Thursday 27 July 2017

கும்பாபிஷேகம் விழா பணம் உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி !! நன்றி !! நன்றி !!


ஆத்துப்பொள்ளாச்சி  ஸ்ரீ ஆனந்தாய்பேச்சியம்மன்

மஹா கும்பாபிஷேகம் விழா

                                                                                     திருக்கோவில் 




வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை
உருவ மற்ற தெய்வம் அனைவருக்கும் குலதெய்வம்
எண்ணத்தில் ஆனந்தாய்பேச்சியை நினைத்தாள் எடுத்தகாரியம் வெற்றியாகும்
சாதி,மதம் பேதம் இன்றி குல தெய்வம் தெரியதவர்கெல்லாம் இதுவே குலதெய்வம்



அன்புடையீர்..,

                 
 (நாள்:  ஆவணி 15 வியாழக்கிழமை 31.08.2017) 


பக்த கோடிகளை இறையருட்செல்வர்களே, அருள் நிறைச் சான்றோர்களே, ஆத்துப்பொள்ளாச்சி எழில் தவழ்ந்து கொஞ்சும் நதிசாரலில் பூவும் காவும் விரித்து பொங்கி வரும் ஆழியார் நதிக்கரையில் ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற வண்ணம் உள்ளதால் பக்த கோடிகள் அனைவரும் தங்களால் இயன்ற பொருள் உதவி மற்றும் நிதியுதவி  அளித்தது சக்தி வாய்ந்த ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் அருள் ஆசியனை பெறுப்படி வேண்டி விரும்பி கேட்டுகோள்கிறோம்.



கும்பாபிஷேகம் விழா பணம் உதவி செய்த  நல்ல உள்ளங்களுக்கு 

                                                                            நன்றி !!  நன்றி !!  நன்றி !! 


ஆழிசூழ் உலக மெல்லாம் அமைதிமேவ
ஆகாத பகை யொழிந்து  அன்புண்டாக
ஆராத கவலை பிணி அகன்று போக
ஆக்கமொடு மக்கள் குலம் அழகாய் வாழ
ஆண்டவனை வேண்டுதல் செய்து அருளைநாடி
ஆனந்தாய் பேச்சியம்மன் தவநிலையை அணுகுவோமே


இதுநாள் வரையிலும்இனிமேலும்
அன்னதானம் செய்ப்பவர்க்கு
பொன்னுலகமே பொருந்தும்
நன்மைகள் பல உண்டாகுமே - தருமதேவி
தன்னிடங் குடி இருக்குமே


இச்செய்தி அறிந்து  உதவிகள் செய்தவர்கள் மற்றும்
செய்கின்றாவர்களுக்கும்  

  நன்றி !!  நன்றி !!  நன்றி !! 





வழி தடம்




லட்ச அர்ச்சனை நடைபெறும்


இந்த வருட குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி  

                                                                                          தகவல் தொடர்புக்கு 


9 9 9 4 1 - 5 0 6 5 8

கோபுர தரிசனம்   கோடி புண்ணியம்

கோபுர தரிசனம், பாப விமோசனம்

லட்ச அர்ச்சனை

பிரச்சனைகளை தீர்க்கும் கடன் தொல்லைகள் தீர்க்கும்  
மன நோய் அகற்றும் மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர்  ஒன்று சேர நம் வீட்டில் திருமணம் ஏதாவது பிரச்சினை காரணமாக தடைபட்டுகொண்டே செல்கிறதே இதற்கு தீர்வு  தீரா நோய்கள் தீர்க்கும்  செல்வம் பெற 

சங்கடங்கள் தீர்க்கும்  கல்விச் செல்வம்வழிபட வேண்டிய திருத்தலம்

அற்புத ஆலயம்


உங்கள் பூர்வ ஜென்ம ,கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

Tuesday 18 July 2017

மகா பெரியவாளின்

மகா பெரியவாளின்

குழம்புக்கும் ,ரசத்திற்கும் என்ன வித்தியாசம்?

இரண்டிலுமே பருப்பு ,புளி ,உப்பு,சாம்பார் பொடி,பெருங்காயம் தானே சேர்க்கிறார்கள்.
 என்ற விவாதம் ஒரு சமயம் பெரியவாளின் முன் வைக்கப்பட்டது.அதற்கு நம் குருநாதராகிய மகா பெரியவா அருமையான பதிலை கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அங்கிருந்த பக்தர்கள் "சாம்பாரை முதலிலும்,ரசத்தை பிறகும் சாப்பிடுவதாக தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

இதைக் கேட்டு மகான் பெரிதாக சிரித்தார்.


தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்றுவிட்டதால்,நாம் குழம்பி போகிறோம்.அதாவது சாம்பாரை போல ....


இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல.இவைகளை மறக்கக்கூடாது என்பதற்காகதான் தினமும் குழம்பு,ரசம் வைக்கிறோம்.

விருந்தில் முதலில் குழம்பு,ரசம்,பாயசம்,மோர் என வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?இந்த உணவு கலாச்சாரம் வேறு எங்கேயும்  இல்லை.மனிதன் பிறக்கும்போதே அவன் மனதில் "தான்" என்ற அகங்காரம் இடம் பிடித்து வருகிறது.அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.

இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் குழம்பு  எடுத்து காட்டுகிறது.அது தெளிந்து விட்டால் ரசம் போல் ஆகி விடுகிறது.

இவற்றை தொடர்வது இனிமை,ஆனந்தம்.அவைதான் பாயசம்,மோர் ,பட்சணம்.

இதைப்போல் மனிதனின் வாழ்க்கைக்கும்,சாப்பிடும் சாப்பாட்டிற்கும்  பலவித ஒற்றுமை உண்டு.மோர் தனித்தன்மை வாய்ந்தது.பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது.

பாலிலிருந்து தயிர்,வெண்ணெய்,நெய்,மோர் என்று தொடராக பொருட்கள் நமக்கு கிடைக்கின்றன.மோர்தான் கடைசி நிலை.அதிலிருந்து எதையும் பிரித்து எடுக்க முடியாது.அதனால்தான் பரமாத்மாவைக் கலந்தபின்,மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை இதுபோல் யாரும் சொன்னதே இல்லை.

ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கரா
நடமாடும் தெய்வம் பாதம் சரணம் 

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்..

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்..

மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்....

சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்....

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்...

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்...

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்...

கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்.....

பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்....

இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்....

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து...

பாரதப் போர் முடிந்த

பாரதப் போர் முடிந்த

பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்!
அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.

போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.

தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.

தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.

பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான்.

வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில்

இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன்.

 ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை.

அர்ஜுனன் திகைத்தான்.

'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்.

"அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான்.

அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான்.

"கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?

இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை?

நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன்.

அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார்.

அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.

கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது.

எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.

அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.

படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.

இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன்.

நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன்.

இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய்.

இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.

என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன்.

இருந்தாலும், உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது.

அது தவறு.

இதோ... உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம்

அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான்.

வாழ்க்கை எனும் ரதத்தினில், கடவுளை சரணடைந்தால், இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவியினை கடந்தேற, சாரதி போல் நம்மை நடத்தி செல்வார்

அப்படியில்லாமல் ஏன் எதற்க்கு இப்படி செய்தாய் என அவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் அவனையும் அறிய மாட்டோம் நம்மையும் தெரிந்து கொள்ள மாட்டோம்

அவனை கேள்வியேயில்லாமல் சரண்டைவோம்!!

சர்வம் கிருஷ்ணார்பனமஸ்து!!

வெண்ணை உருக்கக் கூடாது

வெண்ணை உருக்கக் கூடாது

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள். விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும். இடதுபுறமாக வைக்கக் கூடாது.

சுவாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும். நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது. வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

சகல ஐஸ்வரியங்களையும் வாரி வளங்கும் ஸ்ரீசம்பத்கணபதி பிரியமான 21அதிலென்ன சிறப்பு?

சகல ஐஸ்வரியங்களையும் வாரி வளங்கும் ஸ்ரீசம்பத்கணபதி பிரியமான 21அதிலென்ன சிறப்பு?

கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்...ணிக்கையில் இருக்க வேண்டும் என்பர். அதிலென்ன சிறப்பு?

ஞானேந்திரியங்கள்-5, கர்மேந்திரியங்கள்-5; அவற்றின் காரியங்கள்-5+5=10; மனம்=1. ஆக மொத்தம் 21. விநாயகரை பூஜிக்கும்போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால் பலனில்லை. இதை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கை.

மலர்கள் 21: புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, தும்பை, அரளி, ஊமத்தை. சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி.

அபிஷேகப் பொருட்கள் 21: தண்ணீர், எண்ணெய், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, குங்குமம், பன்னீர்.

இலைகள் 21: மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, , மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு.ஜன்பகப்பூ

நிவேதனப் பொருட்கள் 21: மோதகம், அப்பம், அவல், பொரிகடலை, கரும்பு, சுண்டல், சுகியன், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், நாவற்பழம், எள்ளுருண்டை, வடை, அதிரசம்

குறைத்து மதிப்பிடக்கூடாது

 குறைத்து மதிப்பிடக்கூடாது

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா?
ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.
பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.
“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே; எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும், “எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.
(ஆபரணங்கள் பேசுமா என்று நினைக்கவேண்டாம். பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணிகலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு. திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது. சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது. திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது. சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது. பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார். பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார். திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார். கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.)
கதைக்கு வருவோம்….
பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.
அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன். உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.
சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.
தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான். மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார். “உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.
இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.
இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’ ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.
மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.
இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.
காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம். அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும். 

