Wednesday 27 November 2019

ஆன்மீக பொன் மொழிகள்

1.ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்; மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர் என்றால் சண்டை தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்; வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.
'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய் இருப்பதே இன்பத்தை அடைய வழி.-
(ஸ்ரீ ஞானனானந்தகி¡¢ சுவாமிகள்)

2. இறைவனின் தா¢சனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். - சுவாமி ராமதாஸ்.

3.நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். - தலாய் லாமா.
4.உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்
கவலை, நாளைய தினத்தின் துக்கத்தைக் குறைக்கப் போவதில்லை. அது இன்றைய தினத்தின் சந்தோஷத்தை அழித்து விடுகிறது. - யாரோ
உண்மையைத் தவிர வேறு எந்தக் கடவுளுக்கும் நான் சேவை செய்வதில்லை,எனக்குக் கடவுள் என்றாலும்ஒன்றுதான்.உண்மை என்றாலும் ஒன்றுதான்.

-மகாத்மா காந்தி

5. நான் ஒரு பசுவைப் பார்க்கும்போது மனிதன் உன்னக்குடிய ஒரு மிருகமாக நான் கருதுவதில்லை. பசு இரக்கமே உருவான ஒரு காவியமாக எனக்குத் தோன்றுகிறது உலகம் முழுவதுமே எதிர.த்தாலும் கூட நான் பசுவை வழிபடுவதை ஆதரித்தே வாதாடுவேண்
-மகாத்மா காந்தி

6. ஓரு நாட்டின் கட்டுபாடு பெருமை இவையெல்லாம் அது எவ்வளவு கோடீஸ்வர்ர்களைக் கொண்டிருக்கிறது என்பதில் இல்லை.அந்த நாட்டு மக்கள் பசியின்றி வாழ்கிறார்களா என்பதில் தான் இருக்கிறது.
-மகாத்மா காந்தி

7. துணிவு இல்லையேல், வாய்மை இல்லை. வாய்மை இல்லையேல் அறங்கள் இல்லை. - காந்தியடிகள்

திருவள்ளுவர்-நற் சிந்தனைகள்
ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே> அவனுக்கு அறிவும்> நடத்தையும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும்> செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும்> நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்

கிருபானந்த வாரியார்-நற் சிந்தனைகள்
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ
அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும்.அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர்.இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலேஅவன் தாள் வணங்கி“ என்கிறார் மாணிக்கவாசகர்.

சாய்பாபா-நற் சிந்தனைகள்
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது,தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே.அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம்.சுத்தமாகவும், தூய்மையாகவும், அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.

ஆகவே இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.

கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.

பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.

புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம்
ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன.

தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது. அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.

செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.

வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.

ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.

தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம்> தற்பெருமை குறையும்.

மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.

சுவாமி வள்ளலார்-நற் சிந்தனைகள்
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம்.
பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம்.
கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம்.
குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.


சுவாமி அரவிந்தர்-நற் சிந்தனைகள்
*நமது வழி பூரணத்தை அடையும் வழியாக இருக்கட்டும், விட்டுவிட்டு ஓடிவிடும் வழியாக இருக்க வேண்டாம்; போரில் வெற்றி பெறுதல் நமது நோக்கமாக இருக்கட்டும், எல்லாப் போராட்டத்திலிருந்தும் தப்பிச் செல்லுதலாக இருக்க வேண்டாம்.

*யோகத்தின் மூலம் நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கும், பலவீனத்திலிருந்து சக்திக்கும், துன்பம் துயரத்திலிருந்து பேரின்பத்திற்கும், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கும், மரணத்திலிருந்து அமர நிலைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், குழப்பத்திலிருந்து தெளிவிற்கும், அபூரணத்திலிருந்து பூரணத்திற்கும், பிரிவிலிருந்து ஐக்கியத்திற்கும் உயராம்.

*நமது அஞ்ஞானத்தினால், புறத் தோற்றத்தைக் கொண்டு தவறான முடிவு செய்துவிடுகிறோம்; இரகசியமாக உள்ளே உறையும் இறைவனைக் காணத் தவறிவிடுகிறோம். ஆனால் ஞானிகள் இந்தத் தவற்றைச் செய்வதில்லை. அவர்கள் பார்வை அகங்காரத்தால் மறைக்கப்படாததால் அவர்கள் உண்மையைக் கண்டு கொள்கின்றனர்; இங்கு குறுகிய மனித இயற்கையில் கட்டுண்டிருப்பவனே இறைவனாக நாம் வணங்கும் எல்லையற்ற பரஞ்சோதிப் பொருள் என்பதை அறிகின்றனர். படைப்புகளுக்கு மேல், உலகங்களுக்கு அப்பால், அவனுடைய பரமேஸ்வர நிலையை அவர்கள் உணர்கிறார்கள். அதே சமயம் உலகிடை அந்தர்யாமியாக இருக்கும்போதும் அவன் சர்வேஸ்வரனே என்பதையும் அறிந்துகொள்கிறார்கள். உலகில் நானாவிதமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காகத் தன்னிச்சையாகவே இறைவன் தன் சக்திகளைச் சுருக்கிக் கொள்கிறான்.

*உன்னுள் உள்ள வலிமையைத் தெளிவாக உணர முயல். அதை முன்னுக்குக் கொண்டு வர முயல். நீ செய்வதெல்லாம் உனது சொந்த செயலாயில்லாமல், உன்னுள் உள்ள உண்மையின் செயலாயிருக்கட்டும். நீ உயிரோடிருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் அவ்வுண்மையின் சாந்நித்தியத்தால் ஒளிபெறட்டும், உனது ஒவ்வொரு சிந்தனையும் அந்த ஒரே ஊற்றிலிருந்து தெய்வீக ஊக்கம் பெறட்டும்; உனது திறன், நற்குணம், பண்பு எல்லாம் உன்னுள் கோயில் கொண்டுள்ள அந்த அமரசக்தியின் பணிக்கே ஆகட்டும். இதற்காக முயல்வாயாக.

*உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

*மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை.

*நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

*வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

*நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

சுவாமி விவேகானத்தர்-நற் சிந்தனைகள்
தன் மனத்தை அடக்க முடிந்தவனால் மற்ற எல்லா மனங்களையும் கட்டாயமாக அடக்க முடியும். இதனாலேயே தூய்மையும் ஒழுக்கமும் எப்போதும் மதத்தின் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளன. தூய்மையும் ஒழுக்கமும் வாய்ந்தவன் தன்னை அடக்கி ஆள்கிறான். எல்லா மனங்களும் ஒரே தன்மையுடையவை.

ஒரே பெரிய மனத்தின் பகுதிகள். களிமண் கட்டி ஒன்றை அறிந்தவன், பிரபஞ்சத்திலுள்ள களிமண் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான். தன் மனத்தை அறிந்து அடக்குபவன் ஒவ்வொரு மனத்தையும் பற்றிய ரகசியத்தை அறிகிறான். ஒவ்வொரு மனத்தையும் அடக்க வல்லவன் ஆகிறான்.

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, `பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?' என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

மூட நம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால் மதவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்கவேண்டும். கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி (Law of Association), புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச்செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல் அவனுக்கும் தெரியும். எங்கும் நிறைந்தது என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்து கொள்ள முடியும்? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா என்ன? எங்கும் நிறைந்தவர் என்று நாம் திரும்பத்திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.

அருள் வெளிப்பாடான வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மிக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்துவிட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மிக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும் இன்னோர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மிக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன, நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.

நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.

நண்பர்களே, உலகமே ஒரு பைத்தியக்கார விடுதி. சிலர் உலக இன்பத்திற்காகப் பித்தர்களாக உள்ளனர். சிலர் பெயருக்காக, சிலர் புகழுக்காக, சிலர் பணத்திற்காக, சிலர் முக்தியடைவதற்காக, இன்னும் சிலர் சொர்க்கம் செல்ல. இந்த பித்தர்கள் கூட்டத்தில் நானும் ஒரு பித்தன். நான் இறைவனுக்காகப் பித்தனாக ஆனேன். நீ பணத்திற்காகப் பித்துப் பிடித்து அலைகிறாய். நான் கடவுளுக்காகப் பித்தன் ஆனேன். நீயும் பைத்தியம். நானும் பைத்தியம். என் பைத்தியம் தான் சிறந்தது என்றே நான் நினைக்கிறேன்.

நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.

கல்வி> பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்> அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது> விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம்> எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்

Fளத்தின் அடியிலிருந்து நீர்க்குமிழி கிளம்புகிறது. அது வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அதை நாம் காண்பதில்லை. நீர்மட்டத்திற்கு வந்து வெடிக்கும் போது மட்டுமே பார்க்கிறோம். அது போலவே> எண்ணங்கள் பேரளவிற்கு முதிர்ந்த பிறகே> அதாவது அவை செயல்களான பின்பு மட்டுமே அவற்றை நாம் உணர முடியும்.

நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை> எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நுண் இயக்கங்களை நாம் அடக்க முடிந்தால்> அது எண்ணமாகும் முன்பே> செயலாகும் முன்பே> அதன் மூலத்தை நாம் பற்ற முடியுமானால் மட்டுமே அதனை முழுமையாக நாம் அடக்க முடியும். இந்த நுண்ணிய சக்திகளை> நுண்ணிய காரணங்களைப் பகுக்கவும்> ஆராயவும்> அறியவும்> இறுதியாக> அடக்கியாளவும் முறை ஒன்று இருக்குமானால் அப்போதுதான் ம்;மை நாம் அடக்க முடியும்.

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள்> நமது குணங்கள்> நமது அறிவு> நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் நம்மால் செய்ய முடியும். பிறரைக் கவனிப்பதைச் சிறிது காலம் விட்டுவிட வேண்டும். வழியை பூரணமாக்குவோம். இலட்ச்சியம் தன்னைதானே பாதுகாத்துக் கொள்ளும். ஏனெனில் நம் வாழ்வு நல்லதாகவும் தூய்மையானதாகவும் இருந்தால் தான் உலகம் நல்லதாகவும் தூயதாகவும் இருக்க முடியும். அது ஒரு குறிக்கோள். நாமே வழி. ஆதலால் நம்மை நாம் தூய்மையாக்கிக் கொள்வோம்> நம்மை நாம் பூரணமாக்கிக் கொள்வோம்.

நாம் அனைவரும் உள்ளத்தாலோ உடலாலோ ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். அந்த செயல்கள் யாவும் நம் மீது> தமது அடையாளத்தை பொறித்துவிட்டு அகல்கிறது. நல்லதை செய்தால் நல்ல அடையாளம்> கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையைக் குத்துகிறது

தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும்> குற்றத்தைப் பிறர் மீதோ> பிற பொருளின் மீதோ> ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது> சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே;> அவனது குணச்சிறப்பே> அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.

அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!'ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரிப்த்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான், நாம் ஆண்டவனின் குழந்தைக�ள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம்; மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் ஜடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல; ஜடப் பொருள் உங்கள் பணியாள், நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.

இந்திய மண்ணில் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ கிளை மதங்கள் உண்டாயின. அவை வேத நெறியின் அடித்தளத்தை உலுக்கிவிடுமோ என்று தோன்றியது. ஆனால் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடல் சிறிது பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அதுபோல், எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப் பெரியதான தாய் மதத்தால் கவர்ந்திழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்தவிட்டன.

நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போதுதான் துன்பம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான் பிழைகள் அகல முடியும்.

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாதது போல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி, புற உருவம் அகக் கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச்சின்னத்தைப் பயன்படுத்துகிறான்.

இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.

கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும். எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்த கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக் கோணல்கள நேராகின்றன. சந்தேகங்கள் அகல்கின்றன. காரண காரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாயத்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காக அதைக் கேளுங்கள். மாதக்கணக்காகச் சிந்தியுங்கள். தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகு சேர்ப்பவை அவை. தோல்விகளை, சறுக்கல்களைப்பற்றி கவலைப்படாதீர்கள். ஆயிரம் தடவை இலட்ச்சியத்திலிருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த இலட்ச்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.

அகோபில அழகிய சிங்கர் சுவாமிகள்-நற் சிந்தனைகள்
உணவை நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவ்வுணவுதூய்மையான மனதுடன் செய்ய வேண்டும் என்பதும் ஆகும். சமையல் செய்பவரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்து விடுவது இயற்கையே.

சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நாம் நமக்காக சமைக்கும்போது அதை சாதம் என்று அழைக்கிறோம். அதே உணவினை ஆண்டவனுக்கு படைத்த பின் மீண்டும் நம்மிடம் கொண்டுவரும்போது பிரசாதமாகி விடுகிறது. "பிர' என்றால் "கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல,கடவுளுக்குப் படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள் மேன்மைபெற்று வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன.
சாய்பாபா-நற் சிந்தனைகள்
* எண்ணியது நிறைவேறாவிட்டால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது. ஒருவேளை நம் ஆசை தவறானதாக இருக்கலாம். அது கடவுளுக்கு விருப்பமானதாகஇல்லாமல் போனாலும் அது நிறைவேறுவதில்லை.

* இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.

* ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில்,ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.

* குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.

* வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது.மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள்


ஹரிதாஸ்கிரி சுவாமி-நற் சிந்தனைகள்
* நாம் விரும்பியதை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் இறைவனே நம்மை வழி நடத்துபவன். அதனால்,பக்தி மார்க்கத்தை விட்டு விலகுதல் கூடாது. அவன் நம் தகுதி அறிந்து நிச்சயம் அருள்செய்வான்.

* கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை.

* பூஜை செய்தாலும், மந்திரங்களை ஜெபித்தாலும் இறைவனை நினைப்பது தான் முக்கியம்.இறைவன் நமக்கு துணை செய்கிறான் என்ற நம்பிக்கை மிகவும் தேவை. இதனால்,நாம் செய்யும் செயல்கள் சுலபமாகின்றன. மனதில் ஊக்கமும், தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

* குழந்தைகளுக்கு இறைவனின் திருநாமங்களைப் பெயரிடுங்கள். பிள்ளைகளை அன்போடு கூப்பிடும்போது,நம்மையும் அறியாமல் நாமஜபம் செய்த புண்ணிய பலனைப் பெற்றவர்களாகி விடுவோம்.

Saturday 23 November 2019

*நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் 10 ரகசியங்கள்.*

*நமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும்                                    10 ரகசியங்கள்.* *நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோசமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது*
*அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு பூரண புண்ணிய பலனை தருகிறது என அகத்தியர் பெருமான் அவருடைய கர்ம காண்ட நூலில் சொல்கிறார். அந்த அபூர்வ ரகசியங்களை இன்று ஆழமாக அனைவரும் பயனடைய பகிர்கிறேன்.*
*1.படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படி படியாக குறையும் . இந்த விவரத்தை மாற்றி சொல்லலாம் , படுக்கைக்கு நாம் எடுத்து செல்லும் குடி நீர் காலையில் மிதம் இருந்தால் செடிகளுக்கு குறிப்பாக துளசி அல்லது தொட்ட சினிக்கி செடிகளுக்கு விட்டு விட வேண்டும் ....*
*2.அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும் .*
*3.வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம் ,பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும் .*
*4.ஆசான் ,வேதம் படித்தவர் ,நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுது , குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது , குருவின் ஆசிகள் கிடைக்கும் .*
*5.சிதலம் அடைந்த கோவில்களுக்கு நீர்நிலை உண்டாக்குதல் /தண்ணீர் தொட்டி /குளம் சரி செய்தல் அல்லது செய்பவருக்கு உதவுதல். தேவதைகளின் ஆசிகளை கொடுத்து நமக்கு வசியமும் கவர்ச்சியும் கொடுத்துவிடும் .*
*6.சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு அந்த உணவை அளிப்பதும்,கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது ,தொழு நோய் /குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும் .*
*7.திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல் , நம் வாழும் மனை , தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல் ,மேலும் பூமிக்கு மரியாதை செய்தல்,பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு ,பறவைகள் ), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல் , இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும் .*
*8.ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல் , புதன் கிழமை தோறும் அன்னதானம் செய்தல் , புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது ) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை , பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி ) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில் , மென்மையான வாழ்க்கையை கொடுக்கும் .*
*9.நாகங்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது , இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது , குடி கெடுத்தவன் , குடிகாரன் ,குரு துரோகி , பசுவை கொன்றவன் , சண்டாளன் -- இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம் , போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும் .*
*( இந்த பஞ்ச மஹா பாவிகளை அடையாளம் கண்டு கொள்வது சற்று சிரமும் தான் , தெரிந்து சேர்வது நமக்கு தரித்தரம் )*
*10.பாழடைந்த / பூஜை எதுவும் நடைபெறாமல் தடைபட்ட சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது , பிரதோஷ நாளில் சிவ ஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும் , இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள் ....*
*இவைகள் பொதுவானவை,*
*ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல....*
*வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.*
*புரிந்து செய்தாலும் ,தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான் ....

