ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்

Monday, 9 September 2019

கீதையில்_மனித_மனம்

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/


 மனிதனின் மனதைப் பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.
#கண்ணன்_சொல்கிறான் :
#அர்ஜுனா !! எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப - துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு."
#அர்ஜுனன்_கேட்கிறான்
"மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை. காரணம், உள்ளம் சஞ்சலமுடையது."
"கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது,"
பகவான் கூறுகிறான் :
"தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்க முடியும்."
இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார் :
"கீழே கொட்டிய கடுகைப் பொறுக்கி எடுப்பது வெகு சிரமம். அதுபோலப் பல திசைகளிலும் ஓடும் மனத்தை ஒருமைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதித்துவிட முடியும்."
- மனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பதுபற்றி பரந்தாமன் அர்ஜுனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத் கீதையின் தியானயோகமாகும்.
சகல காரியங்களுக்கும் - இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நன்மைக்கும் தீமைக்கும், இருட்டுக்கும் வெளிச்சத்திற்கும், பாவத்திற்கும், புண்ணியத்திற்கும், அன்புக்கும் வெறுப்புக்கும் மனமே காரணம்.
மனத்தின் அலைகளே உடம்பைச் செலுத்துகின்றன.
பகுத்தறிவையும் மனம் ஆக்ரமித்துக் கொண்டு வழி நடக்கிறது.
கருணையாளனைக் கொலைகாரனாக்குவதும் மனம்தான். கொலைகாரனை ஞானியாக்குவதும் மனம்தான்.
அது நோக்கிச் செல்லும் தடங்களின் அனுபவத்தைப் பெற்றுப் பேதலிக்கிறது. அப்போதுதான் அறிவு வேலை செய்கிறது.
எந்த அனுபவங்களையும் கொண்டு வருவது மனம் தான்.
இது சரி, இது தவறு என்று எடை போடக்கூடிய அறிவை, மனத்தின் ராகங்களை அழித்துவிடுகின்றன.
உடம்பையும் அறிவையும் மனமே ஆக்ரமித்துக் கொள்வதால், மனத்தின் ஆதிக்கத்திலேயே மனிதன் போகிறான்.
என்ன இந்த மனது?
காலையில் துடிக்கிறது. மதியத்தில் சிரிக்கிறது. மாலையில் ஏங்குகிறது. இரவில் அழுகிறது.
"இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்." என்றிருக்க மனம் விடுவதில்லை. ஒரே சீரான உணர்ச்சிகள் இந்த மனத்துக்குத் தோன்றுவதில்லை.
எவ்வளவு பக்குவப்பட்டாலும் மனத்தின் அலைகளாலேயே சஞ்சலிக்கிறான்.
கடிவாளம் இல்லாத இந்த மனக் குதிரையை அடக்குவது எப்படி?
"வைராக்கியத்தால் முடியும்" என்கிறது கீதை. அதையே சொல்கிறார் பகவான் ராமகிஷ்ணர்.
அது என்ன வைராக்கியம்
உள்ளத்தை ஒருமுகப்படுத்துவது எந்த நிகழ்ச்சிகளுக்கும் அசைந்து கொடுக்காமல் இருப்பது.