Friday 14 July 2017

வாழத் தெரிவதும் இல்லை..!

 வாழத் தெரிவதும் இல்லை..!
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

 நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.. அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை..

 நோய் வரும் வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!

 பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல...!

 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..! உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!

 பிச்சை போடுவது கூட சுயநலமே... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

 வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. அதற்கு அவமானம் தெரியாது.. விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!

 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்". வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

 திருமணம் - ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்.. ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது..!!

 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
 
 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
 
 நேர்மையாக சம்பாரித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
 
 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..!
     பகலில் தூக்கம் வந்தால், உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!! இரவு தூக்கம் வரலைனா, மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!

 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.. கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
 
 மனைவி வழியில் பிடிங்கியதை மகள் வழியில் பறிகொடுப்பாய்.. இப்படிக்கு வரதட்சணை!
 
 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது...

சித்திரை நட்சத்திர வடிவம்

சித்திரை நட்சத்திர வடிவம்

சித்திரை நட்சத்திர வடிவம் - ஸ்வஸ்திகா
==================================

ஸ்வஸ்திகா என்பது சித்திரை நட்சத்திர வடிவம் ஆகும். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த விநாயகருக்கு அவரது கையில் (ஹஸ்தத்தில்) ஸ்வஸ்திகா வடிவம் வரையப்படுகிறது. ஹஸ்தம் என்றல் சமஸ்கிருதத்தில் உள்ளங்கை என்று பொருள். சித்திரை நட்சத்திரத்தின் வானியல் பெயர் Spica ஆகும். இந்த நட்சத்திரம்  சுபர்சவநாதர் என்ற சமண சமயத்தின்மதபோதகர் பின்பற்றியது என்ற கூற்றும் உண்டு. இவர் ஏழாவது சமண சமய அருகன் (தீர்த்தங்கரர்) ஆவார். சமண சமய சின்னங்களில் ஸ்வஸ்திகா வடிவத்திறக்கு தனி இடம் உண்டு.        

சுபர்சவநாதர் என்ற அருகன் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரது நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரங்கள் பின்வருமாறு கேட்டையின் ஆறாவது நட்சத்திரம் அவிட்டம், பதினைந்தாவது நட்சத்திரம் மிருகசீரிடம் மற்றும் இருபத்துநான்காவது நட்சத்திரம் சித்திரை ஆகும். ஸ்வஸ்திகா என்ற சித்திரை நட்சத்திர வடிவத்தை இந்த சமண சமய  அருகன் பயன்படுத்தி புகழ் பெற்றார். ஏற்கனவே கூறியது போல் சம்பத்து அல்லது பரம மித்திர நட்சத்திர வடிவம் தான் அருகில் இயற்கையாக அமையப்பெறாதவர்கள், சாதக நட்சத்திரம் பயன்படுத்தி நலம் பெறலாம்.

ஹிட்லர் பூராடம் நட்சத்திரம் அவரது நட்சத்திரத்திற்கு செம நட்சத்திரம் சித்திரை ஆகும். எனவே இவருக்கு இந்த சித்திரை நட்சத்திர ஸ்வஸ்திகா வடிவம் பல வெற்றியை பெற்று கொடுத்தது.

ஸ்வஸ்திகா நலம் தரும் நட்சத்திரங்கள்
===================================

ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி - வளம் தரும்

சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் - தைரியம் தரும்

கேட்டை, ஆயில்யம், ரேவதி - சாதக சூழல் தரும்

பூராடம், பூரம், பரணி - நலம் தரும்

ஸ்வாதி, திருவாதிரை, சதயம் - வழிகாட்டியாய் அமையும் 

ஞானப் புதையல் ஆன்மாவின் அனுபவங்கள்

🔥 *தினம் ஒரு ஞானப் புதையல் :* 🔥S

*22 . ஆன்மாவின் அனுபவங்கள் !*


🍁 கையில் வில்லோடும் அம்போடும் கானகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான் அர்ஜுனகன் என்ற வேடன். விலங்குகளை வேட்டையாடு வதே அவன் தொழில்.  ஆனால், அன்று மாலைக்குள் தன் வாழ்வே முற்றிலுமாக மாறப் போகிறது என்பதோ, வேட்டைத் தொழிலையே தான்  கைவிடப் போகிறோம் என்பதோ  அப்போது அவனுக்குத் தெரியாது.

🍁 கால்வீசி நடக்கும் போது தன் கையிலிருந்த வில்லைப் பிரியமாக முத்தமிட்டுக் கொண்டான் அவன். தன் தொழிலுக்கான  கருவியாகிய வில்லின் மேல் அத்தனை நேசம் அவனுக்கு.

🍁 இப்போது எந்த வில்லை முத்தமிடுகிறானோ அந்த வில்லை விரைவில் ஒடித்துப் போடப் போகிறானே இவன் என்றெண்ணிக் காலம் தனக்குள்  நகைத்துக்  கொண்டது. அப்போது தான் கானகம் தொடங்கும் பகுதியில்  அந்தக் குடிசையைப் பார்த்தான் வேடன்.

🍁 ஆடம்பரமில்லாத எளிய குடிசை. அதைச் சுற்றிலும் ஒரு  புனித ஒளி பரவியிருந்தது. யாரோ ஆத்மஞானம் நிறைந்த ஒருவர் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்கள் இருக்கும் பிரதேசத்தைச்  சுற்றி த்தான் இத்தகைய ஒளி பரவும் என்பதை அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

🍁 குடிசையில் வசிப்பவர் யார் என்றறியும் ஆவலோடு உள்ளே எட்டிப் பார்த்தான்.

🍁 குடிசையில் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். கருணை, மன நிறைவு முதலிய நற்குணங்களெல்லாம் அவள் முகத்தில் சோபையாய்ப்  படர்ந்திருந்தன. அவளைத் தரிசிப்பதே புண்ணியம் என்று தோன்றியது. வேடன் அவளை நமஸ்கரிக்கும் எண்ணத்தோடு குடிசையின் உள்ளே நுழைந்தான்.  அப்போதுதான் அவளருகே கிடத்தப்பட்டிருந்த ஒரு சிறுவனின் பிரேதம் அவன் கண்ணில் பட்டது.

🍁 அவன் மனம் திடுக்கிட்டது. *‘‘தாயே ! இந்தச் சடலம்  யாருடையது ? இந்தச் சிறுவன் இறந்து எத்தனை காலமாகிறது ? தாங்கள் யார் ?”*

🍁 சலனமற்ற முகத்தோடு வேடனைப் பார்த்த அவள் பேசலானாள்: *‘‘வேடனே ! என் பெயர் கௌதமி. இதோ கிடத்தப்பட்டிருக்கும் சிறுவனின் தாய் நான். திடீரென்று  என் மகன் இறந்துவிட்டதால் அடுத்து என்ன செய்வதென யோசித்துக் கொண்டிருக்கிறேன்.’’*

🍁 *சொந்த மகன் இறந்திருக்கும் போதும் அழாமல் யாருக்கோ நேர்ந்த  துயரம்போல் தன் துயரத்தையே வேடிக்கை பார்த்தவாறிருக்கிறாளே ! உண்மையிலேயே மகத்தான மன உரம் படைத்தவள்தான் ! ‘‘தாயே ! இவன் காலமாகி  எத்தனை நேரமாயிற்று ? காலமானது எப்படி ?’’*

🍁 *‘‘இவன் உயிர் பிரிந்து மிகச்சில கணங்கள்தான் ஆகியிருக்கின்றன. ஒரு பாம்பு திடீரென்று ஊர்ந்து வந்து இவனைக் கடித்துவிட்டுச் சென்றுவிட்டது. நான் இவன்  இறந்ததை நம்ப இயலாமல் திகைத்துப்போய் அமர்ந்திருக்கிறேன். சென்ற கணம் இருப்பவர்கள் இந்தக் கணம் இல்லை என்பார்களே, அது எத்தனை உண்மை  என்றெண்ணி வியப்பில் ஆழ்ந்திருக்கிறேன்.’’* கௌதமியின் பேச்சைக் கேட்டு வேடன் மனம் பதைபதைத்தது. எத்தனை கொடிய செயலைச் செய்துவிட்டு ஓடி  மறைந்திருக்கிறது பாம்பு. அதைச் சும்மா விடக் கூடாது.

🍁 சடாரென்று குடிசைக்கு வெளியே வந்த வேடன் கூர்மையான பார்வையோடு சுற்றுமுற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் ஒரு பாம்பு வேகமாக ஊர்ந்து  சென்று கொண்டிருந்தது. இதுதான் சிறுவனைக் கடித்த பாம்பாக இருக்க வேண்டும். ஓடிச்சென்று பாம்பைக் கையிலெடுத்தான். புடலங்காயைப் போல், பாம்பின்  கழுத்தை இறுகப் பற்றித் தொங்க விட்டவாறே குடிசையை நோக்கி நடந்தான். தன்னை ஒருவர் இப்படிப் பாய்ந்து பிடித்துவிடலாம் என்று இதுவரை அறிந்திராத  பாம்பு, வேடனின் அசாத்தியமான துணிச்சலை எண்ணி வியந்தது.

