Tuesday 13 June 2017

நான்... நான்... நான்...*_ *நா

                                           நான்... நான்... நான்...*_ *நா 


*நான்* தான் சம்பாதித்தேன்,
*நான்* தான் காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி  செய்தேன்,
*நான்* உதவி செய்யலனா? என்ன ஆவது?
*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், *நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!...
*நான்* தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் கிட்னியை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான் காயை பழமாக மாற்றுகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ? 

இயக்குகிறானோ? அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு.
அவன் தான் *இறைவன்.*
அவன் தான் *அல்லா.*
அவன் தான் *கர்த்தர்.*
அவன் தான் *பிதா.*
அவன் தான் *Almighty.*
அவன் தான் *God.*
அவன் தான் *ஆதி.*
அவன் தான் *அனாதி*
அவன் தான் *பிறப்பு இறப்பு அற்றவன்.*
அவன் தான் *எல்லாம்.*

ஆம்.......
அவன் தான் *"உன்னுள் இருந்து உன்னை இயக்கி, உன்னை *நான்* என்று சொல்லவும் வைக்கிறான்."*
*அவன்* உனக்கு நோயைக் கொடுத்து, பின் குணமாக்கி, ஆரோக்கியத்தின் சிறப்பையும் அவசியத்தையும் உணர வைக்கிறான்.*

*அவன்* அன்பும், கருணையும் நிறைந்தவன்.
ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பும் கருணையுமாய்* நடந்து கொள்ளுங்கள்.
*அன்பும் கருணையுமே* அனைத்து விதமான துன்பப் பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல்.
*எல்லா உயிர்களிடத்தும் அன்பையும் கருணையையும் பரிமாறிக் கொள்வோம்.*
.             
.            
.   *நாம் இறைவனை உணர்ந்தவர்கள்*
*இதை ஏற்றுக் கொண்ட நீங்களும் இறைவனே!*
📢திருமந்திரமும் சிவகதிக்கு வித்தாம்
திருமந்திரமும் சிவமாம்📢

வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தான்நின்று அழைக்கும் சொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கும் அதுபோல் என்நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே
💐விளக்கம்💐

             விண்ணிலிருந்தபடியே மழையானது தானாகப் பொழிந்திடும்.அதைப்போல இறைவானான சிவபெருமானும் தானே வலிய வந்து தன் திருவருளைப் பொழிந்தருளுவார் என்று சிலர்அவனை நினையாது இருந்திடுவர்.பசுவின் இளங்கன்றானது தான் பால் அருந்திட வேண்டித்தன் தாயான பசுவை அழைப்பதைப் போன்று எம் இறைவனானநந்தியெனும்சிவனை நான் இப்போது அழைப்பது மெய்ஞ்ஞானம் பெற வேண்டியே ஆகும்.
*வாழ்க வளமுடன்!!!❗
அறிந்த அனைத்தையும் அறிவித்தோர் இல்லை...
அறிவித்த அனைத்தையும் அறிந்தோரும் இல்லை...
அறிந்த பலரிடம் அறிந்ததும்,அனுபவ
அறிவும் இணைந்ததே அறிவின் வளர்ச்சியாம்...
*நாம்  நம்மை காப்பதாக நினைக்கிறோம்*
*அது உண்மை இல்லை*
*ஈசன் தான் நம்மை*

*கண் இமை காப்பது போல் காப்பாற்றுகிறார்*

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...