மெழுகு போல் இருக்கும் மனதை மரக்கட்டை போல் ஆக்கவிடுவது.
ஆசாபாசங்களில் இருந்து மனதை மட்டும் ஒதுக்கி வைத்து விடுவது. பந்த பாசங்களில் இணங்கிவிடாமல் இருப்பது.
பற்றறுப்பது, சுற்றுச் சூழ்நிலைகள் வெறும் விதியின் விளையாட்டுகளே என்று முடிவு கட்டிவிடுவது.
நடக்கும் எந்த நிகழ்ச்சியும் இறைவனின் நாடகத்தில் ஒரு காட்சியே என்ற முடிவுக்கு வருவது.
ஜனனத்துக்கும் மரணத்துக்கும் இடைப்பட்ட வாழ்க்கை, சாட்டை இல்லாப் பம்பரம்போல் ஆட்டிவைக்கப்படும் வாழ்க்கையே என்று கண்டு கொள்வது.
துன்பத்தைத் தரக்கூடிய விஷயங்களை அலட்சியப்படுத்துவது.
இன்பமான விஷயங்களைச் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வது.
பிறர் தனக்கிழைத்த துன்பங்களை மறந்துவிடுவது, மன்னித்துவிடுவது.
முயற்சிகள் தோல்வியுறும்போது, இதற்கு இறைவன் சம்மதிக்கவில்லை. என்று ஆறுதல் கொள்வது.
கணநேர இன்பங்களை அவை கண நேர இன்பங்களே என்று முன் கூட்டியே கண்டு கொள்வது.
ஆத்மா என்னும் மாயப்புறா அமரும் மாடங்களெல்லாம் நம்முடைய மாடங்களே" என்ற சமநோக்கத்தோடு பார்வையைச் செலுத்துவது.
காலையில் இருந்து மாலை வரை நடந்த நிகழ்ச்சிகள் ஆண்டவனின் கட்டளையால் செலுத்தப்பட்ட வாகனங்களின் போக்குத்தான் என்று அமைதி கொள்வது.
சொல்வதற்கும் எழுதுவதற்கும் சுலபமாக இருக்கிறது. ஆனால் எப்படி இது முடியும்?
பகவத் தியானத்தால் முடியும்.
அதிகாலையில் ஓர் அரைமணி நேரம், இரவிலே ஓர் அரைமணி நேரம், கோவிலிலோ வீட்டுப் பூஜை அறையிலோ தனிமையில் அமர்ந்து வேறு எதையும் நினைக்காமல் இறைவனையே நினைப்பது.
இறைவனை நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மனம் வேறு திசையில் ஓடினால் அதை இழுத்துப் பிடிப்பது.
பாசத்திலே மூழ்கிக் கிடந்த பட்டினத்தார் `ஞானி' யானது இப்படித்தான்.
தேவதாசிகளின் உறுப்புகளிலேயே கவனம் செலுத்திய அருணகிரிநாதர், ஆண்டவனின் திருப்புகழைப் பாடியதும், இப்படித்தான்.
இயற்கையாகவே கல்வியாற்றல் பெற்றிருக்கும் ஒரு கவிஞன், ஒரு பொருளைப் பற்றிக் கவிதையில் சிந்திக்கும் போது, அவன் மனம் கவிதையிலேயே செல்கிறது.
அதில் லயிக்கிறது, ரசிக்கிறது, சுவைக்கிறது.
அப்போது ஓர் இடையூறு, குறுக்கீடு வந்தாலும் அவனுக்கு ஆத்திரம் வருகிறது.
கண்கள் திறந்திருக்கின்றன. மனம் கவிதையில் ஆழ்ந்து கிடக்கிறது. அப்போது திறந்த கண்ணின் எதிரில் நிற்கும் மனைவிகூட அவன் கண்ணில் படுவதில்லை.
மரத்தில் அமர்ந்திருக்கும் பறவையை நோக்கி வில்லெடுக்கும் வேடனின் கண்களில் பறவை மட்டும் தெரியுமே தவிர, மரத்திலுள்ள இலைகள், காய்கள், கனிகள் தெரிவதில்லை.
கவிஞனுக்கும் வேடனுக்கும் சாத்தியமான மனதின் ஒருமுக நிலையை மற்றவர்களும் பெற முடியும்.
அதாவது ஒன்றையே நினைத்தல்.
