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன்


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

👌ஒரு ஊரில் ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்குக் கண்பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாகக் குழந்தையும் இல்லை. ஒரு நாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்துக் கெஞ்சியது:
மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன். ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்தக் கரைப் பகுதிக்கு வந்துவிட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே. என்னை பத்திரமாக ஆழ்கடலுக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்.''
மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டுபோய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான்:
மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்துவிட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டு நாளை வந்து கேட்கிறேன்.''
மீனும், ""நீ ஒரே ஒரு வரம்தான் கேட்க வேண்டும்''என்று நினைவுபடுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்குச் சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான்.
அவனது தந்தை கூறினார்:
மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...''
அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள்:
மகனே, எனக்குக் கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்கள் பார்வை பெற வேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...''
கடைசியாக மனைவி கேட்டாள்:
நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்.''
மறுநாள், அந்த மீனவன் கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம்தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்?
விடை: என் மகன் கீழே விளையாடிக் கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழ வேண்டும்'' என்பதுதான் அவன் கேட்ட வரம்.
நீதி: உங்கள் உடன் வாழ்பவர்களின் மீது உங்களுக்கு ஆழமான அன்பும் அக்கறையும் பாசமும் இருப்பின்.. அந்த எண்ணமானது உங்களை அறியாமலேயே உங்கள் புத்திகூர்மையையும் முடிவொடுக்கும் திறமையையும் இயல்பாகவே வெளிப்படும்.

கிறிஸ்துவத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள்

                           

