Monday 27 March 2017

சின்ன சின்ன குழந்தைகளுக்கு

                   சின்ன சின்ன குழந்தைகளுக்கு


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/




நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்

   குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன

   கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.


உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.



தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.



ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


  முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.


ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.



பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.



பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது வியக்க வைக்கும் உண்மைகள்.



முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.



நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையதுபிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.



எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும் வியக்க வைக்கும் உண்மைகள்  .
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.



பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே வாட்டர்மேன்.



நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.



எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம்நாய் 

சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு வியக்க வைக்கும் உண்மைகள்.



தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.



முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.



சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.



தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.



யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்..                                                                                        கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
     உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.                                                                                                                   வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்


நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே

வியர்க்கும். ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்


மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.



பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.


எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால


உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது

.

எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.
உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும் வியக்க வைக்கும் உண்மைகள்.
நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்

.

கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்

வியக்க வைக்கும் உண்மைகள்.
 உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.



அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.



வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.


இடக்கை பழக்கம் உள்ளவர்கள், வலக்கை பழக்கம் உள்ளவர்களை விட 3 வருடம் முன்பே மரணத்தை சந்திப்பார்களாம்.
       நமது நாக்கின் நடுப்பகுதியில் சுவை அரும்புகள் கிடையாது.

டியா்பாட் என்னும் ஒரு வகை ஈ மணிக்கு 1300கி.மீ பறக்க கூடியது.
ஜெட் விமானத்தை விட வேகமானது.

சர்க்கரையில் ஒரு சத்தும் கிடையாது.வைட்டமின்களோ புரதமோ கிடையாது.                                                                                                                                                கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் ‘typewriter’என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்
அதிகாலை 6-8
அதிகாலையில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பதுடன், சிலர் அதிக நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள், இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிப்படையும்.
காலை 8-10
காலையில் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் நல்ல நட்பு மற்றும் உறவினர்களை கொண்டிருப்பார்கள். இவர்களின் பொருளாதாரம் சீரான நிலையில் இருப்பதால், இவர்களுடைய வாழ்வில் பணம் முக்கிய பங்கினை வகிக்கும்.
நண்பகல் 10-12
நண்பகலில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் செய்யும் அனைத்து காரியங்களுமே வெற்றியாகும். இவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதால், பெருமை கொள்ளும் வகையில் வாழ்வார்கள்.
மதியம் 12-2
மதியம் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் அதிக பயணம் சார்ந்த எதிர்காலம் கொண்டிருப்பார்கள். இவர்கள் புத்திகூர்மை மற்றும் நல்ல குணத்திற்கு பெயர்பெற்று திகழ்வார்கள்.
மதியம் 2-4
மதியம் 2 மணிக்கு மேல் பிறப்பவர்கள் பணம் சார்ந்த துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் லீகலாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.
மாலை 4-6
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் பொறுப்பு, கடமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கை இவர்களுக்கு வலிமையாக இருக்கும்.
மாலை 6-8
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர்களை சார்ந்து வாழும் விதமாக இருப்பார்கள். சமூக வாழ்க்கையில் அதிகம் இணைந்திருப்பார்கள்.
இரவு 8-10
இரவில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் கற்பனை திறமைகள் அதிகம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள், அதிலும் சிறப்பாக இருப்பார்கள்.
இரவு 10-12
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பண்பினைக் கொண்டிருப்பார்கள். தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை எளிதாக கடந்து செல்வார்கள்.
நள்ளிரவு 12-2
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். ஊடகம் சார்ந்த வேலையில் அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார்கள்.
நள்ளிரவு 2-4

இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு சார்ந்த விருப்பம் அதிகம் இருக்கும். குடும்பம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தினை வகிப்பார்கள்.

Sunday 26 March 2017

சில குறிப்புகள்

                         சில குறிப்புகள்


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/




இந்த மகாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மகாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும் நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும்.
பொதுவாக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் செய்யாமல், நம் முன்னோர்கள் குறித்துப் பேசுவதும், அவர்களின் பெயரில் ஏழை எளியவர் களுக்குத் தான- தர்மங்கள் செய்வதும் அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.

ஸ்ரீராமபிரான், தன் தந்தைக்கான பித்ரு கடன்களை காட்டில் இருந்தபடியே செய்து நமக்கு வழிகாட்டியுள்ளார்.


