Friday 24 August 2018

திருமணமாகப்போகும்தன்மகளுக்குஒரு தந்தையின் அறிவுரை

            திருமணமாகப்போகும்தன்மகளுக்குஒரு தந்தையின் அறிவுரை

வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே!
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா…என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடமும் , என்
அப்பாதான் ‘பெஸ்ட்’ என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள்.
வார்த்தைகளில் வெளிப்படுத்தி ‘உன்னவரின்’ மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை
.உன் கணவரிடம், “என் அப்பா நேரம் தவற மாட்டார்”,” என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்” என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா….
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே.
என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை மறைத்திருக்கலாம்.
அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு.
முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி, அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், “நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் “,”
எனக்கு என் அப்பா இருக்கிறார் ” என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.
முடிவுகள் எடுக்கும்போது வழமை போல
அப்பாவிடம் கேட்டுசொல்றன் என்று வாய்தவறிக்கூட கூறிவிடாதே... இனிமேல் நீங்கள் இருவரும்தான் எதிலும் முடிவு எடுக்கனும்.
உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும்.
ஆண்களின் கோபம் கூட ஒருவிதத்தில் அன்புதான்... அதனால் நீயும் திருப்பி கோபப்படாதே....
உன் அம்மாவின் சகிப்புத்தன்மை தான் என்னை பல இடங்களில் மனிதனாக மாற்றியது... அதேபோல் நீயும் சகிப்புத்தன்மையை வளர்க்கவேண்டும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்….
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*’அப்பா செல்லம் ‘ என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்….!

Thursday 23 August 2018

உண்மைகள் உபதேசமாய் :-

                                                         உண்மைகள் உபதேசமாய் :-


 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
8. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
9. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
10. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
11. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
12. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.
13. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
14. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
15. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
16. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)
17. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
18. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).
19. இறுகினால் களி. இளகினால் கூழ்.
20. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
21. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
22. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
23. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
24. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
25. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
26. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
27. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
28. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
29. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
30. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது).
31. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)
32. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
33. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?
34. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
35. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.
36. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.
37. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.
38. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
39. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?
40. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
41. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?
42. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
43. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?
44. உண்டு கொழுத்த நண்டு
வளையில் தங்காது.

