●
உணவு_என்றால்_அது_கெட்டுப்_ போக_வேண்டும்
●தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும்! - அப்படி வைக்கிறதா?
●பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! - அப்படி அழுகி விடுகிறதா?
●காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! - அப்படி புழுவைக்கிறதா?
●நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...! - அப்படி வண்டு வைக்கிறதா?
ஆக
எது கெட்டுப்போகிறதோ!
எதுபுழு வண்டு வைக்கிறதோ!
எது அழுகி நாற்றமெடுக்கிறதோ!
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது வண்டுவைத்து குப்பைக்கு போகிறதோ!
அவைகள் மட்டுமே
இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கில்லாத
உணவுப் பொருள்கள்.
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும்
பாட்டில் வாட்டர்,
கேன் வாட்டர்
எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??
☆ பழமுதிர் சோலைகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரமானாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்கள் என்று எப்படி நம்புகிறோம்???
இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது இதையெல்லாம் பார்க்கத்தானே செய்கிறோம்...
பிறகு ஏன்...?
பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாத கமகம மணத்தில் விற்பனை செய்யப்படும் சக்தி ஆச்சி மசாலா பாக்கெட்டுகளை கூடையில் பெருமையாக வாங்கி செல்கிறோம்
ஒன்றை எல்லோரும் தெரிந்து கொள்வோம்
ரெடி மேடு உணவு பொருள்கள்
பாக்கெட்டில் அடைத்து வைத்திருக்கும் எல்லாமே, குறிப்பாக நம் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் எல்லாமே
நஞ்சுதான் நஞ்சுதான்...
ஒரு பொருளை டி.வி.விளம்பரத்தில் காட்டினாலே அது நிச்சயம் தரமான பொருளாக இருக்காது, அந்த பொருட்களை வாங்கினால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை...
கெட்ட உணவுப் பொருள்களை பெரிய கடைகளில் வாங்குவது என்பது இப்போது ஒரு கவுரவமாக எண்ணும் மனப்போக்கு உருவாகியிருகிறது.....
அதை விடக் கொடுமை..
மெகா மருத்துவமனை சிகிச்சை எடுப்பதையும் அதற்காக செலவு செய்வதை பற்றியும்
பெருமையாக பேசுவதும் இப்போது ஒரு சமூக கௌரவமாக கருதப்படும்......

No comments:
Post a Comment