Wednesday 31 July 2019

இயற்கைச் சக்திக்கு உதவுவோம்*


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

உடலை நலத்தோடு வைத்துக்கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும், உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறுநேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. இயற்கைச் சக்திகளின் விளைவாலோ அல்லது ஐம்புலன்களின் விளைவாலோ இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது. உணவு, உறக்கம், உழைப்பு, பால் உறவு இவற்றை மிகையாகப் பயன்படுத்துவதாலும், தவறாகப் பயன்படுத்துவதாலும், புறக்கணிப்பாலும், சிந்தனையோட்டத்தை அவ்வாறு பயன்படுத்துவதாலும், நமது செயல்களின் விளைவாகத் தொந்தரவுகள் நேரலாம்.
பருவ வேறுபாடு, பரம்பரை உணர்ச்சிப் பதிவு, வானில் கோள்களின் ஓட்டத்தில் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள், அவற்றின் சேர்க்கையின் விளைவுகள் இவை இயற்கைச் சக்தியால் சேரும் பாதிப்புகள் ஆகும். இந்த விளைவுகளிலிருந்து காக்க இயற்கை சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்தத் தடுப்பு வசதிகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களால் நாம் தடுத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தால் நாம் செயல்படும் பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று. அதனால் தடுப்பு நிலையை உயர்த்திக் கொள்ள நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதனால் நாம் அறிய முடியாத நிலையில் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் நாம் செய்த தவறுகளால் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் தடுப்பு நிலையை உயர்த்தி, உடல் நலக்கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பல நூற்றாண்டுக்கு முன்பே மனிதன் தெரிந்து கொண்டிருக்கிறான். தவிர்க்க முடியாத காரணங்களால், தான் நோய்வாய்ப்பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம், நோயை விரைவிலும், உடல் நலத்தை விரைவில் பெற்றுவிடலாம்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*

உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


ஹிந்து வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படி சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.
உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.
1) அர்த்த தோஷம்
2)
நிமித்த தோஷம்
3)
ஸ்தான தோஷம்
4)
ஜாதி தோஷம்
5)
சம்ஸ்கார தோஷம்
1 ) அர்த்த தோஷம்
  பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றை சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.
2) நிமித்த தோஷம்
அடுத்தது நிமித்த தோஷம். உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல் சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறதுஎன்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.
3ஸ்தான தோஷம்
அடுத்தது ஸ்தான தோஷம் எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரை சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்த முற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.
4 ) ஜாதி தோஷம்
அடுத்தது ஜாதி தோஷம். உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.
5)சம்ஸ்கார தோஷம்
  அடுத்தது சம்ஸ்கார தோஷம். தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இன்றோ ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் என்று அசுத்த உணவை ஆரவாரத்துடன் சாப்பிடுகிறோம். அசைவ உணவைத் தயாரிக்கும அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. மக்டொனால்ட், கெல்லாக் என்று இப்படி பிராண்டட் அயிட்டங்களில் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். ஆசாரத்தைக் கடைப்பிடி என்றனர் ஆன்றோர். ஆசாரம் என்றால் சுத்தம்.


Tuesday 30 July 2019

மறந்தேன் எதை?

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 டிவி என் வீட்டிற்கு வந்தபோது. ... புத்தகங்களை எப்படி படிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
கார் என் வீட்டிற்கு வந்தபோது..... ​​
நான் எப்படி நடக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என் கையில் மொபைல் கிடைத்தவுடன்..... கடிதங்களை எப்படி எழுதுவது என்பதை மறந்துவிட்டேன்.

என் வீட்டிற்கு கணினி வந்தபோது....... ​​
எழுதவதை மறந்துவிட்டேன்.
ஏசி வந்ததும்......
இயற்கைக் காற்றை மறந்து விட்டேன்.
நகரத்திற்கு வந்தவுடன்...
அழகு நிறைந்த கிராமத்தை மறந்துவிட்டேன்.
வங்கிகள் மற்றும் கார்டுகளை கையாளுவதால்...
பணத்தின் மதிப்பை மறந்துவிட்டேன்.
வாசனை திரவியத்தை பயன்படுத்தியதால்...
பூக்களின் மனத்தை மறந்துவிட்டேன்.
துரித உணவு வருவதால்...
பாரம்பரிய உணவு வகைகளை சமைக்க மறந்துவிட்டேன்.
சம்பாதிக்க சுற்றி, சுற்றி ஓடுவதால்.....
ஓடுவதை எப்படி நிறுத்துவது என்பதை மறந்துவிட்டேன்.
கடைசியாக எப்படி பேசுவது என்பதையே..மறந்துவிட்டேன்....
                                               மறந்தேன் எதை?
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது..அங்கே
கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே....நாம் இங்கிருந்து கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது...."
ஆச்சரியத்துடன் மனிதன், "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய கடமைகள்,கனவுகள் என்ன ஆவது? நான் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன."ஏன் மனைவி,மக்கள் அழுகின்றனர்.
"மன்னித்து விடு மகனே..இதோடு உனக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது. உன்னைப் புதைத்த மண்ணின் ஈரம் காயும் முன் அவர்கள் உன்னை மறந்து விடுவார்கள்.இப்போது உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது.."
"சரி நீங்கள் வைத்திருக்கும் அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள் மானிடனே....."
"என்னுடைய உடைமைகளா!!!..
அப்படி என்றால் அது என்னுடைய பொருட்கள், உடைகள்,சொத்து பணம்,.....இவை தானே...?"
"நீ சொன்ன பணம்,காசு.பொருள்,
சொத்து,பத்து இவை அனைத்தும் உன்னுடையது அல்ல....அவை பூமியில் நீ வாழ்வதற்கானது...."
"சரி கடவுளே பெட்டியில் இருப்பது என்னுடைய நினைவுகளா?..."
"இல்லை மானிடனே.அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...அவை காலத்தின் கோலம் அது இந்த பிறவியோடு முடிந்தது..."
"என்னுடைய திறமைகளா?..........."
" இவை எதுவும் கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது...."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?..."
"மன்னிக்கவும்....குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது...அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்.."
"அப்படியென்றால் கடவுளே பெட்டியில் இருப்பது என் உடலா?...."
"அதுவும் உன்னுடையது கிடையாது....உடலும் குப்பையும் ஒன்று தான்.."
"என் ஆன்மாவா?"
"ஆம்...அது மட்டும் என்னுடையது...எனது கட்டுப்பாட்டில் இருப்பது."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், அதிர்ச்சிக்குள்ளாகிறான்..
பெட்டி காலியாக இருப்பதைக் கண்டு....
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எவ்வளவு சம்பாதித்தேன்,என் ஆன்மா மட்டும் உன்னுடன் தனியாக வரவேண்டுமா..?
எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.அது மட்டும் தான் உனக்கு வழங்கப்பட்டிருப்பது..நீ பிறக்கும் போதே அந்த countdown தொடங்கி விட்டது.
வேறு எதுவும் உனக்கு சொந்தம் கிடையாது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். உன் மனைவி மக்களுக்கு நல்லது செய். உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் நல்லவானாக இரு. எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே..."
ஒவ்வொரு நொடியும் வீணாக்காமல்
உன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து முடி.
மகிழ்ச்சியாக நல்லவனாக வாழ மறக்காதே...அது மட்டுமே நிரந்தரம்...
உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் மேலே கொண்டு போக முடியாது,நீ செய்த புண்ணியத்தை தவிர"..!