🍁 இனி அவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்றும் கவலை கொண்டது. வேடன் நேரே கௌதமியின் முன் போய் நின்றான். *‘‘தாயே! உங்கள் மகனைக்  கொன்ற பாம்பு இதுதான். இதை நெருப்பில் போடலாமா, கல்லால் அடித்துக் கொல்லலாமா? எப்படி இதைக் கொல்ல வேண்டும் எனக் கட்டளையிடுங்கள்.  அதன்படிச் செய்கிறேன்.’’* வேடனின் பேச்சைக் கேட்ட கௌதமி அனலில் பட்ட புழுப்போல் துடித்தாள். *‘‘என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? இந்தப் பாம்பைக்   கொல்வதால் என்ன பயன்?*

🍁 *என் மகன் இறக்க வேண்டும் என்பது விதி. அதன்படி இறந்தான். மனிதர்கள் வாழ்வு அவரவர் விதிப்படியே நிகழ்கிறது. இறந்த என் மகன் இந்தப் பாம்பைக்  கொன்றால் மீண்டு வரப்போகிறானா ? அப்படியிருக்க இந்தப் பாம்பு இறப்பதால் நான் அடையப்போகும் நன்மை என்ன ? உயிர்க்கொலை பாவம். பாம்பை  விட்டுவிடு !’’* கௌதமியின் பேச்சைக் கேட்டு வேடன் திகைத்தான். அவளது உத்தமமான மன நிலையைப் புரிந்துகொண்டாலும் அவள் சொல்படி நடக்க  அவன்  தயாராயில்லை.

🍁 *‘‘நீங்கள் என்ன சொன்னாலும் சரி. நான் இந்தப் பாம்பைக் கொல்லத்தான் போகிறேன்.  உயிர்க்கொலை பாவம் என்கிறீர்கள். அப்படியானால் உங்கள் மகனைக் கொன்ற இது பாவம் தானே செய்திருக்கிறது ? அந்தப் பாவத்திற்குத் தண்டனையாக இதை  நான் கொல்வதே சரி.’’*

🍁 *‘‘யார் செய்த பாவத்திற்கும் தண்டனையைத் தரும் உரிமை நமக்கில்லை வேடனே ! எது பாவம் என்பதை அறியும் தகுதி கூட  நமக்கில்லை. தண்டனையை தெய்வம்தான் தரும். மனிதர்கள் அந்த உரிமையைக் கையிலெடுத்துக் கொள்ளக் கூடாது. எது நடந்தாலும் தெய்வ சித்தம் என   ஏற்பதே நல்லது ! பாம்பை விட்டுவிடு !’’*

🍁 *‘‘தாயே! உங்கள் மகனைக் கொன்றதுபோல் இது இன்னும் எத்தனை பேரைக் கொல்லுமோ! இந்த ஒரு பாம்பைக் கொல்வதன் மூலம் இதனால் எதிர்காலத்தில்  கொல்லப்படவிருக்கும் அத்தனை பேரையும் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு வந்து சேரும். எனவே பாம்பைக் கொல்வதற்குத் தடை சொல்லாதீர்கள்.’’*

🍁 *‘‘பாம்பின் சுபாவத்தை இறைவன் அல்லவோ படைத்தான்? அது பற்றி விமர்சிக்க நாம் யார்? நீ நினைப்பதுபோல் ஏராளமான பேரை இது கொல்வதற்கு முன்  சீக்கிரத்திலேயே தானாகவே இதன் உயிர் போகலாம்.*

🍁 அல்லது இதன் விரோதியான கழுகு இதைக் கொத்தித் தின் று விடலாம். இதுபோன்ற ஆராய்ச்சிகள் தேவையில்லாதவை. என் கண்ணெதிரே ஓர் உயிரை நீ  கொல்வதை நான் அனுமதிக்க இயலாது.  வேடனே! பாம்பை விட்டுவிடு!’’ இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பாம்பு பேசத் தொடங்கியது.

🍁 ‘‘முதலில் என் கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கும் உன்  கைப்பிடியைச் சற்றுத் தளர்த்து!’’ என வேடனைக் கேட்டுக் கொண்டது. வேடன் கைப்பிடியைத்  தளர்த்தியதும் அது தொண்டையைச்  சரிசெய்துகொண்டு பேசலாயிற்று:

🍁 ‘‘நான் எங்கே சிறுவனைக் கொன்றேன்? இந்தச் சிறுவனின் பால்வடியும் முகத்தைப் பார்த்ததும் இவனைக் கொல்லவேண்டியிருக்கிறதே என்று நான்  தயங்கினேன் என்பதே உண்மை. ஆனால் நான் என்ன செய்வது? எமன் எனக்கிட்ட கட்டளை அப்படி! உன்னைப் போல் எமனும் ஒரு வேடன். உயிர்  வேட்டையாடும் வேடன். எய்தவன் அவன் என்றால் நான் அம்பு. அவ்வளவே ! எய்தவன் இருக்க நீ அம்பைக் குறைசொல்வது என்ன நியாயம் ?

🍁 அப்பாவியான ஒரு  மானை நீ கொன்றால், உன்னைத் தண்டிக்க வேண்டுமா, இல்லை உன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைத் தண்டிக்க வேண்டுமா?

🍁 தண்டிப் பதானால் எமனையல்லவா நீ தண்டிக்க வேண்டும்?’’ வேடன் கடகடவென நகைத்தான்.

🍁 ‘‘பாம்பே! சாமர்த்தியமாக வாதிடு கிறாய். எமன் என்முன்  வரமாட்டான், எமனைத் தண்டிப்பது இயலாது  என்பதால் தானே, இப்படி வாதம் செய்து தப்பிக்கப் பார்க்கிறாய்? என் அம்பு உயிரில்லாத ஜடப்பொருள். ஆனால்,  எமனின் கருவியாக வி ளங்கிய நீ உயிருள்ள ஜந்து. எனவே, உன்னைத் தண்டிப்பேன். உன் உயிரை எடுப்பேன். இப்போது எமனின் கருவியாக நான்  இருப்பதாகவும்  எமன் கட்டளைப்படியே நீ கொல்லப்படுவதாகவும் எண்ணிக் கொள்!’’

🍁 அப்போது திடீரென அந்தக் குடிசைக்குள் ஓர் ஒளிவெள்ளம் தோன்றியது. அதிலிருந்து எமதர்மராஜன் வெளிப்பட்டான். கௌதமியும் வேடனும் எமனைக் கைகூப்பி  வணங்கினார்கள்.

🍁 ‘‘வேடனே! நான் வெளிப்படையாகத் தோன்ற மாட்டேன் என நீயாக ஏன் நினைக்கிறாய்? இதோ நான் வெளிப்பட்டிருக்கிறேன். பூமியில்  மதுவாகவும், போதைப் பொருட்களாகவும் பல மாறுவேடங்களில் நான் உலவுகிறேன். மக்கள் அதனால் தான் என்னை அடையாளம் காண் பதில்லை.  அதனாலேயே என்னிடம் சிக்கி அவதிப்படுகிறார்கள்.

🍁 இந்தப் பாம்பு சொன்னதை நான் கேட்டேன். இது சொன்னது அத்தனையும் உண்மைதான். இந்தச் சிறுவனைக் கடிக்குமாறு இதன் மனத்தில் புகுந்து தூண்டியவன்  நான்தான். என் கட்டளைப்படியே இது இயங்கியது. எனவே, இதைத் தண்டிக்காமல் என்னைத் தண்டிப்பதே நியாயம்.

🍁 ஆனால், உண்மையைச் சொல்லப்போனால்  என்னைத் தண்டிப்பதும் ‘‘நியாயமல்ல.’’‘‘ஏன் அப்படி?’’ வேடன் திகைப்போடு கேட்டான்.‘‘யோசித்துப் பார். என்னைப் போன்ற தேவர்களைத் தரிசிக்கும் பாக்கியம்  உனக்குக் கிட்டுமா? இதோ இந்த கௌதமிக்கு அத்தகைய பாக்கியம் கிட்டக்கூடும்.

🍁 ஏனெனில் அவள் ஆத்ம ஞானி. ஆனால், உனக்கு ஏன் கிட்டியது? நீ இந்தப் பிறவியில் வேடனாக இருந்தாலும், பூர்வ ஜன்மத்தில் புண்ணியங்கள்  செய்திருக்கிறாய். அதோடு இப்பிறவியில் ஆத்ம ஞானியான கௌதமியைத் தரிசித்திருக்கிறாய். அவளது துயரம் என்று நீ கருதிய ஒரு துயரத்தை உன்  துயரம்போல் காணும் அன்பு மனமும் உனக்கிருக்கிறது. இதெல்லாம் சேர்ந்தல்லவா உனக்கு என்னை தரிசிக்கும்  பாக்கியத்தைத் தந்தது? எனவே, பூர்வ  ஜன்மங்களிலும் இந்தப் பிறவியிலும் செய்த செயல்களின் எதிர்ச் செயல்களாகவே ஓர் ஆன்மா தன்  வாழ்வில் பல்வேறு அனுபவங்களை அடைகிறது என்பதைப்  புரிந்துகொள்.

