Monday 22 May 2017

மனைவியை மதிப்போம்! மகிழ்வுடன் வாழ்வோம்!!

மனைவியை மதிப்போம்! மகிழ்வுடன் வாழ்வோம்!!


மரணம் வரை மனைவி
●ஓர் நாள் இரவு நேரத்தில்
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு
உறங்கிக் கொண்டிருந்தான்..
●அப்போது அவன் கனவில்
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..
●”இந்த கரும்பலகையில்,
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின்
பெயர்களை எழுது” என்றார்..
●அந்த விவசாயும்,
“அப்பா, அம்மா ,
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் ,
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி ,
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை ,
காதலி , நண்பன்” என
முப்பது பேர் பெயரை எழுதினான்..
●அப்பொழுது கடவுள்,
“கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்.,
நீ யாரை இழக்க முடியும்
என்று நினைக்கிறாயோ,
அந்தப் பெயரை அழி” என்றார்..
●சற்று யோசித்த விவசாயி,
காதலி , நண்பன் என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
●கடவுள் மறுபடியும்,
“இன்னும் இரண்டு பேர்
பெயரை அழி” என்றார்..
●விவசாயும்
கொஞ்ச நேரத்தில்,
“மாமா , அத்தை” என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
●விவசாயி இப்படியே,
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..
●கடைசியாக
அப்பா , அம்மா ,
மனைவி , மகன் , மகள் என
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..
●கடவுள்,
“இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை
நீக்க வேண்டும்.,
நீ யார் பெயரை நீக்குவாய்?” என்றார்..
●விவசாயி வருத்தத்துடன்
சிறிது நேரம் கழித்து,
அப்பா , அம்மா
பெயரை அழித்தான்..
●கடவுள் மீண்டும்,
“இன்னும் இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்” என்றார்..
●கடவுளுக்கு சற்று
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது..
“அடுத்ததாக இவன் யார் பெயரை
அழிக்கப்போகிறான்?” என்று..
●அப்போது விவசாயி,
மிகுந்த சோகத்துடனும்
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..
●கடைசியாக கரும்பலகையில்,
“மனைவி” பெயர் மட்டும் இருந்தது..
●கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..
●”மகன், மகள் பெயரை அழித்து விட்டு
எதற்காக மனைவி பெயரை
அழிக்கவில்லை?” என்று..
●அதற்கு விவசாயி,
“மகள் எப்படியும்
இன்னொரு வீட்டுக்கு
வாழப் போய் விடுவாள்..
●மகன்,
அவனும் அவனுடைய
மனைவி குழந்தை என வாழ்வான்..
●கடைசி காலம் வரை
என்னோடு வாழக் கூடியவள்
#என்_மனைவி மட்டும் தான்” என்றான்..
●விவசாயின் பதிலைக் கேட்டு
வியந்து போன கடவுள்,
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்..

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...