Wednesday, 5 November 2025

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி


அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

*ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது*
*அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்*
*அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது*
*பிரசாதத்தை “ப்ர+சாதம்" என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித்தனர்*
*முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார்*
*பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்*
*சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை*
*அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம் என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி மாலையை ஒப்படைத்தார்*
*யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது திருடுவதாவது இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை என்றான் ராஜா அவ்வளவு நம்பிக்கை முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார் ராஜா அவரிடம், நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே*
*அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா? எனக் கேட்டான் மன்ன நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல் என்றார். சுவாமி திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது என்றான் பார்த்தாயா திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது என்றார் முனிவர்*
*அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி என்ற ராஜா முனிவரை அனுப்பி விட்டான் உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர் சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும் அதைச் சாப்பிடும் போது அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும் அதனால் தான் இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம் பயிரிடும் போதும் சமைக்கும் போதும் சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால் நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்*

வீட்டுக்கு வீடு வாசப் படி...


 வீட்டுக்கு வீடு வாசப் படி...

தகராறு இல்லாத குடும்பம் இல்லை...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்றக் கவலை
இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்றக் கவலை.
ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை என்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.
காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு.
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.
அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடுவதும் உண்டு.
அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் துன்பப்படுவது போலவும் பிரமை வேண்டாம்.
கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சனையோடு வரக்கூடாது
மனைவியும் அவரை கேள்விக்குறிகளோடே வரவேற்கக்கூடாது.
கணவர் எதையும் அடித்துச் சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்துப் பேச கூடாது.
"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால் "எந்த நாய் சொன்னது?" என்ற கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை தன் தவறை ஒத்துக் கொண்டு ."சரி இனிப் பார்த்து வாங்குகின்றேன்" என்றுச் சொல்லி விட்டால் முடிந்தது.
"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்,
"எனக்குத் தெரிந்த லட்சணம் இவ்ளோதான் நீங்க உங்க அம்மா வீட்டுக்கு பொய் சாப்பிடுங்க" என்ற மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.
"இன்னிக்கு உடம்புக்கு முடியல நாளைக்கு நன்றாக சமைக்கின்றேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.
மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்தப் புடவை நன்றாக இருக்கு..
அழகா இருக்கே" என்று சொல்லணும் .
கணவன் வெளியிலிருந்து வரும் பொது "ஏன் இப்படி வியர்த்திருகிறது. எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.
மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.
தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.
படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப்பட்டு சேர்ந்து விட வேண்டும்.
முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம் வார்த்தைகளில் எச்சரிக்கை.
எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.
முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது.
ஒருவரையொருவர் அனுசரித்துப் போனால் உலகையே தனக்குள் அடக்கிக் கொள்ள முடியும்.
இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் பொது இன்னொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.
வாழ்க இல்லறம்.

Tuesday, 4 November 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழும்



முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழும் பழனி கோயில் சிறப்பு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால்
உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன.
பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.
இத்தலம் "பழனி" என அழைக்கப்படுவதன் காரணம், சிவனும், பார்வதியும் தம் இளைய மைந்தன் முருகப்பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப் பெற்றுப் பின்னர் பழனி என மருவியதே என்பர்.
இந்த திருத்தலத்தை
திரு-என்ற இலக்குமி தேவியும்,
ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால்
"திரு ஆ இனன் குடி" என்று பெயர் பெற்றது.
திரு - லட்சுமி
ஆ - காமதேனு
இனன் - சூரியன்
கு - பூமாதேவி
டி - அக்கினிதேவன்
இந்த ஐவரும் முருகனை பூசித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு "திருவாவினன் குடி" என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
*அமைவிடம்:*
மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய மூன்று தென் மாவட்ட நகரங்களுக்கு மையமாக பழனி விளங்குகிறது. இக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வருகிறது. திண்டுக்கல்-கோயம்புத்தூர் ரயில் பாதையில் சுமார் 60 கி.மீ. தொலைவில் எழில் கொஞ்சும் இயற்கை வனப்புடன் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது.
இந்நகரம் மேற்கு தொடர்ச்சி மலைகள் சூழ அமைந்துள்ளது. கடைச்சங்ககாலத்தில் பழனி - பொதினி என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், பழனி என்ற பெயரே நாளடைவில் பொதினி என்று ஆகிவிட்டதாகவும் அகநானூறு கூறுகிறது.
*மலையின் மகிமை:*
பழனிமலை பக்தி மணக்கும் மலை. முருகக் கனி நின்று அருள் சுரக்கும் மலை. சித்தர்கள் செந்நெறி கண்ட மலை. ஞானமும் கருணையும் தென்றலாய் வீசும் ஞான பண்டிதனின் மலை. அஞ்சேல் என்று அபயம் தரும் பஞ்சாமிர்த மலை. திரு நீறு மணக்கும் மலை. தீவினைகள் அகற்றும் மலை. பால் அபிஷேகமும் பஞ்சாமிர்த அபிஷேகமும் அருவிபோல ஓடும் அருள் மலை. அறத்தை நிலை நாட்டவும், தண்டனிட்டோர் துயர் தீர்க்கவும் தண்டு ஏந்திய தண்டாயுதபாணி கோயில் கொண்ட மலை.
திருவாவினன்குடி கோயிலுக்கு அருகில், முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை தீர்த்தமும், கோயிலில் உள்ள மகாலட்சுமி, காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி முதலியவர்களின் சன்னதிகளும், சித்திரங்களும் இவ்வரலாற்றை விளக்குகின்றன.
கயிலையில் முருகப்பெருமானைப் பிரிந்த சிவனும், உமாதேவியும் வருந்தினர். இறைவனைக் குறிக்கும் "சச்சிதானந்தம்" என்ற பெயரில் வருகின்ற "சத்" என்னும் பதம் சிவபெருமானையும், "சித்" என்னும் பதம் பார்வதி தேவியையும், "ஆனந்தம்" என்னும் பதம் முருகப்பெருமானையும் குறிக்கும்.
*பழம் நீ பழனி 😘
முருகனைப் பிரிந்த துயர் தாளாத சிவபெருமானும், உமாதேவியும், முருகனைப் பின் தொடர்ந்து திருவாவினன் குடிக்கு வந்து "பழம் நீ" என்று முருகனுக்குச் சூட்டிய திருப்பெயரே நாளடைவில் மருவி "பழனி" என்று ஆகிவிட்டது என்று பழனி ஸ்தல புராணம் கூறுகிறது.
பழனி மலைமேல் உள்ள கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி, கணபதி, முருகன் ஆகிய சிற்பங்கள் பழத்திற்காக உலகை வலம் வந்த போட்டியையும், மலைமேல் முருகப்பெருமான் சன்னதிக்குத் தென்பாகமாக காணப்படும் கைலாசநாதர் ஆலயம் இறைவனும் இறைவியும் முருகனைப் பின் தொடர்ந்து வந்து சமாதானம் செய்ததையும் உணர்த்துகின்றன.
*முருகனின் திருவிளையாடல் 😘
பொதிகை மலையில் வந்து தங்கிய அகஸ்திய முனிவர் தன் சீடனான இடும்பாசுரனை கயிலை சென்று அங்கு முருகனுக்குரிய கந்த மலையில் காணப்படும் சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி பணித்தார். இடும்பாசுரன் சிறந்த பக்திமானாக இருந்தபடியினால், அகஸ்தியரின் கட்டளைப்படி, தனது மனைவியாகிய இடும்பியுடன் கயிலைக்குச் சென்று சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு குன்றுகளையும், ஒரு பெரிய பிரம்ம தண்டத்தின் இருபுறங்களிலும் காவடியாகக் கட்டித் தொங்கவிட்டு, தோள் மீது சுமந்து கொண்டு வந்தான். முருகன் இதில் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார்.
திருச்சிற்றம்பலம்.

தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் மாத்திரையே போடத் தேவையில்லை..!!


 தினமும் ஒரு கொய்யா சாப்பிட்டால் மாத்திரையே போடத் தேவையில்லை..!!

உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமாகும். உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள். இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.
குழந்தைகளுக்கு
கொய்யாப் பழத்தைச் சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு, வெறும் சதையை எடுத்து அரைத்து, அதனுடன் தேவையான அளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து, தோசையாக வார்த்துக் கொடுக்கலாம். குழந்தைகள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும். தினம் இரண்டு கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது. சிறிய பழங்களாக இருந்தால், மூன்று சாப்பிட முடியும் எனில் நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம்.
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும். கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.
சருமத்துக்கு மிகவும் நல்லது கொய்யா. முகத்திற்கு பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும். தோல் சுருக்கத்தைக் குறைக்கும். பளபளப்புடன் கூடிய இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
நீரழிவு நோயாளிகளுக்கு
நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மூல நோய் உள்ளவர்களுக்கும் கொய்யா தீர்வு தரும்.
தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும். ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.

*சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்? யார் யாரெல்லாம் சாப்பிடலாம்னு தெரிஞ்சிக்கோங்க!!*


 *சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிட்டால் என்ன நடக்கும்? யார் யாரெல்லாம் சாப்பிடலாம்னு தெரிஞ்சிக்கோங்க!!*

மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் அதிக அளவில் ஸ்டார்ச் மற்றும் சர்க்கரைச் சத்து இருக்கும் என்பதால், கிழங்கு வகைகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள்.
ஆனால் பனங்கிழங்கு மட்டும் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.
பனங்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
அதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதேபோல பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச்சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
எனவே அச்சமின்றி இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
பனங்கிழங்கில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது. இது மலச்சிக்கலை சரிசெய்து வயிற்றைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
பனங்கிழங்கில் அதிக அளவிலான புரதமும் நார்ச்சத்தும் இருப்பது மட்டுமல்லாது, நிறைய உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய உடல் எடை அதிகரிக்கும்.
இரும்புச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை தான் ரத்த சோகை.
உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருக்கும்.
ரத்த ஓட்டம் குறைவாக இருப்தே பல பிரச்சினைகளை உடலில் ஏற்படுத்தும் உண்டு.
உடல் பலவீனமாக உள்ளவர்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை எடுத்து, காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?


 தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். தேங்காய் பயன்கள் கிருமிநாசினி உணவு நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்து வெளிப்புற சுற்றுச்சூழல் அனைத்திலும் நுண் கிருமிகள் இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை தொற்றிக்கொண்டு உடல்நல பாதிப்புகளை உண்டாக்குகின்றன. தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமிநாசினியாக திகழ்கிறது. தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்வதோடு, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று ஏற்படாதவாறு காக்கிறது. - Advertisement - பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. மேலும் தேங்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் காக்கிறது. மேலும் பற்களுக்கு பளபளப்பு தன்மையையும் கொடுக்கிறது. சரும நலம் மேம்பட நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது. தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது. தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது. நார்ச்சத்து நாம் தினமும் 3 வேளை சாப்பிடும் உணவுகளில் சிறிதளவாவது நார்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். மற்ற எல்லா உணவுகளை காட்டிலும் தேங்காய் 61 சதவீதம் நார்ச்சத்து கொண்ட ஒரு உணவு பொருளாக இருக்கிறது. தேங்காயை பச்சையாகவே மென்று சாப்பிடுவதால் இந்த நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கிறது. மேலும் உடலில் செரிமானத்திற்கு தேவையான என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கணையத்தில் குளுக்கோஸ் அதிக அளவில் உற்பத்தி செய்து உடலுக்கு மிகுதியான சக்தியை கொடுக்கிறது. தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. தொந்தியை கரைக்க நம்மில் பலர் அன்றாடம் ஒரு வேளையாவது கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்கிறோம். சரியான உடற்பயிற்சி இல்லாமலும், முறையற்ற உணவுப் பழக்கங்களும் கொண்டிருப்பவர்களுக்கு இந்த கொழுப்புச் சத்து நாளடைவில் உடலில் அதிக அளவு சேர்ந்து கொண்டு தொந்தியை ஏற்படுத்துகிறது. மற்ற இடங்களில் படிகின்ற கொழுப்பை காட்டிலும் வயிற்று பகுதியில் படிகின்ற கொழுப்பு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படிவதைத் தடுத்து, தொந்தி ஏற்படாமல் காக்கிறது. உடல் நலனை சீராக்குகிறது. காக்காய் வலிப்பு குணமாக எபிலெப்ஸி என்பது கால் கைகளில் ஏற்படும் வலிப்பு பிரச்சனை. இது காலப்போக்கில் மருவி காக்காய் என தமிழில் அழைக்கத் தொடங்கினர். இந்த கால் – கை வலிப்பு என்பது நரம்பு மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளால் உண்டாகும் ஒரு குறைபாடாகும். குறிப்பாக ஒன்று முதல் பன்னிரண்டு வயதுள்ள குழந்தைகளில் இந்த குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கீட்டோன் சத்து குறைபாடு என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் சத்து குறைவாகவும் அதே நேரம் நன்மை தரும் கொழுப்பு சத்து அதிகமுள்ள ஒரு இயற்கை உணவாக தேங்காய் இருக்கிறது. தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலில் கீட்டோன் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, கால் கை வலிப்பு நோய் குறைவதற்கு பெருமளவு உதவுகிறது. இளமை தோற்றம் ஏற்பட ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, அளவுக்கு மீறிய உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு இளம்வயதிலேயே உடலளவில் முதுமையான தோற்றம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தேங்காயை அடிக்கடி மென்று தின்ன வேண்டும். தேங்காயில் சைட்டோகைனின், கைநெட்டின் டிரான்ஸ் – சீட்டின் போன்ற வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. இவை நமது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக பராமரித்து, உடலுக்கு பலத்தை தருவதோடு இளமையான தோற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சிறுநீரக தொற்று நோய்கள் குணமாக மனிதர்களிலேயே மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி கூடிய நோய்களில் ஒன்று சிறுநீரக தொற்று நோய் ஆகும். இந்த நோய் ஏற்பட்டால் சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய், சிறுநீரகங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, அந்த நபர் ஒருவரை பாதிக்கப்பட்டு ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் மிகுந்த வேதனைக்குள்ளாக்குகிறது. தேங்காயில் கிருமி நாசினி வேதிப்பொருட்கள் அதிகமுள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காயை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு இந்த சிறுநீரக தொற்று நோய் படிப்படியாக குறைந்து சிறுநீரகம் மற்றும் அதை சார்ந்த உறுப்புகள் அனைத்தும் மீண்டும் பழைய ஆரோக்கியத்தை பெறுவதற்கு உதவுகிறது. நீர்சத்து கோடைக்காலங்களில் உடலில் நீர் மற்றும் உப்புச் சத்து இழப்பு தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இக்காலங்களில் உடலில் நீர் சத்து மிகுதியாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தேங்காய் ஒரு சிறந்த நீர்ச்சத்தை வழங்கும் ஒரு உணவாக இருக்கிறது. தேங்காயில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசிய தாது சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அடிக்கடி தேங்காயை மென்று தின்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இதையும் படிக்கலாமே படிகார கல் உண்டாக்கும் மருத்துவ ரீதியிலான நன்மைகள்...

கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்..

 


கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பயன்படுத்துவதை தவிருங்கள்..

வயிற்று புற்றுநோய் உள்ள ஒருவருக்கு கட்டியை பரிசோதித்து போது அந்த கட்டியில் பியுரிடான் எனப்படும் குருணை மருந்தின் வேதியியல் கூறுகள் இருந்தன . பியுரிடான் எனப்படும் மருந்தை இஞ்சி பயிரிடும் விவசாயிகள் 60 கிலோ வரை ஏக்கருக்கு பயன்படுத்துகின்றனர் இவை மண்ணில் கரையும் தன்மைகள் மிக குறைவு இவை முழுவதும் மண்ணில் கரைய 5 வருடங்கள் வரை ஆகலாம்
இஞ்சியின் இடுக்குகளில் இவை அப்படியே படிந்து இருக்கும் போது சரிவர சுத்தம் செய்யாமல் இருந்தால் உள்ளுக்குள் சென்று விஷமாகிறது. கடைகளில் விற்கப்படும் இஞ்சி பூண்டு பசைகளில் இஞ்சின் தோல் நீக்கபடுவது இல்லை.
இஞ்சியானது வயிற்றில் அமில சுரப்பை தூண்டுவதால், ஜீரண மண்டலத்தின் செயல்பாடு துரிதமாகிறது மற்றும் பூண்டின் மருத்துவ பண்பு உடலில் புதுசெல்களை உருவாக்குவதால்
இவற்றை "உணவே மருந்தாக" உட்கொள்ளும் மரபான நாம் கலப்பட விசமான இஞ்சி பூண்டின் விழுதை பயன்படுத்துவதால், பேராபத்து என்பதை உணரருங்கள் .
◆ இஞ்சியின் விலை, பூண்டின் விலை, மதிப்பீடு செய்யுங்கள்.. இவற்றை உள்வாங்கி யோசித்தால்
எப்படி 5 ரூபாய்க்கு ,10 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கும் என்று கொஞ்சம் யோசிக்கவும்
40% கூட இஞ்சி பூண்டு கலவை கிடையாது. ஒருவித சுவையூக்கிகளை பயன்படுத்தி செய்யபடும் கலப்படம். யோசியுங்கள் உங்கள் குடும்ப நலனுக்காக.
தேவைப்படும்போது வாங்கி, சுத்தப்படுத்தி அரைத்துக்கொள்ளுங்கள்..

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.


 நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது...

நாம் உண்ணும் உணவுதான்.
படியுங்கள்.
1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவு.
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு வகைகள்.
6 - பாக்கெட் பால்.
7 - பாக்கெட் தயிர்
8 - நெய்
9 - சீமை மாட்டு பால்
10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.
11 - பொடி உப்பு
12 - ஐயோடின் உப்பு
13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்
14 - பிராய்லர் கோழி
15 - பிராய்லர் கோழி சூனிய முட்டை
16 - பட்டை தீட்டிய அரிசி
17 - குக்கர் சோறு
18 - R.O. பில்டர் தண்ணீர்
19 - அன்றாடம் கொதிக்க வைத்த தண்ணீர்
20 - மினரல் வாட்டர்
21 - குங்குமம், திருநீறு,தீப எண்ணெய்
22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்
23 - Non Stick பாத்திரங்கள்
24 - மைக்ரோ ஓவன் அடுப்பு
25 - மின் அடுப்பு
26 - Boost, Horlicks, Born vita, Cerelac போன்ற சாக்கடைகள்.
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foam படுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர்பானங்கள்
32 - ஜஸ் கீரீம்கள்
33 - அனைத்து மைதா பொருட்கள்
34 - பேக்கரி பொருட்கள்
35 - சாக்லேட்
36 - பல மசாலா பொருட்கள்
37 - இரசாயன கொசு விரட்டி
38 - Ac
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.
40 - பிஸ்கட்டுகள்
41 - பன்னாட்டு சிப்ஸ்
42 - புகைப்பழக்கம்
43 - மதுப்பழக்கம்
44 - சுடு நீரில் குளிப்பது
45 - தலைக்கு டை
46 - துரித உணவுகள்
47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்
48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.
49 - ஆங்கில மருந்துகள்
50 - அலோபதி வைத்திய முறை
51 - உடல் உழைப்பு இல்லாமை
52 - பசிக்காமல் உண்பது
53 - அவசரமாக உண்பது
54 - மெல்லாமல் உண்பது
55 - இடையில் தண்ணீர் குடிப்பது
56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.
57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்
58 - அறியாமை
59 - சுற்றுச்சூழல் மாசுபாடு
60 - கூட்டுப் பெருங்காயம்
அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்.
அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.
மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில்தான் நோய்கள் உருவாகிறது.
உயிர் பிழைக்க ஒரே வழி இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!"


 இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!"

"இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா,பகவானைக் கூப்டு! போயும்,போயும் என்னையா கூப்டுவே?--பெரியவா
(அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!")
நன்றி-- குமுதம் லைஃப்-கௌரி சுகுமார்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், அஸ்ஸாமில் உள்ள டீ எஸ்டேட்டில்,பொறுப்பான பதவியில் இருந்தார். மகாபெரியவாளிடம் அப்படியொரு நம்பிக்கை, ப்ரேமை, அபார பக்தி கொண்டவர் அவர்.
வேலை அஸ்ஸாமில் என்பதால் குடும்பத்தோடு அங்கேயே குடியேறி வசித்தார். காலம் வேகமாக நகர்ந்து அவர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்தது. அவரது பணித்திறமையை அறிந்த அங்கிருந்தவர்கள் அவருக்கு, மேலும் நிறைய சம்பளத்தோடு அங்கேயே வேலை தருவதாகவும் அங்கேயே இருக்குமாறும் சொன்னார்கள். ஆனால் அதை ஏற்காமல், அப்படியே நிராகரித்தார்.
"ஓய்வுக்குப் பிறகும் சம்பாதிப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதை ஏன் மறுக்கிறீர்கள்? என்ன காரணம்? என்று சிலர் கேட்டார்கள்.
"பணம் சம்பாதிச்ச வரை போறும்.இனிமே ஆத்ம திருப்திதான் சம்பாதிக்கணும். அதுக்கு மகா பெரியவா காலடியல என்னோட மிச்ச வாழ்நாளை செலவிடப்போறேன்...!" தன்னுடைய அசைக்க முடியாத முடிவைச் சொன்னார்
யாருக்கு வரும்? பணம் சம்பாதித்தது போதுமென்ற மனஸ்?
புறப்பட வேண்டிய நாளுக்கு சில நாட்கள் முன்னதாகவே குடும்பத்தாரை முதலில் காஞ்சிபுரத்துக்கு அனுப்பிவிட்டார். அவருக்கு இன்னும் முடித்துக் குடுக்க வேண்டிய பொறுப்புகள் கொஞ்சம் இருந்தது. அவருடைய பொறுப்பான பதவிக்காக, வீட்டில் இருக்கும் பணியாட்கள் தவிர, அவரோடு எப்போதுமே ஒரு பணியாளும் இருப்பான்.
எல்லாரும் ஊருக்குப் போன ரெண்டு மூணு நாட்களில் தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு மறுநாள் மெட்ராஸுக்கு புறப்பட டிக்கெட் ரிஸர்வ் செய்திருந்தார்.
முந்தின நாள் இரவு, தன்னோடு கூட இருந்த பணியாளை அனுப்பிவிட்டார். இவர் மட்டும் தன்னந்தனியாக எஸ்டேட் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
நடுராத்திரி திடீரென்று அவரால் மூச்சு விட முடியவில்லை. எழுந்து ஒரு வாய் ஜலம் குடிக்கலாம் என்றால், நெஞ்சில் ஒரு பெரிய பாறாங்கல்லை அழுத்துவது போல் சுமை! இதயத்துடிப்பே சீரற்றுத் துடித்து கொஞ்சம் கொஞ்சமாக நின்று போய்விடும்போல் தோன்றியது.
திணறினார்,தவித்தார்,உருண்டார்,புரண்டார்...அத்தனை வேதனையிலும் மனசுக்குள் 'ஆபத்பாந்தவா! அனாத ரக்ஷகா!சந்திரசேகரா! காஞ்சி மடத்துக் கருணாகர தெய்வமே! என்று அலறினார்.எப்படியோ தட்டுத் தடுமாறி, எப்போதும் தன்னுடைய தலைமாட்டில் வைத்திருக்கும் மகா பெரியவாளுடைய படத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
'பெரியவா எனக்கு என்னவோ பண்றது.நெஞ்சை அடைக்கிறது என்னால மூச்சு விட முடியலை! நீங்கதான் எனக்கு ரக்ஷை! மனசுக்குள் மருகியபடியே பெரியவா படத்தை இறுக்கி அணைத்துக் கொண்டபடி, கண்களில் கண்ணீர் வழிய, தாங்க முடியாத வலியோடு தவித்தவர், எப்படியோ அப்படியே தூங்கிப் போனார்!
மறுநாள் நன்றாக விடிந்ததும்தான் தூக்கம் கலைந்தது. தூங்கி எழுந்தபோது,படுக்கையிலிருந்து விழுந்த பெரியவா படத்தைப் பார்த்ததும்தான், தான் நேற்றிரவு பட்ட கஷ்டம் அவருக்கு நினைவுக்கே வந்தது.
அன்று ஊருக்குப் போக வேண்டும் என்பதால்,எதற்கும் டாக்டரிடம் ஒரு நடை போய், செக்கப் பண்ணிக்கொள்ளலாம் என்று டாக்டரிடம் போனார்.
இ.சி.ஜி. எடுத்து ர்ப்போர்ட்டை பார்த்தார் டாக்டர்.
"உங்களுக்கு நேத்திக்கு ராத்திரி ரொம்ப சிவியரா மாசிவ் அட்டாக் வந்திருக்கு! நீங்க என்னடான்னா, ஒண்ணுமே நடக்காத மாதிரி இப்படி ஆஸ்பத்திரிக்கு நடந்தே வந்திருக்கீங்களே? ஆச்சரியமா இருக்கு! உண்மையைச் சொல்லணும்னா, நீங்க இந்தக் கடுமையான அட்டாக் வந்த பிறகு பிழைச்சிருக்கீங்கறதே பெரிய விஷயம்! இப்ப இந்த ஸெகண்டே இங்கே அட்மிட் ஆயிடுங்க.ஒரு அடி கூட எடுத்து வைக்கக்கூடாது!"
மிகக் கடுமையான ஹார்ட் அட்டாக்கிலிருந்து அந்த தீனபந்துவைத் தவிர வேறு யார் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்?
பயங்கர வலி வந்ததும்,இவர் நெஞ்சோடு சேர்த்துக் கட்டியணைத்துக் கொண்ட மகாபெரியவா, அப்போதே அவரது ஹார்ட்டை சரி செய்ததோடு, வலியால் அவஸ்தைப் பட்ட தன்னை, அணைத்துக்கொண்ட குழந்தையை தூங்கப் பண்ணியும் இருக்கிறார்.
மறுநிமிஷம் உடல் முழுக்க குப்பென்று வியர்த்தது அவருக்கு. தான் பிழைத்தது மறுபிழைப்பு என்று அவருக்குத் தோன்றியது. மகாபெரியவாளை நினைத்துக்கொண்டு,அவர் இருக்கும் திசை நோக்கி கையெடுத்துக் கூப்பி வணங்கினார். கண்ணீரை அடக்க முடியவில்லை அவரால்.தெய்வத்தின், குருவின் துணையிருந்தால் வேறென்ன கவலை?
டாக்டர் அட்மிட் ஆகச் சொன்னதை மறுத்தார். "நான் இன்னிக்கே ஊருக்குப் போயாகணும்! என்ன ஆனாலும் சரி ஆசார்யாளோட காலடியிலயே போய் சரணாகதி அடைஞ்சுடறேன். அவர் என்னைப் பார்த்துப்பார். என்னோட அந்த தெய்வம் என்னைக் காப்பாத்தும்!" அசைக்க முடியாத நம்பிக்கையோடு அன்றே ரிஸர்வ் பண்ணிய டிக்கெட்டில் ஊருக்குக் கிளம்பி விட்டார்.
ஹ்ருதயத்தைத்தான் எப்பவோ பரமாசார்யாகிட்டே ஒப்படைச்சாச்சே. அப்புறம் என்னத்துக்கு பயம்? துளிக்கூட வலி இல்லாம வந்து சேர்ந்தார்.
ஊரு வந்ததும்,குடும்பத்தாரிடம் ஏன் மனைவியிடம் கூட, எதுவுமே சொல்லவில்லை. 'முதலில் பெரியவாளை தரிசனம் பண்ண வேண்டும்!புறப்படுங்கோ' அப்படின்னு மட்டும் சொல்லி தரிசனம் பண்றதுக்காக காஞ்சி மடத்துக்கு வந்து சேர்ந்தார்.
ஆசார்யாளுக்கு முன்பாகச் சென்று அந்த பக்தரின் குடும்பத்தினர் எல்லாரும் போய் நமஸ்காரம் பண்ணியதும், இந்த பக்தரை குறுகுறுவென்று பார்த்த பரமாசார்யா, மெல்லிய குரலில் கேட்டார். ."இப்போ ஒடம்பு எப்படியிருக்கு? தேவலையா?
ஆசார்யா அப்படிக் கேட்டதும் அந்த பக்தரின் மனைவியும் மற்றவர்களும் திகைத்துப் போனார்கள்.!
"ஏன்? ஒங்க ஒடம்புக்கு என்ன ஆச்சு? பெரியவா ஏன் இப்படிக் கேட்கிறார்?" தவிப்போடு கேட்டார்கள்.
பக்தர் பேசாமல் நிற்க, பெரியவாள் சிரித்துக் கொண்டே "இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா பகவானைக் கூப்டு! போயும், போயும் என்னையா கூப்டுவே? அன்னிக்கு ஒன்னை பகவான்தான் காப்பாத்தியிருக்கார்".-என்று சொன்னார்.
கொஞ்சமும் யோசிக்காமல் அந்த பக்தர் சொன்னார்.
"ஆமாம் பெரியவா! அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!"
கண்களில் நீர் பெருக்கெடுக்க மகாபெரியவாளை மறுபடியும் நமஸ்கரித்த பக்தர், பெரியவா தந்த பழத்தைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு நகர்ந்தார்.