🍁 இந்தச் சிறுவன் இந்தக் கணத்தில் இறக்க வேண்டும் என்பது  காலதேவன் விதி. நீ சரியான நபருக்குத் தண்டனை தர வேண்டுமானால் என்னை இயக்குபவரும்  என் தலைவருமாகிய கால தேவருக்குத் தான் தண்டனை தர வேண்டும்!’’ எமன் இதைச் சொன்ன மறுகணம், குடிசைக்குள் மற்றோர் ஒளிவெள்ளம் தோன்றியது.

🍁 அதனுள்ளிருந்து காலதேவர் வெளிப்பட்டார். எமன், கௌதமி, வேடன் மூவரும் காலதேவரைப் பணிந்தார்கள்.

🍁 காலதேவர் பேசலானார். ‘‘உண்மையில்  தண்டிக்கப்பட வேண்டியது நானுமல்ல. சிறுவனைக் கொன்றது நானல்ல.

🍁 சிறுவனின் கர்ம வினையே அவனைக் கொன்றது. ஒவ்வோர் உயிரும் அதனதன் விதியை அதுவே தீர்மானித்துக் கொள்கிறது. ஒரு செயலைச் செய்தால் அதற்கு  எதிர்ச்செயல் என்ற ஒன்று கட்டாயம் உண்டு. செய்யப்பட்ட அந்தச் செயல் முன் ஜன்மத்தில் செய்ததாகவும் இருக்கலாம். இந்தப் பிறவியில் செய்ததாகவும்  இருக்கலாம். செயலின் விளைவு உடனுக்குடனேயும் நேரலாம். ஒரு பிறவி தாண்டி மறுபிறவியிலும் நேரலாம். இந்தச் சிறுவனின் மரணத்திற்கு இவன்  முற்பிறவியில் செய்த வினைகளே காரணம்.

🍁ஏதொன்றும் அறியாத ஓர் அப்பாவி உயிரை இவன் தன் முற்பிறவியில் கொன்றதால், இப்பிறவியில் இந்தப் பாம்பால் கொல்லப்பட்டிருக்கிறான். கர்ம  வினைப்படியே வாழ்வில் பலாபலன்கள் நேர்கின்றன என்ற பேருண்மையைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் கௌதமி. அதனால்தான், மகன் மரணம் கூட  அவளிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தன் மகனைக் கொன்ற பாம்பைக் கொல்வதையும் அவள் அனுமதிக்க வில்லை.’’

🍁 காலதேவரின் விளக்கத்தைக் கேட்ட  கௌதமி பேசலானாள்: ‘‘வேடனே! பாம்பை விடுதலை செய்துவிடு! என் கர்ம வினைகளின் காரணமாகவே இந்தச் சிறுவன் எனக்கு மகனாகப் பிறந்தான்.

🍁 என் கர்ம வினைகளின் காரணமாகவே இவனை நான் இழக்கவும் நேர்ந்துள்ளது. இதெல்லாம் தேவ ரகசியங்கள். இவற்றை ஓரளவு நான் அறிந்திருப்பதாலேயே  என் மகன் மரணம் விதிப்பயன் என நான் ஆறுதல் அடைந்தேன். எந்தச் செயலுக்காகவும் யாரும் யாரையும் நொந்து கொள்வதில் பயனில்லை. நடக்கும்  அனைத்திற்கும் அவரவர் விதியே காரணம். நாம் யாரையும் கொல்லாமல் இருந்தால் நாமும் யாராலும் கொல்லப்படாமல் இருப்போம். நாம் யாரையும்  துன்புறுத்தாமல் இருந் தால் நாமும் யாராலும் துன்புறுத்தப்படாமல் இருப்போம்.

🍁 இயற்கையின் நியதிகள் நுணுக்கமானவை. ஆனால், நம் விதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடமே தரப்பட்டுள்ளது. நாம் நல்லதைச் செய்தால் நமக்கு  நல்லதே நடக்கும். இந்த மகா சத்தியத்தை உணர்பவர்கள் பாக்கியசாலிகள்.’’

🍁 இந்த வாக்கியங்களைக் கேட்ட வேடன், ‘‘அப்படியானால் இனி நான் எந்த  உயிரையும் கொல்ல விரும்ப வில்லை!’’ என்றவாறே தன் வில்லை ஒடித்துப் போட்டான். எமனும் கால தேவரும் புன்முறுவல் பூத்தவாறே அவர்களுக்கு  ஆசிகூறி மறைந்தார்கள். வேகமாக ஊர்ந்து வந்த பாம்பு கௌதமியையும் வேடனையும் நமஸ்கரித்தது. பின் தன்னால் இறந்த அந்தச் சிறுவனின் உடலைச்  சுற்றிவந்து அந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டுக் கானகத்தில் ஊர்ந்து மறைந்தது.

 (மகாபாரதத்தில், அம்புப் படுக்கையிலிருந்த பீஷ்மர், தர்ம புத்திரருக்கு, வினைப்பயனே வாழ்வின் நிகழ்ச்சிகள் என்பதை உணர்த்தச் சொன்ன கதை இது.)

🔷➖🔷➖🔷➖🔷➖🔷➖🔷

*எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....!!!!*

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது

யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது ஏன் தெரியுமா?

ஒரு சமயம் பகவான் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார்.

பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளைக் கண்டு நகைத்தன.

“பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே;
 எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும்,

 “எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமரமுடியாது.” என்றும் எள்ளி நகையாடின.

(ஆபரணங்கள் பேசுமா என்று நினைக்கவேண்டாம். பகவானின் ஆயுதங்கள், மற்றும் அணிகலன்கள் ஒவ்வொன்றுக்கும் ஜீவன் உண்டு.

திருமாலின் கதாயுதமே பன்னிரு ஆழ்வார்களில் பூதத்தாழ்வாராக பிறந்தது.

சங்கு எனப்படும் பாஞ்ச சன்னியமே பொய்கையாழ்வாராக அவதரித்தது.

திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சமே பேயாழ்வாராக அவதரித்தது.

சக்கராயுதமே திருமழிசை ஆழ்வாராக அவதரித்தது.

பெரியாழ்வார் கருடனின் அம்சமாக அவதரித்தார்.

பரந்தாமனின் வில்லின் அம்சமாக பிறந்தவர் திருமங்கையாழ்வார்.

திருமாலின் ஸ்ரீவத்சத்தின் (மரு) அம்சமாக பிறந்தவர் திருப்பாணாழ்வார்.

கௌஸ்துவ மணியின் அம்சமாக பிறந்தவரே குலசேகராழ்வார்.)

கதைக்கு வருவோம்….

பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன.

அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும்போது உங்கள் துயர் தீர்ப்பேன்.

உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்!” என்றார் கருணையுடன்.

சொன்னதை போல, இராமனாக பரம்பொருள் திரு அவதாரம் செய்த பின்பு, பரதன் முடி சூட வேண்டி கைகேயி செய்த சதியால் வனவாசம் சென்றுவிட, விஷயம் தெரிந்த பரதன், இராமன் இருக்கும் இடம் நோக்கி ஓடுகிறான்.

தன் தாய் செய்த தவறுக்கு வருந்தும் பரதன் இராமரை காட்டுக்கு போய் சந்தித்து மன்னிப்பு கோருகிறான்.

மீண்டும் அயோத்தி திரும்பி வந்து ஆட்சி பொறுப்பை ஏற்குமாறு வேண்ட, இராமர் மறுத்துவிடுகிறார்.

“உங்கள் பாதுகைகளையாவது கொடுங்கள் அண்ணா. அதை சிம்மாசனத்தில் நிறுத்தி, அதன் பிரதிநிதியாக நான் ஆட்சி புரிகிறேன்.” என்று வேண்ட, மனமிறங்கிய அண்ணல்,  அதற்கு ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீ இராமரின் பாதரக்ஷைகளை சங்கு-சக்கரங்களின் அம்சமாகப் பிறந்த பரதனும் சத்ருக்னனும் தங்கள் தலைமேல் தாங்கி எடுத்துச் சென்று அதை சிம்மாசனத்தில் வைத்து அதன் பிரதிநிதியாக ஆட்சி புரிந்தனர்.

இராம ராஜ்ஜியத்தைவிட பாதுகா ராஜ்ஜியம் பவித்திரமாக இருந்தது என்றால் அது எந்தளவு சக்தி மிக்கது என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

இதன் நினைவாகவே இன்றும் பெருமாள் கோவில்களில் கிரீடத்தின் மேல் பாதுகைகள் உள்ள ‘சடாரி’

ஸ்ரீவைஷ்ணவர்களின் தோள்களில் முத்திரையாகப் பதித்திருக்கும் சங்கு-சக்கரங்களுக்கும், தலை மீதும் சாத்தப்படுகிறது.

மேலும் பகவானின் கால் பட்டல்ல, அவன் பாதுகை பட்டதாலேயே கல்லாக இருந்த அகலிகையும் சாபவிமோசனம் பெற்று எழுந்தாள்.

இறைவனின் பாதுகைகள் அத்தனை மகத்துவம் மிக்கது. கோவிலுக்கு சென்றால் பகவானின் திருவடிகளையே முதலில் பார்க்கவேண்டும்.