Tuesday 21 August 2018

பொது அறிவு*

                                                                       பொது அறிவு*   
👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – *ஒட்டகப்பால்*.
👉ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் –
*கங்காரு எலி*.
👉துருவக் கரடிகள் அனைத்துமே *இடது கை* பழக்கம் உடையவை.
👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – *கரடி*.
👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் *கார்பன் மோனோ ஆக்சைடு* என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.
👉சீனாவில் ஒரு மனிதனின் *பிறந்தநாள்* அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.
👉ஆக்டோபஸ்க்கு *மூன்று இதயம்* இருக்கும். அதன் ரத்தம் *நீல நிறத்தில்* இருக்கும்.
👉குரங்குக்கு இரண்டு *மூளை* இருக்கிறது.
👉சூரியனின் வயது *470* கோடி ஆண்டுகள். (2010 ஆண்டு வரை) பூமியின் மீது காணப்படும் பழைய *பாறைகளை* கொண்டு இதை கணக்கிட்டு உள்ளனர்.
👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் *ஜூலியஸ் சீசர்*. அதனால்-தான் இந்த முறைக்கு *சீசரியன்* என்று பெயர் வந்தது.
👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் *அழுதால்* கண்ணீர் வராது.
👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக சுமார் *100* கேள்விகள் கேட்கும்.
👉தைவான் நாட்டில் உள்ள *மூன்யூச்* மரம்
4120 ஆண்டுகள் பழைமையானவை.
👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு *சிங்கம்*. ஆனால், அதன் ஆயுட்காலம் வெறும் *15* ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்-தான் *சிங்கம்* கர்ஜிக்கும்.
👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – *சிங்கம்*.
👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் *ரத்தத்தால்* எழுதப்பட்டது.
👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – *ஒட்டகம்*.
👉இலைகள் உதிர்க்காத மரம் – *ஊசி இலை மரம்*.
👉காட்டு வாத்து *கருப்பு* நிறத்தில் தான் முட்டையிடும்.
👉குளிர் காலத்தில் *குயில்* கூவாது.
👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் *மூன்று மாதங்கள்* மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே, மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகப்புகழ் பெற்ற *மோனாலிச ஓவியம்* இடது கையால் வரையப்பட்டது.
👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும், அது தலை இன்றி *ஒன்பது நாள்* வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.
👉கிளியும், முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.
👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – *இதயம்*.
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – *இதயம்*.
👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் *3100* பேர் தான்.
👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – *ஈரிதழ் சிட்டு*.
👉வால்டிஷ்ணி மொத்தம் *32* ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
👉ஒருதலைமுறை என்பது *33* ஆண்டுகள்.
👉ஒட்டகம் ஒரே சமயத்தில் 90 லிட்டர் தண்ணீரைக் குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகு தான் கராத்தே வீரர் ஆனார் – *புருஸ்லீ*.
👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை *குளிக்காமல்* தன் கூட்டுக்குள் நுழையாது.
👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டி *ஆரஞ்சு* நிறத்தில் இருக்கும்.
👉சீல்வண்டுகள் *17* ஆண்டுகள் தூங்கும்.
👉யானை, குதிரை *நின்று* கொண்டே தூங்கும்.
👉நீர் நாய் *ஒன்றரை* நிமிடம் மட்டுமே தூங்கும்.
👉டால்பின் *ஒரு கண்* விழித்தே தூங்கும்
👉புழுக்களுக்கு *தூக்கமே* கிடையாது.
👉நாம் இறந்து பிறகும் கண்கள் மட்டும் *6* மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது. ( இந்த அறிவியல் சிந்தனைகள் மனப்பாடம் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் எப்படி இருக்கும்.....நினைவு ஆற்றல் உலகத்தை ஜெயித்து விடலாம்...          

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

ஜோதிட ஆலோசனை பெறுவது எப்படி?

