Thursday 31 March 2022

நாய் போர்வை வாங்கிய கதை

                                 


! நாய் போர்வை வாங்கிய கதை தெரியுமா உங்களுக்கு ? தெருவில் வசிக்கும் நாய்கள் குளிர் காலத்தில் நடுங்கியபடி உடலை சுருட்டிக் கொண்டு நடுங்கியபடி படுத்திருப்பதைப் பார்த்திருப்பாய். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த நேரத்தில் அந்த நாய் நினைக்குமாம் , " என்ன ஒரு குளிர்! காலைல பொழுது விடிஞ்ச உடனே முதல் வேலையா கடைக்குப் போய் ஒரு நல்ல போர்வை வாங்கணும். இந்த குளிர் பிரச்சினை இன்னையோட முடிஞ்சது. நாளைக்கு ராத்திரிலேர்ந்து ஐயா போர்வையை போத்திக்கிட்டு ராஜா மாதிரி தூங்கப் போறார் பாரு ". விடியும் வரை அடிக்கடி விழித்தெழுந்து இதையே சொல்லிக் கொண்டிருக்கும். காலை கண் விழித்து எழுந்ததும் சோம்பல் முறித்துவெயில் சுள்ளென்று அடித்தது அட இவ்வளவு வெயில் அடிக்குது போர்வை வாங்கியிருந்தால் ஏமாந்து தான் போய் இருக்கணும்என்று நினைத்தது. மறுபடியும் இரவு வந்ததுகுளிரில் நடுங்கியபடியே நாளைக்கு காலைல பாரு. கண்டிப்பாமுதல் வேலையா போர்வை வாங்கிய ஆகணும் என்று நினைத்தது இதுபோல் சில மனிதர்களுடைய வாழ்க்கையும் கண்டிப்பாக நாளை


Wednesday 30 March 2022

நான்” என்ற எண்ணம் இருக்கலாமா.....??? ஒரு அலசல் :-

                      நான்” என்ற எண்ணம் இருக்கலாமா.....??? ஒரு அலசல் :-


 எப்படிப்பட்டவன்.......???  


நல்லவனா.......??? 


பொல்லாதவனா......???  


நான் என்ற எண்ணம் இருக்கலாமா.....???  


இருக்கக் கூடாதா......??? 


ஒரு அலசல் :- 


என்னிடம் நான் என்ற அகம்பாவம் கிடையாது என்று நினைத்து விட்டாலே 


நான் தான் என்ற அகம்பாவம் தாண்டவம் ஆடுகிறது என்றே பொருள் 


தன்னை முன்னிலை படுத்த வேண்டும் என்று நினைத்தால் 


"நான்" அங்கே குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் 


தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் 


தான் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் 


இதே நிலை தான் 


தன்னை யாரும் கவனிக்கவில்லையே என்று கவலைப் பட்டாலும் 


அதுவும் அகங்காரத்தின் அடுத்த பக்கம் தான் 


கவலையை வெளிப்படுத்தினாலும் அகம்பாவம்


வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே கவலையுற்று இருந்தாலும் ஆணவம் தான் 


தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்றாலும், 


அதை நினைத்து கண்ணீர் விட்டாலும் அகம்பாவமே ஆனந்த தாண்டம் ஆடுகிறது என்று அர்த்தம் 


ஆக, கவலைப் படுதலும், 


கண்ணீர் சிந்துவதும், 


கௌரவம் வேண்டும் என்று நினைப்பதும், 


அகம்பாவத்தின் வெவ்வேறு தோற்றப்பாடுகள் தான் 


இந்த விஷயத்தில் ஆன்மீக கருத்திற்கும், 


சுய முன்னேற்ற சிந்தனைக்கும் முரண்பாடுகள் இருப்பது போல தோன்றும் 


ஆன்மிகம் தன்னை அறியச் சொல்லும்.  


ஆனால், 


சுய முன்னேற்ற சிந்தனை தன்னை முன்னிலை படுத்த சொல்லும் 


இதில் எதை எடுத்துக் கொள்வது.....???


தன்னிலை விளக்கம் பெற்றால் நமக்கு தெளிவு வந்துவிடும் 


எங்கு..??? எதற்காக.....??? எப்படி நானை கையாள்வதென்று 


நான் என்னும் உணர்வு நிலை உணர்ச்சி நிலையாக மாறும்போது தான் பிரச்சினை தலை தூக்குகிறது 


அதற்கு மகரிஷி கொடுக்கும் பெயர் தான் “தன்முனைப்பு”


ஒரு காரியத்தை தன்னால் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தன்னம்பிக்கை


தன்னால் தான் முடியும் என்று நினைப்பது தற்பெருமை.  


