Tuesday 13 June 2017

வாழ்ந்து காட்ட வேண்டும்* ❗ ● பூமியில் விதைக்கப்பட்ட விதை

வாழ்ந்து காட்ட வேண்டும்* ❗ ● பூமியில் விதைக்கப்பட்ட விதை


● பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது.

● ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது.

● பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன.

● மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன.

● ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன.

● சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன.

● தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல்
அதில் வாழ்ந்து காட்டுகின்றன.

● ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன.
இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் நம்மால் வாழ முடியாதோ❓

*எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை.*
*அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ வேண்டும்?*
*அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ வேண்டும்?*
*அதை ஏன் தப்பிக்கப் பார்க்க வேண்டும்?*
*அதை ஏன் அழுதுகொண்டு வாழ வேண்டும்?*
*மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்ந்து தான் பார்ப்போமே.!*
இது உன் வாழ்க்கை என்றபோது மிச்சம் இருப்பது ஆனந்தத்தை தவிர வேற என்ன இருக்கிறது.
ஆகவே,
 
*ஆனந்தமாக வாழ்வோம், வாழ்ந்து காட்டுவோம் உலகுக்கு ஒருசான்றாக.*
👍👍👍
ஓம்_சிவாயநம_ஓம்...!
கோபுரத்தின்_முன்_நின்றுப்
பார்_உன்_ஆணவம்_அழியும்.**

கடலின்_முன்_நின்றுப்_பார்
நீ_என்ற_கர்வம்_தவிடுபொடியாகும்**

மலையின்_முன்_நின்றுப்_பார்
உன்_தற்ப்பெருமை_மறையும்**

அருவியின்_முன்_நின்றுப்_பார்
உன்_கோபம்_எனும்_பேய்_மடியும்**

தோகை_விரித்தாடும்_மயிலின்
முன்_நின்றுப்_பார்_உன்_அழகு_இல்லாமல் #போகும்**

காடுகளின்_முன்_நின்றுப்_பார்
உன்_அகங்காரம்_தொலைந்துப்_போகும்**

வெட்டவெளி_வானத்தின்_முன்
நின்றுப்_பார்_நீ_யார்_என்றுப்_புரியும்**

  ஓம்_நமசிவாய_ஓம்_நமசிவாய..! 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...