Thursday, 26 February 2026

தெய்வங்களை தரிசிக்கும் முறைகள்!

 தெய்வங்களை தரிசிக்கும் முறைகள்!

*சிவன் கோயிலில் சிவனை வணங்கிவிட்டுதான்,உமாதேவியரை வணங்கவேண்டும்.
*பெருமாள் கோவிலில் முதலில் தாயாரை வணங்கிவிட்டுதான்,பெருமாளை வணங்கவேண்டும்.
*நவக்கிரக வழிபாடு செய்ய சென்றால் அந்த கோயிலின் பிராதான தெய்வங்களை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டுதான் நவக்கிரகங்களை வணங்க வேண்டும்.
*ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு 5 நிமிடம் கோயிலில் உட்கார்ந்து கண்ணை மூடி அவரை நினைத்து தியானிக்க வேண்டும்.
*விநாயகர் கோயில் பிரகாரத்தை ஒரு முறை சுற்ற வேண்டும்.
*சிவன்கோயில் பிரகாரத்தை மூன்று முறை சுற்ற வேண்டும்.
*பெருமாள் கோயில் பிரகாரத்தை நான்கு முறை சுற்ற வேண்டும்.
*நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும்.
*அம்மம் கோவிலுக்கு வெள்ளிகிழமை போறது நல்லது.
*துர்க்கை அம்மனை ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமையில் ராகு காலத்தில் போய் தரிசிக்க வேண்டும்.
*ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு உள்ளே நுழையும் போதே காசு போட்டு விட வேண்டும். வெளியே வரும் போது போட்டால், தரிசன பலனை தாரை வார்த்து போல ஆகிவிடும்.
*சாமி பேருக்கு அர்ச்சனை செய்யவேண்டாம். அவர்தான் சகல வசதியோடும் இருக்காரே. நம் பேர் நட்ச்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதுதான் நன்மையாகும்.

No comments:

Post a Comment

நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து).......

 நீண்டநாள் நல் ஆயுளோடு வாழ ரகசிய உணவு(மருந்து)....... . இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன்...