பணம் எப்பேர்ப்பட்ட தவறுகளையும் மறைக்க உதவும் ஒரு பெரிய ஆயுதம்....
ஒருவர் இறை இல்லம், வணக்க வழிபாடுகள் கட்டிடம் கட்டுவதற்கு 20 லட்ச ரூபாய் நன்கொடையாகக் கொடுப்பார்..
ஆனால் உடன்பிறந்த சகோதரிகளுக்குப் பணத்தை வட்டியில்லாத கடனாக மட்டுமே கொடுப்பார்.
AC ரூம் போட்டு கொடுக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு மொய் 3,000முதல் 50,00 ரூபாய்.. அதே மண்டபத்தில் இருக்கும் சாதாரண அறையில் தங்க வைக்கும் உறவினரின் திருமண நிகழ்விற்கு
1,500 அல்லது 2,000 ரூபாய் மட்டுமே.. எல்லாமே
இது எல்லாமே ஒரு கணக்கு தான் நண்பர்களே....
வீட்டுக்கு வந்தவர்களைக்கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, தான் தரையில் படுத்து உறங்கும் உறவினர்களும்
இருக்கிறார்கள்.
அதே ஹாலில் பெட்ஷீட்டை விரித்துப் படுக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் AC அறைக்குள் நுழைந்து கொள்ளும் உறவினர்களும் இருக்கிறார்கள்.
விருந்தினர்களுக்குக் கட்டிலை கொடுத்து விட்டு, தரையில் உறங்கும் உறவினருக்கு அன்பையும், மாளிகை போன்ற இல்லத்தில் நடுஹாலில் பாய் விரித்து இடம் கொடுத்த உறவினருக்குச் சபை மரியாதையும் கொடுக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உங்களுடைய செல்வத்தைப் பொருத்து தான், உங்களுடைய உறவுகளின் நிலை வலுப்படும்.
ஏனென்றால், பணம் அதிகம் இருப்பவர்கள் நல்லவர்கள் மற்றும் புத்திசாலிகள் என்று எப்போதோ நம் புத்தியில் பதிய வைத்து விட்டார்கள்.
"பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" என்று எப்போதோ அழகாகச் சொல்லி விட்டார்கள்.
உழைப்பால் முன்னேறியவன் அந்தஸ்து பார்க்க மாட்டான்..
அப்படி அந்தஸ்து பார்க்கும் செல்வந்தன் நேர்மையான உழைப்பால் செல்வம் சேர்த்திருக்க மாட்டான்..

No comments:
Post a Comment