Tuesday 19 November 2019

சக்கரத்தாழ்வார் சிறப்பு


ஒரு அருமையான அரிய ஆனால் சற்று நீண்ட பகிர்வு ஆன்மீக பதிவு .
சக்கரத்தாழ்வார் சிறப்பு
திருமாலின் கையில் இருக்கும் சக்கரம் இருப்பதைப் பார்த்தீருப்போம் .ஆனால் அந்த சக்கரம் யாரு?ன்னு நிறைய பேருக்கு தெரிந்திருக்காது .அந்த சக்கரம் யாரு ?அதன் மகிமை என்ன ?என்பதைப் பற்றி இந்த பதிவில் அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
பக்தில பல வகை உண்டு .நமக்கு தெரிந்த ஆன்மீகக் கருத்துக்களை நாலு பேர் தெரிந்து கொள்ளுவது ஒரு வகையான பக்தி என்று சொல்லலாம் .
அடியேனும் அந்த வகைதான் .
அடியேன் பதிவின் மூலமாக பயன்பெறுகிறார்கள் என்பது அடியேன்
சுவாமிக்கு செய்யும் கைங்கரியம் எண்ணி இந்த பதிவு...........
சங்கடம் தீர்க்கும் சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார்,
சுதர்சனர்,
சக்கரராஜன்,
நேமி,
திகிரி,
ரதாங்கம்,
சுதர்சனாழ்வான்,
திருவாழிஆழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படும் சுதர்சன சக்கரமே சக்கரத்தாழ்வாராகும்.
மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் காட்சியளிப்பார். ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று திருப்பாவையில் திருமாலை பாடுகிறார் ஆண்டாள்.
திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை அனந்தாழ்வான் என்றும், வாகனமான கருடனை கருடாழ்வார் என்றும், நம்மாழ்வார் ஞானம் பெற்ற புளியமரத்தை திருப்புளியாழ்வான் என்றும், மகாவிஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்களில் முதன்மையான சக்கரத்தை திருவாழிஆழ்வான் எனும் சக்கரத்தாழ்வான் என வைணவ சாஸ்திரங்களும், சில்பரத்தினம் என்ற நூலும் தெரிவிக்கிறது.
பெருமாள் கோயில்களில்
8 கரங்கள் கொண்ட சுதர்சனரையும்,
16 கரங்கள் கொண்ட மூர்த்தியையும்,
32 கரங்கள் கொண்ட மகா சுதர்சனரையும் காணலாம்.
பொதுவாக, 8 அல்லது 16 கரங்களுடன் வீறு கொண்டு எழும் தோற்றத்துடன் அறுகோண சக்கரத்தில் சக்கரத்தாழ்வார் காட்சி தருவார்.‘ஷட்கோண சக்கரம்’ என்னும் ஆறுகோணத்தின் மத்தியில் உக்கிர வடிவ சுதர்சனரும், ‘திரிகோண சக்கரம்’ எனும் முக்கோணத்தில் யோக நரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர்.
சுதர்சனர் தனது திருக்கரங்களில்
சக்கரம், மழு, ஈட்டி, தண்டு, அங்குசம்,அக்னி, கத்தி, வேல், சங்கம், வில், பாசம், கலப்பை, வஜ்ரம், கதை,
உலக்கை,
சூலம் என 16 கைகளில் 16 வகையான ஆயுதங்களுடன் மகா சுதர்சன மூர்த்தியாக காட்சி தருகிறார்.
சுதர்சனர் வழிபாடு மிகவும் சிறப்பானதாக கூறப்படுகிறது. அழிக்க முடியாத பகையை அழித்து, நீக்க முடியாத பயத்தை நீக்க வல்லவர் சுதர்சன மூர்த்தி.
மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூல காரணமாக இருப்பவை
ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான்.
அவற்றை அழித்து மனஅமைதியை தருகிறார் சுதர்சன மூர்த்தி.
கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்வார்.
கெட்ட கனவுகள், மன சஞ்சலம், சித்த பிரமை, பேய், பிசாசு, பில்லி, சூனியம்,
ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார்.
ஜாதகத்தில் 6, 8, 12&ம் அதிபதிகளின் திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் ஸ்ரீசுதர்சனரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாற்றி, துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சந்தோஷம் தருபவர் சக்கரத்தாழ்வார்
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கப்படுபவர். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
பெரியாழ்வார் `சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு’ என வாழ்த்திப் பாடியுள்ளார். திருமாலுக்கு இணையானவர் என்று எழுதிய சுவாமி தேசிகன், சுதர்சனாஷ்டகத்தில் சக்கரத்தாழ்வாரைப் பலவாறும் போற்றியுள்ளார்.
பெருமாள் கையை அலங்கரிப்பவர்
சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. திருக்கோவிலூரில் மூலவர் இடக்கையில் காட்சி அளிக்கிறார் சக்கரத்தாழ்வார். அதே போல் அமைந்து பிரயோகிக்கும் நிலையில் காணப்படுவது பஞ்ச கிருஷ்ண திருத்தலங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில்.
நவகிரக தோஷம் நீங்க
சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `
ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’
என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
சக்கரத்தாழ்வார் எதிரிக்கு எதிரி
சிசுபாலனின் தாய்க்கு அளித்த வாக்கின்படி, சிசுபாலனின் தவறை நூறு முறை மன்னித்துவிட்டார் கிருஷ்ணர். அவனது நூற்றியோராவது தவறைக் கண்டு கொதித்த சுதர்சன சக்கரம் சீறி எழுந்து பெருமாளின் எதிரியான சிசுபாலனை அழித்தது.
மகாபாரத யுத்தத்தின்போது, ஜயத்ரதனை வெல்ல இயலாத நிலையில் பெருமாளின் சக்கரம் வானில் சுழன்று எழுந்து சூரியனை மறைத்தது. அதனால் குருஷேத்திரமே இருண்டது. இதனால் ஜயத்ரதன் ஒழிக்கப்பட்டு, மகாபாரத வெற்றிக்கு வித்திடப்பட்டது.
கஜேந்திர மோட்சம் என்ற புராணக் கதையில், யானையின் காலைப் பிடித்துக்கொண்ட மகேந்திரன் என்ற முதலையை சீவித் தள்ளி, கஜேந்திரனைக் காப்பாற்றியது சுதர்சன சக்கரமே.
பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டாற்போல் விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார் என இவை நிரூபிக்கின்றன.
பக்தர்களுக்கு சந்தோஷம் தருபவர்
பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் சுதர்சனர். மனிதனின் நிம்மதியை பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர். இவர் கல்வியில் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வாரை சனிக்கிழமைகளில் தரிசிக்க வாழ்வு வளம் கூடும். சென்னை திருவொற்றியூரில் காலடிப்பேட்டை சந்நிதி தெருவில் அமைந்துள்ள கல்யாண வரதராஜர் கோவிலில் அருள்பாலிக்கும் சக்கரத்தாழ்வார் பொன்னையும் பொருளையும் மட்டுமல்ல திருமண வரத்தையும் வாரி வழங்குபவர். `சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்’ என்று பெருமாளுடன் அவரது சக்கரத்திற்கும் சேர்த்தே ஏற்றம் தருகிறாள் ஆண்டாள்.
நன்மைகள் கிடைக்க சக்கரத்தாழ்வார்
தெய்வங்களில் சிறப்புடைய தெய்வம் மகாவிஷ்ணு. அவர் ஸ்ரீமன் நாராயணன் ஆவார். உலகம் அனைத்தையும் படைத்து காத்து தன்பால் அடக்கி கொள்ளவும் ஆற்றல் படைத்தவர் மகாவிஷ்னு. அவரின் பெருமையை 18 புராணங்களிலும் சிறக்கப்பேசுகின்றார்கள். மகாவிஷ்னுக்கு சிறந்த ஆயுதங்களாக போற்றப்படுபவை 5 ஆயுதங்களாகும். அவை சங்கு, சக்கரம், கெதை, வில், கத்தி இவற்றை ஐம்படை என்று கூறுவார்கள்.

