யாருக்கு பொருத்தம் பார்க்கத்தேவையில்லை


 முறைப்பெண்ணும்,முறைப்பையனும் திருமணம் செய்துகொள்வதற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.

2. ஒரு குழந்தை கர்பத்திலிருக்கும்போதே ,அக்குழந்தை பெண்ணாய் பிறந்தால் இன்னார் மகனுக்கு திருமணம் செய்துவைப்பேன் என நிச்சயிப்பது, அக்குழந்தை ஆனாய் பிறந்தால் இன்னாருக்கு பிறக்கும் மகளுக்கு திருமணம் செய்துவைப்பேன் என நிச்சயிப்பது கர்ப்ப நிச்சிதம் எனப்படும்.இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.

3. காந்தர்வ திருமணம் என்பது காதல் திருமணமாகும். காதல் திருமணங்களுக்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.

4. யாருக்காவது தெய்வ அருள் வந்து அவர் இன்னார் மகளை இன்னார் மகன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அருள் வாக்கு கூறினால் அது தெய்வ நிச்சிதம் எனப்படும். இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.

5. ஆன்மீக குரு ஒருவர் ஆண்,பெண் இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளுங்கள் எனக்கூறுவது குரு நிச்சிதம் எனப்படும். இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.

6. வது,வரன் இருவர்களுக்கிடையே சந்திப்பு நிகழும்போது சுப சகுனங்கள் தோன்றினால் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்துகொள்ளலாம்.

7. வது,வரன் இருவருக்கும் பூரண மனப்பொருத்தம் இருந்தால் இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.