Thursday 29 April 2021

வில்வத்தின் பயன்களும் மருத்துவ குணங்களும்

                   வில்வத்தின் பயன்களும் மருத்துவ குணங்களும்                     

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம் 


 சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு)  அர்ச்சனைக்கு  உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.


 வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன 


குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே  பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்


 ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும்  உள்ளன


 பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக)  முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்


 வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்


 தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து  வழிபடுவது சிறப்பு


 மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்


வில்வ வழிபாடும் பயன்களும் 


சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்


 வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.

வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது


 மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்)  பாவங்களைப் போக்குவன  ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி  வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம் 


எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும்  இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும்  அடைவார்கள்


வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக  விளக்கமாகக் கூறுகின்றன


 வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன


ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்)  திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்


அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர்  பெற்றது


சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிமை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்


அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும்  வில்வத்தை ஏற்றுக் கொண்டான்


 ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும் 


வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும்  வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் 


ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல்  நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது


சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும்  இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்


வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.


வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது 


நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும்  அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.


மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது)  செய்த புண்ணியம் உண்டாகும்.


கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.


108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.


இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல்  நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.


சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை)  கடாட்சத்தைப் பெறமுடியும்


 வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு  ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது 


ஒரு வில்வ இதழைக்  கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ


்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும் 


வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.


வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?


சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்


 மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து)  எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.


நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே

ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே

ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:

அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே 


பொருள் விளக்கம்


 போகமோட்சம்  உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்


ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.


 வில்வ இதழின் மருத்துவக் குணங்கள் 


இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை “சிவமூலிகைகளின் சிகரம்” எனவும் அழைப்பர்.


வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.


கொலஸ்ட்ரால்  வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.


வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.

மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.


வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.


விரிவான மருத்துவக் குணங்கள்:


வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது.


கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.


கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும்.


இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும்.


பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியான ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம்.


இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.


ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.


வேர் நோய் நீக்கி உடல் தோற்றம், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தோற்றம். பழ ஓடு காச்சல் போக்கும்.


தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.


வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும்.


வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஜன்னி ஜுரங்களைப் போக்கும்.இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.


பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.


பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.


பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.


வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் குணமாக்கும் ஆற்றல் உடையது 


வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.


வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.


நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.


வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் புழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.


இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது 


வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.


வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.


வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.


வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.


ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.


வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.


வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.


வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.


வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர சகல நோய்களும் குணமாகும் 


இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரனாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம் மேலும் சிவபெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம்.

Wednesday 28 April 2021

எது கெடும் ?!?

                                           ஆத்திசூடி.

கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

                       எது கெடும் ?!?

#அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? எமது ஒளவை பிராட்டியார் எவ்வளவு அழகாக கூறி இருக்கிறார்......


(01) பாராத பயிரும் கெடும்.

(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.

(03) கேளாத கடனும் கெடும்.

(04) கேட்கும்போது உறவு கெடும்.

(05) தேடாத செல்வம் கெடும்.

(06) தெகிட்டினால் விருந்து கெடும்.

(07) ஓதாத கல்வி கெடும்.

(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.

(09) சேராத உறவும் கெடும்.

(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

(11) நாடாத நட்பும் கெடும்.

(12) நயமில்லா சொல்லும் கெடும்.

(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.

(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.

(15) பிரிவால் இன்பம் கெடும்.

(16) பணத்தால் அமைதி கெடும்.

(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.

(18) சிந்திக்காத செயலும் கெடும்.

(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.

(20) சுயமில்லா வேலை கெடும்.

(21) மோகித்தால் முறைமை கெடும்.

(22) முறையற்ற உறவும் கெடும்.

(23) அச்சத்தால் வீரம் கெடும்.

(24) அறியாமையால் முடிவு கெடும்.

(25) உழுவாத நிலமும் கெடும்.

(26)உழைக்காத உடலும்  கெடும்.

