Tuesday, 23 December 2025

சிறுநீரகங்களுக்கு சேதம் விளைவிக்கும் தினசரி பழக்கங்கள்

 


சிறுநீரகங்களுக்கு சேதம் விளைவிக்கும் தினசரி பழக்கங்கள்

உடலில் சேரும் நச்சுக்களை வடிகட்டவும் திரவங்களை சமநிலைப்படுத்தி நீரோற்றத்தை கண்காணிக்கவும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் சிறுநீரகங்கள் 24 மணி நேரமும் உழைக்கின்றன. அந்த அளவுக்கு மிகவும் கடினமாக உழைக்கும் சில உறுப்புகளில் ஒன்றாக விளங்கும் இவை தினமும் சுமார் 200 லிட்டர் ரத்தத்தை வடிகட்டும் பணியையும் செய்கின்றன. அதனை கருத்தில் கொள்ளாமல் அன்றாடம் மேற்கொள்ளும் சில தவறான பழக்க வழக்கங்கள் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை கொடுத்து நோய் பாதிப்பையும் உண்டாக்குகின்றன. அவை என்னென்ன என்பது பற்றியும் அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
தண்ணீர் பருகாதது
மிக குறைவாக தண்ணீர் குடிப்பது நீரிழப்புக்கு வித்திடும். அதனால் நச்சுக்களை வடிகட்டும் சிறுநீரகங்களில் செயல்பாடு கடும் பாதிப்புக்குள்ளாகிறது. உடல் தொடர்ந்து நீரிழப்புக்கு உள்ளானால் சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக தொற்றுகள் ஏற்படும் அபாயம் உண்டாகும். நாள் முழுவதும் இரண்டும் முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது‌ வெப்பமான சூழல் கொண்ட இடத்தில் வாழ்ந்தாலோ சுறுசுறுப்பான கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலையில் ஈடுபட்டாலோ தண்ணீர் பருகும் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
வலி நிவாரணிகளை அதிகமாக பயன்படுத்துதல் முதுகு வலி தசை வலி உள்ளிட்ட உடல் வலிகள் மூட்டு வலி பல் வலி, தசை வலி மாதவிடாய் கோளாறு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு அடிக்கடியோ, அதிகமாகவோ மருத்துவரின் ஆலோசனை இன்றி வழி நிவாரணிகளை (மாத்திரைகளை) பயன்படுத்துவது சிறுநீரகங்ளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்கக்கூடும். வலி நிவாரணிகள் தற்காலிகமாக வலியை குறைக்கலாம் ஆனால், சிறுநீரக திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அவசர, அவசிய தேவையின் போது மட்டுமே அவற்றை பயன்படுத்த வேண்டும் .
உப்பு அதிகம் சேர்த்தல்
உண்ணும் உணவு, உணவு பதார்த்தங்கள் பலகாரங்களில் அதிகப்படியான உப்பு கலந்திருப்பது சிறுநீரகங்களை கடினமாக உழைக்க செய்திடும். ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்தி விடும். இவையே சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணமாகும். அதிலும் உப்பு பயன்பாடு மிகுந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக பாதிப்பை உண்டாக்கிவிடும். மூலிகைகள் மசாலா பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
பரிசோதனை செய்யாமல் இருத்தல்
நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இவை இரண்டும் சிறுநீரகளுக்கு அதிக ஆபத்தை விளைவிக்க கூடியவை. சிறுநீரகங்கள் நீண்ட ஆயுளுடன் பாதுகாக்க குறிப்பிட்ட இடைவெளியில் நீரிழிவு ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.
சிறுநீரை அடக்குதல் சிறுநீரை அடக்கி வைப்பது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் செயல்பாட்டை சீர்குலைத்து விடும். இதே பழக்கம் தொடர்ந்தால் சிறுநீரக கற்களோ சிறுநீரகத் தொற்றோ ஏற்படக்கூடும். சிறுநீர் பையில் சிறுநீர் அதிகம் தேங்குவதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
புரத உணவுகள் அதிகம் உட்கொள்ளுதல்
உடல் தசைகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு புரதம் மிக முக்கியமானது. அதே வேளையில் அதிக புரதம் உட்கொள்வது ஆபத்தானது. குறிப்பாக சிவப்பு இறைச்சி பதப்படுத்தப்பட்ட உணவுகளில். இருந்து பெறப்படும் புரதம் நாளடைவில் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். பழங்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றில் இருந்து கிடைக்கும் புரதத்தை அதிகம் உட்கொள்வதே சிறந்தது.
தூக்கமின்மையால் அவதிப்படுதல் தூக்கமின்மையால் அவதிப்படுவது சிறுநீரக செயல்பாட்டையும், ஹார்மோன் ஒழுங்கு முறையையும் சீர்குலைக்கும், சிறுநீரகங்களில் சீரான செயல்பாட்டிற்கு இரவில் குறைந்தபட்சம7மணி நேரமாவது தூங்குவது நல்லது. புகைப்பழக்கமும் கூடாது. புகை பிடிப்பது சிறுநீரகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைத்து சிறுநீரக நோய்களுக்கு வழிவகுத்து விடும் .
மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்குமா?
ஆம். நீரிழப்பு சிறுநீரிக செயல்பாட்டை குறைக்கும் காலப்போக்கில் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்

No comments:

Post a Comment

பூண்டின் மருத்துவக் குணங்களால்,

 பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தா...