Wednesday 17 April 2024

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள் கீழ்கண்ட மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும்.
மந்திரம்
ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய
தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச
டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா.🌹
.ஆன்மீக குறிப்புகள்!
திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.
. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.
விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.
ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.
வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.
பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

Tuesday 16 April 2024

யோனிப்பொருத்தமும் திருமண வாழ்வில் வெற்றியும்

 யோனிப்பொருத்தமும் திருமண வாழ்வில் வெற்றியும்

----------------------------------------------------------------------------------------
(கட்டுரை ஆக்கம்: திரு. சண்முகவேல் வி.ஏ ) Shanmogavel VA
திருமணம் என்பது உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாத பெரிய கோட்டை. வெளியே இருப்பவன் உள்ளே செல்ல ஆசைப்படுகிறான். உள்ளே இருப்பவன் வெளியேற சிந்திக்கிறான். இது ஒரு முறை கவியரசு கண்ணதாசன் வட பழனி முருகன் கோவிலில் உரயாற்றியபோது சொன்னது.
நமது சமுதாயத்தில் திருமணம் என்பது தாம்பத்திய சுகத்தை அனுபவிப்பதற்காக கொடுக்கப்பட்ட ஒரு அங்கீகாரமாகும். பெரியோர்களின் வாக்குப்படி சிற்றின்பத்தை அனுபவிக்க ஒரு அங்கீகாரம். கடவுள் தன் படைப்புகள் அனைத்தையும் உடல் இச்சையுடன்தான் படைத்துள்ளான். உயிர் உற்பத்தி சங்கிலி எந்த இடத்திலும் அறுந்து விடக்கூடாது என்பதுதான் படைத்த கடவுளின் நோக்கம். மேற்கத்திய நாடுகளில் ஒருவனுக்கு ஒருத்தி என்றோ, திருமணத்திற்குப்பின்புதான் தாம்பத்தியத்தில் ஈடுபடவேண்டும் என்ற கட்டுப்பாடோ கிடையாது, எனவே யோனிப்பொருத்தம் அவர்களுக்கு முக்கியமில்லை. ஆனால் நம் சமுதாயத்தில் திருமணத்திற்கு பின்புதான் தாம்பத்திய உறவு கொள்ளவேண்டும் என்ற நிலை தற்பொழுதும் உள்ளது.
தாம்பத்தியத்தின் மூலம் சிற்றின்பம் துய்ப்பதும் , அதன் மூலம் குழந்தைகள் பெற்று மழலை இன்பம் அனுபவிப்பதும் இந்த யோனியின் அடிப்படையில்தான். நமது ரிஷிகள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப்பின் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மிருகத்தை குறியீடாக வைத்துள்ளார்கள்.
ஒரு பெண் கணவனிடமிருந்து மன மகிழ்ச்சியையும், நிறைவையும்,ஒரு ஆண் மனைவியிடமிருந்து அன்பையும் பெறுவதற்கு யோனிப்பொருத்தம் மிகவும் முக்கியமானதாகும். ஆண்,பெண் யோனிகள் பொருந்தினால் ஜோதிட பொருத்தம் உத்தமம் என்கின்றன சாஸ்திர விதிகள்.
ஆண்,பெண் உறுப்புகளின் நீளம், அகலம், ஆழம், காம சுகம் கிடைக்கும் விதம் இவற்றைக்குறி காட்டுவதுதான் யோனியாகும். மகிழ்ச்சியான தாம்பத்தியம் நன்மைகளைக்குறி காட்டும்.
ஆண் உறுப்புகள் தோராயமாக நான்கு முதல் ஆறு அங்குல நீளம் வரை இருக்கும். ஒரு சிலருக்கு எட்டு அங்குல நீளம் கூட இருக்கும். ஆண் உறுப்பின் அகலம் இரண்டு முதல் இரண்டரை அங்குலம் வரை இருக்கும். ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு கூடுதல் அளவிலும், இன்னொருவருக்கு குறைவான அளவிலும் யோனிப்பகுதி அமைந்தால் இன்பம் கிடைப்பது அரிதாகிவிடும். இருவருக்கும் சரியான நீளம்,அகலத்தில் யோனி அமைந்தால் மட்டுமே இன்பம் கிடைக்கும். யோனிப்பொருத்தத்தை மிருகப்பொருத்தம் என்று கூறுவர்.
குறைவான ஆழமுள்ள யோனியை உடைய பெண்ணுக்கு அதிக நீளமுள்ள ஆண் உறுப்பைக்கொண்ட கணவன் அமைந்தால் பெண்ணை பலாத்காரம் செய்வது போல் வலிதாளாமை பெண்ணுக்கு ஏற்படும். இவர்களிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகம், மனக்கசப்புகள் உண்டாகும். இவர்களில் ஒரு சிலர் சமாளித்துக்கொண்டு வாழ்வர். ஆழமான யோனியைக்கொண்ட பெண்ணுக்கு , நீளம் குறைவான ஆணுறுப்பைக்கொண்ட கணவன் அமைந்தால் ஆணுக்கு தாம்பத்தியத்தில் திருப்தி ஏற்படும்,ஆனால் பெண்ணுக்கு திருப்தி ஏற்படாது. இப்படி அமைந்த தம்பதிகளில் பெண்ணுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். இவர்களிடையே உள் மனப்போராடமும் ,சஞ்சலமும் ஏற்பட்டு பிள்ளைகள் பிறந்த பின் ஆண் மற்றொரு பெண்ணை நாடிச்செல்வான். பெண்ணும் இதேபோல் மறைமுகமாக வெறொரு ஆணை நாடுவாள். கடைசியில் இவர்கள் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிடுவர். சிலர் பரஸ்பரம் சந்தேகத்திலேயே வாழ்க்கையை ஓட்டுவர். அல்லது தவறு செய்துவிட்டு வெளியில் தெரியாமல் இருந்துவிடுவதும் உண்டு.இவ்வகைப்பலன் கிரக நிலைகளின் அடிப்படையிலும் அமைவது உண்டு.
