Friday 29 March 2019

குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்


                               

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

                            குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம் 


ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி ,
தேடிய ஞாயிறு ,செவ்வாய் , சனி தனில் ,
கூடிய ரோமம் குறைத்திட வல்லிரேல் ,
மாடு , மக்கள் , மைந்தர் , மாள்வீரே ---
-
பாடல் விளக்கம் :
&&&&&&&&&&&&&&&&&&
ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி மாதங்களில் , ஞாயிறு , சனி , செவ்வாய் , கிழமைகளில் , குழந்தைக்கு முடி எடுத்தால் , மாடும் , மக்களும் ,பிள்ளைகளும் இறந்து விடுவார்கள் என்பதாம் --
பொதுவாகவே இந்த கருத்தை தலைச்சன் குழந்தைக்கு , முதல் முடி எடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -- 2 வது 3 வது குழந்தைக்கும் முதல் முடி எடுக்க இந்த விதிகளையும் பயன் படுத்துங்கள் -
2 , 3 , வது மொட்டை அடிக்கும்போது இந்த விதிகள் தேவை இல்லை—பொதுவாகவே ஞாயிறு கிழமைகளில் முடி எடுக்க , சுப காரியங்கள் செய்ய தடைகள் உண்டு --- ஆனால் அனுஸ்டானத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது -- ஆகவே தான் ஞாயிறு கிழமைகளில் சுப முகூர்த்தம் பஞ்சாங்களில் குறிக்கப் பட்டுள்ளது -
-
இசை ஞானி இளையராஜா அவர்கள் தமிழ் நாட்டில் தற்போது உயிருடன் உள்ள சித்தர்களை பௌர்ணமியில் நேரில் சந்தித்து ஆசி பெற்று , பௌர்ணமியில் மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் -- இதன் பிறகு தான் அவர் சிம்பொனி இசைத்து உலகப்புகழ் பெற்றார்கள் –
-
எனக்கு தெரிய சில சித்தர்கள் , அம்மாவசை அல்லது பௌர்ணமியில் முக சவரம் அல்லது மொட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறனர் –
-
மருத்துவர்கள் அல்லது நாவிதர்கள் நமது ஊர்களில் சனிக்கிழமைகளில் வார விடுமுறையும் , அம்மாவாசைகளில் , மாத விடுமுறைகளும் விடப்படுகின்றனர் – இது ஊறுக்கு ஊர் விடுமுறைகள் மாறுபடும் –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாள் மாதம் என்பது ஆகும் -- ஆதி காலம் தொட்டே புரட்டாசி சனிக்கிழமைகளில் பழைய சமையல் மண் பாண்டம எடுத்து விட்டு , புதிய சமையல் மண் பாண்டம் வாங்கி ,சமையல் செய்து , இறைவனுக்கு புரட்டாசி 5 சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளுகை , படைத்தது , துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டு , பெருமாள் கோவிலுக்கு சென்று திருக்கோடி தீபம் ஏற்றி , அன்னதானம் செய்யும் வழக்கம் இன்றும்கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது – அன்று மொட்டை போடுவதும் வழக்கத்தில் உள்ளது – 5 வது கடைசி சனிக்கிழமைகளில் சொந்தம் , பந்தம் , உற்றார் , உறவினர்களையும் , அழைத்து அன்னதானம் செய்யும் வழக்கம் உள்ளது –
-
மேலும் புரட்டாசி மாதம் என்பது திருப்பதி பெருமாள் மாதம் ஆகும் – சுமார் 1௦௦ வருடங்களுக்கு முன் புரட்டாசி 1 ஆம் தேதி நடைபயணம் செய்து 1௦ நாட்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்து மொட்டை போட்டு , பின் நடை பாதையாக வீடு திரும்பி வந்தனர் , 1 மாதம் முழுவதும் பெருமாள் மாதம் ஆக வழிபட்டு வந்தனர் – ஆன்னால் தற்போது கார் , ரயில் , பஸ் , ஏரோப்ப்லன் , மூலம் திருப்பதி செல்லுகின்றனர் – ஆனாலும் இன்றும்கூட நடை பாதையாக திருப்பதி சென்று தரிசனம் செய்து , பின் பஸ்ஸில் ஏறி திரும்பி ஊருக்கு வருகின்றனர் --

9 comments:

  1. 27.6.21 Sunday kulanthaiku muthal mottai podalama

    ReplyDelete
  2. July 23 1st mottai podalaamaa

    ReplyDelete
  3. August 20 1st mottai pottu kaathu kuthalama

    ReplyDelete
  4. intha week, mottai poda sirantha naal...

    ReplyDelete
  5. April 15th first mudi irakkalaam aa?

    ReplyDelete
  6. March 4 2022 first mottai podalama for boy baby??

    ReplyDelete
  7. March 24 kuzhanthaiku mudhal mudi yekukkalama

    ReplyDelete
  8. 2 years completed in March in which month we can take the hair

    ReplyDelete

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...