தன்னால் மட்டுமே முடியும் என்பது தன்முனைப்பு


சுய மதிப்போடு வாழ முற்படுவது கெளரவம் 


சுயத்தை உயர்த்த பிறரை தாழ்த்துவது கர்வம் 


அகத்தை மீறும்போது 


அது பாவத்தை கொண்டு வந்து சேர்த்து விடுகிறது 


அதனால் தான் “அகம்பாவம்” என்று சொல்லி வைத்தார்கள்.


அன்றாட வாழ்வில் உறவுகளுக்குள் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுக்கவில்லையானால் 


நாமும் பதிலுக்கு அதே முறையை வெளிப்படுத்தி 


தன்னை சுய மரியாதை மிக்கவராக காட்டிக் கொள்கிறோம்.  


இதற்கு துணையாக 


“மதியாதார் தலை வாசல் மிதியாதே”  


என்ற பழமொழியையும் முன்னிலை படுத்தி சமாதானம் தேடுகிறோம் 


ஆனால், 


“ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்பதை மட்டும் மறந்து விடுகிறோம் 

 

நான் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று பார்ப்போம் 


எந்த ஒரு காரியத்தையும் முனைப்போடு செய்தால் தான் காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் 


இந்த இடத்தில் முனைப்பு முயற்சி, செயல் வேகம், ஈடுபாடு, தூண்டல், ஆர்வம், செயல் ஒழுக்கம், பங்களிப்பு பன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு 


நான் என்ற எண்ணம் சுயத்தைப் பற்றிய சிந்தனையாக மட்டும் இருக்கும் பட்சத்தில் ஒரு தீங்கும் நேராது 


ஏனெனில், 


சுயத்தினுடைய தன்மை சமப்படுத்துதல், ஒன்றாக்குதல், நிலைப்படுத்துதல், பாகுபாடற்ற தன்மை.....


எந்த ஒரு வகையிலும் நான் என்ற உள்ளார்ந்த தன்மை பிறரை தாக்காமல் இருக்குமோ 


அந்த நான் உயர்ந்த தன்மை கொண்ட நான்.  


துன்பம் தருபவர்களுக்கு கூட ஊகத்தையே உரமிட்டு 


அவர்களை காயப்படுத்தாமல் விலகிச் சென்றால், 


இந்த நான் நம்மை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருக்கும்.  


இந்த நிலையில் உள்ள "நான்" என்ற உணர்வு ‘பொல்லாதவன்’ அல்ல “பொலன் ஆனவன்” (பொலன் = தங்கம். தமிழ் அகராதியில் தேடி எடுத்த வார்த்தை)


எண்ணம் போல் வாழ்வு

           


  உயர்ந்த எண்ணமே நல் வாழ்வை தரும்.,’’ 



உலகின் மிகச் சிறந்த வைரம் நம்மிடம் தோன்றும் எண்ணங்களே.. 


எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள்.. 


பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது. 


இறுக்கமான மனிதர்களாகவும், எந்திர கதியான மனிதர்களாகவுமே தென்படுகின்றனர்.


எண்ணக் குவியல் களின் கலவைகளையும், சிந்தனை ரேகைகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தைக் காணும் திசை எல்லாம் பார்க்க முடிகிறது.


சக மனிதனைக் கண்டு மகிழும் உள்ளமோ, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுதலோ இல்லாமல் தனியொரு உலகில் சிந்தனைகளோடு பயணிக்கும் உலகமாக மாறி விட்டது. 


இதற்கெல்லாம் அடிப்படை என்ன  என்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.


எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும் போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. 


மனித நடத்தை மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை


நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும்.


ஒருவரின் எண்ணம் நல்ல விதமாக இருந்தால் செயலும் நல்ல விதமாக இருக்கும். 


கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். எண்ணங்கள் செயல்களாகும். 


செயல்கள் பழக்க வழக்கங்களாகும்.

பழக்க வழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும்..


 ஒரு தடவை ஒரு அப்பாவும் மகனும் ஒரு மலை மீது நடந்து சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது பையன் கல் தடுக்கி கீழ விழுந்து விட்டான்..