திருமணத்திற்கு முன் சிலர் தவறு செய்திருந்தாலும் ,திருமணத்திற்குப்பின் யோனிப்பொருத்தம் சரியாக அமையும் பட்சத்தில் தவறு செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். யோனிப்பொருத்தம் சரியாக அமைந்துவிட்டால் இருவரும் உணர்ச்சி தீர அனுபவித்து மன நிறைவு பெறுவார்கள். வெளியில் தேடும் நிலை ஏற்படாது. தாம்பத்தியம் மட்டும் சரியாக அமைந்துவிட்டால் எவ்வளவு கருத்து வேற்றுமை வந்தாலும் படிதாண்டுவதில்லை. வெளி வட்டார நபர்கள் இவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியாது.
பகை யோனி என்பது அளவு கூடுதல் குறைவாக உள்ளதுதான். ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தால் தவறு செய்யாமல் மன வருத்தத்தோடு சிலர் வாழ்வதுண்டு.
ஜாதகத்தில் லக்கினாதிபதி, இரண்டாம் வீட்டதிபதி, நான்காம் வீட்டதிபதி, ஏழாம் வீட்டதிபதி மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தால் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் தவறு செய்யாமல் ,இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் தியாக மனத்துடன் வாழ்வார்கள்.
பெண்ணுக்கு பெண் யோனியும்,ஆணுக்கு ஆண் யோனியும் வந்தால் உத்தமம். இருவருக்கும் ஒரே யோனியானால் சமம். மாறி வந்தால் கூடாது என்பது ஜோதிட விதி. பகை யோனி கூடவே கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.
பெண்ணுக்கு ஆண் யோனி வந்தால் அந்த பெண் ஒரு ஆணைப்போல் உடலுறவு கொள்ள ஆசைப்படுவாள். ஆணுக்கு பெண் யோனியாக வந்தால் அந்த ஆண் பெண்ணைப்போல் உடலுறவுகொள்ள ஆசைப்படுவான். இதனால் ஆண் எந்த பெண்ணிடம் பழகினாலும், பெண் எந்த ஆணிடம் பழகினாலும் திருப்தியில்லாமல் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவார்கள். இவர்களின் ஆசை மாறுபட்டு இருப்பதால் இந்த சந்தேக புத்தியைத்தூண்டும். அடிக்கடி இவர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும். ஏழாம் வீட்டில் கூட்டுக்கிரகங்கள்,சுக்கிரனுடன் கூட்டுக்கிரகங்கள் இருந்தால் அனுமானித்து பொருத்தவேண்டும்.
மிருகங்களை அதன் குண இயல்பு, அதன் உடலுறவு முறை,அவை களின் உணவு முறைகளை பிரித்துப்பார்த்து பொருத்த வேண்டும்.
அனுசம்-கேட்டை, பூரம்-மகம், ரோகிணி-மிருகசீரிடம், திருவாதிரை-மூலம் சிறப்பாக இருக்கும். பூனைகள் கூடும்போது வன்முறைகள் உண்டு. எருமை ,மான் இவை கூடும்போது வன்முறை அற்ற நிலை. பசு ஒரு முறை கர்ப்பம் அடைந்து விட்டால் அது கன்று போட்ட பின்புதான் தன் இனத்துடன் உறவுகொள்ள அனுமதிக்கும். மனிதன் நிறைமாத கர்ப்பினி என்றாலும் விடுவதில்லையே?. இதனால்தான் யோனிப்பொருத்தம் முக்கியமாக பார்க்கப்ப்டவேண்டும் என்று என் அனுபவத்தில் வலியுறுத்துகிறேன். பத்துப்பொருத்தத்தில் இது மட்டுமே அடிப்படை பொருத்தமாகும் என்பது எனது ஆணித்தரமான கருத்து. ஜோதிட அன்பர்கள் சீர்தூக்கிப்பார்த்து பொருத்தம் வைக்கவும்.
உதரணமாக எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு அஸ்தம் நட்சத்திரம் (யோனி-எருமை) ஆணுக்கு அஸ்வினி நட்சத்திரம்(யோனி-குதிரை) . பெண்ணுக்கு பெண் யோனி,ஆணுக்கு ஆண் யோனி. ஆனால் குதிரையின் இயல்பும், எருமையின் இயல்பும் வேறு வேறு என்பதால் திருமணமாகி 20 வருடங்களாக சண்டை சச்சரவுகளுடன் தாமத்தியம் தொடர்கிறது. மழலை செல்வம் உண்டு.
எனக்குத்தெரிந்த மற்றொரு பெண்ணுக்கு அவிட்டம் நட்சத்திரம்(யோனி-சிகம்) , ஆணுக்கு பரணி நட்சத்திரம்(யோனி-யானை). திருமணமாகி 4 வருடங்களுக்குப்பின் விவாகரத்து பெற்று பெண் மறுமணம் செய்துகொண்டார். குழந்தை பாக்கியம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் யோனி பொருத்தம் பார்க்கும் அதே நேரத்தில் ஏழாம் இடத்து அதிபதி நீச்சப்பட்டுவிட்டானா? 6-8-12 ல் மறைந்துவிட்டானா? என்று ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்து பொருத்தலாம். இதுவே சிறந்த மனப்பொருத்தமாக அமையும். புராண கதைகளில் அகலிகை-தேவேந்திரன் கதையை ஞாபகத்தில் வைத்து யோனிப்பொருத்தம் பார்த்தல் நலம்.
மேலும் உதாரணமாக இன்னொரு பெண்ணுக்கு அவிட்டம் நட்சத்திரம்,ஆணுக்கு கேட்டை நட்சத்திரம். இரவில் பூசலும் பகலில் சிறு சிறு சண்டை சச்சரவுகளுடன் 50 ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவிட்டம்-சிங்கம். கேட்டை-மான், இயல்புகள் மாறிய யோனி. சிங்கம் மாமிசம் சாப்பிடும் வன்புணர்ச்சி கொண்டது. மான் தாவர பட்சினி வன்முறையற்றது. என்னே இறைவனின் திருவிளையாடல்.
(பாரம்பரிய ஜோதிடத்தில் நல்ல ஞானமும் முப்பது வருடங்களுக்கு மேலான அனுபவங்களும் இருந்தும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாதவர் ஐயா திரு சண்முகவேல் அவர்கள். சமீபத்தில் அவரை ஜோதிட கட்டுரை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர் எழுதிய கட்டுரைகளில் ஒன்றுதான் இக்கட்டுரை)