*கோவிலில் ஏன் பலிபீடம்..?* 🌹


 *கோவிலில் ஏன் பலிபீடம்..?* 🌹

பலிபீடத்தை எப்படி வணங்குவது?
அதை தொட்டால் பாவமா?
கோயிலில் கொடி மரத்திற்கு அருகில் இருக்கும் சிறிய மேடை போன்ற பலி பீடத்தின் முக்கியத்துவம் என்ன அதை எப்படி வணங்குவது என்பதை விரிவாக பார்ப்போம்....
அனைத்து கோயில்களிலும் இருக்கும் ஒரு சிறு மேடை போன்ற அமைப்பிற்குப் பலி பீடம் என பெயர். இந்த பலிபீடம் ஒவ்வொரு ஆலயத்திலும் கோபுர வாசலுக்கும், கொடி மரத்திற்கும் இடையில் அமந்திருக்கு மேடை போன்ற பலி பீடம்.
கோயிலில் ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்குவதற்கு ஒவ்வொரு விதி இருப்பதைப் போல, அதாவது கோயிலில் நுழைந்ததும் விநாயகரை வழிபட்டு தலையில் கொட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடுவது போன்ற சில விதிமுறைகள் பலி பீடத்தை வணங்குவதிலும் உண்டு.
பலி பீடம் என்றால் என்ன?
ஒவ்வொரு நாளும் கோயிலில் நித்ய பூஜை செய்து, கடவுளுக்கு நெய் வேத்தியம் அர்ப்பணிக்கப்படும். அப்படி செய்த பின்னர் கொடி மரத்திற்கு அருகில் இருக்கும் இந்த பலி பீடத்தில் சிறிது நெய் வேத்தியம் வைக்கப்படும். அதனை அனைத்து தெய்வங்களும் வந்து சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம்.
பலி பீடத்தைத் தொடக் கூடாது
இப்படி தினமும் பூஜிக்கப் படும் பலி பீடத்தை, நாம் கோயிலுக்கு சென்றால் அதை தொட்டு வணங்குவதோ, அல்லது அதை உரசிச் செல்வதோ கூடாது என்கிறது சாஸ்திரம். அதை நாம் சற்று தள்ளி நின்று வணங்குவது தான் நல்லது.
பலி கொடுக்கும் இடமாக பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால், அந்த பலிபீடத்தை நாம் உரசிச் சென்றால் கூட ஒரு முறை குளிக்க வேண்டும் என ஆகம விதி கூறுகின்றது.
இதே போல் சிவன் கோயிலில் இருக்கும் நந்தி சிலையின் காதில் நம் பிரார்த்தனைகளை சொல்லுதல் கூடாது. அவரை தொடாமல் வணங்கி நம் பிரார்த்தனைகளை முன் வைக்க வேண்டும் என்பது மரபு.🌹

Monday, 3 November 2025

#நுரையீரல்_பிரச்சனைக்கு_தீர்வு



அரை ஸ்பூன் விழுதி இலை பொடியை எடுத்து நன்றாக குழைத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து 21 நாட்கள் வீதம் குடித்து வந்தால் கருமுட்டைகள் உருவாக்கம் அதிகரிக்கும். கருமுட்டை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைப்பேறு விரைவில் நடக்கும். பெண்களுக்கு வெள்ளை வேட்டை பிரச்சனையும் நீங்க கூடும்.
மூட்டு வலி என்றால் எலும்பு தேய்மானம் மட்டும் அல்ல, மூட்டுகளில் வாய்வு நீர் சேர்வதும் கூட மூட்டு வலிக்கு காரணமாகலாம். இந்த மூட்டுகளில் இருக்கும் நீர் வெளியேறினாலே மூட்டு வலி பாரம் குறையக்கூடும். அதற்கு இந்த விழுதி இலை பொடியை சேர்க்கலாம். இதை சூப் போன்று செய்து குடிப்பதன் மூலம் பலன் கிடைக்கும்.விழுதி இலை பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சிறிது மிளகை இடித்து சேர்த்து தூளாக்கி விடவும். பிறகு சீரகம், பூண்டு சேர்த்து சிறிது விளக்கெண்ணெயில் தாளித்து குழைத்த விழுது சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கி கொத்துமல்லி தழை, உப்பு சேர்க்கவும். ரசம் போல் செய்து சாதத்தில் அல்லது அப்படியே சூப் ஆக்கி குடித்து வரவேண்டும்.
தொடர்ந்து ஒரு மண்டலம் வரை குடித்து வந்தால் மூட்டுகளில் வலி காணாமல் போகும். விளக்கெண்ணெய் ஒப்புகொள்ளாதவர்கள் நல்லெண்ணெய் சேர்க்கலாம். இதை குடிக்கும் போதே படிப்படியாக மூட்டு வலி குறைவதை உணர்வீர்கள்
இது உடல் அசதி, இடுப்பு வலி, கை, கால் வலி பிரச்சனைகளையும் குறைக்கும் .வாதங்களால் உண்டாகும் கட்டிகள், வீக்கங்கள் போன்றவற்றை கரைக்க விழுதி இலை பொடி பயன்படுத்தப்படுகிறது. கட்டிகள் உடையாமல் இருந்தால் விழுதி இலை பொடியை நன்றாக குழைத்து அதை கட்டிகள் இருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும்.
கட்டிகள் இருக்கும் இடத்தை சுத்தமாக கழுவி காலை , இரவு என இரண்டு வேளை பற்று போட்டு வந்தால் கட்டிகள் கரையும், வீக்கம் வற்றும், சகலவிதமான நோய்களை போக்கும் தன்மை விழுதி இலை பொடிக்கு உண்டு.
சளி, இருமல், காய்ச்சல் காலங்களில் தலை குளிக்கவே அச்சப்படுவோம். ஆனால் இந்த விழுதி இலை பொடிகள் இந்த மூன்றையும் இல்லாமல் செய்து விடும்.
சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது விழுதி இலை பொடியை எடுத்து குழைத்து அதன் சாறை எடுத்து சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கி ஆறவைத்து அதை தலையில் தடவி குளித்து வந்தால் இருமல், சளி, காய்ச்சல் ஓடி விடும். பதமாக தைல பதத்துக்கு காய்ச்சி பயன்படுத்தவும்.விழுதி இலை பொடி வாதம் பித்தம் கபம் மூன்றையும் கட்டுப்படுத்தி சமநிலையில் வைக்க செய்யும். உடல் பலவீனம் நீக்கி தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும்.
சிலருக்கு நடந்தால் படிக்கட்டுகளில் ஏறினால் இறங்கினால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சுவாசம் சீராக இருந்தாலும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூடும். இவர்கள் விழுது இலை நீரை 48 நாள் (1மண்டலம் ) கண்டிப்பாக பருக வேண்டும்.
நாள் பட்ட தீராத சளி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்ய உதவும் 

