Saturday 4 March 2017

கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது



கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது 



கல்லடி பட்டாலும், கண்ணடி படக் கூடாது,” என்று பெரியோர்கள்

கூறுவதுண்டு. காரணம் கல்லால் ஏற்படும் வேதனை தற்காலிகமானது,

அதன் விளைவுகளின் தன்மையை மனித அறிவால் ஓரளவு கணிக்க முடியும்.

ஆனால், கண் திருஷ்டியின் விளைவுகளோ பல ஆண்டுகளுக்கும் ஏன் பல

பிறவிகளுக்கும் கூட தொடரக் கூடியது. அதன் விளைவுகளின் தன்மையை

மனித அறிவால் கணித்துக் கூற முடியாது.

மனிதன் தன்னுடைய பூர்வ ஜன்மத்தில் செய்த வினைகளின்

பலனையே இப்பிறவியில் நோய்களாகவும், விபத்துக்களாகவும், கடன்

தொல்லைகளாகவும் அனுபவித்து வருகிறான் என்று சொல்கிறோம்

அல்லவா? அது போல மனிதர்கள் அனுபவிக்கும் திருஷ்டி துன்பங்களும்

அவர்களுடைய பூர்வ ஜென்ம செயல்களின் பலன்களே என்பதில்

ஐயமில்லை.

கண் திருஷ்டியைக் களையும் சஹஸ்ர தீப தரிசனம்

நோய்த் துன்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்களை இறை

வழிபாடுகள், தீர்த்த யாத்திரைகள் போன்ற ஆன்மீக சாதனங்களால்

முற்றிலும்தணிக்க முடியாது என்பது உண்மையே ஆயினும்

அத்துன்பங்களின் விளைவுகளை நிச்சயமாக இறை வழிபாடுகளால் ஓரளவு

குறைத்துக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும்,

எத்துன்பத்தையும் ஏற்றுக் கொள்ள தேவையான மன உறுதியைப் பெற

ஆன்மீக சாதனம் ஒன்றுதான் வழி என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.

திருஷ்டிகள் சூழும் வாயில்கள்ஒருவர் அழகான புது கார் ஒன்றை வாங்கி

அதில் பயணம் செய்கிறார் என்றால்அப்போது அந்தக் காரையும் அதில்

பயணம் செய்பவரையும் அனைவரும் ஒரே கண்ணோட்டத்தில்

பார்ப்பதில்லை. அந்தக் காரின் சொந்தக்காரருக்கும்

அவருடைய அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் போன்றோருக்கும் கார்

மூலம் மிகவும் சந்தோஷம் கிடைக்கலாம். அவருடைய சகோதர,

சகோதரிகள் அந்த அளவிற்கு ஆனந்தத்துடன் அந்தப் புதுக் காரை

வரவேற்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. அவருடைய நண்பர்கள், மற்ற

உறவினர்கள் பலவித கேள்விக் குறிகளுடன் அந்தக் காரை எதிர்

கொள்வார்கள். அவருடைய எதிரிகளுக்கும், தினமும் மைல் கணக்கில்

நடந்தோ, சைக்கிள் போன்ற வாகனங்களிலோ பயணம் செய்ய வேண்டிய

நிலையில் உள்ளவர்களும் அந்தப் புதுக் காரைப் பார்க்கும்போது தங்களையும்

அறியாமல் ஒரு பொறாமை எண்ணத்தை மனத்தில் வளர்த்து விடுவார்கள்.

இவ்வாறு அந்தக் காரைப் பார்த்து சந்தோஷம் அடைபவர்களின் புண்ணிய

சக்திகளும், பொறாமை கொள்பவர்களின் புண்ணிய சக்திகளும்

ஒன்றையொன்று எதிர் கொள்ளும்போது இந்த சக்திகளில் பொறாமை

சக்திகளின் வெளிப்பாடு அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலையையே

நாம் திருஷ்டி என்று அழைக்கிறோம்.

இவ்வாறு நல்ல எண்ணெங்கள், நற்சக்திகளின் விளைவுகளை விட தீய

சக்திகளின், பொறாமை எண்ணங்களின் தாக்குதல் அதிகரிக்கும்போது

அந்த சக்திகளின் தீவிரத்தைப் பொறுத்து விபத்துகள், காரின் சில பாகங்கள்

பழுதடைதல், தீப்பிடித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுதல் போன்ற துன்பங்கள்

ஏற்படுகின்றன.அதனால்தான்,

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

அதாவது, அழுக்காறு என்னும் பொறாமைத் தீ அறத்தைப் பாழக்கி விடும்

என்று வள்ளுவப் பெருந்தகை எச்சரிக்கிறார்.