படை என்ற சொல்லுக்கு ஆயுதம் என்று பொருள். இந்த ஐந்தாம் படையை கொண்டு பகவான் ஸ்ரீமன் நாராயணன் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்ëபாற்றிவருகிறார் இந்த ஐந்து ஆயுதங்களில் சிறப்புடையது சக்கரமாகும். இந்த சக்கரத்திற்கு ஆழ்வார் என்று அடைமொழி சேர்த்து சக்கரத்தாழ்வார் என்று வைணவம் சிறப்பித்து பேசுகிறது.

சக்கரத்தாழ்வாருக்கு சுதர்ஷனம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்த சுதர்ஷனனை பற்றி சுதர்ஷன சதகம் என்று 100 பாடல்கள் அடங்கிய ஒரு நூல் ஒரு பெரியவரால் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் சக்கரத்தாழ்வாரின் பெருமையை அப்பெரியவர் பல சான்றுகளுடன் விளக்கியும் கூறியுள்ளார் அந்த நூலை நாம் தினந்தோறும் படித்தால் குறைகள் எல்லாம் நீங்கும்.

நன்மைகள் பல உண்டாகும் என்றும் அப்பெரியவர் கூறியுள்ளார். கஜேந்திர மோட்சம், அம்பரிகன் வரலாறு, ஆகியவை எல்லாம் சக்கரத்தாழ்வாரின் பெருமையையும் ஏகாதசி விரதத்தின் உயர்வையும் கூறுகின்றன. அந்த சுதர்ஷன சதகம் அதுபோன்ற சுதர்ஷன சதக நாமம் ஆகிய நூல்களை நாமும் பாராயணம் செய்தோமானால் நலம் பல பெறலாம். குறைகள் நீங்கும். கிரக தோஷம் விடுபடும்.

ஆகவே ஆழ்வார்கள் பண்ணிரென்டு பேர்களும் மிகவும் போற்றி புகழப்பெற்ற சக்கரத்தாழ்வாரின் பெருமையை கோதை நாச்சியார் (ஆண்டாள்) ஆழிமழை கண்ணா என்கின்ற திருப்பாவை பாடல்கள் மூலமாக சிறப்பித்து பாடியுள்ளார். தமிழில் அமைந்த 'ழ' என்ற எழுத்தின் பெருமையை இந்த பாடல்கள் மூலமாக சிறப்பித்து பேசியுள்ளார்கள்.

ஆகவே ஆழிமழை கண்ணா என்ற பாசுரத்தை நாமும் பாராயணம் செய்வோமானால் நாட்டில் மழை பொழியும், வளம் பெருகும், தீமைகள் அகலும் மேன்மேலும் நன்மைகள் உண்டாகும். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சக்கரத்தாழ்வார் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள திருமக்கோட்டை ஊராட்சி, மகாராஜபுரம் கிராமத் தில் அமைந்துள்ளது.

ஸ்ரீரெங்கநாயகி சமேத அருள்மிகு அரங்கநாதர் சுவாமி கோவிலில் தென்மேற்கில் கிழக்கு முகமாக நின்ற கோலத்தில் தனி சன்னதியாக அருள்பாலித்து வருகிறார். கிழக்கு முகமாக சக்கரத்தாழ்வாரும், மேற்கு முகமாக யோக நரசிம்மரும் ஒரே கல்லில் அமைந்துள்ளது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். இப்படியொரு சிறப்பிற்குரிய சக்கரத்தாழ்வாரை நாமும் வழிபடுவோம்.
சக்கரத்தாழ்வாரை தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள் கிடைக்கும். கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர். இவரை எவரும் எதிர்க்க மாட்டார்கள். அனைவரும் இவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்.
ஏதாவது ஒரு காரணத்தினால் மனதில் எப்போதாவது பயம் தோன்றினால் இவர் மந்திரங்களைச் சொல்வதன் மூலம் அந்தப்ப பயமானது இல்லாது அழிந்து ஒழிந்து போகும். கடுமையான தீர்க்க முடியாத வியாதிகள் உள்ளவர்கள் இவரை எண்ணித் துதித்து வந்தால் அந்த வியாதிகள் குணமாகும்.
வறுமையினால் பாதிக்கப்பட்டு ஒருவர் துக்கத்தை அடைந்திருந்தால் இவர் வழிபாட்டின் மூலமாக வறுமை ஒழிந்து, ஏழ்மை அழிந்து, செல்வம் குவியும். எதிர்பாராத பட்டங்களும், பதவிகளும் இவர்களைத் தேடி வரும். திருமணம் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தாலோ, பிறரின் தலையீட்டினால் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலோ அவை எல்லாம் நீங்கித் திருமணம் நல்ல முறையில் நடைபெறும்.
நோயாலோ, விபத்தாலோ, நஞ்சாலோ, பகைவரின் அச்சுறுத்தாலோ விளைந்திருக்கும் மரண பயம் அகலும். புத்தியில் தெளிவு உண்டாகும். ஞான வைராக்கியம் பிறக்கும்.
மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது .
சக்கரம் என்பது சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார் .
சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள் .சுதர்சனம் மங்களமானது .
யோக நரசிம்மர்
நான்கு கரங்களுடன் யோகா நரசிம்மர் உள்ளார் .
அந்த 4 கரங்களும் அறம்,பொருள் ,இன்பம் ,வீடு ஆகியவற்றை தன்னை நாடி வரும் அடியவருக்கு வழங்குவதாக ஐதீகம்...
( ஆன்மிகம்

