Thursday 29 June 2017

வாழ்வில் உடனடி முன்னேற்றம்

வாழ்வில் உடனடி முன்னேற்றம்


எவ்வளவோ வசதி இருந்தும், அழகு இருந்தும், திறமை இருந்தும் - ஒரு சிலருக்கு திருமணம் எளிதில் நடப்பதில்லை.... ஏன்  ??

நல்ல வேலை ... கை நிறைய சம்பளம்... ஆனால் கழுத்துக்கு மேல கடன்... எப்படி?

நல்ல திறமை, கடின உழைப்பு... -  ஆனா , ப்ரோமோஷன் , இன்கிரிமென்ட் எல்லாம் இது எதுமே இல்லாத , உங்க "கலீக்" க்கு மட்டும்.. உங்களுக்கு , நல்ல அழகா ஒரு பட்டை... நாமம்..!! ஏன் இப்படி நமக்கு மட்டும்?

எவ்வளவோ வசதி இருந்தும், கொஞ்சுறதுக்கு ஒரு குழந்தை இல்லை... ஏன் இப்படி?

இந்த பிறவிலேயோ, இல்லை போன பிறவியிலோ , ரொம்ப ஓவரா ஆட்டம் போட்டு இருந்தா.... ஆண்டவன் அடிக்கிறது இந்த மாதிரி தான்...

ஜாதகத்தை நன்றாக பார்க்க தெரிந்தவர்கள் , இதை உடனே கணித்து விடுவார்கள். இதற்கு பெயர் - பிரம்மஹத்தி தோஷம்.  யார் ஒருவர் ஜாதகத்தில், சனி , குரு இணைந்தோ, ஒருவரை ஒருவர் , பார்த்து இருந்தாலோ - 99 % அவருக்கு - பிரம்மஹத்தி தோஷம் - இருப்பதாக அர்த்தம்..... நவ அம்சத்திலும் இணைந்து இருந்தாலும் , இது பொருந்தும்..

பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது?

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்து விடுவதால் , ஒருவருக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது. கொலை அல்லது அதற்கு சமமான பாவங்கள் : 

1.பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபத்து , திருமணம் செய்யாமல் இருத்தல்

2.பலரின் உழைப்பை உறிஞ்சி,அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது

3.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது

4.குருவின் கொள்கைபிடிக்காமல் தானே குருவாக மாறுவது

5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பைக் கொன்றுவிடுவது

6 . சென்ற பிறவிகளில் , ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல் 

7.உங்கள் மீது தனக்கிருக்கும் ஆசையை வெளிப்படுத்தியும்,அந்த ஆசையை நிறைவேற்றாமலிருப்பது (ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்)

பிரம்மஹத்தி தோஷம் என்ன செய்யும்?

1.வருடக்கணக்கில் மனக்குழப்பம் இருக்கும்

2.தவறே செய்யாமல் தண்டனை கிடைக்கும்

3.மருத்துவத்திற்குக்கட்டுப்படாத நோய் வரும்

4.தொழிலில் திடீர் சரிவு அல்லது வீழ்ச்சி ஏற்படும்

5.திருமணம் தள்ளிப்போகும் அல்லது நடக்காது

6.குழந்தைப்பாக்கியம் இல்லாமல் அல்லது தாமதம்



இது விளையாட்டு சமாச்சாரம் அல்ல... 30 வயது ஆகியும் திருமணம் ஆகாத ஒரு பெண்மணிக்கு, எவ்வளவோ தோஷ பரிகாரங்கள் செய்து , கடைசியாக நாம் அவர்களுக்கு ,  இந்த தோஷ நிவாரணம் பரிந்துரை செய்து, இன்று அவர்கள் மணமாகி , நல்ல வாழ்க்கை அமைந்து இருக்கிறது... 
அந்த குடும்பத்திற்கு , அதன் பிறகு எல்லா நல்ல காரியங்களும், நமது அறிவுரைக்குப் பிறகே... அவர்கள் வழியில் சுமார் இருபது குடும்பங்கள் , நமது  ஆன்மிக அறிவுரையின் படி நடந்து கொள்கிறார்கள்..

உள்ளங்கை ரகசியம்-1

உள்ளங்கை ரகசியம்-1


தினசரி காலை எழுந்த உடன் அவரவர் இரு கரங்களையும் சேர்த்து உள்ளங்கையை காணவும். உள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும். உள்ளங்கையில் சக்தி, சரஸ்வதி, லட்சுமி, என மூன்று அன்னையரும் வந்து தங்கும் மையமாகும். இவர்களை நினைத்து உள்ளங்கையை பார்த்தால் கல்வி, செல்வம், வீரம் இம் மூன்றும் நமக்கு கிடைக்கும்.

உள்ளங்கையை குளிக்கும்போதும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போதும் தவிர்த்து மற்ற நேரங்களிலும் எந்த காரணம் கொண்டும் தலையில் கையை வைக்க கூடாது . நாம் பெற்றுள்ள கர்ம வினை பாவங்கள் பெருகிவிடும். அந்த வினை நம்மை வீழ்ச்சி அடைய வைக்கும். எனவே உள்ளங்கையை தலையில் படும்படி சூரிய நமஸ்கார வேளை, குளியல்  வேளை, எண்ணெய் தேய்க்கும் போது தவிர மற்ற வேளையில் படவே கூடாது . ஆண்களுக்கு வெள்ளிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது. பெண்களுக்கு சனிக்கிழமை உள்ளங்கை தலையில் படக்கூடாது . செவ்வாய்கிழமை யாருக்குமே சூரிய நமஸ்கார வேளைக்கு பிறகு படக்கூடாது. அதற்கு முன் படலாம். பொதுவாக உள்ளங்கை சூரிய உதயத்திற்கு முன் தலையில் பட்டால் தோஷமில்லை. உதயத்திற்கு பின் அவசியம் காரணமின்றி படாமல் பார்த்துக் கொள்ளவும். இரவில் உறங்கும்போது கூட தலையில் கை வைக்காம் தூங்குவதே சிறந்தது. தலையில், கன்னத்தில் காதில் உள்ளங்கை வைத்து படுத்துறங்கினால் எந்நிலையில் உள்ளவராயினும் தரித்திரம் பிடிக்கும். எனவே கவனம் உள்ளங்கையை காலை எழுந்ததும் பார்த்து கண்களில் வணக்கத்துடன் ஒற்றிக்கொள்ளலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர மகா அதிஷ்டசாலியாக வருவீர். வாழ்வீர், வளர்வீர் வளமுடன்.

🌼சந்திர பலம் உள்ள நாட்கள்🌼

🌼சந்திர பலம் உள்ள நாட்கள்

எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள்

நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.

நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.

பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பரணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

கிருத்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.


ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

மிருகசீரிஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்..

திருவாதிரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

புனர்பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

ஆயில்யம் : நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சித்திரை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சுவாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.


கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டா ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

மேற்கண்டவாறு அந்த அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும்


ஹோரை

 ஹோரை

சூரிய ஹோரை:
******
செய்யக்கூடியவை:
————————–
இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அதிகாரிகளை சந்திக்கலாம். வழக்கு சம்பந்தமாக பேசலாம் .
தகப்பனாரின் உதவியை பெற அவரை நாடலாம்
உயில்,சாசனங்களில் கையெழுத்திடலாம்.
பத்திரங்கள் பார்க்கலாம்
சிவ தரிசனம் செய்யலாம் .
ஹோரைகள் தரும் பலன்கள்

செய்யகூடாதவை :
—————————
சொந்த வீட்டிலோ,வாடகை வீட்டிலோ பால் காய்ச்சகூடாது புது வீட்டில் குடி ஏறக்கூடாது
ஒப்பந்தகளில் கைஎழுத்திட கூடாது



சந்திர ஹோரை
******
செய்யக்கூடியவை :
—————————
புது வியாபாரம் தொடங்கலாம் . குறிப்பாக தண்ணீர் , பால்,அழுகும் பொருட்கள் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம் . வங்கியில் கணக்கு தொடங்கலாம். பெண் பார்க்கும் நிகழ்சிகளை ஏற்பாடு செய்யலாம்.அம்மன் சனிதனதிர்க்கு சென்று வழிபடலாம்.கண் சமந்தமாக மருத்துவரை சந்திக்கலாம்.கண் அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்க அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.தாயாரின் உதவியை பெற அவரை நாடலாம்
செய்ய கூடாதவை:
————————–
தேய் பிறையில் சந்திர ஹோரையை தவிர்க்க வேண்டும். சொத்து சமந்தமாக பேசகூடாது.