1. ஜோதிட ஆலோசனை பெற விரும்புபவர்கள் ஜோதிடரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுவதே சால சிறந்தது. உங்களுக்கு நேரமில்லை, நேரில் சந்திக்க வாய்ப்பில்லை என்று நீங்கள் நினைக்கும்வரை உங்கள் வாழ்க்கையில் தடைகள் தொடரும்.
2. ஜோதிட ஆலோசனை பெறும்போது தன் சொந்த சோகக் கதைகளை மூச்சு விடாமல் சொல்லி ஜோதிடர் தன் பணியை செய்யவிடாமல் செய்து, ஜோதிடர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது பெரும் தவறு. உங்களுக்கு உரிய ஆலோசனை அப்பொழுது கிடைக்காது. நவக்கிரகங்கள் உங்களுக்கு நல்வழி காட்ட மாட்டார்கள்.
3. ஜோதிடரை கீழே உட்கார வைத்து விட்டு , நீங்கள் உயரத்தில் உட்கார்ந்து கொண்டு , காலாட்டிக்கொண்டு அதிகார தோரணையில் பலன் கேட்டால் உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்கிறீர்கள் என்று பொருள். இது நவ கிரகங்களையே அவமதிக்கும் செயல்.
4. ஜோதிட ஆலோசனையின் போது நக்கல், நையாண்டியாக பேசுவது அல்லது மிரட்டுவதுபோல் பேசுவது எல்லாம் ஜோதிடரின் மூலம் நவகிரக சாபத்தை பெறுவதற்கு வழி வகுக்கும். நல்ல மனமும் ,குணமும் உள்ள ஜோதிடர்களிம் இவ்வாறு நடந்துகொள்பவர்களுக்கு நிச்சயம் இது நடக்கும்.
5. ஜோதிட ஆலோசனை கேட்பவர் மௌனமாக அமைதியாக இருந்து ஜோதிடர் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். அலட்சிய மன போக்கை தவிர்க்க வேண்டும். ஜோதிடர் ஏதாவது கெடு பலன் சொன்னால் பரிகாரம் ஏதாவது உண்டா என கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சண்டைக்குப்போகக்கூடாது. வாக்கு வாதத்தில் ஈடுபடக்கூடாது.
6. ஜோதிடர் சொன்ன ஆலோசனையில் திருப்தியில்லையென்றால் அல்லது பிடிக்கவில்லையென்றால் அமைதியாக திரும்பி வந்துவிடவேண்டும்.
7. ஒரு ஜோதிடர் சொன்ன விசயங்களை இன்னொரு ஜோதிடரிடம் சொல்லக்கூடாது. ஜோதிடர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது. இது ஜோதிடருக்குள் வெறுப்புணர்ச்சியை தூண்டும். இதனால் உங்களுக்கு உரிய ஆலோசனையை அவர் வழங்க மாட்டார்.
8. ஜோதிடரிடம் சென்று எனக்கும் ஜோதிடம் தெரியும் , சும்மா நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என பார்க்க வந்தேன் என்று சொல்லக்கூடாது. இப்படி சொல்வதால், ஜோதிடருக்கு உங்கள் மீது வெறுப்பு உணர்ச்சி தோன்றி எதையும் சரியாக பார்க்க மாட்டார். நவ கிரகங்கள் ஒத்துழைக்க மாட்டார்கள்.
9. தேவை இருந்தால் மட்டும் ஜோதிட ஆலோசனை பெறுங்கள். பொழுது போக்கிற்காக ஜோதிடரை பார்க்காதீர்கள். இது வம்பை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்.
10. ஜோதிடர்களுக்கு தட்சிணை வழங்குவது என்பது நீங்கள் அவர்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. ஜோதிடர்களை பிச்சைக்காரர்களாக கருதாதீர்கள்.
11. வா வா என கூவி அழைக்கும் ஜோதிடர்களை தவிர்த்து, சத்தமில்லாமல் செயல்படும் நல்ல ஜோதிடர்களை தேடிப்போய் ஆலோசனை பெறுங்கள். குறிப்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் பரிந்துரை செய்யும் ஜோதிடர்களைப்போய் பாருங்கள்.
12. ஜோதிட ஆலோசனைப் பெறும்போது சொந்தக்காரர்களையோ அல்லது நெருங்கிய நண்பர்களையோ உடன் அழைத்து செல்லாதீர்கள்.



Monday 20 August 2018

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும், என்ற ஆசை உண்டானது.

அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும், என்ற ஆசை உண்டானது.

