Tuesday, 16 December 2025

மார்கழி மாதம்..


 மார்கழி மாதம்..

என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க..!
🌻 தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் தான் மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
🌻 மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். ஏனென்றால் இந்த மாதம் கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இம்மாதத்தில் எந்தவித மங்கள நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
🌻 ஆலயங்களில் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனைகள் நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவையும் பாடப்படும். மார்கழி மாதம் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் தரப்படும் மாதமாக போற்றப்படுகிறது.
தோஷங்களை தீர்க்கும் மார்கழி மாதம் :
🌻 மார்கழி மாதத்தில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறலாம். இந்த மாதத்தில் இருக்கும் விரதங்களின் பலன்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
🌻 மார்கழி மாதத்தில் விரதம் இருப்பவர்களுக்கு திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். இதனால் தான் மார்கழி மாத நோன்பு மிகவும் சிறந்தது என்று முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
🌻 இந்த மாதத்தில் விரதம் இருக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, நீராடி, வாசலில் கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடினாலே பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
நோய் தீர்க்கும் மாதம் :
🌻 மார்கழி மாத காற்று சருமத்திற்கும், வெள்ளை, சிவப்பு உயிர் அணுக்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது.
🌻 எனவே மார்கழி மாதத்தின் சிறப்பிற்கேற்ப நாமும் அதிகாலையில் எழுந்து பூஜை, அபிஷேகம் போன்றவற்றை செய்து தேவர்களை போன்று சிறப்படைவோம்.
மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
👉 மார்கழி மாதம் மிகவும் மகத்துவம் நிறைந்த மாதமாகும். வருடம் முழுவதும் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.
👉 மார்கழி மாதம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது பனி. அதிகாலையில் புகைப்போல் படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கிவிடும்.
👉 இவ்வாறு தெய்வீகமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்வோம்...!!
மார்கழியில் செய்யக்கூடியவை :
👉 மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்திலேயே கண் விழிக்க வேண்டும்.
👉 மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
👉 அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வாசலில் வண்ணக்கோலமிட்டு இரண்டு அகல் விளக்குகளை வைக்க மகாலட்சுமியின் அருள் அதிகாலையிலேயே கிடைத்துவிடும்.
👉 ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும்.
👉 அதிகாலையில் பஜனை பாடுவதுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாடுவதும், கேட்பதும் புண்ணியம். இல்லாவிட்டால் கோலம் போடும் நேரத்தில் மட்டுமாவது பாட வேண்டும்.
👉 மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு வரன், பொருத்தம் பார்ப்பதோடு ஜாதக பரிமாற்றமும், கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தமும் செய்யலாம்.
👉 மார்கழி மாதத்தில் நிலம் மற்றும் வீடு வாங்க முன்பணம் கொடுப்பதோடு பத்திர பதிவும் செய்யலாம்.
மார்கழியில் செய்யக்கூடாதவை :
👉 முதல் நாள் இரவே கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.
👉 மார்கழியில் விதை விதைக்கக்கூடாது.
👉 சூரிய உதயத்திற்கு பின்பு தூங்கக்கூடாது.
👉 மார்கழி மாதம் விரதம் மேற்கொள்ளும் கன்னிப்பெண்கள் நெய், பால் சேர்த்த உணவை சேர்க்கக்கூடாது.
👉 மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா, வாடகை வீடு மாறுதல், அலுவலகம் மாறுதல், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்தல், காது குத்துதல், புதிய வீடு மற்றும் புதிய வாகனமும் வாங்கக்கூடாது.

No comments:

Post a Comment

கொடுமுடியின் 'மூன்று முக' பிரம்மா 🪷

 மரமே முகமான அதிசயம்! கொடுமுடியின் 'மூன்று முக' பிரம்மா நமது ஆன்மீக மரபில் படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு நான்கு முகங்கள் என்பது நா...