(27) இறைக்காத கிணறும் கெடும்.

(28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.

(29) இல்லாலில்லா வம்சம் கெடும்.

(30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

(31) தோகையினால் துறவு கெடும்.

(32) துணையில்லா வாழ்வு கெடும்.

(33) ஓய்வில்லா முதுமை கெடும்.

(34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.

(35) அளவில்லா ஆசை கெடும்.

(36) அச்சப்படும் கோழை கெடும்.

(37) இலக்கில்லா பயணம் கெடும்.

(38) இச்சையினால் உள்ளம் கெடும்.

(39) உண்மையில்லா காதல் கெடும்.

(40) உணர்வில்லாத இனமும் கெடும்.

(41) செல்வம் போனால் சிறப்பு கெடும்.

(42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.

(43) தூண்டாத திரியும் கெடும்.

(44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.

(45) காய்க்காத மரமும் கெடும்.

(46) காடழிந்தால் மழையும் கெடும்.

(47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும்.

(48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும்.

(49) வசிக்காத வீடும் கெடும்.

(50) வறுமை வந்தால் எல்லாம் கெடும்.

(51) குளிக்காத மேனி கெடும்.

(52) குளிர்ந்து போனால் உணவு கெடும்.

(53) பொய்யான அழகும் கெடும்.

(54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.

(55) துடிப்பில்லா இளமை கெடும்.

(56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.

(57) தூங்காத இரவு கெடும்.

(58) தூங்கினால் பகலும் கெடும்.

(59) கவனமில்லா செயலும் கெடும்.

(60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.


கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....

ஆத்திசூடி.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்  - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்குஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்றுதடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லதுஇரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல்நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறுநடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்துவிற்காதே.

14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி)சொல்லாதே.

15.ஙப் போல் வளை -. 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாகஇருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச்சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங"என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வதுபோல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளையவேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு -.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

17.ஞயம்பட உரை- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18.இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்லகுணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன்நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடையமுதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்யவேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்புவழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச்செய்யாதே.

25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்  -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால்செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைபேசாதே.

28.அழகு அலாதன செய்யேல் -.இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல். தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

31.அனந்தல் ஆடேல்- மிகுதியாக துங்காதே.

32.கடிவது மற-யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதேவிரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக்காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்-உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்துவாழ.

35. கீழ்மை யகற்று-இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைபின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்-கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சிசெய்.

40. கைவினை கரவேல்-உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலைமற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி-குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43.கௌவை அகற்று-வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.

44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).

45.சான்றோ ரினத்திரு-அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன்சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசெல்- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.

47. சீர்மை மறவேல்- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்துவிடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்-கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படிபேசாதீர்.

49. சூது விரும்பேல்- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும்இல்லாமல் செய்யவும்.

51.சேரிடமறிந்து சேர்-நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா எனநன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்-பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொற்சோர்வு படேல்- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப்பேசாதே.

54. சோம்பித் திரியேல்-முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

55. தக்கோ னெனத்திரி-பெரியோர்கள் உன்னைத்தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

56. தானமது விரும்பு-யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்-நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை யகற்று-பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்-முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின்வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்-ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளைநன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

61. தெய்வ மிகழேல்-கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகைஇல்லாமல் வாழ்.

63. தையல்சொல் கேளேல்-மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்-ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான்முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

66. நன்மை கடைப்பிடி-நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும்உறுதியாகத் தொடரவும்.

67. நாடொப் பனசெய்- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்லகாரியங்களை செய்.

68. நிலையிற் பிரியேல்-உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்துவிடாதே.

69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்-நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

71. நூல்பல கல்- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72.நெற்பயிர் விளை- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கைதொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுக- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்-பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய வுரையேல்-பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்-மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால்நோய்க்கு வழிவகை செய்யாதே.

77. பழிப்பன பகரேல்-பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களானபொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்-பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன்பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்-குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்-பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்-உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தியுண்-விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக்கொள்-அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத்துணையாகப் பேணிக்கொள்.