 1. தாயாக = அம்மன்
2. தந்தையாக = சிவன்
3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன்
4. குருவாக = தட்சிணாமூர்த்தி
5. படிப்பாக = சரஸ்வதி
6. செல்வமகளாக = லக்ஷ்மி
7. செல்வமகனாக = குபேரன்
8. மழையாக = வருணன்
9. நெருப்பாக = அக்னி
10. அறிவாக = குமரன்
11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி
12. உயிர் மூச்சாக = வாயு
13. காதலாக = மன்மதன்
14. மருத்துவனாக = தன்வந்திரி
15. வீரத்திற்கு = மலைமகள்
16. ஆய கலைக்கு = மயன்
17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன்
18. ஊர்க்காவலுக்கு = ஐயனார்
19. வீட்டு காவலுக்கு = பைரவர்
20. வீட்டு பாலுக்கு = காமதேனு
21. கற்புக்கு = சீதை
22. நன் நடத்தைகளுக்கு = ராமன்
23. பக்திக்கு = அனுமன்
24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி
25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன்
26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன்
27. மொழிக்கு = முருகன்
28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
29. தர்மத்திற்கு = கர்ணன்
30. போர்ப்படைகளுக்கு = வீரபாகு 31. பரதத்திற்கு = நடராசன்
32. தாய்மைக்கு = அம்பிகை
33. அன்னத்திற்கு = அன்ன பூரணி
34. மரணத்திற்கு = யமன்
35. பாவ கணக்கிற்கு = சித்திரகுப்தன்
36. பிறப்பிற்கு = பிரம்மன்
37. சுகப் பிரசவத்திற்கு = கர்ப்ப ரட்சாம்பிகை இந்துவாய் பிறந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்வோம்.

வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே  வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
* சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை  மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்க வலது பக்கம் வரவேண்டும்.

 * பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,  பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.
  புன்னகை
ஒவ்வொருவரிடமும் உள்ள ஓர் அழகான ஒன்று தான் புன்னகைப்பது. காலையில் எழும் போது, புன்னகைத்துக் கொண்டே எழுவதன் மூலம், அன்றைய நாள் மிகவும் சாந்தமாக செல்லும். 
                                                                                                                                                                                * விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில்தீரவழிபிறக்கும்.
 மாவிலைகளுக்கு இன்னொரு தனிச்சிறப்பு உண்டு. மரத்திலிருந்து வெட்டப்பட்ட பின்னரும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சக்தி மாவிலைகளுக்கு உண்டு என்கிறார்கள். அலங்காரத்துக்கு மட்டுமல்ல; ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது மாவிலை
. * பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல் கூடாது.

    வலம்புரி சங்கின் ஓம் என்னும் ஓங்கார பிரணவ மந்த்திரத்தை மைல் கணக்கில் ரீங்காரம் செய்யும் தன்மை படைத்தது.  இந்த சங்கை தான் மகாவிஷ்ணு கையில் வைத்திருக்கிறார்.  சூரிய பகவான் வைத்திருக்கிறார்.  துர்க்கை அம்மனின் கையில் வலம்புரி சங்கு தான் இருக்கிறது.
1000 சிப்பிகள் சேர்ந்தது ஒரு இடம்புரி சங்கு.
1000
இடம்புரி சங்குகள் சேர்ந்தது ஒரு வலம்புரி சங்கு.
இந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும்.
ஆடி மாதம் பூர நட்ச்சத்திரம்புரட்டாசி பவுர்ணமிஆணி மாதம் வளர் பிறையுடன் கூடிய அஷ்டமிஅல்லது சித்திரா பவுர்ணமி அன்றும் வலம்புரி சங்கில் பால் வைத்துமகாலட்சுமிக்கு  வேண்டிய நெய்வேத்தியங்களை படைத்து பூஜை செய்தால் தன பாக்கியமும், பொன்பொருள், ஆடை, ஆபரணம் சேர்வதுடன்இதை செய்கிற தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ்வார்கள்.

ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்திக்கும்.
 பில்லி,  , செய்வினை கோளாறுகள் சங்கிருக்கும் வீட்டை அணுகாது.
வீட்டில் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்து வழிபடுபவர்களுக்கு சில வழி காட்டிகள்.
1 . தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும்.
2 .
தட்டு அல்லது இலையின் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.
3 . 
சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.
4 .
சங்கில் தண்ணிர் வைத்து துளசி போடலாம்.
5 .
பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்திங்கள் வைக்கலாம்.
6 . 
அல்லது பூக்கள் வைக்கலாம்.
வலம்புரி சங்கின் மந்திரம்.
பாஞ்ச ஜன்யாய வித்மஹே
சங்க ராஜாய தீமஹி
தந்தோ சங்கப் பரசோதயாத்