செவ்வாய் ஹோரை
******
செய்யக்கூடியவை :
—————————–
சொத்துகள் வாங்குவது விற்பது பற்றி பேசலாம். வீடு தோட்டம் நிலத்தை போய்ப்பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.சகோதரர்கள், பங்களிகளின் பிரச்சனைகளைப் பேசலாம், ரத்த தானம் செய்யலாம் . சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கு செல்லலாம் . கடனை அடைக்கலாம் .
செய்ய கூடாதவை:
————————–
கடன் வசூல் செய்ய போகக்கூடாது.
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்களை தவிர்க்கவேண்டும் .


புதன் ஹோரை
*****
செய்யக்கூடியவை :
கல்வி சமந்தமாக எல்லா விஷயங்களயும் செய்யலாம்.
ஜாதகம் பார்க்கலாம்.கணக்கு வழக்குகள் பார்க்கலாம்.
வங்கியில் புது கணக்கு தொடங்கலாம்.
மாமன் வகை உறவுகளின் உதவியை நாடலாம்.வக்கீல்களை பார்க்கலாம் .
கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம்.நல்ல விஷயங்களுக்கு தூது போகலாம்.
பெருமாள் தலங்களுக்கு சென்று வணங்கலாம்.
செய்ய கூடாதவை:
————————–
பெண்பார்க்கும் சம்பவம் கூடாது.
வீடு,நிலம்பற்றி பேச கூடாது.
சொத்துகளை பார்வையிடக்கூடாது.


குரு ஹோரை
*****
செய்யக்கூடியவை :
—————————
சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற ஹோரை.
பொன் நகைகள் வாங்கலாம்.
புது மணப் பெண்ணிற்கு மாங்கல்யம் வாங்கலாம் .
வங்கியில் பிக்சட் டெபொசிட் செய்யலாம்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம்.
முருகன் தெட்சிணா மூர்த்தி ஆகியோரை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதை கேட்கலாம்.
கொடுக்கல் வாங்கல் வைத்து கொள்ளலாம்.
யாகங்கள் ஹோமங்கள் செய்வதற்க்கான பொருட்களை வாங்கலாம்.
செய்ய கூடாதவை:
—————————
முதல் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்க கூடாது.
புது மன தம்பதிகளுக்கு விருந்து,உபசாரம் செய்யகூடாது

.
சுக்கிர ஹோரை
******
செய்யக்கூடியவை :
—————————
பெண் பார்க்கும் சம்பர்தாயத்திற்குமிக சிறப்பான ஹோரையாகும். காதலை வெளிபடுத்தலாம். வெள்ளி பொருட்கள் வைர ஆபரணங்கள் வாங்கலாம்.விருந்து வைக்கலாம் வாகனம் ஏறலாம். வண்டி வாங்க பணம் கட்டலாம்.சொத்து விஷயங்களை பேசலாம்.கணவன் மனைவிஇடையே ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து பேசலாம்.பெண்களின் உதவியை நாடலாம்.பிரிந்த தம்பதியர்கள் ஒன்று சேரலாம்.அம்பாள் ஆண்டாள் தளங்களுக்கு சென்று வழிபடலாம்.
செய்ய கூடாதவை:
—————————
நகை இரவல் கொடுக்க கூடாது . குடும்ப பிரச்சனைகளை பேசக் கூடாது.துக்கம் விசாரிக்ககூடாது.


சனி ஹோரை
****
செய்யக்கூடியவை :
————————–
சொத்து சமந்தமாக பேசலாம்.இரும்பு சாமான்கள்,பீரோ,வண்டி, ஆகியவை வாங்கலாம்.மரக்கன்றுகள் நடலாம்.நவகிரக பரிகார பூஜைகள் செய்யலாம்.வாங்கிய கடனை அடைக்கலாம்.
செய்யக்கூடியவை :பிரசித்தி பெற்ற தலங்களுக்கு செல்லலாம்.
செய்ய கூடாதவை:
—————————
நோய்க்கு முதன் முதலாக மருந்து சாப்பிடகூடாது.மருத்துவரை சந்திக்க கூடாது. பிரயாணம் செல்ல கூடாது. வெளியூர் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய கூடாது.
முதல் முதலாக பிறந்த குழந்தையை
போய்ப்பார்க்க கூடாது .
துக்கம் விசாரிக்க கூடாது.


தவிர்க்க வேண்டிய நேரங்களை தவிர்ப்பதுடன் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களை செய்வதால்அவை நிலைத்து, நீடித்து நின்று பலன் தரும் ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் ஜாதகத்தில் தசா புத்தி சரியில்ல விட்டாலும் அவை நல்ல விதமாக கூடி வரும்.

ஹோரையை அறிந்து நற்காரியங்களை செய்து வாழ்வில் முன்னேற வாழ்த்துகள்


உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்

உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்




உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.
அஸ்வினி
1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் – மகிழம்
3 ம் பாதம் – பாதாம்
4 ம் பாதம் – நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் – அத்தி
2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் – விளா
4 ம் பாதம் – நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் – நெல்லி
2 ம் பாதம் – மணிபுங்கம்
3 ம் பாதம் – வெண் தேக்கு
4 ம் பாதம் – நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் – நாவல்
2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் – மந்தாரை
4 ம் பாதம் – நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் – கருங்காலி
2 ம் பாதம் – ஆச்சா
3 ம் பாதம் – வேம்பு
4 ம் பாதம் – நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் – செங்கருங்காலி
2 ம் பாதம் – வெள்ளை
3 ம் பாதம் – வெள்ளெருக்கு
4 ம் பாதம் – வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் – மூங்கில்
2 ம் பாதம் – மலைவேம்பு
3 ம் பாதம் – அடப்பமரம்
4 ம் பாதம் – நெல்லி
பூசம்
1 ம் பாதம் – அரசு
2 ம் பாதம் – ஆச்சா
3 ம் பாதம் – இருள்
4 ம் பாதம் – நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் – புன்னை
2 ம் பாதம் – முசுக்கட்டை
3 ம் பாதம் – இலந்தை
4 ம் பாதம் – பலா
மகம்
1 ம் பாதம் – ஆலமரம்
2 ம் பாதம் – முத்திலா மரம்
3 ம் பாதம் – இலுப்பை
4 ம் பாதம் – பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – வாகை
3 ம் பாதம் – ருத்திராட்சம்
4 ம் பாதம் – பலா

உத்திரம்
1 ம் பாதம் – ஆலசி
2 ம் பாதம் – வாதநாராயணன்
3 ம் பாதம் – எட்டி
4 ம் பாதம் – புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் – ஆத்தி
2 ம் பாதம் – தென்னை
3 ம் பாதம் – ஓதியன்
4 ம் பாதம் – புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் – வில்வம்
2 ம் பாதம் – புரசு
3 ம் பாதம் – கொடுக்காபுளி
4 ம் பாதம் – தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் – மருது
2 ம் பாதம் – புளி
3 ம் பாதம் – மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் – கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் – விளா
2 ம் பாதம் – சிம்சுபா
3 ம் பாதம் – பூவன்
4 ம் பாதம் – தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் – மகிழம்
2 ம் பாதம் – பூமருது
3 ம் பாதம் – கொங்கு
4 ம் பாதம் – தேக்கு
கேட்டை
1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – பூவரசு
3 ம் பாதம் – அரசு
4 ம் பாதம் – வேம்பு
மூலம்
1 ம் பாதம் – மராமரம்
2 ம் பாதம் – பெரு
3 ம் பாதம் – செண்பக மரம்
4 ம் பாதம் – ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் – வஞ்சி
2 ம் பாதம் – கடற்கொஞ்சி
3 ம் பாதம் – சந்தானம்
4 ம் பாதம் – எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் – பலா
2 ம் பாதம் – கடுக்காய்
3 ம் பாதம் – சாரப்பருப்பு
4 ம் பாதம் – தாளை
திருவோணம்
1 ம் பாதம் – வெள்ளெருக்கு
2 ம் பாதம் – கருங்காலி
3 ம் பாதம் – சிறுநாகப்பூ
4 ம் பாதம் – பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் – வன்னி
2 ம் பாதம் – கருவேல்
3 ம் பாதம் – சீத்தா
4 ம் பாதம் – ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் – கடம்பு
2 ம் பாதம் – பரம்பை
3 ம் பாதம் – ராம்சீதா
4 ம் பாதம் – திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் – தேமா
2 ம் பாதம் – குங்கிலியம்
3 ம் பாதம் – சுந்தரவேம்பு
4 ம் பாதம் – கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் – வேம்பு
2 ம் பாதம் – குல்மோகர்
3 ம் பாதம் – சேராங்கொட்டை
4 ம் பாதம் – செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் – பனை
2 ம் பாதம் – தங்க அரளி
3 ம் பாதம் – செஞ்சந்தனம்
4 ம் பாதம் – மஞ்சபலா