Monday 18 November 2019

துரோணரின் நிலை பரிதாபமானது

 உண்மையில் நடந்தது என்ன? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது
ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.
சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்
அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது
அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்
அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது
அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,
நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்
அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது
இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும், ஏகலைவனின் வித்தையில் அஞ்சுகின்றான்.
அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது
ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்
எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்..
அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌
துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,
அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்
சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று, இதன் சூத்திரதாரி கண்ணன்
அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான், அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்
ஆனால் விதி?
துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்.
ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?
அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது
யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்
குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது
குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்
அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?
ஆனால் விதி?
அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி
தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்
ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்
காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே
(ஆம் வித்தை ஒன்றுக்காக கர்ணணையே அரசனாக்கி கைக்குள் வைத்திருக்கும் துரியன் , ஏகலைவன் கிடைத்தால் விடுவானா? கண்ணனின் கவலை அவனுக்கு)
துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அது துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்
என்ன செய்யலாம்?
அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்
குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்
அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்
அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது
"துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ
உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது
அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழிசுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே
உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்
அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்
நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்..."
அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்
ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்
மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை
மணிரத்னம் புராண காட்சிகளை சுட்டு படமெடுப்பதில் கெட்டிக்காரர் ஆனால் அவரும் ஏகலைவன்
பக்கமே வரவில்லை
அவன் கதையினை மிக மிக அழகான படமாக எடுக்கலாம், எடுப்பார் யாருமில்லை, இதைவிடுத்து பூரா இயக்குநரும் கதை திருட்டு காட்சி திருட்டு என கோர்ட் படி ஏறிகொண்டிருக்கின்றான்.'
ஆயிரம் அர்த்தமும் உருக்கமும் தியாகமும் நிறைந்த காட்சி ஏகலைவன் துரோணர் காட்சி, அது சொல்லும் தத்துவம் ஏராளம்
இந்த கருப்பு சட்டைகள் , திராவிட இம்சைகளுக்கு ஒருமண்ணும் தெரியாது, அவைகளின் மனமும் புத்தியும் கருப்பு, எல்லாவற்றையும் தப்பு தப்பாக உணர்ந்து பிராமணன் ஒழிக என முடிப்பது ஒன்றே அவர்கள் ஏற்றுகொண்ட கொள்கை
அவர்களின் புரட்டு செய்தியினை புறந்தள்ளுங்கள், ஏகலைவன் கதை போல கொண்டாடபட வேண்டிய ஆயிரம் கதைகள் இங்கு உண்டு
அவற்றை எல்லாம் படியுங்கள், பெரும் அர்த்தமும் ஞானமும் விளங்கும்

Tuesday 12 November 2019

*அர்த்தநாரீஸ்வரர்


*அர்த்தநாரீஸ்வரர்*
முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார்.
பார்வதி தேவியை வழிபடமாட்டார் .சிவனும் பார்வதியும் ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டார்.
*சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று உணர்த்திய அர்த்தநாரீஸ்வரர்*
இதையறிந்த சிவன் பார்வதிதேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து சரி பாதியாக தேவியை தன்னுடன் இணைத்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார்.
இதன் மூலமாக சிவனும் சக்தியும் ஒன்று தான் என்று உலகிற்கும் உணர்த்தினார். இவ்வாறு சிவனும் சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.
திடீரென்று ஏற்பட்ட இருளின் காரணமாக உலகின் அணைத்து வழிபாட்டு முறைகளும் மாறின.
இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதை கண்ட பார்வதி சிவனிடம் இத்தவறு மீண்டும் நிகழாதிருக்க நாம் இருவரும் தனித்தனி என்ற முறை மாறி ஒருவர் என்ற நிலை உருவாகவேண்டும் என்று வேண்டினார்.
இந்த வேண்டுகோளை ஏற்று தேவியருக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக சிவன் ஒப்புக்கொண்டார்.
அதற்காக பார்வதியிடம் இமயமலையிலும், காசியிலும், காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றன் கரையிலும், கடைசியாக திருவண்ணாமலையிலும் தவம் செய்து சாப விமோச்சனம் பெறவேண்டும் என்று கூறினார்.
பார்வதி தேவியும் அவ்வாறே தவம் செய்தார். இறுதியில் திருவண்ணாமலையில் சிவன் பார்வதிக்கு காட்சி தந்து நீ யாருக்காக சோகமுற்று இத்தொல்லைகளுக்கு ஆளானாயோ அந்த முருகன் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள திருக்கொடிமாடச்செங்குன்றூரில் குடிகொண்டுள்ளான்.
அதனால் அதுவே நாம் தங்குவதற்கு ஏற்ற இடம் என்று கூறி அங்கு சென்று தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி பார்வதியும் அங்கு சென்று தவம் செய்து சிவனுடன் இரண்டற கலந்து அர்த்தநாரீஸ்வரராக கட்சியளிகின்றனர்.
இந்த நாகமலை உருவானதற்கு ஒரு புராணக்கதை கூறப்படுகிறது..முன்னொரு காலத்தில் வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுகும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது.
இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. இதன்படி ஆதிசேஷன் தன் படங்களால் மேருமலையை அழுத்தி பிடித்துக்கொள்ளவேண்டும். அதை வாயுபகவான் தன் பலத்தால் விடுவிக்க வேண்டும் என்பதே அந்த பந்தயம்.
ஆனால் வாயுபகவானால் ஆதிசேஷன் பிடியை தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுபகவான் தன் சக்தியை அடக்கிக்கொண்டார். இதனால் அணைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டன.
இந்த பேரழிவை கண்ட தேவர்களும், முனிவர்களும் ஆதிசேஷனிடம் பிடியை தளர்த்துமாறு வேண்டினர் .
அவரும் தன் பிடியை தளர்த்த இதை பயன்படுத்திக்கொண்ட வாயுபகவான் தன் முழு சக்தியையும் பயன்படுத்தி வேகமாக மோதி மலையின் சிகரத்துடன் ஆதிசேஷன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாக விழ செய்தார்.
அவ்வாறு விழுந்த பாகங்களில் ஒன்றுதான் இந்த நாகமலை அதாவது இந்த திருச்செங்கோடு என்று அந்த புராணக்கதை கூறுகிறது.