.
ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்
1.
ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
6. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 5-7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
7. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
8. போகும்போதோ வரும்போதோ குலதெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
9. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
10. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
11. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
12. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
13. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
14. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
15. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
16. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
17. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
18. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
19. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.                                                                 1. அன்னதானம் செய்தால் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.
2. கோ தானம் செய்தால் கோலோகமாக வாழ்ந்திருப்பர்.
3. பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.
4. குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.
5. தாமிரம்,; நெய், கட்டில்,; மெத்தை, ஜமுக்காளம், பாய்,; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.
6. வஸ்திர தானம் கொடுத்தவர்  10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.
7. இரத்தம்,; கண்,; உடல் தானம் கொடுத்தவர்  அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்.
8. ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்  இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.
9. குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர்  14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.
10. நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்.
11. தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர்  மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்.
12. பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.
13. நற்செயலை விரும்பி செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.
14. தீர்த்த யாத்திரை புரிகின்றவருக்கு  சத்தியலோக வாசம் கிட்டுகிறது.
15. ஒரு கன்னிகையை ஒழூக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர்  14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்.
16. பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர்   குபேர லோகத்தில் ஒரு மன் வந்தரம் வாழ்வார்.
17. பண உதவி செய்பவர்கள் ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.
18. நீர் நிலைகளை சீர்திருத்துபவரும,; உண்டாக்குபவரும் ஜனலோகத்தில் நீண்டகாலம் ; வாழ்வார்கள்
19. பயனுள்ள மரங்களை நட்டுப் பாதுகாப்பவர் தபோ லோகத்தை அடைகிறார்.
20. புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால்    64 ஆண்டுகள் பரமபத்திலிருப்பான்.
21. தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர் 10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.
22. பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர் இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.
23. தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர்  நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.
24. சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர்  ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.
25. ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு  கைலாய வாசம் கிட்டும்.
26. அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர் 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்.
27. விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர்  14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்.
28. சுதர்சன ஹோமமும,; தன்வந்திரி ஹோமமும் செய்பவர் ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக தீர்க்காயுளுடன் வாழ்வர்.
29. ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர்    குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.
30. இதைப் படிப்பவரும, கேட்பவரும,; புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்    தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.

எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ அவரவர் அதற்குரிய பொருட்களை உயரிய ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்.

கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ……….
1.கோவிலில் தூங்க கூடாது ..
2.
தலையில் துணி ,தொப்பி அணியகூடாது
3.
கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.
விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.
அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
6.
குளிக்காமல் கோவில் போககூடாது
7.
கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
8.
கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
9.
மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது
10.
கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
11.
படிகளில் உட்கார கூடாது .
12.
சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .
13.
வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
14.
மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
15.
கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
16.
கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
17.
புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.
கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.
தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20.
சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.
தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
22.
எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..                                                                                                                                           தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள். ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம்  பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். பலரது அனுபவ நம்பிக்கைமுயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது  நிறைவேறும்.
                                                                                                                                                                   கோவில் நூலில் இருந்து ……

ஸ்ரீராமர், ராவண வதம் செய்த பிறகு சிவபெருமானைக் குறித்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் க்ஷேத்திரத்தில், இந்த மகாளய பட்ச அமாவாசை நாளில், தர்ப்பணங்கள் போன்ற முன்னோர் கடன்களைச் செய்வது, நம் குடும்பத்தையும் வாழ்வையும் செழிக்கச் செய்யும் வலிமை மிக்க காரியமாகும்.                                                                        இறைவனின் திருப்பெயரைச் சொல்லி, மலர் சூட்டி, மலர் தூவி அர்ச்சனை செய்வது.
வீட்டை சுத்தப்படுத்தி சாம்பிராணி, பத்தி தூபம் இடுவது.
நெய்தீபம், சூடம் தீபாராதனை செய்வது.
நைவேத்யமாக பிரசாதம் படைப்பது.
இந்த எளிய முறைகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் கடைபிடித்து, பயபக்தியோடு இறைவனை வணங்கி, நியாயமான வழியில் வாழ்பவர்கள் நிறைந்த செல்வமும், தீர்க்காயுளும், வாழ்வுக்குப் பின் பிறப்பற்ற நிலையும் அடைவர்.
மேலும் செல்வம் பெருக சில குறிப்புகள்: வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி  கடாட்சம் ஏற்படும்.
வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க  குபேர சம்பத்து வரும்.

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால்  ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...