Monday, 22 December 2025

கேது உன்னுடையஅஸ்வினி,மகம்,மூலம்"இந்த மூன்று நட்சத்திரத்தில்

 அஸ்வினி,மகம்,மூலம்"இந்த மூன்று நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ சாபத்தால்,குலதெய்வ தோஷத்தால் எந்த மாதிரி பிரச்சனைகள் ஏமாற்றங்கள் கஷ்டங்கள் இவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

🌹அதாவது ராசி நட்சத்திரம் லக்ன புள்ளி விழுந்த நட்சத்திரம் மற்றும் லக்கின அதிபதி சென்று நின்ற நட்சத்திரம் இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒன்று "அஸ்வினி,மகம்,மூலம்"இந்த நட்சத்திரத்தில் இருந்தால் அவர்களுக்கும் குலதெய்வ சாபம் தோஷம் இருக்கும் அர்த்தம்.
♋Example:
♦உதாரணமாக ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம் இவருடைய லக்னம் என்ற நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் ஆக இருந்தாலும் சரி,அதேபோன்று ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்திருந்து இவருடைய லக்ன புள்ளி விழுந்த நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரமாக இருந்தாலும் சரி,
♦அதேபோன்று ஒருவர் விருச்சிக லக்னத்தில் பிறந்திருந்து லக்னாதிபதி செவ்வாய் சென்று "அஸ்வினி,மகம்,மூலம் இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி,
மேலும் ஒருவர் கன்னி லக்னத்தில் பிறந்திருக்கின்றார் என்று வைத்துக் கொள்ளும் லக்னாதிபதி புதன் சென்று "அஸ்வினி,மகம்,மூலம்,இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி,
♦இல்லையென்றால் ராசி நட்சத்திரம் அதாவது சந்திரன் என்ற நட்சத்திரம் "அஸ்வினி,மகம்,மூலம்" இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் இருந்தாலும் சரி,அதாவது இது போன்ற மூன்று அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பு யாருடைய ஜாதகத்தை எல்லாம் இருக்கின்றது. அவர்களுக்கு குலதெய்வ தோஷம் சாபம் இருக்கின்றது என்று அர்த்தம்.
♦அதேபோன்று இந்த "அஸ்வினி ,மகம் மூலம்" நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் குலதெய்வ சாபத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று என்றால் இந்த மூன்று நட்சத்திரங்களும் கேது உடைய நட்சத்திரங்களாகும்.
♦என் கணித ஜோதிடத்தின் அடிப்படையில் கேதுவின் எண்ணானது 7வது என்னை குறிக்கும்.அதாவது நம்முடைய பாரம்பரிய ஜோதிடப்படி ஏழாவது பாவம் தான் குலதெய்வ சாபத்தை தோஷத்தை குறிக்கக்கூடிய பாவமாகும் அதேபோன்றுதான் என் கணித ஜோதிடத்திலும் 7வது எண் தான்.குலதெய்வ தோஷத்தை குறிக்கக்கூடிய எண்ணாகும்.
♦எனவே கேது பகவான் கூட குலதெய்வ சாபத்தை தோஷத்தை கொடுக்கும்.அந்த வகையில் கேதுவின் நட்சத்திரங்களாகிய அஸ்வினி மகம் மூலம் இந்த நட்சத்திரங்களுக்கும் குலதெய்வ சாபம் இருக்கும்.எனவே தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குலதெய்வ சாபம் இருக்கின்றது.
♦கண்டிப்பாக இவர்கள் பிறப்பதற்கு முன்பு இவர்களின் தந்தை அல்லது இவர்கள் பரம்பரையில் இருந்தவர்கள் உண்மையான குல தெய்வத்தை வணங்கும் வழக்கத்தை விட்டிருப்பார்கள்.அதாவது சில காலங்கள் உண்மையான குலதெய்வம் கோயிலுக்கு போவது இவர்கள் தவிர்த்து இருக்கலாம் விட்டு இருக்கலாம்.
♦இவர்கள் குலதெய்வம் என்று நினைத்துக் கொண்டு ஏற்றுக்கொண்டு ஒரு தெய்வத்தை வணங்கி கொண்டிருப்பார்கள்.
ஆனால் அது இவர்களின் உண்மையான குலதெய்வமாக இருக்காது இவர்கள் முன்னோர்களின் உண்மையான பூர்வீகம் வேறு ஒரு ஊராக இருக்கலாம்.இவர்கள் பூர்வீகத்தை விட்டு விட்டு வேறொரு ஊருக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம்.
♦இல்லையென்றால் இவர்கள் வெறும் 2,3,4 தலைமுறைகள் மட்டுமே ஒரு தெய்வத்தை குலதெய்வமாக வணங்கி கொண்டிருப்பார்கள் ஆனால் அது இவர்களுக்கு குலதெய்வமாக வராது.அல்லது கடந்த காலங்களில் இவர்கள் உண்மையான குலதெய்வத்தை கண்டுபிடித்து வழிபாடு செய்து கொண்டிருக்கலாம்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋குலதெய்வ சாபத்தால் தோஷத்தால் இவர்களின் வாழ்க்கையில் எந்த மாதிரி பிரச்சினைகள் ஏமாற்றங்கள் ஏற்படும்.
♦யாரெல்லாம் இந்த "அஸ்வினி, மகம், மூலம்"நட்சத்திரத்தில் பிறந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு புத்திர தோஷம் புத்திர சாபம் இருக்கும்.
♦எப்படி என்றால் இவர்களுக்கு முதன் குழந்தை ஆண் குழந்தை கருச்சிதைவு,கரு கலைப்பு ஏற்பட்டிருக்கும்.அதாவது இவர்களுக்கு முதன் முதலில் புத்திர பாக்கியம் கிடைக்கும் போது இவர்கள் கர்ப்பமாக இருக்கும்போதே அந்தக் குழந்தை இவர்களுக்கு கருச்சிதைவு கருக்கலைப்பு ஏற்பட்டிருக்கும்.