அந்த லயம் கிட்டிவிட்டால் புலன்களும், பொறிகளும் செயலற்றுப் போகின்றன.
வாயின் சுவை உணர்வு, நாசியின் மண உணர்வு, கண்களின் காட்சி உணர்வு, செவியின் ஒலி உணர்வு, பிற அங்கங்களின் ஸ்பரிச உணர்வு அனைத்தையும் அடித்துப் போட்டுவிட்டு, புலியைக் கொன்ற வேடன் போல் மனது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதுதான் சரியான லயம்.
சங்கீத வித்வான் சரித்தர ஆராய்ச்சி செய்வதில்லை. ஸ்வரங்களையும் ராகங்களையுமே ஆராய்ச்சி செய்கிறான்.
ஒரே இடத்தில் ஒரே நிலையில் மனத்தைச் செலுத்தினால் சலனமில்லாத ஒரே உணர்ச்சி தோன்றுகிறது.
ஒரு கதை உண்டு!
ஒரு தாய் தனது ஒரு மாதக் கைக்குழந்தையோடு தரையிலே பாய் விரித்துப் படுத்திருந்தாள். அப்போது அவளுக்குக் கொஞ்ச தூரத்தில் பாம்பு வந்து நின்றது.
பாம்பைக் கண்ட உறவினர்கள் பதறினார்கள். துடித்தார்கள்.
அந்தப் பாம்பு குழந்தையையும் தாயையும் கடித்து விடப்போகிறதே என்று பார்த்தார்கள்.
தாயின் பெயரைச் சொல்லி சத்தமிட்டார்கள். தாய் எழவில்லை. பக்கத்தில் படுத்திருந்த குழந்தையின் மீது ஒரு மல்லிகைப் பூவை எடுத்துப் போட்டார்கள். தாய் உடனே விழித்துக் கொண்டு, அந்தப் பூவை எடுத்து அப்புறம் போட்டாள்.
தன்னை உதைத்தபோது கூடச் சொரணையில்லாது உறங்கிய தாய், குழந்தை மீது பூ விழுந்ததும் விழித்துக் கொண்டது எப்படி?
அந்த உள்ளம் குழந்தையிடமே லயித்துக் கிடந்ததால்தான்.
ஈஸ்வர பக்தியில் உடல் உருக, உள்ளம் உருக லயித்துக் கிடந்த அடியார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் எல்லாம் மனதை ஒருமுகப்படுத்தியவர்களே.
இந்த மனதின் கோலங்களாலேயே நான் பலமுறை தடுமாறி இருக்கிறேன்.
ஆசைக்கும் அச்சத்துக்கும் நடுவே போராடி இருக்கிறேன்.
ஜனனம் தகப்பனின் படைப்பு, மரணம் ஆண்டவனின் அழைப்பு, இடைப்பட்ட வாழ்க்கை அரிதாரம் பூசாத நடிப்பு என்பதை, நாளாக நாளாக உணர்ந்து வருகிறேன்.
இன்னமும் முழுப்பக்குவம் கிட்டவில்லை.
திடீர் திடீரென்று மனதில் ஒன்றிருக்க ஒன்று பாய்கிறது.
ஒன்றை எடுத்தெறிந்தால், இன்னொன்று ஓடி வருகிறது.
ஒரேயடியாக மிதித்துக் கொன்றால்தான் நிம்மதி கிடைக்கும் என்பது தெரிகிறது.
என் கால்கள் இன்னும் அந்த வலுவைப் பெறவில்லை. பெற முயல்கிறேன். பெறுவேன்.
பிறந்தோருக்காகச் சிரிக்காமலும், இறந்தோருக்காக அழாமலும் பரந்தாமன் கூறியதுபோல் சமநோக்கத்தோடு நின்று மன அமைதி கொள்ள முயல்கிறேன்.
அதை நான் அடைந்துவிட்டால், கடவுள் கண்களிலே கண்ணீர் வைத்ததற்கான காரணமும் அடிபட்டுப்போகும்.
இவ்வளவையும் நான் சொல்லுவது லௌகிக வாழ்க்கையிலும் நம்மை அமைதிப்படுத்துவதே இந்து மதத்தின் நோக்கம் என்பதை விளக்கத்தான்.
லௌகிக வாழ்க்கையைச் செப்பனிடும் இந்து மதக் கருவிகளில் பகவத் கீதையும் ஒன்று என்பதுதான் என் துணிவு.
ஓம் நமோ நாராயணாய