 அரசன் ஒருவனுக்கு தீட்சை பெற வேண்டும், என்ற ஆசை உண்டானது.
தீட்சை பெற வேண்டுமானால், அதற்கு குரு ஒருவரை அனுகி மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று, சாஸ்திரங்கள் கூறுவதை அவன் அறிந்திருந்தான்.
தொலைதூத்தில் இருக்கும் அந்த பிரம்மஞானியிடம் சென்று, மந்திரதீட்சை பெற முடிவு செய்தான்.
பிரம்ம ஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்கிடையே இருந்த குடிலுக்கு சென்றான்.
முதலில் அவரைப் பணிந்து வணங்கிக் கொண்டவன், எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
மன்னனைஉற்று நோக்கிய பிரம்மஞானி, இவன் மந்திரதீட்சை பெறும் போதிய மனப்பக்குவம் இல்லாதவனாத் தெரிகிறான். இவனுக்கு மந்திரதீட்சை கொடுக்கும் தகுதி இப்போது இல்லை என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்.
எனவே அரசனிடம், அரசே! நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை.
அதற்கு சில மேலும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை என்று கூறினார்.
அரசன், தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தனால், ஞானி தீட்சை தராததால், மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனைக்குத் திரும்பினான்.
தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார். எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு வேறு என்ன வழி? கூறுங்கள் என்று கேட்டான்.
மன்னர் பெருமானே!, நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவரிடம் நீங்கள் தீட்சை பெற்றுக் கொள்ளலாமே என்றார்.
மேலும், தாங்கள் விரும்பினால், உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன் என்றார் அமைச்சர்.
மன்னனும், அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான்.
அமைச்சர், பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார்.
பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார்.
அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கி அனுப்பி வைத்தான்.
அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.
இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது! தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு, இப்போது நான் பாடம் புகட்ட போகிறேன்!' என்று முடிவெடுத்தான்.
தன் வீரர்களை அழைத்தான். எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வர கட்டளையிட்டு அனுப்பினான்.
அரசன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள் பிரமஞானியை வீரர்கள்.
சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஞானியை ஏளனத்துடன் பார்த்து, என்ன எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேனே ஞாபகம் இருக்கா!.
நீங்களோ, எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்களே! அதுவும் ஞாபகம் இருக்கா! இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ, அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன் என்றான்.
பிரம்மஞானி எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான்.
ஓம் நமச்சிவாய இதுதானே மந்திரம்! இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்து விட்டது என்றான் ஆணவமாக.
அது கேட்ட பிரம்மஞானி, அரசே! இப்போது நான் சொல்வதுபோல், நீங்கள் சிறிது நேரம் நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஏதும் புரியாத அரசனும் அதையும் பார்க்கலாம் என சம்மதித்தான்.
பிரம்மஞானி அரசனிடம், அரசே! நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தில், நான் சிறிது நேரம் அமர்வதற்கு என்னை அனுமதியுங்கள்.
அதே சமயம் நீங்கள், நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இந்த இடத்திற்கு வந்து சிறிது நேரம் நிற்க வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அரசன், பிரம்மஞானி நின்றுகொண்டிருந்த இடத்தில் வந்து நின்று கொண்டான்.
ஞானியோ சென்று சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்.
பிரம்மஞானி அரியணையில் அமர்ந்தாரோ இல்லையோ, உடனே அவர் அரசனைச் சுட்டிக்காட்டி அருகில் இருந்த வீரர்களிடம், இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டார்.
இவ்விதம் பிரம்மஞானி கூறியதைக் கேட்டு, அரசவையில் இருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள்.
திகைத்தார்கள்.
வீரர்களுக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியாது அதிர்ச்சியாக அசையாது நின்றார்கள்.
இந்த நிலையில், பிரம்மஞானி தன்னைக் கைது செய்யும்படி கூறியதைக் கேட்டு கோபம் கொண்ட அரசன், அரியணையில் உட்கார்ந்திருந்த பிரம்மஞானியை வீரர்களுக்குச் சுட்டிக்காட்டி, இவரை உடனே கைது செய்யுங்கள் என்று கட்டளையிட்டான்.
இவ்விதம் அரசன் சொன்னானோ இல்லையோ, வீரர்கள் உடனே சென்று பிரம்மஞானியைக் கைது செய்தார்கள்.
அப்போது பிரம்மஞானி அரசனைப் பார்த்து சிரித்தபடியே கூறினார்....
அரசே! இப்போது இங்கு நடந்த சம்பவத்தில், உங்கள் கேள்விக்கு உரிய பதில் இருக்கிறது. இதுதான் மெய்ஞ்ஞானி ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும், பண்டிதர் ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்றார்.
நான் உங்களைக் கைது செய்யும்படி இங்கிருந்த வீரர்களுக்குக் கட்டளை இட்டேன். ஆனால், என் கட்டளையை அவர்கள் நிறைவேற்றவில்லை.
நான் அரசனுக்குரிய அரியணையிலிருந்துதான் உத்தரவு பிறப்பித்தேன் என்றாலும், என் உத்தரவை இங்கு யாரும் பொருட்படுத்தவில்லை, நிறைவேற்றவில்லை.
மாறாக, நீங்கள் அரியணையில் அமராமல், அங்கு நின்றுகொண்டு என்னைக் கைது செய்யும்படி உத்தரவு பிறப்பித்தீர்கள். என்றாலும், உடனே உங்கள் கட்டளையை வீரர்கள் நிறைவேற்றத் துணிந்தார்கள்.
எனவே நான் கூறிய அதே சொற்களை, நீங்கள் சொன்னபோதுதான் அதற்கு இங்கு பலன் ஏற்பட்டது.
நீங்கள் கூறிய அதே சொற்களை நான் இங்கு சொன்னபோதிலும் அதற்கு மதிப்பில்லாமல் போனது.
இதுபோல்தான் அரசே! மந்திரோபதேசம் செய்யும்போது குருமார்கள், சீடர்களுக்கு வழங்கும் மந்திரம் ஒரே மந்திரமாக இருக்கலாம்.
ஆனால், மெய்ஞ்ஞானி ஒருவர் அந்த மந்திரத்தை மந்திர தீட்சையின்போது உரிய முறையில் வழங்கினால்தான், அந்த மந்திரம் உயிர் பெற்று தனக்கு உரிய உண்மையான உயர்ந்த பலனைத் தரும்.
இறையனுபூதி பெறாத ஒருவர், சாஸ்திரங்களை ஏராளமாகப் படித்தவராக இருக்கலாம்.
ஆனால், அவர் ஞானிகள் சொல்லும் அதே மந்திரத்தை உபதேசம் செய்தாலும் அதற்குரிய உயர்ந்த பலன் இருக்காது.
தகுதியானவர்கள் உபதேசம் செய்தால் தான் மந்திரம் பலிக்கும், மல மாசு நீங்கும், என்று கூறி முடித்தார்.
உண்மையையுணர்ந்த அரசன், ஞானியை கைது நிலையைத் தவிர்த்து, தன் தவறுக்கு வருந்தி இனி திருத்தமாக இருந்து கொள்வதாக அறிவித்தான்...
நிற்க...

