அடிமுடி சித்தர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மகான் ஒருவர் குடில் அமைத்து தமது சீடர்களுடன் தவம் செய்து வந்தார். இவரின் சீடர்களில் அடிமுடி சித்தரும்
ஒருவர். இவர் எளிமையான தோற்றம் கொண்டவர், சிவனடியார்களுக்கு
உதவுவதையே பணியாக கொண்டவர்.
பக்தர்களின் வசதிக்காக அடிமுடி சித்தர் தனது குருவிற்கு பணிவிடை செய்த காலம் தவிர மற்றநேரங்களில் பக்தர்களுக்காக கிரிவலப்பாதையை துப்புரவு செய்து வந்தார். இதனை கண்ட அருகில் உள்ள குடில்களில் இருந்த
சிவனடியார்களும், சில தொழிலாளர்களும் தாமாக முன்வந்து இந்த ஆன்மீகபணியை செய்துவந்தனர். ஆனால், தன்னுடன் இணைந்து பணியாற்றும் தொழிலளர்களுக்கு துப்புரவு பணிசெய்தஇடங்களில் இருந்து குப்பையை தன கரங்களில் எடுத்து
அளிப்பார், கைவிரித்து அவர்கள் பார்க்கும் பொழுது பணமாக இருக்கும்.
இவ்வாறாக சித்தர் பெருமானின் அற்புதங்கள் ஏராளம்.
திருவண்ணாமலையில் உள்ள அரியவகை மூலிகைகளை வ்கொண்டு தன்னை நாடி வரும் அன்பர்களின்நோய்களை குணமாக்கினார். தான் ஜீவசமாதி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த அவர் தனசீடர்களை அழைத்து "நான் தவத்தில் ஆழ்ந்தவுடன் என் உடலை தொடாமல் கால்
பெருவிரல் இரண்டிலும் வைக்கோல் கயிற்றால் கட்டி இழுத்து செல்லுங்கள்
எவ்விடத்தில் இக்கயிறு அறுந்துவிடுகிறதோ அங்கே என்னை அடக்கம்
செய்யுங்கள்" என்று கூறி ஜீவசமாதி அடைந்தார்.
பின்பு அவர் கூறியவாறு , வைக்கோல் கயிற்றால் கட்டி கிரிவலப்பாதையில் அவர் உடலை இழுத்து செல்லும்போது அடி அண்ணாமலை கவுதம
மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் கயிறு அறுந்ததால் சித்தரை அவ்விடத்திலேயே அடக்கம் செய்தனர். சிலநாட்களுக்கு பின்பு சித்தரின்
ஜீவசமாதி உரிய பராமரிப்பு இல்லாமல் பாம்பு புற்றாக மாறியது.
இந்நிலையில் கிரிவலம் வந்த சிவனடியார் ஒருவருக்கு சற்று தூரத்தில்ஜோதி வடிவில் ஓர் ஒளிப்பிழம்பு தென்ப்பட்டது. அவ்விடத்தை நோக்கி
சென்றபோது அங்கே மிகப் பெரிய பாம்பு புற்று ஒன்று இருந்ததை கண்டு
ஆச்சரியம் அடைந்தார். மேலும் அடிமுடி சித்தரின் மகிமைகளை அறிந்துகொண்ட அவர் அங்கேயே தனது இறைபணியை மேற்கொண்டார். சில
நாட்களுக்கு பிறகு இடியுடன் கூடிய பலத்த மழைபெய்தது.
இதுநாள் வரை இதுபோன்ற மழையில் கரையாத புற்று
அன்றுசற்றுசிறிதாக கரைந்துகொண்டிருக்கும்போது அப்புற்றில் இருந்து சுயம்பு லிங்கம்ஒன்று தோன்றியது. அச்சிவலிங்கத்தினை மூலவராக கொண்டு அங்கு சிறியகோவில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. அன்றிலிருந்து கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் கவுதம மகரிஷியின் ஆசிரமத்திற்கு எதிரில் உள்ள
இக்கோவிலுக்கு வந்து அன்பின் உருவான அடிமுடி சித்தரின் அருள் பெற்று
தங்களின் கர்மவினைப் பயனைபோக்கி நல்வாழ்வு பெற்றவர்கள் எண்ணி
லடங்காது. இன்னும் இங்கு வரும் பக்தர்கள் அடிமுடி சித்தரை நினைத்து
தியானம் செய்வதால் மன அமைதியும் நிம்மதியும் பெறுகின்றனர்.
ஜீவ சமாதி உள்ள இடம் ஆற்றல் நிரம்பிய இடமாகும்.அவர்களை பூரணமாய் வணங்கி பழங்கள், அச்சுவெல்லம், அவல், தாம்பூலம், வாசனை உடைய
மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவது சிறப்பு. பொதுவாக குருவை தேடுபவர்கள் மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவ சமாதியில் வழிபாடு
செய்தால் குருவருள் கிட்டும். அவர்களே வழி காட்டுவர்.
திருச்சிற்றம்பலம்

No comments:
Post a Comment