ஸ்படிக மணி மாலை..!!*_
அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள் தூசிகள் கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம்.
உருண்டையாக தயாரிக்கப்பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம்.
இதையே நாம் ஸ்படிக மணி மாலை என்கிறோம்.
ஸ்படிகத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் தெய்வ அருள் மன அமைதி சாந்தம் நல்ல சிந்தனை தெளிவான அறிவு தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.
இந்த ஸ்படிக மணி மாலையை அணிந்து கொண்டால் நரம்பு மண்டலமும் இரத்த ஓட்டமும் சீரடையும். வேலைப்பளுவினால் ஏற்படும் களைப்பு தெரியாது.
*
ஸ்படிகமாலை கோர்க்கும்முறை*
ஸ்படிக மணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து கோர்த்து அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது).
தனித்தனியாக அணிந்து கொள்ளலாம். தரமற்ற ஸ்படிகமணியை மாலையாக கோர்க்கக் கூடாது.
ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் கோர்தோ அணியலாம்.
*
ஸ்படிக மணி மாலை அணியும் முறை
ஸ்படிக மணி மாலையை அணிந்து கொள்வதற்கு முன் குறைந்தது 3 மணி நேரம் வரை நல்ல தண்ணீரில் போட்டு விட வேண்டும். 3 மணி நேரத்திற்கு பிறகு எடுத்து பயன்படுத்தலாம்.
குளிக்கும்போது கட்டாயம் போட்டு கொண்டே குளிக்க வேண்டும். இரவில் உறங்கும்போது கட்டாயம் அவிழ்த்து தரையில் வைக்க வேண்டும்.
காலையில் நீங்கள் அணியும்போது மாலை குளிர்ச்சியாக இருக்கும். நாள் முழுவதும் உங்களது உடல் உஷ்ணத்தை இந்த ஸ்படிகம் ஈர்த்து கொண்டிருக்கும்.
இரவில் நீங்கள் கழற்றி வைக்கும்போது மாலை உஷ்ணமாகி விடும். தரையில் வைப்பதால் பூமியின் ஈர்ப்பு சக்தி பெற்று மீண்டும் குளிர்ந்த நிலைக்கு செல்லும்.
*
ஸ்படிக மணி மாலை தரும் பயன்கள்
மனிதர்களாகிய நாம் நாள் ஒன்றுக்கு உள்வாங்கும், சுவாசத்தின் எண்ணிக்கை சராசரியாக 21,600 முறை.
ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் சுமார் முப்பதாயிரம் வரை விடுவதாக மருத்துவ அறிவியலாளர்கள் சொல்கிறார்கள்.
ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவதாக கண்டறிந்திருக்கின்றார்கள்.
ஸ்படிக மாலை உடல் வெப்பநிலையை சீரான சரியான அளவில் இருக்க வைக்கும்.
நமது மனதை அலைபாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை.
ஸ்படிக மணி மாலை அணிவதால் மனதில் உள்ள பாரம் மன அழுத்தம் குறைந்து உடலை எப்போதும் சாந்தமாக வைத்திருக்கும்.
ஸ்படிக மணி மாலையை அணிவதால் எப்போதும் தெய்வ அருள் கிடைக்கும். அதன் அதிர்வலைகள் எப்போதும் உங்களை சுற்றி இருப்பதால் நல்ல எண்ணங்களை தூண்ட செய்யும்.
தெளிவான சிந்தனையை தரக்கூடியவை. தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதோடு உடலில் உள்ள உஷ்ணத்தை குறைத்து உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்.
*
ஆன்மிகத்தில் ஸ்படிகத்தின் முக்கியத்துவம்*
ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும்.
வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். முக்தி லிங்கம்- கேதார்நாத், வரலிங்கம்-நீலகண்ட ஷேத்திரம் , மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம்-சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக-காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார். இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான்.
தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது மகா மேரு ஸ்படிகம். இந்த மகா மேரு ஸ்படிகத்தை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து அபிஷேகம் செய்து வந்தால் சகல செல்வத்துடன் லஷ்மி கடாட்சம் சேரும் என்பது ஐதீகம்.

No comments:
Post a Comment