நம்மில் பெரும்பாலோனோர் இந்த அரசனைபோலத்தான் இருக்க நேரிடுகிறது.
ஏன்... இந்த நிலை
நாம் அந்த ஞானியினை போல ஏன் இல்லை.
நாம்...
நமது அறிவினை எங்கிருந்து பெற்று... எப்படி உபயோகிக்கிறோம் என்பதிலேதான் இந்த கேள்விகளுக்கான சூட்சுமம் உள்ளது
பெரும்பாலும், மக்கள் தொடர்பில் வெற்றி பெற்றவர்கள் மிகப்பெரும் ஞானவான்களாக கருதப்படுவார்கள்.
ஆனால்...
அவர்கள் மிகப்பெரிய அறிவாளிகள் என்பதுதான் உண்மை
*ஞானி = குரு*
*அறிவாளி = புதன்*
இது பற்றி இன்னும் சில ஜோதிட குறிப்பு உள்ளது.
பொதுவாக ஞானிகள் இரண்டு விதமான பிரிவுகளில் வருவார்கள் என ஜோதிடம் கூறுகிறது
முதல் பிரிவினர் தனுசுவின் ஆதிக்கத்தில் இருப்பார்கள். இவர்கள் தனது அறிவினை உலகுத்துக்கு அறிவிப்பது... மற்றும் தனது பிரசங்க அறிவினை ஆதாரமாக கொண்ட முதல் பிரிவினரான இவர்கள் மதபோதகர்கள் ஆசான்கள் எனும் பிரிவில் வருவார்கள்
இரண்டாம் பிரிவினர் மீனம் ஆதிக்கம் மிகுந்தவர்கள். அமைதியாக உள்ளேயே இருந்து கொண்டே எதையும் அனுபவித்து மகிழ்வது.
ஆனால்
இந்த பிரிவினர் தன் அனுபவத்தினை தறுவதற்க்கு மிகவும் கஷ்டப்படுத்துவார்கள்.
இவர்களே சித்த புருசர்களாவார்கள்
அறிவாளிகள் பற்றியும் கருத்தினை ஜோதிடம் உரைக்கிறது
முதல் பிரிவு அறிவாளிகள்... மிதுனத்தின் ஆதிக்கம் மிகுந்தவர்களாக அமைந்திருக்கும்.
மக்களின் மத்தியில் பிரபலம் ஆவது சுலபமாக இருக்கும். அதனால் மிகப்பெரும் அளவில் செலவு செய்யகூட தயங்க மாட்டார்கள்.
ரகசியமான பின்புலம் பலமாக இருக்கும் இவர்களுக்கு...
இவர்கள் ஏற்றுக்கொள்ளாத விசயத்தினையும் கூட... அழகாக கூறுவதில் வல்லவர்கள்
இரண்டாம் பிரிவு அறிவாளிகள்... கன்னியின் புதன் ஆதிக்கத்தில் இருப்பவர்கள். இவர்கள் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் தெரியாமல் அனைத்தையும் சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள்
இதனை அற்புதமாக ஜோதிடம் வகுத்து தந்துள்ளது என்து மீண்டும் வியப்புடன் நினைவு கூறத்தக்கது.