Saturday 20 July 2019

குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?”

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது”
மஹா பெரியவர் ஊர் ஊராகச்சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த சமயம். அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு நாள் ஒரு விவசாயி, பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகம் இல்லை. முகமும் இருளடைந்து போய் இருந்தது. வாயைத்திறந்து தன் துன்பங்களைப்பற்றி கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்திலேயே அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது.
இருந்தும் அந்த விவசாயி, சாமீ ... ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூடத் தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.
பெரியவர் அவரிடம், “குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.
”குலதெய்வமா .... அப்படின்னா? - திருப்பிக்கேட்டார் அவர்.
சரிதான் .... உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”
ஆமாம் சாமி .... வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாததால் அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.
”உன் முன்னோர்கள் யாராவது இப்போ உயிரோட இருக்காங்களா?”
”ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழிப் பாட்டனார் அவர்”
“அவர்கிட்டப்போய் உங்க குலதெய்வம் பத்திக் கொஞ்சம் கேட்டுண்டு வா”
ஏன் சாமீ .... அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாத்தான் என் பிரச்சனை தீருமா?”
”அப்படித்தான் வெச்சுக்கோயேன்.....”
என்ன சாமீ ... நீங்க .... ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”
“நான் அப்படிச்சொல்லவே இல்லையே!”
”அப்ப இந்த சாமில ஒண்ணக் கும்பிடச்சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சிட்டு வரச் சொல்றீங்களே!”
”காரணமாத்தான் சொல்றேன்.
ஓட்டைப்பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது.
நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை.
வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான்.
எனக்குப் பாத்திரமேகூட தேவையில்லை.
ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை.
பாத்திரம் இருந்தால் தானே எதையும் அதுலே போட்டு வைக்க முடியும்?
அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப்போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளியே போகுமா, போகாதா?”
”அப்போ குலதெய்வம்தான் பாத்திரமா ... அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”
நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு, அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரையிலே படும்படி நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.
அவரும் ஒரு பத்துநாள் கழித்து, சாமீ! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் ‘பேச்சாயி’ங்கற ஒரு அம்மன். அதோடக் கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சிபோய் கிடந்தது. யாருமே போகாம விட்டதால, கோயில் புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய்ப் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க ஒரு நடுகல் தான் ’பேச்சாயி!’ ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டு வரேன்” என்றார்.
சபாஷ் ... அந்தக்கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!
”சாமீ! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே ... எதுவுமே சொல்லலியே?”
”அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன்.
நான் சொன்னதை மறந்துடாதே ... பேச்சாயியை விட்டுடாதே!”
அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்தமுறை அவரிடம் ஓர் செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்றுதான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.
“சாமீ ! இப்போ நான் நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்தில பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க ... இந்த அதிசயம் எப்படி நடந்தது?” என்று அவர் திரும்பவும் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். ...... அது ..... ?
ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாக அனைவருமே அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.
’’நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும்.
முன்னோர்கள் என்றால், நமக்கு முன் பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான்.
ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழிப் பாட்டன், பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழிப் பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் “கோத்திரம்” என்னும் ஒரு ரிஷியின் வழி வழிப்பாதை.
பிற கோத்ரத்திலிருந்து பெண்கள் வந்து இந்த வழி வழிப்பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக்கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நக்ஷத்திரம் வேறாக,
உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும்
இருக்கும்.
அதுதான் இயற்கையும் கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல் பாடுகளும் நடந்துமிருக்கும்.
இந்த உலகில் ஆயிரம் கோயில்கள் இருக்கலாம். அந்தக்
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம். போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆனால் குலதெய்வக்கோயில்களுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம்.
இதன்படிப் பார்த்தால், குலதெய்வ சந்நதியில் சென்று நாம் நிற்கும்போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”
---- பெரியவர் சொல்லச்சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம் !
”அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப்பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூடத் தெரியாமல், அதிகபக்ஷம் இருபாட்டன் பாட்டி பெயர்களுக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
ஒரு குடும்பத்தைப் பொறுத்தவரையில் அந்த இறைசக்தி
குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச்சொல்வது கூட ஒரு தவறு. வெளிப்பட வகை செய்யப்பட்டது!
அதுவும் யாரால்? நம் முன்னோர்களால் !
அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்......
நாம் யார்? அந்தத்தொடக்கத்தின் தொடர்ச்சி !
மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப்போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப்
புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம்.
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம்அங்கேபோய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும்போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள்.
நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”
- பெரியவர் விளக்கி முடிக்க வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப்போனது.
இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம்
ஒன்றும் அடங்கியுள்ளது.
சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
நான் ஒன்றும் முட்டாள் இல்லை என்று அவர் வீராப்பாபேசி,
நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும்
நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை.
அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே,
இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள்தொடர்புக்கு ஆட்படுவார் என்பதுதான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய்விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம்.
பெரும்பாலும் ஒருவழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான்
இம்மட்டில் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
உடம்புக்கு உணவு பொருட்களால் சக்தி ஏற்படுவதுபோல,
மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது”.
ஒரு குலதெய்வத்தின் பின்னால். இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளன. குலதெய்வத்தை பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல்போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அது தான் நிகழ்ந்துள்ளது.
எனக்கும் இந்தக்குலதெய்வ விஷயம் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்க குலதெய்வக்கோயிலுக்குப் போனபோது, என் பார்வையே மாறிப்போனது. அந்தக்கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண் .... என் தாத்தன் முன்நின்று மூச்சுவிட்ட இடம் .... என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு ... அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா? ஒன்று உறுதி, அந்தப்பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரஹம்.




சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி :-

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி :- ********************************

(நம் சித்தர்களின் குரல் அன்பர்களுக்கு என்னுடைய திருமந்திர whatsaap வகுப்பில் எடுத்த வகுப்பின் தொகுப்பை பல அன்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க நம் முன்னோர்கள் நீண்ட ஆயுள் , ஆரோக்கியத்துடன் வாழ கடைபிடித்த நாடிசுத்தி எனப்படும் சுவாசத்தை சுத்தம் செய்யும் வழிமுறைகளையும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களையும் பகிர்கிறேன் அவசியம் ஆரோக்கியமாக வாழ விரும்புகின்ற ஒவ்வொருவரும் படித்து தினமும் செய்ய வேண்டிய அற்புத பதிவு.)
ஆராய்ச்சி ரீதியாக இப்போது ஒரு நிமிடத்திற்கு 18 முறையென ஒரு நாளை க்கு 25,920 சுவாசங்களை சுவாசிக்கின்றோம். (சரியான சுவாசம் 21,600 ஆக இருக்க வேண்டும்) அது இயற்கையிலான சுவாசம் என்றாலும்,
சுவாசத்தை பலப்படுத்த வைகிருதம் என்ற சுவாசப் பயிற்சியை சிறுக, சிறுக மேம்படுத்த வேண்டும். வைகிரு தம் என்ற சுவாசப் பயி
ற்சியை சுகப்பிராணயாமம், சமவிருத்த
பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யம பிராணயாமம், ஆத்ய பிராணயாமம், மகத்யோக பிராணயாமம் என்று பல வகையாக பிரிக்கலாம்.
ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப் படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும்.
சுவாச சுத்தி.
**************
சுவாச சுத்தி என்பது,
இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை
உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல்
வலப்புற நாசியின் வழியே காற்றை
வெளியேற்ற வேண்டும். அதன்பின்பு வலப் புறநாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப் புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறி மாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும்.
இச்செயலின் காலத்தில் அதிகமாக
கோபப்படுதல், வேகமடைதல் போன்ற
உணர்ச்சிகளு க்கு ஆளாக கூடாது.
நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும்.
குளிர்ந்த நீரைப் பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சி யை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும்
காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடிகள் அனைத்தும் முழுமையாக சுத்தமடையும்.
இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள்
சென்று உடலை நோய்வாய்ப் படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால
விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
மூச்சுக் கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூய காற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மை யுடன் விளங்குவனவாக அமைகின்றன என்கிறார்கள்.
மூச்சுப் பயிற்சி - நாடிசுத்தி !!!
*******************************
இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக
இருக்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. இந்தச் சக்தியைத்தான் பிராணசக்தி (Life Force) என்று கூறுகிறோம். மானுட தேகத்தின் இடையறாத இயக்கத்துக்கும் இதுவே காரணமாகிறது.
இந்தப் பிராணசக்தி இரண்டு வகையான
இயக்கங்களாக நமது உடம்பில் வினைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓன்று உள்ளிழுக்கும் இயக்கம், மற்றது வெளித்தள்ளும் இயக்கம்.
இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலத்தில் Assimilation என்றும் Elimination என்றும் சொல்லப்படுகின்றன. நமது சுவாசத்தை
நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் வளியைக் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை வளப்படுத்துவதற்காகவும், நமது
மூச்சுக் காற்றோடு தொடர்புடைய
உள்ளிளுக்கும் மற்றும் வெளித்தள்ளும்
இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காகவும் மானுடர் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சிமுறைகளை நமது
ஞானிகள் கண்டறிந்து போதித்தார்கள்.
இவை
1.நாடிசுத்தி
2. ஜிவசுத்தி
3. பிராணசுத்தி
4.பந்தனசுத்தி
5. கண்டசுத்தி
6. சோஹம்சுத்தி
என்பனவாகும்.இவை அனைத்தும்
உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும்
இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துவனவே என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும்.இங்கே பிராணாயாமங்களைப் பற்றியோ, அவற்றின் அடிப்படை சுவாசப்பயிற்சிகளையோ நான்
விபரிக்கவில்லை.என்றாலும் பொதுவான மனித உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு நாடிசுத்தி என்று மூச்சுப்பயிற்சியை மட்டும் விளக்கியிருக்கின்றேன்.
நாடிசுத்தி செய்யும் முறை:-
*****************************
பத்மாசனத்தில் அமரவேண்டும்.
பத்மாசனம் சரியாக வராதவர்கள்
வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க
நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை
வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வேண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே
இழுக்கவேண்டும். நுரையீரல் காற்றால்
நிறைந்ததும் இடதுகை நடுவிரலாலோ
அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க
நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல்
நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு,
இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலது பக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒரு சுற்று நாடிசத்தி ஆகும்.
இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.
பயன்கள்:-
***********
சுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று
மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே
காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம். காற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும்.
இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும்? ஒரே துவாரமாக
இருந்தால் போதாதா? போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது
ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இடை பிங்கலையும் சுவாசநடப்பும்:-
**************************************
இடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம்
உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க
சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும்
தருகின்றன. சாதாரணமாக நாம் நமது
சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை
அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும்
சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டுமறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம்.
எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன்
அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு
நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து
நமது உடம்பின் உஷ்ண நிலையைச்
சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.
நுரையீரலும், சுவாசங்களும்:-
********************************
அறுபது கோடி சிறிய சிறிய காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலா எலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் பகலும்
ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள
ஐயாயிரம் கோடி கலங்களுக்கும்
பிராணவாயுவை விநியோகம்
செய்துவருகிறது. சாதாரணமாக நாம்
சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம்
அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின்
கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன.
இந்தக் காற்றையாவது நுரையீரல்
நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை. மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது.
அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன.
இந்த நடைமுறையினை நாம் அறிவோம். நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு
ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த
நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது.
பெருமளவில் கிடைத்த பிராணவாயு
முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன. இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது.நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன.
நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது.
நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது
மூளைதான். போதியளவு ஆக்சிஜன்
இல்லாவிட்டால் மூளையின் கலங்கள்
இறந்துபோய்விடும். இறந்துபோன
மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது.
மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தெளிவு உண்டாகும். மனக்கட்டுப்பாடுவரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது.
மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு
மூச்சுப்பயிற்சி உயர்வான பயன்களைத் தந்து உதவுகிறது. உயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான
தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா.
முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல்இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய்
வராது. காசநோய்க் கிருமிகளை
நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன்
உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்றகொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம்.
அவ்வளவு அற்புதமான பயிற்சி இது. இந்த நாடிசுத்தி எச்சரிக்கை வேண்டாதது. எவருக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எவரும் செய்யலாம். செய்து பார்த்தால் இதன் பெருமை நமக்குப் புரியும். நமக்குள் நிகழுகின்ற உள்ளிளுக்கும்
இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களும் சீர்ப்படுகின்றன. உள்ளிளுக்கும் இயக்கம் காரணமாக நமது உடம்புக்குள்ளே காற்று செல்கின்றது.
இதயத்தினுள் இரத்தம் செல்லுகின்றது. நாம் உட்கொண்ட உணவு ஜீரணமாகி அதிலேயுள்ள சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. நாம்
வலிமையோடு வாழ்ந்து கொண்டு
இருக்கின்றோம்.வெளித்தள்ளும் இயக்கத்தின் காரணமாக, உள்ளேபோன காற்று கரியமிலவாயுவாக வெளியே வருகிறது.
இரத்தம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவுகள் திடநிலை, திரவநிலை, வாயுநிலை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
இந்தஇருவகை இயக்கங்களும் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும்இ நமது உடம்பிலும் சீராக வினைப்பட்டுக்கொணடு
இருப்பதால்தான் இங்கே எல்லா உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு
இயக்கங்களில் குழப்பங்கள் நேர்ந்தால் நாம் கருவிலேயே குன்றிப்போவோம்.
யோகாசனங்களாலும்நாடிசுத்தி என்ற
மூச்சுப்பயிற்சியாலும் இந்த இருவகை
இயக்கங்களும் ஒழுங்குபடுகின்றன. பெண்கள் கருவுற்று இருக்கின்ற காலத்தில் யோகாசனங்களைச் செய்யக்கூடாது என்று
முன்னர் குறிப்பிட்டிருந்தேன். முன்னரே
ஆசனப்பழக்கமுள்ள பெண்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்துமாத கர்ப்பகாலம் வரை தனக்குப் பழக்கமான ஆசனங்களைச் செய்துவரலாம். ஆதற்குமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியைப் பெண்கள் கர்ப்பகாலத்தில்கூட திடீரென்று
ஆரம்பித்துச் செய்யலாம். கருவுற்ற
பெண்ணுக்கு ஆசனப்பழக்கம்
இல்லாதுபோனாலும், நாடிசுத்தியை
ஆரம்பித்து பிரசவம் வரைக்கும் காலை மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம். இதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும்இருக்கும். மூளை
வளர்ச்சி இல்லாத குழந்தைகள்இ அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் எல்லாம் தாயின் கருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவ்வாறு பிறக்கின்றன.
இவைகளையெல்லாம் நாடிசுத்தி சீர் செய்கின்றது. ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் அதற்கு மேலான தியானமும் எமது கைப்பழக்கத்திற்கு
வந்துவிடுமானால் அப்போது இந்தப்
பூலோகமே சுவர்க்கமாகிவிடும்.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் பிருகு முனிவர்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஸ்ரீமகாவிஷ்ணுவின் மார்பில் பிருகு முனிவர் எட்டி உதைத்ததையும், ஆனாலும் அதற்காகக் கோபித்துக்கொள்ளாமல் முனிவரின் பாதம் நோகுமே என்று ஸ்ரீவிஷ்ணு பிருகு முனிவரின் கால்களை இதமாகப் பிடித்து விட்டதையும் கண்ட திருமகள் கடும் கோபம் கொண்டாள் என்று பார்த்தோம் அல்லவா?
அதன் விளைவாக, பிருகு முனிவருக்குச் சாபம் கிடைத்தது.
''வேதங்களைக் கற்றதால் அகந்தையும் ஆணவமும் மிகுந்து, மும்மூர்த்திகளையே அவமதித்துவிட்டீர்! இனி, உமது வம்சத்தில் வரும் எவரிடமும் செல்வம் சேராது. நான் அவர்களை நாடி, அவர்கள் வீட்டுக்கு வர மாட்டேன்!'' என்று சபித்தாள் ஸ்ரீமகாலட்சுமி.