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 கிறிஸ்துவத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள்
மிகப்பெரிய பதிவு தயவு செய்து படித்துவிட்டு பகிருங்கள் நானும் படித்ததுதான்
பாரதத்தை அழிக்க வந்துள்ள பெந்தகோஸ்ட் பேய்கள்
கிறிஸ்துவத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. உலகில் கிட்டத்தட்ட 41000 கிறிஸ்துவ பிரிவுகள் இருப்பதாய் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்படி பல பிரிவுகள் இருப்பினும் அதில் பெரும்பான்மையாக இருப்பது கத்தோலிக்கர்கள். அதிலும் ரோமன் கத்தோலிக்கர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற கிறிஸ்துவ அமைப்புகளை ஒப்பிடுகையில் ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திரத்திற்கு பின் மதம் மாறியவர்கள். எனக்கு தெரிந்த வகையில் இவர்கள் இப்போது அதிகமாக மதம் மாற்றுவது இல்லை. அதோடு நம்முடைய‌ இந்திய பாரம்பரிய பழக்க வழக்கங்களை இவர்கள் எதிர்ப்பதும் இல்லை.
ஆனால் கடந்த சில வருடங்களாக விஷப் பாம்பை விட கொடியதான ஒரு பிரிவு தொற்று வியாதியை போல் பரவி வருகிறது. நாகப் பாம்பை விட கொடிய விஷத்தை அப்பாவி மக்களின் இதயத்தில் விதைக்கும் இந்த கும்பல் இந்திய கலாச்சாரத்தையே புரட்டி போடுவதற்கு கோடாணு கோடிகளை கொட்டி வருகிறது.
பாம்பின் விஷம் கடிப்பட்டவர் உடலில் கலந்ததும் அவர் உடனே இறந்து விடுவார், ஆனால் இந்த பெந்தகோஸ்டுகளின் விஷம் ஒருவரின் மூளையில் கலக்க தொடங்கினால் அவரும் ஒரு பாம்பாக மாறி மற்றவர்களை கொட்டத் தொடங்குவார். இது இப்படி பண்முனையில் பரவிக் கொண்டே போகும்.
இரையை விழுங்க பாம்பு பதுங்கி இருப்பதை பார்த்திருக்கிறீர்களா ? பாம்பு பலமான இறைகளை வேட்டையாடுவதில்லை. சக்தி குறைந்த தவளைகள், எலிகள் போன்றவற்றை தான் அவை வேட்டையாடும்.
அது போல இந்த பெந்தகோஸ்டுகள் அறிவுள்ள படித்த மக்களை, தன் கலாச்சாரத்தை/தர்மத்தை குறித்து நன்கு தெரிந்த மக்களை குறி வைப்பதில்லை. இவர்களின் குறியெல்லாம் அப்பாவிகள், தனிமையில் இருப்பவர்கள், வியாதியில் நொடிந்தவர்கள், ஏழைகள், அன்புக்கு ஏங்குபவர்கள் இப்படியானவர்கள்தான்.
தன் இரையை வேட்டையாடும் வரை பாம்பு அமைதியாக இருக்கும். இரையின் பலவீனங்கள் அதற்கு தெரியும். ஆர்பாட்டமில்லாத ஒரு அமைதியின் முடிவில்தான் இரை வசப்படும். பெந்தகோஸ்டுகளும் அப்படித்தான். அவர்கள் மதமாற்றுவதே ஒரு நுன்னிய கலை. அமேரிக்காவின் வடிவமைக்கப்பட்ட பல மனோதத்துவ முறைகளை, உலகில் மிகத் திறமையாக கையாண்டு அப்பாவி மக்களை வசியப்படுத்துவதே இவர்களின் பிழைப்பு !!
என்ன இவர்களின் சித்தாந்தம் ? என்ன இவர்களின் நோக்கம் ? எங்கிருந்து வந்தன இந்த பெந்தகோஸ்டு விஷ சித்தாந்தம் ? இதற்கு எங்கிருந்து வருகின்றன நிதி ? எப்படி பரப்புகிறார்கள் இவர்கள் ? இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ? இவற்றை இனி இதன் தொடர்ச்சியில் பார்ப்போம்.
இந்தியாவில் நீங்கள் எங்கு சென்றாலும் "ஜெப வீடுகள்" என்கிற சிறு அமைப்புகளை பார்க்கலாம். அதுவும் கடந்து பத்து ஆண்டுகளாக இவை மூலை முடுக்கெல்லாம் பல்கி பரவி வருவதை நீங்கள் பார்க்கலாம். அதிக வீடுகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும் இந்த ஜெப வீடுகளை பார்க்கலாம். ரயில் பாதையின் அருகே பயனிகள் பார்க்க கூடிய வகையில் இத்தகைய ஜெப வீடுகள் பலவற்றை நீங்கள் பார்க்கலாம். இவைகள் பல பெயர்களில் இருக்கும்.
ஆனால் இவை பெரும்பாலும் அமேரிக்க பெந்தகோஸ்ட் குழுமத்தின் ஒரு மிகப்பெரிய திட்டத்தால் அரங்கேற்றப்பட்ட ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும் இந்தியர்களை தங்கள் கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய்களை இந்த அமேரிக்க பெந்தகோஸ்ட் குழுமங்கள் செலவிடுவதாய் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றல்ல இரண்டல்ல பத்தாயிரம் கோடி ரூபாய்கள் !!
அமேரிக்காவை சேர்ந்த பல பெந்தகோஸ்ட் குழுமங்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் சர்ச்சுகளை விதைக்கும் மிகப்பெரும் ஒரு திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அமேரிக்கர்களால் நேரடியாக இந்தியாவில் இறங்கி இத்தகைய பணிகளை செய்ய இயலாது என்பதால் அவை இந்தியாவில் இதை செய்யக் கூடிய தனிநபர்களை குறிவைக்கின்றன.
இந்த தனி நபர்கள் முதலில் ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு போதிய நிதி அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தனை நபர்களை மதம் மாற்றம் செய்துள்ளேன் (Baptised) என்று ஆதாரங்களுடன் கூடிய அறிக்கைகளை இவர்கள் சமர்பிக்க வேண்டும்.
மேலும் பலரை மாற்றக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதை தெளிவான விபரங்களுடன் தெரிவித்து, இதற்காக சர்ச்சுகள் அமைக்கவும், பல விதமான செலவுகளுக்காகவும், மதமாறுவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு என்றும் ஒரு நிதி நிலை அறிக்கை தரவேண்டும். இந்தியாவில் உள்ள பல தனிநபர்கள்/குடும்பங்கள் இப்படி அமேரிக்க பெந்தகோஸ்டு குழுமத்திடம் இருந்து நிதியை பெறுகிறார்கள்.
உதாரணத்திற்கு "மிஷன் இந்தியா" என்கிற ஒரு அமைப்பு, இந்தியாவில் கோடிக்கணக்கான‌ மக்கள் பரிசுத்த ஆவியை ஏற்பதற்கு தயாராக உள்ளனர், அவர்களுக்கு இறைவனின் நற்செய்தியை வழங்க வேண்டும் என்று தங்கள் ப்ரௌசர்களை (brochure) தயார் செய்து அமேரிக்க பெந்தகோஸ்டு குழுமங்களிடம் விண்ண‌ப்பிக்கின்றது.
அதாவது இது "ஏம்வே" (Amway) போன்ற ஒரு "மல்டி லெவல் மார்கெட்டிங்" அமைப்பு. எத்தனை பொருட்கள் விற்கிறார்களோ, அதற்கு ஏற்ப, அடுத்த முறை அதிக பொருட்களை ஏம்வே வழங்குவது போல், எத்தனை மக்களை மதம் மாற்றுகிறார்களோ அதற்கு ஏற்ப நிதி வசதிகளை அமேரிக்க பெந்த கோஸ்ட் குழுமங்கள் செய்து தருகின்றன.
அது சரி, இத்தனை பணத்தை இவை காரணமில்லாமல் அனுப்பி விடுமா ? எதற்காக இத்தனை கோடிகளை அனுப்ப வேண்டும் ? அரசியல் கட்சிகள் எப்படி சுய உதிவி குழுக்களை ஊக்குவித்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் நம்பகத்தனமையை பெற முயல்கின்றதோ அதைப் போல் ஆயிரக்கணக்கான இந்த சிறிய சர்ச்சுகளை பெருக்கி அவைகள் மூலம் மொத்த இந்திய மக்களையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வைக்கக் கூடிய திட்டமிது.
"தி பிலீவர்ஸ் சர்ச்" (The Believer's Church) என்று "காச்பல் ஆஃப் ஆசியா (Gospel for Asia (GFA)) என்கிற‌ அமேரிகாவின் டெக்ஸாஸை சேர்ந்த அமைப்பு மட்டும் 596 கோடி ரூபாய்கள் இப்படி இந்தியாவில் சர்ச் அமைப்பதற்காக அனுப்பி உள்ளது.
இது இந்தியாவில் இதன் மதப்பரவலுக்காக ஆட்களை தயார் செய்யவும், அவர்களுக்கு போதிய பயிற்சி தரவும் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவதோடு, அமேரிக்காவில் இருந்து பிரச்சார யுக்திகளில் தேர்ச்சி பெற்றவர்களை இந்தியாவுக்கு அனுப்பி இங்குள்ள சிறிய‌ சர்ச்சுகளுக்கு உதவுகிறது.
பெருகி வரும் இந்த சிறிய ஜெப வீடுகளால் பாதிக்கப் படுவது ஹிந்துக்கள் மட்டும் அல்ல. பாரம்பரியமாய் இந்தியாவில் பல ஆண்டுகளாய் உள்ள கத்தோலிக்க சர்ச்சுகளும் தான். பஞ்சாபை சேர்ந்த "செய்ன்ட் ஜேம்ஸ் கேத்தலிக் சர்ச்" பெந்தகோஸ்டுக்கு மாறும் கத்தோலிக்கர்களால் ஆளில்லாமல் சமீபத்தில் மூடப்பட்டது.
இந்தியாவில் உள்ள பல கத்தோலிக்க பாதிரியார்கள் இந்த புதிய ஆதிக்கத்தால் நிலை தடுமாறி போயுள்ளனர். தத்துவ அறிவில் பயிற்சி இல்லாமல் மக்களின் உணர்வுகளை மிகையாக தூண்டி அதன் மூலம் ஆதாயம் பெரும் இந்த சூழ்ச்சி முறையை அவர்கள் கண்டிக்கிறார்கள்.
இந்த பெந்த்கோஸ்டு அமைப்புகள் எங்கே எப்படி தொடங்கின ? மேலும் இவை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன ? இந்திய கலாச்சாரத்தை இவை எவ்வாறு சீரழிக்கின்றன
பாம்பு தன் இறையை கண்டுவிட்டால் அதை விட்டு தன் பார்வையை விலக்காது. இறை எப்போது அசட்டையாக இருக்கும் என்று அது கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கும். அதைப் போலவே ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறு குழுமங்களில் முழு நேரமும் பணியாற்றும் பெந்தகோஸ்டை சேர்ந்தவர்கள், எப்போது எங்கே பாரத தர்மத்தை குறித்த விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்கள் சிக்குவார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவி மக்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளிலோ, பள்ளி மற்றும் கல்லூரிகளிலோ கிடைப்பார்கள்.
