மார்கழி சதயம் நீலகண்டதீட்சிதர் - 01
மதுரையில் எக்காலமும் மீனாட்சி உண்டு அவள் ஆட்சி உண்டு எனும் மெய்சிலிர்க்கும் உண்மையும், அவள் காலம் காலமாக தன் அடியார்களை கொண்டு தன் ஆலயத்தை மீட்டெடுத்து கொண்டே இருக்கின்றாள் என்பதற்கு இந்த அவதாரமும் ஒரு சாட்சி
மதுரை ஆலயம் யுகங்களை தாண்டியது அதே நேரம் பல ஆபத்துக்களை கடந்தே வந்தது சமணர் கால ஆபத்தை மூர்த்தி நாயனார் மன்னராக்கி தவிர்த்தார், மீண்டும் சமணர் அட்டகாசம் செய்தபோது திருஞானசம்பந்தர் வந்து மீட்டார்
அப்படி பல வகையில் மீண்ட ஆலயம் மறுபடியும் சுல்தானியர் காலத்தில் சீரழிந்தது, ஆம் இன்று காணும் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் பாண்டியர் கால தொடர்ச்சி அல்ல, அது மாலிக்காபூர் காலம் இன்னும் சுல்தானிய 40 வருட காலங்களில் நொறுக்கபட்டு உடைக்பட்டு கொஞ்சம் கோவிலும் மீதி அழிபட்ட நிலையில்தான் கிடந்தது
நாயக்கர்கள் கம்பண்ண உடையார் தலமையில் வந்து சிக்கந்தரை ஒழித்து மதுரையினை மீட்டாலும் அம்மன் சன்னதியில் சில வழிபாடுகள் நடந்தே தவிர முறையான பூஜை, கொண்டாட்டம், தேர் என எதுவுமில்லை ஆலய சன்னதியே இடிபாட்டுடன் கிடக்கும் போது என்ன விதி பின்பற்றமுடியும்
இதனால் 40 ஆண்டுக்கு பின் அக்கோவிலில் சென்று இடிபாடுகள் மத்தியில் சிவனையும் மீனாட்சியினையும் வணங்கமுடிந்ததே தவிர எங்கும் உடைந்த தூண்களும் கற்குவியலும் உடைபட்ட சிற்பமுமாகவே ஆலயம் சோமநாதபுரி ஆலயம் போல் அழிபட்டு கிடந்தது
ஆம், அப்படித்தான் கிடந்தது பெரும் அழிவினை அங்கே மாலிக்காபூரும் துக்ளக் வம்சமும் செய்திருந்தது, நாயக்கர்கள் வைஷ்ணவர்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் தங்கி ஸ்ரீரங்கம் கோவிலைத்தான் புதுபித்து கொண்டிருந்தார்கள் காரணம் இதே அழிவு அங்கும் நடந்திருந்தது, திருச்சியே அவர்கள் தலைநகராகவும் இருந்தது
இந்நிலையில் அன்னை மீனாட்சி எந்த கம்பண்ண உடையாருக்கு வாள் கொடுத்து திருவண்ணாமலையில் இருந்து மதுரைக்கு அழைத்து வந்தாளோ அதே மீனாட்சி தன் ஆலயம் புத்தொளிபெற்று பெரும் ஆகம விதிப்படி பூஜையும் கொண்டாட்டமும் நடக்க இருவரை அழைத்துவந்தாள்
முதலில் அவள் திருமலை நாயக்கனை திருச்சியில் இருந்து மதுரைக்கு அழைத்தாள், அவன் கனவில் சிவனே தோன்றி மதுரைக்கு செல் என்றபின்பே அவன் மதுரை வந்தான்
அவன் மன்னன் அவனிடம் அதிகாரம் ஆட்சி செல்வாக்கு எல்லாம் உண்டு ஆனால் அதே நேரம் பக்தியில் ஆகமநெறியில் சிறந்த கரைகண்ட ஒரு ஞானி இல்லாமல் எப்படி ஆலயம் புத்துயிர்பெறும்? அதனால் ஒரு மகா ஞானியினையும் அழைத்துவந்தாள்