Wednesday 6 November 2019

மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள்


 மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம்.
1. திருமால் மார்பு
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே.
2. பசுவின் பின்புறம்
பசு தேவராலும், மூவராலும், முத்தேவியராலும் தொழப்பெறும் கோமாதா. காரணம், பசுவின் உடலில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு தெய்வம் இருப் பதுதான். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காலையில் எழுந்ததும் காணத் தக்கவற்றுள் பசுவின் பின் பக்கமும் ஒன்று. அருகம்புல்லைப் பசுவிற்கு கொடுப்பது 32 வகை அறங்களுள் ஒன்றதாகும். ‘யாவர்க்கும் ஆம் பசுவிற்கு ஒரு வாயிறை’ என்றார் திருமூலர்.
3. யானையின் மத்தகம்
யானையின் மத்தகம் பிரணவம் போன்றது. (ஓங்காரம் போன்றது) அங்கே திருமகள் வீற்றிருக்கிறாள்.
4. தாமரை
மலர்களில் சிறந்தது தாமரை. ‘பூவெனப்படுவது பொறிவாழ் பூவே’ என்றும், ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை’ என்றும் கூறுவர். தாமரை செல்வத்தைக் கொடுக்கும். பொன்னின் அளவைப் பத்மநிதி, சங்கநிதி என்பர். பத்மம் என்றால் தாமரை. எல்லாத் தெய்வங்களுமே பத்மத்தில்தான் அமர்ந்துள்ளனர். பத்மாசனத்தில் அமர்வதே சிறப்பு. திருமகளுக்குரிய இடம் தாமரை. ஆதலின் அவளை மலர்மகள் என்பர்.
5. திருவிளக்கு
விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத் தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய் ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.
6. சந்தனம்
மங்கலப்பொருளான சந்தனத்தில் மகாலட்சுமி உறைகிறாள். தெய்வங்களுக்குரிய சோடச உபசரணையில் சந்தனம் அணிவிப்பதும் ஒன்று. சுபகாரியஙக்ளில் சந்தனம் அவசியம்.
7. தாம்பூலம்
தாம்பூலம் மங்களகரமானது. சுபகாரியங்களுக்கும் பூஜைக்கும் தேவையானது. தாம்பூலத்தை மாற்றிக் கொண்டால் சம்மதம் தெரிவித்தாயிற்று என்றே பொருள்.
8. கோமயம்
பசுவிடமிருந்து வெளிப்படும் கோஜலம், கோமயம் (சாணம்) பால், தயிர், நெய் ஆகிய ஐந்தும் இறைவனுக்கு உகந்தவை. இதனைப் பஞ்சகவ்யம் என்பர். ‘ஐந்தாடுவான் அரன்’ என்பார் அப்பர். வாயிலில் சாணம் தெளித்தால் வீட்டைச் சாணத்தால் மெழுகினால் கிருமிகள் வாரா, லட்சுமி வருவாள். பஞ்சகவ்யம் பருகினால் நோய் வராது. பஞ்ச கவ்யம் பரம ஒளஷதம் என்பர்.
9. கன்னிப்பெண்கள்
தூய கன்னியர் தெய்வ நலம் பொலிபவர். அவர்களிடத்து லட்சுமி கடாட்சம் உண்டு. பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று சொல்வது உலக வழக்கு.
10. உள்ளங்கை
உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில் எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது. கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான் பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.
11. பசுமாட்டின் கால்தூசு
புனிதமான பசுவின் பாதம் பட்ட இடத்தில் பாவம் நில்லாது. அதன் கால் தூசு பட்ட இடத்தில் செல்வம் கொழிக்கும். மாடு என்றால் செல்வந்தானே!
12. வேள்விப்புகை
வேள்விப் புகை உயிர் காக்கும். போபாலில் வேள்வி நடந்த இரு வீடுகளுக்குள்ளே நச்சுக்காற்று நுழையவில்லை. வேள்விப்புகை ஆரோக்கியம் தரும். வேள்விப் புகையில் வானம் பொழியும். வையகம் செழிக்கும்.
13. சங்கு
சங்கும் அதன் ஒலியும் மங்களகரமானவை. நிதியின் ஓர் அளவை சங்கம் என்பர். ‘சங்கநிதி... பதுமநிதி இரண்டுந்தந்து’ எனும் நாவரசர் சொல் உணர்வோம்.
14. வில்வமரம்
வில்வ மரத்தடியில் ரைவத மன்வந்திரத்தில் மகாலட்சுமி தோன்றி னாள். வில்வம் சிவபெருமானுக்கு உகந்த பத்திரம். அதைவிடச் சிறந்த பத்திரம் ஒன்றும் இல்லை. வைணவத்தலமான ஸ்ரீரங்கத்தில் தல விருட்சம் வில்வம், திருநகரிக்கு வில்வாரண்யம் என்று பெயர். திருவஹிந்திரபுரத்தில் மகாலட்சுமிக்கு வில்வத்தால்தான் அர்ச்சனை. வில்வ மரத்தடியில் செல்வம் தரும் நாயகி வசிக்கிறாள்.
15. நெல்லி மரம்
நெல்லி ஆயுளை வளர்க்கும்: ஆரோக்கியம் தரும். அதனடி யில் மகாலட்சுமி உறைகிறாள். நெல்லிதிருமாலின் அருள் பெற்றது. ஹரிபலம் என்று இதற்கு ஒரு பெயர். நெல்லிக்கனி இருக்கும் வீட்டில் லட்சுமி இருப்பாள். துவாதசியன்று நெல்லிக்காய் சேர்த்தால்தான் ஏகாதசிப் பலன் உண்டு.
16. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்.
17. வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம்
18. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்
19. தானியக் குவியல்
20. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்
21. பணிவுடைமையும் இன்சொல்லும் உடையவர்
22. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்
23. நாவடக்கம் உள்ளவர்
24. மிதமாக உண்பவர்
25. பெண்களைத் தெய்வமாக மதிப்பவர்
26. தூய்மையான ஆடை அணிகிறவர் ஆகிய இடங்களிலும் மனிதர்களிடத்தும் மகாலட்சுமி எப்போதும் இருக்கிறாள்.
"ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"

Tuesday 5 November 2019

மாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்!