வீடு வீடாய் சென்று வேட்டையாடுகையில் கிடைப்பார்கள். ரயில்களிலோ, பஸ்களிலோ பிரயானம் செய்கையில் கிடைப்பார்கள். அலுவுலங்களில் தனக்கு கீழே பணியாற்றுபவர்களாக இறை கிடைக்க வாய்ப்பிறுக்கிறது. ஏழ்மையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள், ஏதேனும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், தனிமையில் இருப்பவர்கள் இப்படி பலகீனமான இறைகள் வெகு எளிதில் வசப்படும்.
இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அமேரிக்க பெந்தகோஸ்டு குழுமங்கள் மூலமாக இயக்கப்படும் சிறு சிறு மையங்கள் இதில் ஈடுபடுகின்றன. நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட மனோவசியம் மற்றும் ஆழமான உளவியல் நுட்பங்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு அங்கு என்று இல்லாதபடி இந்தியா முழுதும் இது நடந்து வருகிறது. அந்நிய செலாவனி பற்றாக்குறையை போக்க விழி பிதுங்கி நிற்கும் இந்திய அரசோ இதைப்பற்றி கவலைப்படாமல் வெளிநாட்டு பணம் உள்ளே வருவதை கண்டு கொள்ளாமல் பாரா முகமாக இருக்கிறது. இந்தியா முழுதும் இந்த மதமாற்றங்கள் கேட்பார் இன்றி நடந்து வருகின்றன.
தில்லியின் புறநகர் பகுதிகளில் புதிய சர்ச்சுகளை அமைக்கும் வேலையை பெந்தகோஸ்ட் குழுமத்தை சேர்ந்த "ராட்ரிக் கில்பர்டும்" அவர் மனைவியும் பார்வையிடுகின்றனர். அவர் தன்னுடைய அமேரிக்க தலைமையகத்துக்கான வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார் "நாங்கள் பெருகிக் கொண்டே வருகிறோம் இதை யாரும் தடுக்க இயலாது. எங்களின் இலக்குக்கு மேலேயே நாங்கள் வளர்ந்து வருகிறோம்.
உதாரணத்திற்கு நாங்கள் 2009ம் வருடத்தில் இரண்டயிரம் புதிய சர்ச்சுகளை ஏற்படுத்த நினைத்தோம் ஆனால் "மூவாயிரத்தி நாணூற்றி தொண்ணூறு ஆறு" சர்ச்சுகளை ஏற்படுத்தி விட்டோம், அதைப்போல இருபதாயிரம் பேரையாவது மதமாற்ற வேண்டும் என்று இலக்கு வைத்தோம் ஆனால் 2009ம் வருடத்திலேயே எங்கள் இயக்கம் "முப்பத்தி மூன்று ஆயிரத்தி அறுநூற்றி எழுபத்தி நான்கு" பேரை மதமாற்றியுள்ளது".
இந்தியாவில் லட்சக்கணக்கில் நடக்கும் மதமாற்றங்களில் இவரின் குழுமம் ஒரு சிறு கிளை அவ்வளவுதான்.
இந்த மதமாற்றங்கள் இந்தியாவில் பல பாகங்கங்களில் நடந்து வருகின்றன. தென் இந்தியாவில் பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாள்கிறார்கள். சுயசார்புடைய பல சர்ச்சுகள் பல தனிநபர்களாலும், குடும்பங்களாலும் தொடங்கப்படுகிறது, இவர்கள் அமேரிக்க பெந்தகோஸ்டு அமைப்புகளுக்கு நிதி நிலை அறிக்கை தந்து பெருமளவில் பணப்பறிமாற்றம் பெற்றுக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு மட்டும் 2002-03 வாக்கில் "எழுநூற்றி எழுபத்தைந்து" கோடி ரூபாயாக இந்த சுயசார்புடைய சிறிய சிறிய சர்ச்சுகளுக்கு அனுப்பப்பட்டது. இது 2006-07 வாக்கில் அது "இரண்டாயிரத்தி இரு நூற்றி நாற்பத்தி நான்கு" கோடி ரூபாய்களாக பெருகியது. 2010 வாக்கில் இது மட்டும் "நாலாயிரத்தி ஐநூறு" கோடி ரூபாய்களை தாண்டி விட்டன என்கின்றன புள்ளி விவரங்கள்.
நகரங்களில் சென்னைதான் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. 2002-03 வாக்கில் மட்டும் சென்னைக்கு "முன்நூற்றி அறுபத்தி மூன்று" கோடி ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அது 2006-07 வாக்கில் "தொள்ளாயிரத்தி இருபத்தி ஒன்பது" கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2010-11ல் அது "ஆயிரத்தி எட்நூறு" கோடி ரூபாய்களை தாண்டி விட்டன என்கின்றன ஆதார பூர்வமான புள்ளி விவரங்கள்."
பால் தினகரன் "மற்றும் "மோஹன் சி லெசரஸ்" போன்றவர்கள்தான் இதில் பெரும் பங்கை பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. லெசரஸின் பிரச்சாரங்கள் தூத்துக்குடி, கன்னியாக்குமரி மற்றும் திருநெல்வேலியில் பெரும் பொருட்செலவில் அரங்கேறி வருகின்றன.
ஆந்திராவிலோ இந்த சுயசார்புடைய சர்ச்சுகள் பெருகுகின்றன. ஆந்திர முன்னால் முதல்வர் ஒய் எஸ் ஆர் ரெட்டியின் மாப்பிள்ளை "அனில் குமார் ரெட்டி", "அனில் உலக இவாண்ஜிலிஸம்" (Anil World Evangelism) என்கிற பெயரில் அந்த மாநிலம் முழுதும் பலரை மதம் மாற்றியுள்ளது பலருக்கு தெரியாது.
அமேரிக்கா கிறிஸ்துவ மதத்தை பரப்ப துனை போகிறதா ? முட்டாள் தனமாக இருக்கிறதே என்று சில அறிவு ஜீவிகள் பேசக்கூடும். செக்யூலர் தேசம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமேரிக்காவின் உண்மை முகம் அறியாத அப்பாவிகள் அவர்கள்.
அமேரிக்கர்கள் ஏன் இத்தனை பனம் செலவு செய்ய வேண்டும். எதை சாதிப்பதற்காக அப்பாவி பாமர மக்களை மதம் மாற்றுவதற்காக அவர்கள் பனத்தை மூன்றாம் உலக நாடுகளில் இப்படி கொட்ட வேண்டும் ?
ஆர்மீஸ் ஆப் காட் ( The Armies Of God ) என்கிற புத்தகத்தில், மலேஷியாவில் வாழும் பிரிட்டீஷ் காரரான "இயன் பகனன் ( Iain Buchanan ) இதை குறித்து தோல் உரித்து போடுகிறார்.
எப்படி இந்த வெறி ஊட்டப்பட்ட‌ இவாண்ஜலிஸ்டுகள் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் முக்கியமாக இந்தியாவில், அமேரிக்காவின் சார்பாக செயல்படுகிறார்கள் என்று அவர் விளக்குகிறார். மற்றும் வெற்றிக்கு வழிகாட்டுபவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் அமேரிக்க மேலான்மை நிபுணர்கள் மறைமுகமாக கிறிஸ்துவ இவாண்ஜிலிஸ்டுகளாக இருப்பதை அவர் விவரிக்கிறார்.
அமேரிக்காவின் ஜனாதிபதிகளான புஷ் ஆகட்டும், ரீகன் ஆகட்டும் மற்ற ஜனாதிபதிகள் ஆகட்டும், தங்களுடைய கொள்கைகளுக்கு பல முறை பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுவதை அவர் சுட்டி காட்டுகிறார்..
அமேரிக்கா வெளிப்புறத்தில் ஒரு ஜனநாயக நாடு. வெளிப்புறத்தில் பார்க்கையில் அது ஒரு மதசார்பற்ற, காரண அறிவை அதிகம் பயன்படுத்தும் மக்களை கொண்ட ஒரு நாடு. ஆனால் உள்ளார்ந்து பார்த்தோம் என்றால் அது பலம் வாய்ந்த கிறிஸ்துவ இவாண்ஜிலிஸ்ட் அமைப்புகளை கொண்ட நாடு.
இந்த இவாண்ஜிலிஸ்ட் அமைப்புகளை பகைத்துக் கொண்டு அங்கு யாரும் ஆட்சியை பிடிப்பது கடிணம். "ஃபெல்லோஷிப் ஃபௌன்டேஷன் ( Fellowship Foundation ) மற்றும் கௌன்சில் ஆப் நேஷனல் பாலிஸி ( Council for National Policy ) ஆகிய கிறிஸ்துவ அமைப்புகள் அமேரிக்க தேசத்தின் கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன.
அமேரிக்காவில் 600 இவாண்ஜிலிக்கல் குழுமங்கள் உள்ளன. இதில் உள்ள சில குழுமங்கள் மிகப்பெரியவை, ஒரு பண்ணாட்டு கம்பெனிக்கு ஈடானவை. இந்த குழுமங்களுக்கு இடையே ஒரு நெட்வர்க் மிகச் சீரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவை உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மேல் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழுமங்கள் பல நாடுகளின் ஊடகங்கள் மற்றும் முக்கிய‌ துறைகளில் ஊடூறுவி உள்ளன.
மிகப்பெரும் இவாண்ஜிலிக்கள் குழுமங்களான "வர்ல்ட் விஷன், (World Vision) கேம்பஸ் க்ருசேட், (Campus Crusade) யூத் வித் எ மிஷன், (Youth with a Mission) சமாரிடன்ஸ் பர்ஸ் (Samaritan’s Purse) போன்ற குழுமங்கள் அமேரிக்க அரசாங்கத்தின் வெளி நாட்டு கொள்கையில் பெரும் பங்காற்றுகிறது. வர்ல்ட் விஷன் அமேரிக்க "ஸ்டேட் டிபார்ட்மென்டின்" ஒரு அங்கம் என்பது அருமையான உதாரணம்.
இவாண்ஜிலிஸ்ட் கொள்கைகளை உலகம் முழுதும் பரப்புவதற்கு "பன்னாட்டு மத சுதந்திர சட்டத்தை" (International Religious Freedom Act of 1998) கொண்டு வரவும் இந்த குழுமங்களின் உதவியோடு அமேரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இவாண்ஜிலிக்கல் கிறிஸ்துவத்தை மேலும் பரப்பி தன் ஆளுமையை நிலைநாட்டலாம் என்று அது நினைக்கிறது.
மதரீதியாக மட்டும் இல்லாமல் "நிர்வாக இயல்" என்ற போர்வையிலும் அமேரிக்க இவாண்ஜிலிஸ்டுகள் நுழைகிறார்கள். "லீடர்ஷிப் குருக்கள்" என்கிற பெயரில் தொழிலாள‌ர்களை உற்சாகப்படுத்தும் வல்லுனர்கள் என்கிற போர்வையில் இந்த அமேரிக்க ஏஜன்டுகள் நுழைகிறார்கள்.
Zig Ziglar, Paul Meyer, Os Hillman, Richard DeVos, John C. Maxwell, Ken Blanchard, ஆகியோர் பல நாடுகளில் ஊடுறுவி உள்ளார்கள் இவர்கள் மேலான்மை வல்லுனர்கள் மட்டும் அல்ல பெந்தகோஸ்டு கிறிஸ்துவ மதத்தை பரப்ப வரும் இவாண்ஜிலிஸ்டுகளும் கூட‌.
பெந்தகோஸ்டுகளை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இன்றைய நம் தேசத்தின் மிகப்பெறும் அச்சுறுத்தல் எதுவென்றால் அது "பெந்தகோஸ்டு விஷப்பாம்புகளாய்"தான் நிச்சயம் இருக்கும்.
உங்கள் பிள்ளைகளை, உறவினர்களை, நண்பர்களை பெந்தகோஸ்டுகளிடம் இருந்து புறந்தள்ளியே இருக்க அறிவுறுத்துங்கள். இந்த கொடிய பேய்களை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
நோய் வருவதற்கு முன் நம்மை தற்காத்துக் கொள்வதுதான் சாலச் சிறந்தது அல்லவா ?
மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்

