Friday 6 September 2019

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!

பெருமக்களேமாணவர்களேஇளைஞர்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். எண்ணங்கள் செயலாகின்றன.ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நிணைவுக்கு யார் வருகிறார்தாமஸ் ஆல்வா எடிசன்தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்ரைட் சகோதரர்கள்நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும்
போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார்.ஏன் கடலின் நிறமும்அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லைஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம்
செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்ததுஅந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான்
சர் சி.விராமனுக்கு ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது.ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.


ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களேஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறதுஏனென்று தெரியுமாஉங்களையும்
மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காகஅந்த மாய வலையில் நான் விழமாட்டேன்நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த
வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இருஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும்மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம்.

நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம்வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு
இலட்சியம் வேண்டும்.

அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும்பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும்எண்ணம்
உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.










நீங்கள் எல்லோரும் வெற்றியடையவளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்அந்த கவிதையின் தலைப்பு, “வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்” என்பதாகும்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன்
நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்,
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்,
நான் பிறந்தேன் கனவுடன்,
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்,
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த,
நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன்,
நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க,
நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன்.
தவழவே மாட்டேன்ஆகாய உச்சிதான் என் லட்சியம்.
பறப்பேன்பறப்பேன்வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும்.


நீ யாராக இருந்தாலும் உழைப்பால்அறிவால் வெற்றியடைவாய்நான் ஒரு கிராம சூழ்நிலையில் வளர்ந்தேன்படித்தேன்வளர்ந்தேன்,
வளர்ந்து கொண்டே இருக்கிறேன்நம் நாட்டில் 75 கோடி மக்கள் 6 லட்சம் கிராமங்களில் வாழ்கிறார்கள்இளைய சமுதாயம் இங்கு எங்கிருந்தாலும்,
கிராமத்தில் இருந்தாலும்நகரத்தில் இருந்தாலும்படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும்படிக்காத குடும்பத்தில் இருந்து வந்தாலும் உங்களால்
வெற்றியடைய முடியும்என் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் 5-ம் வகுப்பு படிக்கும்போது நானும்என் இனிய நண்பன் ராமசாமியும் பக்கத்தில் உட்கார்ந்து இருப்போம்அவரது வீட்டில் தான் மின்சாரம்
இருந்ததுபரீட்சைக்குப் படிக்கும் போதெல்லாம் அவரது வீட்டுக்கு சென்று தான் படிப்பேன்எங்கள் இருவரது குடும்பத்திற்கும் பல்வேறு நிலையில் வேற்றுமைகள்
இருந்தாலும்ஓர் ஒற்றுமை இருந்ததுஅது எங்களுடைய பெற்றோர்கள் நண்பர்கள் என்பது தான்எனவேநாங்களும் நண்பர்களாக இருந்தோம்நானும்என்
நண்பனும் படிப்பிலும் எண்ணங்களிலும் ஒரே விதமாக செயல்பட்டோம்.


1936-40-ம் வருடங்களில் பரீட்சை சமயத்தில் பகல் நேரங்களில் என்னுடைய வீட்டில் நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்போம்இரவில் அவரது
வீட்டில் சேர்ந்து மின்சார ஒளியில் ஒன்றாக படிப்போம்படித்துபடித்து முன்னேறினோம்பல தடைகள் எங்கள் முன்னேற்றத்தை தடு்க்கவில்லைஅது
எவ்வாறு முடியும்.

பினாச்சியோ என்ற பிரஞ்சு கவிஞர் சொல்கிறார்.


நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்நீ எண்ணியது உன்னை வந்து சேரும்

என்னுடைய கருத்து என்னவென்றால் உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்குஅதை அடைய
உழைப்பு முக்கியம்உழைஉழைத்துக்கொண்டே இருஇத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
மாணவ நண்பர்களேஉங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்னஎத்தனை பேர் என்ஜினியர்டாக்டர்கலெக்டர்ஆசிரியர்தொழில் அதிபராக கனவு
காண்கிறீர்கள்எத்தனை பேர் விண்வெளியில் நடக்கவும்சந்திரனிலும்செவ்வாய் கிரகத்திலும் நடக்க விரும்புகிறீர்கள்?









கடந்த 12 ஆண்டுகளில் இதுவரை நான் 1.2 கோடி இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன்அவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இருக்கிறேன்அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில் கிட்டத்தட்ட 1 லட்சம் இளஞர்கள் கூடிய கூட்டத்தில் எத்தனை பேர் என்ஜினியர்டாக்டர்ஐஏஎஸ்ஐபிஎஸ் அதிகாரிகள்ஆசிரியர்கள்தொழில் அதிபர்களாகப் போகிறீர்கள் என்று கேட்டேன்அதற்கு 100 இளைஞர்கள் கையைத் தூக்கினார்கள்.