மாட்டு வண்டியின் ஸ்பேர் பார்ட்ஸ் பெயர்களும், அதன் பயன்களும்!
வண்டி
முன்பெல்லாம் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் இரண்டு மாடுகளை வண்டி இழுப்பதற்காக கட்டாயமாக வீட்டில் வைத்திருப்பார்கள். மோட்டார் வாகனங்கள் அதிகம் புழக்கம் இல்லாத காலங்களில் விவசாயிகள் மட்டுமல்லாமல் வியாபாரிகளும் மாட்டு வண்டியையே பெரிதும் உபயோகித்து வந்தனர். இந்த வண்டிக்கு 'கட்டை வண்டி' என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த வண்டியானது சுற்றுச்சூழலுக்கு எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. இந்த மாட்டு வண்டிகளின் பயன்பாடு தொன்றுதொட்டு நம்மிடையே இருந்து வருகிறது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் விளையும் வேளாண் பொருட்களையும், பிற பொருட்களையும் ஏற்றிச்செல்ல அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஒரே வாகனமும், இந்த மாட்டு வண்டிதான். இந்த மாட்டுவண்டியை இன்று காண்பதே அரிதாகி வருகிறது. இந்த வகை மாடுகளை ஜல்லிக்கட்டிற்காக பெரிதும் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் சில பகுதிகளில் வண்டி மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த வண்டிப் பயணமானது, பெரும்பாலான கிராம மக்களின் போக்குவரத்துக்காகவும் பயன்பட்டுள்ளது. விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் வண்டிப் பந்தையமான 'ரேக்ளா பந்தையம்' என்ற விளையாட்டுக்கும் இந்த வண்டிகள் பெரிதும் உதவியுள்ளன. இந்த வண்டியினுடைய ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு சிறப்புக்காக செய்யக் கூடியது. எவ்வளவு பெரிய வாகனப் பயணமாக இருந்தாலும் மாட்டு வண்டி பயணத்துக்கு ஈடாகாது. இன்று பெரும்பாலோனோர்க்கு மாட்டு வண்டியின் பயன்பாடுகளும், அதனை பற்றிய விளக்கங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாட்டுவண்டியின் ஒவ்வொரு பாகங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்...
மாட்டு வண்டி
கடையாணி:
இரண்டு சக்கரங்களையும் அச்சினை விட்டு வெளியேற விடாமல் பிடித்துக் கொள்ளும். வண்டியில் உள்ள மைய அச்சு தொடங்கி கடைசியாக உள்ள பகுதியாக இருப்பதால்'' என்று பெயர் வந்திருக்கலாம்.
அல்லைப்படல்:
பொதுவாக படல் என்றால் மறைக்க உதவுவது என்று அர்த்தம். வண்டியின் இரண்டு பக்கவாட்டுகளிலும் பொருட்கள் விழாதவாறு தடுக்கும் பாகத்திற்கு பெயர் 'அல்லைப்படல்' என்று பெயர்.
குடம்:
ஆரக்கால்களை வட்டை(சக்கரத்தின் வெளிப்பகுதி)யுடனும் மையஅச்சுடனும் இணைக்கும் பகுதிக்கு பெயர்தான் குடம்.
நுகத்தடி:
வண்டியில் பூட்டும் மாடுகளை கட்ட பயன்படும் நீளமான தடிப்பகுதியே இந்த நுகத்தடியாகும். நுகத்தடியில் மாடுகளைப்பூட்ட அதன் இரு பக்கங்களிலும் இரண்டு துளைகள் இருக்கும்.
வட்டை:
வண்டி சக்கரத்தின் வெளிப்பகுதியை வடிவமைக்க உதவும் பகுதிதான் வட்டை. ஒரு சக்கரத்தினை வடிவமைக்க ஆறு வட்டைகள் தேவை. இந்த வட்டையானது தேக்கு மரத்தால் செய்யப்பட்டு இருக்கும்.
சவாரித்தப்பை:
மாடுகள் சவாரி செய்ய ஏர்க்காலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் தப்பை. இது ஆட்கள் சவாரி செய்ய வசதியாக உருவாக்கப்பட்டது.
பட்டா:
சக்கரத்தின் நுனிப்பகுதியில் இரும்பினை கொண்டு சக்கரத்தை சுற்றிலும் அதன் மேற்புறம் தேய்ந்து போகாதவாறும், சேதமடையாமலும் பாதுகாக்க 'பட்டா' அமைக்கப்பட்டிருக்கும்.
இருசு:
'இருசு'க்கட்டைதான் வண்டியின் மையப்பகுதியை தாங்கி நிற்கும். வண்டியின் அச்சானது இந்த இருசின் வழியேதான் செல்லும். அந்த அச்சின் முனையில் இருக்கும் சக்கரங்கள் இருசின் உதவியுடனே இணைக்கப்பட்டிருக்கும். வண்டி சுழல்வதில் இருசின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏர்க்கால், மூக்கேர், ஏர்க்கால் சட்டம்:
ஏர்க்கால் சட்டம் என்பது மாட்டு வண்டியினுடைய மையப்பகுதியிலிருந்து மாட்டினை பூட்ட பயன்படும் இடம் வரையுள்ள பகுதிக்கு பெயர்தான் ஏர்க்கால் சட்டம். இந்த ஏர்க்கால் சட்டத்தில் உள்ள நுனிப்பகுதி மூக்கேர் எனவும், வண்டியை ஓட்டுபவர் அமரும் பகுதிக்கு முன்பாக உள்ள பகுதி ஏர்க்கால் என பல பெயர்களால் இடத்துக்கு தகுந்தவாறு அழைக்கப்படும்.
பூட்டாங்கயிறு, பூட்டாங்குச்சி:
நுகத்தடியில் காணப்படும் துளையில் ஒன்றில் பூட்டாங்குச்சியும் மற்றொரு துளையில் பூட்டாங்கயிறும் தொங்க விடப்பட்டிருக்கும். இந்த இரண்டின் மூலமே மாடுகள் பூட்டப்பட்டு வண்டியிழுக்கும்.
முளைக்குச்சி:
அல்லைப்படல் இந்த முளைக்குச்சியின் உதவியோடு கட்டபட்டிருக்கும். வண்டியிலுள்ள பொருட்கள் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்கு இருதுவும் பக்கபலமாக இருக்கும்.
கொலுப்பலகை:
வண்டி ஓட்டுபவர் அமர்ந்து வண்டியை இயக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள பலகைதான் இந்த கொலுப்பலகை. கொலுப்பலகை சில நேரங்களில் வண்டியை ஓட்டுபவர் நின்று கொண்டே பயணிக்க ஏதுவாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
                                       பழமையை மறந்து விடாதே

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...