Sunday 19 August 2018

ஆயுளைக் கணக்கிடும் முறை – ஆயுர்த்தாயம்

ஆயுளைக் கணக்கிடும் முறை – ஆயுர்த்தாயம்
  ஒரு மனிதனின் ஜாதகத்தை வைத்து அவனது ஆயுள் எத்தனை வருடங்கள் என்பதைக் கணிக்க முடியமா என்பது பெரும்பான்மை மக்களிடம் உள்ள ஒரு கேள்வி. கடந்த இரண்டாயிரம் வருடங்களில் எத்தனையோ சோதிட வல்லுனர்கள் தங்களது இடைவிடா முயற்சியில் பல்வேறு கணக்குகள் மூலம் இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முயன்று வந்திருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பல்வேறு கணக்குளோடு எந்தப் பரிச்சயமும் இல்லாத, அவைகளைத் தெரிந்து கொள்ள சிறிதும் முயற்சிக்காத, நவீனச் சோதிடர்கள், தங்களிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களின் எந்தக் கேள்விக்கும் சரியான பதிலைத் தராமல் புராணக் கதைகளைச் சொல்லியும், பரிகாரங்கள் செய்தும் இந்த அரிய சாத்திரத்தின் பெருமையைக் குலைத்து வருகின்றார்கள். உண்மையான சோதிடத்தின்பால் பற்றுள்ள, ஆர்வமுள்ள இளைஞர்களுக்காக அந்தப் பழைய கணக்குகளை இங்கே அறிமுகப்படுத்துகின்றேன்.

