Thursday 26 September 2019

ஒரு ரோஜா செடி

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார், அவர்
ஆசையாக ஒரு ரோஜா செடியை அவர்
வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தார்..
அந்த செடி அழகாக பூத்து குலுங்கியது..
அந்த செடி வளர்ந்து வரும் வேளையில் அந்த
பக்கமாக வரும் ஆடு,
மாடு கோழி போன்றவை அந்த
செடியை மிதிப்பதும், கடிப்பதுமாக நாசம்
செய்து கொன்டிருந்தன.. இதை கண்ட அந்த
பெரியவர் அந்த செடியை பாதுகாக்க
என்னி அந்த ரோஜா செடியை சுற்றிலும் சில
முள் வேலிகளை போட்டு வைத்தார்..
ரோஜா செடியை சுற்றிலும் முள் வேலிகள்
இருந்ததால் அந்த செடி பாதுகாப்பாக
வளர்ந்து வந்தது.. இப்போது ஆடு, மாடு,
கோழிகளால அந்த செடிக்கு ஆபத்து இல்லை..
சிறிது காலம் சென்றது அந்த பெரியவர்
இறந்து விட்டார்..
பிறகு அவருடைய மகன் வந்தான், அந்த
செடியை பார்த்தான் தன் தந்தை ஆசையாக
வளர்த்த செடி ஆயிற்றே என்று அவனும்
ஆசையாக தன்னீர் ஊற்றி வளர்த்து வந்தான்..
சிறிது காலத்தில் அவனும் இறந்து விட்டான்.
பிறகு அவனுடைய மகன் வந்து இது, என்
தாத்தாவும் தந்தையும் வளர்த்த செடி நானும்
வளர்க்க வேண்டும் என்று அவனும் தண்ணீர்
ஊற்றி வளர்க்க ஆரம்பித்தான்..
இப்படியே ஒவ்வொரு தலைமுறையும் அந்த
செடியை வளர்த்து வருகிறோம்.. ஆனால்
உண்மையில் நடந்தது அந்த
ரோஜா செடி பெரியவர்
காலத்திலேயே பட்டுப்போய் விட்டது,
இப்போது அவர்கள்
செடி என்று வளர்ப்பதெல்லாம்
அதை சுற்றி இருந்த முள் வேலிகளையே..
இதே போலத்தான் பெரியவர்கள் மதம்
என்று ஒன்று உருவாக்கியது மனிதனை செழுமைப்படுத்த
வேண்டும் என்ற நோக்கிலேயே, அந்த மதம்
அழியாமல் இருக்க முள்
வேலி போன்று மதத்திற்க்கு சில சம்பிரதாய
சடங்குகளை விதித்தனர்.. ஆதியில்
மதத்தை கடைபிடித்த மனிதன்
இப்போது ஒவ்வொரு மதத்திலும் இருக்கும்
சம்பிரதாய சடங்குகளையே மதம்
என்று என்னி கடைபிடிக்க
ஆரம்பித்து விட்டான்..
இன்று ஒவ்வொரு மதத்திலும் இருக்கும்
உண்மையை பின்பற்றுவோர் வெகுசிலரே..
இரண்டுபேர் சேர்ந்து ஒரு தொழில்
செய்து வந்தார்கள்.
முதல் நபர் இரவில் ஒரு ஊருக்குள் சென்று
“தாரை“
ஜன்னல் மற்றும் கதவுகளின் மேல்
பூசிவிட்டு வந்து விடுவான்.
இரண்டு, மூன்று நாட்களுக்குப்பின்
இரண்டாவது நபர் அந்த
“தாரை“ சுத்தம் செய்து கொடுப்பவனாக
அதே ஊருக்குள் வருவான்.
கேட்பவர்களுக்கு சுத்தம் செய்து கொடுத்து
பணம் பெற்றுக்கொள்வான்.
அதேசமயம் முதலாமவன் வேறொரு ஊரில் தார்
பூசிக்கொண்டிருப்பான்.
இந்தவிதத்தில் அவர்கள் நன்கு பணம்
சம்பாதித்தார்கள்.
சிறந்த வேலை, முதலீடு இல்லை.
ஒருவன் ஐன்னல்களை கெடுத்துக்
கொண்டே போகவேண்டியது,
மற்றவன் அவைகளை சுத்தம் செய்து தர
வேண்டியது.
*****
இதைத்தான் காலங்காலமாக
உனது பூசாரிகள், உனது சாமியார்கள்,
உனது அரசியல்வாதிகள்
எல்லாம் செய்துவருகிறது.
அவர்கள் உன்னை அழித்துவிட்டு
பிறகு உதவக் காத்திருப்பார்கள்.
அவர்கள் முதலில் உன்னை புதைகுழிக்குள்
தள்ளிவிட்டு,
பிறகு புனித காப்பர்களாக
உன்னைக் காப்பாற்ற காத்திருப்பார்கள்.
முதலில் உன்னை புதைகுழிக்குள்
தள்ளியது யார்.
ஆனால் உன்னை புதைகுழிக்குள்
தள்ளாவிட்டால்
அவர்கள் எப்படி காப்பாற்றும் புனிதர்களாக
முடியும்.
ஆகவே அவர்கள் புனிதர்களாக காட்டிக்கொள்ள
உன்னை முதலில் புதைகுழிக்குள்
தள்ளியே ஆகவேண்டும்.
அப்போதுதான் அவர்கள் உன்னைக்
காப்பாற்றமுடியும்.
அவர்களது பெயர்கள் சரித்திரத்தில்
இடம்பெறும்,
மேலும் அவர்களது பெருமை பல
நூற்றாண்டுகளுக்கு
பேசப்படும்.
இவர்களிடம் நீ எச்சரிக்கையாக இரு .

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...