84. பேதைமை யகற்று-அறியாமையை போக்க.

85. பையலோ டிணங்கேல்-அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்-பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவுசெய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்-யாருடனும் தேவையில்லாமல் சண்டைபொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

88. மனந்தடு மாறேல்-எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னைவெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்-மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகபோர் முனையிலே நிற்காதே.

93. மூர்க்கரோ டிணங்கேல்- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லினல்லாள் தோள்சேர்-பிற மாதரை விரும்பாமல் உன்மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக்கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகிநில்.

97. மொழிவ தறமொழி-சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.

98.மோகத்தை முனி-நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையைவெறுத்திடு.

99. வல்லமை பேசேல்-உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாதுமுற் கூறேல்-பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

101. வித்தை விரும்பு- கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

102. வீடு பெறநில்-முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையைநடத்து.

103. உத்தமனாய் இரு-உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடிவாழ்-ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்-யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாகபேசாதே.

106. வேண்டி வினைசெயேல்- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

107. வைகறை துயிலெழு- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில்இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்-பகைவர்களை நம்பாதே.

109. ஓரஞ் சொல்லேல்-எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல்நடுநிலையுடன் பேசு.




மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

 


       மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

பெண் என்பவள் வளர்பிறையும் தேய்பிறையும் போன்றது


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்............

 

இரண்டு மன்னர்களுக்கு  இடையே சண்டை.

 

ஜெயித்த மன்னன் தோற்றவனைப் பார்த்து எனது கேள்விக்கு சரியான பதில் சொன்னால் உனது நாட்டை உனக்கே திருப்பி தருவேன்.

 

தோற்றவன் "கேள்வியை கேளுங்கள்" என்றான்.

 

கேள்வி: ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

 

ஜயித்த மன்னனின் காதலி மன்னனிடம் இந்த கேள்வியை கேட்டு பதில் சொன்னால்தான் அவனை திருமணம் செய்து கொள்வதாக நிபந்தனை விதித்து இருந்தாள்.

 

ஜெயித்தவனுக்கு விடை தெரியாததால் தோற்றவனிடம் கேட்டு விட்டான்

 

தோற்றவன் கேள்விக்கு விடைகாண ஓடினான் ஓடினான் ஒவ்வோரிடமாக ஓடினான். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை.

 

தோற்றவன் கடைசியாக ஒரு சூனியக்கார கிழவியிடம் சென்று கேட்டான்.

 

சூனியக்கார கிழவி " உனக்கு பதில் சொல்கிறேன்.அதை நீ சொன்னால் உனக்கு நாடு கிடைக்கும். ஜெயித்த மன்னனுக்கு காதலி மனைவியாவாள்.

 

அது சரி! நீ எனக்கு என்ன தருவாய்?" என்று கேட்டாள்.

 

தோற்றவன் "நீ எது கேட்டாலும் தருவேன்" என வாக்கு கொடுத்தான்

 

சூனியக்காரி விடையை சொன்னாள்:....

 

"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்"

 

இந்த பதிலை தோற்றவன் ஜெயித்தவனிடம் சொன்னான்.

 

தோற்றவனுக்கு நாடு கிடைத்தது.

ஜெயித்தவனுக்கு திருமணம் நடந்தது.

 

நாடு மீண்டும் கிடைத்தவன் சூனியக்கார கிழவியிடம் வந்து" நீ வேண்டியதை கேள்" என்றான்.

 

சூனியக்கார கிழவி "நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள்

 

கொடுத்த வாக்கை காப்பாற்ற அவனும் ஒப்புக் கொண்டான்.

 

உடனே சூனியக்கார கிழவி ஓர் அழகிய தேவதையாக மாறி காட்சி அளித்தாள்.

 

அப்போது அவள் சொன்னாள்.

 

நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது நான் கிழவியாக இருந்தால். உன்னுடன் வெளியே வரும்போது அழகிய தேவதையாக இருப்பேன்.

 

அல்லது

நான்  வீட்டில் அழகிய தேவதையாக இருந்தால் உன்னுடன் வெளியே வரும்போது கிழவியாக இருப்பேன்.