Image may contain: 1 person, text
    •  · Reply
    •  · 1h
V Shanmuga Raj
Write a comment...
at September 09, 2019
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...

  • குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம்
                                    எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/                             குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத க...
  • ஆத்துப்பொள்ளாச்சிஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!!
    ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன் திருக்கோவிலை உலகம் உற்று நோக்கிறது!!! ஸ்ரீ   ஆனந்தாய்பேச்சியம்மன்   (எங்கும் இல்லாத ஏழு கலசம்) '...
  • உடல்கட்டு மந்திரம்
                                                  எங்களின் ஆன்லைன் சேவை -  http://astroav.in/        உடல்கட்டு மந்திரம் நாம் பல்வேறு...

கும்பாபிஷேகம்

  • Home

About Me

sriannathaipechiamman
View my complete profile

Report Abuse

Labels

  • https://en.wikipedia.org/wiki/User_talk:Annathaiamman/sandbox#.E0.AE.AA.E0.AE.95.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.95.E0.AF.8B.E0.AE.9F.E0.AE.BF.E0.AE.95.E0.AE.B3.E0.AF.87

Blog Archive

  • ►  2025 (20)
    • ►  June (1)
    • ►  May (3)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (1)
    • ►  January (9)
  • ►  2024 (33)
    • ►  December (5)
    • ►  November (7)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (5)
    • ►  July (6)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (3)
  • ►  2023 (31)
    • ►  December (1)
    • ►  August (4)
    • ►  July (2)
    • ►  June (8)
    • ►  May (6)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (6)
  • ►  2022 (58)
    • ►  December (1)
    • ►  November (3)
    • ►  October (2)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  May (12)
    • ►  April (21)
    • ►  March (9)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2021 (23)
    • ►  May (15)
    • ►  April (6)
    • ►  March (1)
    • ►  January (1)
  • ►  2020 (14)
    • ►  August (1)
    • ►  May (4)
    • ►  February (3)
    • ►  January (6)
  • ▼  2019 (305)
    • ►  December (8)
    • ►  November (15)
    • ►  October (32)
    • ▼  September (96)
      • கொலு வைப்பது எதற்காக ?பயன்கள் ? நவராத்திரி பற்றிய ...
      • அற்புதம் செய்யும் உப்பு!
      • பஞ்சகவ்ய ரகசியங்கள்!
      • ஒவ்வொரு மாதமும் அமாவாசை
      • தாய்பால் சுரக்க மருத்துவ குறிப்புக்கள்
      • மஹா பரணி
      • ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழு...
      • பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலா...
      • என்னப்பன் அல்லவோ
      • ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்...
      • உமீழ்நீர்_உயிர்நீர்...
      • மகாபாரதப் போரில் ஒரு நிகழ்வு....
      • #கந்த_குரு_கவசம்
      • முருகனுக்கு வேல் ஆயுதமாக
      • நற்பண்பு இல்லாத பக்திக்கு பயனில்லை!
      • #தர்மசங்கடம்?
      • *பிரதோஷத்தில் எத்தனை வகைகள்*
      • பீமனும் அனுமனும்
      • ஒரு ரோஜா செடி
      • தர்ப்பணம், சிராத்தம் தகவல்கள் !
      • திருவண்ணா மலை சிறப்புகள்
      • சிவபுராணத்தில் மறைந்துள்ள சிவயோக ரகசியம்.
      • *ஸ்ரீ சப்தகன்னியர்*
      • #வாராகியை_ஏன்_இரவு_நேரத்தில் #வழிபாடு_செய்ய_வேண்டு...
      • பெண் தெய்வங்களை மாத_பௌர்ணமியில் வழிபடுவது_சிறப்பு
      • #திரௌபதி
      • தீராத_நோய்களையும் #தீர்த்து #வைக்கும்_திருவாசி —
      • விபூதியை எங்கெங்கு பூசலாம்? நன்மைகள் என்னென்ன?
      • *தோஷங்களை நீக்கும் அற்புதங்கள் நிறைந்த பழமையான குர...
      • "திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்...
      • *பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?*
      • மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்...
      • *கோயில்களில் உள்ள துவார பாலகர்கள் யார்?*
      • கண்ணீருடன் எல்லா தாயுக்கும் சமர்ப்பனம்...
      • இறந்த அர்ஜுனன்.
      • கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர்.
      • எண்ணம் போல் வாழ்க்கை
      • கணபதி ஹோமம்:
      • தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு
      • பலி பீடத்தை தொட்டு வணங்கினால் தோஷம்
      • *மனம் ஒரு குரங்கு*
      • செல்வம் பெருக ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்
      • நாம் நம்மை திருத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
      • கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?
      • சிவனின் ஐந்து சபைகள்
      • கும்பகோணம் கோயிகள் 62.
      • வழிபாடு! #ஒரு #எச்சரிக்கை!*
      • *புலம்பாத மனிதன்...* *யார் இருக்கிறான்...?*
      • அணுவும் ஆன்மீகமும்
      • புரட்டாசி ஸ்பெஷல் !
      • யானையின் சுவாச நிலைக்குண்டான ஆற்றலைப் பற்றி ஈஸ்வரப...
      • புண்ணியம் தரும் புனித புரட்டாசி
      • கடவுள் படையலை சாப்பிடுவாரா?
      • மனைவியின் மதிநுட்பம்
      • #ஏவல்_பில்லி_சூனியம், #கண்_திருஷ்டி #பாதிப்பிலிர...
      • #கோமாதா_பற்றிய_40
      • #உறக்கத்தின்_கனவு_பலன்கள் ...
      • 🙏சிவபெருமான் பற்றிய 182 அரிய தகவல்கள்
      • *கூட்டுக் குடும்பம் மலரட்டும்*
      • ஞானக்கதைகள்
      • #ஹோம_குண்டங்களில் #போடப்படும்_காசுகளை #எடுக்கலாமா..?
      • *யார் சுகவாசி
      • மரணத்தை மறக்காதே
      • ஓணம்பண்டிகை
      • வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் ...
      • காஞ்சிப் பெரியவர்கள் ஒன்று கூறியிருக்கிறார்கள்:
      • காஞ்சி மகானின் அருளமுதம்!
      • *காமாட்சி விளக்கு மகிமையும் சிறப்பும்
      • நோயின்றி
      • பரிகாரம் என்றால் உண்மையில் என்னவென்று தெரியாதவர்கள...
      • கீதையில்_மனித_மனம்
      • அறுபத்து மூன்று நாயன்மார்கள் செய்த சிவதொண்டு யாது ?
      • கோவிந்தன்
      • சட்டம் ஏழைக்கு சவக்குழி பணக்காரனுக்கு நந்தவனம்
      • தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்:
      • உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல்
      • 33 முத்துக்கள்
      • தமிழ்நாட்டில் அமைந்துள்ளன
      • கண்ணப்ப நாயனாரின் இறைப்பற்று
      • கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள் !!
      • ''ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் த...
      • தியானம் எளிய விளக்கம்:
      • கடவுள் இருக்கிறாரா?
      • தெரியாத அதிசயங்கள்:
      • மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!
      • #திருஷ்டிசுற்றிபோடுதல்
      • #என்றுமே_வற்றாத_செல்வம்_உங்கள்
      • பூஜைக்கு அருகம்புல்லை
      • ஸ்ரீசுப்ரமணிய_யந்திர_ரகசியம்
      • விநாயகரைப்பற்றி🌿🌼 தெரியாத ரகசியமும்
      • கண்ணப்ப நாயனார்_
      • இதை சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.
      • பூர்வ_ஜன்மவினை...
      • *பெருமாள் கோயிலுக்கு சென்று திரும்பும் போது
      • கர்ணணின் கடைசி பயணம்:
      • இந்த_உடலை_விட்டு உயிர்_பிரியும்_வாசல்கள் 1_to...
    • ►  August (19)
    • ►  July (66)
    • ►  June (5)
    • ►  May (18)
    • ►  April (3)
    • ►  March (17)
    • ►  February (13)
    • ►  January (13)
  • ►  2018 (276)
    • ►  December (21)
    • ►  November (10)
    • ►  October (45)
    • ►  September (17)
    • ►  August (26)
    • ►  July (5)
    • ►  June (40)
    • ►  May (28)
    • ►  April (10)
    • ►  March (23)
    • ►  February (19)
    • ►  January (32)
  • ►  2017 (494)
    • ►  December (6)
    • ►  November (4)
    • ►  October (20)
    • ►  September (5)
    • ►  July (41)
    • ►  June (109)
    • ►  May (140)
    • ►  April (102)
    • ►  March (54)
    • ►  February (13)
Watermark theme. Powered by Blogger.