Monday, 29 December 2025

பெரு மாளின் குணங்கள்.19..




 பெரு மாளின் குணங்கள்.19..

1. செளசீல்யம் பெரியவர். . . . சிறியவர் என்ற பேத உணர்வு இல்லாமல். . . . அடியவர்களுடன் சேர்ந்திருக்கும் மேன்மையான குணம். . . .
2. வாத்ஸல்யம் குற்றம், குறை களுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும். . . . அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது. . . . அப்போதுதான். . . . பிறந்த கன்றை. . . . . தாய்ப் பசு அருவருப்பு இல்லாமல் அதன் வழுவை ஆசையுடனும். . . . பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும். . . . . அதைப் போன்ற அன்பையும். . . . பாசத்தையும் பொழிபவர். . . . பகவான். . .
3. மார்தவம் அடியவர்கள் தம்மைப் பிரிந்து செல்வதை பொறுத்கொள்ள முடியாதவன். . . . .
4. ஆர்ஜவம் உடல். . . . உள்ளம். . . . வாக்கு ஆகியவற்றில் மாசு இல்லாத குணம் கொண்டவன். . . .
5. செளஹார்த்தம்*
எப்போதும் எல்லோர்க்கும் நன்மையே எண்ணும் பரந்த குணம். . . .
6. ஸாம்யம் ஜாதி. . . . குணம் ஆகியவற்றில் உயர்வு தாழ்வு கருதாமல். . . யாராக இருந்தாலும் தம்மைச் சரணாகதி என்று தஞ்சம் அடைந்தால் ஏற்றுக் கொள்ளும் குணம். . . .
7. காருண்யம் துன்பப்படுவர்களை பார்த்து. . . . இப்படிக் கஷ்டப்படுகிறார்களே என்று இரங்கும் குணம். . .
8. மாதுர்யம் எதிரியின் மறுபக்கச் சிறப்பையும் மதித்துப் போற்றி . . பகைவனுக்கும் இனியவனாக இருக்கும் குணம். . . .
9. காம்பீர்யம் தம்மைச் சரண் அடையும் அடியார்களுக்கு. . . . மற்றவர்களால் நினைத்துப் பார்க்காத முடியாதபடி. . . . தன்னடக்கம் காட்டி . . . எதிர்பாரத வகையில் அருள் புரியும் மகோன்னத குணம். . . .
10. ஒளதார்யம் பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்கமலும். . . . கொள்ளக் கொள்ளக் குறையாம லும் அடியார்கள்வேண்டியவற்றை தருகின்ற குணம். . . . .
11. சாதுர்யம் பகைவரையும் நண்ப ராக்கிக் கொள்ளும் சாமர்த்தியம்.
12. ஸ்தைர்யம் அடியார்களை எந்த நிலையிலும் கைவிடாத உறுதி. . . .
13. தைரியம் பகைவர்கள் எத்தனை வலிமை கொண்டவர்களாக இருப்பினும். . . அவர்களை அழிக்கின்ற வல்லமை. . .
14. ஷெளர்யம் பகைவர்கள் வலிமையுடன் இருப்பதாக அறிந்தும் கூட அதற்குக் கலங்காமல். . . . மற்றொரு துணை சேர்த்துக் கொள்ளாமல். . . தனி ஒருவராக அவர்கள் நடுவே புகுந்து வரும் குணம் . . . . .
15. பராக்கிரமம் போர்களத்தில் பயமோ. . . . கோபமோ கொள்ளாமல் விளையாட்டாகவே பகைவர்களை அழிக்கும் ஆற்றல். . . .
16. சத்யகாமம் பேராசை ஏதும் இன்றி. . . . அத்தனை பேறுகளையும் சுய முயற்சியால் குறைவில்லாமல் பெற்று நிறைவாக இருக்கும் குணம். . . .
17. சத்யசங்கல்பம் எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் . அதைத் தடையின்றி செய்து முடிக்கும் குணம். . . .
18. க்ருதித்வம் அடியவர்களின் நன்மைக்காக இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பது. . . .
19. க்ருதக்ஞத்வம் அடியார்களின் சிறு கைங்கர்யத்தையும் கண்டு மகிழ்வது. . . . அதையும் என்றும் நினைவில் கொள்வது. . . .
இப்படி எண்ணற்ற கல்யாண குணங்களைக் கொண்டுள்ள பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து . . . .
உடையவர் காட்டிய வழியில் உய்யும் வழி அறிவோம்.

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...