எனவே எந்த அளிவிற்குப் புண்ணிய சக்தியை பெருக்கிக் கொள்கிறோமோ

அந்த அளவிற்கு பொறாமை எண்ணங்களிலிருந்தும் அதன் விளைவாக

ஏற்படும் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் நம்மையும் நம்முடைய

உடைமைகளையும் நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

பொறாமை ஏற்படுவதற்கு மூல காரணமாக இருப்பது கண்தானே. அதனால்

திருஷ்டி ஏற்படும்போது அது எந்த வித காரணத்தால் ஏற்பட்டாலும் அதை

கண் திருஷ்டி என்றே வகைப்படுத்துகிறோம். கண்களால் தூண்டப்பட்ட

மனது பக்குவம் அடையாத நிலையில் இருக்கும்போது அது பொறாமை

எண்ணமாக வடிவெடுத்து மற்றவர்களைத் தாக்குகிறது.

இவ்வாறு ஒரு எண்ணம் பொறாமையாக மாறி மற்றவர்களுக்கு அது

துன்பத்தை இழைக்கும்போது எந்த அளவிற்கு அதனால் ஏற்படும் விளைவுகள்

கொடியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு பொறாமை கொண்டவர்களின்

புண்ணிய சக்திகள் கரைந்து விடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

இவ்வாறு மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள்,

மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து

துன்பத்தை விளைவிக்கின்றன. எனவே பொறாமை எண்ணங்களின்

தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ

துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால்

திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

நவ துவார வழிபாடுகள்

மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில்

உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது

கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும்

குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித

சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும்

சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை

நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள்

நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள

முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம்

போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு

பயனடையலாம்.

மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே

விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே

மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார்

அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம்

வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து

சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார்

அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க

வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக்

கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும்

சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள

விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக்

கோளாறுகள் நம்மை அண்டாது.

பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக

விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை.

முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள்

அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண்

திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு,

செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை

போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத்

தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

திருமண வைபவங்களில்நவ தானியங்களை மண்சட்டிகளில்வளர்த்து

முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத்

தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும்,

தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு

ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.

இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை

நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி

சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம்,

செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய

இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள்

நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக்

கொள்ளலாம். இந்த முளைப்பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு

வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

குழந்தைகள் மேல் படியும் திருஷ்டி தோஷங்கள்

பெரியவர்களை விட குழந்தைகளைத் திருஷ்டி தோஷங்கள் நிறையவே

பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலான குழந்தைகள் சுறுசுறுப்பாக

ஆரவாரத்துடன் இருப்பதால் குழந்தைகள் மேல் இயற்கையாகவே

பெரியவர்களுக்கும் உடல்நலம் குன்றியவர்களுக்கும் பொறாமை

எண்ணங்கள் உருவாகி அவை திருஷ்டி தோஷங்களாக வளர்ந்து

குழந்தைகளைத் தாக்குகின்றன.

இதனால்தான் முன் பின் தெரியாதவர்களிடம் குழந்தைகளைத் தரக் கூடாது

என்று நம் முன்னோர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தனர். தற்காலத்தில்

தம்பதிகள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில்

இருந்தால் அத்தகையோர் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டு விடும் முறை

வெகுவாக வளர்ந்து வருகிறது. பெற்றோர்களைத் தவிர மற்றவர்கள்

குழந்தைகளுக்கு ஊட்டும் உணவு நிச்சயமாக அவர்கள் உடல்

ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

இத்தகைய குழந்தைகளே எதிர்காலத்தில் பெற்றோர்கள் மேல் பாசம் என்பது

என்னவென்று தெரியாமல் தான் தோன்றித்தனமாக வளர்ந்து தங்கள்

பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடும் சூழ்நிலை

உருவாகி விடுகிறது. பெற்றோர்கள் இதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து

உரியமுறையில் செயல்பட வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

குழந்தைகள் வீட்டில் இருக்கும்போதும் வெளி இடங்களுக்கு அவர்களைக்

கூட்டிச் செல்லும்போதும் கட்டாயம் குழந்தைகள் கன்னத்தில் ஒரு திருஷ்டி

பொட்டு வைத்திருக்க வேண்டும். ஒரு நிமிடம் கூட குழந்தைகள் திருஷ்டி

பொட்டு இல்லாமல் இருக்கக் கூடாது. இது பெற்றோர்களின் தலையாய

கடமை.கலியுக நியதியாக குழந்தைகள் மூன்று அல்லது ஐந்து வயது வரை

தெய்வீகத் தன்மையுடன் விளங்குவதால் அவர்களுக்கு எதிர்காலத்தில்

நடக்கப் போகும் நிகழ்ச்சிகளும் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய

துன்பங்களும், ஆபத்துகளும் முன் கூட்டியே தெரிய வரும். எனவே,

முடிந்தவரை அக்குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுக்கு வரக் கூடிய

துன்பங்களைத் தாங்களே எடுத்து அனுபவிப்பதால் பெரும்பாலான

குழந்தைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்றன. இதை அறிந்தால்தான்

குழந்தைகளை தேவையில்லாமல் சபிப்பதோ, அவர்களை அடிப்பதோ, கடுஞ்

சொற்களால் நிந்திப்பதோ எவ்வளவு தவறான செயல் என்பதை பெற்றோர்கள்

உணர்ந்து கொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு இடுவதற்கு உகந்த திருஷ்டிக் கண்

மையை பெற்றோர்கள் தாங்களாகவே வீட்டில் தயாரித்துக் கொள்தல் நலம்.

இந்த திருஷ்டிக் கண் மையை குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல்

பெரியவர்களின் திருஷ்டி நிவாரணத்திற்காகவும், கண் பாதுகாப்பிற்காகவும்,

தெய்வ மூர்த்திகளின் அலங்காரத்திற்காகவும் பயன்படுத்தி பலன் பெறலாம்.

திருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை

கரிசலாங் கண்ணி இலைகளை சிறிது நீர் விட்டு அம்மியில் வைத்து நன்றாக

அரைக்க வேண்டும். நவீன மிக்சி, கிரைண்டர்களைத் தவிர்க்கவும். அவ்வாறு

அரைத்த விழுதை ஒரு வெள்ளைத் துணியில் இட்டு சாறு பிழிய வேண்டும்.

அந்த சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து மண் சட்டியில் அல்லது

வாணலியில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

அப்போது சடசட வென்று எண்ணெய் பொரியும். நீர் முழுவதுமாக ஆவியாகி

வெளியேறி விட்டால் எண்ணெயிலிருந்து சப்தம் எழாது. அப்போது எண்ணெயை

இறக்கி வைத்து ஆற வைக்க வேண்டும். இதுவே கரிசலாங் கண்ணி தைலம்

தயாரிக்கும் எளிய முறையாகும்.

இவ்வாறு தாங்களாக தயாரித்த கரிசலாங்க கண்ணி தைலத்தால் பெண்கள்

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும்

தலைக்குத் தேய்த்து எண்ணெய்க் குளியல் நிறைவேற்றி வந்தால் கண்கள்

குளிர்ச்சி பெறும், தீர்க்கமான கண் பார்வை கிட்டும், கண் கோளாறுகள் அறவே

நீங்கும். தோல் நோய்கள் நெருங்காது, இளநரையை தவிர்க்கக் கூடிய எளிய

வைத்திய முறை இது. மலச்சிக்கல்ஏற்படாது. ஆயுள்வளரும்.

ஏழரை ஆண்டு சனி, ஜன்ம சனி, அஷ்டம சனி போன்ற சனீஸ்வர பகவான்

பீடிப்பால் துன்பம் அனுபவிப்போர் சனீஸ்வர பகவான் தனிச் சன்னதி

கொண்டு விளங்கும் திருத்தலங்களில் நல்லெண்ணெயுடன்

கரிசலாங்கண்ணி தைலத்தை கலந்து எட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுதலால்

நவகிரகங்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் கிட்டும்.

அகால மரணங்களைத் தவிர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது.

கண் திருஷ்டிகளைக் களையும்

திருஅண்ணாமலை தரிசனம்

சந்ததி இன்றி தவிப்போரும், பெண் வாரிசுகளை மட்டும் பெற்று நிராதரவாய்

வருந்துவோரும், முதுமையில் துணை அற்றோரும் சனி ஹோரை நேரத்தில்

அகல் விளக்கில் கரிசலாங்கண்ணி தீபம் ஏற்றி அஸ்தமன சூரிய மூர்த்தி

விளங்கும் ஆலயங்களில் வழிபடுதலால் முதுமை சுமையாய் மாறாமல் உரிய

பாதுகாப்பை இறைவன் அளிப்பார்.