அவர்தான் நீலகண்ட தீட்சிதர், அப்பையா தீட்சிதரின் சகோதர வம்சம்த்தில் வந்தவர், இவர்களெல்லாம் பரத்வாஜ முனிவரின் வழிதோன்றல்கள். அப்பையா தீட்சிதர் 104 நூல்கள் எழுதி இந்துமத தத்துவங்களை மிக ஆழமாக நிலை நிறுத்திய ஞானி, செஞ்சி நாயக்க மன்னர்களால் 15ம் நூற்றாண்டில் ஆதரிக்கபட்டவர்
அவரின் சகோதரன் வம்சமாக இந்த நீலகண்ட தீட்சிதரும் 16ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் பக்கம் அவதரித்தவர், அன்னைமேல் அளவிடமுடியா பக்தி அவருக்கு இளமையில் வந்தது, காஞ்சிபுரம் அம்மன் கோவிலில் வழிபட்டு சுற்றிகொண்டிருந்தவரை அன்னையே கனவில் தோன்றி மதுரைக்கு செல்ல பணித்தாள்
அப்போதுதான் மதுரையில் திருமலை நாயக்கன் சிவன் உத்தரவுபடி வந்து பெரும் பணிகளை செய்ய ஆரம்பித்தான் அது அவன் ஆட்சியின் துவக்ககாலமாய் இருந்தது, அப்போது அவனுக்கு மாளிகையுமில்லை இந்த மீனாட்சியம்மன் ஆலையமும் இடிபாடுகளுடன் இருந்தது அவன் மெல்ல தன் ஆட்சியினை துவக்கினான்
அப்படி அவன் துவக்கியபோதுதான் மதுரைக்குள் வந்திருந்தார் நீலகண்ட தீட்சிதர், அவருக்கு அந்த ஊர் புதிது இந்த பகுதிகள் புதிது , மன்னனும் அவருக்கு தெரியாது , பொதுவாக மன்னர்கள் உரிய ஆவண அடையாளமில்லாதவனை நம்ப கூடாது என்பதும் விதி
மதுரை வந்த நீலகண்ட தீட்சிதர் அன்னையிடம் மனதை அப்படியே ஒப்படைத்தார், முழுக்க அங்கே இடிபாடுகள் நடுவில் தியான நிலையில் அமர்ந்தார் அவருக்குள் ஒரு சக்தி ஊடுருவிற்று அன்னை அவரை முழுக்க ஆட்கொண்டாள், அவர் போதிக்க தொடங்கினார்
சமஸ்கிருதம் தமிழ் என பலமொழிகளில் வல்லவராயிருந்த அவருக்கு எல்லா புராணமும் வேதமும் தெரிந்திருந்தது, அப்போது சைவ வைணஷ்ண கருத்துபோதல்கள் அடிக்கடி நடக்கும், அதுவும் சைவபூமியான மதுரைக்கு வைஷ்ணவ மன்னன் வந்தது சில கருத்துவேறுபாடுகளை சிலரிடம் கொண்டிருந்தது
மதுரையினை நாயக்கர்கள் கைபற்றிய நாள்முதல் கவனமாகவே கையாண்டார்கள், அது பாண்டிய பூமி என்பதும் பாண்டியரில் சிலர் அதனை மீள கோரியதும் அதனால் ஒருமாதிரியாக லாவகமாக மதுரையில் அதிகம் தலையிடாமலே நாயக்கர்கள் இருந்தார்கள் ஆனால் சிவன் அழைப்பில் திருமலை நாயக்கன் வந்தாலும் இந்த அச்சம் உள்ளூர இருந்தது
இதனால் அவன் அடிக்கடி மாறுவேடத்தில் நகருக்குள் சுற்றுவதும் மக்கள் என்ன பேசிகொள்கின்றார்கள் , தன்னை எற்றுகொள்கின்றார்களா என உளவுபார்ப்பதும் அடிக்கடி நடந்தது
மதுரையில் தன் ஞானத்தால் மெல்ல மெல்ல சுடர்விட்டு கொண்டிருந்தார் நீலகண்ட தீட்சிதர், சைவருக்கும் வைஷ்ணவருக்குமான வாதங்களில் அவரும் சேர்த்துகொள்ளபட்டார், அன்னையின் கருணையால் அவர் எல்லாம் அறிந்தவர் என உணர்ந்த மக்கள் அவரை ஆதரித்தனர், அனுதினமும் மாலை வைகையாற்றின் மணல் மேட்டில் அவர் பிரசங்கம் நிகழ்த்துவார்
