Friday, 5 December 2025

ராம ராம ராம ராம !!

 ராம ராம ராம ராம !!

முக்திக்கு வழிகாட்டி
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு.தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.
அனைத்து நாமங்களையும் உள்ளடக்கியது
ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். (“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“)
தவறான உச்சரிப்பினால் பலன் குறையாது
வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று உபதேசித்து அதனைச் தொடர்ந்து சொல்லுமாறு கட்டளை இட்டார். ராம நாமத்தைத் தவறாக உச்சரித்தும் கூட ரத்னாகரன் வால்மீகி முனிவராக மாற முடிந்தது.
அனைத்து உயிர்களின் நண்பன்
தன்னுடைய வாழ்நாளில் ராமன் அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டினான். குகன் (படகோட்டி), ஜடாயு (பறவை), சுக்ரீவன் (வானர அரசன்), சபரி (மூதாட்டி), விபீஷணன் (அசுரர் குலம்) போன்ற பலரைத் தன் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் ஏற்றுக்கொண்டான். இதில் ஒரு அணிலும் அடங்கும். ராமன் தன்னிடம் சரணம் என்று வருபவர் யாராக இருந்தாலும் அவருக்கு அபயம் அளிக்கும் சபதத்தை ஏற்றிருந்தான். இத்தகைய நன்னடத்தையால் தான் அவன் புருஷோத்தமன் என்று போற்றப்படுகிறான்.
ராம நாமம் ராமனை விடச் சிறந்தது
இலங்கை செல்ல வானர சேனை பாலம் அமைத்த போது, இராமன் என்று பெயர் எழுதிய பாறைகள் கடலில் மிதந்தன. அதைக் கண்ட ராமன் தானே ஒரு பாறையை கடலில் எறிய அது மூழ்கியது. எனவே ராமனை விட ராம நாமம் மிகச் சிறந்தது. இந்த காரணத்தால் தான் ராமபக்த ஹனுமான் ராமன் வைகுண்டம் சென்ற பிறகு அவனைப் பின்தொடர்ந்து செல்லாமல் இப்பூவுலகில் தங்கி அவன் நாமத்தைப் பாடிக் கொண்டு இங்கேயே வசிக்கிறார்.
ராம நாமம் எழுத எளிது
மற்ற நாமங்களை காட்டிலும் ராம நாமம் சொல்லவும் எழுதவும் மிக எளிது. பக்தர்களில் சிலர், ஜெபிப்பதை விட நாமத்தை எழுத விரும்புவார்கள். அவர்களுக்கு ராம நாமம் அனைத்து மொழிகளிலும் எழுத லகுவாக இருக்கிறது. மேலும் குழந்தைகள் நாமங்களை எழுதும் போது அவர்களின் கையெழுத்து மேம்பட்டு பிற குழந்தைகளுடன் ஒரு ஆரோக்கியமான போட்டியும் உருவாகிறது.
ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !
ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்!

No comments:

Post a Comment

ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை

  ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை ‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வ...