Sunday, 2 November 2025

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்


 ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான்.

அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான்.
அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர்.
இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள்.
சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள்.
இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம்.
எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான்.
மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.
குளத்து நீரை கையில் எடுத்து முகத்தை கழுவி, படியில் சோர்வாக அமர்ந்தான்.
ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார்.
"என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார்.
கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது.
என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.
அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது.
என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்?
ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா.
ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.
குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான்.
'ராஜா... நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்.
மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான்.
இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார்.
வா... இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார்.
'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார்.
குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார்.
சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை.
இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.
அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது.
'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க.
"நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா.
இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான்.
ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்.
கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்.
கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான் என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்.
நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்.
நல்லதே நடக்கும்.
சும்மாவா சொன்னார்கள்.

உலர் திராட்சையை தினமும்

 


உலர் திராட்சையை தினமும் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பாதாம், உலர் திராட்சை, பிஸ்தாவை ஏன் நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டுமென்று சொல்கிறார்கள் தெரியுமா? உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்தோ அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்தோ சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
* இரத்த சோகை உள்ளவர்கள், இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.
* கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.
* சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.
* உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.
* மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.
* பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
* ஆண்கள் க்கு ஏற்படும் நரம்பு தளர்சி தளர்வுத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.
* எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், உலர் திராட்சையை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் வளமாக இருப்பதால், இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்...

பாட்டி சொன்ன ரகசிய வைத்தியம் ..




 பாட்டி சொன்ன ரகசிய வைத்தியம் ......

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைக்கவும். பின் ஆற வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய்
கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப் குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிளை இஞ்சி, சீரகம் முன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து, வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
. குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி, தூளாக்கி வெந்நீரில் போட்டு உட்கொள்வதினால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்று புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணை

தர்பை புல் வீட்டில் இருந்தால்

 


தர்பை புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.
இந்த புல் வீட்டில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது!
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும்போதும், அம்மாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்கும்போதும் கையிலும் பிண்டத்தோடும் பயன்படுத்தப்படுவது, தர்ப்பை புல். அதற்கு அவ்வளவு மகிமை உள்ளது.
தர்ப்பை புல், இறைவனுக்கும், ஜீவனுக்கும் தொடர்புடைய பாலமாக கருதப்படுகிறது.
தர்பை சுபத்தை, புனிதத்தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.
இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது. நமது உடலில், வெளியிலிருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.
தர்பைக்கு அக்னிகற்பம் என்பது பெயர். இந்த புல், தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர்.
அக்கிரஸ்தூலமுடையது பெண் தர்பை, மூலஸ்தூலம் உடையது அலி தர்பை, அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது, ஆண் தர்பை.
ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிககளை கடத்தி சக்தியை அளிக்கும்.
நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில், கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது. விசேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தர்பை புல்லை அணிவிப்பார்கள் மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது .
ஆகவே தர்பை பவித்ரம் போடும் பொது, பிரபஞ்ச சக்தி, விரல் மூலம் மூளைக்கு செல்கிறது; உடலிலும் பரவும். கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தர்பையை போடுவது வழக்கம்.
தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும்,
தர்பை, உஷ்ண விரீயமும் அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்துக்கு, மின்சாரத்.ைதை கடத்தும் சக்தி உண்டு, அ.ேதே சக்தி, தர்.ைபைக்கும் உண்டு. எல்லா ஆசனங்களை காட்டிலுமும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும். அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும், சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும், பித்ரு காரியங்களாலும், தேவ காரியங்களுக்கு 5 தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு 7 தர்பைகளாலும் மோதிரம் முடியவேண்டும்.
தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். எனவே கிரஹன காலங்களில் உணவு பொருட்களில் கதிர்வீச்சின்றி காக்க, தர்பையை பயன்படுத்துகிறோம். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின் நடமாட்டம் இருக்காது.
தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.
இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும்; மன உளைச்சல் நீங்கும்; நல்ல உறக்கம் கிடைக்கும்; ஆரோக்கியம் நீடிக்கும்.