பிருகு முனிவர் திருமகளின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். பின்னர், அன்னையும் அருள்கூர்ந்து அவருக்குச் சாப விமோசனம் தந்தாள்.
''உமது அகந்தையையும் வித்யாகர்வத்தையும் அறவே விடுத்து, பூவுலக மாந்தர்கள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் ஒரு சாஸ்திரத்தை உருவாக்குவீராக! அதை, உமது சந்ததியினர் உலகுக்குப் பரப்பட்டும். விஷ்ணுவையே சிரத்தாபக்தியுடன் வழிபட்டு, இந்த சாஸ்திரத்தால் மக்களுக்கு அவர்கள் நன்மை செய்தால், அவர்கள் இல்லங்களுக்கு வந்து நான் அருள்புரிவேன். அங்கே வித்தையோடு சகல செல்வங்களும் பரிமளிக்கும்'' என்று அருள்புரிந்தாள் மகாலட்சுமி.
பிருகு முனிவர் அகமகிழ்ந்தார். அவர், பல ஆண்டுகள் தவம் புரிந்து, விண்ணிலுள்ள கோள்களை எல்லாம் ஆராய்ந்து, அதனை மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையோடு இணைத்து, தன்னைப் பற்றியும் தன் எதிர்காலம் பற்றியும் ஒருவன் அறிந்துகொள்ள உதவும் மிக அற்புதமான ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கினார். மஹாகணபதியையும், மகாலட்சுமியையும், மகாவிஷ்ணுவையும், சரஸ்வதிதேவியையும் துதித்து அருள் பெற்று இந்த சாஸ்திரத்தை உருவாக்கினார் பிருகு முனிவர். அதுவே பிருகு சம்ஹிதை.
தன் காலத்தில் வாழ்ந்த பல்வேறு மனிதர்களின் பிறந்த நாள், நேரம், நட்சத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களின் ஜாதகங்களைக் கணித்து, அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு ஒப்பிட்டு இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார் பிருகு  முனிவர். இந்த சாஸ்திரத்தின் மொத்தக் குறிப்புகளும் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கவில்லை.
முகலாயர்கள் படையெடுத்த காலத்தில், இந்த சாஸ்திரத்தின் ஆதார ஏடுகள் அழிக்கப்பட்டன. பிரிட்டிஷார் காலத்தில் சில பகுதிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இந்தியாவின் மிகப் பழைமையான நாலந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டபோது, பிருகு முனிவரின் ஆராய்ச்சிக் குறிப்புகளும், அவர் சேகரித்து வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான ஜாதக நமூனாக்களும் அழிந்துவிட்டன.
பிருகு முனிவரின் சீடர்களும், அவரின் சந்ததியினரான ஜோதிட அந்தணர்கள் சிலரும் சேகரித்து வைத்திருந்த ஏடுகள் அல்லது நகல்களின் அடிப்படையில் பிருகு ஸம்ஹிதை நமக்குக் கிடைத்துள்ளது.

ஆரூடம் அறிவோம் - 3
இன்றைய இந்தியாவில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பால்லியா எனும் இடத்தில் மஹரிஷி பிருகு ஆஸ்ரமம் உள்ளது. இங்கே பிருகு ஸம்ஹிதை சம்பந்தமான ஏடுகளும், ஆராய்ச்சி நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் என்னுமிடத்தில், பிருகு ஸம்ஹிதை பற்றிய ஏடுகளும், சம்பந்தப்பட்ட ஜோதிட சாஸ்திர அரிய நூல்களும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்து ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சியும், பிருகு முனிவரின் சாஸ்திரத்தைப் பரப்பும் பணிகளும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
பிருகு முனிவருக்கு மகாலட்சுமி தந்த சாப விமோசனத்தால்தான் இந்த அரிய சாஸ்திரம் உலகுக்குக் கிடைத்துள்ளது. எனவே, ஜோதிட சாஸ்திரத்தைக் கற்றவர்களும், அதனால் பொருளீட்டி வாழ்பவர்களும் அகந்தையோ ஆணவமோ கொள்ளக்கூடாது.
''இந்த ஜாதக பலன்படி இவரது எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்துச் சொன்னேன். அதன்படிதான் எல்லாம் நடந்தது என்று பெருமை பேசக்கூடாது. பொருள் ஆதாயம் தேடி பொய்யான பலன்களைச் சொல்லக்கூடாது. அப்படிச் செய்தால் அவர்களிடம் லட்சுமிகடாட்சம் தங்காது. அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் சந்ததியும் இந்த பாவத்தைச் சுமக்க நேரிடும்'' என்று பிருகு முனிவரே கூறியுள்ளார்.