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்


 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்

--------------------------------------------------

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.
அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (😎, நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.
1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.
2. சபை சிவாலயங்கள்
இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* சித்ர சபை - திருக்குற்றாலம்
* தாமிர சபை- திருநெல்வேலி
3. முப்பீட தலங்கள்
* அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
* ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
* வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).
4. பஞ்ச ஆசன தலங்கள்
* ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
* களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
* நான்குநேரி - திருநாகேஷ்வரர்
திருக்கோயில்
* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
* செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
* சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
* கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
* தாருகாபுரம் - நீர் தலம்
* தென்மலை- காற்று தலம்
* தேவதானம் - ஆகாய தலம்
5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
* ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
* கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
* திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
* பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்
6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்
* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை - குலசேகரநாதம்
* பதுமனேரி - நெல்லையப்பர்
* தேவநல்லூர் - சோமநாதம்
* சிங்கிகுளம் - கைலாசநாதம்
7. நவ சமுத்திர தலங்கள்
* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
8. பஞ்ச பீட தலங்கள்
பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
* கூர்ம பீடம் - பிரம்மதேசம்
* சக்ர பீடம் - குற்றாலம்
* பத்ம பீடம் - தென்காசி
* காந்தி பீடம் - திருநெல்வேலி
* குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)
* பிரம்மதேசம் - கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் - கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் - கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில் - பக்த தலம்
* வழுதூர் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - மகேச தலம்
* கோடகநல்லூர் - அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் - பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் - கைலாசநாதர் திருக்கோயில் - ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சரண தலம்
* ராஜவல்லிபுரம் - அக்னீஸ்வரர் திருக்கோயில் - சகாய தலம்
* தென்மலை - திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் - பிரசாதி தலம்
* அங்கமங்கலம் - நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் - கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் - மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் - சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* திற்பரப்பு - மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)
10. வாலி வழிபட்டத் தலங்கள்
* திருவாலீஸ்வரம் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* கீழப்பாவூர் - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* தென்காசி வாலியன்பத்தை - திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
* பாபநாசம் - சூரியன்
* சேரன்மகாதேவி - சந்திரன்
* கோடகநல்லூர் - செவ்வாய்
* குன்னத்தூர் - இராகு
* முறப்பநாடு - குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை - புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி - கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
11. வேறு சில ஆலயங்கள்
* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.
* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.
* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