Saturday, 1 November 2025

கீழாநெல்லி


 கீழாநெல்லி

இது எதோ வயல் வரப்பில் கிடக்கு சும்மா என்று இளக்காரமா இருக்க கூடாது இதில் இருக்கும் சமாச்சாரம் வேறு
என்னதான் கசப்பு சுவை உடையதாய் இருந்தாலும்
இது உயிர் காக்கும் மூலிகை
கீழாநெல்லி இலையை அரைத்து சாறு எடுத்து 20 மில்லி அளவில் காலை, மதியம், மாலை என மூன்று வேளை எடுத்துக் கொண்டே வர வேண்டும்.
மற்றொரு முறையிலும் சாப்பிடலாம். அதே 20 மில்லி அளவு கீழாநெல்லியை சுத்தமான பசும்பால் வெதுவெப்பாக இருக்கும்போது கலந்து குடித்து வர காமாலை குணமடையும்.
தோல் நோய்களுக்கு கீழாநெல்லி
தோல் நோய்களுக்கு கீழாநெல்லி
சொறி, சிரங்கு உள்ளிட்ட கடுமையான தோல் நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கீழாநெல்லிக்கு உண்டு.
ஒரு கைப்பிடி கீழாநெல்லி இலையுடன் 4 கிராம்பு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் கழுவி விடலாம்.
இதை தொடர்ந்து செய்து வர, சரும நோய்கள், சரும வீக்கம், உடல் உஷ்ணம், சரும அரிப்பு, ஆகியவற்றை சரிசெய்யும்.
நீரிழிவை கட்டுப்படுத் கீழாநெல்லி
நீரிழிவை கட்டுப்படுத் கீழாநெல்லி
கீழாநெல்லி பொடியை கால் ஸ்பூன் அளவு மட்டும் எடுத்து ஒரு கப் தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, அரை டம்ளராக வற்ற விடுங்கள்.
இதிலிருந் 20 மில்லி அளவு மட்டும் தினமும் குடித்து வர, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டு்ப்படுத்த முடியும்.
வெண்புள்ளிகள் மறைய கீழாநெல்லி
தோலில் வெண்புள்ளிகள் சிலருக்கு இருக்கும். சிலருக்கு அது உடல் முழுவதும் பரவ ஆரம்பித்து விடும்.
இந்த வெண்புள்ளிகளுக்கு பல்வேறு சிகிச்சை முறைகள் சமீப காலங்களில் வந்திருக்கின்றன. வெண்புள்ளிகள் உள்ள இடத்தில் மேற்பூச்சாகவும் அதன் சாறை உள்மருந்தாகவும் எடுத்து வர வெண்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
காயங்கள் குணமாக கீழாநெல்லி
கீழாநெல்லியில் இருக்கும் நெல்லிக்காய் போன்ற சிறு சிறு காய்கள் உலர்ந்த நிலையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இந்த காய்களை வாங்கி தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைத்து காயங்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்து வர புண்கள் வேகமாக ஆறும்.
ஆப்தஸ் புண்கள்
வாய்களின் ஓரத்திலும் உதட்டின் உள்பகுதியிலும் கொப்புளங்கள் அல்சர் போன்று உண்டாகும். இந்த வாய்ப்புண் மற்றும் கொப்புளங்களை சரிசெய்ய கீழாநெல்லி உதவி செய்யும்.
கீழாநெல்லியின் வேர் மற்றும் இலைகளை இடித்து கஷாயம் செய்து அந்த கஷாயத்தை வைத்து வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் மற்றும் கொப்புளங்கள் ஆறும்.
வயிற்றுப்போக்கை நிறுத்த கீழாநெல்லி கஷாயம்
கீழாநெல்லி இலைகளைக் கொழுந்தாகப் பறித்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கஷாயத்தைத் தயாரித்து ஒரு ஸ்பூன் அளவு கஷாயத்தை காலை, மதியம், மாலை என மூன்று வேளை குடிக்க வயிற்றுப் போக்கு கட்டுக்குள் வரும்.
காய்ச்சலை குறைக்கும் கீழாநெல்லி
கீழாநெல்லி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம், சோம்பு, மிளகு, 2 கிராம்பு, சிறிது துளசி ஆகியவற்றைச் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு கஷாயம் செய்ய வேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இரண்டு வேளை குடித்து வர காய்ச்சல் குறைய ஆரம்பிக்கும்.
கோனோரியாவை குணமாக்கும் கீழாநெல்லி
கீழாநெல்லியை அரைத்து வடிகட்டி சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
50 மில்லி அளவு கீழாநெல்லி சாறை எடுத்து அதோடு 20 கிராம் அளவு வெண்ணைய் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வர கொனேரியா விளைவுகள் குறையும்.
அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் கீழாநெல்லி
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் சிலருக்கு உதிரப்போக்கே வருவதில்லை. ஆனால் சிலருக்கு உதிரப்போக்கு மிக அதிகமாக இருக்கும். இதனால் உடல் சோர்வு, வயிறு வலி என பல பிரச்சினைகள் உண்டாகும்.
அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும்போது, 4 ஸ்பூன் கீழாநெல்லி சாறுடன் சிறிது எண்ணெய் சேர்த்து காலை மற்றும் இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ள ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
சொறி, சிரங்கைப் போக்கும் கீழாநெல்லி
சருமத்தில் சொரியாசிஸ், சொரி மற்றும் சிரங்கு பிரச்சினை உள்ளவர்களுக்கு கீழாநெல்லி மிகச்சிறந்த மருந்தாக இருக்கும்.
கீழாநெல்லி இலைகளுடன் அந்த காய்களையும் சேர்த்து மைய அரைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர, சொறி, சிரங்கும் அதனால் ஏற்பட்ட அரிப்பும் குறைய ஆரம்பிக்கும்.
கல்லீரல் நோய்களை தீர்க்கும் கீழைாநெல்லி
முறையாக கழிவுகள் வெளியேற்றப்படாத போது, கொழுப்புகள் அதிகமாக சேருவது, மஞ்ச்ள காமாலை என பல்வேறு விதங்களில் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக கல்லீரல் சிரோசிஸ் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் கீழாநெல்லி மிகச்சிறந்த மருந்தாக இருக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவு கீழாநெல்லி பொடியைச் சேர்த்து கலந்து குடித்து வர, கல்லீரல் நோய்கள் குறைந்து, டீடாக்ஸ் செய்து கல்லீரலைப் புதுப்பிக்கும்.
படர்தாமரையை சரிசெய்ய கீழாநெல்லி
கீழாநெல்லியின் விதைகள் படர்தாமரையையும் அதனால் ஏற்படும் அரிப்பையும் சரிசெய்ய உதவி செய்யும்.
கீழாநெல்லியில் உள்ள காய்களை தண்ணீர் விட்டு மைபோல அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள்.
அந்த பேஸ்ட்டை படர் தாமரை உள்ள இடத்தில் அப்ளை செய்து வர படர்தாமரை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
சீறுநீர்ப்பாதை தொற்றுக்கு தீர்வாகும் கீழாநெல்லி
சிறுநீர்ப் பாதை தொற்று வெயில் காலத்தில் மட்டுமின்றி குளிர்காலத்திலும் அதிகமாக வரும். குளிர்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க கழிவறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
இந்த சமயத்தில் தொற்று ஏற்படாமல் இருக்கவும், இருக்கும் தொற்றை சரிசெய்யவும் ஒரு கைப்பிடி கீழாநெல்லி, அரை கைப்பிடி அளவு சங்குப்புல்லையும் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நெல்லிக்காய் அளவுக்கு இந்த பேஸ்ட்டை எடுத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வர, சிறுநீர்ப்பாதை தொற்று குறையும்.

*உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா?* 💚❤️


 *உடல்நலத்தை பாதுகாக்க தினமும் விட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாமா?* 💚❤️