முருகப் பெருமானை வழிபட ஏற்ற செவ்வாய்க் கிழமை விரதம்...!



எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம், வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன்.எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. செவ்வாய்க் கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும். கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.

மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி. இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும்.

மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

Friday 19 July 2019

பணத்தை கொடுத்து சில்லறை வாங்கி பாருங்கள்


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/



திருநங்கைகளிடம் பணத்தை கொடுத்து சில்லறை வாங்கி பாருங்கள் திருநங்கைகள் சனி புதன் காரகத்துவத்தில் வருவார்கள் அவர்களை இழிவுபடுத்தி பேச கூடாது அவர்களின் பிறவி அப்படி அமைந்ததற்கு அவர்களின் கர்மா காரணமாகும் அவர்கள் சிவசக்தி சொரூபம் என்பதை உணருங்கள்.எப்பொழுதும் எந்த உயிரையும் இழிவாக பேசும் முன்பு அவர்கள் இடத்தில் உங்களை வைத்து சிந்தித்து பாருங்கள்.உங்களால் யாரையும் இழிவாக பேசவே தோன்றாது.பொதுவாகவே அவர்களை இந்த சமூகத்தில் ஒதுக்குவதால்தான் நிறைய விஷயங்களை நாம் இழக்கின்றோம்.அவர்களுக்கும் நம்மை போன்றே எல்லாவிதமான ஆசைகள் பாசம் உணர்ச்சிகள் ஏக்கம் உண்டு உதாரணத்திற்கு இந்த சமூகம் உங்களை ஒதுக்கினால் உங்களால் எப்படி வாழ முடியும் ஆனாலும் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களும் கிட்டதட்ட மாற்றுதிறனாளிகள் போன்றவர்கள்தான் உண்மையை சொல்ல போனால் அரசு அவர்களுக்கு ஏதேனும் அங்கீகாரம் கொடுத்தாலோ அல்லது வேலை வாய்ப்பு வழங்கினாலோதான் அவர்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.அவர்களை கேலி கிண்டல்கள் செய்வது அவர்களை பார்த்து பயந்து ஒதுங்குவது அவர்களை ஒரு அருவெறுக்கத்தக்க விதமாக பார்ப்பது என்பது தீண்டாமை கொடுமை போன்றது தான்.திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்குங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.வடநாட்டவர்கள் அவர்களை தெய்வமாக மதிப்பார்கள்.அடியேன் மும்பை டில்லி போன்ற நகரங்களில் வசித்ததால் சொல்கின்றேன் பெரிய கடைகளை திறக்கும் பொழுது முதன்முதலாக அவர்களுக்கு கொஞ்சம் பணத்தை அளிப்பதை முக்கியமான அம்சமாக வடநாட்டவர்கள் வைத்திருக்கின்றார்கள்.அதே போல அவர்கள் ஒரு கூட்டமாக வந்து சுற்றி நின்று பாடி ஆடி புதுகடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல் மரியாதை பெறுவதை அடியேன் வடநாட்டில் பார்த்திருக்கின்றேன்.எனக்கொரு பழக்கமுண்டு எங்கு திருநங்கைகளை பார்த்தாலும் அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து விட்டு பணம் அளித்தால் 1ரூபாய் கேட்டு வாங்குவேன் எனது பிள்ளைகளை ஆசீர்வதிக்க சொல்லுவேன்.சில நேரங்களில் அவர்கள் காலிலேயே கூட விழுந்து விடுவதும் வழக்கம்.இதை என் குடும்பத்தினருக்கும் சொல்லி வைத்துள்ளதால் இன்றைக்கும் என் மனைவி மக்கள் அதை பின்பற்றுகிறார்கள்.அதே போல அவர்களை வசைபாடாதீர்கள்.ஒரு சிலர் வம்பு இழுக்க கூடிய நபர்களாக செயலாற்றினாலும் மன்னித்து விட்டு விடுங்கள்.அதுவும் என்றோ நீங்கள் அவர்களுக்கு இந்த ஜென்மத்திலோ போன ஜென்மத்திலோ தீங்கிழைத்தால்தான் அந்த கர்மத்தினை அனுபவிக்கும் பொருட்டு இது மாதிரி உங்களை அவர்கள் வம்பிழுக்கும் சம்பவங்கள் நடக்கும்.வடநாட்டவர்கள் தங்கள் இல்லத்தில் அவர்களை உதவிக்கு வைத்திருப்பார்கள் அவர்களின் முகத்தில் விழிப்பார்கள் அவர்கள் மூலமாக கூட வியாபாரத்தை தொடங்குவார்கள்.திருநங்கைகள் பிச்சை எடுப்பதாக கருத வேண்டாம் அவர்கள் உங்கள் கர்மாவினை வாங்கி செல்கின்றார்கள் என்று கருதுங்கள் உங்களால் இயன்றால் அவர்களுக்கு ஒரு நல்ல நண்பனாக சகோதரனாக சகோதரியாக நினைத்து பழகுங்கள்.எந்த ஒரு உயிரினம் இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்படுகின்றதோ அவர்கள்தான் கடவுளின் முதல் குழந்தை ஏனெனில் இங்கு புறக்கணிப்படுபவர்கள் அனைவருமே கடவுளின் குழந்தைகள்.திருநங்கைகளில் நிறைய நல்ல குணங்கள் மனங்கள் கொண்ட ஆட்களை சந்தித்திருக்கும் வாய்ப்பு அமைந்திருக்கும்.உங்கள் குழந்தைகளை முக்கியமாக அவர்களின் கைகளில் கொடுத்து கொஞ்ச விடுங்கள் அவர்களின் அனைத்து திருஷ்டியை எடுக்கும் சக்தி இவர்களுக்கு உண்டு.திருநங்கைகள் உண்மையில் இந்த உலகில் வாழும் தேவதைகள் நீங்கள் வரம் வாங்குவதும் பிரபஞ்சம் உங்களை ஆசீர்வதிப்பதும் அவர்கள் கையில் உள்ளது.தொழில் முடக்கம் தொழில் நஷ்டம் தொழில் விரக்தி வருமான தடை உள்ளவர்கள் உங்கள் அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து ஒரு லக்ன நேரமான இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சாப்பாடு விருந்து போட்டு அனுப்பி பாருங்கள்.உண்மையிலேயே மார்வாடிகள் சேட்டுகள் வடநாட்டு இந்தியர்களுக்கு அவர்களின் அருமை தெரியும்.தயவு செய்து அவர்களை பிச்சைக்காரர்களாக கருத வேண்டாம் அது தவறான கண்ணோட்டம்.திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் என்பதை உணருங்கள்.திருமணம் நடக்காதவர்கள் அவர்களிடம் சொல்லி திருமணம் நடக்க ஆசீர்வாதம் வாங்குங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் தடை உள்ளவர்கள் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள் நடக்கும் திருமணம் ஆனவர்கள் கணவனோ மனைவியோ கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டால் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள் தொழில் சிக்கல்கள் தடைகள் உள்ளவர்கள் தொழில் முடக்கம் உள்ளவர்கள் அவர்களிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குங்கள்.திரு என்றால் மகாலட்சுமி நங்கை என்றால் பெண் மகாலட்சுமியின் பெண் திருநங்கைகள் என்பதை உணருங்கள்.ஒரு சில பேர் இந்த சமூகத்தால் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த அந்த இனத்தை கேவலமாக பார்க்காதீர்கள்.திருநங்கைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.திருநங்கைகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் உங்களை ஆசீர்வதிக்கும் புகைப்படத்தை அடிக்கடி பாருங்கள்.அதை நீங்கள் பொதுத்தளத்தில் வெளியிடலாம் ச்சீ என்று மட்டும் அவர்களை பார்த்து சொல்லி விடாதீர்கள் அது மகாபாவம்.திருநங்கைகள் உங்கள் கர்மாவினை குறைப்பதற்கு இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்களை என்பதை உணருங்கள்.திருநங்கைகளை பற்றி இவ்வளவு எழுதுவதற்கு காரணம் இருப்பதிலேயே ரொம்பவும் எளிமையான சக்தி வாய்ந்த பரிகாரம் திருநங்கைகளுக்கு உதவி செய்தல்.திருநங்கைகள் சனியின் காரகத்துவம் புதனின் காரகத்துவம் ராகுவின் காரகத்துவம் கேதுவின் காரகத்துவம் என்று நாடி ஜோதிடத்தில் கூறியுள்ளது.எனவே அவர்களை என்றைக்கும் புறக்கணிக்காதீர்கள்.ஜோதிடத்தில் முழுமூச்சாக இறங்கும் முன்பே அடியேனுக்கு அவர்கள் மீது எப்பொழுதும் ஒரு அன்பு இருக்கும் காரணம் எங்கள் தந்தையார் சொல்லிக் கொடுத்தது திருநங்கைகள் மூன்றாம் பாலினம் என்றாலும் அவர்கள் மிக முக்கியமான ஜீவன்கள்.அவர்களுக்கு காலத்திற்கும் உதவி செய் என்று அப்பா சிறு வயதிலிருந்தே சொல்லி வளர்த்துள்ளார்கள்.ஜோதிடம் பயில்பவர்கள் ஜோதிடம் சொல்பவர்கள் திருநங்கைகளிடம் ஆசீர்வாதம் வாங்கி பாருங்கள்.இந்த உலகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே அவர்களுக்குதான் முதலில் தெரியும் ஆனால் வெளியே சொல்ல மாட்டார்கள்.உங்களால் முடிந்தால் அவர்களை கடவுளாக கருதுங்கள் அப்படியில்லையென்றாலும் ஒரு உயிராக கருதுங்கள் என்றென்றும் இழிந்து பேசி விடாதீர்கள்.நீங்கள் அப்படி பேசியிருந்தால் மானசீகமாக மன்னிப்பு மனதளவில் கேட்டுக் கொள்ளுங்கள்.திருநங்கைகள் என்ற தேவதைகளுக்கு இந்த பதிவினை சமர்ப்பணம்  ஜென்ம சாபல்யம் அடைவார் என்று அர்த்தநாரீஸ்வரர் சமிக்ஞை கொடுத்துள்ளார்.

