“அஸ்வமேதயாகம்”
அஸ்வம்' என்றால் குதிரை, 'மேதம்' என்றால் பலி. வேத காலத்தில் யஜுர் வேதம் இது ஒரு முக்கிய சடங்காக இருந்தது.
ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவுபடுத்துதல், சக்கரவர்த்தி என்ற பட்டத்தைப் பெறுதல், மற்றும் செல்வச் செழிப்பை அதிகரித்தல் போன்றவற்றின் ஒரு சடங்காக அரசர்களால் செய்யப்படுவது .
இது எவ்வாறு செய்யப்படும்?
மிகவும் சிறந்த ஒரு ஆண் குதிரையை தேர்ந்தெடுத்து , அதன் நெற்றியில் ஒரு தங்க தகடு ஒன்றை பொருத்தி ஒரு வருடத்திற்கு கட்டவிழ்த்து விடப்படும் . அந்த குதிரை வெள்ளை அல்லது பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் . எவரும் ஏறி சவாரி செய்யாத குதிரையாக தேர்வு செய்யப்படும் .அதன் வீரர்கள் , படை தளபதிகள் பின் தொடர்ந்து செல்வர் . அந்த குதிரை எந்த ராஜ்ஜியங்களுக்கு செல்கிறதோ அவர்கள் அனைவரும் அடி பணிய வேண்டும் அதை மறுத்தால் போரிட வேண்டும் . ஒரு வருடம் கழித்து நாட்டுக்குள் வரும் குதிரையை யாகம் நடத்தி பலியிடுவர் .
இதற்கு யாகத்தை செய்ய இருக்கும் மன்னனுக்கு கட்டாயம் திருமணம் ஆகி இருக்க வேண்டும் . இந்த யாகத்தை செய்து முடிக்க நான்கு புரோகிதர்கள் தேர்வு செய்யப்படுவர் . நூறு பசுமாடுகளும் தங்க காசுகளும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் . யாகம் செய்யும் புரோகிதர்களால் அரசனுக்கு தங்க மாலை அணிவிக்கப்படும். அதன் பிறகு அந்த குதிரை தர்ப்பை புல்லால் சுத்தம் செய்யப்பட்டு மன்னனின் மனைவியால் ஆயிரம் முத்துக்கள் கொண்ட மாலை அணிவித்து வெளியில் அனுப்பப்படும்.
திரும்ப வந்து சேரும் குதிரையை , பலியிட்டு அதை கொழுப்பை யாக தீயில் போட்டு உருக்கியும் , அதன் பின் குதிரையை நெருப்பில் போட்டு எரித்துவிடுவார்கள். இதை செய்து முடிக்கும் மன்னனே சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை பெறுவார் .
புராணங்களில் சந்திரகுலத்தில் பிறந்து அஷ்தினாபுரத்தை ஆண்ட நகுஷன் நூறு அஸ்வமேத யாகம் நடத்தி , இந்திரனின் அரியணையை கைப்பற்றினார் என்றும் ,யுதிஷ்டன் அஸ்வமேத யாகம் செய்ய அர்ச்சுனன் குதிரையுடன் சென்று ராஜ்யங்களை வென்று கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது!!
வரலாறுகளில் , சமுத்திரகுப்தர் , முதலாம் குமாரகுப்தர் , புஷ்யமித்திர சுங்கன்(இரண்டு தடவைகள்) ,சவாய் ஜெய்சிங் II போன்ற மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்து சக்கரவர்த்தி பட்டம் பெற்றனர்

No comments:
Post a Comment