மந்திரேஸ்வரர் - பலதீபிகை
பலதீபிகை என்னும் சோதிட நூலை எழுதிய மந்திரேஸ்வரர் ஆயுள் பாவத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கின்றார். லக்கினாதிபதியும் சுபக்கிரகங்களும் கேந்திரங்கள் என்னும் 1, 4, 7, 10ல் இருந்தால் தீர்க்காயுள் என்றும், பணபரங்கள் என்னும் 2, 5, 8, 11 ல் இருந்தால் மத்திமாயுள் என்றும், ஆபோக்லீமங்களில் இருந்தால் தீர்க்காயுள் என்றும் கூறும் அவர் இன்னொரு சித்தாந்தத்தையும் முன் வைக்கின்றார். அதாவது ஜன்மலக்னாதிபதியும், அட்டமாதிபதியும் மித்ருக் கிரகங்களாக இருந்தால் தீர்க்காயுள் என்றும், சமமானால் மத்திமாயுள் என்றும், சத்ருக்கிரகங்களாக இருந்தால் அற்பாயுள் என்றும் கணிக்கின்றார். இதுபோலவே சந்திர லக்னத்தையும் வைத்துப் பார்க்க வேண்டும். லக்னாதிபதியும் சூர்யனும் மித்ருக்கிரகங்களாக இருப்பின் தீர்க்காயுள் என்றும் சமராக இருப்பின் மத்திமாயுள் என்றும் சத்ருகிரகங்களாக இருப்பின் அற்பாயுள் என்றும் அவர் கணிக்கின்றார்.
இங்கே சில சந்தேகங்கள் எழுகின்றன. லக்னாதிபதியும், அட்டமாதியும் சத்ருக்களாக இருப்பின் அற்பாயுள் என்றால், ரிசப லக்னம், மகர லக்னம் ஆகிய லக்னங்களில் பிறப்பவர்கள் 36 வயதுக்கு மேல் வாழ முடியாது என்று அர்த்தமாகிவிடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை. எனவே நாம் மந்திரேஸ்வரரின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு அடிப்படையான விஷயத்தை அவர் முன் வைக்கிறார். லக்கினாதிபதியைவிட அட்டாமாதிபதி பலமாக இருந்தால் ஆயுள் குறைவு என்பதே அது. இவ்விஷயத்தை மட்டும் நாம் எடுத்துக்கொள்ளலாம். இருபதுக்குள் மரணத்தைச் சந்திக்கும் ஜாதகர்கள் விஷயத்தில் இது பொருந்திப் போகக் கூடும்.
வராகமிகிரர் - பிருஹஜ் ஜாதகம்
வராகமிகிரரின் சித்தாந்தத்தில் அற்பாயுள், மத்திமாயுள், தீர்க்காயுள் என்ற பேதங்கள் கிடையாது. ஒவ்வொரு கிரகமும் தத்தமது உச்ச பாகையில் இருந்தால் அக்கிரகங்கள் அவைகளுக்குச் சொல்லப்பட்ட வருடங்களை முழுமையாகத் தருகின்றன. மாறாக நீச்ச பாகையில் இருப்பின் அவைகளுக்குச் சொல்லப்பட்ட வருடங்களில் பாதியைத் தருகின்றன. ஒவ்வொரு கிரகமும் தத்தமது உச்ச அல்லது நீச பாகையில் இருப்பின் அவை கொடுக்கும் வருடங்கள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன.