*கொல்லூர் மூகாம்பிகை பற்றிய தகவல்கள்*

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


*கொல்லூர் மூகாம்பிகை பற்றிய தகவல்கள்*
மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
2. கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி செய்கிறார்கள்.
3. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
4. கலைஞர்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் கலைப்பயணத்தில் முழுமையான வெற்றி அடைய தங்கள் கலைப்பணியை அன்னை மூகாம்பிகைக்கு அர்ப்பணித்து தொடங்க வேண்டும் என்பது ஐதீகமாகும்.
5. அனைத்து ஆலயங்களிலும் மூல விக்கிரகம் கல்லால் அமைந்திருக்கும் அல்லவா? ஆனால், மூகாம்பிகை அம்மனின் ஆலயத்தில் மட்டும் மூல விக்கிரகம் பஞ்சலோகத்தால் ஆனது.
6. அம்பாள் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம் ஆதி சங்கரர் தன் மனக்கண்ணில் இருந்த அம்மன் திருவுருவத்தை விஷ்வகர்மாக்களிடம் விளக்கி அவ்வாறே பஞ்சலோகத்தில் செய்யச் சொன்னார். அந்த ஐம்பொன் விக்கிரகமே இன்றும் ஆலயத்தில் அலங்கார தேவதையாக உள்ளது.
7. மூகாம்பிகை அம்மனின் விக்கிரகத்திற்கு பக்தர்கள் புடவை சார்த்துதல் உண்டு. ஆனால், இந்த புடவை சாத்தும் போது தூய பட்டினாலான புடவையை மட்டுமே அம்பாளுக்கு கட்டுவார்கள். ஏனைய புடவையை அம்பாளின் மீது போர்த்தி விடுவார்கள்.
8. அம்பாளுக்கு துளசி மற்றும் பிச்சிப்பூவால் ஆன மாலையையும் அணிவிக்கிறார்கள். தமிழகத்தில் தேன்பூ என்று வழங்கப்படும் சிகப்பு நிறத்தில் கொத்து கொத்தாக உள்ள இந்த காட்டு மலர்களினால் ஆன ஆரத்தை விசேஷமானது என்று அணிவிக்கிறார்கள்.
9. அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் சுயம்பு லிங்கத்திற்கே பிரதானமாக செய்யப்படுகிறது. மேலும் தங்க ரேகையை அனைவரும் எல்லா நேரங்களிலும் பார்க்காதபடி தங்க கவசம் கொண்டும் மூடப்பட்டுள்ளது.
10. மகாபூஜை செய்பவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தங்க ரேகைக்குரிய பூஜைகள் செய்பவர்களுக்கு உச்சி நேரத்தில் லிங்கத்தின் தங்கக்கோட்டை சூரிய ஒளியை கண்ணாடி மூலம் கர்ப்பக்கிரகத்தில் பிரதிபலித்து தங்க ரேகையை காட்டுவது வழக்கமாகும்.

