Monday 26 June 2017

வாழ்க்கை வரிகள்

                                                   வாழ்க்கை  வரிகள்

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.
ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!
மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..
சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..
மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..
புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!
வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!
அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!
நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!
நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்
வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,
அதை காலில் தான் அணிய முடியும்.
குங்குமத்தின் விலை மிகக்குறைவு,…
அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள்.
இங்கு விலை முக்கியமில்லை,
அதன் பெருமை தான் முக்கியம்.
உப்பு போன்ற கடினமான வார்த்தைகளால் நம்மை திருத்துபவன் உண்மையான நண்பன்….
சர்க்கரை போன்ற இனிப்பான வார்த்தைகளால் நம்மை புகழ்பவன் நயவஞ்சகன்.
புழுவுற்ற உப்பும் புழுவுறாத இனிப்பும் இவ்வுலகில் உள்ளதாக இதுவரை வரலாறு இல்லை.
இங்கு
கோயில்கள்,
மசூதிகள்,
திருத்தலங்கள் வேடிக்கையானவை,
பணக்காரன் உள்ளே சென்று பிச்சை எடுக்கிறான், ….
ஏழை வெளியில் நின்று பிச்சை எடுக்கிறான்,…
ஆக ஏதோ ஒரு வகையில் அனைவரும் பிச்சை எடுப்பவர்களே.
காணாத கடவுளுக்கு பஞ்சாமிர்தம் படைப்பார்கள்,
கண்கண்ட கடவுளுக்கு பழைய சோறும், கிழிந்த துணியும் கொடுப்பார்கள்.
மனிதப் பிறவி சிறப்பானதாகத் தெரியவில்லை,
ஏனெனில் பிறக்கும்போதும் அழுகை,
சாகும்போதும் அழுகை,
இடையில் எல்லாம் நாடகம்…..
தீங்கு விளைவிக்கும் மது விற்கும் இடத்திற்கு ஓடோடி போவான்,
அமுதமாம் பால் விற்பவர் வீடு வீடாக தெருத் தெருவாக வெயிலில் சுற்றுகிறார்.
பால்காரரைப் பார்த்தால் பாலில் தண்ணீர் ஊற்றுகிறார் என்று சண்டையிடுவார்கள்,….
தண்ணீரில் நஞ்சுகளை கலந்து விற்கும் பானங்களை தலைமீது வைத்து கொண்டாடுகிறார்கள்.
மாலை போட்ட மாப்பிள்ளைக்கு முன் ஊரேகூடி கொண்டாடும்,….
மாலை போட்ட மாப்பிள்ளையின் பிணம் வந்தால் எல்லோரும் பிணத்திற்கு பின்னால் வருவார்கள்.
மனிதனின் பிணத்தை தொட்டால் அல்லது பார்த்தாலே தீட்டு எனக் குளிக்கும் மனிதன்,
வாயில்லா ஜீவன்களை பிணமாக்கி வகைவகையாச் சமைத்து விழா எடுப்பார்கள்.
இவ்வளவு தான் மனிதனின் வாழ்க்கை. இதுக்கெதற்கு
கோபம்,
விரோதம்,
வீண்பழி,
கொலை,
கொள்ளை,
காழ்ப்புணர்ச்சி?
எது நமதோ அது வந்தே தீரும்.
யாராலும் தடுக்கமுடியாது.
நமதில்லாதது…நமக்கில்லாதது… எது செய்தாலும் வராது. யாராலும் தரவும் முடியாது.
வாழும் வரை வாழ்க்கை…
வாழ்ந்து காட்டுவோம் மற்றவர்களின் இதயத்தில்……


No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...