செல்வம் பெருக

செல்வம் பெருக

 வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித
ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.
இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை
காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு
வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது
குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்
பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்
கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்
.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,
பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்
வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்
அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.
22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் ணவரவுநிரந்தரமாகும்.
26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.
29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட
லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.
56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து
வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு
33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்
செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட

புறங்கூற்று…

புறங்கூற்று…


* குற்றம் சொல்லவும்
குறைகள் பேசவும்
முற்றம் தேவையில்லை
இவர்களுக்கு!


* வென்றவனைக் கண்டால்
அதிர்ஷ்டம் என்று
அலட்டிக் கொள்வர்!


* தோற்றவனை கண்டால்
தேவை தானா என்று
எகத்தாளம் பேசுவர்!


* உள்ளவனைக் கண்டால்
கொள்ளை அடித்த பணமென்று
குற்றம் சொல்வர்!


* இல்லாதவனைக் கண்டால்
பிழைக்க தெரியாதவனென்று
இகழ்ந்து பேசுவர்!


* தப்பு செய்தவன்
தண்டனை பெற்றால்
சட்டம் சரியில்லை என்பர்!


* தப்பு செய்யாதவன்
தண்டனை பெற்றால்
சரியான நீதி என்பர்!


* பிழைப்பு தேடி
பிற நாடு சென்றால்
பேராசை பிடித்தவன்
என்று பிதற்றுவர்!


* உழைப்பு தேடி
உள்நாட்டில் உலவினால்
ஊர் சுற்றியென்று
உதாசினம் செய்வர்!


* ஊருக்கு உதவினால்
ஊர்கழுதை என்று
பட்டம் சூட்டுவர்!


* சும்மா சுற்றினால்
சோம்பேறி என்று
முத்திரை குத்துவர்!



* மற்றவர் குறைகளை
மணிக்கணக்கில் பேசும்
இவர்களுக்கு
ஒரு நிமிஷம் கூட
கிடைப்பதில்லை
தம் குறைகளை
நினைத்துப் பார்க்க!


Wednesday 28 June 2017

சுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்படி ? –

சுவாசப் பயிற்சி மூலம் தியானம் செய்வது எப்படி ? 




Meditation – தியானம்

ஓதாக் கல்வியின்  ரகசியம்

மனிதனை  நயமாகவோ,  கோபத்தாலோ, பயமுறுத்துதலாலோ, உபதேசத்தாலோ, அறிவுரைகளாலோ, ஏட்டுகல்வியாலோ, ஒரு காலமும் மாற்றமுடியாது. ஆதாரபூர்வமானயுக்தியின்யோகத்தால் மட்டுமே மாற்றமுடியும்.

[யுக்தி என்றால் சூட்சுமம்,டெக்னிக்,நுணுக்கம்,ரகசியம்]

சுவாசத்தின் மையம்[சுழுமுனை]

சுவாசமானது ஓம் அல்லது நமோ என்று மேலேறி  சற்று நின்று நமசிவாய அல்லது நாராயன என்று  இறங்குவதைப்பார்க்கலாம். சுவாசம் நிற்கும் மையத்தின்பெயர்களாகியசுழுமுனை,ஓரெழுத்து,ஊமைஎழுத்து,பேசாமந்திரம்,என்றெல்லாம்சொல்லக்கூடியசுவாசம்கணநொடிநிற்கும்  இடமாகிய சுழுமுனையில்மட்டுமே மனம் ஒடுங்கி, விழிப்பு நிலையில்  தனிப்பெரும்அறிவாக பிரகாசிக்கும்.

தியானம் செய்யும் முறை

இறையருளால் காலையில் தூங்கியெழுந்தவுடன் காலை கடன்களை முடித்து வெறும் வயிற்றிலோ அல்லது காபி டீ சுடுதண்ணீர் அருந்தி விட்டு சுகமான ஆசனத்திலோ , நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மனதைசுவாசத்தின்மீதுஎந்தமந்திரத்தையும்உச்சரிக்காமல்முழுகவனத்தையும் இயல்பாகவும்மென்மையகவும்உள்சுவாசம்மேலேசெல்வதைகவனியுங்கள்.பிறகுசுவாசம்சற்றுநிற்கும்இடத்தில்[சுழுமுனையில்] சுவாசத்தைநிறுத்திஉற்று கவனியுங்கள்.அதன்பின்வெளிசுவாசம்இறங்கிநிற்பதையும்கவனியுங்கள். தொடர்ந்துவேறுஎந்தஒருநினைப்பும்இன்றி  தினமும்இருபதுநிமிடங்கள்நாற்பதுநாட்கள்இந்தயோகத்தைபயிற்சிசெய்தால்போதும்.  நீங்கள் நினைத்த,  நினைக்காதvaigaLவைகள் கண்டிப்பாக நிறைவேறும்.

நோய்களை தீர்க்கும் உடல் வழி யோக பயிற்சி

மிகினும்குறையினும்நோய்செய்யும்நூலோர்,

வளிமுதலா எண்ணிய மூன்று.-குறள்

மருத்துவ நூலோர் வாதம், பித்தம்,சிலேத்துமம் குறைந்தாலும்,அதிகமானாலும் வருகின்ற  சகல தீராத நோய்களான  .  முக்கியமாக மூட்டு, வலி, நரம்பு வலி, காக்காய் வலிப்பு ,பக்கவாதம்,  ரத்த அழுத்தம், இருதயநோய், குழந்தையின்மை, முடி கொட்டுதல் சர்க்கரை, செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண் ,மஞ்சட் காமாலை, ரத்த சோகை, ரத்த வாந்தி, கல்லீரல் ,மூலம், மற்றும் பித்தப்பை கல், இருமல், சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன், கண்டிப்பாக நீங்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

 இரவில் தூக்கம் வராதபோது, மிகுந்த கோபம், காமம், குரோதம் ஏற்படும் தருவாயில், விடை காணமுடியாமல் யோசிக்கும்போதும், நீண்ட நேரம் தாம்பத்தியம் நீடித்திருக்கவும், முக்கியமாக கணவ்ன்,.மனைவி,குzanழந்தைகள் மற்றும் நம் உறவுகளுக்கிடையே பிரச்சனை எழும்போதும் உடனே சுவாசத்தைக் கவனித்தால் போதும். உடனே நல்ல தீர்வு ஏற்படுவதைக் காணலாம்.

பலன்கள்

.இந்த தலை சிறந்த யோகத்தின் பயிற்சியின்போது சுவாசமானது அடி முடி அதாவது தலைமுதல் உள்ளங்கால் வரை சென்று கூடவே ரத்தஅழுத்தத்தை சமசீராக்கி ,கபம் என்ற சளியை கறையவைத்து எல்லா பகுதிக்கும் தங்கு தடையின்றி அழைத்து செல்கிறது. அதனால் மனமும், உடலும் மிதமான தட்ப வெட்ப நிலைக்கு அதாவது அசுத்ததேகம் சுத்தப்ரணவதேகமாக மாறுபட்டு வாதம் காற்று – பித்தம் நெருப்பு –கபம் நீர்  நம் தேகத்தில் அதனதன் விகிதாசாரத்தில் மாறி ரத்த ஓட்டம் தடையின்றி செல்லும்தருவாயில் ஐந்து நிமிடங்களில் அபாணவாயு திறந்து மலசிக்கலை நீக்கி மிகினும், குறையினும் உள்ள மும்மலங்கல் கண் கூடாக வெளியேறி பித்தம் தலைக்கேறாமல் சித்தத்தை தெளியவைத்து  காயத்தில் உருவாகும் சகல நோய்கள் நீங்கி மனம் தெய்வீகமாகி உடலை வழி நடத்தி ஷேத்திரமாக்கும் யோகமாகும்.
எனவே இப்பயிற்சியை  உதாசீனபடுத்தாமல் செய்யுங்கள் புரியாத பட்சத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இதுவரை உலகியல் வெற்றிகளின் ரகசியத்தை பார்த்தோம்,

இனி உலக பற்றிலிருந்து தனித்துநின்று இறையருளால் சகல சித்துகளும் தானாகவே கைவல்யமாகி பேரானந்தம்,சச்சிதானந்தம்,பரமானந்தத்தை அடைந்து பிறப்பறுக்கும் மெய்ஞானத்தை அடைய விரும்புவோர் மட்டும் கீழ்கண்ட ஒளி ரகசிய யோகத்தை நேரடியாக பெற்றுக்கொள்ளவும்.