அடிபட்டதனால் அவன் ''ஆ..ஆ..ஆ..ஆ..ஆ'' ன்னு கத்தினான். தூரத்துல இதே மாதிரி இவன் கத்தின மாதிரியே '' ஆ ஆ ஆ ஆ ஆ'' சத்தம் திரும்ப கேட்டுது..


பையன் சத்தம் வரும் திசையை பார்த்து,'நீ யார்'' என்று சத்தமாக கேட்டான். திரும்பவும் அந்தப் பக்கத்தில் இருந்து' நீ யார்''னு கேட்டுது.


பையன், '' நான் உன்னை விரும்புகிறேன்'' என்று சொன்னான். அந்தப்பக்கமும் அதே வார்த்தை திரும்ப வந்தது..


பையன் '' நீ ஒரு கோழை" என்று சொன்னான்.அதே வார்த்தை திருப்பி கேட்டுது.. பைனுக்கு ஒரே ஆச்சிரியம். அவனின்       அப்பாவிடம்  கேட்டான்...


'' அது யாருப்பா அவன்.., நான் சொல்வதை எல்லாம் திரும்ப சொல்றானே'' ன்னு கேட்டான். 


அவனின் தந்தை சொன்னார். அது யாரும் இல்லை. அது உன் பேச்சின் எதிரொலி என்று சொல்லி விட்டு இதைப் போலத்தான் நம் வாழ்க்கை என்று சொன்னார்..


அப்பா சொன்னார்,' 'நீ என்ன எல்லாம் கொடுக்கிறாயோ அதுதான் உனக்கு திரும்ப கிடைக்கும்.


உன் பழக்க வழக்கம் எப்படி இருக்கின்றதோ, அது மாதிரிதான்  உன்னிடத்தில் பழகின்றவர்களும் இருப்பார்கள்..


உன் கோழைத்தனம் திரும்பவும் கோழைத்தனமான வாழ்க்கையைதான் உனக்கு கொடுக்கும்.


நீ உன்னை சுற்றி இருக்கிறதை ரசிச்தாய் என்றால் வாழ்க்கையும் உன்னை ரொம்ப ரசிக்கும்படியாக வைத்து இருக்கும்'' னு சொன்னார்.,


நம் மனதில் தோன்றும் எந்த எண்ணமும் வீணாவது இல்லை என்பதை நினைவில் கொள்வோம்.


மகிழ்ச்சியான, உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படை யான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம்.


நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்..


                        

இலங்கேஸ்வரான் உபதேசம்

                             


       இலங்கேஸ்வரான் உபதேசம்

 ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணனிடம் உயிர் பிரியாமல் இருந்தது. 


அப்போது ராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன் ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் போய் நான் கேட்டதாகக் கூறி அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா என்று கூறி அனுப்பினார். 


லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம் அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும் எனவே எனக்கு உபதேசியுங்கள் என்று வேண்டி நின்றான். 


லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ராமர் தன்னிடத்தில் வைத்திருக்கும் மதிப்பு அறிந்து மகிழ்வுடன் தன் அறிவுரைகளைச் சொன்னான். 


லட்சுமணா ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக நான் இருந்தேன். நவக்கிரகங்களும் எமனும் இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 


நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம் யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணி அனைவரையும் ஏற்றிச் செல்ல எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. 


ஆனால் இந்த நல்ல எண்ணத்தைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 


சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 


அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.


1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி அது பலன் தரும்.


2. தீய செயலைத் தள்ளிப் போடு தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.


3. உன் சாரதியிடமோ வாயிற்காப்போனிடமோ சகோதரனிடமோ பகை கொள்ளாதே உடனிருந்தே கொல்வார்கள்.


4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் எப்போதும் வெல்வோம் என்று எண்ணாதே.


5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.


6. நான் அனுமனை சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.


7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.


8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.


9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.


10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.


11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.


லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டான்.

Saturday 26 March 2022

பணத்தைப் பற்றி சில வரிகள்




 

     பணத்தைப் பற்றி சில வரிகள்

குழந்தை இல்லாதவர்கள் மற்றவர்கள் குழந்தை மேல்

அதிகமாக பாசம் வைக்க மாட்டார்கள் பணம் ஒன்றே குறிக்கோள் ஆக இருப்பார்கள்


பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்று சொல்லுவார்கள் அந்த அளவிற்கு பணத்தின் ஆதிக்கம் மனிதர்களிடையே உண்டு.