மன்னன் தன் மாறுவேட பணியில் இந்த கூட்டத்தை அவதானித்தான் என்ன பேசுகின்றார்கள் என கேட்க அவனும் பாமர மக்கள் போல சென்று நின்றான், நீலகண்ட தேசிகர் பேச பேச அருவிபோல் கொட்டும் அவர் ஞானத்தை மீனாட்சியம்மன் புகழை சைவ வைஷ்ணவ தாத்பரியத்தை அவர் பேச பேச உருகிபோனான்
சிக்கல்கள் நிறைந்த மதுரை ஆட்சியில் இந்த ஞானி அரண்மனையில் இருக்கவேண்டும் என அவன் முடிவு செய்தான், அவர் பேசிமுடிக்கும் வரை முழுக்க கண்களை மூடி கேட்டவன் அவர் தங்குமிடம் எல்லாம் விசாரித்துவிட்டு அரண்மனைக்கு திரும்பினான்
அவன் மதுரைக்கு சொக்கநாதன் பிரதிநிதியாக வந்தவன் என்பதால் இவருக்கு என்ன பொறுப்பு தரலாம் என சிவனிடம் வேண்டிவிட்டு தூங்கினான் அப்போது வந்த காட்சியில் ஒரு அந்தணர் நீலகண்டரை தன் அருகில் அமரவைத்த காட்சியினை கண்டவன் மறுநாளே அவருக்கு பல்லக்க்கு அனுப்பி அழைத்து வர ஏற்பாடு செய்தான்
மேள தாளம் முழங்க மன்னனின் உத்தரவுபடி அவர் அழைத்து வரபட்டார், தன் அவையினை கூட்டி சான்றோர்கள் கற்றோர்கள் முன்னிலையில் "இம்மனிதன் பெரிய ஞானி என கண்டேன், உங்களுக்கு இவர்மேல் நம்பிக்கை இருந்தால் என் தலமை அமைச்சராக்குவேன்" என அறிவித்தான்
அவை கேட்ட எல்லா கேள்விக்கும் மிகுந்த பொறுமையுடனும் கூரிய அறிவுடனும் நீலகண்டர் பதில் சொல்ல சொல்ல அவை மிகுந்த மவுனத்துடன் அவரை சரணடைந்தது நீலகண்ட தீட்சிதர் ஒரே நாளில் மன்னனின் தலமை அமைச்சரானார்
அன்னை மீனாட்சியினை வணங்கி தன் பணியினை துவக்கினார் நீலகண்டர், அனுதினமும் அங்கு முக்கால பூஜை செய்வதும் வழிபடுவதும் அவரின் வழமையாயிற்று
அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் போல அவர் அங்கு பெரும் செல்வாக்கை பெற்றார், பதவியில் மட்டுமல்ல செயலிலும் அதே பக்தி அதே ஞானம் இருந்தது, மாணிக்கவாசகர் இரண்டாம் முறை வந்ததுபோல் அவரின் செயல்கள் இருந்தன
இவரிடம்தான் மன்னன் திருமலை நாயக்கன் மதுரை ஆலயத்தை மீள நிர்மானிக்கும் காரியத்தை ஒப்படைத்தான் அவர்தான் சுல்தான் காலத்தில் சீரழிந்து கிடந்த கோவிலை மறுநிர்மானம் செய்தார்
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் செய்ததை போல் இங்கு மதுரை ஆலயத்தை மீள நிர்மானித்தது இவர்தான், இன்று காணும் மீனாட்சி அம்மனுக்கு முன்பிருக்கும் மண்டபம் இன்னும் பல மண்டபம் அவரே கட்டியது
மதுரை ஆலயத்தில் சுல்தான்கள் ஆட்சியில் சீரழிந்த பூஜை முறைகளை இவர்தான் நெறிபடுத்தினார், ஆறுகால பூஜைகள் விழாக்கள் என இப்போது காணும் எல்லாமும் இவர் ஏற்படுத்தியது
அதுவரை மதுரையில் சைவ சமய பேதங்கள் இருந்தன, மதுரை அழகர் கோவில் விழா தனியாகவும் மீனாட்சி விழா தனியாகத்தான் நடந்தது, இதை ஒன்றாக்கி சித்திரை விழா என அறிவித்ததில் திருமலை நாயக்கருக்கு ஆலோசகராக இருந்தவர் இவர்தான்