உயிர் வழி யோகபயிற்சி.

நயனதீட்சையானது, கண்ணிற்கு பார்க்கும் சக்திதான் உண்டு. கண்டறியும் சக்தி மனதிற்குதான் உண்டு. ஆதலால் யாரையும் எதையும் நேராகத்தான் பார்க்கவேண்டும். ஆனால் பார்க்காமல் பார்க்கவேண்டும். அதாவது மனதின்கண்திரை அமைத்துஅக்கணமே அவைகள் மனதில் பதியாவண்ணம் பார்க்கும் யுக்தியால்  மற்ற புலன்கள் அனைத்தும் அக்கணம் சுவாசமானது வெளிசுவாசத்திலிருந்து, உள்சுவாசத்திற்கு[வாசி] மாற்றப்பட்டு மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்பு நிலையில் இயங்கி தன்னை தடுத்தாட்கொள்ளப்படுகிறது.. ஆகையால் திரைஅமைத்து பார்க்காதபட்சத்தில்  மனம்வாக்குகாயம் மூன்றும் பலம் இழந்து மாயையில் சிக்கி விடும். பிறகு அவைகள் ஆழ்மனதில் பதிந்து மீண்டும்,மீண்டும் எழவைத்து மெய்ஞானத்தை அடையவிடாமல்  வெற்றி வாய்ப்புகளை தவறவிட்டு விடும். இறுதியில் நுட்பமான கண்களும் பார்வையை இழந்து விடும். என்வே ஒளிவழி யோகமான பார்க்காமல் பார்க்கும் யுக்தியால் மனம்எண்ணாமலும், வாக்குசொல்லாமலும்காயம்செய்யாமலும்செய்யும், அதாவது மனத்துக்கண்மாசிலன்ஆதல்;அனைத்துஅறன்; ஆகுலநீரபிற. என்றகுறளுக்கிணங்க சகல சித்திகளும்  தானாகவே வந்தடையும் தலை சிறந்த யோகமாகும்.

பற்றற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்;மற்று

நிலையாமை காணப் படும்.[குறள்]

ஆசை

ஆசையின் கீழ் எந்த ஒரு காரியத்தையும் துவங்குமுன் கூடவே ஒரு பயம் ஏற்படுவதைக் காணலாம். இந்த பயமே அனைத்து வெற்றி தோல்விகளுக்கு அடிப்படையாய் இருக்கிறது. இந்த பயத்தின்போது ஏற்படுகின்ற எண்ணம் சொல் செயல்களுக்கு தக்கவாறு முடிவு அமைகிறது. எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேறாத பட்சத்தில் தன்னையறியாமல் ஏற்படுகின்ற பயத்தின் காரணமாக எழும் கோபத்தினால் தன்னையும் பிறரையும் இழந்து மன அழுத்தம் ஏற்பட்டு சுவாசத்தின் இயல்பான ஓட்டம் மாறுபட்டு ரத்தம் சூடேறி மனம் கொந்தளித்து மன நோய்களுக்கும், உடலின் அனைத்து நோய்களுக்கு ஆளாகிவிடும். எனவே மென்மையானசுவாசத்தைஎந்தசூழ்னிலையிலும்ஒரேநிலையில்நிலைநிறுத்தும் யோகத்தால் பயம்நீங்கிஅதனால் ஆன சர்வநாசம் செய்யும்கோபத்தைசுட்டெறித்து விடும்.

தன்னையறியாமல் ஏற்படுகிற பயம் என்பதுயாதெனில் அது கடவுளால்

மறைமுகமாக உணர்த்தபடும் எச்சரிக்கையாகும்

நோய்கள்

மலச்சிக்கல்    [மருந்தென வேண்டாம் யாக்கைக்கு]. என்ற குறளுக்கினங்க. வாதத்தினால். முக்கியமாகமூட்டு வலி ,நரம்பு வலி, காக்காய் வலிப்பு பக்கவாதம், ரத்த அழுத்தம் ,இருதயநோய் ,குழந்தையின்மை, முதலியவைகள் இதில் அடங்கும்.

சிலேத்துமத்தினால்.முக்கியமாக  இருமல் ,சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் ,இறுதியில் கபத்தினால் சுவாசம் சென்று வர தடையாயாகவும் இருக்கிறது.

பித்தத்தினால் முக்கியமாக முடி கொட்டுதல் ,சர்க்கரை,, செரியாமை ,,வயிற்றுவலி, வயிற்றுப்புண் ,மஞ்சட் காமாலை, ரத்த சோகை, ரத்த வாந்தி, கல்லீரல், மூலம் ,மற்றும் பித்தப்பை இதில் அடங்கும்.

உணவு முறை

தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் தூக்கம் வந்தவுடன் தூங்கிவிடவேண்டும். எந்த காரணத்தைக்கொண்டும் அதை தள்ளிபோடக்கூடாது. இது மூளையை பாதித்து மனநோய்களுக்கு ஆளாக்கிவிடும். அதே போன்று மலத்தையும்,சிறு நீரையும் தள்ளிபோடக்கூடாது.

வாசி

வா-என்றால் காற்று. சி-என்றால் நெருப்பு. சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே வாசி எனப்படுவதாகும்.

இந்த சுவாசக்காற்றைக் கொண்டு முறையாக வாசிக்கும் பொழுது தச வாயுக்களை சீரமைத்து உடம்பிலுள்ள மனம் ,உடல் சம்மந்தமான தீராத நோய்களை தீர்க்கவல்ல மாமருந்தாகும்.

வாசி இருப்பிடம்

எல்லோரும்  அறிவார் நவ வாசல், அறியாதார்  திருவாசல் என்ற பத்தாவது வாசலின்  இருப்பிடமான உச்சிக்கு கீழே உண்ணாக்குக்கு மேலே உள்ள ஊசிமுனைஅளவேயுள்ள  இடுக்கமான                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                வழியாக ‘செல்லும் சுவாசத்தின் பெயரே வாசியாகும்.. இந்த சுவாசத்தின் [டெக்னிக்-யுக்தியை] கொண்டு  ஒன்பது வாசலின் உபாதைகளை அடைக்கவல்ல யோகமாகும்.

வெளிசுவாசம் – உள்சுவாசம்

இரவு வந்தவுடன் படுக்கைக்கு செல்லும் போது மல்லாக்க படுத்துக்கொண்டு கை கால்களை சாதாரணமாக நீட்டிக்கொண்டு சுவாசத்தை கவனியுங்கள்.அப்போது வெளிசுவாசம் மாற்றப்பட்டு உள்சுவாசம் வாசிப்பதை உற்று கவனியுங்கள்.

காலையிலிருந்து இரவு வரை உழைத்த களைப்பினால் சோர்ந்து, பார்க்கும் சக்தியை கண்களும், சிந்திக்கும் சக்தியை மனமும், உழைக்கும் சக்தியை உடலும் இழந்து உறங்கிவிடும்தருவாயில். ஆனவம்,கன்மம்,மாயை,பசி,தாகம்,விருப்பு,வெருப்புகள் பற்றற்ற நிலையில் உள்சுவாசமான  [வாசி ] மட்டுமே இயங்கி விடிந்தால் வெளிசுவாசத்திற்கு   சக்தியை அளிக்கவல்லதாகிறது.