11. கொல்லூர் கோவில் பூசாரிகளை புரோகிதர்கள் என்றே அழைக்கின்றனர். கோவிலின் அனைத்து தேவைகளும், சேவைகளும் இவர்களாலேயே நடைபெறுகிறது.
12. இந்த ஆலயத்தின் பூஜை முறைகள் சிருங்கேரி மடத்தை அனுசரித்துள்ளது.
13. சுயம்புலிங்கத்தின் ரேகையின் விசேஷம் என்னவென்றால் இது நெற்றிக்கு இடுகின்ற கீற்று சந்தனம் போன்று இருப்பதும் லிங்கத்தின் உச்சியை வலப்புறம் பெரிதாகவும் இடப்புறம் சிறிதாகவும் பிரிக்கின்ற அழகே ஆகும்.
14. சிறிய உட்பிரகாரத்தைக் கொண்ட ஆலயமான தேவியின் திருச்சன்னத்தியில் அடுத்து வருகின்ற பக்தர்களும் தரிசிக்க ‘வேகமாக போங்கள்’என்று சொல்லும் போது சில பக்தர்களுக்கு தாங்கள் தொலைத்தூரத்தில் இருந்து வந்து மிக சொற்பமான நேரம் அம்மனை தரிசிக்கின்றோமே என்ற மனவருத்தம் அடைகின்றனர்.
15. அம்மனைத்தரிசிக்க வரு பவர்கள் இயன்ற வரை ஒரு நாளாவது முழுதாக தங்கி ஆலயத்திலேயே அதிக நேரம் இருந்து வரிசையில் பலமுறை நின்று நித்திய பூஜைகள் அனைத்தையும் கண்குளிரக் கண்டு மூகாம்பிகையின் அருளைப் பெறுதல் வேண்டும்.
16. பக்தர்கள் தங்கள் கோத்திரம், குடும்பத்தில் உள்ள அனைவருடைய நட்சத்திரம், பெயர்கள் ஆகியவற்றை கூறி சங்கல்பம் செய்து கொள்வது மற்ற ஆலயங்களில் இல்லாத ஒன்றாகும்.
17. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை போன்றவை மட்டுமே இந்த மூகாம்பிகைக்கு செய்யப்படுகின்றன.
18. கிரகண நேரத்திலும் கருவறை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும் திருத்தலம் இது.
19. மூகாம்பிகையை பூஜிக்க பிரம்மச்சாரிகள் அனுமதிக் கப்படுவதில்லை
20. அக்னி தீர்த்தம், காசி தீர்த்தம், சுக்ல தீர்த்தம், மது தீர்த்தம், கோவிந்த தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம் ஆகியவை இத்தல தீர்த்தங்கள்.

21. இத்தலத்தில் தேவிக்கு எடுக்கும் விழாவில் மூகனும் கொண்டாடப்படுகிறான்.
22. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகையின் சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி கருவறையிலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள்.
23. மூகாம்பிகை தேவி கலைமகள் அம்சமாகத் திகழ்வதால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க அம்பிகையை பிரார்த்தனை செய்து கலாரோகணம் எனும் துதியை பாடுகிறார்கள்.
24. மூகாம்பிகை ஏவல், பில்லி, சூன்யம், துஷ்ட தேவதைகளால் வரும் துன்பங்கள், சாபத்தால் தோன்றும் கோளாறு, தடை அனைத்தையும் தவிடு பொடியாக்கும் சர்வ வல்லமை படைத்தவள்.
25. அனைத்து மதத்தினரும் வழிபடும் அற்புததேவி இந்த மூகாம்பிகை. திப்பு சுல்தான் இங்கு வந்தபோது இஸ்லாமிய முறைப்படி சலாம் செய்தார். இன்றும் சலாம் மங்களாரத்தி இத்தலத்தில் பிரசித்தம்.
26. மூகாம்பிகை தேவிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அலங்காரம் செய்யப்படுகிறது.
27. வெள்ளிக்கிழமை ஆலயத்தில் உள்ள 1008 தீபங்கள் கொண்ட மரவிளக்கு தீபங்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் கருவறை முழுவதும் தீபங்கள் ஏற்றப்படும்.
28. மூகாம்பிகை தேவியின் மந்திரத்தில் வாக்பவ பீஜமான ‘ஜம்’. நான்கு முறை இடம் பெற்றுள்ளது. இது அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் சதுர்வித புருஷார்த்தங்களையும் பக்தர்களுக்கு தரும் என்பதை குறிக்கிறது.
29. மூகாம்பிகையின் பாதங்களில் அர்ச்சனை செய்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்வதால், நான்முகன் நம் தலையில் எழுதிய கெட்ட எழுத்தும் குங்கும மகிமையால் அழிந்து விடுமாம்.
30. பூர்வ புண்ணியம் மேலோங் கப் பெற்றவர்கள் மற்றும் தம் வல்வினை நீங்கும் காலம் நெருங்கிய வர்களே கொல்லூர் சென்று அங்கே கோலோச்சும் மூகாம்பிகையை தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

31. மூகாம்பிகை கருவறைக்குள் நுழையும் ஆண்கள் மேல் சட்டை அணிந்திருக்கக்கூடாது என்ற கேரள வழக்கம் இங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.
32. அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம், அன்று ஆதி சங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்றும் கூட சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது.
33. அன்னைக்குப் போரில் உதவிபுரியப் படைக்கப்பட்ட வீரபத்திரர், இந்த சேத்திரத்திற்கு ரட்சாதிகாரியாக வழிபடப்படுகிறார்.
34. மூகாம்பிகா ஆலயத்தில் தினசரி மதியம் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் அன்னதானம் உண்டு.
35. சத்ருவை அழித்த அன்னையின் சக்தி இங்கு மிகுந்திருப்பதால், சத்ருக்களால் எந்த ஆபத்தும் வராமல் இருக்க இங்கு ஏராளமானவர்கள் சண்டிஹோமம் செய்கிறார்கள்.
36. மூகாம்பிகை ஆலயத்தில் 2 விதமான பூஜைகள் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று பலிபீட பூஜை. மற்றொன்று விஜய் யக்ஞ சாஸ்திர பூஜையாகும்.
37. திருப்பதி, திருவண்ணாமலை தலங்களில் பல்வேறு திருப்பணிகள் செய்துள்ள விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கொல்லூர் மூகாம்பிகைக்கும் நிறைய சேவை செய்துள்ளார். மூகாம்பிகைக்கு தங்கத்தால் முகக்கவசம் செய்து கொடுத்தது அவர்தான்.
38. கொல்லூரில் புனித தீர்த்தமாக உள்ள சவுபர்ணிகா நதியில் 62 வகை மூலிகைகள் கலந்து வருவதாக சொல்கிறார்கள். எனவே அந்த நதியில் நீராடினால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சிப்பெறும்.
39. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் பக்தர்கள் 64 விதமான, வித்தியாசமான பூஜைகள், சேவைகளில் பங்கேற்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
40. தினமும் இத்தலத்தில் சண்டிஹோமம் நடத்தப் படுகிறது. கட்டணம் ரூ.8 ஆயிரம்.

41. கர்நாடகா மாநிலத்தில் உள்ள 7 முக்தி தலங்களில் கொல்லூர் மூகாம் பிகை ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.
42) மூகாம்பிகை ஆலயத்துக்கு, “அறிவுக்கோவில்” என்ற பெயரும் உண்டு.
43. ஆண்கள் கால்சட்டை, பெர்முடாஸ், தொப்பி, லுங்கி போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொல்லூர் ஆலயத்துக்கு வரும் ஆண்களில் 90 சதவீதம் பேர் வேட்டி அணிந்தே வருகிறார்கள்.
44. கர்ப்பமான பெண்கள் 7 மாதம் கடந்த பிறகு ஆலயத்துக்குள் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
45. குழந்தை பெற்ற பெண்கள் 11 நாட்கள் கழித்தே ஆலயத்துக்கு வரவேண்டும் என்று விதி வகுக்கப்பட்டுள்ளது.
46. சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் மூகாம்பிகை ஆலயம் திறந்து இருக்கும். லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
47. கர்நாடகா முன்னாள் முதல்&மந்திரி குண்டுராவ் கொடுத்த வெள்ளி வாளும் இங்கு உள்ளது.
48. ஆடி, அஷ்டமி திதியில் வரும் ரோகிணி நட்சத்திரத்தன்று உற்சவத்திருமேனியை சுக்கில தீர்த்தத்திற்கு எடுத்துச் சென்று நீராடுவார்கள்.
49. முதன் முறையாக திருக் கோவிலுக்கு வருபவர்கள் தாம் தங்கிய இல்லத்தின் அர்ச்சகருடன் சவுபர்னிகா ஆற்றுக்குச் சென்று அவர் கூறும் மந்திரங்களை கூறி ஆற்றில் நீராட வேண்டும். இதற்கு “சங்கல்பஸ்நானம்” என்று பெயர்.
50. கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் உள்பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட பெரிய பாம்பு உருவம் சுவரில் பதிக்கப்பட்டு இருப்பதை காணலாம். அதை பக்தர்கள் தொட்டு வணங்கி செல்கிறார்கள். இந்த வழிபாடு ராகு-கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.

