Wednesday, 17 December 2025

வடகிழக்கு வெட்டு:

 


வடகிழக்கு வெட்டு:
ஓரு மனை அல்லது கட்டிடத்தின் வடகிழக்கு பகுதியானது வடமேற்கு பகுதியை விட அளவில் குறைவாக இருப்பது
அல்லது
தென்கிழக்கில் உள்ள அளவை விட வடகிழக்கில் அளவு குறைவாக இருப்பது வடகிழக்கு வெட்டு அல்லது ஈசானிய வெட்டு என்று அழைக்கப்படுகிறது.
அதாவது
ஒரு கட்டிடத்தின் வடகிழக்கில் எந்த ஒரு கட்டுமானம் இன்றி (கட்டிடம் இல்லாமல்) துண்டாகி நிற்பதையும் ஈசான்ய வெட்டு என்கிறோம்.
மற்றும்
ஒரு மனையின் வடகிழக்கு பாகம் பிறருக்கு சொந்தமாக இருப்பதை ஈசான்ய வெட்டு என்கிறோம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑ஈசான்ய மூலை வெட்டுபடுவதால் ஏற்படும் விளைவுகள்:
💥குடும்பத்திற்கு-வீட்டிற்கான பலன்:
🌹குடும்ப தலைவன்
(ஆண்)முன்னேற்றம் இன்றி இருப்பர்
🌹மூத்த மகன் பாதிப்பார்(வெளியூர் வெளிநாட்டில் குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் பாதிக்காது)
🌹சொத்தானது குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு பெண் சொத்தாக மாறிவிடும்.
🌹மூத்த வாரிசுகளுக்கு திருமணம் செய்ய தடங்கல் வரும் .ஒரு சிலருக்கு திருமணமே நடக்காமலும் போகலாம்
🌹மூத்த ஆண் வாரிசு க்கு (மருமகளுக்கு) முதலில் கருச்சிதைவு ஏற்படும்.மீறி பிறந்தால் (ஆட்டிசம்/வாய் பேசாத காது கேட்காத...) உடலில் ஆரோக்கிய குறையுடன் குழந்தை பிறக்கும்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🛑கோவிலுக்கான பலன்:
🌹மூல தெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அத்தெய்வத்தின் சக்தி ஒட்டம் தடை யாகும்
🌹அந்த கோவிலுக்கு பக்தர்கள் வர மாட்டார்கள்
🌹தெய்வ ஒட்டம் குறைவதால் நித்திய பூஜைகள் தடையாகும்.

No comments:

Post a Comment

திருக்கானப்பேர்(காளையார்கோவில்) :

  #திருக்கானப்பேர் (காளையார்கோவில்) : சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்...