மாமருந்து
சுவாசத்தை  கணக்கறிந்து மேலேற்றி மூலவரை வலம் வந்தபின் சுவாசம் ஒடுங்குகின்ற சுழுமுனையில் ஓங்காரப் பிரணவத்தை உள்ளடக்கி சுவாசத்தை இறக்கும் தருவாயில் முதுகு தண்டின் நடுனாடி வழியாக ஓடி பத்தாவது வாசலின் உச்சியில் கனல் ஆவியில் உற்பத்தியாகும் அமிர்த நீராகிய மாமருந்தே சகலத்தையும் குணமாக்கும் சஞ்சீவினியாகும்.
மாங்காய்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்பால் ஏதுக்கடி குதம்பாய்-[குதம்பை சித்தர்]

பக்தி- ஞானம்

வேண்டுதல் என்ற பக்தி நிலையிலிருந்து வேண்டாத ஞான நிலைக்கு செல்பவர்க்கு பிறவித்துன்பம் இல்லை.[எல்லோருடைய வாழ்க்கையிலும்  நினைப்பது நடக்கிறது. நினைப்பது நடக்காமலும் போகிறது. நினைக்காதது நடக்கவும் செய்கிறது இந்த மூன்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள் உண்மை புறியும். அதாவது இந்த மூன்றில் முதல் இரண்டும் மாயை என்பது புறியும்.மூன்றாவதான நினைக்காததுதான் நடக்கிறது என்ற உண்மை புறிந்து  , இது வேணும் அது வேணும் என்ற வேண்டுதல் என்ற பக்தி நிலையில் பொருள் ஈட்டுவதை கைவிட்டு ஞானனிலையான வேண்டாமலே கொடுப்பவந்தான் இறைவனாக இருக்க முடியும் என உணரப்பெற்று நிலையான செல்வத்தை அடைந்து  இலான் அடி சேர்ந்தார்க்கு அதாவது இறைவன்பால் சரணாகதி அடைந்தார்க்கு யாண்டும் இடும்பை இல [ பிறவித்துன்பம் இல்லை] அதாவது மீண்டும் அந்த உயிர் இன்னொரு தாயின் கர்பப் பையில் தரிக்காத மோட்ச நிலையாகும்..] [இடும்+பை  என்பது கர்ப பையை குறிக்கிறது ]

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு,

யாண்டும் இடும்பை இல. [குறள்]

தியானம்

தியானம் என்றால் விழிப்பு நிலையில் மௌனமாய் இயங்கும் சுவாசத்தை சதா காலமும் கவனிப்பது. அதாவது ஒரு மனம் ஒன்றை பார்த்து, கேட்டு, மகிழ்ந்து மற்றும் எந்த வேலையை செய்து கொண்டிருந்தாலும், இன்னொரு மனம் சுவாசத்தின் மீது கவனம் இருக்கவேண்டும். [அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போன்று.]

[ஏது தொழில் புரிந்தாலும், எத்தவம் புரிந்தாலும் சித்தர் மனம் மோனத்தே. அதாவது மௌனமாய்[மோனத்தே] இயங்கும் சுவாசத்தை கவனித்தல்]

 தவம்

தவமென்றால் விழிப்பற்ற விழிப்பு நிலையில் உயிரின் மையம், உடலின் மையம் இரண்டும் ஓர் மையத்தில் ஒன்றிணையும் தருவாயில் பேறின்பமயமாதல். [அதாவது சிவன் என்ற உயிரும், சக்தி என்ற உடலும் சிவசக்தி மயமாதல்.]

யோகம்

யோகம் என்றால் தவத்தின் பலனை அடைதல்.

இவற்றின் பலனை அடைந்தவர்களே யோகி ஆவார்கள்.[யோகம் என்றால் பலன் என்பதாகும்].

சித்திகளின் அற்புதங்கள்

சிலதெல்லாம் உனக்காக மட்டும் இறைவனால் கொடுக்கபட்டவைகள். அது போன்று உனக்கு கைவரப்பெற்ற சித்திகளின் அற்புதங்கள்  உனக்கானது,  அது உனக்கானது அல்லாவிட்டால் சித்திகள் அற்புதங்களை படைக்காது.

சிற்றின்பம்-பேறின்பம்.

ஒலியையும்,ஒளியையும் இழந்து பெருவது சிற்றின்பங்கள். ஒலியையும்,ஒளியையும் இழக்காமல் பெருவது பேறின்பம். அதாவது தொட்டு கெடுவதை விட, தொடாமல் தொடுவது தெய்வீகமாகும்.

அஞ்ஞானம்-மெய்ஞானம்

அஞ்ஞானம் எல்லாவற்றையும் இருகோணத்தில் பார்க்கும்.

மெய்ஞானம் எல்லாவற்றையும் ஒரே கோணத்தில் பார்க்கும்.

உலகியல்-அகவியல்.

உலகியல் பற்றுக்கு கனவுகளை நினைவாக்கி வாழ்க்கையை வளமாக்கி கொள்ளவேண்டும்.

 அகவியல் பற்றுக்கு பற்றற்ற பற்றில்  நினைவுகளை கனவாக்கி வாழ்க்கையை வளமாக்கி கொள்ளவேண்டும்

பற்றுக பற்றற்றான் பற்றினை;அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.

அடக்கம்.

அடக்கம் என்பது ஒன்று பனிவைக் குறிக்கும்.மற்றொன்று இறந்த பின் உயிர் அடக்கம் ஆவது. மனமானது எல்லா ஆசைகளையும் பற்றற்ற பற்று நிலையில் வைத்து பக்குவம் அடையும் பிறவியில் உயிராணது உள்ளுக்குள் அடங்கி அமரராகும் நிலையே அடக்கம் என்ற சமாதி நிலையாகும். உயிர் உள்ளே அடங்காவிட்டால்  இப்பிறவியில் நிறைவேறாத ஆசைகளை சுமந்து சென்று மீண்டும் வெளிவந்து பிறவி[ஆரிருள்] எடுத்துவிடும்.[உய்த்துவிடும்]

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்.

ஓம்நமசிவாய

-மண்-மஞ்சள்-உடல்.  ம-நீர்-வெள்ளை.  சி-நெருப்பு-சிவப்பு.வா-காற்று-பச்சை.ய-ஆகாயம்-மனம்-நீலம்.

முயற்சியற்ற முயற்சி.

முயற்சியற்ற முயற்சி என்பது ஒரு செயல். அது நம் செயல் அன்று. அது பரமாத்மாவின் செயல். எனவே முயற்சியற்ற முயற்சியால் சதா சிவமான  சுவாசத்தை துணைகொண்டு, நம் சிறு முயற்சியால் வாசித்து வலம் வந்தால் போதும்  எல்லாம் செயல். கூடும்.

மெய்ஞான உபதேசம்

 பார்த்த்தும், கேட்டதும், படித்ததும் பயன் தராது என்ற ஞானம் உதயமாகாத வரையில் உண்மையை உணரமுடியாது. அந்த நேரம் வரும் தருவாயில் சத்குரு சொல்லாமல் சொல்லும்  வேதங்களை கடந்த மெய்பொருளின் ரகசியத்தை அவருடைய அசைவிலிருந்து அவரிடம் உள்ள அசையா பொருளின் ரகசியத்தை, மானசீகமாக உபதேசித்து நல்ல வித்துகளை உருவாக்கும் கருணையின் வடிவமாவார்.

குரு பக்தி

குருவேறு, சிவன்வேறு என்றுயார் நினைக்கிறார்களோ அவர்கள் சண்டாளனாகிறார்கள் என்று குரு கீதையில் சொல்லப்படுகிறது. மாத ,பிதா, குரு, இறைவன். அதாவது தாய் தந்தையை காட்டுகிறார். குரு இறைவனை காண்பித்து ஜீவாத்மாவை பரமாத்வோடு இரண்டரகலக்கும் முக்தி நிலையின் ரகசியத்தை வழங்கும் ஒரு போதிமரமாவார். எனவே ரிஷி மூலம்,நதி மூலம் பாராமல் கண்களில் கண்ணீர் மல்க ஆத்மார்த்தமான பனிவே குருவுக்கு செலுத்தும் காணிக்கையாகும்.

