60 வயதுக்கு மேல்.........
அறுபது வயதுக்கு மேல் நிம்மதியாக வாழ வேண்டுமானால் அமைதியாக இருங்கள். குடும்பத்தில் யாரையாவது திருத்தியே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்காதீர்கள்......
உங்கள் சந்தோஷம், நிம்மதி, மன அமைதிக்காக வாழுங்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.....
மற்றவர்களைக் குறை கூறி நிம்மதி, மகிழ்ச்சியை இழக்காதீர்கள். வாழ்க்கை என்னும் கிணற்றின் முக்கால் பகுதியைக் கடக்கவிருப்பதை மனத்தில் கொண்டு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். இறை நம்பிக்கை இருந்தால் பக்தியில் திளையுங்கள், இல்லாதவர்கள் மறை நூல்களுள் மூழ்குங்கள்....
.jpg)
No comments:
Post a Comment