எத்தனை பேர் சந்திரனுக்கும்வியாழன் கிரகத்திற்கும் போக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன்அனைவரும் கையைத் தூக்கினார்கள்எத்தனை
பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். 50 இளைஞர்கள் நாங்கள் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறோம் என்றார்கள்.
அதில் 5 பேரைத் தேர்ந்தெடுத்துஅவர்களிடம் நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்ஒரு மாணவன் இந்தியாவை 10 ஆண்டுக்குள்
வளர்ந்த நாடாக மாற்றுவேன் என்று சொன்னார்லஞ்சத்தை ஒழிப்பேன் என்று ஒரு மாணவி கூறினார்இன்னொரு மாணவன் – இளைய சமுதாயத்தை என்னால்
முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துநம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பேன்அப்படியென்றால் இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை
உருவாக்குவேன் என்ற நம்பிக்கையை கொடுப்பேன் என்றார்எங்கு சென்றாலும் இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையைலட்சியத்தைகனவைப் பார்க்கிறேன்.

எனது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழிநடத்தியது திருக்குறள் தான்.
எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்ததுஅதைக் கேளுங்கள்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும்மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டைஆகும்எத்தகைய
சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும்.







பூமிக்கு கீழேபூமியிலேபூமிக்கு மேலே உள்ள எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் மனஎழுச்சி கொண்ட இளைஞர்கள் தான் மிகப் பெரிய சக்திஇந்தியா
60 
கோடி இளைஞர்களை பெற்ற நாடுஇளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியாஒரு வகையில் மக்கள் தொகை இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.



உறக்கத்திலே வருவதல்ல கனவுஉன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவுகனவு காண்பது ஒவ்வொரு குழந்தையின்,
இளைஞர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான விஷயம்ஒவ்வொரு இளைஞருக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் வேண்டும்அந்த லட்சியம்
நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்தொடர்ந்து அறிவைப்பெற அதை தேடிச் சென்றடைய வேண்டும்விடா முயற்சி வேண்டும்அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.




அறிவைப் பெற்று அறிவார்ந்த சமுதாயத்தை அமைக்க வேண்டும் என்றால் அதற்கான அறிவின் இலக்கணம் என்ன என்று பார்ப்போம்.
அறிவின் இலக்கணம் என்ன தெரியுமாஅதற்கு மூன்று தன்மைகள் அவசியம்அது என்னவென்றால்அதற்கு ஓரு
சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.



அறிவு = கற்பனை சக்தி + மனத்தூய்மை + உள்ள உறுதி









கற்பனை சக்தி


கற்றல் கற்பனைச் சக்தியை வளர்க்கிறது
கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறனை தூண்டுகிறது
சிந்தனை அறிவை வளர்க்கிறது
அறிவு உன்னை என்ன ஆக்குகிறதுதெரியுமா?……….
மகானாக்குகிறது.

கற்பனை சக்தி உருவாவதற்கு குடும்ப சூழ்நிலையும்பள்ளி சூழ்நிலையும் தான் மிக முக்கிய காரணங்களாக அமையும்அந்த சூழ்நிலை உருவாவதற்கு என்ன
வேண்டும்ஒவ்வொருவரது உள்ளத்திலும் மனத்தூய்மை வேண்டும்.


மனத்தூய்மை


எண்ணத்திலே மனத்தூய்மை இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை இருந்தால்
உலகத்தில் அமைதி நிலவும்.


எல்லாவற்றிக்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை இச்சிறு கவிதை மூலம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

மனத்தூய்மை எங்கிருந்து வரும்மூன்றே மூன்று பேர்களிடம் இருந்து தான் இதை கற்றுக்கொள்ள முடியும்அவர்கள் யார்அவர்கள் தான் தாய்தந்தை மற்றும்
ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்.




உள்ள உறுதி


புதிய ண்ணங்களை உருவாக்கும் உள்ள உறுதி இன்று என்னிடம் உள்ளதுஎனக்கென்று ஒரு புதிய பாதையை உருவாக்கி அதில் பயணம் செய்வேன்முடியாது என்று எல்லோரும் சொல்வதை என்னால் முடியும் என்ற மன உறுதி என்னிடம் உருவாகிவிட்டதுபுதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை செய்ய முடியும் என்ற உள்ள உறுதி என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது.

நண்பர்களேஉள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன்அது எப்படி வரும்யார் மூலம் வரும்நல்ல மனிதர்கள்நல்ல ஆசிரியர்கள்ந்ல்ல புத்தகங்கள்
இவைகள் உள்ளத்தில் உறுதி பெற வைக்கும்அது நாம் எக்காரியத்தையும் செய்யலாம்செய்ய முடியும்செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியும்,
நம்பிக்கையையும் அளிக்கிறதுமனதில் உறுதி இருந்தால் வெற்றி அடைவீர்கள்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...