சுமார் 25 ஆண்டுகள் போராடி அவர்கள் இருவரும் சேர்ந்து மதுரை ஆலயத்தை சீரமைத்தனர், அதன் பின்பே ஆலயம் இயல்பு நிலைக்கு வந்தது, கோவில் மண்டபமும் சிற்பமும் இதர காரியங்களெல்லாம் முழுமை பெற்றன
மதுரை ஆலயம் மறுபடி ஜொலிக்க ஆரம்பித்தது, நீலகண்ட தீட்சிதர் ஒரு தவமுனியாக நின்று இதனை சாதித்தார், தான் தேர்ந்துகொண்ட அடியார் மூலம் அன்னை தன் ஆலயத்தை மீட்டு கொண்டாள்
இப்படி ஜொலித்த ஆலயமே பின்னாளில் குமரகுருபரை அழைத்தது அன்னை அவருக்கு முத்துமாலை சாற்றி காசிக்கு அனுப்ப திருவுளம் கொண்டாள், திருமலை நாயக்கரும் நீலகண்ட தீட்சிதருமே அவரை காசிக்கு அனுப்பினார்கள்
காரணம் காசியில் அன்று ஆலயம் அழிந்து கிடந்தது பூஜை எதுவுமில்லை மொகலாயரின் ஆட்சியில் அப்படி அலங்கோலமாக கிடந்தது, குமரகுருபரர் சென்று ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷிக்கோவிடம் வாதாடி பின் சிங்கம் மேல் அமர்ந்து அற்புதம் செய்து சகலகலாவல்லி பாடலை பாடி அவனை பணியவைத்து ஆலயத்தை மீட்டு வழிபாடுகளை நடத்தி அங்கே ஆஸிரமம் அமைத்து திருப்பணிகளை மேற்கொண்டார்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம். இப்படி துலங்கியபோது காசியும் பின்னர் துலங்கிற்று, தேசம் கண்ட மெய்சிலிர்க்கவைக்கும் வரலாறுகள் இவை, காசிக்கும் மதுரைக்கும் இடையே உள்ள பந்தத்தை மீள மீள சொன்ன சாட்சிகள் இவை
மதுரை ஆலயம் துலங்க துலங்கத்தான் வீரசிவாஜி இந்து நெருப்பாய் எழுந்து மாபெரும் இந்துராஜ்யம் அமைத்து காட்டினான், இதுவும் வரலாறு
மதுரை ஆலயத்தை இப்படி கட்டிமுடித்தபின்பே மன்னன் திருமலைநாயக்கன் தனக்கான மாளிகையினை கட்ட துவங்கினான், அதற்கான இடத்தை நீலகண்ட தீட்சிதரே காட்டினார், அப்போதுதான் சுல்தான்களுக்கு அஞ்சி அக்கால இந்துக்கள் புதைத்த சிலைகள் பல மீண்டன, அப்படி மீண்டதுதான் முக்குறுணி பிள்ளையார் சிலை எனும் பிரமாண்ட சிலை அது இப்போதும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உண்டு
அன்னைக்கு கோவிலும் மன்னனுக்கு மாளிகையும் எழுந்தபின் மிக அமைதியாக தன் பெரும் நூல்களை எழுதினார் நீலகண்ட தீட்சிதர்
, அவை சமஸ்கிருதம் தமிழ் என இரண்டுமாக இருந்தது
அவர் வடமொழியில் இருந்த நூல்களை தமிழுக்கும் தமிழில் இருந்த பல ஆழமான நூல்களை சமஸ்கிருதத்துக்கும் மாற்றி கொடுத்தார்
நீலகண்ட தீக்ஷிதரின் மிகப் பிரசித்தி பெற்ற காவியம் "சிவலீலார்ணவம்", சிவ லீலைகளாகிய பெருங்கடல் என்று பொருள், மதுரையில் ஈசன் செய்த 64 திருவிளையாடல்களை சமஸ்கிருதத்தில் பாடி இந்த பெயரை அவர் இட்டார்
22 காண்டங்களில் இரண்டாயிரத்துக்கு இரண்டு பாடல்கள் குறைவாக இயற்றப்பட்ட மகாகாவியமாக இதனை பாடி முடித்தார்