தெய்வங்கள்
மனிதனால் உருவாக்கப்பட்டு கண்ணால் பார்க்க்கூடியவைகள் அனைத்தும் அரூப கடவுளின் தத்துவங்களை விளக்கும் தெய்வங்களே.
 சலிப்படையும் மனிதனுக்கு ஒரே தெய்வத்தைப் படைத்தால் சலிப்படைந்து விடுவான் என்ற காரணத்தால் பல தெய்வங்கள படைக்க நேரிட்டது. அதேபோன்று பல வாறான பழங்களையும், காய்கறிகளையும் படைக்கபட்டிருப்பதற்க்கு காரணம். மனிதன் சலிப்படைய கூடாது என்பதற்காகதான்.
கடவுள்

சுவாசமே முதன் முதலில் தோன்றி ,இருந்து ,மறையும் கடவுளாகும். இவையே ஒலியாலும் ,ஒளியாலும்,[கேட்பதாலும்,பார்ப்பதாலும்] மனம் விரும்புகின்ற விருப்பு,வெறுப்புகளின் வினைகளுக்கு தகுந்தவாரு கனவுகளின் நினைவுகளுக்கு ஏற்ப,  நினைவுகளின் கனவுகளுக்கு ஏற்ப  வாழ்க்கையின் முடிவு அமைகிறது,

 நம்மால் முடியாத பட்சத்தில் எது ஒன்று காப்பாற்றி அருளசெய்கிறதோ அதுவே சட்சாத் கடவுள். எனவே கண்ணால் பார்க்க முடியாத அரூபமான காற்றாகிய மனமே கதாநாயக கடவுள். சுவாச இயக்கத்திற்கு ஏற்ப ஒலி, ஒளியின் புலன்கள் இயங்கி அவரவர் வெளிநோக்கும், உள்நோக்கும்  வினைப் பயன்களுக்கு ஏற்ப  வழி நடத்தும் ஏக இறைவனாகும்.
சுவாசமே மனம்
மனம், அறிவு, புத்தி எல்லாம் ஒன்றேதான் அவைகள் இடம் பொருள் ஏவலுக்கு தக்கவாறு அவைகள் மாறுபட்டு செயல்படும்.  மனமே சுவாசம். சுவாச காற்றின் மூலமாகதான் வாசனைகளை அறிகிறோம், ,கற்றின் அலைவரிசைகள் மூலம் கேட்கும் திறன், மற்றும் அனைத்தும் மனதிற்கு வந்தடைகின்றன.
மனம் மாறிக்கொண்டே இருக்கும் மனிதனின் மனம் ஒவ்வொரு செயலின் போதும் சுவாசம் மாறிக்கொண்டே இருப்பதை பார்க்கலாம். ஆகையால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் நடை, உடை,பாவனைகள் வித்தியாசம் உள்ளதாக காணப்படுகின்றது. ஆனால் மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகளின் மாறுபாடற்ற மனதின் காரணமாக அவற்றின் செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருப்பதை காணலாம்.  எனவே மாறாத மனதைப்படைப்போம்.

ஒதாக்கல்வி

 ஓதாக்கல்வியின் ரகசியம் என்பது அதற்கு எழுத்துவடிவமோ,சொல்வடிவமோ கிடையாது. அது ஆசான் அளிக்கும் தீட்சையின் பயிற்சியின்போது இறைவனால் உங்களுக்குள்ளே தொட்டு காட்டும் சொல்லமுடியாத  பேறானந்தத்தில் இறைவனோடு இரண்டர கலக்கும் ஓர் அனுபவ உணர்வாகும்.
[தீட்சை என்றால் ரகசியம், யுக்தி, சூட்சுமம்,டெக்னிக்,நுணுக்கம்,]

மரணமில்லா  பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர் பொய் புகலேன்,     புனைந்துரையேன் சத்தியம் சொல்கின்றேன் என்ற வள்ளலார் வாக்குக்கிணங்க  மனம்,வாக்கு,காயம் எப்பொழுதெல்லாம் பலவீனமடைகிறதோ அப்பொழுதே மரணமடைகின்றன.


இந்த தலை சிறந்த யோகமானது புதுமையானது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சித்தர்களுக்கும், புத்தர், ஓஷோ ஞானிகளுக்கும், இன்றும்  வாழ்ந்து கொண்டிருக்கின்ற யோகிகளுக்கும் கைவல்யமான யோகமாகும்.

நீங்கள் எத்தனையோ ஆன்மீக பயிற்சி வகுப்புகளுக்கு பல ஆண்டுகளாக சென்றிருப்பீர்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் மனம் அடங்கி செம்மையாகியிருக்கிறதா?,நோய்கள் நீங்கியிருக்கிறதா? நம்பிக்கையோடு வந்து இப்பயிற்சியை அலட்சிபடுத்தாமல் செய்தால் நோயற்ற, குறைவற்ற செல்வத்தோடு வாழ்ந்திடலாம்.


ஓம்.நமசிவாய.                                              ஓம்  நமோ.நாராயனாய

வீட்டு பூஜை குறிப்புகள்

வீட்டு பூஜை குறிப்புகள்


1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது

. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல
சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்
.
64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது
.
73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது. 

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:..

கிரகப்பிரவேசம் செய்யும் முறை:..

வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இக்காலத்தில் இந்த புனிதமான புதுமனை புகுவிழாவை அதன் விதிமாறி ஆடம்பரப் பொருட்களை வைத்துச் செய்கின்றனர். நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி செய்வது முறை என்று அறிவோம்.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை:............... பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வரும்படி சொல்ல வேண்டும். அழைப்பு நேரிலும் கடிதம் மூலமும் இருக்கலாம்.
தெய்வாம்சம் பொருந்திய இல்லம் அமைத்து குடிபுகும் போது அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் பேசுவதை நிகழ்ச்சியினூடே முடிந்த அளவு அந்த நேரத்தில் வைக்காமல் அடுத்த நேரத்தில் வைத்துக்கொள்ள பார்க்கலாம். கிரஹ வழிபாட்டுக்கு இடைïறு நேராத வண்ணம் செய்து கொள்ளலாம்.
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாக அள்ளிப்போட்டு விட்டு காலை விருந்துக்கும் வி.ஐ.பி. வருகைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நிகழ்வை ஏனோ தானோ என்று செய்தல் வேண்டாம்.
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை) பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும்.
வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிபடம், அரிசி, உப்பு, பருப்பு, நிறை குடநீர், காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் (5 வகை பழங்கள்) மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு (பெண்கள் சொந்த கதை பேசாமல்) தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்.
கோபூஜை:........... பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டு வாசலில் நிற்கும் போது பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.
கன்றுக்கும் தரவேண்டும். இந்த நேரத்தில் பசுவை மாடு என்று பெண்கள் சொல்லவே கூடாது. பிறகு தூபதீப ஆராதனை செய்து வீட்டில் வசிக்கப்போகும் பெண் கையில் காமாட்சி தீபத்துடன் கணவனோடு பசுவை உள்ளே அழைக்க வேண்டும். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும். இப்போது முக்கிய தெய்வ வழிபாட்டுடன் கிரகப்பிரவேச பூஜைகள் நடத்தப்பட வேண்டும். கணவன்-மனைவி மாலை அணிந்து அமர்க.
முதலில் விநாயகர் பூஜை:-.............. வானுலகும் மண்ணுலகும் வாழ மறை வாழப்பான்மை தரு செய்ய தமிழ்ப்பார்மிசை விளங்க ஞான மத ஐந்துகர மூன்று விழி நால்வா யானை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்- விநாயகரை வணங்கிய உடன் விச்சின்ன அக்னி சந்தானம்-என்ற விதிப்படி ஐந்து காசுகளைத் தாம்பூலத்தில் கணவன் வைத்துக்கொண்டு மனைவி அர்க்கியம் (நீர் விட) விட வந்திருக்கும் வேத பண்டிதரிடம் தரவேண்டும். இது எதற்காக எனில் புதிதாகக் கட்டிய வீட்டில் முன்பு செய்யாத அக்னி காரியங்கள் விட்டிருந்தால் புதுப்பித்தல்.
கலச பூஜை:-............ மூன்று கலசங்கள் விநாயகர்+லட்சுமி+நவக்ரகம். நவக்ரஹ கலசங்கள் 9 தனியாகவும் பக்கவாட்டில் வைக்கலாம் மூன்று நுனி இலைகளில் நெல் அல்லது கோதுமை பரப்பி வைத்து அதன் மேல் மூன்று இலைகளைப் போட்டு பச்சை அரிசி போட்டு கலசம் வைக்க வேண்டும். அதற்கு துணி, மலர் போட்டு முறைப்படி அலங்கரிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக எஜமானர் மனைவியுடன் அமர வேண்டும். பிறகு, கையில் பவித்ரம் அணிந்து கொண்டு கலச பூஜையை பண்டிதர் மந்திரம் ஓதி செய்யும் போது மலர் போட்டு வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து அதில் உள்ள அக்னி குண்டத்தில் இடவேண்டும்.
யாக வழிபாடு:- ..........இந்த வழிபாடு தொடங்கும் முன் அக்னியை அதன் மேடையில் பண்டிதர் உபதேவதைகளை திக்பாலகர்கள், துர்கை, விநாயகர், நட்சத்திர தேவதா, அபயங்கரர் வாஸ்து உள்பட வர்ணித்து பூர்வாங்க பூஜை செய்வார்.நெய், நவசமித்துக் குச்சிகளாலும் யாகக் கூட்டுப் பொருட்களாலும் வேத மந்திரங்களால் கிரகப்பிரவேச யக்ஞம் நடத்தப்படல் வேண்டும்.
ஓம் கம் கணபதியே நம.
சுவாகா ஓம் வக்ர துண்டாய
ஹீம் நமோ ஏரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய
சௌபாக்யம் தேகிமே சுவாகா.
என்றும் நவக்கிரகங்களை அவர்களுக்குரிய மந்திரங்களால்
ஓம் ஆதித்யாய சுவாகா,
ஓம் சோபாய நம சுவாகா
ஓம் மங்களாய சுவாகா
ஓம் புதாய சுவாகா.
ஓம் ப்ருகஸ் பதியே சுவாகா,
ஓம் சுக்ராய சுவாகா,
ஓம் சனீஸ்வராய சுவாகா,
ஓம் ராகுவே சுவாகா,
ஓம் கேதுவே சுவாகா
- என்று கூறி யாகப் பொருளை அக்னியில் இடலாம். லட்சுமி ஹோமம்-வெட்டிவேர், வில்வப்பழம், மஞ்சள், தாம்பூலம் இவற்றாலும் அஷ்ட திரவியக் கலவையாலும் ஓமம் செய்தல் வேண்டும்,
ஓம் ஐம்ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை கமல தாரிண்யை சிம்ம வாகின்யை பவாயை சுவாகா- என்று சௌபாக்கிய லட்சுமியையும், ஓம் நம: கமலவாசின்யை என்று ஸ்வர்ண லட்சுமியையும், ஓம் உனபதுமாம் கீர்திச்ச மணினா சக என்று குபேர லட்சுமியையும் வழிபட்டு அக்னி பூஜை நடத்தி வாஸ்து பகவானையும் அவரது காயத்ரியால் யக்ஞ முறை செய்து இறுதியாக பூரண ஆகுதி என்ற யாக முடிவுறல் நிகழ்வை நடத்தி தூபதீப நிவேதனம் செய்து ஆரத்தி காட்டி வாசற் படிக்கு நிலை பூஜை செய்து ஆரத்தி செய்தல் வேண்டும்.
சில குடும்பங்களில் நிலைப்படி பூஜையை பசு உள்ளே வருமுன் செய்வார்கள். விதிப்படி செய்வதானால் அக்னியில் யாகப் பொருள் இட்டு மகாலட்சுமியை அழைத்த பிறகே படி பூஜை உத்தமம் ஆகிறது. நிலைவாசல் தேவதைகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரித்து வைக்கலாம். அடுப்படியில் பால் காய்ச்சுமிடத்தில் அன்னபூரணியை பூஜை செய்க.
பூரண ஆகுதி முடிந்ததும் அனைவருக்கும் ஆரத்தி பிரசாதம் கொடுக்கலாம். அஷ்டதிரவியம் என்ற எட்டுவகை பிரசாதம் கொடுத்த பின் மூன்று கலசங்களில் உள்ள நீரை முதலில் வைக்கப்பட்ட வருண கும்ப கலசநீருடன் சிறிது கலந்து வீடு முழுவதும் ஓம் கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே அஸ்மின் சின்னிதிம் குரு. என்று கூறி தெளிக்க வேண்டும்.
பால் காய்ச்சுதல்:-............ ஒன்பது செங்கற்கள் அல்லது4-ஐ வைத்து பூ சந்தனம் குங்குமம் வைத்து புதிய பால் பாத்திரத்தில் பொட்டு வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வந்த பின் கைகூப்பி வணங்கவும். கிரகப்பிரவேசம் நடத்தப்படும் இடத்தில் சாமி படத்தின் முன்பாக காய்ச்சிய பாலை வைத்து கணபதி, குலதெய்வம், இஷ்ட தெய்வம், லட்சுமி, சரஸ்வதியை நினைத்து நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

கலசதாரை வார்த்தல்:- மிகப்பெரிய வீடு கட்டினாலும் சிறிய வீடு கட்டினாலும் கிரகப்பிரவேசம் முடிந்ததும் இதைச் செய்ய வேண்டும். இக்காலத்தில் இந்த வழக்கத்தை எல்லோரும் விட்டு விட்டார்கள். பூஜையில் வைக்கப்பட்ட மூன்று கலச நீரையும் மாடிப்பகுதியில் ஈசான்ய மூலையில் வேதபண்டிதர் உறவினர் நின்று கொண்டு வீட்டின் எஜமானர் மனைவியுடன் கீழே ஈசான்யத்தில் நிற்கச் செய்து அப்படியே தாரையாக ஊற்ற வேண்டும்.
அவர்களுக்குக் கலசநீரை அபிஷேகம் செய்வதால் சர்வ தோஷங்களும் விலகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். அடுத்ததாக பால் எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி முதலில் எஜமானர் மனைவியோடு அருந்த வேண்டும். தொடர்ந்து உறவினர், நண்பர்கள், பெண் கொடுத்தோர், பிள்ளையை கொடுத்தவர்கள் வாழ்த்துரையோடு சீர்வரிசை மொய், பொருட்கள் கொடுப்பார்கள். அவற்றை தட்டில் வைத்து கொடுக்கலாம்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்குவதும் மாலை அணிந்து கிழக்கு முகமாக அமர்ந்து கொண்டு மங்கள ஆரத்தியை எடுக்கச் சொல்வது வழக்கம். அடுத்ததாக வாஸ்து தோஷங்கள் விலக, பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சம்பழம் தற்கால வழக்கப்படி சுற்றி (திஷ்டி விலக) விட்டு வாசலில் உடைக்க வேண்டும்.
பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர் வீட்டிற்கு சம்மந்தியாக வந்திருப்பவர்கள் சீர் கொண்டு வந்திருக்கையில் அவர்களுக்கு தாம்பூலம், பதில் மரியாதை செய்வதும், சுமங்கலிகளுக்கு தாம்பூலம் மஞ்சள், குங்குமம் கொடுத்து வாழ்த்துப் பெறவும் அவசியமாக மறக்காமல் செய்தல் வேண்டும்.
கிரகப்பிரவேசம் செய்த வீட்டில் அந்த நாள் இரவு மனைவி விளக்கு ஏற்றி வைத்து துளசி துதி, மகாலட்சுமி மந்திரங்களைப் படித்தல் வேண்டும். வீட்டில் வருடத்திற்கு ஒரு முறை உங்கள் விருப்ப தெய்வ மந்திரங்களைக் கூறி யக்ஞ பூஜை செய்யுங்கள். பித்ருக்கள் படத்தைத் தனி அறையில் வைத்து ஆராதிக்கலாம்.
சாமி படங்களோடு சேர்த்து வைத்தால் தெய்வ சாந்நித்ய சக்தி அகன்று புது வீட்டில் இடர்கள் உருவாக வாய்ப்பு உண்டு. கிரகப்பிரவேச காலத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, குபேரன், பெருமாள், லட்சுமி படங்களை வைத்து வழிபடலாம். விருப்பப்படி எல்லாம் யந்திரங்களை வைத்து வழிபடுதல் வேண்டும்.
கிரகப்பிரவேச காலத்தில் யாகம் செய்யும் போது மோகன கணபதியை அக்னியில் ஆகுதி செய்து வழிபட்டால் பெண் திருமணத்தடை விலகி சீக்கிரம் கைகூடும். கல்வி விருத்திக்கு-ஹயக்ரீவ ஹோமம் சூன்யங்கள் அகன்று நிம்மதி பெற-ஆஞ்சநேயர் மூலமந்திர முறை. வீடு கட்ட, கடன் ஒரு ஆண்டுக்குள் தீர-அங்காரக மங்கல மந்திர ஹோமம். அரசாங்க நன்மை, பணி உயர்வு பெற- இந்திர பூஜை மந்திரம்.
குழந்தை பாக்கியம் உங்களுக்கே தடையாக இருந்தால்-அஸ்வினி தேவர்களை நினைத்து ஹோமம். இன்னொரு வீடு யோகம் வர பூமிலாப வாஸ்து முறை ஹோமம். வீட்டுக்குள் குடிபுகுந்ததில் இருந்து ஐஸ்வர்யமும் பொருளும் சேர்ந்திட சௌபாக்ய திரவ்ய லட்சுமி ஹோமம், தொழில் உயர்ந்து வர-குபேர சிந்தாமன மந்திர ஹோமம் என்று இலகு முறையில் சேர்த்து செய்து விட்டால் பலன் விரைவாகவும் இரட்டிப்பாகவும் கிடைக்க காணலாம்