Tuesday 19 December 2023

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா?*

 

*பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்

என்று தெரியுமா?*

*தலை* - சிவபெருமான்


*நெற்றி* - சிவசக்தி

*வலது கொம்பு* - கங்கை

*இடது கொம்பு* - யமுனை

*கொம்புகளின் நுனி* - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.

*கொம்பின் அடியில்* - பிரம்மன், திருமால்

*மூக்கின் நுனி* - முருகன்

*மூக்கின் உள்ளே* - வித்யாதரர்கள்

*இரு காதுகளின் நடுவில்* - அஸ்வினி தேவர்

*இரு கண்கள்* - சூரியன், சந்திரன்

*வாய்* - சர்ப்பாசுரர்கள்

*பற்கள்* - வாயுதேவர்

*நாக்கு* - வருணதேவர்

*நெஞ்சு* - கலைமகள்

*கழுத்து* - இந்திரன்

*மணித்தலம்* - எமன்

*உதடு* - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்

*கொண்டை* - பன்னிரு ஆதித்யர்கள்

*மார்பு* - சாத்திய தேவர்கள்

*வயிறு* - பூமிதேவி

*கால்கள்* - வாயு தேவன்

*முழந்தாள்* - மருத்து தேவர்

*குளம்பு* - தேவர்கள்

*குளம்பின் நுனி* - நாகர்கள்

*குளம்பின் நடுவில்* - கந்தர்வர்கள்

*குளம்பின் மேல்பகுதி* - அரம்பெயர்கள்

*முதுகு* - ருத்திரர்

*யோனி* - சப்த மாதர் (ஏழு கன்னியர்)

*குதம்* - லட்சுமி

*முன் கால்* - பிரம்மா

*பின் கால்* - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்

*பால் மடி* - ஏழு கடல்கள்

*சந்திகள்* - அஷ்ட வசுக்கள்

*அரைப் பரப்பில்* - பித்ரு தேவதை

*வால் முடி* - ஆத்திகன்

*உடல்முடி* - மகா முனிவர்கள்

*எல்லா அவயங்கள்* - கற்புடைய மங்கையர்

*சிறுநீர்* - ஆகாய கங்கை

*சாணம்* - யமுனை

*சடதாக்கினி* - காருக பத்தியம்

*வாயில்* - சர்ப்பரசர்கள்

*இதயம்* - ஆகவணியம்

*முகம்* - தட்சரைக் கினியம்

*எலும்பு, சுக்கிலம்* - யாகத் தொழில்

*அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.* *ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள். அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள். எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.*

*கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளதுஎன்று சொன்னது.*

*லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள். லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள். அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.*

 

Tuesday 8 August 2023

புலம்பாமல் வாழ்த்துவோமே

 பூமியில் விழுந்த விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது !
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன !
மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன !
ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும்
மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன !
சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன !
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன !
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன !
இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உன்னால்
வாழ முடியாதோ ? ! ?
எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய
வாழ்க்கை . . .
அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றாய் !
சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !
எனது அஹம்பாவங்களை
தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத்
தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி !
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு
மனதார நன்றி !
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி !
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை
உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும்,உடலுக்கும்
மனதார நன்றி !
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி !
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி !
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
உடல் ஊனமுற்றோருக்கு
என் மனதார நன்றி !
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி !
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி !
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி !
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி !
ஒவ்வொரு முறையும் சக மனிதரிடம்
ஏமாந்து கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி !
வாழவந்தோம் வாழ்வோம் வாழவைப்போம் வாழ்த்துவோமே !!!

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...