காலம் எப்போது யாரை எந்த உயரத்தில் வைக்கும் என்று கணிக்க முடியாது. யாரையும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்று நாம் அலட்சியமாக கருதுபவர்களை நாளை நாம் அண்ணாந்து பார்க்கும் நிலை வரலாம்.

அதை உணர்ந்து எப்போதும் அடக்கத்துடன் வாழ்ந்து, இந்த வாழ்க்கை அவன் போட்ட பிச்சை என்கிற எண்ணத்துடன் வாழ்ந்து வரவேண்டும்.

துயரத்தில் இருப்பவரை

துயரத்தில் இருப்பவரை

துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.

மனதிற்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம்.

ஜோதிடத்தில் குணப்படுத்துதல் ( ஹீலிங்) என்ற வார்த்தையின் அதிபதி சுக்கிரன் தான்.

 நாம் படும் பிரச்சனை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் பகவான் தானாம்.
கருவரை முதல் கல்லரை வரை நமக்கு பணம் தேவைபடுகிறது.
பணப்புழக்கத்தை தரும் கிரகம் சுக்கிரன் என்பது நமக்கல்லாம் தெரியும்தானே!

 எந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும்.

நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன்.
இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன்.
மனவருத்தில் இருப்பவருக்கும் மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன்

நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மஹாலஷ்மி தாயார் பார்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா?

துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள்.
மனதிற்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான்
காரகனாம்.

ஜோதிடத்திற்க்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகிறார்கள்.

கர்நாடக சஙகீதத்தில் 12 ஸ்வரங்களை 12 ராசிகளோடு இனைத்து பார்க்கின்றனர்.
நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் ஒரே சீரான வேகத்தில் செல்லும் கிரகங்களாகும்
அதேபோல சங்கீதத்தில் ஸட்ஜா மற்றும் பஞ்சம ஸ்வரங்கள் ஒரே சீரான தாளகதியை கொண்ட ஸ்வரங்கள் என்று கூறுவதோடு அதை கடக சிம்ம ராசிகளோடு இணைக்கின்றனர்.

மீதியுள்ள பத்து ஸ்வரங்களை இரண்டிரண்டாக பிரித்து ஐந்து குழுக்களாக சவ்விய அபசவ்விய முறையில் தொகுத்து ஐந்து கிரகங்களோடு பின்வருமாரு ஒப்பிடுகின்றனர்

கன்னி ராசி - சுத்த ரிஷபம்

துலா ராசி - சதுஸ்ருதி ரிஷபம்

விருச்சிக ராசி - சாதாரண காந்தாரம்

தனுசு ராசி - அந்தர காந்தாரம்

மிதுன ராசி - காகளி நிஷாதம்

ரிஷபராசி - கைசிக நிஷாதம்

மேஷ ராசி - சதுஸ்ருதி தேவதம்

மீன ராசி - சுத்த தேவதம்

மகர ராசி - சுத்த மத்யமம்

கும்ப ராசி - ப்ரதி மத்யமம்

ஒருவது ஜாதகத்தில் இசையில் சிறந்துவிளங்க இரண்டாம் வீடு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு,
சுக்கிரன் புதன் பலம் பெற்று இருக்க வேண்டும்.

சாதாரன பேச்சிற்க்கு வாக்கு ஸ்தான பலமும்
புதபலமும் போதும். ஆனால்

அனைவரையும் கவர்ந்திழுக்கும் இசையில் சிறந்து விளங்க லக்கினம் சுக்கிரனின் வீடாக அமைவது அல்லது வாக்கு ஸ்தானம் சுக்கிரனின் வீடுகளாக அமைவது முக்கியம்.

மழைக்கும் காரண கிரகமான சுக்கிரனை அம்ருத வர்ஷினி ராகத்தை இசைத்து மழையை கூட வரவைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.

ராகங்களின் பயன்கள்:

அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் - பூபாளம்

அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் - மலையமாருதம், சக்கரவாகம்

சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்- அமிர்தவர்ஷினி

கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய - அரிகாம் போதி

மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட - ஆனந்த பைரவி,
ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,
சகானா, நீலாம்பரி

மனம் சார்ந்த பிரச்சனை தீர - அம்சத்வனி, பீம்பிளாஸ்

இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - சந்திரக கூன்ஸ்

நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் - பகாடி,
ஜகன் மோகினி

பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-அடான

மனதை வசீகரிக்க, மயக்க - ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா

சோகத்தை சுகமாக்க - முகாரி , நாதநாமக்கிரியா

பாம்புகளை அடக்குவதற்கு - அசாவேரி ராகம்

வாயுத்தொல்லை தீர - ஜெயஜெயந்தி ராகம்

வயிற்றுவலி தீர - நாஜீவதாரா

எந்தகோவிலுக்கும் செல்வது
சங்கீதத்தில் சிறந்துவிளங்க விரும்புபவர்கள் வணங்க வேண்டிய திருத்தலம்
திருமரைக்காடு எனப்படும் வேதாரன்யம் ஆகும்

இங்குள்ள அம்பாளின் திருநாமம் வீணா வாதவிதூஷனி எனும் வேதநாயகியாகும்.
இந்த அம்பிகையின் குரல் சரசுவதியின் வீணைநாதத்தை தோற்கடிக்குபடி இனிமையாக இருந்ததால் இந்த பெயர் ஏற்பட்டது.

மேலும் சுக்கிர ஸ்தலங்களையும், ஸ்ரீ மகாலக்ஷமி வழிபாடும்,
சப்த கன்னியரில் இந்திரானி வழிபாடும் இசையில் சிறந்த தேர்ச்சியும் புகழும் அடைய செய்யும். 

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்

சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது

ஒரு துறவியும் அவருடைய சீடரும்

ஒரு துறவியும் அவருடைய சீடரும்

ஒரு துறவியும் அவருடைய சீடரும் காட்டு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் .

அந்த நேரத்தில் வெகுதூரத்தில் ஒரு புலி உருமுவதும் அது அவர்களை நோக்கி வருவதும் தெரிந்தது.

உடனே சீடன் " குருவே புலி நம்மை நோக்கி வருவது போல் உள்ளது . அதனால் நாம் திரும்பி வேறு பாதை வழியாக போய் விடுவோம் " என்றான்

ஆனால் குரு சீடரின் வார்த்தையை கேட்கவில்லை . "புலி நம்மை ஒன்றும் செய்யாது " என்று சீடனிடம் சொல்லிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார் .

சீடனையும் தியானம் செய்யுமாறு கூறினார் . குருவின் பேச்சை தட்ட முடியாத சீடனும் அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தான்.

வேகு நேரம் ஆனது தியானம் முடிந்து சீடன் கண்களை திறந்து பார்த்தான் .
குருவின் பக்கத்தில் அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்தது.

சீடன் குரு விழித்ததும் அவரிடம் கேட்டான் எப்படி குருவே கோபமாக உருமிக்கொண்டு வந்த புலி அமைதியானது.
"நாம் எவ்விதமான அலையை பரப்புகிறோமோ நம்மை சுற்றி இருப்பவர்களும் அது போலவே மாறிவிடுவார்கள்" என்று கூறினார் அந்த குரு .

எனவே நம்மை சுற்றி நல்ல எண்ணங்களையே எண்ணுவோம் , மனதை அமைதியான நிலையிலேயே வைத்துக் கொள்வோம் . நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் .

எண்ணெய் தீபம்

எண்ணெய் தீபம்

கலப்பு எண்ணெய் தீபம் -

தீமையும் நன்மையும்

ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,
         

எந்த காரணத்திற்காகவும்  ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது

அதர்வன மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,

சரியாக கூறுவதானால் நாம் நடைமுறையில்

பௌர்ணமி  கழித்து வரும் அஷ்டமியை தேய்பிறை அஷ்டமி என்று (அனைவருக்கும் தெரிந்ததுதான்) கூறுவோம் இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,

அதாவது  பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு

ஒரு அகலில் நல்லெண்ணெய்.

இன்னொரு அகலில் இலுப்ப எண்ணெய்.

மற்றொன்றில் விளக்கு எண்ணெய்.

அடுத்ததில் பசு நெய்.

அடுத்த அகலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி

பைரவ சுவாமியை நோக்கி அகலின் திரி முகம் வைத்து தனித்தனியாக ஏற்ற வேண்டும்,

ஒரு அகலில் ஏற்றிய நெருப்பில் இருந்து இன்னொரு தீபம் ஏற்றக்கூடாது.

(ஒவ்வொரு எண்ணெய் கொண்டு எரியும் தீபத்தின் சக்தி வெவ்வேறாகும், ஒன்று இன்னுமொன்றோடு சேரக்கூடபாது சக்தி மோதல் உண்டாகும்)

இவ்வாறு தனித்தனியாக ஏற்றி வழிபட்டால் தீரா பிரச்சினையும் தீரும்,

இந்த  முறை பிரச்சினைகளுக்கான தீர்வு மட்டுமே, பில்லி சூன்யம். வம்பு. வழக்கு. தீரா நோய் இவைகள் அடங்கும் .

