Monday 5 June 2017

மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. (கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்)

மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. (கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்) 


நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.
பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.
மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.
நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.
இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.
தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.
எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.
எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை.

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

 வாழ்வை வளமாக்கும்
சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம்
எப்போதும் குழந்தைத்தனம்
காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத்
தெரியவேண்டுமானால் பிறர்
தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப்
பொருளை விலைக்கு வாங்குபவன்
திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய
ஆரம்பிக்கிறதோ அப்போதுதான்
வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும்
முதலீடு எப்போதுமே கொழுத்த
வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த
வரமும் இல்லை. கெட்ட
மனைவியை விட மோசமான
சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக்
குடிக்கிறான்.
பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர்
சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக்
கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட
ஒழுக்கமான ஒரு பெண்
வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள
எல்லோரும் நடந்து விடலாம்.
ஆனால் இரண்டு கை உள்ள
எல்லோருமே எழுதிவிட
முடியாது.
10.
உழைப்பு உடலை வலிமையாக்கும்.
துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த
தவறை ஒத்துக்கொள்ள
வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள்
என்ன? அவன் நேற்றைவிட
இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது.
உங்கள் அறியாமையினால்
அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள்.
பாராட்டு கிடைக்கும்.
பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும்.
அன்பு செலுத்துங்கள்.
அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள்
அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.
அன்பில்
வணிகத்திற்கு இடமில்லை.
வணிகத்தில்
அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன்
தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான்.
அடக்கம் அணிகலன் மட்டுமல்ல.
அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின்
ஆடைகள். அவற்றைக்
கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும் உடுத்தக்
கூடாது.
16.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத்
தோன்றும். ஊக்கமுள்ளவனுக்க
ு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும்,
நோக்கமும் இல்லாத
வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில்
நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும்,
திடமாகவும்,
சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின்
வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால்
நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும்
பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில்
அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல.

செய்வதை விரும்புவதில்தான் 

நீ எனதுபதிவு கள் நிச்சயமாக உங்கள் மனதில் சிம்மாசனம் இடும் ! பதிவுகளை  படித்தவர்கள் கருத்துக்களை பதிவு செய்யுகள்

 

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...