 

இந்த இரண்டில் உன் விருப்பம் என்ன? என்று கேட்டாள்.

 

அதற்கு அவன் கொஞ்சம்கூட யோசிக்காமல் சொன்னான்: " இது உன் சம்பந்தப் பட்ட விஷயம். முடிவு நீதான் எடுக்க வேண்டும்"

 

"முடிவை என்னிடம் விட்டு விட்டதால் எப்போதும் அழகிய தேவதையாக உன் மனைவியாக இருக்க முடிவு செய்து விட்டேன் என்றாள்.

 

ஆம்!

 

பெண் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.

முடிவுகள் அவள்மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

 

இப்போது எல்லாம் புரிகிறதா?

 

ஜெயித்த மன்னன் உச்சம் பெற்ற சூரியன்!

 

உச்சம் பெற்ற சூரியனேயாயினும் பக்கத்தில் மீனத்தில் உச்சம் பெற்ற காதலி சுக்கிரனை மனைவியாக அடைய அவளது கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

 

இதற்கு பதில் சொல்ல தன்னிடம் தோற்றாலும் கூட தனது சொந்த வீடான சிம்மத்துக்கு பக்கத்தில் கன்னியில்    ஆட்சி உச்சம் பெறும் புதனிடம் கேள்வியை கைமாற்றி விட வேண்டும்.

 

முக்கூட்டுக் கோள்களில் புத்திசாலியாகிய புதன் மனமாகிய சந்திரன் எனும் சூனியக்கார கிழவியிடமிருந்தே பதிலை பெற்றாக வேண்டும்.

 

புதனின் மிதுனத்துக்கு 2ம் வீடாகவும் புதனின் கன்னிக்கு 11லாப வீடாகவும் வரும் கடகத்தில் ஆட்சி பெறும் சந்திரன்தானே பதில் சொல்லியாக வேண்டும்

 

வளர் பிறைச் சந்திரன் அழகிய தேவதை!

தேய்பிறைச் சந்திரன் சூனியக்கார கிழவி!

 

இரண்டும் மாறி மாறி அமைவதுதானே மனித வாழ்க்கை!

 

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

Monday 5 April 2021

ஜோதிட உலகத்தில் இருக்கும் அறிவியல் சார்ந்த சில உண்மைகள்.

             ஜோதிட உலகத்தில் இருக்கும் அறிவியல் சார்ந்த சில உண்மைகள்.