 இரண்டாவதாக ஒவ்வொரு செவ்வாய்கிழமை காலையும். மாலையும் ஸ்ரீ கால பைரவரை அஷ்டலட்சுமியும் வழிபடுவார்கள், அந்த நேரத்தில் கடன் தீரவும். செல்வம் பெருகவும் நாமும் இரு அகலில்
நெய்தீபம் ஒன்றிலும். நல்லெண்ணெய்  ஒன்றிலும் ஊற்றி சிவப்பு திரி போட்டு தனித்தனியே ஏற்றினால் கஷ்டங்கள் தீரும்,

நங்கிரஹ தோஷம் விலக அரசடி விநாயகருக்கு சதுர்த்தி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மூன்று அகலில் ஒவ்வொன்றின்  வீதம்

தேங்காய் எண்ணெய். நல்லெண்ணெய். பசு நெய் இவைகளை தனித்தனியே ஏற்றி வழிபட கிரக தோஷம் விலகும் .

சித்திரை. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்கிழமையில் ராகுகால வேளையில் சிவாலயத்தில் உள்ள அன்னை துர்க்கைக்கு

9 அகலில் 9 வகை எண்ணெய் தனித்தனியே ஊற்றி 9 வகை கலர் திரி ஒவ்வொன்றிலும் ஒரு கலர் திரி வீதம் போட்டு தீபம் ஏற்றி அன்னையை வழிபட தீரா பிரச்சினையும் தீரும்,

இப்படி பல செயல்களுக்கும் இந்த பல வகை எண்ணெய் தீபம் ஏற்றும் முறை உண்டு, ஆனால் இன்று இந்த நல்முறை அறியாததால் தவறு நடக்கிறது,

3அல்லது 5 எண்ணெய் கூட்டி தீபம் ஏற்றுங்கள் என அக்காலத்தில் சொன்னது தவறாக செய்தி பரவிவிட்டது.

5 எண்ணெய்ûயும் ஒன்றாக கலந்து தீபம் ஏற்றுவது என தவறாக புரிந்து பாதகத்தை அறியாமலேயே பெருகிறார்கள்,

அறியாமல் செய்தால் தவறில்லை என்ற மன ஆறுதல் பேச்சு இதில் செல்லாது, விஷம் என்று அறியாமல் நாம் எடுத்து குடித்தால் அது உடலில் பரவாமல் இருக்காது, அதை போலத்தான் தெய்வ சபையும், தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் குற்றம் குற்றம்தான்.

அதனால்தான் ஆன்மிகத்தை பொருத்தவரை தெரியாததை புதிதாக செய்யக்கூடாது என்பார்கள்.

ஆக தீபத்திற்கான எண்ணெய் கலப்படமாகாமல் ஏற்றுவதே சிறந்தது .

 எதிரியை உறவாடி கெடுக்கும் முறை ஒன்று உண்டு .

அதுவும் அதர்வன முறையில் நிறையவே உண்டு,

சூழ்ச்சி. தந்திரம் இவைகளை எதிரி அறியாமல் செயல்படுத்துவதாகும்

மூலிகை. யந்திரம். எண்ணெய். மந்திரம் இவைகளில் ஒன்றுக்கொன்று எதிர்ப்பு எதுவென்று அறிந்து அதை சேர்த்து தன் விரோதிக்கு நல்லது என கொடுத்து பயன்படுத்துவார்கள்,

அவை என்னவென்று தெரியாமலேயே பயன்படுத்தும் அப்பாவிகள் அதன் விளைவை சந்திக்க வேண்டியதாகிறது .

அக்காலத்தில் இதே முறையில் உறவாடி கெடுத்தவர்கள் ஏராளம்.

அந்த முறையில் ஒன்றுதான் இந்த கூட்டு எண்ணெய் முறை பயன்படுத்தப்பட்டதாகும் .

இந்த முறையை அறிந்தவர்கள் அதன் பலனை அறியாமல்செய்திகளை வெளியிட்டு மக்களும் அதை பின்பற்றி துன்பப்படுகிறார்கள்.

அப்படி என்னதான் துன்பம் என்று சந்தேகம் உண்டாகிறதல்லவா ? அதையும் அறியுங்கள்

ஸ்லோ பாய்சன் என்ற கேள்விப்பட்டிருப்பீர்கள் அது மனிதன் அறியாமலேயே கொஞ்ச கொஞ்சமாய் கொல்வதாகும், அதே போல் இந்த எண்ணெய்களை ஒன்றாக கலக்கி தீபம் ஏற்றினால் அதன் விளைவு இதனால்தான் உண்டானது என சந்தேகப்படா வண்ணம் நடக்கும்.

அவை நடத்தும் விளைவு என்னென்ன என்று அறியுங்கள்

குழந்தைகளுக்கு முறை தவறிய திருமணம் நடக்கும்.

அது கலப்பு கல்யாணமாகவும் இருக்கும்,

காதல் திருமணமாகவும் இருக்கும்.

பெண்ணுக்கு வயது கூடி ஆணுக்கு குறைந்தும் நடக்கும்.

திருமணத்தில் நம்பி மோசம் போகும் சம்பவங்கள்


#காசியும்_______இராமேஸ்வரமும் :

#காசியும்_______இராமேஸ்வரமும் :

ॐ #மானிட_பிறப்பெடுத்த_அனைவரும் #வாழ்வில்_ஒருமுறையாவது_அவசியம் #செல்லக்கூடிய_தலங்களில் 1. #காசி , 2. #இராமேஸ்வரம்_மிக_முக்கியமானதாகும்.

ॐ முதலில் காசிக்கு சென்று வந்தால் அவசியம் இராமேஸ்வரமும் , அல்லது முதலில் இராமேஸ்வரம் சென்று வந்தால் கூடவே காசிக்கும் போக வேண்டும் என்பார்கள்.

இராமேஸ்வரம் ↔ காசி சென்றால் தான் இந்துக்களின் புனித பயணம் முழுமை பெறும் என்பது மக்களிடையே உள்ள நம்பிக்கை.

ॐ காசிக்கு வயதானதவர்கள் செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் செல்லலாம்.

ॐ காசிக்கு சென்றால் அவசியம் ## திருவேணி சங்கமம் அதாவது முக்கூடல் 1.கங்கை 2.யமுனை
3.சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஒன்றாக சேரும் இடத்திற்கு செல்ல வேண்டும் ## . அங்கு செல்வதற்கு படகுகள் இயக்கப்படுகின்றன். அவ்விடத்தில் சிறிது நீரை எடுத்து கொண்டு வந்து இல்லங்களில் வைத்து கொள்ளலாம்.

ॐ இராமேஸ்வரம் சென்றால் அவசியம் அங்குள்ள அலை வராத புனித கடலாம் அக்னி தீர்த்ததில் நீராடி பின் கோவினுள் உள்ள அனைத்து தீர்த்த கிணற்றில் உள்ள நீரில் நீராட வேண்டும். அங்கேய நீர் இரைத்து ஊற்றுபவர் இருப்பார்.

ॐ காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் மிக முக்கியமான ஒரு ஒற்றுமை உள்ளது. என்னவென்றால் ,

 இராவணனை கொன்றதால் பிரம்மஹஸ்தி தோஷம் இராமனை பிடித்து கொண்டது .

👉, இதிலிருந்து விடுபட இராமன் இராமேஸ்வரத்தில் சீதையால் மணலால் செய்யபட்ட லிங்கத்திற்கு

🌻 #ஓம்_சிவாய_நமஹ

🌻 #ஓம்_சிவ_லிங்காய_நமஹ

🌻 #ஓம்_ஆத்மாய_நமஹ

🌻 #ஓம்_ஆத்ம__லிங்காய_நமஹ

🌻 #ஓம்_சர்வாய_நமஹ

🌻 #ஓம்_சர்வ_லிங்காய_நமஹ

🌻 #ஓம்_பவாய_நமஹ

🌻 #ஓம்_பவ_லிங்காய_நமஹ

என்றெல்லாம் கூறி சிவபெருமானையே நினைத்து பூஜித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபட்டார்.

 இதே போல் காசியிலுள்ள விஸ்வநாதர் நாமங்களிலேயே உயர்ந்த நாமமான "இராம நாமத்தையே" நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 அதாவது காசியில் சிவன் இராமனையும், இராமேஸ்வரத்தில் இராமன் சிவனையும் பூஜிக்கின்றனர்.

#ஹரி_ஹராய_நமஹ.

மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று,

மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று,


ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன.

ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்,

வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.....!!!

நாம் அனைவரும் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.

*ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,

ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்*.

ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ

அதைப் பொறுத்துத் தான் நம்முடைய தன்மை வெளிப்படும்....!!!

*நாம் எதை சேர்க்கிறோம் அர்ப்பத்தையா....?

*இல்லை அற்புதத்தையா......

அர்ப்பம் என்னும் ஆறு குணங்கள்

1. பேராசை

2. சினம்

3. கடும்பற்று

4. முறையற்ற பால் கவர்ச்சி

5. உயர்வு தாழ்வு மனப்பான்மை

6. வஞ்சம்

அற்புதம் என்னும் ஆறு குணங்கள்

1. நிறை மனம்

2. பொறுமை

3. ஈகை

4. கற்பு நெறி

5. சம நோக்கு

6. மன்னிப்பு

இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து *கொண்டால்

அர்ப்பம் நம்முள் எட்டிப் பார்காது....!!!*

*அற்புதம் நம்மை விட்டு விலகிப போகாதே........