பிறந்த நட்சத்திர ஸ்தலம்

பிறந்த நட்சத்திர ஸ்தலம்



வருடத்திற்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திர ஸ்தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்…
1.)அஸ்வினி – முக்கிய ஸ்தலம் – கூத்தனூர்
மற்ற தலங்கள் – ஸ்ரீரங்கம், திருத்துறைபூண்டி, கொல்லிமலை.
2. பரணி – முக்கிய ஸ்தலம் – நல்லாடை
மற்ற தலங்கள் – திருநெல்லிக்கா, கீழப்பறையார், பழனி, பட்டீஸ்வரம், திருத்தங்கல், திருவாஞ்சியம்.
3. கார்த்திகை – முக்கிய ஸ்தலம் – கஞ்சானகரம்
மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருப்புகலூர், கீரனூர், திருச்செந்தூர், திருவொற்றியூர், கானாட்டுமுள்ளூர்.
4. ரோஹிணி – முக்கிய ஸ்தலம் – திருக்கண்ணமங்கை
மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவானைக்கோவில், ஜம்பை, கழுகுமலை, செம்பாக்கம், கொரட்டூர், நெல்லிச்சேரி, மன்னார்குடி, பெருமாள் அகரம், திருவரங்கம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி.
5. மிருகசீரிடம் – முக்கிய ஸ்தலம் – எண்கண்
மற்ற தலங்கள் – அம்பர் மாகாளம், ஓசூர், முசிறி, தாழமங்கை.
6. திருவாதிரை – முக்கிய ஸ்தலம் – சேங்காலிபுரம்
மற்ற தலங்கள் – சிதம்பரம், அதிராம்பட்டினம்.
7. புனர்பூசம் – முக்கிய ஸ்தலம் – சீர்காழி
மற்ற தலங்கள் – பழைய வாணியம்பாடி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பாசூர், திருவெண்ணெய்நல்லூர்.
8. பூசம் – முக்கிய ஸ்தலம் – திருச்சேறை
மற்ற தலங்கள் – விளங்குளம், ஒழுந்தியாபட்டு, ஆவூர், கோனேரிராஜபுரம், பரிதிநியமம், திருச்சுழி, அழகர் கோயில்.
9. ஆயில்யம் – முக்கிய ஸ்தலம் – திருப்புறம்பியம்
மற்ற தலங்கள் – திருந்துதேவன்குடி, நண்டான் கோயில், சங்கரன்கோயில், திருப்புனவாசல், புள்ளபூதக்குடி, திருவிடந்தை.
10. மகம் – முக்கிய ஸ்தலம் – திருவெண்காடு
மற்ற தலங்கள் – திருக்கச்சூர், திருவரத்துறை, கீழப்பழுவூர், ஆலம்பொழில், அன்பில், திருவாலங்காடு.
11. பூரம் – முக்கிய ஸ்தலம் – தலைசங்காடு
மற்ற தலங்கள் – நாலூர், கஞ்சனூர், திருவரங்குளம், புரசைவாக்கம்.
12. உத்திரம் – முக்கிய ஸ்தலம் – கரவீரம்
மற்ற தலங்கள் – காஞ்சிபுரம், திருவக்கரை, செய்யூர், கூவத்தூர், மயிலாடுதுறை, இடையாற்றுமங்கலம்.
13. ஹஸ்தம் – முக்கிய ஸ்தலம் – கோமல்
மற்ற தலங்கள் – தர்மபுரி, செய்யாறு, புவனகிரி, ஏமப்பூர் , எழிலூர், திருவாதவூர், திருவேற்காடு.
14. சித்திரை – முக்கிய ஸ்தலம் – திருவையாறு
மற்ற தலங்கள் – அண்ணன்கோயில், தாடிக்கொம்பு, திருநாரயணபுரம், நாச்சியார் கோயில், திருவல்லம், திருவக்கரை, திருக்கோயிலூர், திருமாற்பேறு.
15. சுவாதி – முக்கிய ஸ்தலம் – திருவிடைமருதூர்
மற்ற தலங்கள் – திருப்புடைமருதூர், பெரியதிருக்கோணம், கடத்தூர், பிள்ளையார்பட்டி, நயினார் கோயில், ஸ்ரீரங்கம்.
16. விசாகம் – முக்கிய ஸ்தலம் – கபிஸ்தலம்
மற்ற தலங்கள் – திருமலைக்கோயில், அத்தாளநல்லூர், தீயத்தூர், திருநன்றியூர், நத்தம்.
17. அனுஷம் – முக்கிய ஸ்தலம் – நாச்சியார் கோயில்
மற்ற தலங்கள் – திருவொற்றியூர், திருவண்ணாமலை, திருப்புனவாசல், திருக்கண்ணமங்கை, நீடூர், திருநன்றியூர்.
18. கேட்டை – முக்கிய ஸ்தலம் – வழுவூர்
மற்ற தலங்கள் – பிச்சாண்டார் கோயில், பசுபதி கோயில், பல்லடம், திருப்பராய்த்துறை.
19. மூலம் – முக்கிய ஸ்தலம் – மயிலாடுதுறை
மற்ற தலங்கள் – மாந்துறை, ஆச்சாள்புரம், பாமணி, கோயிலூர், குலசேகரப்பட்டினம், பொழிச்சலூர், மம்பேடு.
20. பூராடம் – முக்கிய ஸ்தலம் – கடுவெளி
மற்ற தலங்கள் – நகர், சிதம்பரம், இரும்பை மகாகாளம்.
21. உத்திராடம் – முக்கிய ஸ்தலம் – இன்னம்பூர்
மற்ற தலங்கள் – கோயம்பேடு, காங்கேயநல்லூர், பேளூர், கீழ்பூங்குடி, திருப்பூவனூர், திருக்கடிக்குளம், திருப்பூவணம், திருக்கோஷ்டியூர், திருக்குற்றாலம்.
22. திருவோணம் – முக்கிய ஸ்தலம் – திருவிடைமருதூர்.
மற்ற தலங்கள் – ராஜேந்திரப்பட்டினம், திருமுல்லைவாயில், திருப்பாற்கடல்.
23. அவிட்டம் – முக்கிய ஸ்தலம் – திருபூந்துருத்தி
மற்ற தலங்கள் – விருதாச்சலம், திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருகொள்ளிக்காடு, திருமறைக்காடு, கொடுமுடி.
24. சதயம் – முக்கிய ஸ்தலம் – திருப்புகலூர்
மற்ற தலங்கள் – கடம்பனூர், கோயில் கடம்பனூர், ஆதி கடம்பனூர், இளங்கடம்பனூர், வாழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் கோயில், மேலக்கடம்பூர் , பிச்சாண்டார் கோயில், மதுரை.
25. பூரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருக்குவளை
மற்ற தலங்கள் – ரெங்கநாதபுரம்.
26. உத்திரட்டாதி – முக்கிய ஸ்தலம் – திருநாங்கூர்.
மற்ற தலங்கள் – தீயாத்தூர், வைத்தீஸ்வரன் கோயில்.
27. ரேவதி – முக்கிய ஸ்தலம் – இலுப்பைப்பட்டு
மற்ற தலங்கள் – காருகுடி, இரும்பை மாகாளம், திருச்செங்கோடு.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...