★ராசி நட்சத்திரம்,லக்னம் நட்சத்திரம் லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரங்கள் தான் நம்முடைய ஜாதகத்தில் மிக மிக முக்கியமாக பார்க்க வேண்டியவை. ★ராசி நட்சத்திரம் உடல், லக்ன நட்சத்திரம் உயிர் ,லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் ஆத்மா. ★இவைதான் ஜாதகத்தில் உடல் உயிர் ஆத்மா என்று அழைக்கப்படுகிறது அதாவது விதி மதி கதி ★ராசி நட்சத்திரத்தை விட லக்னமும் லக்னாதிபதியும் விழுந்த டிகிரி அல்லது நட்சத்திரம் தான் மிக முக்கியமானது. ★9 கிரகங்கள் வேறொன்றும் கிடையாது நமது உடலில் உள்ள ஒவ்வொரு உடல் உறுப்புகளும் தான்.ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு உடல் உறுப்பு சொந்தம் இருக்கிறது. ★அவற்றில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம். 1.(சூரியன்) முதுகுத்தண்டு ,இருதயம், எலும்பு மண்டலம், கண் 2.(சந்திரன்) நமது உடலில் இருக்கும் சுரப்பிகள் நம்முடைய ஆழ்மனம்,ரத்தம். நம்முடைய ரத்த நாளங்கள். ★செவ்வாய் ரத்ததிற்கு அதிபதி கிடையாது. சந்திரன்தான் ரத்தத்திற்கு அதிபதி.செவ்வாய் நம்முடைய மூட்டு ,leg joins ,தசைகள். ★செவ்வாய் தான் நம் உடலை இயக்கும் சக்தி.அதனால்தான் கால புருஷனுக்கு 10ம் பாவமான மகரத்தில் செவ்வாய் உச்சம். 3.(செவ்வாய்) ★செவ்வாய் நம்முடைய தசைகள். மூட்டு,leg joins,பற்கள் 4.(குரு) குரு நம்முடைய மூளை மற்றும் கல்லீரல். 5.(சனி) ஊனம்.நமது உடலில் இருக்கும் அங்க அவஈன அடையாளங்கள். 6.(புதன்) தோல் மற்றும் நரம்பு மண்டலம் 7.(சுக்கிரன்) சுக்கிரன் கிட்னி ,கர்ப்பப்பை விந்துபை,ஆணுறுப்பு பெண்ணுறுப்பு. 8.(ராகு, கேது) ராகு கேது நமது உடலில் உள்ள ஏழு சக்கரங்கள் ★அந்த 12 பாவங்கள் வேறொன்றும் கிடையாது நமது உடலில் இருக்கும் 12 உடல் உறுப்புகள். அவற்றில் சிலவற்றை மற்றும் பார்க்கலாம். ★தலை ,முகம் ,கழுத்து, மார்பு, மேல் வயிறு ,அடி வயிறு ,இடை, பிறப்புறுப்பு ,தொடை, முழங்கால் கணுக்கால் ,பாதம் ★இந்தப் 12 உறுப்புகள்தான் நமது ஜாதகத்தில் இருக்கும் 12 பாவங்கள். ★அந்த 27 நட்சத்திரங்கள் என்பது நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல் அமைப்புகள். ★அதாவது நமது உடலில் இருக்கும் 27 தலைமுறைகளின் கர்ம பதிவுகள் தான் அந்த 27 நட்சத்திரங்கள். ★27 நட்சத்திரம் 12 ராசி 9 கிரகங்கள்.இவற்றை கூட்டினால் 48 வரும்.இதுதான் ஒரு மண்டலம். ★ஒரு மண்டலம் என்பது 48 அதுதான் இந்தப் 12 ராசிகளும் 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் கூட்டினால் வருவது. ★நாம் 48 நாள் விரதம் இருப்பது ,48 நாள் கடவுள்களுக்கு மாலை போடுவது 48 நாள் மண்டல பூஜைகள் செய்வது அனைத்தும் இந்த 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 9 கிரகங்கள்.இவற்றின் கால சுழற்சிதான். ★ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 பாதங்கள் இருக்கின்றன.27 நட்சத்திர பாதங்கள் கூட்டினால் 108 வரும். ★இந்த உலகத்தில் இருக்கும் பெண்ணாய் பிறந்த மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் மாதவிடாய் என்பது இருக்கும் ★சந்திரனின் ஒரு சுழற்சி காலம் தான் மாதவிடாய் காலம் ஆகும். ★சந்திரன் 27 நட்சத்திரங்களையும் தொட்டு 28வது நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரத்தை தொடும் போது தான் பெண்களுக்கு மாதவிடாய் வரும். ★சந்திரனுடைய ஒரு மாதகால சுழற்சிதான் பெண்களின் மாதவிடாய் காலம் ஆகும். ★அந்தக் காலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் இராஜாக்கள் முனிவர்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு திதியையும், நட்சத்திரத்தையும் குறித்து தருவார்கள். ★இந்தத் திதியில் தான் இந்தநட்சத்திரத்தில் தான் ஓரு ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்று சொல்வார்கள். ★ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து உடன் 72 மணி நேரம் கழித்து முதல் கரு உருவாகி விடும். ★அந்தக் கரு எந்த நட்சத்திரத்தில் உருவாகிறதோ சரியாக 10வது மாதத்தில் அதே நட்சத்திரத்தில் தான் அந்த குழந்தை பிறக்கும். ★உதாரணமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கரு உருவானால் சரியாக 10வது மாதத்தில் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் தான் அந்த குழந்தை பிறக்கும். ★அந்த கரு எந்த திதியில் உருவாகிறதோ அந்த திதியின் தாக்கும் அந்த வம்சத்திற்கே இருக்கும். ★கரு உருவான திதி அமாவாசை பௌர்ணமி ஆக இருந்தால் மட்டும் தான் பிறக்கும் குழந்தை ஊனமாகவோ மனவளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கும். ★இதற்காக தான் பிறக்கும் குழந்தை நன்றாகவும் சக்தி உடையவனாகவும் பிறக்க வேண்டும் என்பதற்காகத் தான் நம் முன்னோர்கள் சாந்தி முகூர்த்தத்திற்கு திதியும் நட்சத்திரத்தையும் குறித்துக் கொடுப்பார்கள். ★நாம் பிறந்த திதி வேலை செய்யாது.நமது கரு உருவான திதி தான் வேலை செய்யும். ★நாம் எந்தத் திதியில் நம்முடைய முதல் கரு உருவானது என்பதை கண்டுபிடிக்க நாம் பிறந்த திதியில் இருந்து 9 திதிகளை கழித்தால் வரும் திதி தான் நமது தாயின் கர்ப்பப்பையில் நாம் உருவான திதியாகும்.

சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்

                                           சண்டி ஹோமம் ஓர் அறிமுகம்

சண்டி தேவி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பழிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சாண்டி ஹோமம் என்பது ஒரு சாதாரண ஹோமம் இல்லை. இது அனுபவம் வாய்ந்த 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம். இதை சரியான முறையில் பூஜைகள் நடத்தபடா விட்டாள் பயனுள்ளவையாக இருக்காது. 9 வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற இந்த ஹோமத்தில் மந்திரங்களை தொடர்ந்து கோஷமிட்டு சொல்ல வேண்டும். இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும். சண்டி ஹோமம் என்றால் என்ன .? 1.மஹாகாளி சண்டிகை 2.மஹாலக்ஷ்மி சண்டிகை 3.சங்கரி சண்டிகை 4.ஜெயதுர்கை சண்டிகை 5.மஹா சரஸ்வதி சண்டிகை 6.பத்மாவதி சண்டிகை 7.ராஜமாதங்கி சண்டிகை 8.பவானி சண்டிகை 9.அர்தாம்பிகை சண்டிகை 10.காமேஸ்வரி சண்டிகை 11.புவனேஸ்வரி சண்டிகை 12.அக்னி துர்கை சண்டிகை 13.சிவாதாரிகை சண்டிகை இந்த 13 சக்திகளும் இணைந்த சக்தி மஹா சண்டிகா பரேமஸ்வரி. இந்த யாகங்கள் முரத்தினாலே செய்யப்படும் மார்கண்டேயரால் சொல்லப்பட்ட 700 மந்திரங்களினால் இந்த யாகம் நடைபெறும். இந்த யாகம் செய்வதனால், உலக நன்மை சத்ரு பயம் நீங்கும். லஷ்மி தேவியின் அனுக்ரஹம் கிட்டும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம். அனைத்து காரியங்களும் வெற்றி. இந்த யாகம் நடக்கும் பொழுது மந்திரங்களை காதினால் கேட்டாலே (ஸ்ருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) அணைத்து விதமான பாபங்களும், எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சண்டி யாகத்திலே சொல்லபடுகிறது. அதில் சில மந்திரங்கள்: கணபதி பூஜை: கணபதியின் ஆசியில் தான் இந்த பூஜை வழி நடத்தப்படும்.முதலில் கணபதியை வணங்கினாள் அனைத்து தடைகளும் நீங்கி வெற்றி கிடைக்கும்.அதனால் முதலில் கணேஷனை வணங்க வேண்டும் அனுக்கைய சங்கல்பம்: இது ஒரு புதிய சடங்கு வேள்வி செய்ய கடவுளை அனுமதிக்க வேண்டி இந்த பூஜை வழி நடத்தப்படும். இதன் மூலம் எங்கே வேள்வி நடத்தப்படவேண்டும் யாருக்காக நடத்த பட வேண்டும் என்பதை காட்டுகிறது புண்யாகவாஜனம்: இதை ஆரம்பிப்பதற்கு முன்பு மனம் இடம் உடல் ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வழிபடும் இடத்தை சுற்றி மா இலை கொண்டு மந்திர தண்ணீர் தெளிக்கவேண்டும் கலச ஸ்தாபனம்: கலச ஸ்தாபனம் என்பது ஒரு பானையை குறிக்கும். இதில் உலோகம் மற்றும் தண்ணீர் மூழ்க மா இலை வைக்கவேண்டும். இந்த கலசம் தேவியின் அருளை வெளிக்கொணர்வதற்காக செய்யபட்டது. ப்ரயாண சமர்ப்பணம்: இது சிவனுடைய அவதாரமாக கொண்டு இந்த