எட்டு காண்டங்கள் கொண்ட “கங்காவதரணம்’ (கங்கை கீழிறங்கியது) பகீரதன் கதை. “நீலகண்ட விஜய சம்பு’ திருப்பாற்கடலைக் கடைந்த புராணம் , பிரபஞ்சத்தைக் காக்க சிவன் ஆலகால விஷத்தைக் குடித்து நீலகண்டனாக ஆன கதை என எல்லாமும் அழகுற பாடிவைத்தார்
அவரின் “நள சரித நாடகம்’ அழகானது ஆனால் முழு பிரதியும் கிடைக்கவில்லை . “கலி விடம்பனம்’ என்ற 102 பாடல்களைக் கொண்ட நூலை அன்றே எழுதினார் அதில் கலிகால கொடுமைகளெல்லாம் சொல்லி எச்சரித்தார்
பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைப் போலமைந்த 105 பாடல்களமைந்த “சபாரஞ்ஜன" என தத்துவ நூலை எழுதினார், அப்படியே பர்த்ருஹரியைப் போல 101 பாடல்களில் ஒரு “வைராக்ய சதகம்" எழுதினார்
தன் இன்ப துன்பங்களைக் கண்டு களைத்து, அமைதியை விரும்பும் ஒரு முதிய உள்ளத்தின் “சாந்தி விலாசம்’ என்ற அமைதி தரும் பாடல் தொகுப்பை பாடினார்
அன்னை மேல் கொண்ட பக்தியால் “சிவோத் கர்ஷ மஞ்சரி’, “சிவ தத்வ ரஹஸ்ய’, “சண்டி ரஹஸ்ய’, “குரு தத்வ மாலிகா’, “ஸெளபாக்ய சந்த்ராதபா’ என்ற சாக்த மத தாத்பரியங்களையும் பாடிவைத்தார்
இப்படி மேலும் பல நூல்கள். சிவனைப் பற்றியே பாடிய அவர், கண்ணனது குழந்தைப் பருவம் பற்றிய “முகுந்த விலாசம்’ என்ற நூலையும், “ரகு வீரஸ்தவ’ அல்லது “ராமாயண ஸாரஸங்க்ரஹ’ என்று ராமன் மேல் 33 பாடல்களையும் பாடினார்
இதுபோக அவர் செய்துவைத்த பாடல்கள் ஏராளம், அவை காளிதாசனின் பாடல் போல் அற்புதமான உவமை கொண்டவை அதே நேரம் அதிசங்கரரின் பாடல்கள் போல் ஆழமானவை
பருபங்கள் மாறிவரும்போது எல்லாமும் மாறும் கிடைப்பதை கொண்டு வாழ்வை நீட்டித்து செல்லவேண்டும், எந்த நேரம் எது உண்டோ அதை வைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ்தல் வேண்டும் என்பதை அழகாக சொல்கின்றார்
"போதவிழ் தாமரை இல்லையெனில்
புதிய தாழம் பூஇலையோ?
சோதியாம் நிலவு இல்லையெனில்
சுந்தர மன்மதன் இங்கிலையோ?
ஏதும் அன்னங்கள் இல்லையெனில்
எழில்மிகு மயில்கள் இங்கிலையோ
ஏதோ ஒரு பொருள் இல்லையென
ஏங்கித் தவிப்பது எதற்காக?"
அவர் கர்மயோகியாக வாழ்ந்தார், சிலநேரம் மீனாட்சியம்மன் சன்னதியில் தனித்து அமர்ந்தும்பாடினார், யாரும் கைதட்டினால் அவர் மனம் புகழ் கொள்வதுமில்லை, யாரும் இல்லை என்பதற்காய் அவர் பாடாமல் இருந்ததுமில்லை அதை இப்படி பாடுகின்றார்
“வீணை இசையை எழுப்புகிறது; அங்ஙனமே தான் குழலும். குழந்தைகளும் ஊமைகளும் கூட அந்த இசையைக் கேட்கிறார்கள். ஆனால் கவிதையைக் கேட்பதற்கோ அதன் இனிமையைச் சுவைப்பதற்கோ ஓரிருவர் இருக்கலாம்; அல்லாது இல்லாமலும் இருக்கலாம்" என்பவர் தொடர்கின்றார்
"கவிதை யென்பது கலைகளின் சிகரம்
கவிதா தேவியின் கருணைப்ரசாதம்
மனிதரைப் புகழ்ந்து பாடுவதாலே
மாண்பு குறைந்து மதிப்பை இழக்கும்.