இந்த தைலத்தால் இறைவனுக்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

ஒரு கொட்டாங்குச்சியில் (தேங்காய் மூடி) உட்புறம் சுத்தமான பசு

வெண்ணெயைத் தடவி அந்த விளக்கு தீபத்தின் மேல் காட்ட வேண்டும்.

அப்போது தீபத்திலிருந்து எழும் புகை வெண்ணெயின் மேல் படிந்து சிறிது

நேரத்தில் வெண்ணெய் கறுத்து விடும்.

இந்த கரிய குழம்பை ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு

குழந்தைகளுக்கு மையிடுவதற்காக, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு

வைப்பதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளின் மேல்

படியும் அனைத்து விதமான திருஷ்டி தோஷங்களையும் களையக் கூடிய

சக்தி வாய்ந்த காப்பாகும்.

இறை மூர்த்திகளுக்கு கண் மை காப்பு

மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட கண் மை கொண்டு பெருமாள், அம்பாள்

போன்ற தெய்வ மூர்த்திகளை அலங்கரித்து வழிபடுதலால் குழந்தைகள்

மட்டும் அல்லாமல் பெரியவர்களையும் கண் திருஷ்டி தோஷங்களிலிருந்து

விடுவிக்கும் அற்புத வழிபாட்டு முறையாக அமைகிறது. சிறப்பாக பிரதோஷ

காலங்களில் இறை மூர்த்திகளுக்கும், தேய்பிறை அஷ்டமி தினங்களிலும்,

நவராத்திரி பூஜைகளிலும் இத்தகைய கண் மை காப்பு அற்புத பலன்களை வாரி

வழங்கும்.

சுமங்கலிகள் தொடர்ந்து இத்தகைய கண் மையை இட்டு வந்தால் அவர்களின்

சுமங்கலித்துவம் பெருகுவதுடன் கணவன் மனைவி அன்யோன்ய உறவு

வளர்ந்து குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். நவராத்திரியில் சுமங்கலிகள்

வழங்கும் மங்கலப் பொருட்கள் தானத்தில் அவசியம் மேற்கூறிய கண் மையை

சிறிதளவாவது அளித்தல் நலம்.

32 அறங்களில் ஒன்றான கண் மை தானம் கண் திருஷ்டியைக் களைவதோடு

மட்டுமல்லாமல் காட்ராக்ட், புரை விழுதல், கண்களில் நீர் வடிதல், மாலைக்

கண் போன்ற கண் நோய்களையும் தடுக்கும் வல்லமை உடையது.

பெரியவர்கள் தங்களுக்கும், இறை மூர்த்திகளுக்கும் உபயோகிக்கும்

கண் மைகளில் பசு வெண்ணெய்க்குப் பதிலாக தாங்கள் கையால் அரைத்த

சந்தனத்தையும் பயன்படுத்தலாம்.

உடல் சுத்தி வழிபாட்டு முறைகள்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”, என்றவாறு முறையான உடல்

சுத்தி வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் திருஷ்டி தோஷங்கள் நம்மைத்

தீண்டாதவாறு ஓரளவு பாதுகாத்துக் கொள்ளலாம்.

திருஷ்டி தோஷம் என்பது ஒருவித எண்ண சக்தியே. இந்த எண்ண சக்தி

உடலில் தங்கிப் பெருக வேண்டுமானால் அதற்கேற்ற அசுத்தமான சூழ்நிலை

வேண்டும். முழுக்க முழுக்க தூய்மையான ஒரு மனித உடலில் தீய சக்திகள்,

தோஷ எண்ணங்கள் நிச்சயமாக நிலைத்திருக்க முடியாது. எனவே முடிந்த

மட்டும் காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளையும் தலைக்கு நீர்

வார்த்து குளித்தல் அவசியம். குறைந்த பட்சம் காலை மாலை என இரண்டு

முறையாவது தலைக்குக் குளித்தலால் தீய சக்திகள் உடலில் குடி புகும்

வாய்ப்புகள் தோன்றாது.

இறைப் பிரசாதங்களான விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம், கண் மை

போன்றவற்றை அணிதல், மணிக் கட்டு, இடுப்பில் கறுப்புக் கயிறு,

கங்கன்களை அணிதல், பெண்கள் தோடு, மூக்குத்தி, வளையல்கள், கொலுசு,

மெட்டிகள் போன்ற ஆபரங்களை அணிதல் போன்றவை திருஷ்டி நிவாரண

சாதனங்களாகும்.

