Saturday 28 September 2019

என்னப்பன் அல்லவோ


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஆதி அந்தம் இல்லாதவன்
இவ்வுலக இயக்கத்திற்கு முதன்மையானவர் ஈசன்.
ஒருவர் நிறைய படித்திருக்கலாம். நிறைய செல்வங்களைத் தேடி வைத்திருக்கலாம்.
அதோடு அவர்கள் தூய அறிவு வடிவாகத் திகழும் இறைவனையும் தொடர்ந்து தொழது வர வேண்டும்.
ஈசனின் இறை சக்தி எங்கும் நிறைந்திருக்கின்றது.
நீக்க மற நிறைந்திருக்கும் இறைச் சக்தியை உணர்ந்து, தூய அறிவே வடிவாகக் காட்சி கொடுக்கும் இறைவனை எப்பொழுதும் மறவாமல் துதிக்க வேண்டும்.
எங்கும் நீக்கமற வீற்றிருக்கும் இறைவன் நம் அகமாகிய மலரிலும் வீற்றிருக்கின்றான்.
இறைவனை நாம் எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை.
நமது அகமே இறைவனின் கோயிலாக அமைகின்றது.
ஈசனை நம் மனதிலே காண முடியும்.
ஒவ்வொருக்கும் நமது மனமே சாட்சி. மனசாட்சி.. மனதை ஆட்சிக் கொள்வது தம் மனதில் ஆட்சி கொண்டிருக்கும் இறைவனே.
நம் மனதை விட சிறந்த நீதிபதி யாரும் இல்லை.
இறைவன் என்பவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன்.
நல்லவர்,
கெட்டவர்,
பணக்காரன்,
ஏழை பாகுபாடு இன்றி அனைவருக்கும் அருள் பாலிப்பவன் இறைவன் ஒருவனே.
இறைவன் என்பவன் ஆசையும் வெறுப்பும் இல்லாதவன்.
ஆதி அந்தம் இல்லாத இறைவனே நமக்குச் சிறந்த ஆசானாகவும் வழிக்காட்டியாகவும் திகழ்கின்றான்.
பணம் இருந்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்ற நிலைக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அவனை நாடோர் கைவிடப்படார்.
இறைவனின் உண்மை புகழைப் போற்றி அன்பு செலுத்துவோம்.
நல்ல வினைகளும் தீய வினைகளும் இரண்டுமே சேர்ந்ததுதான் வாழ்க்கை.
இறைவனிடம் சரணடையும் பொழுது கடந்த
பிறப்பு மற்றும் இந்தப் பிறப்பில் செய்த நல்வினை மற்றும் தீயவினை நம்மைத் துன்புறுத்தாது.
இறைவனை உண்மையுடன் வணங்கும் யாவரும் உறுதியாக அவனுடைய இறை ஆசியைப் பெறுவர்.
பல நேரங்களில் அறியாமையால் பல தவறுகள் நடந்து விடுகின்றது.
தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு இறைவனிடம் சரணடையும் போது இறைவன் கண்டிப்பாக மன்னித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்.
அவனிடம் உண்மை அன்பு செலுத்த வேண்டும்.
சக உயிர்களிடம் அன்பு செலுத்துவதும் இறைவனிடம் செலுத்தும் அன்பும் சமமாகும்.
மேலும் ஒழுக்கத்துடன் வாழும் வாழ்க்கையில் இறைவன் சூழ்ந்திருப்பான்.
எல்லாச் சமயங்களும் எல்லா மதங்களும் ஒழுக்கத்தையே போதிக்கின்றன. ஒழுக்கம் என்பது பல கூறுகளை அடக்கியுள்ளது.
ஒரு உடலுக்கு உயிர் என்பது மிக முக்கியம்.
அதுப்போல மனிதனுக்கு ஒழுக்கம் என்பது மிக மிக அவசியம்.
பணம் , பதவி, கல்வி
அனைத்தையும் பெற்றிருந்தாலும் மனிதனுக்கு மிக மிக அவசியம் ஒழுக்கம்.
அவ்வொழுக்கத்தைப் பேணுவோர் இறைவனின் முழு ஆசிகளைப் பெற்று நல்ல வாழ்க்கை வாழ்வர் என்பது உறுதி.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வரக் கூடிய ஒன்று மனக்கவலை.
மனக்கவலையே பலரைப் பல செயல்கள் செய்வதற்கு உட்படுத்துகின்றது.
மனக்கவலை ஒழித்தல் என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் இறைவன் பால் கொண்ட அன்பு எனும் ஆயுதத்தால் மனக் கவலையை ஒழிக்க முடியும்.
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
இறை நம்பிக்கை ஒருவரை மிக உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும்.
நம்பிக்கை ஊட்டும். வாழ்க்கையில் வெற்றி அடைய ஊக்குவிக்கும். மனக் கவலை என்பது ஒரு நோய்.
நோய்த் தீர்க்கும் மருத்துவராக இறைவன் வெளிப்படுவார்.
அவரின் பால் கொண்ட பக்தியே மிகச் சிறந்த மருந்தாக அமையும்.
இறைவன் என்பவன் அறத்தைப் போற்றுபவன்.
அனைவருக்கும் நன்மையே அளிப்பவன்.
அறத்தைச் செய்து அறத்தைப் போற்றும் இறைவனின் அருளைப் பெறுவோம்.
எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் இறைவனைச் சரணடையும் போது அவனுடைய அருள் நம்மை வந்து சேரும்.
அவன் அருள் இன்றி எதும் நடைபெறாது.
இன்பத்தை நுகர இறைவனின் திருப்பாதங்களைச் சரணடைவோம்.
அன்புடன் அழைக்கின்றோம்
வருங்கள் ஐயன் ஸ்ரீபிரம்மேஸ்வரரை தரிசனம் செய்திட
வினைவிதி மாற்றி நல்விதி அருளும் வேதநாயகன் சதாசிவம் ஸ்ரீபிரம்மேஸ்வரர்
ஆலயத்தில் நாளை மஹால்ய அன்னதானம் நடைபெற உள்ளது

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...