51. கொல்லூரில் கடைகள் மிகமிக குறைவாகவே உள்ளன. இதனால் எல்லாக் கடைகளிலும் கூட்டம் காணப்படுகிறது. மதிய நேரங்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் பரிசு பொருட்களை அந்த நேரத்தில் சென்று வாங்கலாம்.
52. கொல்லூர் ஆலயத்துக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலை நேரத்தில் வருவதால் காலை நேர வழிபாட்டுக்கு சுமார் 3 மணி நேரம் ஆகும். ஆனால் மதியம் 3 மணிக்கு நடை திறந்த பிறகு பக்தர்கள் வருகை மிகமிக குறைவாகவே இருக்கும். அப்போது 10 நிமிடங்களில் சாமி தரிசனம் செய்துவிடலாம்.
53. கொல்லூரில் தினமும் பக்தர்கள் எடைக்கு எடை பல்வேறு பொருட்களை தூலாபாரம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் வாழைத்தார்கள் தான் தூலாபாரம் கொடுக்கப்படுகிறது.
54. கொல்லூரில் பக்தர்கள் அம்மனை வழிபட 3 வித வரிசைகள் உள்ளன. 1. இலவச தரிசன வரிசை, 2. ரூ. 100 கட்டண வரிசை, 3. ரூ. 500 கட்டண வரிசை. ரூ. 500 கட்டண வரிசையில் ஒரு டிக்கெட்டுக்கு 2 பேர் செல்லலாம். இரண்டே நிமிடத்தில் அம்மனை பார்த்துவிடலாம்.
55. பிரதான நுழைவு வாயிலில் இரண்டு பெரிய மணிகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. மூகாம்பிகைக்கு பூஜைகள் நடக்கும் போது அந்த மணியை ஒலிக்கச் செய்கிறார்கள். அந்த சத்தம் பிரமாண்டமாக இருக்கிறது.
56. கொல்லூர் தலத்தில் பக்தர்களுக்கு மதியமும், இரவும் இலவச உணவு வழங்கப்படுகிறது.
57. கொல்லூர் மூகாம்பிகை ஆலயம் சார்பில் 9 கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அங்கு ஏழைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது.
58. உறவினர்கள் யாராவது மரணம் அடைந்து இருந்தால் பக்தர்கள் 11 நாட்களுக்கு இந்த ஆலயத்துக்குள் நுழையக்கூடாது.
59. போட்டோ எடுக்க ஆலயத்துக்குள் தடை விதித்துள்ளனர். ஆனால் செல்போனில் பலரும் படம் மற்றும் செல்பி எடுத்தபடி தான் உள்ளனர்.
60. கொல்லூர் ஆலயம் சார்பில் மிகப்பெரிய கோசாலை உள்ளது. அங்கு சுமார் 150 பசுக்கள் வளர்க்கப்படுகின்றன.

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக ்கான முதல் காரணம்.

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்?
உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.
எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா?
மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.
நீங்கள் அணிகிற உடைக்கும், கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா?
‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்
குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும்.
இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்?
ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்க
ுக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்ட
ி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும்.
மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும். விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்வோம்
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் நமது மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுவோம் ஆரோக்கியமாக வாழ்வோம்
நாம் எதை நம்புகிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
*நான்... நான்... நான்...*
*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? அவர் என்ன அவ்வளவுதான்.
*நான்* பெரியவன்,
*நான்* தான் வேலை வாங்கி கொடுத்தேன்,
*நான் நான் நான் நான்* என்று மார்தட்டி கொள்ளுகிறோம்
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா??
*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று நம்மால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருப்போம்.
*உலகைப்பற்றிக்கவலைப்பட வேண்டாம் ஏனெனில் அது இறைவனுக்குரியது.*
*உணவைப்பற்றி கவலைப்பட வேண்டாம் அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*
*எதிர்காலம் குறித்தும் கவலைப்பட வேண்டாம் அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*
நமக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்க வேண்டாம் தாழ்வு மனப்பான்மை வரும்.
நமக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்க வேண்டாம் தலைக்கனம் வரும்.
நம்மை யாரோடும் ஒப்பிடாமல் நாம் நாமாகவே இருப்போம் தன்னம்பிகை வரும்.....

Thursday 18 July 2019

குலதெய்வத்திற்கு

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

குலதெய்வத்திற்கு


.

குலதெய்வத்திற்கு
எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும்...?
எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை பெறுவது அவசியம்.
இவ்வளவு சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.
நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது.
வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கவேண்டும் தடைகள் நீங்கவேண்டும் என்று நினைத்தால், நாம் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றுவது சகலவித நன்மைகளை பெற்றுத் தரும்.
பெரும்பாலும் வீட்டில் விளக்கு ஏற்றும்போது, பித்தளை, வெள்ளி, மண் விளக்குகளை ஏற்றி வழிப்படுவோம்.
ஆனால் குலதெய்வத்திற்கு கண்டிப்பாக மாவிளக்குதான் ஏற்றவேண்டும்.
மாவிளக்கு தயாரிக்க பச்சரிசியை ஊறவைத்து இடித்து அல்லது அரைத்த பின் சலித்து, இதனுடன் வெல்லம் பாகு எடுத்து அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பிசைந்து மாவிளக்கு செய்யலாம்.
இதனுடன் சிறிது நெய் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்த விளக்கை மாதம் வரும் பெளர்ணமி நாள்களில், இல்லை என்றால் வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு வாழை இலையில் மாவிளக்கு ஏற்றி, படையலுடன் வழிபடுவது சிறப்பானது.
இவற்றை இரட்டையாக தீபம் போடுவது நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
அதிலும் பசு நெய் போட்டு ஏற்றுவது உத்தமம். வீட்டில் கணவன்-மனைவி இடையே சண்டை சச்சரவு அதிகம் இருந்தாலும் உடனே தீர்வு உண்டாகும், குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பேர் புகழுடன் செல்வம் உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது.
உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

#சிதம்பர_ரகசியம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


                                                              சிதம்பர_ரகசியம்



பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிறூபித்து காட்டிவிட்டது.


தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...