Friday 17 May 2019

கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம்

                                கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி கேட்டார்
ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள்
ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே அது ஏன் அப்படி நடக்கவில்லை “ என கேட்டார்.
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் “ என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்க” என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள், அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையனை நின்றார்கள். சூத்தரதாரியோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று எம்பிரானை காப்பாற்றி கரை சேர்த்தான். மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ? என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை “ அப்பா நீ பாவமே செய்யவில்லை யா? “ என வினவினார்.
அவன் சொன்னான்” எனக்கு எதுவுமே தெரியாது அம்மா. கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கேன் அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன் நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
முதியவர் சொன்னார் " குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள். நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை என சொல்லி அழைத்து சென்றார்
நம்பியவர்க்கே அனைத்தும் கிடைக்கும்.

மணியான தகவல்.

                                                              மணியான தகவல்.

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

மணியான தகவல்.
மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.
மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.
கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.
இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.
மெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.
மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.
மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.
இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.
கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.
பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ
நாமத்தையும் சொல்லுங்கள்...' என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.
மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர் இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:
பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார்.
அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, 'ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார்.
ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.
திகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.
'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான்.
'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.
இந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார்.
'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.
அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.
'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.
அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்; அவனருளாலே அல்லல்களை வெல்வோம்.
ராம ராம ராம ராம...!!!

Thursday 16 May 2019

கோவில்களுக்கு #நீங்கள்செல்லாமா #செல்லவேண்டாமா முடிவு பண்ணுக....!!!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 கோவில்களுக்கு #நீங்கள்செல்லாமா #செல்லவேண்டாமா முடிவு பண்ணுக....!!!

 இந்த பதிவு 1000 ஆண்டு பழைமையான கோவில்களுக்கு மட்டுமே சம்மந்தபடும்...!!
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் …அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ….இறை சக்தி நம்மை காக்கட்டும் … நன்றி 

Wednesday 15 May 2019

முருகனின் மர்மம்

                                                         முருகனின் மர்மம்
தண்டாயுதபாணியின் இருப்பிடமாக உள்ள பழனி மலை மகத்தானது. ஜாதி பேதம் இன்றி பல்வேறு பிரிவினரும் பெரும் திரளாக அங்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டு நிவாரணம் பெறுகிறார்கள் . பழனியின் பெருமையைக் குறித்து மெத்தப் பாண்டித்தம் பெற்ற ஒருவர் கூறினார் 'அபரீதமான பழங்காலத்துப் பொருட்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரம் , புராணக் கதைகள், வீர காவியங்கள் , மாபெரும் முனிவரின் கதைகள், இலக்கியங்கள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ள இடமே பழனி மலை'.

தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 அடி உயரத்தில் உள்ள பெருமை மிக்க இடமான சிவகிரி மலையில் தண்டாயுதபாணி பழனி ஆண்டாவராக வீற்று உள்ளார். புராதான காலத்தின் துவக்கம் முதலே சித்தர்களும், முனிவர்களும் பழனி மலையில் தவம் இருந்ததினால் அந்த இடம் இன்னும் அதிகப் புனிதத் தன்மையை அடைந்தது. பல மன்னர்களும் கொடையாளிகளும் அந்த ஆலயத்துக்கு பல வகைகளிலும் தங்களுடைய ஆதரவை வழங்கி உள்ளார்கள். தமிழக முன்னணிப் பாடகர்கள் பலர் தண்டாயுதபாணியின் பெருமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் நிறைய தமிழ் பாடல்களைப் பாடி உள்ளார்கள். துடித்துக் கொண்டே இருக்கும் தெய்வீக சூழ்நிலையில் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகளை எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இந்துக்கள் தொடர்ந்து கடைபிடித்தவண்ணம் இருக்கின்றார்கள். அனுதினமும் அங்கு வரும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களே அதற்கு சாட்சி ஆவார்கள்.

ஆறுபடை வீடுகளில் மணிபூரகம் எனும் மூன்றாவது தெய்வீக நிலையை ஒருவர் எட்டியதும் அந்த நிலையில் இருந்து பரிபூரண ஆன்மீக நிலையினை அவர்கள் அடையத் துவங்கி விடுகின்றனர். மற்ற தெய்வீக நிலைகள் வருமாறு:(பார்க்க படம்)

புராண காலத்தில் அருணகிரிநாதர் இயற்றிய இந்த பாடல் மூலம் பழனியின் மகத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். -''என் தெய்வமே , நீ தெய்வீகத்தில் பஐமை வாய்ந்த காசி, பெனாரஸ் போன்ற இடங்களை விட மிக உயர்ந்த நிலையில் உள்ள இந்தப் புனித மலை மீது அமர்ந்து இருக்கின்றாய்''. சைவ சித்தாந்தக் கூற்றின்படி ஒருவர் ஞான உபதேசத்தைப் பெரும் முன்னர் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் ஆன்மாவின் நான்கு பகுதிகளைக் கடக்க வேண்டும். அவை 'கார்யா' எனும் தன்னலமற்ற சேவை, சாதனாக்களை துதிக்கும் 'கிரியா' என்பது, ஒரு குருவின் துணையோடு தியானிக்கும் 'யோகம்', மற்றும் ஆத்மார்த்தமாக தன்னை உணர்ந்து கொள்ளுதலான 'ஞானம்' என்பது. ஒருவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் எனில், ஒரு முட்டையில் இருந்து புழுவாகி, புழுவில் இருந்து வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவாகி, வளர்ச்சி பெற்ற கூட்டுப் புழுவில் இருந்து கம்பளிப் பூச்சியாகி, கம்பளிப் பூச்சியில் இருந்து வண்ணத்துப் பூச்சியாகி பறப்பதைப் போல படிப்படியாக 'கார்யா', 'கிரியா', 'யோகா' போன்ற நிலைகளைக் கடந்து 'ஞான' நிலையை எட்ட வேண்டும். பழனி தண்டாயுதபாணி ஞானத்தை பிரதிபலிக்கின்றார். ஞானமே பேரானந்த மன நிலையான ஞானப் பழம் என்பதை நமக்குத் தரும். இளம் பிஞ்சு காயாகி பல்வேறு நிலைகளை கடந்து பழுக்கத் துவங்கி கடைசியாக பழமாவதைப் போலவே பழனி முருகனும் கவர்ச்சிகரமான முகப் பொலிவுடன் இருந்து கொண்டு பக்தர்களுக்கு பல்வேறு காட்சிகளிலும், ரூபங்களிலும் தரிசனம் தந்து கொண்டு அருள் மழையைப் பொழிந்தவாறு இருக்கின்றார். அவர் கொண்டுள்ள ரூபங்களில் சில:(பார்க்க படம்)