இந்த உலகில் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் சக்தி பணத்திற்கு அதிகமாக இருக்கின்றது. இந்த பணத்தாசை அதிகமானால் ஒருவன் நிம்மதியாக இருக்க முடியாது.

பணமும் மகிழ்ச்சியும் பரம
விரோதிகள். ஒன்றிருக்கும்
இடத்தில் மற்றோன்று
இருப்பதில்லை.

பணத்தை வைத்திருப்பவனுக்கு
பயம். அது இல்லாதவனுக்கு
கவலை.

பணத்தை அடிக்கடி குறை
கூறுவார்கள். ஆனால்
அதை யாரும்
வெறுப்பதில்லை.

பணத்தின் உண்மையான
மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போது தான்
தெரியும்.

பணத்தை சம்பாதிக்க
வேண்டும் என்பதற்காக
ஒழுக்கத்தை விற்று
விடாதீர்கள்.

சிலர் பணத்தை வெறுப்பதாக
கூறுவார்கள். ஆனால்
அவர்கள் வெறுப்பது
பிறரிடமுள்ள
பணத்தை தான்.

பணத்திற்கு கடல் நீரின்
குணம் உண்டு. கடல்
நீரைக் குடிக்க குடிக்க
தாகம் அதிகமாகும்.
அது போன்று தான்
பணமும்.

பணம் ஒன்று தான்
உங்கள் வாழ்வின்
இலட்சியம் என்றால்
நிச்சயம் அது தவறான
வழியிலே தான்
தேடப்படும்.

நாம் பணக்காரர்களாக
இருக்க கடமைப்படவில்லை.
ஆனால் ஒழுக்கம்
உள்ளவர்களாக இருக்க
கடமைப்பட்டிருக்கிறோம்.

பணக்காரன் ஆக வேண்டுமா..?
அதற்குப் பணத்தைக் குவிக்க
வேண்டியது இல்லை.
தேவைகளைக்
குறைத்துக் கொள்.

பணம் இருந்தால் உன்னை
உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால்
யாருக்கும் உன்னைத்
தெரியாது.

மனிதனுக்கு பெருமை
சேர்ப்பது பட்டமோ..?
பதவியோ..? பணமோ..?
அழகோ..? அல்ல.
அறிவு ஒன்றே
ஒருவருடைய உயர்வுக்கு
வழிவகுக்கும்.

பணம் இருந்தால் நீங்களா..?
என ஆச்சரியமாக கேட்பதும்.
அதுவே பணம் இல்லாமல்
இருந்தால் “ஓ நீயா”
என்று கேவலமாகவும்
பார்ப்பது தான்
இந்த உலகம்.

பணமா பாசமா என்று
கேட்டால் எல்லோரும்
பாசம் என்று தான்
சொல்லுவார்கள். ஆனால்
அந்த பாசத்தின் அளவை
நிர்ணயம் செய்வதே
இங்கே பணம் தான்.

இங்கு உலகம் உன்னை
தூக்கி வைத்து ஆடுவதையும்
தூக்கி எறிந்து வீசுவதையும்
நிர்ணயிப்பது உன் குணமல்ல
நீ வைத்திருக்கும் பணம்.

பணம் கொடுத்தால் பல
உறவுகள் உன்னை
தலையில் தூக்கி
வைத்துப் போற்றும்..
கொடுத்த பணத்தை
திரும்ப கேட்டுப் பார்
மண்ணை வாரி
தூற்றும்.

உயிருள்ள உறவுகளில்
யார் யார் முக்கியம்
என்று உயிரற்ற
பணமே முடிவு செய்கிறது.

ஒருவரின் இறுதி
ஊர்வலங்கள்
எடுத்துரைக்கும்..
சம்பாதிக்க வேண்டியது
பணங்களை அல்ல
நல்ல மனங்களை
என்று.

கையில் இருக்கும்
போதும் காலி செய்யும்
போதும் தெரிவதில்லை
தேவைக்காக பிறரிடம்
கை கட்டி கை நீட்டி
வாங்கும் போது தான்
தெரியும் பணத்தின்
அருமை என்னெவென்று.

காலம் நமக்கு
கற்றுக் கொடுத்த பாடம்
“பணம் இருந்தால் நாலு பேர்
நம்மை திரும்பி பார்ப்பார்கள்
பணம் இல்லையோ நாம்
நாலு பேரை திரும்பி
பார்க்க வேண்டும்.”