ஆனால் சூர்யன் உச்சராசியில் இருக்கும் போது புதன் நீச வீட்டிலோ அல்லது மேஷத்திலோ இருக்க நேரும். எனவே அது நீச வீட்டில் இருப்பதாகக் கொண்டால் பாதி வருடங்கள் அதாவது ஆறு வருடங்களைக் கொடுக்கும். எனவே 127ல் 6ஜக் கழிக்க 121 வருடங்கள் வரும். எனவே அதிகபட்சமாக ஒரு மனிதன் 121 வருடங்கள் வாழ முடியும், புதனைத் தவிர்த்து எல்லாக் கிரகங்களும் உச்ச பாகையில் இருக்க நேரிட்டால்! ஆனால் வராகமிகிரர் என்ன காரணத்தினாலோ மனிதனின் பூர்ணாயுள் 120 வருடங்களும் 5 நாட்களும் என்று வரையறை செய்துள்ளார்.
இந்தப் பகுதியை நான் என் தந்தையாரிடம் பாடமாகக் கற்கும் போது “எல்லோருக்கும் எல்லாக் கிரகங்களும் எவ்வாறு உச்சமாக அமையாதோ அவ்வாறே நீச்சமாகவும் இருக்க முடியாதே! இரண்டுக்கும் இடைப்பட்டுத்தானே இருக்கும்? அப்படியானால் எல்லா மனிதரும் 127ல் பாதியான 63½க்கு மேல் வாழ்ந்தாக வேண்டுமே ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே” எனக் கேட்டேன். ‘சுலோகத்தின் அடுத்த பகுதியில் உனக்கு விடை இருக்கிறது’ என்றார் அவர். சத்துரு வீட்டில் இருக்கும் கிரகம் தனது வருடங்களில் மூன்றில் ஒரு பங்கைக் குறைக்கிறது. சனி, சுக்கிரன் தவிர்த்த மற்ற கிரகங்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகியவை சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனம் ஆகும் போது தங்களது வருடங்களில் பாதியை இழக்கின்றன. அடுத்ததாகவும் ஒரு கணக்கு வருகிறது. லக்னத்துக்குப் பன்னிரண்டில் இருக்கும் பாபக் கிரகங்கள் தங்களது வருடங்களை முழுமையாக இழக்கின்றன. லக்னத்துக்குப் பதினோராமிடத்தில் உள்ள பாபக் கிரகங்கள் தங்களது வருடங்களில் பாதியை இழக்கின்றன. இதைப் போலவே பத்தில் 1/3, ஒன்பதில் ¼ , எட்டில் 1/5, ஏழில் 1/6 பங்குகளை இழக்கின்றன. சுபக் கிரகங்கள் பன்னிரண்டில் ½, பதினொன்றில் ¼, பத்தில் 1/6, ஒன்பதில் 1/8, எட்டில் 1/10, ஏழில் 1/12 பங்குகளை இழக்கின்றன. இவ்வாறு கணக்கிட்டபின் மிஞ்சி வருவதே ஒவ்வொரு கிரகமும் கொடுக்கும் ஆயுளாகும். ஏழு கிரகங்களும் கொடுக்கும் வருடங்களைச் சேர்த்து மொத்தமாகக் கிடைப்பதே ஒரு மனிதனுக்கு ஆயுளாகும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு கிரகம் மூன்று விதமாகத் தனது வருஷங்களைக் குறைக்கலாம்.
சத்ரு வீட்டில் இருக்கும் போது தனது ஆயுளில் 1/3 பங்கு குறைக்கிறது.
சூர்யனுடன் சேர்ந்து அஸ்தமனமாகும் போது தனது ஆயுளில் பாதியைக் குறைக்கிறது.
லக்னத்துக்கு ஏழில் இருந்து பன்னிரண்டு முடியவுள்ள ராசிகளில் இருக்கும் போது பாபக்கிரகமாக இருந்தால் முறையே 1/6, 1/5, ¼, 1/3, ½, 1/1 பங்கைக் குறைக்கிறது. ஏழில் இருந்து பன்னிரண்டு முடியவுள்ள ராசிகளில் இருக்கும் போது சுபக்கிரகமாக இருந்தால் முறையே 1/12, 1/10, 1/8, 1/6, ¼, ½ பங்கைக் குறைக்கிறது.
சுக்கிரன் சனி இவர்களுக்கு அஸ்தமனக் குறைப்பு கிடையாது. வக்ரமாகக் கிரகங்கள் இருக்குமானால் அவை சத்ரு வீட்டில் இருந்தாலும் 1/3 பங்கு குறைக்க வேண்டியதில்லை

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:
அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்:
தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த அமாவாசையில் கடை திறந்திருக்கிறேன், புதிய வண்டி வாங்கி இருக்கிறேன், நிலம் பத்திரம் செய்திருக்கிறேன் என்று கூறுபவர்களை நிறைய பார்க்கலாம்.
ஆனால் பொதுவாக அமாவாசையை நல்ல நாள் என்று பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.
சரி அமாவாசை நல்ல நாளா? தீய நாளா?
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு.
அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.அப்போழுது நம்மை யாராவது எண்ணுகிறார்களா ,நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம்.
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.
அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.
அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும்...

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...