"சிந்திப்போம் தெளிவடைவோம்"

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன...?

ஊதுபத்தி ஏற்றுவதன் தத்துவம் என்ன...?

 ஊதுபத்தி ஏற்றுவது ஈஸ்வரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம்.

அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும்.

அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது.

இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும்.

பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே தெய்வீக செயலாகும்.

ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர்.

 அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.

நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்கு செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும்.

 இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் ஈஸ்வரனுக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

”அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்” (குறள் 96)

--- மற்றவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைச் சொல்வதால் ஒருவருடைய தீவினைகள் தேய்ந்து,
நல்வினைகள் பெருகும்.

ஆலயங்களை வலம் வரும் முறை-----

நாம் அனைவரும் கோவில்களுக்கு சென்று வணங்கிவருகிறோம் . ஆலயத்தில் நாம் பிரகாரங்களை சாஸ்திரமுறைப்படி வலம்வருவதால் நம் வேண்டுதல் உடனே நிறைவேறும் . ஆலயங்களை வலம்வரும் முறையை இங்கு காணலாம் .

###வினாயகரை - ஒருமுறையும் ,
சிவனையும் ,அம்மனையும் - மூன்று முறையும், சித்தர் , மகான்களின் சமாதியை - நான்கு முறையும்,பெருமாள் - அம்மனை - நான்கு முறையும்,அரசமரம், தலவிருட்சங்களை - ஏழு முறையும்,
நவகிரகங்களை - ஒன்பது முறையும் வலம் வர வேண்டும் .

எக்காரணம் கொண்டும் தன்னை தானே வலம் வர கூடாது . தெய்வங்களை வலம்வரும் பொழுது அந்தந்த தெய்வங்களுக்குரிய ஸ்தோத்திர பாடல்களை சொல்லி வலம் வருதல் நலம் பயக்கும் . கோவில் கொடிமரத்தின் முன்பு மட்டுமே விழுந்து நமஸ்காரம் செய்யவும்

கருட வாகனம்:
---------------------------

மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன் . இந்துக்கள் அனைவராலும் கருடாழ்வார் என வணங்கபடுகிறார்.

பெருமாள் கோயிலில் மூலவருக்கு நேராக கைகளைக் கூப்பிய நிலையில் கருடாழ்வார் எழுந்தருளிப்பார் .

வைகுண்டத்தில் இருந்து திருமலையான சப்தகிரியை ( திருப்பதி ) பூலோகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர் . சப்தகிரி என்றால் ஏழு மலை . அந்த ஏழுமலைகளில் ஒன்றுக்கு கருடனின் பெயரில் கருடாத்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது .

பெரும்பாலும் தெய்வத்தின் வாகனத்திற்கு, வாகனம் கிடையாது ஆனால் விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு வாகனம் உண்டு .

கருடனுக்கும் ஒரு வாகனம் இருப்பதாக விஷ்ணு சகஸ்ரநாமத்தில், சுபர்ணோ வாயு வாஹனா : என்று குறிப்பிடப்பட்டுள்ளது . அதாவது காற்றே அதன் வாகனம் .
கருடனைப் பார்ப்பதும் , அதன் குரலைக் கேட்பதும் நன்மையின் அறிகுறியாகும் .

 ஒவ்வொரு தினக்களிலும் கருடனின் தரிசனம் ஒவ்வொரு பலனை தரும்.

ஞாயிறு – நோய் நீங்கும்

திங்கள் – குடும்பம் செழிக்கும்

செவ்வாய் – உடல் பலம் கூடும்

புதன் – எதிரிகளின் தொல்லை நீங்கும்

வியாழன் – நீண்ட ஆயுள் பெறலாம்

வெள்ளி – லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

சனி – மோட்சம் கிடைக்கும்.

கருடனின் சகுனம் முக்கியமாக கருதபடுவதால்தான், இந்தியாவில் தமிழகத்தின் உள்ள அனைத்து கோயில் கும்பாபிஷேகங்களிலும் கருடனின் தரிசனம் கிடைத்தபிறகே கலசத்தில் நீர் ஊற்றபடுகிறது

#மிக_சக்தி_வாய்ந்த_பரிகாரம் !!!

#மிக_சக்தி_வாய்ந்த_பரிகாரம் !!!

மிக சக்தி வாய்ந்த மிக சுலபமான இந்த பரிகாரம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் தெரியும்-நாள், கிழமை,திசை போன்ற எதுவும் பார்க்க தேவை இல்லை. தாந்த்ரீக முறைப்படி சில காரணங்கள் இருப்பினும் அறிவியல் ரீதியாகவும் இதன் பலன் நிச்சயம். ஆகவே செய்து பலன் அடையுங்கள். மேலும் இவை மேலை நாடுகளில் தங்கள் உடலில் புகுந்துள்ள தீய சக்திகள், மற்றவர் கண் பார்வையால் நமக்கு ஏற்படும் அசதி, காரியத்தடை  துரதிர்ஷ்டம் போன்றவைகளை போக்க உபயோகிப்பது வழக்கம்.

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய மளிகை கடைகளில்  சைனீஸ் வினீகர் அல்லது ரைஸ் வினீகர் என கேட்டு வாங்கவும். அதை ஒரு பாத்திரத்தில் / வாணலியில் இட்டு நன்கு கொதித்து புகை வர ஆரம்பித்ததும் அந்த புகையை வீட்டின் / வியாபார இடத்தின் அனைத்து மூலைகளில் அறை முழுதும் காட்டி விட்டு பின்பு அந்த அறைகளில் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து அதில் ஒரு டையமன்ட் கற்கண்டு மற்றும் கிராம்பு போட்டு வைக்கவும்.உங்களுக்கு நல்லனவற்றை அளிக்கும் படி பிரபஞ்சத்தை வேண்டி கொள்ளவும் பின்பு
தீபம் எறிந்து முடிந்ததும், விளக்குகளை எடுத்து வைத்து விடலாம்-அவ்வளவே. செய்த நாள் இரவு கொதிக்கும் நீரில் ரைஸ் வினீகர் விட்டு அந்த புகையை சுவாசித்து கொண்டே குளிக்கவும். இந்த முறை உங்கள் உடல் மற்றும் நீங்கள் இருக்கும் வீடு-இரண்டிலுமே உள்ள தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும்-வாரம் ஒரு முறை கூட செய்யலாம். செய்து பயன் அடையுங்கள்.

#ஓம்_நமோ_நாராயணா


பத்து நல்ல விஷயம் -

பத்து நல்ல விஷயம் -


ரொம்ப வேண்டியதில்லை. கொஞ்சமாக ஒரு பத்து நல்ல விஷயம் சொல்லட்டுமா? கட்டாயம் இதை கடைபிடித்தால் கைமேலே பலன். இதிலே ஒரு பரம ரகசியத்தை வெளியிடப்போகிறேன். அது என்ன தெரியுமா?

''இது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான்''

1. நமது தலையாய கடமை எது? கிடைத்த சந்தர்ப்பத்தை இழக்காமல் அடுத்தவருக்கு உதவு. காசு தான் கொடுக்கவேண்டும் என்றில்லை. சரீர உதவி தான் ச்லாக்கியமானது ஏனென்றால் எல்லோராலும் முடிந்தது. அடுத்தவனுக்கோ, தேசத்துக்கோ பணத்தால் மட்டுமில்லாமல் தேகத்தாலும் உழைப்பது கிருஷ்ணனுக்கு உங்களைப் பிடிக்க வைக்கும். இப்படி சேவை செய்யும்போது முதலில் நமது மனத்துக்கே திருப்தியை அளிப்பது தான் உள்ளே இருப்பவனின் திருப்தி என்று சொல்லவருகிறேன்.

2. உலகத்தின் மகா பெரும் விஞ்ஞான கூடத்தாலும், விஞ்ஞானியாலும் கூட உயிருள்ள ஒரு சிறு புல்லை உருவாக முடியாது. ஒரு கவளம் உண்ணும்போதும், ஒரு குவளை நீர் பருகும்போதும் அதை பகவானுக்கு அற்பணித்துவிட்டு பிறகு சாப்பிட்டால் அதன் ருசியே தனி. அதுவே ஔஷதம். எது சிறந்ததோ, எது உசத்தியோ, அது அவனால் தான் கிடைத்தது என்ற நன்றி ஈரம் நெஞ்சில் இருக்கவேண்டும்.

3. மற்ற உயிர்களிடம் அன்பு இல்லாத வாழ்க்கை வீண்.

4. பிறர்க்குதவா கருமியின் சொத்து பின்னால் குடும்ப நாசத்துக்கு தான் வழிகோலும். எத்தனை பெரிய சொத்துள்ளவர்கள், பணக்காரர்கள் கோர்ட் வாசலில். யாருக்கோ உண்மையாக போக வேண்டிய பணம் சம்பந்தமில்லா கருப்பு கோட்டுகளுக்கு பொய் சொல்லுவதற்காக போய்ச் சேரும். .
நாலா காரியங்களுக்கு தான தர்மங்கள் கொடுத்துக்கொண்டே இருப்பவன் குடும்பம் க்ஷேமமாகவே இருக்கிறதே.

