Tuesday, 25 November 2025

நான்காம்_பாவம்

 #நான்காம்_பாவம்

நான்காவது வீடு என்பது கடக ராசியுடன் ஒத்திருக்கும் வீடு ஆகும்; கடக ராசியை சந்திரன் ஆள்கிறார். இதன் காரணமாக ஜோதிடத்தில் நான்காவது வீடு பந்தங்களை குறிக்கும் பாவம் எனப்படுகிறது. குடும்ப உறவுகளை மட்டும் அல்லாது, குடும்பம் சார்ந்த பூர்வீக சொத்துக்கள், நிலம், வண்டி, வாகனங்கள் பற்றியும் இது கூறுகிறது.
தனி ஒருவரின் ஜாதகத்தின் 4-வது வீட்டில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு பலனை அளிக்கிறது. அந்த வகையில் இந்த நான்காம் வீட்டில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன்? எந்த கிரகம் நன்மை அளிக்கும்? எந்த கிரகம் கெடு பலன்களை அளிக்கும் என பார்போம்.
நான்காம் வீட்டில் #சூரியன் இருப்பது மன அமைதி, மகிழ்ச்சியான வாழ்வு, குடும்ப உறவுகளுடன் பரஸ்பர புரிதல், குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதை குறிக்கிறது. கணவன் - மனைவி இடையே ஒரு இணக்கமான உறவு உண்டாகும். இருப்பினும், இந்த சூரியன், சாதகமற்ற சூழலில் இருந்தால், எதிர்மறை தாக்கம் உண்டாகும். உறவுக்குள் கருத்து வேறுபாடு, மன கசப்பு அதிகரிக்கும்!
நான்காவது வீட்டில் #சந்திரன் இடம் பெறுவது, தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் மீது அதிகம் நம்பிக்கையை வைப்பீர்கள், தன்னம்பிக்கையுடன் செய்யும் காரியங்கள் தன வரவை அதிகரிக்கும். சுருக்கமாக கூறினால் உங்கள் திறமைகளையும், உள்ளுணர்வையும் நீங்கள் நம்புவீர்கள். குறிப்பாக, அம்மாவுடன் நெருங்கிய உறவு உண்டாகும்.
​ 4-வது வீட்டில் #குரு அமைந்திருப்பது, செல்வ வரவை அதிகரிக்கும். புது மனை, சொத்து, வாகனங்கள் வாங்குவதற்கான யோகத்தை அளிக்கும். குடும்ப உறவுக்குள் பாசம் மற்றும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். குறிப்பாக, பெற்றோருடன் நல்ல உறவு உண்டாகும். உங்கள் தொழில் முயற்சிகளுக்கு குடும்ப உறுப்பினர்கள் துணையாக இருப்பார்கள்.
அழகு, கலை, ஆடம்பரத்தை குறிக்கும் #சுக்கிரன் கிரகம், நான்கவாது வீட்டில் இடம் பெறுவது, ஜாதகத்திற்கு சொந்தக்காரரின் வீட்டில் அன்பை அதிகரிக்கும். மன அமைதி, மன நிறைவுக்கு வழிவகுக்கும். கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு குறித்த இந்த காலம் சிறப்பாக அமையும். குடும்ப உறவுகளின் விருப்பங்கள் நிறைவேறுவதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
நான்கவாவது வீட்டில் #செவ்வாய் இடம் பெறுவது, ஜாதகத்திற்கு சொந்தக்காரரின் வீட்டில் சண்டை, சச்சரவுகளை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பொறாமை, ஈகோ, சந்தேகங்கள் அதிகரிக்கும்; இது குடும்ப உறுப்பினர்களின் நிம்மதியை பாழாக்கும். வாழ்க்கையின் முன்னேற்ற பாதையில் ஒரு தடையை உண்டாக்கும். உணர்வுகள் ரீதியாக பலவீனமடைவீர்கள். அசையா சொத்து கண்டிப்பாக இருக்கும்.
நான்காவது வீட்டில் #புதன் கிரகம் இடம்பெறுவது, மன கஷ்டத்திற்கு வழிவகுக்கும். அதாவது, உங்கள் மனதை பாதிக்கும் விஷயங்களை உண்டாக்கும். வீட்டில் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்க கூடும். எதிர்காலம் குறித்த குழப்பங்கள் உங்கள் மனதை காயப்படுத்தும், குழப்பத்தில் மூழ்கி இருப்பதன் விளைவாக எதிர்மறை எண்ணங்கள் எழக்கூடும். மனதை தளரவிடாது, நம்பிக்கையுடன் செயல்பட, வாழ்வில் சிறக்கலாம்.
நான்காவது வீட்டில் #சனி குடியேறுகிறாரோ, அவர் பழமைகளை பராமரிக்க விரும்புவார். அதாவது மாற்றத்தை விரும்ப மாட்டார், நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என நினைப்பார். ஜாதகக்காரரின் இந்த தனிப்பட்ட விருப்பங்கள், குடும்ப உறவுகள் மத்தியில் மன கசப்பை உண்டாக்கும். குடும்பத்தில் பிரச்சனைகளை உண்டாக்க கூடும். எதிர்பாராமல் செய்யும் சிறு தவறுகளும் உங்கள் மனதை கவலையில் மூழ்கடிக்கும். எப்போது, என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலைத்திருக்கும்
நான்காவது வீட்டில் #ராகு நல்ல நிலையில் இடம் பெற, ஜாதகத்திற்கு உரியவர் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார். தொழில் வளர்ச்சி காண்பார், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் மற்றும் பொருளாதார நிலை மேம்படும்.
சொத்து, புது வீடு, மனை வாங்குவதற்கான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். மாறாக, ராகு சாதகமற்ற சூழலில் இடம் பெற, அனைத்தும் எதிர்மறையாக நடக்கும். நிழல் கிரகமான ராகுவின் தாக்கம், சற்று கடுமையாகவே இருக்கும்.
நான்காம் வீட்டில் #கேது குடியேறுவது, வெளியூர் பயணங்களை குறிக்கிறது. அதாவது, சொந்த ஊரை விட்டு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை உண்டாக்குகிறது. வீட்டில் மகிழ்ச்சி குறையும், மன அமைதி குறையும், வியாபாரத்தில் நஷ்டம் உண்டாகும், பூர்வீக சொத்துக்களை இழக்க நேரிடும்.
வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நிலை பாதிக்கப்படும். குறிப்பாக, அம்மாவின் உடல் நிலை பாதிக்கப்படலாம். எனவே, எச்சரிக்கையுடன் சூழ்நிலையை சமாளிப்பது அவசியம்!

No comments:

Post a Comment

*கர்மா தடம் மாறாது !!*

*கர்மா தடம் மாறாது !!* *ஒரு மரத்தடியில் பார்வையற்றவன் ஒருவன் அமர்ந்திருந்தான் ! எதிரில் ஒரு தட்டு ! அதில் சில நாணயங்கள் ! அந்தப் பக்கம் வருவ...