பூஜை வழி நடத்தப்படும். கணபதி பூஜை: வேள்வியை தொடங்குவதற்கு முன் கணபதியை வழிபடவேண்டும். சங்கல்பம்: இடம் மற்றும் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த வழிபாடு. கோ பூஜை: சமஸ்கிருத வார்த்தையான கோ என்பது மாடு என்று பொருள். இந்து மதத்தில் மாடு தெய்வீக குணம் கொண்டதாக கருதப்படுகிறது. பூஜை செய்வதற்கு வைக்கப்பட்ட பொருட்கள் ஆசிர்வாதம் பெறுவதற்காக மாடுவிற்கு வைக்கபடுகிறது. சுஹாசினி பூஜை: வயதான தம்பதியிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக இந்த பூஜை செய்யபடுகிறது. தம்பதி பூஜை: இதில் பூஜை செய்து வயதான தம்பதியிடம் வழங்கபடுகிறது. வயதான தம்பதியிடம் தான் கொடுக்கபடவேண்டும். பிரம்மச்சாரி பூஜை: திருமணம் ஆகாத ஒரு ஆண்மகனை கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூஜையில் அவரது ஆசி இந்த பூஜை நடத்தபடுகிறது சண்டி ஹோமம்: நெருப்பு சடங்கு மந்திரங்கள் கொண்டு இந்த பூஜை நடத்தபடுகிறது. பூர்ணாகுதி: வெற்றிலை, பாக்கு, பருப்புகள், நாணயம், தேங்காய், குங்குமம், மஞ்சள், பூக்கள் இந்த பூஜையில் வைக்கபடுகிறது. மகா தீபாராதனை: சடங்குகள் அனைத்தும் முடிக்கபட்டு பூஜை தீபாராதனையுடன் முடிவடையும். ஹோமம் நடைபெறும் போது யாகத் தீயில் போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 1. விளாம்பழம் – நினைத்த காரியம் ஜெயம் 2. கொப்பரைத் தேங்காய் – சகலகாரிய சித்தி 3. இலுப்பைப்பூ – சர்வ வஸ்யம் 4. பாக்குப்பழம் – ரோக நிவர்த்தி 5. மாதுளம்பழம் – வாக்குப் பலிதம் 6. நாரத்தம்பழம் – திருஷ்டிதோஷ நிவர்த்தி 7. பூசணிக்காய் – சத்ருநாசம் 8. கரும்புத் துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி 9. பூசணி, கரும்புத் துண்டு – சத்ருநாசம், எதிலும் வெற்றி 10. துரிஞ்சி நாரத்தை – சகல சம்பத் விருத்தி 11. எலுமிச்சம்பழம் – சோகநாசம் (கவலை தீர்த்தல்) 12. நெல் பொரி – பயம் நீக்குதல் 13. சந்தனம் – ஞானானந்தகரம் 14. மஞ்சள் – வசீகரணம் 15. பசும்பால் – ஆயுள் விருத்தி 16. பசுந்தயிர் – புத்ர விருத்தி 17. தேன் – வித்தை, சங்கீத விருத்தி 18. நெய் – தனலாபம் 19. தேங்காய் – பதவி உயர்வு 20. பட்டு வஸ்திரம் – மங்களப் பிராப்தி 21. அன்னம், பசஷணம் – சஞ்சலமின்மை, சந்தோஷம் 22. சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம் 23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது. பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), குத்து விளக்கில் அஷ்ட லட்சுமிகளை ஆவாஹனம் செய்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து , பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

Show less

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...