Thursday, 26 February 2026

அதிகாலையில் தெரியும் அதிர்ஷ்ட நட்சத்திரம்.


 அதிகாலையில் தெரியும் அதிர்ஷ்ட நட்சத்திரம்...

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை விண்ணிற்கு மேலே தெரியும் ஒரு அதிர்ஷ்ட நட்சத்திரம் பூமியை நோக்கி இப்பொழுது வந்துள்ளது. அதை காண வேண்டுமென்றால் அதிகாலை நாலு மணிக்கு எழ வேண்டும். அந்த நட்சத்திரம் நமது மன விருப்பங்களை பூர்த்தி செய்யக் கூடியது. கேட்டதை கொடுக்கக் கூடியது. அதிர்ஷ்டத்தை உருவாக்க கூடியது. துன்பங்களை போக்கக்கூடியது. இப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் நமது பூமியை நோக்கி வந்திருந்தால் நாம் அதை காணாமல் உறங்கிக் கொண்டிருந்தால் அந்த நட்சத்திரத்தைப் பார்ப்பவர்கள் உறங்கிக் கொண்டிருப்பவர்களை பார்த்து என்ன சொல்வார்கள்? இப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்டமான வாய்ப்பை இழந்து உறங்கிக் கொண்டிருப்பதை பார் என்று நம்மை பார்ப்பதை கூட தவிர்ப்பார்கள். விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் என்று இந்த அதிகாலை 4 மணி நேரத்தை குறிப்பிடலாம். ஒரு மனிதனுக்கு தன்னுடைய பிரச்சனைகள் சங்கடங்கள் தீர்கின்றது. தடைகள் அகல்கின்றது. செல்வம் உடல்நலம் அதிர்ஷ்டம் இவை எல்லாம் உருவாகின்றது என்றால் அந்த நேரம் உறக்கம் என்ன பெரிது? ஆனால் அந்த நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அந்த நட்சத்திரத்தை காண வேண்டுமென்றால் தன்னை இரு புருவ மத்தியில் ஒரு நட்சத்திரமாக உணர்ந்து மனதால் காண்பவருக்கே அந்த பிரகாசமான ஒளி பொருந்திய நட்சத்திரம் மனதின் எண்ணத்தால் தெரியும். அதற்காகத்தான் அந்த பிரம்ம முகூர்த்தம் என்ற நேரம் குறிக்கப்பட்டுள்ளது. பிரம்மா எழுந்து தன்னை நட்சத்திரம் போன்ற ஆன்மாவாக உணர்ந்து பரமாத்மாவை உடலற்ற நட்சத்திரமாக நினைத்த நேரம் ஆதலால் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்பட்டது. பரமாத்மாவை சிலர் துருவ நட்சத்திரம் என்று வணங்குகிறார்கள். சிலர் தீபாரதனையாக பார்க்கின்றார்கள். சிலர் அகண்ட ஜோதியாக பார்க்கின்றார்கள். சிலர் மெழுகுவர்த்தியில் மனம் குளிர்கின்றார்கள். சிலர் பிறைக்கு மேல் இருக்கும் நட்சத்திர ரூபத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகின்றார்கள். இன்னும் சிலர் நந்தியின் இரு கொம்புக்கு மத்தியில் இருந்து தந்தை சிவனை
காண்பதற்காக முயற்சி செய்கின்றார்கள். ஆனால் ஒருவரும் தன்னுடைய அகத்தில் நாம் ஒரு நட்சத்திரம் என்பதை உணர்வதே கிடையாது. உலகத்தில் நடிக்கும் நடிகர்களை கூட ஸ்டார் என்றே குறிப்பிடுகின்றார்கள். ஆனால் எந்த ஸ்டார் அழியாத ஸ்டார் நமது புருவ மத்தியில் இருக்கின்றது அதுதான் நாம் என்பதை மறந்து விடுகிறார்கள். நீங்களும் நானும் அந்த ஸ்டார் தான். கொடுக்கும் விபூதி கூட இந்த உடல் சாம்பல் நான் ஒரு ஸ்டார் என்பதை அறிவதற்காக தான் நெற்றியில் பரிமளிக்கின்றது.
உடலற்ற நட்சத்திரமான பரமாத்மா சிவன் அமிர்த வேளையில் கேட்டவர்களுக்கு கேட்ட வரத்தை கொடுக்க ஆயத்தமாக இருக்கின்றார். ஆனால் உடல் இருக்கும் சங்கரனை சிலர் சிவன் என்று வணங்குகின்றார்கள். மகேசனுக்கு பூமியில் எந்த ஒரு பாகமும் கிடையாது. எல்லா பாகமும் படைப்பவரான
ஈசன் ஒருவருக்கு மட்டும் தான். அவருடைய வரலாற்றை மனிதனுக்கு புரிய வைப்பதற்காக ஒளி தேகம் உடைய
சங்கரனோடு இணைத்து புராணங்களை உருவாக்கி விட்டார்கள். சிவபெருமானோ சத்திய ஸ்வரூபமான நட்சத்திரம் போன்றவர். இந்த உண்மையை உணரும் பொருட்டு சிவலிங்கத்திற்கு பின்னால் கண்ணாடியின் நடுவில் ஜோதி பிரகாசிக்கின்றது. கண்ணாடியில்ஜோதியின் தெரியும் பல பிம்பங்கள் ஒரு ஈஸ்வரனே உலகில் காணும் அனைத்து தெய்வங்களாகவும் காட்சியளிக்கின்றார் என்பதாகும். நீங்கள் ஒரு சித்தரின் கோவிலுக்கு
செல்லலாம். அல்லது அம்பாளின் கோவிலுக்கு செல்லலாம். அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்கு
செல்லலாம். ஆனால் அந்த எல்லா ரூபத்திலும் காட்சியளிப்பவர் அந்த மேலான பரம்பொருளான தந்தை சிவனே ஆவார். நாம் கடந்த காலங்களில்
நிறைய பழைய பக்தி படங்களை பார்த்திருக்கின்றோம்.
ஒரு நட்சத்திரம் மேலிருந்து வந்து பிறகு தெய்வமாக மாறுவதாக காண்பித்து இருப்பார்கள். அந்த படங்களை எடுத்த
டைரக்டர்களுக்கு
கடவுள் உணர்த்தினாரோ என்னவோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதிகாலை எழுந்து தவத்தில் அமருபவருக்கு பிரச்சனைகள் துன்பங்கள் அவரைக் கண்டால் நடுநடுங்கும். தந்தை சிவனின் உண்மையான ரூபத்தை அறிந்து அவருடன் தொடர்பு வைப்பது என்பது உலகில் அனைத்து தெய்வங்களையும் உருவாக்கிய முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் நாயகனான தந்தை ஈசனின் நினைவு மிகக் கொடூரமான பாவியையும் புண்ணியம் நிறைந்தவனாக அதிர்ஷ்டசாலியாக உலகிற்கு உதாரணமானவனாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இதையெல்லாம் வெறுமனே படிக்காமல் அனுபவத்தில் நடைமுறையில் உணர வேண்டும். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இது உண்மையா என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்.நல்லது. வாழ்த்துக்கள்.
ஓம் சாந்தி. முறைப்படி தியானத்தில் இறைவனை சந்திக்கும் இராஜயோகத்தை எவ்வித கட்டணமும் இன்றி முற்றிலும் இலவசமாக அருகிலுள்ள பிரம்மா குமாரிகள் நிலையத்தில் கற்று மகிழ்வீர். நல்வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...