அனைவர் விருப்பமும் அள்ளியே தந்திடும்
அற்புதக் காமதேவனுவாம் பசுவை
ஏரில் பூட்டி உழுவதை ஒக்கும்.
கொடுப்பவர் குறைகளைக் கவியும் கூறான்.
கார் மேகத்தைக் கருதிப் பார்த்தால்
நீரைப் பொழியும் என்பத னாலதன்
கருமைக் குறையைப் பேசுவார் யாருளர்?"
காளிதாசன் போலவே தாமிரபரணி ஆற்றை பற்றி அவர் சொல்லும் வர்னனை அவ்வளவு அழகானது
“தாம்ரபர்ணி கடலில் கலக்குமிடத்தில் கடல் அலைகளால் முத்துக்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்தவள் என்ற மரியாதையுடன் கடலரசன் புஷ்பங்களை வாரி இறைத்து தாம்ரபர்ணியை எதிர்கொண்டு அழைத்துச் செல்வது போலிருக்கிறது இது"
இப்படி காளிதாசனின் மறுவடிவமாக நின்று இந்துக்களின் காவியம் தெய்வம் புராணம் என எல்லாமும் பாடிய அவரை அன்னை பெரும் யோகி என காட்டிய நிகழ்வு அவரின் அந்திம காலத்தில் நடந்தது
அப்போது நீலகண்ட தீட்சிதர் முழு பரிபூரண சித்த நிலையினை அடைந்த்திருந்தார், மதுரை மீனாட்சி என்பவள் அரசர்குரிய தெய்வம் மட்டுமல்ல, மக்களுக்கானவள் மட்டுமல்ல அவள் சித்தர்களுக்கும் யோகியருக்குமான வாலை குமரி
அவள் சித்தர்க்ளை உருவாக்குவாள், திரிகால யோகியரை உருவாக்குவாள், பெரும் ஞானகுருபரம்பரைக்கு அவளே மூலம், அதனால் நீலகண்ட தீட்சிதரையும் முழு யோகியாக மாற்றி ஆட்கொண்டிருந்தாள்
அப்போது புதுமண்டபத்தை அவன் பிரமாதமாக பிரமாண்டமாக புராண கதை சொல்லும் சிற்பங்களுடன் கட்ட விரும்பினான் பொறுப்பு வழக்கம்போல் நீலகண்ட தீட்சிதரிடமே வந்தது
அவர் வரவேற்பு தூண் அருகே சிவனில் இருந்து பிரம்மனும் விஷ்ண்வும் தோன்றிய காட்சியினை சிற்பமாக்கியபோது இதை ஏற்றுகொள்ள முடியாது நாராயணனே முழு முதல் கடவுள் என வைஷ்ணவர்கள் வாதம் செய்தனர் இதனால் மண்டப பணி பாதிக்கபட்டது
சைவ வைணவ கருத்து மோதலை தீர்க்கும் பொறுப்பும் நீலகண்டரிடமே சேர்ந்தது , மன்னன் வைஷ்ணவன் என்பதால் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவேண்டும் என அவர்கள் போராடினார்கள்
ஆனால் தன் வாத திறத்தாலும் புராணங்களின் ஆதாரம் வேத தத்துவம் இதிகாச காட்சிகளையெல்லாம் காட்டி அவர்கள் பதில் பேசமுடியாபடி மடக்கினார் நீலகண்ட தீட்சிதர் பின் அந்த சிலை தூணுடன் நிறுவபட்டது இன்னும் அந்த காட்சி அங்கு உண்டு
இந்த மண்டபத்தில்தான் மன்னனுக்கும் அவன் ராணிகள் 11 பேருக்கும் சிலைவைக்க முடிவு செய்தார் நீலகண்ட தீட்சிதர், அதுதான் அவரின் சோதனைக்கும் வழியாயிற்று
இந்த சிற்பத்தை செய்தவன் சுமந்த ஆச்சாரி, அவன் பட்டத்து ராணியின் சிலையினை செதுக்கும் போது அச்சிலையின் இடது தொடையில் உளி தவறி விழுந்து ஒரு சிறிய வடு உண்டாயிற்று

No comments:
Post a Comment