சுத்தமான பருத்தி ஆடைகள் திருஷ்டி தோஷங்களிலிருந்து எளிதில்

நிவாரணம் அளிக்க வல்லவை. எந்த அளவிற்கு பருத்தி ஆடைகளால்

உடலை மறைத்து வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு திருஷ்டி

தோஷங்கள் நம்மை அண்டாது.

இலவம் பஞ்சிற்கு திருஷ்டி தோஷத்தை எதிர்க்கும்தன்மை

இருப்பதால்இலவம் பஞ்சினால் ஆன படுக்கைகள், தலையணைகள்,

திண்டுகள், மெத்தைகளைப் பயன்படுத்துதல் நலம். கோடிக் கணக்கான பணம்

புரளும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கூட இலவம் பஞ்சினால் ஆன

மெத்தைகளில் அமர்ந்து பஞ்சு திண்டுகளில் சாய்ந்து கொண்டிருப்பதை

காண்கிறோம். இதனால் அவர்களைக் காண வருபவர்களின் எண்ண

அலைகள் அவர்களைப் பாதிக்காத வகையில் தெளிவான மன நிலையில்

நிலைத்திருக்க இத்தகைய பருத்தி, இலவம் பஞ்சு உபகரணங்கள்

உறுதுணையாக அமைகின்றன.

விஞ்ஞான ரீதியாக நமது உடலில் பல பகுதிகளில் வளரும் முடியில் எவ்வித

பாகுபாடும் இல்லை ஆயினும், மெய்ஞ்ஞானக் கண் கொண்டு பார்த்தால்

உடலில் ஒவ்வொரு பகுதியில் உள்ள முடிக்கும் வெவ்வெறு விதமான

தனித்தன்மை உண்டு. இவ்வகையில் நமது முகத்திலும், அக்குள்களிலும்

வளரும் மயிர்க்கால் பகுதிகளில் எதிர்மறை எண்ணங்கள் தங்கிப் பெருகும்

வாய்ப்புகள் இருப்பதால் முடிந்த மட்டும் இந்த இரண்டு இடங்களிலும்

முடிகளை நீக்கி தூய்மையாக வைத்திருப்பது அவசியம். அதே போல் கை, கால்

நகங்களிலும் சேரும் அழுக்கு தீய சக்திகளை ஈர்க்கும் தன்மை உடையதால்

நகங்களை அவ்வப்போது கத்தரித்து தூய்மையாக வைத்துக் கொள்ள

வேண்டும்.

தங்கத்திற்கும் தங்க ஆபரணங்களுக்கும் தூய்மையான எண்ணங்களையும்

தெய்வீக மந்திர சக்திகளையும் ஈர்க்கும் சக்தி இயற்கையாகவே

அமைந்துள்ளது. அதனால் ஆண்கள், தங்கக் கடுக்கன்கள், மணிக்கட்டில்

கங்கன்கள் (ப்ரேஸ்லெட்) போன்ற ஆபரணங்களையும் பெண்கள் முடிந்த

அளவு தங்க ஆபரணங்களைப் பயன்படுத்துவதும் கண் திருஷ்டி தோஷங்கள்

நம்மை அண்டாது காத்துக் கொள்ளும் நடைமுறைப் பழக்கமாகும்.

அக்காலத்தில் இதைக் கருத்தில் கொண்டுதான் பெண்களுக்கு தலை முதல்

கால் வரை தங்கம், வெள்ளி, மாணிக்கம், வைரம் போன்றவற்றால்

அலங்கரிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த பாரம்பரியம் இன்றும்

பல குடும்பங்களில் நடைமுறையில் இருப்பது வரவேற்கத் தக்கதே.

தங்கத்தின் விலை அதிகமாகி விட்டது என்ற காரணத்தைக் காட்டி தற்போது

பல பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை குறைத்துக் கொண்டு

விட்டனர்.

உண்மையில் டீவி, ஹோட்டல், சினிமா போன்ற தேவையில்லாத ஆடம்பர

செலவுகளைக் குறைத்துக் கொண்டால் நிச்சயமாக நடுத்தரக் குடும்பத்தைச்

சேர்ந்தவர்களும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்புத் தரும் தங்க

ஆபரண்ங்களை நிச்சயமாக வாங்கிப் பயன்பெற முடியும்.

உண்மையிலேயே தங்க ஆபரணங்களை வாங்க வசதியில்லாதவர்கள் என்ன

செய்வது? அவர்களுக்கும் அருள்புரிய காத்திருக்கிறான் அருணாசல ஈசன்.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் குறைந்தது 5 கிலோ




 ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்
திருக்கோவில்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...