Saturday 13 October 2018

வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு கர்மவீரர் காமராசர் சென்றார்

               வெளிநாட்டில் ஒரு விருந்துக்கு கர்மவீரர் காமராசர் சென்றார்



அந்த விருந்தை அளித்த பணக்காரரின் உணவு மேஜையில் பலவித தட்டுகள்... தங்கம், வெள்ளி, பீங்கான் என வகைவகையாக இருந்தன.
.
"நான் தினம் ஒரு தட்டு வீதம் 30 நாளைக்கு 30 தட்டில் சாப்பிடுவேன்' என்றார் அந்தப் பணக்காரர்.
.
"எங்கள் நாட்டில் சிறு கிராமத்தில் இருக்கும் ஏழை கூட ஒரு வேளை சாப்பிட்ட தட்டில் மறுமுறை சாப்பிட மாட்டான்' என்றார் காமராசர் .
..
பணக்காரர் உட்பட அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியமாக, "எப்படி?' என்று கேட்டனர்.
...
"அது வாழை இலை' என்றாராம்.

இன்று எந்த அசைவ உணவகத்துக்கு சென்றாலும், மற்ற மாமிசங்கள் விற்கும் இடங்களுக்கு சென்றாலும், ஒரு அறிவிப்பு பலகையை பார்த்து இருப்பீர்கள். " ஹலால் செய்யப்பட்டது" என்று!
"ஹலால்" ஹிந்து மதம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
ஹிந்துக்களின் புலால் உண்ணும் முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.
"ஹலால்" இஸ்லாமியர்களுக்கானது .
சிறிது விளக்குகிறேன்
"ஹலால்" என்றால் என்ன? ஒரு விலங்கை, அதன் முன்னங்கழுத்தின் ரத்த நாளங்களை சிறிதாக அறுத்து, அதன் ரத்தம் முழுக்க வடிந்து அதனை இறக்க விடுவது! இந்த முறையில் கொல்லப்படும் விலங்கு உடனே சாகாது. அது மரண அவஸ்தையை முழுமையாக அனுபவித்து, துடித்து துடித்து சாகும். அதற்கு வலி தெரிய வேண்டும் என்பதற்காக தண்டுவடத்தை அறுபடாமல் பார்த்துக்கொள்வர். அவ்வாறு அறுக்கப்படும் பொழுது ஒரு இஸ்லாமியர் குரான் ஓதுவார். கிராம புறங்களில் முஸ்லிம்கள் இதனை " ஓதி அறுப்பது" என்பார்கள்.
ஹிந்து மதம் அஹிம்சை விரும்பும் மதம். சைவம் . புலால் உணவும் மறுக்கப்படவில்லை.
ஆனால் ஹிந்து மதத்தில் வலி ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள படாத ஒன்று. கோயில்களில் பலி கொடுக்கும் போது கூட ஒரே வெட்டில் விலங்கை கொன்று விட வேண்டும் என்பது தான் முறை. அதாவது அந்த விலங்கிற்கு தான் வெட்டப்பட்ட வலி தெரிவதற்கு முன்பே மரணம் எட்டி விடும். ஓங்கி வெட்டும் போது முதலில் தண்டுவடம் வெட்டுப்படும்படி பின்னங்கழுத்தில் வெட்டுவதால் உடனடி, மற்றும் வலி இல்லா மரணம். இந்த முறைக்கு "ஜட்கா" என்று பெயர்.
சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் சீக்கியர்களுக்கு ஹிந்து முறையான "ஜட்கா" மாமிசத்தை மட்டுமே உண்ண வலியுறுத்தி உள்ளபடியால் பஞ்சாப் மாநிலத்தில் எல்லா கடைகளிலும் " ஜட்கா" மாமிசம் என்ற பலகை இருக்கும்.
ஒரு முஸ்லீம், அது ஹலால் செய்யப்பட்டதா என்று தெரியா விட்டால் அசைவம் சாப்பிட மாட்டார். ஆனால் ஹிந்துக்கள் ஹலால் செய்யப்பட்டது என்று தெரிந்தாலும் சாப்பிடும் நிலை.
ஒரு முஸ்லீம் , இந்து சாமிக்கு படைத்த ஒரு லட்டுவை ஒரு கோடி கொடுத்தாலும் தின்ன மாட்டார் . ஆனால் ஹிந்துக்கள் குரான் ஓதி அறுத்த மாமிசத்தை சாப்பிட தயாராகவே உள்ளனர்.
இதனால் தானே பத்து சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்காக தொண்ணூறு சதவிகிதம் ஹிந்துக்களுக்கும் ஹலால் உணவை கொடுக்கிறார்கள்.
" ஜட்கா" மாமிசம் இல்லை என்று தெரிந்தால் ஒரு ஹிந்து வாங்காமல் திரும்ப வரும் நாள் வரும் போது, எந்த கடையிலும் பெருமையுடன் "ஹலால்" பலகை தொங்காது.
ஆதலால் தயவுசெய்து உயிர்களை துடிதுடிக்க கொன்று ஊன் உண்ணுவதை இன்றே.. இப்போதே.. கைவிடுங்கள்.. 😐🙏இயலாவிட்டால்... 😑

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
குறள் விளக்கம்:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
திருக்குறள்
ஜீவகாருண்யமே மோட்ச சாம்ராஜ்ய அடையும் ஒரே மார்க்க வழி..

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...