பழனியில் குடி கொண்டுள்ள அந்த தெய்வம் உலகின் பல இடங்களில் இருந்தும் பக்தர்களை தன்பால் இழுக்கின்றது. பழமையில் ஊறிப்போன முஸ்லிம் மதத்தினர் கூட இங்கு வந்து அவரை வணங்குகிறார்கள். முருகனை பழனி பாட்ஷா என அன்புடன் கூறி அவரை வணங்குகிறார்கள். ஆத்ம ஞானம் பெற அங்கு வரும் பக்தர்களுக்கு ஒளி வெள்ளத்தைக் காட்டியபடி பழனி ஆண்டவர் அவர்களை வழி நடத்திச் செல்கிறார். தண்டாயுதபாணி ஆலயம் தனி மகத்துவம் பெற்றது. மற்ற ஆலயங்களுடன் அதை ஒப்பிடும்போது அவற்றில் இருந்து இது வேறுபட்டு உள்ளது நன்கு தெரியும். முதலாவதாக அந்த ஆலயத்தில் உள்ள பிரதான தெய்வத்தை மூலவர் என்று அழைக்கின்றார்கள். சாதாரணமாக இந்து ஆலயங்களில் உள்ள தெய்வங்களின் சிலைகளை கருங்கல் பாறைகளில் செய்வார்கள். அதற்குக் காரணம் அவற்றில் இயற்கையாக அமைந்து உள்ள அதி இழுவிசை சக்தியே. மேலும் கருங்கல் பாறைகள் பெரும் பலம் மிக்கவை . அது மட்டும் அல்லாமல் இயற்கை உருவாக்கி உள்ள பஞ்ச பூத சக்திகளான தண்ணீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற அனைத்துப் பொருட்களும் அதற்குள் உள்ளன. ஆனால் அப்படி இல்லாமல் பழனி ஆலயத்தில் உள்ள மூலவர் சிலை நவபாஷ்யம் என்ற பொருளினால் செய்யப்பட்டு உள்ளது. சமஸ்கிருதத்தில் 'நவ' என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. 'நவ' என்றால் 'புதியது' அல்லது 'ஒன்பது' என்ற அர்த்தங்கள் உள்ளன. அது போலவே 'பாஷணம்' என்றால் 'விஷம்' அல்லது 'தாதுப் பொருட்கள்' என்ற இரண்டு அர்த்தங்கள் உள்ளன. பழங்காலத்திய இலக்கியங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அந்த நவபாஷண சிலையை செய்தவர் சித்த முனிவரான 'போகர்' என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
அங்குள்ள மூலவரின் சிலை நவபாஷணங்களினால் செய்யப்பட்டு உள்ளது. அதை மிகவும் நுண்ணியமாக ஒன்பது விஷப் பொருட்களின் கலவையினால் செய்து உள்ளார். அந்த ஒன்பது நச்சுத் தன்மைக் கொண்ட பொருட்களும் ஒன்றாகியபோது உடைக்க இயலாத பலம் மிக்க பொருளாக மாறியதும் அல்லாமல் பல வியாதிகளை குணப்படுத்தும் ஒருவித மருத்துவத் தன்மைக் கொண்ட பொருளாகவும் மாறி இருந்தது. அதற்குப் பின்னரே அந்தக் கலவையில் செய்த பொருளில் மூலவருடைய சிலை செய்யப்பட்டு உள்ளது.

அப்படிப்பட்ட ஒரு கலவையில் ஒரு சிலையை வடிவமித்து இருப்பதில் இருந்தே சித்த முனிவரான போகர் ரசவாத கலவைகளில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமல்ல , தொலைதூர கண்ணோட்டத்துடன் பின்னர் வர உள்ள காலத்து முருக பக்தர்களின் உடல் நலனில் பெருமளவு அக்கறை கொண்டு இருந்தவர் என்றும், அவர் மிக உயர்வான தெய்வீக நிலையில் இருந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த முனிவருடைய சித்தர் பரம்பரை பற்றியும் இலக்கியங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. சித்தர்களின் தலைவராகக் கருதப்படுபவர் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவரே. அவருடைய ஏழு சிஷ்யர்களில் 'திருமூலர்' என்பவர் உண்டு. அந்த திருமூலருக்கு 'கலங்கி கஞ்சமலையான்' என்ற சிஷ்யர் இருந்தார். அந்த கலங்கி கஞ்ச மலையானுக்கு ஆறு சிஷ்யர்கள் இருந்தார்கள். அந்த ஆறு சிஷ்யர்களில் ஒருவரே 'போகரும்'' ஆவார். இப்படியான சிஷ்ய பரம்பரைக் காட்டும் பட்டியல் கீழே உள்ளது.(பார்க்க படம்)

   Golden Vimanam (at left) and Raja Gopuram, Palani
போகரைப் பற்றிய அனைத்து செய்திகளும் திருமூலர் எழுதி உள்ள திருமந்திரம் என்ற நூலில் உள்ளன. திருமூலர் சைவ சித்தாந்திற்கு ஒரு தூணைப் போன்றவர். அவரே சைவ சித்தாந்திகளுக்கு தெய்வீக மார்கத்தில் இணைந்து , ஆத்மா ஞானத்தைப் பெற்று இறைவன் பாதத்தில் இணைந்து விடும் வழிமுறைகளை காட்டியவர். நவபாஷணப் பொருட்களில் கலவையைக் கொண்டு தயாரித்த முருகன் சிலையை வடிவமைப்பதிலும் போகர் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் முருகன் சிலைகள் அழகிய இளைஞரைப் போல தோற்றம் உள்ளதாகவும், கிழக்கு நோக்கிப் பார்த்தவாறும் அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பழனியில் உள்ள முருகனின் சிலையோ மெல்லியதாகவும், மொட்டைத் தலையுடனும், காவி உடை அணிந்தபடியும், சாமியார் கோலத்திலும் கையில் தன்டாயுதத்தை ஏந்திக் கொண்டு தெற்கு நோக்கிப் பார்த்தபடி அமைக்கப்பட்டு உள்ளது. 'நானே முதிர்ச்சி உள்ள அறிவுப் பழம் ' என்பதை பறை சாற்றிக் கொண்டு நிற்பது போல அமைந்து உள்ளது.

