Sunday 17 January 2021

நாயின்__பயணம்

  நாயின்_இராமேஸ்வர_பயணம்

ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்... ⚜

அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம்

இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம்

அந்த ஊரில் அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம் விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம்

நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்

அப்போ அந்த சிவாலயத்தில் "இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்"

அதனை அப்போது அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்!!

"ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா?? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன?? போகிற வழிக்கு ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா??" என்று எண்ணி,

இன்றிலிருந்து பத்து நாட்களும் விரதமாக இருந்து திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியதுதான் என்று முடிவு பன்னி கொண்டதாம்

தினமும் கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்குமாம் அதற்கு இராமேஸ்வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானதாம்

விரதத்தில் இருந்ததால் பசி கொடுத்த வைராக்கியம் வேறு இருப்பதால் திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்ததாம்

திருவிழா பத்தாம் நாள் நிறைவாகி கொடி இறக்கினார்களாம் 📖🎑 🌷🧩🌷

நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியதாம்

முதல் அடி எடுத்த வைத்த பொழுது பின்பக்கத்தில் "பொத்" என்று ஒரு சத்தம் கேட்டதாம்

திரும்பி பார்த்தால்...

"ஆஹா!! என்ன மணம்?? என்ன சுவை?? நல்ல கறி விருந்தாக இருக்கும் போலிருக்கிறதே!! நிறைய மிச்சம் வைத்து இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான்!!" என்று எச்சில் இலையை தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாய் வைத்து கொண்டு

"நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால் இந்த விருந்து கிடைத்திருக்குமா??" என்று நினைத்து கொண்டதாம்!!

"இந்த நாய்தான் நம் மனது"

நம் மனம் இருக்கிறதே ஆட்டம் போட எதுவும் கிடைக்காத பொழுது ரொம்ப அடக்கமாகவும் சுவாமி மீது பக்தி பன்னுவது போலவும்

நம்மை போல புண்ணியசாலி யார் இருக்கிறார்கள்?? என்றும் எண்ணி கொண்டு நல்லவன் போல வேஷம் போடும்

ஆனால் தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ!?

சாமியாவது பூதமாவது!? அதுக்குலாம் வயசு இருக்குயா!! இப்பவே உத்ராக்கம் போட்டுகிட்டு திருநீறு பூசிகிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா வாழ்க்கைய அனுபவிக்கிறது யாருனு?? கேட்கும்

ஏதாவது கஷ்டம் வந்து விட்டால் கோயில் குளம் சாமி நாபகம் எல்லாம் அப்போதுதான் வரும், இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால்
பழையபடி ஆட்டம் போடும்!!

அப்றம், ஒரு நாய், இரவு முழுக்க குளிர் தாங்க முடியாமல் திண்ணையில் படுத்திருக்கும் பொழுது

"என்னா குளிரு??" விடிஞ்சதும் முதல் வேலையா போய் ஒரு நல்ல போர்வையா வாங்கிடனும் அப்பதான் நாளைக்கு உயிரோட இருக்க முடியும்னு நினச்சிக்குமாம்

பொழுது விடிஞ்சதும்.... 🌏💫

சூரியன் "தகதக" என்று வெப்பத்தை பரப்பி கொண்டு வருவதை பா்த்தவுடன்

"அடாடா!! எவ்ளோ பெரிய தப்பு பன்னிட பாத்தோம்!! இந்நேரம் போர்வை வாங்கியிருந்தா காசில்ல வீணா போயிருக்கும்!!" னு நினச்சிக்குமாம்

மீண்டும் அன்றைக்கு இரவு போர்வை வாங்கியே தீரனும்னு நினச்சிக்குமாம்

இதுதான் நம்மில் பலரது கடவுள் வழிபாடும்!! துன்பம் வரும்போது கடவுள் பற்றி நினைப்போம், நன்றாக வாழும்போது

கடவுள் வழிபாட்டுக்கு வயது இருக்கிறது என்று நினைப்பதோடு அல்லாமல், இளமையில் கும்பிடுபவர்களையும் கெடுப்போம்!!

சும்மாவா பாடினார்கள் பெரியவர்கள்;

"ஒன்றுமே பயனில்லை என்று உணர்ந்த பின் சிவன் உண்டு என்பார்!! ஒவ்வொரு மனிதரும் ஒருநாள் இந்நிலை எய்துவது உறுதி இதை மறந்தார்!! அன்று செயல் அழிந்து தலம் வரும் பொழுது சிவன் பெயர் நாவில் வாராதே!! ஆதலினால் மனமே இன்றே சிவன் நாமம் சொல்லி பழகு!! நம்பி கெட்டவர் எவர் ஐயா?? உமை நாயகனை திருமயிலையின் இறைவனை!!" என்று??

🙏திருச்சிற்றம்பலம்🙏🏻


தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...