பச்சை தேங்காய் அமிர்தம்...
இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும். நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.. தேங்காயை எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக மாறி விடும். தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டி தந்து பாருங்கள்.அவ்வளவு ஆரோக்கியம்...
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள். ஆனால் இப்போது மாட்டு பால் ஊத்துவதால் வாழ்நாள் முடிக்கப்படுகிறது
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள். காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ) கருப்பட்டி (அ) தேன் சேர்த்து பாக்கட் பாலைத் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக குடியுங்கள். தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை.

No comments:
Post a Comment