அங்கு வரும் பக்தர்கள் பக்தி பெருக மூலவருக்கு செய்யும் அபிஷேகங்களினால் அந்த சிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாகும். கிருத்திகை தினங்களில் சுமார் அறுநூறு முதல் எழுநூறு அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. அத்தனை அபிஷேகம் செய்தும் அவற்றினால் எந்தவிதமான பாதிப்பும் அடையாமல், அந்த நவபாஷண சிலை எப்படி அப்படியே உள்ளது என்பதைக் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அந்த சிலையின் அருகில் சென்று உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு கழுத்துக்கு கீழே உள்ள பாகங்கள் தக்க விகிதாசாரத்தில் தற்போது இல்லை என்பது தெரியவரும். பக்தர்கள் உபயோகித்து இருந்த சில அபிஷேகப் பொருட்களினால் அந்த சிலையின் கைகளும் கால்களும் மிகவும் சேதம் அடைந்து உள்ளன. தொடைப் பகுதியில் முட்டிக்கு கீழே உள்ள கால்கள் மிகவும் மெல்லியதாகி விட்டது தெரிகின்றது. இரண்டு இரும்புக் கம்பிகள் ஒரு பீடத்தில் நிற்பது போலவும், எலும்புகள் தேய்ந்து போன நோயாளிகளின் கால்களைப் போலவும் தோற்றம் தரும் அளவிற்கு அந்த சிலை பழுது அடைந்துள்ளது. உடலின் பல பாகங்களில் சிறு சிறு பள்ளங்கள் போன்றவை தோன்றி உள்ளன. அந்த சிலை சொரசொரப்பான உடல் அமைப்பைக் கொண்டது போல காட்சி அளிக்கின்றது. கூர்மையான பொருள் போல சில பகுதிகளில் எதோ நீட்டிக் கொண்டு உள்ளது . அந்த சிலையின் கால்கள் பலவீனமாகி விட்டதினால் சிலையின் கனத்தைத் தாங்க முடியாமல் எந்த நேரமும் அந்த சிலையின் கால்கள் உடைந்து விடுமோ என்று கூட ஒரு கால கட்டத்தில் பயந்தார்கள்.

அந்த நிலை முற்றிக் கொண்டே போகத் துவங்கியதும், பல பக்தர்களும் மக்களும் அந்த சிலையின் உருவத்தை கண்டு அஞ்சி தமிழக அரசுக்கு பல விண்ணப்பங்களை அனுப்பினார்கள். அதனால் கவலையுற்ற தமிழக அரசும் 1983 -84 ஆம் ஆண்டுகளில் பழனியில் உள்ள அந்த பெருமை வாய்ந்த சிலை மேலும் பழுதாகி விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்மானித்து பல யோசனைகளைப் பரிசோதித்தது. அந்த சிலையை மாற்றி விடலாமா என்று கூட ஒரு கட்டதில் யோசனை செய்யப்பட்டது. ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை இருந்தது. அகம விதிப்படி ஆலயங்கள் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டப் பின் அந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அப்படி செய்தப் பின் முதலில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த அதே சிலையை அது முன்னர் இருந்த இடத்திலேயே வாய்க்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக பழுதடைந்த சிலையை மாற்றி அதற்குப் பதிலாக அதே மாதிரியான சிலையை செய்து அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளதான முன் உதாரணம் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிகழ்வுகள் எந்த ஆலயத்திலும் நடைபெற்றது இல்லை.
கற்பாறைகளில் செய்யப்பட்ட சிலைகளைக் கூட ஆலயங்கள் பழுது பார்க்கப்பட்டபோது தற்காலிகமாக அதே ஆலயத்தில் எங்காவது ஒரு பகுதியில் கொண்டு போய் வைத்து இருந்து , ஆலய வேலைகள் முடிந்தப் பின் அதே சிலையை அஷ்டபந்தனங்கள் செய்தப் பின் (வெண்ணையில் சில மூலிகைகளை கலந்து பசைப் போல தயாரித்து அந்த சிலை முழுவதையும் பூசுவதே அந்த நிகழ்ச்சி) முதலில் இருந்த இடத்திலேயே சிலையை கொண்டு போய் வைத்து விட்டு அதை மீண்டும் பிரதிஷ்டை செய்து விடுவார்கள். ஆனால் மூலவர் சிலையையே மாற்றி அமைத்து உள்ளதான சரித்திரமே எந்த ஆலயங்களிலும் கிடையாது. பழனியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் வடிவமோ இன்னும் வித்தியாசமானது. மூலவர் சிலை பல மூலிகைகளைக் கொண்டு விசேஷமான கலவையில் தயாரிக்கப்பட்டு வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிலையாக வரும்கால சந்ததியினரின் உடல் நலத்தை மனதில் கொண்டு தெய்வாம்சம் கொண்ட 'போகரால்' செய்யப்பட்டு உள்ளது. அதை தயாரித்த விதமோ, அல்லது அந்த மூலிகைகளின் கலவையின் அளவோ எவருக்கும் தெரியாது. முதல் நாள் இரவு நல்ல சந்தனத்தை அரைத்து பசைப் போல செய்து அதை அந்த சிலை மீது பூசி வைத்த பின் மறுநாள் எடுத்தால் அது வேறு ஒரு மருத்துவக் குணம் கொண்டப் பசையாக மாறி வியாதிகளை தீர்க்கும் முறையில் மாறி விடுவதினால் அந்த சிலை மீது ஊற்றப்படும் தண்ணீரைக் குடித்தால் பல நாள்பட்ட நோயும் விலகுகின்றன என மக்கள் கருதினார்கள். அதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரம் உள்ளது என ஆலயம் வெளியிட்டு உள்ள புத்தகக் குறிப்பில் காணப்படுகின்றது.

ஒரு சாரரின் கருத்துப்படி அந்த சிலையில் உள்ள பொருட்களில் லட்சக்கணக்கான சில கிருமிகள் உள்ளன என்றும், அவற்றில் சில அபிஷேக நீருடன் கலந்து வெளியேறுவதினால் அதைப் பருகும் மக்களின் உடலில் உள்ள தீய அணுக்கள் மடிந்து வியாதிகள் வெளியேறுகின்றன என நம்பினார்கள். அந்த அபிஷேகப் பொருட்கள் பலநாட்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சித்த மருந்துகளாக பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ பழனி மலை அடிவாரங்களிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பல சித்த மருத்துவசாலைகள் பரவி உள்ளன என்பது வியப்பை அளிக்கும் செய்தியாக இருக்கவில்லை. பழனி தண்டாயுதபாணியே முதல் மருத்துவராக விளங்குவதினால் அந்த மூலவர் சிலையை மாற்றி அமைக்கலாம் என்ற யோசனையை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே அந்த சிலை மேலும் பழுதடைந்து அழிந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் அதற்கான வாழிமுறைகளை கண்டறிய ஒரு உயர்மட்டக் குழுவை அரசாங்கம் நியமித்தது. நல்ல கல்விமானும், பெரும் தெய்வ பக்தி மிகுந்தவருமான நீதிபதி சதாசிவம் அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் ஐந்து உப குழுக்களை ஏற்படுத்தி பல்வேறு வழிகளையும் ஆராய்ந்தது பார்த்து அந்தப் பிரச்னைக்கு தீர்வு தரக் கூடிய வகையில் கருத்துக்களைத் தருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அந்தக் குழுக்களில் இருந்தவர்கள்:

பெரிய மடங்களின் மடாதிபதிகள், சமயத் தலைவர்கள்
புகழ் பெற்ற ஸ்தபதிகள்
ஆகமங்களில் சிறந்து விளங்கியவர்கள்
பூசாரிகள் மற்றும் பண்டாரங்கள்
விஞ்ஞானிகள்
நானும் ஒரு விஞ்ஞானி என்பதினால் அந்த உப குழுவில் இருந்த விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்று இருந்தேன். அந்த மூலவரின் சிலை எந்தப் பொருளினால் செய்யப்பட்டு உள்ளது என்பதைக் கண்டறியும் வேலை எங்களுக்கு தரப்பட்டு இருந்தது. நாங்கள் உண்மையைக் கண்டறியும் குழுவில் இருந்ததினால் மூலவரின் அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டோம். அதை இன்னமும் என் வாழ்நாளில் கிடைத்த பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை ஆராய்ந்து பார்த்தோம். சிலையின் முகமோ எந்த விதமான சேதமும் அடையாமல் புத்தம் புதிய சிலையைப் போலவே காணப்பட்டதைக் கண்டு வியந்தோம். பூதக் கண்ணாடியைக் கொண்டு ஆராய்ந்ததில் அது கருங்கல் அல்லது அதைப் போன்றப் பொருள் போலவே தெரிந்தது. அடுத்து கழுத்துப் பகுதிகளையும் அதற்கு கீழே இருந்த உடல் பகுதிகளையும் ஆராய்ந்தபோது சிலையின் உடல் பாகத்தின் நிலையைக் கண்டு திடுக்கிட்டோம். முகத்திற்கும் உடம்புப் பகுதிக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. உடல் முழுவதும் சிதைந்து போய் சிறு சிறு பள்ளங்களும் இருக்க உடலின் சில பாகங்கள் நீண்டு கூர்மையான பொருட்களைப் போல நீண்டு இருந்தது. இரண்டு கால்களும் ஒரு மெல்லியக் குச்சி ஒரு பீடத்தில் நின்று உள்ளதைப் போல காணப்பட்டது. பலம் இழந்து போய் இருந்த மெல்லிய கால்களினால் எந்த நேரத்திலும் அந்த சிலை விழுந்து விடக் கூடிய அபாய நிலையில் இருந்தது.
ய நிலையில் இருந்தது.

மூலவரின் முகமோ புத்தம் புதிதாக இருக்க உடல் மட்டும் சிதைந்து போய் இருந்ததினால் முன்னர் நம்பப்பட்டதுபோல அந்த சிலை பழுதடைந்து இருந்தது அபிஷேகத்தினால் இருக்க முடியாது என்பது தெரிய வந்தது. அபிஷேகத்தினால் சிலை சிதைந்து உள்ளது என்பது உண்மை என்றால் முகம் மட்டும் எந்த மாறுதலும் அடையாமல் இருக்க, உடல் பகுதிகள் மட்டும் எப்படி பழுதடைந்து இருக்க முடியும் என்றக் கேள்வி எழுந்தது. ஆகவே அபிஷேகம் செய்து சிலை பழுதடிந்துள்ளது என்றக் கருத்து தவறானது என எங்களுக்கு புரிந்தது. #Batlagunducity HD

அடுத்த செய்தி, கர்பக் கிரகத்தில் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்த அர்ச்சகர்கள் மற்றும் பண்டாரங்களுக்கும் பழனியில் இருந்த சித்த வைத்தியர்களுக்கும் இடையே இருந்த தொடர்புப் பற்றியது. அவர்களிடையே இருந்திருந்த தொடர்ப்பினால் சில விஷமிகள் அவ்வப்ப்போது அந்த சிலையின் உடலை சிறிது சுரண்டி அதில் கிடைத்தப் பொருட்களை சித்த வைத்தியர்களுக்குக் கொடுத்து இருக்கலாம், அதைக் கொண்டு அவர்கள் சில மருந்துகளை தயாரித்து இருக்கலாம் என்பதினால்தான் சிலை பழுதடைந்து உள்ளது எனப் பரவலாக கூறப்பட்டது. ஏன் எனில் பழனியில் இருந்த சில சித்த வைத்தியசாலைகள் திடீர் எனப் பெரும் புகழ் பெற்றன. அந்த சிலை எதோ ஒரு வகையிலான கருங்கல்லினால் செய்யப்பட்டு உள்ளது போல தோற்றம் தந்தாலும் அதை விஞ்ஞான பூர்வமாக எங்களால் நிரூபிக்க முடியவில்லை என்பதின் காரணம் அந்த சிலையில் இருந்து விழுந்த எந்தப் பொடித் தூள்களுமே எங்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த சீலையின் மீது ஊற்றப்படும் அபிஷேக நீர் அந்த சிலையின் மீதுள்ள நவபாஷண பொருள் மீது ஏறி வருவதினால் ரசாயன மாற்றம் அடைந்து அது வியாதிகளை குணப்படுத்தும் தன்மைக் கொண்டதாக மாறி விடுகின்றது எனவும், அந்த நீரைப் பயன்படுத்தியவர்களுக்கு பெரும்பான்மையான வியாதிகள் விலகி உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் எங்களிடம் கூறினார்கள். ஆகவே அந்த அடிப்படையிலும் எங்களுடைய சோதனைகளை தொடரலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் நல்ல சந்தனத்தை பசையைப் போல அரைத்து அதை அந்த சிலையின் மீது பூசினோம். அதை இரவு முழுவதும் அந்த சிலையின் மீதே இருக்குமாறு விட்டு வைத்து விட்டு மறுநாள் அந்த சந்தனப் பசையை எடுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கினோம். அணுத்தூள்களை சோதனை செய்யும் கருவியான 'பேர்க்கின் எல்மார் ௭௦௭' எனும் மிக நீளமான கருவியை திரவப் பொருட்களை ஆராய்ச்சி செய்யும் நிலையில் துல்லியமாக நிலை நிறுத்தி விட்டு அந்த சிலையில் இருந்து வெளியேறி மாற்றத்தைத் தரும் பொடிகள் ஏதும் சந்தனத்துடன் கலந்து வருகின்றதா என ஆராய்ந்து பார்த்தோம். என்ன ஆச்சர்யம். சிலை மீது இருந்து எடுத்த சந்தனப் பசையில் எந்தப் பொடிகளுமே கலந்து வரவில்லை என்றாலும், அந்த சந்தனப் பசை மருத்துவ குணம் கொண்டப் பசையாக மாறி இருந்ததைக் கண்டோம். பலமுறை அந்த சந்தனக் கலவையை எடுத்து ஆராய்ந்தபோதும், ஒரே மாதிரியான முடிவையே தொடர்ந்து காட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே இரவு முழுவதும் சிலை மீது நாங்கள் பூசி வைத்து இருந்த சந்தனப் பசை என்ன ரசாயன மாற்றம் அடைந்து இருந்தது என்பதை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அது எங்களுக்கு உணர்த்திய உண்மை என்ன என்றால், எந்த நவீன விஞ்ஞானக் கருவிகள் மூலமும் தெய்வீகத் தன்மைக் கொண்டப் பொருட்களை ஆராய முடியாது என்பதே!!!
அதன் பின் நாங்கள் எங்களுடைய அறிக்கையை தயாரித்து தலைமை செயலாளருக்கு அனுப்பினோம். அவரும் அவற்றுக்கு தேவையான மேற் குறிப்புக்களுடன் அதை அரசாங்கத்திடம் சமர்பித்தார். அந்த சிலையின் உருவ பாதுகாப்பைக் கருதி அந்த சிலைக்கு பயன்படுத்தி வந்த அபிஷேகப் பொருட்களுக்கு பல கட்டுப்பாடுகளை அறிவித்து அதன்படித்தான் சிலைக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்து இருந்தோம். அந்த ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோதே இன்னொரு வதந்தியும் நிலவிக் கொண்டு இருந்ததைக் கண்டோம். அந்த செய்தி என்ன என்றால் சித்த முனிவரான போகர் பழனியில் தான் செய்து வைத்து இருந்த சிலையைப் போலவே மூன்று சிலைகளை செய்ததாகவும், அவற்றில் இரண்டு சிலைகளை பூமியில் எங்கேயோ மறைத்து வைத்து உள்ளதாகவும், தக்க சமயத்தில் தெய்வீகப் பிறவி ஒருவர் அதைக் கண்டுபிடித்து வெளியில் எடுத்து அந்நாள்வரை பயன்படுத்தி பழுதடைந்து உள்ள சிலையை மாற்றி அமைப்பார் என்பதே. இதன் மூலம் தெரிய வந்தது என்ன என்றால் இறைவன் நம்மிடம் கொடுத்து உள்ள பொருட்களை முறையாகப் பயன்படுத்தினால் நாம் பல நன்மைகளை அடைய முடியும். ஆனால் மனிதர்களால் இறைவனது படைப்புக்களை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது. ''மனித குலத்துக்கு தான் செய்து உள்ள சேவை, புராதான காலமாக வந்துள்ள நியமங்களை மதித்து நடக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு மனிதனும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்பதே.