♦இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம் முதன் முதலில் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து அந்த குழந்தை ஆணாக இருந்து பிறகு கருச்சிதைவு கருக்கலைப்பு ஏற்பட்டிருக்கும்.
இவர்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும்போதே அந்த கரு கலைக்கப்பட்டு இருக்கும்.
கருச்சிதைவு ஏற்பட்ட அந்த கரு ஆண் வாரிசாக இருந்திருக்கும்.
♦மேலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உறவினர்கள் மூலமாகவும் சொந்தங்கள் மூலமாகவும் சமூகத்தின் மூலமாகவும் எந்த ஒரு உதவிகளும் பயன்களும் அனுசரிப்பும் நன்மைகளும் ஆதாயங்களும் பயன்களும் இவர்களுக்கு இருக்காது.
♦உறவினர்களால் சொந்தங்களால் இவர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது.
இவர்களுக்கு ஒரு பிரச்சனை கஷ்டம் என்று வந்தால் இவர்களுக்கு உதவி செய்ய உறவுகள் சொந்தங்கள் யாருமே முன்வர மாட்டார்கள்
♦எல்லா உறவினர்கள் சொந்தங்கள் இருந்தும் இவர்கள் இல்லாதது போன்று இருப்பார்கள்.உறவினர்கள் சொந்தங்களுடன் இவர்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள்.
பேச்சுவார்த்தை இல்லாமல் தனித் தனியாகத்தான் இருப்பார்கள்.
இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு பிரச்சனை கஷ்டம் என்று வந்தால் உறவினர்கள் சொந்தக்காரர்கள் யாரும் இவர்களுக்கு அவ்வளவாக உதவி செய்ய வர மாட்டார்கள்.
♦அதேபோன்று குலதெய்வ ஆசிர்வாதம் விட்டுப்போனவர்களுக்கு மன உளைச்சல்கள் மன வேதனைகள் மன குழப்பங்கள் மனஸ்தாபங்கள் இதுபோன்ற பிரச்சனைகள் மிக மிக அதிகமாக இருக்கும்.
♦இவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் வளர்ச்சி என்பது இவர்களுக்கு அவ்வளவாக இருக்காது தொழில் சார்ந்த பிரச்சனைகள் இவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும் தொழிலில் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் இவர்களுக்கு வரும்.
♦மேலும் சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்கள் அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது இவர்கள் கையில் பணம் தங்காது நிற்காது.குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு சந்தோசம் நிம்மதி அவ்வளவாக இருக்காது.
♦அதேபோன்று குலதெய்வ ஆசிர்வாதம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எந்த தெய்வத்தை வழிபாடு செய்தாலும் அதனால் இவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இருக்காது.இவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது இவர்களுக்கு பலிக்காது.
உண்மையான குலதெய்வத்தை வணங்கினால் மட்டும் தான் இவர்களுக்கு மற்ற கடவுள்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
♋குலதெய்வத்திற்கு தகுந்தவாறு ஏதாவது பரிகாரங்கள் இருக்கின்றதா
பரிகாரத்தை பொறுத்தவரைக்கும்
♦இரண்டு விதமான பரிகாரங்கள் இருக்கின்றன ஒன்று ஆண்மிக பரிகாரம் மற்றொன்று வாழ்வியல் பரிகாரம்.ஆனால் குல தெய்வ சாபத்திற்கு வாழ்வில் பரிகாரங்கள் தான் வேலை செய்யும் ஆண்மிக பரிகாரம் அவ்வளவாக வேலை செய்யாது.
♦வாழ்வியல் பரிகாரங்கள் என்பது நம்முடைய ஜாதகப்படி எந்த மாதிரி செயல்கள் நாம் செய்கின்றோமோ அதன் மூலம் வரக்கூடிய நன்மைகளால் வரக்கூடிய பரிகாரமாகும்.அது தொழில் பரிகாரமாக இருக்கலாம் அல்லது நாம் செய்யக்கூடிய செயல் மூலம் வரக்கூடிய பரிகாரமாக இருக்கலாம்.
♦நம்முடைய ஜாதகப்படி நாம் எந்த மாதிரி நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமோ அதனை செய்து அதன் மூலம் வரக்கூடிய நன்மைகள் தான் வாழ்வில் பரிகாரமாகும்.
எல்லோருக்கும் ஒரே விதமான வாழ்வியல் பரிகாரங்கள் வராது ஒவ்வொரு ஜாதகத்துக்கு தகுந்தவாறு அவர்களுக்கு இந்த பரிகாரங்கள் மாறுபடும் வேறுபடும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌹மேற்கொண்டு யாரெல்லாம் இந்த "அஸ்வினி,மகம்,மூலம்" இந்த மூன்று நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருக்கின்றீர்களோ நீங்கள் இந்த பதிவில் நான் சொல்லி இருப்பதே உங்களுடைய வாழ்க்கையில் பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிகச் சரியாக இருக்கும்.
🌹ஜாதகத்தில் இந்த சூட்சமத்தை பொருத்திப் பாருங்கள் எல்லாம் மிக சரியாக இருக்கும்.

No comments:

Post a Comment

பூண்டின் மருத்துவக் குணங்களால்,

 பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தா...