கண்ணாடியை வீட்டில் இப்படி வைத்தால்

                              




          கண்ணாடியை வீட்டில் இப்படி வைத்தால்

காசு பணம் இல்லாத வீடுகள் கூட இருக்கும். ஆனால் கண்ணாடி இல்லாத வீடு கட்டாயமாக இருக்காது. நம்மை அப்படியே, நமக்கு பிரதிபலித்துக் காட்டும் இந்த கண்ணாடியை வீட்டில் எந்தெந்த இடத்தில் எல்லாம் எப்படி வைக்க வேண்டும் எப்படி வைக்கவே கூடாது என்பதை பற்றியும், இந்த கண்ணாடியின் மூலம் நம் வீட்டில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்பதை பற்றியும் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் உங்களுடைய வீட்டில் இந்த தவறுகளை செய்து வந்தால் அதை கொஞ்சம் மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்.

முதலில் படுக்கை அறையில் கட்டிலுக்கு நேராக கண்ணாடி கட்டாயம் இருக்கக் கூடாது. இது நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் கண்ணாடியை இப்படி வைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன தெரியுமா. காலையில் எழுந்து நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் படுக்கை அறையில் இருக்கும் கண்ணாடியில் கண் விழித்தால் உங்களால் வாழ்க்கையில் ஒருபோதும் ஜெயிக்கவே முடியாது. வாழ்க்கையில் தோல்விகள் பின் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம். உங்கள் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருந்தால் இரவு அந்த கண்ணாடிக்கு ஒரு திரை போட்டு விடுங்கள். காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு அதன்பின்பு அந்த திரையை விலக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக நிறைய பேர் வீட்டு நிலை வாசலில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய விஷயமாக இருந்தால் பிரச்சனையில்லை. ஆனால் சில வீடுகளில் நிலை வாசலில் கண்ணாடியை வைப்பதன் மூலம் பிரச்சினைகள் அதிகமாக வருகின்றது. உங்கள் வீட்டில் அதிகப்படியான பணப்பிரச்சனை சண்டை சச்சரவுகள் இருந்தால் நிலை வாசலின் வெளியில் இருக்கும் கண்ணாடியை எடுத்து நிலை வாசலுக்கு உள்ளே, நேராக வீட்டிற்குள் இருக்கும் சுவற்றில் மாட்டி வையுங்கள். வீட்டிற்குள் நுழைபவர்கள், வீட்டிற்குள் நுழைந்தவுடன் பார்க்கும்படி இந்த கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

நிலைவாசலின் வெளிப்பக்கத்தில் கண்ணாடியை வைக்கக்கூடாதென்று ஏன் சொல்லுகிறார்கள். நிலைவாசல் என்பது மகாலட்சுமியும் அஷ்டலட்சுமிகளும் வாழும் இடம். அந்த இடத்தில் கண்ணாடியை வைத்து விட்டால், உள்ளே நுழைபவர்களுடைய எண்ணங்களை அந்தக் கண்ணாடி தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளும். அப்போது அந்த இடத்தில் இறை சக்தி குறைந்து விடும் என்பதற்காகவே நிலை வாசலில் கண்ணாடியை வைக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் குளியல் அறையில் கண்ணாடி வைக்கும் பழக்கம் உள்ளது. குளியல் அறையில் கண்ணாடி வைக்கக்கூடாது. அப்படியே கண்ணாடி குளியலறையில் தேவை என்றால், நீங்கள் குளிக்கும் போது உங்களுடைய பிம்பம் கண்ணாடியில் தெரியும் படி இருக்கக் கூடாது. முகம் கழுவும் இடம் கைகழுவும் இடம், அதாவது வாஷ்பேஷன் மேலே கண்ணாடியை வைக்கலாம். நாம் குளிப்பது அப்படியே பிரதிபலிக்கும் படி எதிர்ப்பக்கத்தில் கட்டாயமாக கண்ணாடி இருக்கக்கூடாது.