முருகனுடைய சிலையில் இருந்து எந்தப் பொருள் ரசாயன மாற்றத்தைத் தருகின்றது என்பதை நவீனக் கருவியினால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்ற உண்மையை பெரும்தன்மையுடன் ஒரு விஞ்ஞானி வெளிப்படுத்தி உள்ளார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் இந்த தருமணத்தில் நினைவில் நிற்கின்றது '' சூனியத்தில் இருந்துகொண்டு, இந்த அகண்டத்தையே ஆண்டு கொண்டு, நம் கற்பனைகளுக்கு அப்பால் உள்ளவரே கடவுள். அவர் யார் , எப்படி இருப்பார் என்பதை புரிந்து கொண்டு யார் ஒருவர் அவரை உளமார உணர்கிறார்களோ அவர்களுக்கு அவர் காட்சி அளிப்பார்''

வைகாசி விசாகம் சிறப்புகள்

                                              வைகாசி விசாகம் சிறப்புகள்

*விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.  முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.

*வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது. எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்வதால் நோய் நீங்கி நீடித்த ஆயுள் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.

*மகாபாரதத்தின் வில் வீரான அர்ஜுனன் பாசுபத ஆயுத்தை சிவபெருமானிடமிருந்து பெற்ற நாள் வைகாசி விசாகமாகும்.திருமழப்பாடி என்னும் ஊரில் சிவபெருமான் மழு ஏந்தி திருநடனம் புரிந்ததும் இந்நாளே. பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.

*சோழ சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல் வழங்கிட ஆணையை ராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.

*வடலூரில் ராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள் தான். பெரும்பான்மையான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பிறப்பவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கருதப்படுகிறது.

*வான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும் கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார்.இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று வான்மீகி குறிப்பிடுவார்.

*இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும் பெயரிட்டுள்ளார்.

*சித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. இதனையே புத்த பூர்ணிமா என்று அழைக்கின்றனர்.

*இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் நாமும் விரத முறையைப் பின்பற்றி வாழ்வின் உயர்ந்த நிலையை அடைவோம்.

*வைகாசி மாதம் என்பது வசந்த காலம் எனப்படும் இளவேனிற் காலத்தின் பிற்பகுதி ஆகும். எனவே வைகாசி விசாகத்தில் கோயில்களில் வசந்தோற்சவ விழாக்கள் நடத்தப்படுகின்றன.

*இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில் கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம், நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும் விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

*இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை நீரில் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோசன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வித்தியாசமான நைவேத்தியம்

                                               வித்தியாசமான நைவேத்தியம்
கும்பகோணம் உப்பிலியப்பன் - உப்பில்லாத பண்டம்

விராலிமலை முருகன் - சுருட்டு

ஸ்ரீரங்கம் துலுக்க நாச்சியார் - ரொட்டி, வெண்ணெய்

குற்றாலநாதர் - சுக்கு கஷாயம்

சென்னை போரூர்(வடக்கு) சிவன் - மூலிகை கஷாயம்

திருவாரூர் தியாகராஜர் - துாதுவளைக் கீரை, பாகற்காய்

திருச்சி குணசீலம் பெருமாள் - தேங்காய் துருவல்

சிதம்பரம் நடராஜர் - களி, கற்கண்டு பொங்கல்

திருப்பதி ஏழுமலையான் - மண்சட்டியில் தயிர்சாதம்

காஞ்சிபுரம் வரதராஜர் - இட்லி

அழகர்கோவில் சுந்தரராஜர் - தோசை

வைத்தீஸ்வரன்கோவில் முத்துக்குமார சுவாமி - தினைமாவு

சபரிமலை ஐயப்பன் - நெய்ப்பண்டம்

திருக்கண்ணபுரம் மாரியம்மன் - கூழ்

இரிஞ்ஞாலக்குடா (கேரளா)
கூடல்மாணிக்கம் பரதன் - கத்தரிக்காய்

பவானி கூடுதுறை :

                                                                பவானி கூடுதுறை :
விஸ்வாமித்திரரின் காயத்ரி இலிங்கமும் சங்கமேஸ்வரரின் திருவருளும்  - பவானி கூடுதுறை :

           >> பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனும் நாமத்தில் சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார் . இறைவி பெயர் வேதநாயகி அல்லது வேதாம்பிகை ஆகும் . இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.

       >>  அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.

        >> விஸ்வாமித்திரர் நதியின் கரையில் தனியாக இலிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி இலிங்கம் எனப்படுகிறது. காயத்ரி இலிங்கத்தை பூசிக்க விஸ்வாமித்திரரின் பரிபூரண அருளை பெறலாம் .காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை , ஒரு தடவை சொன்னால் போதும், இலட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும்.

        >>  மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரியாற்றின் ஓரத்தில் தனித்து நின்று தன்னிகரில்லாத பலன்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர்.  இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

         >> இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்” அங்கே தானாகவே தோன்றினார்.

   >> இராவணன் இங்குள்ள சகஸ்ரலிங்கத்தை பூஜை செய்துள்ளார் .காயத்ரி இலிங்கம் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது படுகின்றது. நான்கு வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக உள்ளன.

 
        >>  இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. வேதநாயகியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த சந்நிதியின் வலப்பக்கம் சுப்பிரமணியர் சந்நிதி அமைந்துள்ளது. சுப்பிரமணியர் சந்நிதியைக் கடந்து மூலவரான
சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. .

       >> இக்கோவிலில் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாம் நாள் சூரியனின் ஒளி சிவன் சங்கமேஸ்வரர் மற்றும் இறைவி  வேதநாயகி மேல் விழுகிறது .வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறம் உள்ள பசுவுக்கு முன்புறம் மட்டுமின்றி பின்புறமும் தலையுடன் காணப்படுவது அற்புத திருக்காட்சியாகும் ...தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 207 ஆம் திருத்தலம் ஆகும் ..

         >> இத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். முருகன் சந்நிதிக்கு அருகில் ஜ்வரஹரேஸ்வரர்  திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றார்கள் என கூறப்படுகிறது.

        >> இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. நாக தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலம் ஆகும் ..செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள்.

       
  >> குழந்தை பாக்கியம் வேண்டுவதில் இக்கோவிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.

        >> இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான்  மிகவும் சக்தி வாய்ந்தவர் . மாந்தி கிரகத்தின் ரூபத்தில்  இச்சனி பகவான் அருளுவதால்  மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.வாயு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு, இவரை வில்வத்தினால் அர்ச்சித்து அதை உணவில் சேர்த்து கொண்டால் நலம். நாக தோஷம் உள்ளவர்கள், கல்லில் செய்த நாகரைக்கொண்டு வந்து, ஆற்றின் கரையில் இருக்கும் விநாயகர் அருகே பிரதிஷ்டை நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

      >>  அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றுமுள்ளன.

      >> ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு திடுக்கிட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.

        >> இக்கோவிலின் பின்புறமுள்ள இரட்டை விநாயகர் கோவில் பகுதியில், காவிரி, பவானி, அமுதநதி போன்ற மூன்று நதிகள் சங்கமிப்பதால், முக்கூடல் சங்கமம், கூடுதுறை, என அழைக்கப்படுகிறது. பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி சங்கமேஸ்வரர் கோவில் சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருமையான கோவில் ஒருமுறை சென்று வாருங்கள் ...

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...