Thursday, 26 February 2026

பெற்றோர் செய்த தவறுகள்… பிள்ளைகளின் வாழ்க்கையையும் தொடுமா?


 பெற்றோர் செய்த தவறுகள்… பிள்ளைகளின் வாழ்க்கையையும் தொடுமா?

இதற்கு சொன்ன ஒரு ஆழமான குட்டிக்கதை…
குருசேத்திரப் போர் முடிந்தபின், கிருஷ்ணரிடம் கேட்டார்:
“நான் தர்மப்படி ஆட்சி செய்தேன்… இருந்தும் என் 100 மகன்களும் ஏன் உயிரிழந்தார்கள்?”
அதற்கு கிருஷ்ணர் நேரடி பதில் சொல்லவில்லை. ஒரு கதையைச் சொன்னார்…
ஒரு அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாக சேர்ந்தான். அரசனை கவர வேண்டும் என்ற ஆசையில், அரண்மனை குளத்தில் இருந்த அன்னக் குஞ்சை ரகசியமாக சமைத்து அரசனுக்குப் பரிமாறினான்.
அரசன் அது என்ன உணவு என்று அறியாமல் ரசித்து சாப்பிட்டான். பின்னர் அதையே மீண்டும் மீண்டும் சமைக்கச் சொன்னான்.
பின்னர் கிருஷ்ணர் கேட்டார்:
👉 “அதிக தவறு செய்தவர் யார்? சமையல்காரனா? அரசனா?”
திருதராஷ்டிரன் பதிலளித்தார்:
“பரிசுக்காக செய்த சமையல்காரன் தவறு சிறியது.
ஆனால் தினமும் சாப்பிட்டும் உண்மையை அறியாத அரசன்தான் பெரிய தவறு செய்தவன்.”
அப்போது கிருஷ்ணர் புன்னகைத்தார்…
“அந்த அரசன் நீயே!
முன் பிறவியில் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாக உண்டாய்.
அந்த தாய் அன்னம் அனுபவித்த வேதனையை — இப்பிறவியில் நூறு மகன்களை இழந்து நீ உணர்கிறாய்.”
👉 தெய்வ நியாயம் தாமதமாகலாம்… ஆனால் தவறாது.
👉 நாம் செய்கிற செயல்களின் விளைவு ஒருநாள் நம்மைத் தேடி வரும்.
தன்வினை தன்னைத் துரத்தும்.
நல்லதை நினைப்போம். நல்லதை செய்வோம். 🙏

No comments:

Post a Comment

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...