விட்டமின் மாத்திரைகள் தயாரிக்கும் தொழில்துறை மிகவும் வளர்ச்சியடைந்து வருகிறது.
மிண்டல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வின்படி, பிரிட்டனில் உள்ளவர்களில் பாதி பேர் விட்டமின் மற்றும் தாது சத்து மாத்திரைகளை தினமும் உட்கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.
பலரும் அதனை ஒரு குறைபாட்டை சரிசெய்துகொள்ள எடுத்துக்கொள்வதில்லை. மாறாக, நம் உடல் ஆரோக்கியத்துக்கு அது பலம் சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
பெரும்பாலானவை விட்டமின்களும் தாதுக்களும் கலந்த மல்டி-விட்டமின் மாத்திரைகளாக கிடைக்கும்பட்சத்தில், எது உடலுக்கு நன்மை (அப்படி ஏதெனும் இருந்தால்) தரும் என்பதை அறிவது கடினம்.
உங்கள் உடல் நலத்தை காக்க மொத்தம் 13 வைட்டமின்கள் தேவை. ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் மாத்திரை வடிவத்தில் உட்கொள்ள வேண்டுமா?
இரண்டு வகையான விட்டமின்கள் உள்ளன: ஒன்று, கொழுப்பில் கரைகின்றவை மற்றும் நீரில் கரைகின்றவை.
1. கொழுப்பில் கரைகின்ற விட்டமின்கள் (வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே) நம் உடலால் சேமிக்கப்படுபவை. அதனால், இந்த விட்டமின்களை மாத்திரை உட்கொள்ளாமலே பேணிக் காத்துக்கொள்ள முடியும். இதன் மற்றொரு விளைவு என்னவென்றால், அளவுக்கு அதிகமாக நீங்கள் உட்கொண்டு விடலாம். இதனால், அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் அவசியம்.
2. நீரில் கரைகின்ற விட்டமின்கள் (ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின் சி மற்றும் பி) உங்கள் உடலால் சேமிக்க முடியாதவை. இதனை, நீங்கள் சீராக உட்கொள்ளவேண்டும். ஆனால், இதில் ஏதேனும் ஒன்றை தேவைக்கு அதிகமான அளவில் உட்கொண்டால், அவற்றை சிறுநீர் மூலம் அதிகம் வெளியேற்றுவீர்கள். ஆனால், விட்டமின் பி12-ஐ கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.
மல்டி-விட்டமின் மாத்திரைகளில் சில தாதுச் சத்துகளையும், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் (Zinc) போன்றவையும் உள்ளன. நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலம் இந்த தாதுச்சத்துகள் கிடைக்கும். அதனால், இந்தச் சத்துகள் அதிகமாக தேவைப்படும் நிலையில் நீங்கள் இல்லாத பட்சத்தில், இதுவே போதுமானது.
கால்சியம் - வலுவான எலும்புக்கு உங்களுக்கு ஒரு நாளைக்கு கால்சியம் 700 மில்லி கிராம் (எம்.ஜி) தேவைப்படும்.
துத்தநாகம்
- துத்தநாகம் உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்துக்கும் தேவைப்படும். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 7 எம்.ஜியும், ஆண்களுக்கு 9.5 எம்.ஜியும் தேவை.
இரும்புச்சத்து - உணவு மூலம் கிடைத்த ஆற்றலை உடலுக்கு பரப்பவும், ஆக்சிஜனை ரத்தம் முழுவதும் கொண்டு சேர்க்கவும் இரும்புச்சத்து தேவை. 19 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு ஒரு நாளைக்கு 14.8 எம்.ஜியும், ஆண்களுக்கு 8.7 எம்.ஜியும் தேவை.
இலையுதிர் காலத்திலும், குளிர் காலத்திலும், விட்டமின்-டி மாத்திரையை உட்கொள்ளலாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை (NHS) அந்நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. விட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவும்; இது நம் பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். விட்டமின்-டி மக்னீசியத்தையும் பாஸ்பேட்டையும் உறிஞ்ச உதவும்.
பசியின்மை இருப்பவர்களும் முதியோரும் ஒரு குறிப்பிட்ட மல்டி விட்டமினை எடுத்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். உங்களின் மருத்துவர் உங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தலாம். முதியோரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் உள்ளவர்களும் விட்டமின்-டி மாத்திரைகளை ஆண்டு முழுவதும் உட்கொள்ளலாம். உணவிலிருக்கும் கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு இது உதவும்.
நீங்கள் உங்கள் விருப்பமாகவோ அல்லது உடல் எடை குறைக்கவோ, டயட் காரணமாக சில உணவுகளை தவிர்த்தால், அத்தகைய உணவுகளில் காணப்படும் சத்துகளைக் கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம். நீங்கள் மிகவும் குறைவான கலோரி கொண்ட டயட்டில் இருந்தால், மல்டி -விட்டமின் மாத்திரைகளை பயன்படுத்த நிச்சயம் பரிசீலிக்கலாம்.
மாத்திரைகள் தேவைப்படும் உணவு முறைகள் மற்றும் உடல்நிலை
1. பால் பொருட்கள் சேர்க்காத டயட்டில் உள்ளவர்கள், கால்சியம் மற்றும் அதன் வலுக்கொண்ட மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
2. இறைச்சி முட்டை, பால் பொருட்களை உண்ணாத 'வீகன்' உணவர்களுக்கு விட்டமின் பி12 மற்றும் கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதை ஈடுகட்ட மாத்திரைகள் அல்லது டானிக் எடுத்துக்கொள்ளலாம்.
3. மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும் பெண்கள், அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இரும்புச்சத்து எடுத்துக் கொள்ள முடியாமல் இருக்கலாம். 35 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 4.8 சதவீத பேருக்கு இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை உள்ளது. 12 சதவீத பேருக்கு மிகவும் குறைவான இரும்புச்சத்து உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ளும் முன்னர், உங்கள் மருத்துவரை அணுகவும்.
4. பெண்களில் கருவுற முயல்பவர்கள், முதல் 12 வாரங்களில் இருக்கும் கர்ப்பிணிகளும் ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை உட்கொள்ளலாம். இது பிறக்கும் குழந்தைக்கு முதுகு நாண் பிறவி குறைபாடு உட்பட நரம்புக் குழாய் சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும்.
பல ஆண்டுகளாக குளிரை எதிர்கொள்ள மக்கள் விட்டமின்- சி உட்கொண்டு வருகின்றனர். இது எதிர் ஆக்சிகரணிகள் (antioxidant) என்பதானால், சிறந்த உணவாக பெயர் எடுத்திருக்கிறது. ஆனால், தொற்று., நோய் கடுங்குளிருக்கான அறிகுறிகள் ஆகியவற்றை தடுக்கும் என்பதற்கு மிகக் குறைந்த ஆதாரமே உள்ளது. நம் உடல் அதிக அளவிலான வைட்டமின் சியை சேகரிக்க இயலாது. அதனால், நீங்கள் அதிக அளவு உட்கொள்ளும்போது, அதிக அளவு சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.
காய்கறிகளிலும் பழங்களிலும் விட்டமின்-சி பரவலாக உள்ளது. ஓர் ஆரஞ்சுப் பழத்தில் கிட்டத்தட்ட 70 எம்.ஜி உள்ளது. அதனால், குறைபாடு என்பது மிகவும் அரிதே.
விட்டமின்களும் தாதுக்களும் தேவைப்படும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இது உங்களின் வயது, செயற்பாடு அளவு, பாலினம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொறுத்தது.
விட்டமின்-டி தவிர நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் ஆரோக்கியமான சரியான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் பெற முடியும் என்று பெரும்பாலான நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஆனால், பலரும் பரிந்துரை செய்யப்படும் அளவில் (Reference Nutrient Intakes - RNI) ஊட்டச்சத்துகளை உட்கொள்ளத் தவறுகின்றனர் என்று தேசிய திட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆய்வு காட்டுகிறது. அவர்கள் முறையான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றவதை தவிர்த்து அவர்களே மல்டி-விட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.
நீங்கள் உரிய நேரத்தில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதே உங்கள் உடலை ஊட்டச்சத்துடன் வைத்துக் கொள்ள சிறந்த வழி!

ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு*

 ஐப்பசி அன்னாபிஷேக ரகசியம் பற்றிய பதிவு* *ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்...