குளியல் அறையில் கண்ணாடியானது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் அல்லது கிழக்கு திசையில் உள்ள சுவற்றில் தான் இருக்க வேண்டும். மாறாக குளியலறையில் தெற்கு திசை சுவற்றில், மேற்கு திசையில் உள்ள சுவற்றில் கண்ணாடியை மாட்டி வைத்திருந்தால் வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய் படுவார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு மன பயம் இருக்கும். சில பேருக்கு மலச்சிக்கல் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

இதேபோல் வீட்டிற்குள் அதாவது ஹாலில் அல்லது வேறு ஏதாவது இடத்திலோ கண்ணாடியை வைத்து இருந்தால் அதை வடக்கு திசையிலும் கிழக்குத் திசையிலும் வைக்கக்கூடாது. தெற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும், மேற்கு திசையில் இருக்கும் சுவற்றிலும் தான் வீட்டிற்குள் கண்ணாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய வீட்டில் கஷ்டம் இருந்தால் மேல் சொன்ன படி கண்ணாடியை ஏதாவது ஒரு இடத்தில் நீங்கள் தவறாக வைத்திருந்தால் கண்ணாடி இருக்கும் இடத்தை சரியான இடத்திற்கு மாற்றி பாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்ல மாற்றம் வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்

உலகில் மிக பெரியவை [பொது அறிவு ]

 பொது அறிவு

  1. உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
  2. உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
  3. உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
  4. உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோ மீட்டர்)
  5. உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி எது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
  6. உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522 மீட்டர்)
  7. உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
  8. உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
  9. உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
  10. உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
  11. உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
  12. உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
  13. உலகிலேயே சிறிய கண்டம் எது? ஆஸ்ரேலியா
  14. உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
  15. உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
  16. உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீரப்புஞ்சி
  17. உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
  18. சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9 நிமிடம். 9.54 செக்கன்
  19. உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
  20. உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார் (சிலி) 5.990 மீட்டர்
  21. உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
  22. உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
  23. உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
  24. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979 மீட்டர்
  25. உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
  26. உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
  27. உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
  28. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
  29. உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
  30. உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
  31. உலகிலேயே மிகப்பெரிய பூ எது? ரவல்சியாஆர்ணல்டி
  32. உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
  33. உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
  34. உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்
  35. ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
  36. உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? ஆஸ்ரேலியா
  37. உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
  38. உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
  39. உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
  40. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
  41. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின் (சீனா)
  42. உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
  43. கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
  44. உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
  45. உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
  46. உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை (manas hussain)

மூலிகை இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும்

 




துளசி: ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

வில்வம்:

காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

அருகம்புல்:
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

கல்யாண முருங்கை (முள் முருங்கை):
அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.

கொத்தமல்லி:
இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.

வல்லாரை:
நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

தூது வேளை:
நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.


கறிவேப்பிலை:
நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எரிச்சல், ஈரல் கோளாறுகள் மறையும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

புதினா:
நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி. புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன

கற்பூர வல்லி (ஓமவல்லி):
மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும். 

Thursday 24 March 2022

விதி


 விதி 

.

இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்.

.

ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது.

.

அதை பரிசோதித்த மருத்துவர்

இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,

இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்.

கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,

கவலைப்படாதே!! இந்திராணி...


நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...


ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதி விடுவோம் என்று சொல்லிவிட்டு

பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..


விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

.

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...

நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.


ஆனால் உன் கிளி இறக்குந் தறுவாயிலி ருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.


வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.


விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.


உயிர்களையெடுக்கும் பொறுப்பை நான்

எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.


வாருங்கள் ....நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி 

அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.


தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.


விஷயம் முழுவதையும் கேட்ட அவர் ,

ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில்? ,

எந்த சூழ்நிலையில்?, என்ன கார‌ணத்தால்? எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.


அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.


வாருங்கள்... அந்த அறைக்குச்சென்று

கிளியின் ஆயுள் ஓலை எது? என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்சென்றார்.


இப்படியாக

இந்திரன்,பிரம்மா,விஷ்ணு,  சிவன் , எமதர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.


அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.


உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.


அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.


அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....


அதில்,,,


இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ

அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

.

இதுதான் விதி!!


விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!

எங்கே? எப்படி முடியும்!!!

என்பது எழுதினவனுக்கே 

தெரியாது என்பது தான் உண்மை?! 


வாழும் காலம் நிரந்தரம் இல்லை? 

வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக சிநேகமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!


உயிருடன் இருக்கும் போதே அனைவருடனும், அனைத்து ஜீவராசி களுடனும்  அன்பு காட்டி ஆனந்தமாக வாழ்வோம்!

இறையன்புடன் .....

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...