5. செய்வதையும் இரண்டாம் பேருக்கு சொல்லாமல் தெரியாமல் செய்பவன் புகழ் தானே வெளியே வரும். விளம்பரம் செய்து உதவி செய்வது உதவி செய்த பலனை சாப்பிட்டுவிடும்.

6. நடந்ததை மறந்துவிடு. கொட்டின பால் குடம் புகாது. நல்லது கெட்டது புரிந்து செயல்படு. கிருஷ்ணன் இருக்கிறான் வழிகாட்ட. அவன் சொல்படி தான் எல்லாமே நடக்கிறது, நடக்கும்.

7. கொடுத்த வாழ்நாள் நமக்கு இவ்வளவு போதும் உனக்கு என்று எண்ணிக் கொடுத்திருக்கிறான். ஒரு வினாடியும் வீணாக்காதே. கொடுத்தவன் உன்னை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். அவனது கையாளாக இருக்கவே , நம்மை பிறர்க்குதவ நியமித்திருக்கிறானே. பொதுப்பணத்தை தனக்காக ஒதுக்கி விடுவது அரசியலோடு போகட்டும். ஆன்மீகத்தில் வேண்டாம். நேரம், சரீர சேவை தான் இங்கு பொதுப்பணம்.

8. நமக்கு என்று நியமிக்கப்பட்ட கடமைகளை அன்றாடம் நிறைவேற்றவேண்டும். அதை பகவானிடம் பக்தியோடு செய்யவேண்டும். தக்க பலனை கொடுக்கும்..

9. உனக்கிட்ட கடமையை நீ பலன் கருதாமல் செய்தாலே உனக்கு அவன் தன் பக்கத்தில் ஒரு இடம் காலி செய்து வைத்து இருக்கிறான் என்பது நிச்சயம்.. .

10. இறைவன் இருக்கிறான் எங்கும் எப்போதும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது, என்கிற ஞானமே சகல துன்பத்திலிருந்தும் விடுதலை அளிக்கும். வாழ்க்கையில் வரும் கஷ்டங்கள் நிரந்தரம் இல்லை, இலையின் மேல் பனித்துளி, ஆதவனின் ஒளியில் அகல்வது.

#நவரத்தின_கற்களின்_தரம் #அறிவது_எப்படி???

#நவரத்தின_கற்களின்_தரம் #அறிவது_எப்படி???

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு
குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு
சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால்
குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில்
ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால்
குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில்
வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால்
வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித
ஒலி வரும்.
#அகத்தியரின்_பாடல்களில் இருந்து
தொகுக்கப் பட்டுள்ள இந்த
விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும்
நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி
கற்களின் தரம் அறியலாம்.


*அர்ச்சனை பொருட்களும்,* *அவற்றின் அர்த்தங்களும்..*

*அர்ச்சனை பொருட்களும்,* *அவற்றின் அர்த்தங்களும்..*


நாம் அனைவரும் கோயிலுக்கு செல்லும்போது, தெய்வத்திற்கு அபிஷேகத்திற்காகவும், அர்ச்சனை செய்யவும் பூஜை பொருட்கள் வாங்கிசெல்வோம்.

ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள், எதற்காக வாங்குகின்றோம் அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று நம்மில் பலருக்கு தெரியாது.

சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும், தத்துவத்தையும் பார்க்கலாம்.

🌼தேங்காய் :🌼

தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும்.

அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது.

அதுபோல் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது வெண்மையான மனமும், அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள் இனிமையாகவும், அன்பாகவும் இருக்கும்.

🌸விபூதி(திருநீரு) :🌸

சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.

நாமும் இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம்.

ஆதலால் நான் என்ற அகம்பாவமும், சுயநலம், பொறாமை இருக்ககூடாது என்ற எண்ணத்தையும், சிந்தனையும் நமக்கு உணர்த்தவே, விபூதியை நெற்றியிலும், உடம்பிலும் பூசிக்கொள்கிறோம்.

🌹வாழைப்பழம் :🌹

வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில் மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.

ஆனால் முளைக்காது. ஏனென்றால் உலகத்தில் உள்ள எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும் முளைக்காது.

ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

🌷அகல் விளக்கு :🌷

ஒரு மின்சார விளக்கினால் மற்றொரு மின்சார விளக்கை ஒளிர வைக்கமுடியாது.

ஆனால் ஒரு அகல் விளக்கினால் மற்றொரு அகல் விளக்கை ஒளிர வைக்கமுடியும்.

அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்..

Thursday 13 July 2017

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்#
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு   கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!

அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

 அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.

அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.

உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

நடராஜரின் தோற்றமும் விளக்கமும்...!

நடராஜரின் தோற்றமும் விளக்கமும்...!


 இந்துக்களின் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் சிவபெருமானின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறிக்கிறது. நடராஜர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும்........!

🌟 ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேராக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் முகமோ சாந்த ஸ்வரூபம்.

🌟 இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது.

🌟 முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.

🌟 பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் உந்தல். அதில் ஒரு சீரான முடிச்சுகளைக் காணலாம்.

🌟 அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன. பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹhர மூர்த்தி என்பதை காட்டுகிறது.

🌟 நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந" வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

🌟 ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம" என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.

🌟 வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்" எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.

🌟 தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

🌟 முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்திரத்தின் அடுத்த எழுத்தான 'வா" வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

🌟 பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி" யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.

🌟 அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே" என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய" வை காட்டுகிறது.

🌟 நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது.

🌟 பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவமாடுவதை காட்டுகிறது.

மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2

மஹா பெரியவா அற்புதங்கள் பாகம் - 2

அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம்
உண்டே தெரியுமா? - 6

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.

அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் 'அனுமன் சாலீஸா'வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் அனுமன் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ''ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்'' என்றார்.

அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ''அப்னே ஆப் ஹுவா!''ன்னு தானாகவே உண்டானது... 'சுயம்பு'ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா... அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே...''

அதற்கு ஸ்வாமிகள், ''ஜ்வாலாமுகியை பார்த்திருக் கியா?'' என்று கேட்டார். ''நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!'' என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள், ''சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே... பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?'' என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.

''வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்'' என்றார் கண்ணன்.

உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்...

''அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நம|

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது...

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்... நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்... மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல... லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள்.

ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி''
என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

மாலை வணக்கம் நண்பர்களே !!

என்றும் அன்புடன் !!
தெய்வீகம் ஸ்ரீனிவாசன் !!
தெய்வீகம் ஸ்ரீ ஹரி மணிகண்டன் !!
ஹரி ஓம் !! ஹரே கிருஷ்ணா !!

சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?

சிவனை வழிபடும் போது நமக்கு ஏன் கஷ்டம் வருகிறது ?

ஏன் என்றால் சிவன் அனைத்துலகையும் ஆள்பவன் அவனுக்கு தெரியாதா,தன்னை வழிபடாதவனையே வாழ வைக்கும் ஆண்டவன் வழிபடுவோரை விட்டு விடுவாரா என்ன...

வழிபடாதவனுக்கு அவனுடைய புண்ணிய பலனிற்கு முதலில் எல்லா வளங்களையும் தருவார்,பின் அவனுடைய பாவ கணக்கிற்கு அவனை கஷ்டத்தில் தள்ளி விடுவார்...

வழிபடுகின்றவருக்கு முதலில் அவருடைய பாவ கணக்கிற்கு கஷ்டத்தை தந்து அந்த பாவத்தை அழித்து விட்டு அவனை தூய்மையானவனாக மாற்றி விடுகிறார்,பின் அவன் புண்ணிய பலனிற்கு வளங்களை தந்து வாழ்க்கை முழுவதும் அவனை இன்பத்தில் ஆழ்த்தி பின் அவனை தன்னுடனே இணைத்து கொள்கிறார்...

இதனால் தான் சிவன் வழிபடுபவர்களுக்கு கஷ்டத்தை தருகிறார்...

#சனீஸ்வரருக்கு_எள்_தீபம்_ஏற்றலாமா?

#சனீஸ்வரருக்கு_எள்_தீபம்_ஏற்றலாமா?

சனிக்கு எள் தீபம் ஏற்றாதீர் !!!
************************

எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம்.

அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும்.

மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் ஒருமுறை இந்த எள்தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும் நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.

சனி தொல்லைக்கு 20 எளிய பரிகாரங்கள் !!!

1. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

2. சனிக்கிழமை தோறும் பகவா னுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.

3. கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

4. வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

5. சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

6. சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

7. ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

8. ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

9. தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

10. அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

11. கோமாதா பூஜை செய்யலாம்.

12.ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

13. சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்த து.

14. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

15.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

16. உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

17. வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

18. பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும்.

19. தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

20. சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும்.


துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள்

துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள்


1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.

2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய 🌹🌿
ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும்.

 கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.

3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷங்கள் விலக ..🌹🌿 நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
ஆண்கள் - சனிக்கிழமை
பெண்கள் - வெள்ளிக்கிழமை

4.பொருளாதாரம் உயர:-🌹🌿 ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி அதைக் கையில் வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.

5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.

6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவா்கள். அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.

அரச மரத்தின் அற்புத சக்தி :🌹🌿

1. தீரா நோய் தீர ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.

2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.

4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...